<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-12995079</id><updated>2011-10-14T06:06:13.954-07:00</updated><category term='இசை'/><category term='பெண்ணியம்'/><category term='சிறுகதை'/><category term='பூர்ணிமா'/><category term='பெண் விடுதலை'/><category term='Rajini'/><category term='தேவாரம்'/><category term='வரதட்சணை'/><category term='ஆம்பல் ஆம்பல்'/><category term='வரலாறு'/><category term='மீள்பதிவு'/><category term='Churulirajan'/><category term='சமூகம்'/><category term='ஆக்ரா'/><category term='biryani'/><category term='Story'/><category term='land mafia'/><category term='ஈழம்'/><category term='churuli'/><category term='மெல்லிசை மன்னர்'/><category term='s.janaki'/><category term='எட்டு விளையாட்டு'/><category term='27 Dresses'/><category term='பில்லா'/><category term='science fiction'/><category term='Apology'/><category term='கங்கை அமரன்'/><category term='2008'/><category term='அரசியல்'/><category term='இஸ்லாம்'/><category term='அழகு'/><category term='புகைப்படம்'/><category term='billa'/><category term='சங்கிலித் தொடர்'/><category term='பெரியார்'/><category term='tamil'/><category term='உதவி'/><category term='பிரியாணி'/><category term='புதிர்'/><category term='கவுஜ'/><category term='முருகன்'/><category term='எம்.ஆர்.ராதா'/><category term='chennai'/><category term='pattampoochi'/><category term='இலக்கியம்'/><category term='Ilayaraja'/><category term='குசேலன்'/><category term='கவியரசர்'/><category term='butterfly'/><category term='எஸ்.ஜானகி'/><category term='தொடர்கதை'/><category term='சினிமா'/><category term='ஹாரி பாட்டர்'/><category term='Poornima'/><category term='பண்பாடு'/><category term='புகைப்படப் போட்டி'/><category term='கமல்'/><category term='Gangai Amaran'/><category term='தஸ்லீமா'/><category term='ரஜினிகாந்த்'/><category term='பெண்ணடிமை'/><category term='p.suseela'/><category term='விமர்சனம்'/><category term='பி.சுசீலா'/><category term='Dasavatharam'/><category term='நூர்ஜஹான்'/><category term='மொக்கை'/><category term='தூத்துக்குடி'/><category term='கவிதை'/><category term='மன்னிப்பு'/><category term='கதை'/><category term='Thanga Maram'/><category term='புரட்சி'/><category term='Songs'/><category term='Kuselan'/><category term='தசாவதாரம்'/><category term='Kalliyilum Paal'/><category term='keukenhof'/><category term='m.s.viswanathan'/><category term='இளையராஜா'/><category term='சுருளிராஜன்'/><category term='கர்நாடகா'/><category term='பட்டாம்பூச்சி'/><category term='பயணம்'/><category term='தேன்கூடு'/><category term='போட்டி'/><category term='Music'/><category term='politics'/><category term='என்னைப் பற்றி'/><category term='அறிவியல்'/><category term='இசையமைப்பாளர்கள்'/><category term='ஊடு'/><category term='திரைவிமர்சனம்'/><category term='p.susheela'/><category term='தங்க மரம்'/><category term='Kamalhasan'/><category term='பாடல்கள்'/><category term='காதல் குளிர்'/><category term='cinema'/><category term='எம்.எஸ்.விஸ்வநாதன்'/><category term='மஞ்சனத்தி'/><category term='eelam'/><category term='திரைப்படம்'/><category term='mellisai mannar'/><title type='text'>மகரந்தம்</title><subtitle type='html'>மகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>215</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-2244249798916998966</id><published>2009-06-13T14:40:00.000-07:00</published><updated>2009-06-13T14:43:08.285-07:00</updated><title type='text'>தொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா?</title><content type='html'>நானெல்லாம் பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு. நம்மளையெல்லாம் நினைவு வெச்சிருப்பாங்களான்னு நெனைக்க விடாம &lt;a href="http://pithatralgal.blogspot.com/2009/06/blog-post.html"&gt;நாமக்கல் சிபி இந்தப்&lt;/a&gt; பதிவுக்குக் கூப்டுட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?&lt;br /&gt;எந்தப் பேரு? இராகவனா? ஜிராவா? இராகவங்குற பேர் எங்கத்தை வெச்சது. அப்பாவோட அக்கா. அவங்க கனவுல அவங்க பாட்டி வந்து இராகவன் பொறக்கப் போறான்னு சொன்னாங்களாம். அப்படீன்னு அத்தைதான் சொன்னாங்க. குளக்கட்டாங்குறிச்சி அப்பா வழிச் சொந்தமெல்லாம் கூப்டுறது இராகவன். ரெட்டியபட்டி அம்மா வீட்டுச் சொந்தங்கள்ளாம் ராஜேஷ்னு முந்தி கூப்புடுவாங்க. ஆனா வளர வளர இராகவன்னு நின்னிருச்சு. ஆக... ராஜேஷ்ங்குறதும் என்னோட இன்னொரு பேர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜிராங்குற பேர் நுனிப்புல் உஷா வெச்சது. எப்பன்னு நினைவில்ல. ஆனா மொதமொதல்ல அவங்கதான் சுருக்கமா ஜிரான்னு கூப்டாங்க. அது அப்படியே நின்னுருச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;2.கடைசியாக அழுதது எப்பொழுது?&lt;br /&gt;அழுவதா? கண்களாலா? உள்ளத்தாலா? கண்களால் என்றால் நீண்ட நாட்களாயிற்று. உள்ளத்தால் என்றால் மிகச் சமீபத்தில் அழுதேன். எங்கள் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்திருக்கும் உறவைக் கைகளில் தாங்கி அணைத்திருந்த பொழுது அன்பினால் உள்ளம் இளகி அழுதது. அது ஆனந்த அழுகை.&lt;br /&gt;பி.கு - சமீபத்தில் என்னுடைய சகோதரியையும் குழந்தையையும் பார்ப்பதற்கென்று சிங்கைப் பயணம் சென்றிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?&lt;br /&gt;அதக் கேக்காதீங்க. ரொம்பக் கொடுமையானது அது. கொழந்த எழுதுனாப்புல இருக்கும். ஆங்கிலம் எழுதுனாலும் தமிழ் மாதிரி முட்ட முட்டையா இருக்கும். அதையெல்லாம் இனிமேத் திருத்த முடியுமான்னு தெரியலை. இருந்துட்டுப் போகட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;4).பிடித்த மதிய உணவு என்ன?&lt;br /&gt;நல்ல சாப்பாடுன்னா போதும். குறிப்பிட்டு இன்னதுன்னு இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?&lt;br /&gt;நட்புதானே வெச்சுக்கலாம். நட்புலயே பல நிலைகள் இருக்கே. பழகுற நபரைப் பொருத்து நட்பின் நிலைகள் மாறும்.&lt;br /&gt;&lt;br /&gt;6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?&lt;br /&gt;அருவிதான். கடலும் பிடிக்கும். ஆனா ரெண்டுலன்னு கேட்டா... அருவிதான். அதுக்காக நயாகராவும் அருவின்னு சொல்லி எறக்கி விட்றாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?&lt;br /&gt;மொதல்ல பாக்குறப்போவா... முகம்னு நெனைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத எழுதுறப்போ ஒரு கவிதை நினைவுக்கு வருது. திரிகூடராசப்பக் கவிராயர் எழுதுனது.&lt;br /&gt;மனம் முந்தியதோ&lt;br /&gt;விழி முந்தியதோ&lt;br /&gt;கரம் முந்தியதோ எனவே&lt;br /&gt;பாத்ததும் ஆவலிலும் ஆசையிலும் மனசு தொடனும் ஆசப்பட்டுக்கிட்டிருக்குறப்பவே கண் போய் தொடப்போச்சாம். பாத்தா.. கை தொட்டிருக்கு. அவ்ளோ ஆவல். தொடனும்.. தொடனும்னு. நல்லா அனுபவிச்சி எழுதீருக்காரு ராயரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?&lt;br /&gt;பிடிச்சதுன்னா...... நிறைய இருக்கு. எங்கிட்ட என்னென்ன பிடிச்சதுன்னு மத்தவங்கதான் சொல்லனும். நம்மளைப் பிடிச்சவங்க நம்ம கிட்ட என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிக் கேக்குற ஆவலே தனிதான். பிடிக்காத விஷயம் சோம்பல். இத மாத்தனும்னு கடும் முயற்சி பண்றேன். கடைசி நேரத்துக்குத் தள்ளிப் போடுற பழக்கம் மாறனும். மாறியே ஆகனும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?&lt;br /&gt;&lt;br /&gt;சரி பாதியா? அப்படி யாராச்சும் எனக்கு இருந்தாங்கன்னா... அவங்களைப் பாதின்னு எப்படிச் சொல்ல முடியும். நாந்தான் அவங்க. அவங்கதான் நான். ஆகா நான் பிடிச்சது பிடிக்காததுன்னு சொன்னா.. அது என்னப் பத்தித்தானே இருக்கனும். இதுக்கு என்ன சொல்றீங்க? ;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?&lt;br /&gt;நான் ஒரு மகன்னா... எங்கம்மாப்பா பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;நான் ஒரு அண்ணன்னா... என்னோட தம்பி தங்கைகளோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;நான் ஒரு தம்பின்னா... என்னோட அக்கா அண்ணன்கள் கூட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;நான் ஒரு மாமன்னா.... என்னோட மருமக்களோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;நான் ஒரு காதலன்னா என்னோட காதல் துணையோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;நான் ஒரு கணவன்னா என்னோட வாழ்க்கைத் துணையோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;நான் ஒரு நண்பன்னா... நண்பர்களோட இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;இப்பிடி அடுக்கிக்கிட்டே போகலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?&lt;br /&gt;வாடாமல்லி நிறத்துல கொஞ்சம் சாயம் போன டீ.சட்டையும்.... செகப்பு, கருப்பு, வெள்ளை, பச்சை கலந்துக் கட்டம் போட்ட பைஜாமாவும் போட்டிருக்கேன். இவ்ளோ சொன்னாப் போதும்ல... வேறு ஏதாச்சும் தகவல் வேணுமா?&lt;br /&gt;&lt;br /&gt;12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?&lt;br /&gt;தமிழ்ப் பாட்டுதான். ஜெயச்சந்திரன் பாடுன ஒரு அழகான பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வானவில் போலே&lt;br /&gt;என் வாழ்விலே வந்தாய்&lt;br /&gt;உன் பார்வையால் எனை வென்றாய்&lt;br /&gt;என்னுயிரிலே நீ கலந்தாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/4VLeGZb88jg&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/4VLeGZb88jg&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?&lt;br /&gt;நாவல்பழ நிறம். எனக்கு மிகவும் பிடித்த நிறம். சின்ன வயசுல புண்ணு வந்துச்சுன்னா வயலட் ஜெல்லி போடுவாங்க. ஜிலுஜிலுன்னு இருக்கும். காந்தாது. அதே நேரத்துல பாக்கவும் அழகா இருக்கும். தூத்துக்குடி பிரிண்ஸ் டாக்டர் ஆஸ்பித்திரில போட்ட வயலெட் ஜெல்லி இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;14.பிடித்த மணம்?&lt;br /&gt;இதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியும். ஆனா சொல்ல மாட்டேனே... ;)&lt;br /&gt;&lt;br /&gt;15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?&lt;br /&gt;மூனு பேரைக் கூப்புடுறேன். நண்பர்கள் கே.ஆர்.எஸ், குமரன், மற்றும் பாலாஜி.&lt;br /&gt;கே.ஆர்.எஸ்சின் எழுத்துத் திறமையும் அறிவின் ஆழமும் நான் நினைத்து நினைத்து வியப்பவை. அவருடைய திறமையில் கொஞ்சமாச்சும் இருந்தா... நான் சிறப்பா வேலை செய்வேன்னு நெனைக்கிறேன்.&lt;br /&gt;குமரனைப் பத்திச் சொல்லனும்னா... அவருடைய உழைப்பும் எழுத்தும். நேரத்தை எவ்ளோ அழகாப் பயன்படுத்துறாரு. எவ்ளோ படிக்கிறாரு. அடேங்கப்பா.&lt;br /&gt;பாலாஜி.... வெட்டிப்பயல்ங்குற பேரை...வெற்றிப்பயல்னு மாத்தனும் கோரிக்கை வைக்கிறேன். அந்த அளவுக்குச் சுறுசுறுப்பு. விறுவிறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?&lt;br /&gt;சிபியோட பல பதிவுகளைப் படிச்சிருக்கேன். முருகனருள்ள இட்ட &lt;a href="http://muruganarul.blogspot.com/2009/03/blog-post_31.html"&gt;இந்தப் பதிவு&lt;/a&gt; ரொம்பப் பிடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;17. பிடித்த விளையாட்டு?&lt;br /&gt;நானொரு விளையாட்டு பொம்மையா........&lt;br /&gt;&lt;br /&gt;18.கண்ணாடி அணிபவரா?&lt;br /&gt;ஓ போடுவேனே. ஆனா எப்பவும் காண்டாக்ட் லென்ஸ் போடுறது வழக்கம். வாங்குன லென்ஸ் தீந்து போச்சு. இன்னைக்கே ஆர்டர் குடுக்கனும். ஆன்லைன்ல குடுத்துட்டா நாலஞ்சு நாள்ள வந்துரும். அதுவரைக்கும் கண்ணாடிதான் போட்டுக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?&lt;br /&gt;எனக்கு நெறைய விதமான படங்கள் பிடிக்கும். ஒரு மாதிரி கதம்ப ரசனை. அலுப்புத்தட்டாம இருக்கனும். அவ்ளோதான். சமீபத்துல பாத்த படம் Conspiracy. மறக்க முடியாத படம். அவ்ளோ ஒன்றிப் போயிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;20.கடைசியாகப் பார்த்த படம்?&lt;br /&gt;கடைசியாவா.... Hangover. நகைச்சுவைப் படம். கொஞ்சம் அத்துமீறலா இருந்தாலும் நல்லாத்தான் போச்சு. ஆனா படம் பாக்குறப்போ படம் பிடிச்சிருந்தாலும்.. போகாம வீட்டுக்குப் போயிருந்திருக்கலாமோன்னு தோணீட்டேயிருந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;21.பிடித்த பருவ காலம் எது?&lt;br /&gt;பிடித்த பருவகாலமா.... வசந்தகாலம்.&lt;br /&gt;&lt;br /&gt;22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?&lt;br /&gt;வாழ்க்கை என்னும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு திருப்பங்களோடு இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?&lt;br /&gt;அத மாத்தவே இல்லை. சுவிட்சர்லாந்து போனப்போ லூசர்ன்-ல எடுத்த படந்தான் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?&lt;br /&gt;பிடித்தது முத்தச் சத்தம்&lt;br /&gt;பிடிக்காதது துயரம் மிகு அழுகைச் சத்தம்&lt;br /&gt;&lt;br /&gt;25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?&lt;br /&gt;தூத்துக்குடில இருந்து அமெரிக்கா எவ்ளோ தொலைவு? அமெரிக்கால வாஷிங்டன் டீசிய விட பென்சில்வேனியா தொலைவுன்னா... அதாத்தான் இருக்கனும்.&lt;br /&gt;&lt;br /&gt;26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?&lt;br /&gt;தனித்திறமையா? தண்ணித் திறமை நெறையவே இருக்குன்னு சொல்றாங்க. சமீபத்துல திறைமையக் காமிச்சது மாலிபூல.&lt;br /&gt;&lt;br /&gt;27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?&lt;br /&gt;நெறைய இருக்கு. என்னன்னு சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?&lt;br /&gt;கொஞ்சம் தன்னலம் உண்டு. அது தலை தூக்குறப்பல்லாம் குற்றவுணர்ச்சியும் தலைதூக்கும். பல வேளைகள்ள தன்னலம் வெற்றி பெற்றிருக்கு. பல வேளைகள்ள குற்றவுணர்ச்சியும் வெற்றி பெற்றிருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?&lt;br /&gt;மனசுக்குப் படிச்சவங்க கூட இருந்தா எந்தத் தலமும் பிடிச்ச தலமே. சமீபத்துல நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தலம் சிங்கைத் தலம். நீண்ட நாட்களாக போக விரும்பும் இடங்கள்..... எகிப்து மற்று கிரேக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;30.எப்படி இருக்கணும்னு ஆசை?&lt;br /&gt;மகிழ்ச்சியோட இருக்கனும்னு ஆசை&lt;br /&gt;&lt;br /&gt;31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?&lt;br /&gt;தெரியலையே....&lt;br /&gt;&lt;br /&gt;32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?&lt;br /&gt;வாழனும். கண்டிப்பா வாழனும். வாழ்ந்தே ஆகனும். வாழ்க்கை வாழ்வதற்கே.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-2244249798916998966?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/2244249798916998966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=2244249798916998966' title='38 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2244249798916998966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2244249798916998966'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2009/06/blog-post.html' title='தொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா?'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>38</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-3352844715677296099</id><published>2009-03-15T03:14:00.000-07:00</published><updated>2009-03-15T03:27:37.493-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரியாணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='eelam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='biryani'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='politics'/><title type='text'>பிரியாணி - 4</title><content type='html'>பிரியாணி கிண்டி ரொம்ப நாளாச்சுன்னு. இப்பிடியே விட்டா பிரியாணி அண்டாவுல இறால் வளப்புல எறங்கனுமோன்னு தோணி... ஒரு பதிவு போட்டாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலத்துல ரொம்பப் பாதிச்சது ஈழம் தொடர்பான தமிழக இந்திய அரசியல்வாதிகளின் கேடுகெட்டத்தனமான அணுகுமுறைதான். மனசெரிஞ்சி சொல்றேன். ஒங்களுக்குக் கொஞ்சமாச்சும் தமிழ்மான உணர்வுன்னு ஒன்னு இருந்தா... காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய மூனு கட்சிகளுக்கும் ஓட்டுப் போடாதீங்க. அதுக்காக விஜயகாந்துக்குப் போடுங்கன்னு சொல்லலை. ஒங்கொங்க தொகுதியில இந்தக் கட்சிகளைத் தவிர்த்த வேட்பாளர்களில் பொருத்தமா யாருக்காச்சும் போடுங்க. போதுங்க. எத்தனை நாளைக்குத்தான் கட்சியப் பாத்து..சாதியப் பாத்து... மதத்தப் பாத்து ஓட்டுப் போடுவீங்க? கட்சி, மத, சாதீயப் பாசங்கள்ள மாட்டிக்கிட்டீங்கன்னா... அதுலருந்து வெளிய வரவே முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவோட நடவடிக்கைகளை வெச்சுப் பாக்குறப்போ... எந்தவித"மான" மாற்றமும் அதிகுமல... சேச்சே அதிமுகல தெரியலை. காங்கிரஸ் கட்சி தன்னோட முடிவுல ஒரே உறுதியா இருக்குறாப்புல இருக்கு. ஈழத்துல எத்தாலி போனாலும் இத்தாலியம்மன் விடாப்பிடியா இருக்காங்க போல. நம்ம மட்டும் ஏன் விட்டுக் குடுக்கனும்? தமிழகத்துல காங்கிரஸ் கட்சி ஒரு இடத்துல கூட வெற்றி பெறக்கூடாது இந்த முறை.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக.... அடப்பாவிகளா.... மத்தவங்க மேலையெல்லாம் எப்பவும் இருக்குற கோவந்தான். ஒங்க மேல இருக்குறது அறச்சீற்றம். ஏற்கனவே ஒங்க குடும்ப அரசியலக் கண்டு கதிகலங்கிப் போயிருக்கோம். நாளிதழ், தொலைக்காட்சி, சிமிண்ட்டு, திரைப்படம்... இப்பிடி தமிழ்நாட்டுத் தொழில்வளத்தையே குடும்பத்துக்குள்ள முடக்குனது மட்டுமில்லாம..... ஈழம் தொடர்பா அந்தக் காங்கிரசோட சேந்துக்கிட்டு ஆடுற ஆட்டம் இருக்கே......ஒங்களுக்கு போன தேர்தல்லயே பாதிப் பாடம் நடத்தியாச்சு. மீதிப் பாடம் இந்தத் தேர்தல்லதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி... பிரியாணில அரசியல் மிளகாய் கூடிருச்சி. அடுத்து ஒரு சந்தேகத்துக்கு வருவோம். ஒரு வலைப்பூவில் இடும் பின்னூட்டத்தைப் பிரசுரம் செய்யும் உரிமை அந்த வலைப்பூவின் சொந்தக்காரருக்கு உண்டு. ஒத்துக்கிறேன். ஆனால் பின்னூட்டத்தை எழுதியவர்.. தன்னுடைய கருத்தைச் சொல்ல... மறுக்கப்பட்ட அந்தப் பின்னூட்டத்தைத் தன்னுடைய வலைப்பூவுல இடலாம்ல. அதத்தான் இங்க பண்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உடன்பிறப்பின் &lt;a href="http://udanpirappu.blogspot.com/2009/03/blog-post_10.html"&gt;இந்தப் பதிவில்&lt;/a&gt; நானிட்ட முதற்பின்னூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;அரசியல்கட்சீன்னு வந்துட்டாலே... இப்படிப்பட்டக் காமெடிக் காட்சிகளுக்குப் பஞ்சமே இருக்காது. இவங்கள நம்பி கொஞ்சம் ஏழ பாழைங்க கட போட்டுக் காசு பாத்தத நெனச்சிச் சந்தோஷம். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொதுன்னு நெனைக்கிறேன்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;ஆனா அதிமுகவுக்குன்னு விசேசக் காட்சிகள் இருக்கு. குறிப்பா அந்த மொதப் படம். கால்ல விழுந்து கும்புடுறது. தன்னுடைய காலில் விழுகின்றவனைப் புன்னகையோடு ரசிக்கும் பாங்கு....அவரது மனநிலையைச் சந்தேகிக்க வைக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;அது கிடக்க. மானமுள்ளவன் அதிமுகவில் இருக்க முடியாது என்பது தெரிந்ததுதானே. ஈழத்துக்கான உண்ணாவிரதம் ஒரு நாடகம். ஜெயலலிதா தான் ஒரு நடிகை என்பதை திரும்பவும் நிரூபிக்கிறார். ஆனால் இந்த முறை மிக அசிங்கமாக.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பின்னூட்டம் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் அதே பதிவில் வேறொரு கருத்துக்குப் பதிலளித்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு நானிட்ட பின்னூட்டம் பிரசுரிக்கப்படவில்லை. அவருடைய உரிமையை மதிக்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய உரிமையை இங்கே நிலைநாட்டிக்கொள்கிறேன். ஆம். அந்தப் பின்னூட்டம் இங்கே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;// உடன்பிறப்பு said...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;//// நந்தா said...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கெல்லாம் அதிமுக அப்படி பண்ணலையா, அம்மா பண்ணா மட்டும் சும்மா இருக்கீங்க கலைஞர்னா மட்டும் கேள்வி கேக்குறீங்க//&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;நன்றி நந்தா, இப்போ நீங்களே பாருங்க, நம்ம பத்ரி வந்து அ.தி.மு.க. உண்ணாவிரதத்துல மட்டும் தான் இப்படி எல்லாம் நடக்குமா, மற்ற கட்சிகள் உண்ணாவிரதத்துல நடக்காதா என்று கேட்கிறார். இது மாதிரி கேட்கிறவர்கள் எல்லா கட்சி சார்பாகவும் இருக்கிறார்கள் //&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;நண்பரே... இத்தகைய வாதங்கள்தான்... அதிமுக எதிர்ப்பு என்ற எங்களைப் போன்றவர்கள் நிலையைத் திமுக ஆதரவு என்று மாற்றாமல் இருக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;அதிமுகவோடு ஒப்பிட்டு...அவங்க பண்றாங்க...நாங்களும் பண்றோம்னு நெனைக்கிறதுதான்...ரெண்டு கட்சிகளிடமிருந்தும் எங்களைச் சம தூரத்தில் தள்ளி வைக்கிறது.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 153); font-weight: bold; font-style: italic;"&gt;இப்படிச் சொல்வதனால் அதிமுகவை நான் ஆதரிக்கிறேன் என்பது பொருளாகாது. முன்பு திமுகவிற்கு ஆதரவளித்தவன் என்ற வகையில் இன்றைய திமுகவின் மேல் மிஞ்சி இருப்பது ஏமாற்றம் மட்டுமே. இதை இந்தப் பதிவில் சொன்னது உங்கள் மனதைப் புண்படுத்துமானால் மன்னிக்க. ஏனென்றால் இது கட்சி சார்பற்ற ஒரு சராசரித் தமிழனின் வயிற்றெரிச்சல்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரிங்க... ரொம்ப அரசியல் பேசீட்டோம். ஏதாச்சும் சினிமா பத்திப் பேசலாமா? சினிமான்னாலே ஒரு இதுதான். அதுலயும் சிலுக்கு சுமிதான்னா கேக்கவே வேண்டாம். தமிழகத்துல அப்படியொரு கனவுக்கன்னி இனிமே அவ்வளவு லேசுல வர முடியாது. மலையாளத்துல அவங்க நடிச்ச பாட்டு ஒன்னு. இளையராஜா இசையில். நல்ல பாட்டு. ஆகையால எல்லாருமே பாத்து ரசிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/ThrWV6Psmh8&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;color1=0x006699&amp;amp;color2=0x54abd6"&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/ThrWV6Psmh8&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;amp;color1=0x006699&amp;amp;color2=0x54abd6" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-3352844715677296099?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/3352844715677296099/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=3352844715677296099' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/3352844715677296099'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/3352844715677296099'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2009/03/4-tamil-politics-eelam-issues.html' title='பிரியாணி - 4'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-9036956749018225466</id><published>2009-03-10T15:18:00.000-07:00</published><updated>2009-03-10T15:25:05.002-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்டாம்பூச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='pattampoochi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='butterfly'/><title type='text'>பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி...</title><content type='html'>பதிவு எழுதியே நாளாச்சுன்னு இருக்குற சமயத்துல தொடர்பதிவு எழுத வெச்சிட்டாங்க &lt;a href="http://madhumithaa.blogspot.com/2009/03/blog-post.html"&gt;மதுமிதாம்மா&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி விருதை அவங்க வாங்கினது பொருத்தம். அதை எனக்கும் கொடுத்தது அவங்க அன்புக்குப் பொருத்தம். ஓசீல குடுத்தா ஓலப்பாயச் சுருட்டிக் கொண்டாருவோம். இதுல விருது குடுத்தா விருந்தே குடுத்த மாதிரியாச்சே! விட முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/Sbbopkf7bcI/AAAAAAAAExo/482tpi5OV3g/s1600-h/butterfly_award%5B1%5D.png"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 149px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/Sbbopkf7bcI/AAAAAAAAExo/482tpi5OV3g/s320/butterfly_award%5B1%5D.png" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5311688611399953858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி. பட்டாம்பூச்சிக்கு வருவோம். பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி? இது ஏ.ஆர்.ரகுமான் இசையமைச்ச பாட்டுல வரும். வாடி சாத்துக்குடிங்குற பாட்டு... புதிய மன்னர்கள் படத்துக்காக.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாம்பூச்சி பறக்கும் இடமா? எங்க பறக்கும். எல்லா மனிதர்களும் நாலு எடங்கள்ள பட்டாம்பூச்சி பறக்குறத உணர்ந்திருப்பாங்க. அதென்னன்னு கெக்குறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;வயிறு, நெஞ்சு, கண், ...இந்த மூனு எடங்கள்ளயும் பட்டாம்பூச்சி பறக்கும். அப்படி எனக்குப் பறந்த அனுபவங்களைச் சுருக்கமாச் சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மொதல்ல வயிறு. இதுவும் சின்ன வயசுல நடந்ததுதான். தூத்துக்குடிக்காரங்க யாராச்சும் இதப் படிச்சீங்கன்னா....நான் சொல்ற புதுக்கிராமம் ஒங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். புதுக்கிராமத்துக்காரங்க யாரும் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்லப்போற எக்ஸ்டென்ஷன் மிடில் ஸ்கூலும் சிவசாமி கடையும் கண்டிப்பாத் தெரிஞ்சிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க எங்கத்த டீச்சரா வேலை பாத்தாங்க கொஞ்ச நாள். அந்தப் பள்ளிக்கூடத்துல நானும் நாலு வருசம் படிச்சேன். இது ரெண்டாவது...ம்ம்ம்.. ஆமா...அப்பத்தான். அந்தப் பள்ளிக்கூடத்துல ஆண்டாள் டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க ரொம்பக் கண்டிப்பான டீச்சர். விறைப்பா வருவாங்க போவாங்க. ஒருநாள் சிவசாமி கடைக்கு அத்தையோட போனேன். அங்க இருந்த மேடைல என்னையத் தூக்கி உக்கார வெச்சிட்டு வீட்டுக்குத் தேவையானத வாங்கீட்டிருந்தாங்க. அப்ப வந்தாங்க ஆண்டாள் டீச்சர். அத்தைட்ட ரெண்டு பேச்சுப் பேசிட்டு...என்னடா ராகவா எப்படி இருக்கன்னு கன்னத்தத் தொட்டாங்க. என்னன்னு தெரியலை... படக்குன்னு அந்த டீச்சரோட கன்னத்துல அறைஞ்சிட்டேன். அப்புறந்தான் என்ன பண்ணேன்னே புரிஞ்சது. அப்ப வயித்துல பட்டாம்பூச்சி பறந்துச்சு. ஆனா அந்த டீச்சர் நல்லவங்க. அதைப் பெருசாவே எடுத்துக்கலை. கண்டுக்கவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வயித்துல இருந்து நெஞ்சுக்கு வருவோம். நெஞ்சுக்கு நீதின்னு சொல்வாங்க. நமக்குப் பீதி வராம இருந்தாலே பெரிய விஷயம். ஆனா நம்ம நாட்டுல பலருக்கு நெஞ்சுக்கு ஜாதின்னு இருக்குறது வருத்தமான விஷயம். என்னுடைய நட்பு வட்டாரத்துலயே ஜாதி மொழியைத் தாண்டிய திருமணங்கள் உண்டு. அதெல்லாம் மகிழ்ச்சியான நிகழ்வுகள். அவர்கள் நீடு வாழ ஆண்டவனை வணங்குகிறேன். ரொம்ப விவரமாச் சொல்லாம சுருக்கமா சொல்றேன். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நண்பனுடைய காதலுக்குத் தூது போனப்போ நெஞ்சுக்குள் பட்டாம்பூச்சி பறந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கண்ணுக்கு வருவோம். ரொம்பச் சந்தோஷமா இருந்தாலும் ரொம்ப அழுதாலும் கண்கள்ள பட்டாம்பூச்சி பறக்கும். என்னுடைய வாழ்க்கையில் ஒரு முறை....ரொம்ப அழுதேன். ஏன் எதுக்குன்னு சொல்ல விரும்பலை. கிட்டத்தட்ட ஆறேழு வருசம் இருக்கும். அப்பக் கண்ணுல பட்டாம்பூச்சி பறந்தது. ஆனா... அதுக்கப்புறம்தான் எனக்கு வாழ்க்கையை எதிர் நோக்குற பக்குவமே வரத்தொடங்குன்னு நெனைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி... பட்டாம்பூச்சி பதிவு எழுதியாச்சு. அடுத்து மூனு பேருக்கு இந்த விருதைக் குடுத்துப் பதிவுக்கு அழைக்கனுமாமே. அழைச்சிருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இசைப்புதிர் &lt;a href="http://radiospathy.blogspot.com/"&gt;கானாபிரபா&lt;/a&gt;.... இவருக்கு நான் அறிமுகம் சொல்ல வேண்டியதில்லை. பிரபா...வந்து பதிவு போடுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கலக்கல் &lt;a href="http://kaipullai.blogspot.com/"&gt;கைப்புள்ள&lt;/a&gt;.... கைப்புள்ளன்னு இவருக்குப் பேருதான். ஆனா இப்ப இவருக்கு உண்மையிலேயே கைப்புள்ள இருக்கு. வாங்கய்யா வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணன் கனியமுது &lt;a href="http://madhavipanthal.blogspot.com/"&gt;கே.ஆர்.எஸ்&lt;/a&gt;.... ராமாயணம் சொல்ற இடத்துல எல்லாம் அனுமாரு இருப்பாருன்னு வைணவர்கள் சொல்வாங்க. ஆனா கே.ஆர்.எஸ் இருக்குற எடத்துல எல்லாம் அனுமார் இருப்பாருன்னு அவருடைய பதிவுகளின் பக்திச் சுவையை அனுபவிச்சவங்க சொல்வாங்க. வாங்க. வாங்க. வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மதுமிதாம்மா பதிவுல இருந்து வெட்டு ஒட்டு. அதாங்க... தொடர்பதிவு விதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)&lt;br /&gt;&lt;br /&gt;2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)&lt;br /&gt;&lt;br /&gt;3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)&lt;br /&gt;&lt;br /&gt;4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)&lt;br /&gt;&lt;br /&gt;5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-9036956749018225466?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/9036956749018225466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=9036956749018225466' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/9036956749018225466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/9036956749018225466'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2009/03/blog-post.html' title='பட்டாம்பூச்சி பறக்கும் இடத்தச் சொல்லடி...'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/Sbbopkf7bcI/AAAAAAAAExo/482tpi5OV3g/s72-c/butterfly_award%5B1%5D.png' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-7886424301381861887</id><published>2008-10-25T05:06:00.000-07:00</published><updated>2008-10-26T08:27:01.193-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Music'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதிர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கானா பிரபாவுக்குப் போட்டியா ரேடியோஸ்பதி புதிர்</title><content type='html'>இந்த வாரம் நம்ம கானாபிரபா அண்ணாச்சி புதிர் போடாம ஏமாத்துன கோவத்துல... அவருக்குப் போலியா உருவெடுக்குறதா முடிவு பண்ணியாச்சு. அட.. என்னோட பேரைப் போட்டுத்தான்....&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அவரு புதிரு போடுறாரோ இல்லையோ.. நம்ம அவருக்குப் போட்டியா களம் எறங்கீற வேண்டியதுதான். அவரு இளையராஜா மாதிரி. இருந்தாலும்.. நம்ம சந்திரபோஸ் ரேஞ்சுக்கு "ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே..."&lt;br /&gt;&lt;br /&gt;சரி புதிருக்கு வருவோம். கிந்த உண்டேதி ஒக தெலுகுப் பாட்டா.. அதாவது தெலுங்குப் பாட்டு. இந்தப் பாட்டு தமிழிலும் இருக்கு, இந்த தெலுங்குப் பாட்டுக்கு இசையமைச்சவருதான் தமிழுக்கும் இசையமைச்சிருக்காரு. இதே பாடகர்கள்தான். படமும் இதே படம்தான். ஆனா தமிழில் பிரபலமான கதாநாயகன் நடிச்சாரு. ஆனா மெட்டு மட்டும் வேற. ஒரே பாடல் காட்சிக்கு தெலுங்குக்கு ஒரு மெட்டும்... தமிழுக்கு ஒரு மெட்டும் இசையமைப்பாளர் போட்டிருக்காரு. ஆனா அதே பாடகர்களை அந்தப் பாட்டைப் பாட வெச்சிருக்காரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/N7mg01zO2q8&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/N7mg01zO2q8&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் படத்துல எல்லாப் பாட்டையும் கவியரசர் எழுதுனாலும் ஒரு பாட்டு மட்டும் கங்கை அமரன் எழுதுனாரு. இன்னொரு குறிப்பு சொல்றேன். இந்தப் படத்துல ஒரு கதாநாயகன் வில்லன் ஆனாரு.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் பாட்டு ரொம்பவே பிரபலமான பாட்டு. பாட்ட உத்து உத்துப் பாக்குறவங்களுக்கு தமிழில் கதாநாயகர் யாருன்னு பெரிய குறிப்பு இருக்கு. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு குறிப்பு.... இந்தப் படத்தோட பேர ரெண்டா பிரிச்சா ரெண்டு படங்கள் கிடைக்கும். ஒன்னு விஜய் நடிச்சது. இன்னோன்னு நடிகர்திலகம் நடிச்சது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்டுபிடிங்க பாக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டி முடிவடைந்து விட்டதால் விடையை இங்கேயே சொல்லி விடுகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுட்டாளுன்னாரு ஜாக்ரதா என்கின்ற தெலுங்குப் படத்தைத் தமிழில் போக்கிரிராஜா என்று எடுத்தார்கள். தெலுங்கில் இசையமைத்த மெல்லிசை மன்னர்தான் தமிழிலும் இசை. ஆனால் தெலுங்கில் பயன்படுத்திய எந்த மெட்டையும் தமிழில் பயன்படுத்தவில்லை. மேலே நீங்கள் கேட்ட தெலுங்குப் பாட்டுக்கு இணையான தமிழ்ப் பாடல் "நான் போக்கிரிக்குப் போக்கிரி ராஜா.. பக்கத்துல பட்டுல ரோஜா" என்ற பாடல். அதை எஸ்.ஜானகியும் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் இணைந்து பாடியிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தில் முதன்முதலாக முத்துராமன் வில்லனாக நடித்தார். எல்லாப் பாடல்களையும் கவியரசர் எழுதியிருந்தாலும் ஒரேயொரு பாடலை மட்டும் கங்கையமரன் எழுதியிருந்தார். அது இந்தப் பாடலா... "வாடா என் மச்சிகளா" பாடலா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். :)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-7886424301381861887?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/7886424301381861887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=7886424301381861887' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/7886424301381861887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/7886424301381861887'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/10/blog-post.html' title='கானா பிரபாவுக்குப் போட்டியா ரேடியோஸ்பதி புதிர்'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-4669950517204429620</id><published>2008-10-14T14:41:00.000-07:00</published><updated>2008-10-14T14:48:35.809-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cinema'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சினிமாப் பைத்தியம்</title><content type='html'>நம்மளையும் பதிவர்னு அப்பப்பக் காட்டிக்கிறதுக்குன்னே கண்டுபிடிச்சதுதான் இந்தத் தொடர்பதிவுகள் போல..... &lt;a href="http://www.sridharblogs.com/2008/10/meme.html"&gt;ஸ்ரீதர் அண்ணாச்சியும்&lt;/a&gt; &lt;a href="http://kanapraba.blogspot.com/2008/10/blog-post.html"&gt;பிரபா அண்ணாச்சியும்&lt;/a&gt; கலக்கல் பதிவுகள் போட்டுட்டாங்க. எனக்கும் ஏதோ தெரியும்னு கூப்டுட்டாங்க. நாமள்ளாம் சினிமாலயே பொறந்து வளர்ந்து வாழ்ந்துக்கிட்டிருக்குறவங்களாச்சே. கொஞ்ச நாளா எழுதாம வேற இருந்தேனா.... வெட்டிப்பய பாலாஜி வேற...என்னது ஒன்னுமே எழுத மாட்டேங்குறீங்களேன்னு கேட்டுட்டான். இப்பிடியாக உலக்கத்தரமான சினிமா ரசிகன்னு இன்னும் ஒலகம் என்னைய நம்புறதால இந்தப் பதிவை எழுதீருவோம்னு முடிவு பண்ணி...எழுதியாச்சுங்கோவ். கேள்வி பதில்களுக்குப் போவோமா. போய்த்தானே ஆகனும். வேற வழி. எழுதச் சொன்னீங்கள்ள...இப்பப் படுங்க...அதாவது படிங்க. :)&lt;br /&gt;&lt;br /&gt;1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வயசுலன்னு சரியாத் தெரியலைங்க. தூத்துக்குடில புதுக்கிராமத்துல பெருமாள் கோயிலுக்கும் எண்ணெய்க் கடைக்கும் நடுவுல ஒரு பெரிய சொவரு. அந்தச் சொவர்லதான் மொதமொதச் சினிமா பாத்த நெனைவு. ஆமா. அதுல ஊர்ச் சினிமா போஸ்டரெல்லாம் ஒட்டுவாங்க. சார்லஸ், மினிசார்லஸ், கார்னேஷன், பாலகிருஷ்ணா, முருகன், ஜோசப்...இப்பிடியாப்பட்ட தியேட்டர்கள்ள என்னென்ன படங்க ஓடுதுன்னு ஒட்டீருப்பாங்க. அதுலதான் மொதல்ல பார்கத் தொடங்குனேன். கடைசியாப் போனப்பக்கூட அந்தச் சொவத்துல சினிமா பாத்தேன். :)&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாவே சின்னப்பிள்ளைல அத்தை கூட்டீட்டுப் போவாங்க. அவங்க கூடப் போய்த்தான் மொதல்ல படம் பாத்திருக்கேன். புதுசு பழசுன்னு கதம்பமா இருக்கும்னு நெனைக்கிறேன். ஏதோ ஒரு விஜயகாந்த் படம்....போஸ்டர்ல மலை, பாம்பு எல்லாம் இருந்துச்சு. அப்பல்லாம் சார்லஸ் தியேட்டர்தான் பெரிய தியேட்டர். உண்மையிலேயே பெரிய தியேட்டருதான். அதுல திரைக்கு முன்னாடி பெரிய மேடையெல்லாம் இருக்கும். அதுலதான் எல்லாம் கொண்டு வந்து வெச்சு சினிமா காட்டுவாங்கன்னு நெனச்சேன். போஸ்டர்ல பாம்பப் பாத்துட்டு....அப்ப சார்லஸ் தியேட்டர் மேடைல பாம்பு வருமான்னு அத்தையக் கேட்டேன். ஆமான்னு சொன்னாங்க. அப்ப அந்தப் படத்துக்கே வரலைன்னு சொல்லீட்டேன். அதே மாதிரிப் போகவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா மொதமொதலா தனியாப் போன படம் நெனைவிருக்கு. சரஸ்வதி சபதம். தனியான்னா....தனியா இல்ல. வீட்டோட போகாம...நண்பனோட சேந்து போனது. பக்கத்து வீட்டு தேன்ராஜோட அந்தப் படத்துக்கு அனுப்புனாங்க. ஏன்னா பழைய படம்னாலும் நல்லாருக்கும்னு. எந்த வயசுலன்னு மறந்து போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அம்மா அப்பாகூட திரும்ப வந்தப்புறமும் நிறையப் படங்கள் பாத்திருக்கேன். அதுலயும் பழசு..புதுன்னு கலந்தே இருக்கும். பொதுவா சிவாஜி படம்னா பழைய படம்னாலும் வீட்டுல கூட்டீட்டுப் போவாங்க. அப்புறம் பாக்கியராஜ் படங்கள், பாலச்சந்தர் படங்கள், விசுப்படங்கள், கமல் படங்கள் இப்பிடியெல்லாமும் இருக்கும். ஆனா எம்.ஜி.ஆர் படங்களோ ரஜினி படங்களோ இருக்காது. எனக்குத் தெரிஞ்சு அப்பாவும் தங்கச்சியும் சேந்து போய் பாட்சா படம் பாத்தாங்க. அதுக்கும் நான் போகலை. இன்னமும் பாக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாவா..... தியேட்டர்லயா.... தமிழா.....ம்ம்ம்ம்.... தசாவதாரம். நெதர்லாந்துல பாத்தேன். அது ஒரு பெரிய கதைன்னே சொல்லனும். நெதர்லாந்து வந்தப்புறம் நான் தியேட்டர்ல போய் பாத்த மொதப்படம் அதான். ஜிவாஜி வந்தப்பக் கூடப் போகலை. குருவி கூட வந்துச்சு. ஒருத்தரு குருவி வருதுன்னு சொன்னாரு. நான் சொன்னேன்....விஜய் படங்கள்ளாம் பாக்குறதில்லைங்கன்னு. அவரும் விடாம....ஊர்லன்னா எவன் பாப்பான்? இங்கன்னுதான் பாக்கப் போறேன்னு சொன்னாரு. இங்குட்டு எங்குட்டோ... விஜய் படம்னு வந்துட்டாலே பாக்குறதில்லைன்னு சொன்னேன். அவரு பேசவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருந்தவன் தசாவதாரம் எப்ப வருமுன்னு காத்திருந்தேன். ஒரு கூட்டமா டிரெயின்ல போனோம். அல்மீரா-ன்னு பக்கத்து ஊருல படம். எட்டு மணிக்குத் தொடங்கி பத்தரைக்கு முடியும்னாங்க. போனா... பொட்டி வரலை. சரீன்னு பக்கத்துல இருந்த டோனேர் கபாப் கடைல போய் சாப்ட்டு வந்தா..இன்னும் வரலை. அந்தா வருது....இந்தா வருதுன்னு சொல்லீட்டே இருந்தாங்க. நேரமாகுதுன்னதும் எல்லாருக்கும் இலவசமா காப்பி டீ குடுத்தாங்க. குடிச்சிட்டு உக்காந்திருந்தோம். ஒருவழியா படத்த பத்து மணிக்குப் போட்டாங்க. அதுல என்னன்னா....கமல் அமெரிக்கால இருந்து ஏரோப்பிளேன்ல இந்தியாவுக்கு வந்து பல்ராம்நாயுடுவைப் பாக்குறாரு...ஒடனே அசின் குய்யோ முய்யோன்னு கத்துறாங்க....கமலும் அசினும் சிலையைத் தூக்கீட்டு ஓடுறாங்க. என்னடா இதுன்னு பாத்தா பத்து நிமிசங்கழிச்சி திரும்ப விட்ட எடத்துல இருந்து பல்ராம்நாயுடு... லட்டியடி பத்தி விளக்குனாரு. அடப்பாவிகளா....ஊருவிட்டு ஊரு வந்து படம் பாத்தா....ரீல மாத்திப் போட்டுட்டியே டச்சான்னு கதறுனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அத்தோட முடிஞ்சதா கதை...படம் முடியுறப்போ ஆம்ஸ்டர்டாமுக்குப் போற கடைசி வண்டியும் போயாச்சு. அடுத்த வண்டி..அடுத்த நாள்தான். பெருங்கூட்டமே ரயில்வே ஸ்டேஷன்ல நிக்குது. அப்புறமென்ன...டாக்சி பிடிச்சி வீட்டுக்கு வந்தோம். பன்னிரண்டு யூரோ படத்துக்கு எழுவது யூரோ டாக்சி.&lt;br /&gt;&lt;br /&gt;3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல கேள்வி. படத்தோட பேரு அந்த நாள். நேத்துத்தான் (13ம் தேதி அக்டோபர் மாதம் 2008ம் வருடம்) பாத்தேன். சிவாஜிக்கு மிகை நடிப்புன்னு எவன்யா சொன்னான்.... சொன்ன பயக பூராம் இந்தப் படத்த இம்போசிசன் மாதிரி பத்து வாட்டி பாருங்க. அவரு இயக்குனர் நடிகர்யா. இயக்குனர் என்ன கேக்குறாரோ அப்படியே குடுப்பாரு. சிவனா நடிங்கன்னா சிவனா வந்தார்ல. திருவிளையாடல் படத்துல. கப்போலோட்டிய தமிழன் படத்தப் பாத்துட்டு "அப்பா"ன்னு வ.உ.சியின் மகனே கதறுனார்ல. கட்டபொம்மன்னா இப்பிடித்தான் இருப்பார்னு நம்ப வெச்சிட்டாரேய்யா.... கயத்தாறுல இருக்குற கட்டபொம்மன் சில கூட இவரு சாயல்ல இருக்கு. உண்மையான கட்டபொம்மனே வந்தாக்கூட சிவாஜி மாதிரி இல்லைன்னு நம்மாளுக திருப்பி அனுப்பிச்சிருவாக போல. ஆயிரஞ் சொல்லுங்கய்யா.... அவரு அவருதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாள் மாதிரி விறுவிறுப்போட இப்ப ஒரு படமும் வர்ரதில்லைங்குறதும் ஒரு உண்மை. எங்கப்பாரு பொறந்த சமயத்துல வந்த படம். அத இன்னமும் ரசிக்க முடியுதேய்யா... இப்பிடியெடுக்கனும்யா படத்தன்னு நெனச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னது... எங்க பாத்தேனா.. ஹி ஹி.. இந்தப் படத்தோட ஒரிஜினல் டிவிடியோ விசிடியோ எங்கிட்ட இல்லைங்க. நான் இந்தியாவுல ஒரிஜினல்தான் வாங்குவேன். இப்பத்தான் சல்லிசா கெடைக்குதே. நெதர்லாந்துல எங்க போறது? இண்டர்நெட்லதான் பாத்தேன். தப்புத்தான்.. ஆனா வெற வழி இல்லையேய்யா....&lt;br /&gt;&lt;br /&gt;4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா&lt;br /&gt;&lt;br /&gt;முதல் மரியாதை மற்றும் கல்யாண அகதிகள். முன்னது காவியம். அதைப் பத்தி எவ்ளோ வேணும்னாலும் சொல்லலாம். சுருங்கச் சொன்னா.... தமிழில் வந்த மிகச்சிறந்த படங்களில் முதல்மரியாதைக்கும் என்றும் உண்டு முதல் மரியாதை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாண அகதிகள் படம் வந்தப்பவும் பாத்திருக்கேன். ஆனா அப்ப நினைவிருந்தது அம்மா வீட்டுல செஞ்சி எடுத்துட்டு வந்த கேக்கோட ருசி. ஆனா படம் பாத்த தேட்டர் நினைவிருக்கு. திருச்சி காவேரி தியேட்டர். சின்ன வயசுல இருந்தே படம்..படம் பாத்த தியேட்டரும் மனசுல பச்சக்க்குன்னு பதிஞ்சிருது. படத்தையும் விட. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ரொம்ப நாள் கழிச்சி அந்தப் படத்தைப் பாத்தேன். பெண்ணியமெல்லாம் ஒரு பக்கம் இருக்க.....ரொம்ப ரசிச்சது சரிதா, ஒய்.விஜயா, மற்றும் சீமா.&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப இயல்பான நடிப்பு சரிதாவுக்கு. அதை நான் சொல்லனும்னு அவசியமில்லை. ஒங்களுக்கேத் தெரியும். இல்லைங்குறீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒய்.விஜயாவை ஏன் வீணடிச்சிட்டோம். கல்யாண அகதிகள் படத்துல பாருங்க. ஒரு நல்ல வேலைல உள்ள பெண்மணியாகவும்..கணவனிடம் விவாகரத்து கோரும் மனைவியாகவும் நடிச்சிருப்பாங்க. ஒய்.விஜயா...நீங்க நல்ல நடிகைன்னு சொல்ல ரெண்டு படங்கள் போதும். கல்யாண அகதிகள் ஒன்னு. மூன்று முடிச்சு இன்னொன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;நடிகை சீமா. அவங்க ரொம்ப அழகாத் தெரிஞ்சாங்க. அந்தப் படத்துல அவங்க அழகைத்தான் ரசிச்சேன். மொத வாட்டிப் படம் பாத்தப்பவும் சீமான்னு தெரியாம...அவங்க அழகா இருக்காங்கன்னு ரசிச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ரொம்பப் பிடிச்சது படத்தோட முடிவுதான். இந்தப் பொண்ணு இந்து. அந்தப் பையன் கிருஸ்துவன். காதலுக்குப் பையன் வீட்டுல பச்சைக்கொடி. என்ன.... பொண்ணு மதம் மாறனும். ஆனா மாறாம...காதலைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிர்ரா. காதல் பெருசுதான். ஆனா அவ சொல்ற காரணம் காதலை விட மதம் பெருசுன்னு இல்ல. "முருகன் இருக்கான்னு நம்புறேன். நாளைல இருந்து ஏசுதான் கடவுள்னு எப்படி நான் நம்புறது"ன்னு கேக்குறா. தோழி சொல்றா..."அட..இவ்ளோதானா....வெளிய ஏசுவேன்னு சொல்லீட்டு உள்ள முருகான்னு சொல்லேண்டி". ஆனா இவ அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்குறா..."நான் யாரை ஏமாத்துறேன். ஏசுவையா..முருகனையா...நான் ஏன் ஏமாத்தனும்?" இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமத்தான் அவ காதலை உதறீட்டு வந்துர்ரா. இதுல பொண்ணு முருக பக்தைங்குறதால மட்டுமில்ல...இது எந்த மதத்த நம்புறவங்களுக்கும் பொருந்தும். இது என்னோட கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமா...அரசியல்... இது ரெண்டும் ஒன்னுதானே. வெவ்வேறையா? :) சரி. கேட்டுட்டீங்க. சொல்றேன். இந்தச் சினிமா நடிகர்கள்ளாம் எப்ப தங்களை நடிகர்கள்னு மட்டும் நெனைப்பாங்க? அவங்களைச் சொல்லக் கூடாது. மக்களைச் சொல்லனும். நடிகனை நடிகனா மட்டும் பாக்கத் தெரியாத தமிழ்நாட்டு "மட" மக்களைச் சொல்லனும். அந்த "மட" மக்களை நம்பி அரசியல் நடத்துற சினிமாக்காரங்களையும்....அந்தச் சினிமாக்காரங்களை நம்பி அரசியல் பண்ற அரசியல்வாதிகளும் தான் ரொம்பவும் மனதைத் தாக்குது. திருந்த மாட்டீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?&lt;br /&gt;&lt;br /&gt;தொழில்நுட்பமா.... அதெல்லாம் அவ்வளவா புரியாது. ஆனாலும் சின்ன வயசுல அக்னி நட்சத்திரம் பாத்தப்போ...ஏன் இந்தப் படத்துல ஒன்னுமே தெளிவாத் தெரிய மாட்டேங்குதுன்னு நெனைச்சதுதான் என்னோட தொழில்நுட்பத் திறமை. :)&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா கொஞ்ச நாள் கழிச்சித் திருடா திருடா பாக்குறப்போ....அந்தத் தொழில்நுட்பத்தை ரசிச்சிப் பாத்தேன். அதுலயும்.... சந்திரலேகா பாட்டு முடியுறப்போ சுத்தியிருக்குற வெளக்குகள் அணைஞ்சிக்கிட்டே வந்து... கடைசில திரையில ஒரு ஓரத்துல அனு அகர்வால் (பேரு சரியா?) மட்டும் தெரிவாங்க. அந்தக் காட்சியை ரொம்பவும் ரசிச்சேன். ஆனா அதே நேரத்துல ஸ்ரீதரோட பழைய படங்களைப் பாக்குறப்போ... அவருடைய காலகட்டத்துக்கு நெறையவே முயற்சி செஞ்சிருக்காருன்னு தோணுச்சு. நெஞ்சம் மறப்பதில்லை படம் பாத்துப் பாத்து ரசிச்சேன். படமா...அது.... அதுல பாருங்க ஸ்ரீதர் எடுத்த ரெண்டு பாட்டுகள் இப்ப டீவில போட்டாலும் விடாமப் பாப்பேன். ஒன்னு "விழியே கதை எழுது". இன்னொன்னு "தங்கத்தில் முகமெடுத்து." எம்.ஜி.ஆர் லாதாவோட கையப் பிசையுறதப் பாத்தாக் கஷ்டமா இருந்தாலும்.... என்னவோ..அந்தப் பாட்டைப் பாப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா&lt;br /&gt;&lt;br /&gt;அட இப்பிடிக் கேக்கலாமா? எனக்கும் பசுநேசன், சிங்கமுடித் தலை நடிகர் பத்தியெல்லாம் எப்படித் தெரியும்னு நெனைக்கிறீங்க? சினிமா பத்தி வாசிச்சுத்தானே. ஹிஹி. அதுவுமில்லாம மெல்லிசை மன்னர் ஆனந்த விகடன்ல ஒரு தொடர் எழுதுனாரு. அது...அப்புறம் இந்தக் குளத்தில் கைகழுவியவர்கள்...இல்ல ... இல்ல... கல்லெறிந்தவர்கள்.... அப்புறம் வாலி எழுதுன சுயசரிதை... மகேந்திரன் எழுதுனது...இப்பிடியெல்லாம் படிச்சிருக்கேனே.&lt;br /&gt;&lt;br /&gt;7.தமிழ்ச்சினிமா இசை?&lt;br /&gt;&lt;br /&gt;இது பத்தி எழுதுனா... எழுதிக்கிட்டேயிருக்கனும். அவ்ளோ இருக்கு. மெல்லிசை மன்னர் ரொம்பப் பிடிக்கும். ஏ.ஆர்.ரகுமான் இசை பிடிக்கும். இளையராஜா இசையும் ரொம்பப் பிடிக்கும். பொதுவாவே நல்ல இசைன்னாலே ரொம்பப் பிடிக்கும். இப்ப ஒவ்வொரு பாட்டுகள் நல்லா இருந்தாலும்.... பொதுவாவே இசை தொய்வாத்தான் இருக்கு. இந்த நிலை மாறனும். கண்டிப்பா மாறனும். மாறியே ஆகனும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் நல்லாப் பாப்பேன். சின்ன வயசுல...இப்பயும் வயசு நெனைவில்லை. தொலைக்காட்சியில ஞாயித்துக் கெழமை மதியம் "பிராந்தி"யப் படங்கள் போடுவாங்கள்ள... அதுல ஒரு படம். என்ன மொழின்னு புரியலை. நடிகரு யாருன்னு தெரியலை. கீழ ஓடுற எழுத்துகளைப் புரிஞ்சிக்கிற வயசும் இல்லை. ஆனா படமும்...கதையும் மனசுல அப்படியே பதிஞ்சிருச்சு. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழிச்சி ஒரு நண்பனோட பேசுறப்போ பிடிச்ச படங்களைப் பத்திப் பேச்சு வந்துச்சு. அப்ப மனசுல பதிஞ்சிருந்த கதையைச் சொன்னேன். சொல்லச் சொல்லக் கேட்டுட்டு அவன் சொன்னான்.... "இது வங்காளப் படம்....பேரு பஞ்ச்சரமேர் பாகான். 1980ல வந்த படம்"... விடுவேனா அப்புறம்... அடுத்து கொல்கொத்தா போனப்ப படத்த வாங்கீட்டு வரச்சொல்லிப் பாத்தேன். அப்பப்பா... படமா அது... தமிழில் இது மாதிரி எடுக்க மாட்டாங்களாய்யா! எடுத்தாலும் மக்களே..போய்ப் பாப்பீங்களாய்யா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படத்தைப் பாக்கனும்னா &lt;a href="http://calcuttatube.com/2007/10/25/bancharamer-bagan-1980-a-tapan-sinha-classic-online-bangla-movie/"&gt;இந்தச் சுட்டிக்குப்&lt;/a&gt; போங்க. உண்மையிலே அருமையான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு மொழிகள் புரியுங்குறதால...எல்லாத்தையும் பாக்குறதுண்டு. தெலுங்குன்னாலே பொதுவாகவே மசாலாங்குறது நம்ம சொல்றது எக்கச்சக்கம்னாலும்....அங்கயும் நெறைய அருமையான படங்கள் இருக்கு. விஸ்வநாத் படங்கள் ஒரு பக்கம் இருக்க.... அவை தவிரவும் நெறைய நல்ல படங்கள் இருக்கு. கோரிண்ட்டாகு-ன்னு ஒரு படம். அதாவது மருதாணி....சோபன்பாபு, சாரதால்லாம் நடிச்சிருக்காங்க. அதுல சின்னவயசுச் சோபன்பாபுவுக்கும் அவரோட தங்கச்சிக்கும் சோறு ஊட்டிக்கிட்டே சாவித்திரி ஒரு பாட்டுப் பாடுவாங்க. புருஷனால துன்புறுத்தப்படும் ஒரு பட்டிக்காட்டு அப்பாவிப் பெண். அவங்க பாட்டுப் பாடுறப்போ சட்டுன்னு அழுதுட்டேன். இன்னொரு வாட்டி அந்தப் படத்தைப் பாக்குற மனத்துணிவு எனக்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே மாதிரி கன்னடத்துல நாகமண்டலா, பூதய்யனு மக ஐயூ ஆகிய படங்கள் மிக அருமையோ அருமை. திரும்பத் திரும்பப் பாத்து ரசிக்கக் கூடிய படங்கள். மலையாளத்துலயும் படங்கள் இருக்கு. இதுல பாருங்க... நான் சொன்ன எந்தப் படத்தைப் போலவும் தமிழில் படம் வரவேயில்லை. வந்து வெற்றியும் பெறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் இயல்பான படங்களே இல்லையான்னு கேக்கலாம். இருக்குது. எண்ணிப் பாத்தா விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுலதான் இருக்குது. ஆனாலும் என்னவோ நம்மல்லாம் மசாலாவுக்குள்ளயே மூழ்கிப் போயிருக்கோம்.&lt;br /&gt;&lt;br /&gt;9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?&lt;br /&gt;&lt;br /&gt;நேரடித் தொடர்பெல்லாம் இல்லை. எதிரடித் தொடர்புதான் இருக்குது. அதாங்க...திரைக்கு எதிரா உக்காந்திருக்கும் தொடர்பு. அவ்ளோதாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்புன்னு இருந்தா கண்டிப்பா ஏதாச்சும் நல்லது செய்யலாம். என்ன.... நல்ல கதையா எழுதிக் குடுக்கலாம். யாராச்சும் தயாரிக்கத் தயாரா இருக்கீங்களா? எந்த மாதிரி கதை வேணும்னு சொல்லுங்க. நான் தயார். :)&lt;br /&gt;&lt;br /&gt;10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்காலமாவது திருந்தும்னு எதிர்பாக்குறேன். மத்தபடி என்ன சொல்றதுன்னு தெரியலை. வன்முறைய விட்டு வெளிய சிந்திக்க மாட்டீங்களா? :(&lt;br /&gt;&lt;br /&gt;11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;என்னாகும்? நாடகங்களுக்கு வரவேற்பு பெருகும். மேடை நாடகங்களும் சரி....தொலைக்காட்சி நாடகங்களும் சரி. சினிமாக்காரங்கள்ளாம் நாடகத்துக்குப் போய்ட்டதால....நாடகக்காரங்களுக்குக் கோவம் வந்தாலும் வரலாம். சண்டை வரலாம். சினிமா நடிகர்களோட சம்பளம் கொறையும். மேடை நாடகத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சமாவது நடிக்க முயற்சி செய்வாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதாங்க எனக்குத் தெரிஞ்சது. அதையும் சொல்லீட்டேன். அஞ்சு பேரைக் கூப்புடனுமாம். அஞ்சாத பேர்களைக் கூப்புடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அ. ஆன்மீகச் செம்மல் குமரன்&lt;br /&gt;ஆ. காமிராக் கவிஞர், புகைப்படப் புலவர் சிவிஆர்&lt;br /&gt;இ. அன்புச் சகோதரி துர்கா&lt;br /&gt;ஈ. இந்த வார நட்சத்திரம் இளா&lt;br /&gt;உ. தப்பிச்சு ஓடாத கப்பி&lt;br /&gt;&lt;br /&gt;கூப்டாச்சுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-4669950517204429620?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/4669950517204429620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=4669950517204429620' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4669950517204429620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4669950517204429620'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/10/mad-at-cinema.html' title='சினிமாப் பைத்தியம்'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-678847000580298714</id><published>2008-09-29T09:48:00.000-07:00</published><updated>2008-09-29T09:53:29.163-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='land mafia'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='chennai'/><title type='text'>சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள்</title><content type='html'>அரசியல்வாதிகள் நிலம் திருடுவது ஒன்றும் புதிதில்லை. பழைய ஜெயலலிதா ஆட்சியில் பல பணக்காரர்கள் நடுயிரவில் வீட்டை விட்டு வெளியே போனதெல்லாம் நாம் நாளிதழ்களிலும் படித்ததுதான். திமுகவினரும் அதை எல்லாருக்கும் எடுத்துச் சொன்னதும் தெரிந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது காட்சிகளும் கோலங்களும் ஆட்சிகளும் மாறியிருக்கிறதும் தெரிந்ததுதானே. சமீபத்தில் சென்னையில் இருக்கும் இடங்களை மதுரையின் முக்கிய அரசியல் மையத்தின் மகனும்... அவருடைய சகோதர உறவுடைய மறைந்த நடிகரின் மகனும் வளைப்பதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய உறவினர்கள் ஒரு இடம் வாங்கியிருந்தார்கள். சமீபத்தில் அங்கு புதிதாக ஒரு போர்டு போடப்பட்டு சுற்றிலும் தட்டியும் போட்டிருக்கிறார்கள். அதாவது அவர்கள் இடம் மட்டுமல்லாது .. சுற்றியுள்ள இடங்களையும் சேர்த்து கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாவில் வருவது போல.. ஒரு குடிசை.. ஒரு மாருதி வேன். கொஞ்சம் அடியாட்கள் (மதுரையிலிருந்தாம்)....இப்பிடி இருக்கிறதாம் காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;காவல்துறையில் புகார் கொடுக்கப் போனாலும் அவர்கள் எந்தப் புகாரையும் ஏற்க மறுக்கிறார்களாம். தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் மகன் இந்த விஷயத்தில் இருப்பதால் புகார் வேண்டாம் என்று காவல் துறையினரே "நல்லது" சொல்லி அனுப்புகிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஆட்சியில்தான் இப்பிடியென்றால்... இந்த ஆட்சியிலுமா! இப்பொழுது இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று கேட்டால்... மற்ற அரசியல் பதிவுகளுக்கு எது ஆதாரமோ...அதேதான் ஆதாரம். கும்முகின்றவர்கள் கும்முக. பம்முகின்றவர்கள் பம்முக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-678847000580298714?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/678847000580298714/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=678847000580298714' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/678847000580298714'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/678847000580298714'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/09/chennai-land-mafia.html' title='சென்னையில் நிலம் திருடும் பெரிய குடும்பத்துப் பேரன்கள்'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-6447501842614856736</id><published>2008-09-14T06:41:00.000-07:00</published><updated>2008-09-14T22:25:01.122-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரியாணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கங்கை அமரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gangai Amaran'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='biryani'/><title type='text'>பிரியாணி - 3</title><content type='html'>பிரியாணி போட்டு ரொம்ப நாளாச்சுல்ல. அதான் இப்பக் கிண்டியாச்சு. மொதல்ல கொஞ்சம் அறிவியல் பச்சடி போடுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கடவுள் நுண்துகள்...அல்லது பெருவெடிப்பு ஆராய்ச்சியப் பத்தித்தான் இப்ப எங்க பாத்தாலும் பேச்சு. அது சரியா...தப்பா... நல்லதா... கெட்டதா...இப்பிடி நூறு கேள்விகள்...விவாதங்கள். அட.. நமக்கு அவ்வளவு அறிவியல் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆகையால நல்லது கெட்டது சொல்ல முடியாது. ஆனா இங்க நெதர்லாந்துல இருக்குறவங்களுக்குள்ள ஒரு பேச்சு. அதாவது இங்க எங்கூட வேலை செய்ற இந்திய நண்பர்களுக்குள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சோதனைக்காக 27 கிலோமீட்டருக்கு சுரங்கப்பாதை போட்டிருக்காங்களாம். அதாவது சுவிட்சர்லாந்துல தொடங்கி பிரான்சு வரைக்கும் போகுது இந்தச் சுரங்கம். ஐய்யா...ஆராய்ச்சி நல்லவிதமா முடிஞ்சிருச்சுன்னு வெச்சுக்கோங்களேன்....எல்லாருக்கும் சந்தோசம். ஆனா ஒவ்வொருவரு பயமுறுத்துறாப்புல கருந்துளைன்னு ஒன்னு உண்டாயிருச்சுன்னா...அதுக்குள்ள எல்லாம் போயி ஒன்னுமில்லாம ஆயிருமாம்ல. அப்படி ஏதாச்சும் ஆச்சுன்னா.....? பிரான்சுக்கு மேலதான நெதர்லாந்து... ரொம்பப் பக்கமாச்சேய்யா.....அதான் இப்பதையப் பேச்சு. எந்தத் தேதீல இந்தப் பெருவெடிப்ப உண்டாக்குறாங்கன்னு சொல்லீட்டாங்கன்னா...இல்ல ஒங்களுக்குத் தெரிஞ்சா நீங்களும் சொல்லுங்க. அந்தத் தேதி வாக்குல ஒரு வாரமோ ரெண்டு வாரமோ லீவக் கீவப் போட்டு இந்தியாவுல குடும்பத்தோட இருக்கலாம் பாருங்க. தேதி தெரிஞ்சாச் சொல்லுங்கய்யா... பிரான்சு சுவிட்சர்லாந்துல இருக்குற நம்மூர்க்காரகளப் பாத்து ஆறுதல் பட்டுக்கிட்டாலும்....பலருக்கு இங்க அடிவயிறு ஜிலீர்ங்குதாங்கோய்.&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு கேள்வி. இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா? பாக்கக் கூடாதா? இன்னும் குறிப்பாச் சொல்லனும்னா......வெளிநாட்டுல இருக்குற இந்தியர்கள் இந்தியாவுல மருத்துவம் பாக்கலாமா கூடாதா? ஏன் இந்தக் கேள்வின்னா...ஒரு மெயில் வந்துச்சு. இங்கிலாந்துல இருக்குற ஒரு தமிழர் அனுப்புன மெயில்தான். எனக்கு நேரடியா அவரைத் தெரியாதுன்னு வெச்சுக்கோங்களேன். ஆனாலும் மெயில்னு ஒன்னு வந்துருச்சே. அவரோட மனைவிய இழந்துட்டாராம் இந்தியாவுல. அவங்களுக்கு ஹெர்னியா இருந்திருக்கு. இங்கிலாந்துல மருத்துவம் பாத்திருக்காங்க. அவங்களும் இது ஒன்னும் பிரச்சனையே கெடையாது. அவசரப் பிரச்சனையும் கெடையாது. ஓய்வா இருக்குறப்போ சொல்லுங்க...இப்பத்தான கொழந்தை பிறந்து ரெண்டு மாசம் ஆகுது.. ஆகையால கொஞ்ச நாள் கழிச்சி....அறுவை சிகிச்சை செஞ்சிக்கிறலாம்னு சொன்னாங்களாம். இவங்களும் இந்தியாவுக்கு லீவுல போறோமே...அங்க நம்மூரு டாக்டருங்க நல்லா பாத்துச் சொல்வாங்கள்ளன்னு வந்திருக்காங்க. வந்த அன்னைக்கே டாக்டர் கிட்ட அப்பாயிண்டுமெண்டு. பெருங்குடி பக்கத்துல இருக்குதே லைப்லைன் மருத்துவமனை. அங்க இருக்குற டாக்டர்.ராஜ்குமார் கிட்ட. அவரு சொன்னாராம்...அடுத்த நாளே அறுவை சிகிச்சை வெச்சிக்கலாம்னு.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அறுவை சிகிச்சையும் நடந்தது. ஆனா அதுக்கப்புறம் ஒன்னு மேல ஒன்னா பிரச்சனைகள் வந்து கடைசியில் மனைவியை வெறும் உடலாத்தான் வீட்டுக்குத் தூக்கீட்டுப் போக முடிஞ்சதாம். அந்த அபாய நிகழ்வுகளை மின்னஞ்சலில் தொகுத்து அனுப்பியிருக்காரு. இதுல எவ்வளவு உண்மை பொய்னு தெரியலை. ஆனாலும் படிக்கிறப்போ நமக்கே பயமாயிருக்குங்க. அந்தக் குறிப்பிட்ட மருத்துவரைப் பத்தியோ மருத்துவமனையைப் பத்தியோ குறை சொல்லனுங்குறது என்னோட எண்ணம் இல்ல. ஆனா வந்த மின்னஞ்சலில் சாராம்சத்தைப் பகிர்ந்துக்கனுங்குறதால சொன்னேன். இந்த மின்னஞ்சல் வேணுங்குறவங்க...எனக்கு gragavan@gmail.comக்கு மின்னஞ்சல் அனுப்புங்க. நான் ஒங்களுக்கு அனுப்புறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவுமில்லாம...சமீபத்துல என்னுடைய மாமாவும் மருத்துவமனையில் இருந்தாரு. அவங்க அவரைப் பாத்துக்கிட்ட விதத்தப் பாக்குறப்போ இந்திய மருத்துவர்கள் வியாபாரிகளாகிப் போயிட்டாங்களோன்னுதான் தோணுச்சு. விதிவிலக்குகள் இருக்கலாம். எல்லாரும் அப்படித்தான்னு இல்லை. ஆனாலும் அந்த மருத்துவர்ங்குறது போய் மருத்துவ வியாபாரிங்குற எண்ணம் எழுந்தது உண்மைதான். இங்க நெதர்லாந்துல கூட வேலை பாக்குற பொண்ணுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயிருச்சு. மருத்துவமனைல பத்து நாளு இருந்துட்டு அப்புறம் இந்தியாவுக்குப் போயிட்டா. ஆனா அந்தப் பத்து நாளும் அருமையா பாத்துக்கிட்டாங்க. நெறைய சோதனைகள் செஞ்சாங்க. ஆனா மருந்தோ எதுவுமோ படக்குன்னு குடுத்துறலை. அதே மாதிரி அந்தப் பொண்ணு இந்தியா போனப்பிறகும் நல்ல மருத்துவர் கிட்ட பாத்து சரியாப் போச்சு. அதுவும் உண்மைதான். முன்னமே சொன்னாப்புல நெறைய மருத்துவ வியாபாரிகள்..சில மருத்துவர்கள். இதுதான் இந்தியாவின் நிலையோ!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;---------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து எதாச்சும் ஜாலியா பாப்போமா! ஒரு ஜாலியான பாட்டு. ஆனா தெலுங்குல. தமிழ்லயும் இந்தப் படத்தப் பாத்திருப்பீங்க. பாட்டையும் கேட்டுருப்பீங்க. வாழ்வே மாயம்னு தமிழ்ல வந்துச்சுல்ல. அது பிரேமாபிஷேகம்னு மொதல்ல தெலுங்குல வந்துச்சு. படம் குண்டக்க மண்டக்க ஓடுனதால அதைக் கமலை வெச்சு தமிழ்ல எடுத்தாங்க. பில்லா கிருஷ்ணமூர்த்திதான் இயக்கம். தமிழில் இசை கங்கையமரன். எல்லாப் பாட்டையும் புதுசாப் போட்டாலும் இந்தப் பாட்டை அப்படியே தெலுங்குல சக்கரவர்த்தி இசைல இருந்து சுட்டுட்டாரு. பாட்டைக் கேளுங்க. பாருங்க. விழுந்து விழுந்து சிரிச்சு ஒடம்பைப் புண்ணாக்கிக்கிறாதீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/I7ffjWfuM-8&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/I7ffjWfuM-8&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-6447501842614856736?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/6447501842614856736/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=6447501842614856736' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6447501842614856736'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6447501842614856736'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/09/3-bigbang-gangai-amaran-indian-doctors.html' title='பிரியாணி - 3'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-8023997686273436603</id><published>2008-09-01T14:53:00.000-07:00</published><updated>2008-09-01T15:12:30.263-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Ilayaraja'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mellisai mannar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='m.s.viswanathan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெல்லிசை மன்னர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='billa'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இளையராஜா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பில்லா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.எஸ்.விஸ்வநாதன்'/><title type='text'>ஒரு பாடல் மூன்று மொழி இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன்</title><content type='html'>வெத்தலையப் போட்டேண்டி பாட்டு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். பில்லா படத்துப் பாட்டுதான். மலேசியா வாசுதேவன் பாடியிருப்பாரு. இந்தப் பாட்டை இதுக்கு முன்னாடி பாக்காதவங்க எங்கயாச்சும் பாத்துருங்க. வீடியோ எங்க கெடைக்கும்னு தெரியலை. இந்தப் பாட்டுக்கு இளையராஜா இசையமைச்சா எப்படியிருக்கும்னு ஆசைப்படுறவங்க கொஞ்சம் பொறுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் வந்த இந்தப் படத்திற்கு மூலம் இந்திப் படமான டான். அந்தப் படத்துல இந்தப் பாட்டு எப்படியிருக்குன்னு இங்க பாத்துக்கோங்க.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/7Y-4aPH9sfg&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/7Y-4aPH9sfg&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இளையராஜாவுக்கு வருவோம். தமிழில் மெல்லிசை மன்னர் இசையமைச்சாரு பில்லாவுக்கு. ஆனா தெலுங்குல இளையராஜா இசை. ரஜினிகாந்துக்குப் பதிலா என்.டி.ராமாராவ். பாட்டைப் பாத்துருவோமே.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/Pz9NILj3q1g&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/Pz9NILj3q1g&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதே படத்துல கலக்கலா இளையராஜா ஒரு பாட்டு ஜெயமாலினிக்குப் போட்டிருக்காரு. நா பருவம் நீக்கோசம்...பல்லவி பாடுத்துன்னதி... செம பாட்டு. இது தமிழ்ல பின்னாடி வாலிபமே வா வான்னு வந்துச்சு.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/saA1SjQqgQE&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/saA1SjQqgQE&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பாட்டையே தமிழ்ல மெல்லிசை மன்னர் போட்டிருக்காரு. எல்.ஆர்.ஈஸ்வரி கலக்கீருக்காங்க. ஆனா அதோட வீடியோவும் கிடைக்கலை.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மூலமான இந்தியில்.&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/wABR1D-TVLo&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/wABR1D-TVLo&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பாட்டெல்லாம் பாத்தீங்கள்ள. உங்க கருத்துகளை அள்ளித் தெளிங்க. :)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-8023997686273436603?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/8023997686273436603/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=8023997686273436603' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8023997686273436603'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8023997686273436603'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/09/billa-don-yugandhar-ilayaraja.html' title='ஒரு பாடல் மூன்று மொழி இளையராஜா எம்.எஸ்.விஸ்வநாதன்'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-4326553306986024527</id><published>2008-07-31T14:30:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:45.656-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மன்னிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kuselan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ரஜினிகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Apology'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குசேலன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Rajini'/><title type='text'>ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்</title><content type='html'>ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனால் (ஆகித் தொலைந்தால் என்று படிக்க விரும்புகிறவர்கள்...அப்படியும் படித்துக் கொள்ளலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;முதலமைச்சர் அலுவலகத்தில் (சும்மாக்காச்சுக்கும் கூட செயிண்ட் ஜார்ஜ் கோட்டைன்னு சொல்ல மனசு வரலைங்க) உட்கார்ந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நாராயணா.. நாராயணா..."&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்தின் அழைப்பைக் கேட்டு ஓடி வருகிறார் உதவியாளர்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க சத்தியத்த விட்டுட்டீங்க? நன்ன ஹெசுரு சத்யநாராயணா".&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டைலாகச் சிரிக்கிறார் ரஜினிகாந்த். "ஹா ஹா ஹா... சத்தியத்தை விட்டாலும் நாராயணனை விட மாட்டேன். ஹா ஹா ஹா"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க சத்தியத்தை விடுங்க...சாப்பாட்டையும் விடுங்க...இப்ப அவசரமான பிரச்சனை ஒன்னு வந்திருக்கு. அதப் பாருங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"நாராயணா... என்னைப் பிரச்சனைகளிலிருந்து பார்த்துக் கொள்ளுங்கள்...பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனையைச் சொல்லு."&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க காவிரி மினரல் வாட்டர் தமிழ்நாட்டுக்கும் டிஸ்டிரிபியூட் பண்ணனும்னு கோர்ட்ல கேஸ் போட்டீங்களே....அதுக்கு அவங்கள்ளாம் ஆர்ப்பாட்டம் பண்ணாங்களே.... அப்பக் கூட நீங்க... ஆர்ப்பாட்டம் பண்றவங்களைப் பாத்து ஏன் ஆர்ப்பாட்டம் பண்றீங்கன்னு கேட்டீங்களே...அது இப்பப் பெரிய பிரச்சனையாயிருச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"அது நடந்து ஒரு வருஷம் இருக்குமே. இப்ப என்ன பிரச்சனை?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒங்க குரு தயாரிச்ச துரியோதனன் படத்துல நீங்க முதலமைச்சரா வர்ரீங்களே... அந்தப் படத்த அங்க ரிலீஸ் பண்ணக் கூடாதாம். அதான் பிரச்சனை."&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன அந்யாயம் இது.. படத்த ரிலீஸ் பண்ணலைன்னா எப்படி? எக்கச்சக்கமா குருநாயர் பணம் போட்டிருக்காரே. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். இதுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகனும்."&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரம் பார்த்து "ராஜ்யமா இல்லை இமயமா" என்று ஜெயச்சந்திரன் எப்.எம் ரேடியோவில் கதறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினிகாந்திற்கு எரிச்சல் வருகிறது. "நேரம் கெட்ட நேரத்துல இதென்ன பாட்டு. அதான் ராஜ்யம்னு எப்பவோ முடிவு பண்ணியாச்சே."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி....பிரச்சனைக்கு என்ன செய்யப் போறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா... அதுக்கு ஒரு வழி இருக்கு. என் வழி....தனீஈஈஈஈ வழி."&lt;br /&gt;&lt;br /&gt;சத்யநாராயணா சிரிக்கிறார். "ஓ மன்னிப்புக் கேக்கப் போறீங்களா? அப்ப பிரச்சனை தீந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"அதே அதே. ஒரு மன்னிப்பு. பிரச்சனை கதம் கதம். ஹா ஹா ஹா"&lt;br /&gt;&lt;br /&gt;"கதம்தான். அங்க பிரச்சனை கதம். இங்க புதுப்பிரச்சனை வந்துட்டா..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா நீ என்னை வாழ வைத்த தய்வங்களாகிய தமிழ் ஜனங்களை சரியா புரிஞ்சிக்கலை. அவங்க அறிவு நல்ல அறிவு. அரசியல் வேற...சினிமா வேற... மினரல்வாட்டர் வேறன்னு நல்லாப் புரிஞ்சி வெச்சிருக்காங்க. அதுனால எந்தப் பிரச்சனையும் வராது." சிகரட்டைத் தூக்கிப் போட்டுப் பிடிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. எப்ப மன்னிப்புக் கேக்கப் போறீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதுக்குத்தான் ஐதராபாத் போறேனே. அங்க தேஜா டீவி...ஜெமினி டீவியெல்லாம் வரச்சொல்லி மன்னிப்புக் கேட்டுறலாம். அப்படியே இங்க எதுவும் பிரச்சனை வந்தாலும் ஒரு மாசம் கழிச்சி வந்தாப் போதும். எல்லாரும் மறந்திருவாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;"யாராச்சும் அதுக்கப்புறமும் நெனைவு வெச்சிருந்தா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா...நல்ல கேள்வி. எனக்கு இருக்குற அஞ்சு முகத்தைத்தான் எல்லாரும் பாத்திருக்காங்க. ஆறாவது முகத்தை யாரும் பாத்ததில்லையே.."&lt;br /&gt;&lt;br /&gt;சத்யநாராயணாவிற்கு ஒன்றும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா மேக்கப் இல்லாம வருவேன்னு சொன்னேன்."&lt;br /&gt;&lt;br /&gt;சத்யநாராயணா சிரிக்கிறார். ரஜினியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா நான் ஒரு முறை மன்னிப்புக் கேட்டா நூறு முறை மன்னிப்புக் கேட்ட மாதிரி"&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இங்க ஆம்ஸ்டர்டாம்ல குசேலன் படம் வருது. போகலாம்னு ஒரு கூட்டம் முடிவு பண்ணோம். இன்னைக்கு போறதில்லைன்னு முடிவு பண்ணீட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்க மன்னிப்புக் கேட்டதுக்கு இங்க மன்னிப்புக் கேட்டாத்தான் அடுத்து எதாச்சும் யோசிக்கலாம்னு முடிவு பண்ணீட்டோம். அதுவரைக்கும் ரஜினிகாந்த் படங்களுக்குத் தடா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SJIveMJybWI/AAAAAAAAERE/StO2dfAxg5E/s1600-h/TADAForKuselan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SJIveMJybWI/AAAAAAAAERE/StO2dfAxg5E/s320/TADAForKuselan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5229294313035427170" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடியில் சாப்பிட்ட உப்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-4326553306986024527?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/4326553306986024527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=4326553306986024527' title='58 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4326553306986024527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4326553306986024527'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html' title='ரஜினி நடிக்கும் மன்னிக்க வேண்டுகிறேன்'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SJIveMJybWI/AAAAAAAAERE/StO2dfAxg5E/s72-c/TADAForKuselan.jpg' height='72' width='72'/><thr:total>58</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-434578682592966064</id><published>2008-07-13T23:34:00.000-07:00</published><updated>2008-07-14T10:32:20.223-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அறிவியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='science fiction'/><title type='text'>கெமிக்கோ பிசிக்கோ (அறிவியல் சிறுகதை)</title><content type='html'>இந்தச் சிறுகதை &lt;a href="http://cyrilalex.com/?p=440"&gt;சிறில் அலெக்ஸின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 0, 102);"&gt;கெமிக்கோ பிசிக்கோ....&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடம்....... ஐரோப்பாவின் ஒரு ரகசிய ஆய்வுக் கூடம். பொழுது கிருஸ்துமஸ் பிறப்பதற்கு முந்திய வாரயிறுதியின் குளிரும் நடுயிரவு.&lt;br /&gt;&lt;br /&gt;விலைமதிப்பில்லாத அந்தக் காரிலிருந்து இறங்கிய பால் ஹெண்டிரிக்சுக்கு அட்ரீனலின் அளவுக்கு அதிகமாகவே எழுபத்திரண்டு வயதில் சுரந்தது. மூக்கிலும் வாயிலும் புகை விட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஒரு பொழுதுக்காக அவர் காத்திருந்தார். அவருக்காக அங்கு விஞ்ஞானி எரிக் உதவியாளர்களோடு காத்திருந்தார். யூரோ யூரோவாக அள்ளி அள்ளிக்&lt;br /&gt;கொடுத்தவர் ஹெண்டிரிக்ஸ் தானே.&lt;br /&gt;&lt;br /&gt;"வெல்கம் மிஸ்டர் பால். எல்லாம் தயாரா இருக்கு. நாங்க எல்லாருமே சோதனையை முடிச்சிட்டோம். All set. நீங்களும் ஒரு முறை சோதனை பண்ணீட்டீங்கன்னா இந்தக் கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ் வெற்றீன்னு உலகத்துக்குச் சொல்லீரலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;எரிக் சொன்னதைக் கேட்டு ஒயின் குடித்துக் குடித்துச் சிவந்த முகத்தில் இரத்தவோட்டமே தெளிவாகத் தெரியும் வகையில் மலர்ச்சியைக் காட்டினார் பால். "Yes Erik. கண்டிப்பா வெற்றிதான். உங்க மேல நம்பிக்கை இருக்கு. இந்த வெற்றி உங்க ஐம்பது வயதுக் கனவான நோபல் பரிசைக் கண்டிப்பா வாங்கிக் கொடுக்கும். எனக்கோ இழந்த பல இன்பங்களை மீட்டுக் கொடுக்கும். உலகத்தில் புதுப்புரட்சியையே உண்டாக்கும். பொழுதுபோக்குகளின் போக்கே மாறிவிடும்."&lt;br /&gt;&lt;br /&gt;சொன்ன பாலின் பேச்சில் மகிழ்ச்சி தெரித்தது. "கெமிக்கோ பிசிக்கோ தரோம்போ லிம்போசிஸ்...." தனக்குள்ளேயே ஒரு முறை சொல்லிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளே நுழைந்ததும் தானியங்கிக் கதவுகள் மூடிக் கொண்டன. அந்தப் பெரிய அறை ஒரு பெரிய சோதனைக்காகத் தயாராக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூலைகளிலும் ஒரே மாதிரியான இரண்டு கூண்டு அறைகள் இருந்தன. ஒரு கூண்டு அறையிலிருந்து மற்றொன்றைப் பார்க்கக் கூடாத வகையில் நடுவில் ஒரு தடுப்பு. கண்ணாடிக் கதவு. உள்ளே உட்கார நாற்காலி. நம்மைப் போன்ற சாதரணமானவர்களுக்குப் புரியாத பல அறிவியல் பொருட்கள். சரி. அவைகளைப் பற்றி நமக்கென்ன கவலை. கதைதானே முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்யப் போகும் சோதனையைப் பற்றி எரிக் விளக்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"These two chambers are identical. ஒவ்வொன்னுலயும் ஒவ்வொருத்தர் உக்காரனும். ஒருத்தர் அதுல transmitter (அனுப்புனர்). இன்னொருத்தர் receiver (பெறுனர்). அதத் தேர்ந்தெடுத்துட்டு switch on பண்ணா கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலை செய்யத் தொடங்கீரும். இதுல இன்னொரு வசதி இருக்கு. அனுப்புறதையோ பெறுவதையோ கூட்டிக்கவும் குறைச்சிக்கவும் ரெண்டு பக்கமும் வசதி இருக்கு."&lt;br /&gt;&lt;br /&gt;"Impressive Mr.Erik. நம்ம காலம் கடத்த வேண்டாம். முயற்சி பண்ணலாமே."&lt;br /&gt;&lt;br /&gt;"கண்டிப்பா. ஆனா நீங்க மொதல்ல அமைதியா இருங்க. Being relaxed will help better results. ஏற்கனவே நாங்க எல்லாருமே இந்தச் சோதனையைப் பண்ணிப் பாத்துட்டோம். எல்லாமே பாதுகாப்பானது. கொஞ்சம் அமைதியா தொடங்குனா போதும்."&lt;br /&gt;&lt;br /&gt;மூச்சை இரண்டு மூன்று முறை இழுத்து விட்டுக் கொண்டு தன்னை அமைதிப் படுத்திக் கொண்டார் பால். எரிக்கின் உதவியாளர்கள் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளேயிருந்த நாற்காலியில் பாலை உட்கார வைத்தார்கள். Receiver என்பதைத் தேர்ந்தெடுத்தார்கள். பிறகு கதவு மூடப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு அறைக்குள்ளே எரிக் நுழைந்து உட்கார்ந்தார். Transmitter என்பதைத் தேர்ந்தெடுத்தார் அவர். அவருடைய அறையின் கண்ணாடிக் கதவை மூடிக் கொண்டார். திரைப்படங்களில் காட்டுவது போல Start என்று ஒரு பட்டன் இருந்தது. அதைத் அமுக்கினார். கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ் வேலையைத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;எரிக் தன்னுடைய அறையிலிருந்த மின்விசிறியைத் துவக்கினார். சிலுசிலுவென காற்று அந்த அறைக்குள் நிரம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் பால் ஹெண்டிரிக்சுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சாதாரணமாக நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலத்தான் உட்கார்ந்திருந்தார். திடீரென பிடரியில் லேசாகக் குளிர்ந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குளிர்காற்று அவர் மேல் வீசுவது போல உணர்ந்தார். அப்படியே சாவகாசமாகச் சாய்ந்து உட்கார்ந்து அதை அனுபவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எரிக் உள்ளேயிருந்த ஒரு பெட்டியைத் திறந்தார். அதில் மஸ்டர்டு சாசோடு ஹாட் டாக் இருந்தது. அதிலிருந்த கிளம்பிய வாடை அவர் நாசியில் கம்மென்று நுழைந்தது. அப்படியே அதை எடுத்துக் கடித்தார். சுவைத்துச் சாப்பிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்ந்து உட்கார்ந்து காற்றை அனுபவித்துக் கொண்டிருந்த பாலின் மூக்கில் கடுகு வாடை ஏறியது. என்னடா கடுகு வாடை என்று யோசிக்கும் பொழுதே அதன் காரம் தொண்டையில் இறங்கியது. ஹாட் டாக்.....ஆம். அதனுடைய சுவை என்று புரிந்து போனது. சாப்பிடாமலேயே அந்தச் சுவையை அனுபவித்தார் பால். ஆகா. ஆகா.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்டியிலிருந்து ஒயின் பாட்டிலை எடுத்து வாயில் சிறிது கவிழ்த்துக் கொண்டார் எரிக்.&lt;br /&gt;&lt;br /&gt;இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை பாலின் தொண்டையில் கலகலவென இறங்கியது. ஒயின்... ஒயின்... ஒயின்....&lt;br /&gt;&lt;br /&gt;கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ் ஒழுங்காக வேலை செய்யத் தொடங்கியது. பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சி வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த விஞ்ஞானிக்கும் இருக்கும் நோபல் பரிசு ஆசை எரிக்குக்கும் இருந்தது. எதையாவது மிகப் புதுமையாகச் சாதிக்க வேண்டுமென்று பலப்பல முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்தான் கிடைத்தது பால் ஹெண்ட்ரிக்சின் நட்பு. இருவருக்கும் வெவ்வேறு தேவைகள். அந்தத் தேவைகளை இணைத்தது கெமிக்கோ பிசிக்கோ தராம்போ லிம்போசிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் வயதில் ஐரோப்பாவின் அனைத்து நாட்டுப் பெண்களையும் ரசித்து ரசித்து ருசித்தவர் பால் ஹெண்டிரிக்ஸ். முதல் காதலும் முதல் முத்தமும் முதல் உறவும் மறந்து போகும் அளவிற்குத் திகட்டத் திகட்ட அனுபவித்தார். ஆனால் இந்த எழுபத்தியிரண்டு வயதில் பில்லியன் பில்லியனாகப் பணம் இருந்தும் உடம்பு ஒத்துழைக்காமல் ஆசையை மட்டும் சுமந்து கொண்டிருந்தார். வயக்கராவும் வக்கில்லாமல் போனது. வக்கிரம் மட்டும் போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் பேசுவதை இன்னொரு இடத்தில் கேட்க முடிகிறது. ஒருவர் செய்வதை இன்னொரு இடத்தில் பார்க்க முடிகிறது. ஏன் ஒருவர் உணர்வதை மட்டும் இன்னொரு இடத்தில் உணரமுடியாது? இந்தக் கேள்விதான் விஞ்ஞானி எரிக்கின் உள்ளத்தில் ஊறிக்கிடந்த கேள்வி. பல்கலைக்கழகத்தில் மாணவனாக இருந்த பொழுதிலிருந்து உள்ள கேள்வி. சிந்தித்துச் சிந்தித்து யோசித்துப் பலகாலம் செய்த ஆய்வுகளைத் தொடர்ந்து செய்யத் தேவையாக இருந்தது பணம். அந்தப் பணம் பால் ஹெண்டிரிக்சிடம் இருந்தது. பணமும் ஆசையும் சேர்ந்து உழைத்துச் செய்த ஆய்வுகளின் பலனே இந்த கெமிக்கோ பிசிக்கோ தரம்போ லிம்போசிஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;விசிறியில்லாமலே காற்றை அனுபவித்துக் கொண்டும்... ஹாட் டாக் சாப்பிடாமலேயே சுவையை ருசித்துக் கொண்டும்....குடிக்காத ஒயினைச் சுவைத்துக் கொண்டும்...சோதனையை வெற்றியாக்கிக் கொண்டிருந்தார் பால். அடுத்த கட்டச் சோதனை ஒன்று மட்டும் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறிய தள்ளுவண்டியை எரிக் அமர்ந்திருக்கும் அறையின் கண்ணாடிக் கதவின் முன் வைத்தார்கள். அதிலிருந்த லேப்டாப்பில் ஒரு நீலப்படம் தொடங்கியது. அழகான எஸ்பானிய பெண் தன்னுடைய உடைகளை ஒவ்வொன்றாக விலக்கிக் கொண்டிருந்தாள். சந்தனத் தோல். தந்த உடம்பு. பார்க்கப் பார்க்க எரிக்கிற்கு ஜிவ்வென்று ஏறியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹெண்டிரிக்சுக்குத் தொப்புளுக்குள் முதலில் குறுகுறுத்தது. அந்தக் குறுகுறுப்பு பெருகிக் கூடி அடிவயிற்றில் இறங்கியது. முதன்முதலில்...இப்படித்தானே...தடுமாறி விட்டார் ஹெண்டிரிக்ஸ். பிரிகிட்டா கண் முன்னே தெரிந்தாள். முதல் காதலி. பதினான்கு வயதில் அவர் சிறுவன் இல்லை என்று நிரூபித்தவள். அவளது பழுப்புக் கூந்தல் அவர் மேல் கவிழ்ந்து மூடியது. டூலிப் இதழ்களால் முத்தமிட்டாள். "பிரிகீ....." முனகினார். பிரிகிட்டா புன்னகைத்தாள். "இன்னொரு முத்தம் பிரிகீ..." கொடுக்காமல் சிரித்தாள் பிரிகிட்டா. அறைக்குள் இருந்த பெறுவதைக் கூட்டும் வசதியைத் திருகினார் ஹெண்டிரிக்ஸ். அதைக் கூட்டக் கூட்ட பிரிகிட்டா முத்தமிட்டாள். ஹெண்டிரிக்சின் கடைவாயில் எச்சில் ஒழுகியது. "பிரிகீ.... பிரிகீ"... சொர்க்கத்தின் எஸ்கலேட்டர் அவரை உயர உயர அழைத்துச் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;நீலப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி எரிக்கை மிதமான நெஞ்சுவலி தாக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-434578682592966064?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/434578682592966064/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=434578682592966064' title='46 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/434578682592966064'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/434578682592966064'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/07/tamil-science-fiction.html' title='கெமிக்கோ பிசிக்கோ (அறிவியல் சிறுகதை)'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>46</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-2341360839231506014</id><published>2008-07-08T11:49:00.000-07:00</published><updated>2008-07-08T12:05:49.590-07:00</updated><title type='text'>சிவாஜி வாயிலே ஜிலேபி</title><content type='html'>இந்தப் பதிவை எழுதுவதற்கு எத்தனைத் திரைப்படத் துணுக்குகளைப் படிக்க வேண்டியிருந்தது தெரியுமா!  அப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து எழுதிய இந்தப் பதிவிற்குக் காரணம் &lt;a href="http://kavinaya.blogspot.com/2008/06/blog-post_13.html"&gt;கவிநயாதான&lt;/a&gt;். சும்மாயிருந்த என்னைச் சீண்டி விட்டிருந்தாலும் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள். ஆனால் பதிவெழுதத் தூண்டி விட்டால்! அதைப் படிக்கும் உங்கள் நிலைதான் என்ன! ஆகையால் இந்தப் பதிவு தொடர்பான எதுவென்றாலும் நீங்கள் கவிநயாவைத் தொடர்பு கொள்ளுங்கள். ஆட்டோவின் மீட்டர் சார்ஜைக் கூட அவரே கொடுப்பதாக உறுதி சொல்லியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்ணன் படப்பிடிப்பின் பொழுது நடந்த நிகழ்ச்சி இது. ஒரிசாவின் புகழ் பெற்ற கொனார்க் சூரியக் கோயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரவும் நிலவும் வளரட்டுமே என்ற அருமையான பாடலின் படப்பிடிப்பும் போர்க்களக்காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டன. இரவும் நிலவும் பாடலைத் தமிழில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடினார்கள். தெலுங்கில் பி.சுசீலா உண்டென்றாலும் ஆண்குரலுக்குப் பாலமுரளி கிருஷ்ணா.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பாட்டுப் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக இங்கிருந்து செட்டியார் மெஸ் ஒன்றும் உடன் சென்றிருந்தது. மேஸ் கூட்டத்தில் கந்தப்பச் செட்டியார் என்பவர் இனிப்பு வகைகளைத் திறம்படச் செய்யும் கைப்பலம் பெற்றிருந்தார். சிவாஜி அசைவப் பிரியர் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். சிவாஜி என்றால் இங்கு நடிகர் திலகத்தைக் குறிக்கும். நடிகர் மோகன்லால் வீட்டிற்குச் சென்றால் வாத்துக்கறி வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுவாராம். ஆகையால் தினந்தோறும் அசைவ வகைகள் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள் மெஸ்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் படப்பிடிப்பின் போதுதான் சிவாஜி அவர்களின் பிறந்தநாள் வருவதை பி.ஆர்.பந்துலு (அவர்தான் திரைப்பட இயக்குனர்) கந்தப்பச் செட்டியாரிடம் சொல்லி.... ஏதாவது புதிய இனிப்பு செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் சொல்லி விட்டார். பாயாசங்களையே எத்தனை நாளைக்குத்தான் காய்ச்சுவது? அதிரசத்திற்கு உள்ளூர் வெல்லம் சரிவருமோ என்ற கவலை. உக்கரையெல்லாம் இத்தனை பேர்களுக்குச் செய்வதற்குள் தாவு தீர்ந்து விடும். ஆகையால் குலாப் ஜாமூன் போடுவதென்று முடிவானதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்தநாள் அன்று காலை எல்லாரும் நடிகர் திலத்தை வாழ்த்தியிருக்கின்றார்கள். நடிகை தேவிகாவும் அவரது தாயாரும் அருகில் இருந்த பிஷ்ணு கோயிலுக்குச் சென்றுப் பூஜை செய்து பிரசாதம் குடுத்தார்கள். கந்தப்பச் செட்டியார் செய்த குலாப் ஜாமூனை கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வாழ்த்துச் சொல்லச் சென்றிருக்கிறார் பந்துலு மாமா. முதல் இனிப்பு தான் குடுக்கும் இனிப்பாக இருக்க வேண்டுமே..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அங்கே ஏற்கனவே நடிகர் திலகம் எதையே மென்று கொண்டிருந்தார். பார்த்தால் ஜிலேபி. கோயிலுக்குச் சென்ற நடிகை தேவிகா வழியில் இனிப்புக் கடையில் ஜிலேபியையும் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதைத்தான் சிவாஜி அவர்களும் கமலா அம்மாவும் சாப்பிட்டிருந்திருக்கிறார்கள். பந்துலு மாமா குலாப் ஜாமூனைக் கொடுத்து கந்தப்பச் செட்டியார் சிறப்பாகச் செய்ததைச் சொல்லியிருக்கிறார். ஜிலேபி கொடுத்த தேவிகாவிற்கும் ஜாமூன் செய்த செட்டியாருக்கும் நன்றி சொல்லி அடுத்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்து விட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் சிவாஜி வாயிலே ஜிலேபி கதை. கதையென்றால் கதையேதான். அதாவது புளுகு. இன்னொரு வகையில் சொன்னால் பொய். இப்படியே எம்.ஜி.ஆர் வாங்கிய சோடா.... தேங்காய் சீனிவாசனும் திருப்பதி லட்டும் என்று பலப்பல பழைய கதைகளும்... ஜெனிலியாவிற்குப் பிடித்த ஜெய்ப்பூர் கீர்... சூர்யாவின் சந்திரகலா... தசாவதாரப் படப்பிடிப்பில் கமலும் அசினும் சாப்பிட்ட கல்கோனா போன்ற புத்தம்புதிய கதைகளும் நிறைய உள்ளன. தேவைப்படும் பொழுது அவைகளும் எடுத்து விடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து மூன்று பேரைக் கூப்பிட வேணுமாமே. அதுனால தேங்காய் சீனிவாசன், டணால் தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி ஆகியோரை அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-2341360839231506014?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/2341360839231506014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=2341360839231506014' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2341360839231506014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2341360839231506014'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/07/blog-post.html' title='சிவாஜி வாயிலே ஜிலேபி'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-6284913419299242137</id><published>2008-06-24T11:59:00.000-07:00</published><updated>2008-06-24T12:01:16.461-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 17</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/06/16.html"&gt;இங்கே&lt;/a&gt; படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 17&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமரத்தைக் கண்டுவிட்ட மகிழ்ச்சி மூவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. வெள்ளைவெளேரென்ற மண்மலையும் அதன் உச்சில் தகதகவென மின்னும் தங்கமரமும் அழகோ அழகு. அவர்களிடம் அண்டி விவரித்தது போல மரகத இலைகள் மெல்லிய தென்றலில் அழகாக அசைய...அவைகளின் ஊடே பவழ மொட்டுகள் நாங்களும் இருக்கிறோம் என்றோம் என்று சொல்ல...மாணிக்கக் காய்களும் வைரக்கனிகளும் பார்வையை மாற்ற விடாமல் கவர்ந்தன. அப்பொழுது கதிரவன் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சித்திரை... நான் பிடிமாவின் மீது ஏறிச் சென்று கனியைக் கொய்து வருகிறேன். இப்பொழுது இங்கு யாரும் இல்லை. ஆகையால் விரைந்து பறித்து விட்டு அண்டியின் வயிற்றுவழியில் திரும்பச் சென்று விடுவோம்."&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சித்திரை வேறொன்றைக் குறித்து வைத்திருந்தான். "கதிரவா, நான் பறக்கும் படியில் வருகையில் இருட்டில் வந்தோம். படி நின்றவுடன் காலை எடுத்து வைத்ததும் நாம் வெளிச்சத்திற்கு வந்து விட்டோம். ஆனால் திரும்பவும் இருட்டுக்குள் எப்படிப் போவது என்ற வழியே தெரியவில்லையே!"&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை சொன்னதைக் கேட்டு இருவருக்கும் திக்கென்றது. அவர்கள் குடலுக்குள் அண்டி போவது போல ஒரு உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் முதலில் சுதாரித்தான். "ஆமாம். உண்மைதான். ஆனால் அதற்காக நேரம் கடத்த வேண்டாம். படக்கென்று நான் சென்று கனியைக் கொண்டு வருகிறேன். பிறகு யோசிப்போம் மற்றவற்றை." சொல்லிக் கொண்டே பிடிமாவின் மீது ஏறி, "பிடிமா தங்கமரத்திடம் செல்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் பிடிமாவால் பறக்க முடியவில்லை. பலவகையில் முயன்றும் பிடிமாவால் பறக்க முடியாமல் போனது. பிடிமாவின் பறக்கும் ஆற்றல் பூமியில் செயல்படவில்லை. பிடிமா தன்னிலையை விளக்கியதும் அவள் மீதிருந்து குதித்தான் கதிரவன். குதித்த வேகத்தில் விடுவிடுவென்று மண்மலையில் கால் புதையப் புதைய ஏறினான். விரைவில் உச்சிக்குச் சென்று வைரக் கனியைப் பறிப்பதற்காக கையை வைத்தான். ஆனால்... மண்மலை கிடுகிடுவென்று ஆடியது. சரேல் சரேல் என இரண்டு பெரிய நச்சுப்பாம்புகள் மண்மலைக்குள் இருந்து எழும்பிச் சீறின.&lt;br /&gt;&lt;br /&gt;கனியோடு இரண்டு மூன்று இலைகளையும் கொத்தோடு பறித்தவன் மண்மலையில் தரதரவென உருண்டான். சித்திரையும் பிடிமாவும் கத்தினார்களே ஒழிய... அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சின்னப் பாம்புகள் என்றால் கம்பெடுத்து அடிக்கலாம். பிடிமாவும் தும்பிக்கையால் தூக்கி விசிறலாம். ஆனால் இவையோ முப்பதடி நீளம். அதிலொன்று கதிரவனைக் குறிவைக்க மற்றொன்று சித்திரையையும் பிடிமாவும் குறிவைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்மைகளே" அண்டி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். வந்தவள் முதல் பாம்பைப் பிடித்துப் பிதுக்கத் தொடங்கினாள். அதன் வாயிலிருந்து நஞ்சு கொழகொழவென்று ஊதா நிறத்தில் கொட்டியது. பல்வலி மனிதர்களுக்கே வேதனை தருவது. அதில் நஞ்சை வைத்திருக்கும் பாம்பிற்கு? நச்சுப்பல்வலி தாளாமல் காஆஆஆஆஆஆய் என்று ஓலமிட்டது நாகம். கூட்டாளிக்கு ஆபத்து என்றதும் அடுத்த நாகம் கதிரவனை விட்டுவிட்டு அண்டியின் மீது தாவியது.&lt;br /&gt;&lt;br /&gt;அதை வலக்கையால் பிடித்தாள் அண்டி. இரண்டு நாகங்களும் கழுத்து நசுக்கப்பட்டு ஓலமெழுப்பின.&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்மைகளே.. இப்படியா விளையாட்டுத்தனமாக இருப்பது! பாருங்கள்..எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக் கொண்டீர்கள். நான் என்ன செய்வேன்! நீங்கள் முதலில் ஓடுங்கள். தப்பித்துக் கொள்ளுங்கள். இந்த நாகங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;அண்டி பொம்மைகளைப் பார்த்து உண்மையிலேயே பரிதாபப் பட்டுக் கூறினாள். ஆனால் உண்மையிலேயே அவளது நிலைதான் மிகப் பரிதாபமாக இருந்தது. இரண்டு நாகங்கள். அதுவும் முப்பதடி நீளமுள்ள நச்சு நாகங்கள். அண்டி வீராங்கனைதான். ஆனால் நஞ்சின் முன் என்ன செய்ய முடியும். நாகங்கள் கக்கிய நஞ்சைத் தொடாமல் தவிர்த்து வந்தாள். ஆனால் கக்கும் பொழுது எழும் சாரல் அவளை லேசாக மயக்கியது. அதுதான் சமயமென்று இரண்டு நாகங்களும் அவள் காலைச்சுற்றி இழுத்தன. எப்படியாவது விசத்தை மிதிக்க வைத்து விட வேண்டும் என்றுதான்....&lt;br /&gt;&lt;br /&gt;அண்டியின் பிடியோ லேசுமாசாக இல்லை. முதலில் பிடிபட்ட பாம்பின் நச்சுப்பல்லே பிதுங்கிக் கீழே விழுந்தது. விசப்பையும் கிழிந்து நஞ்சு கொட்டியது. வேதனையில் கதறிக் கதறி உயிர் விட்டது அந்த நாகம். ஆனால் இரண்டாம் நாகம் அவள் காலை இழுப்பதில் சற்று வெற்றி கண்டு நஞ்சைத் தொட வைத்தது. சுரீல் என்று விரலைத் தொட்ட நஞ்சு பரபரவென காலில் ஏறியது. ஆத்திரத்தின் உச்சிக்கே போனாள் அண்டி. தான் மாண்டாலும் நாகத்தைக் கிழித்து விட வேண்டும் என்று தனது வலிமையெல்லாம் திரட்டி அதன் வாலைப் பிடித்தாள். பிடித்த வாலை நகத்தால் கீறிக் கிழித்தாள். அந்த கிழிசலையே பிடித்து இழுத்து டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று நாகத்தை இரண்டாகக் கிழித்துப் போட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்மைகளே... இனிமேல் உங்களுக்கு நாகத்தால் கெடுதி இல்லை. விரைந்து செல்லுங்கள். மிக விரைந்து...." சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே நஞ்சு தலைக்கேறி முழுவுடலும் நிறம்மாறி மாண்டாள் அண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்துக் கொண்டிருந்த மூவரும் பேச்சடைத்துப் போயிருந்தார்கள். யாரிடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தார்களோ...அவள் வழியாகவே தங்கமரத்திற்கு வழி தெரிந்து...அந்த மரத்தையும் அடைந்து ....அங்கு சிக்கிக் கொண்ட ஆபத்தில் இருந்து அவளாலேயே காப்பாற்றப்பட்டு...அதற்காக அவளே உயிரை இழந்து.....ச்சே என்று ஆனது அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் வயிற்றில் போகும் பொழுதே அண்டிக்கு வயிறு கலங்கியது. என்னவோ என்று எழுந்து பார்த்தவளுக்கு விவரம் விரைவிலேயே புரிந்து போனது. அதனால் பொம்மைகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று விரைந்து வந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டகாசப் பேர்வழியானாலும் அண்டிக்கும் அன்புண்டு என்று புரிந்ததன் பலன் அவர்களின் கண்களில் கண்ணீராகப் பெருகியது. ஆண்டாண்டு காலம் அழுதாலும் மாண்டார் வருவரோ! சிறிதுசிறிதாக மனதைத் தேற்றிய அவர்களுக்கும் அடுத்த பிரச்சனை நினைவிற்கு வந்தது. அதாவது எப்படி வெளியே செல்வதென்று.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இடத்தைச் சுற்றிப் பார்க்கலாம் என்று அங்குமிங்கு நடந்தார்கள். அப்படி நடந்தவர்கள் கண்ணில் பட்டதுதான் தணலேரி. நெருப்பு கொப்பளித்துக் கொண்டிருந்த அந்த ஏரியை எப்படிக் கடப்பது என்பதே யோசனை. ஆனால் எதிர்பாராத உதவி அப்பொழுது வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-6284913419299242137?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/6284913419299242137/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=6284913419299242137' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6284913419299242137'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6284913419299242137'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/06/17.html' title='தங்க மரம் - 17'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-481979525359112496</id><published>2008-06-17T13:11:00.000-07:00</published><updated>2008-06-17T13:14:59.589-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 16</title><content type='html'>சென்ற பாகத்தை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/06/15.html"&gt;இங்கே&lt;/a&gt; படிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 16&lt;br /&gt;&lt;br /&gt;அண்டியின் குகையிலேயே நாம் மூவரை விட்டு வந்துவிட்டோமே. அதுவும் தங்கமரத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்ற வழிகளில் ஒன்றைத் தெரிந்த கொண்ட மூவரை. அண்டி சொன்னதைக் கேட்டதில் இருந்தே மூவருக்கும் ஒரே சிந்தனை. அதுவும் தங்கமரத்தை அடைவதை அல்ல. அண்டியின் கச்சையின் முடித்து வைக்கப்பட்டிருக்கும் திறவுகோலை அடைவதற்கே சிந்தனை.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு சிந்தித்தாலும் மூவருக்கும் தோன்றிய ஒரே வழி...அண்டி தூங்கும் பொழுது திருடுவது என்பதுதான். அண்டி தூங்கத் தொடங்கினால் அவளை அவ்வளவு எளிதில் எழுப்ப முடியாது என்று அங்கு தங்கிய ஒரு இரவிலேயே புரிந்து விட்டது. ஆனால் அவளது குறட்டையொலிதான் காதுகளைக் கம்பியால் குடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டி தூங்கிய பிறகு வேறுவழியில்லாமல் அவளது அறைக்குள் நுழைந்தார்கள். நுழையும் பொழுதே கப்பென்று கெட்ட வாடை மூக்கில் ஏறியது. காதையாவது பஞ்சை வைத்து அடைக்கலாம். மூக்கை? காரியத்தை முடிக்க வேண்டுமே. திருடும் பொறுப்பு சித்திரைக்குப் போனது. கதிரவன் என்னதான் கெட்டிக்காரனாக இருந்தாலும் குசும்புகளில் சித்திரையை அடித்துக்கொள்ள முடியாது. பிடிமா சித்திரையைத் தூக்கிக் கொண்டு அண்டியின் கச்சையின் அருகில் பறந்தது. பிடிமாவின் மீதிருந்து சரியாகக் கச்சையில் குதித்தான். குதித்த வேகத்தில் அண்டி எழுந்து விடுவாளோ என்று அச்சம். ஆனால் அதற்கெல்லாம் அண்டி அசைவதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மீது இறங்கியதுமே சித்திரைக்கு வயிற்றைப் பிரட்டியது. குளித்தறியாத அண்டியின் கச்சையில் ரோஜா வாடையா எழும்பும்!!!! வேறு வழியில்லாமல் மூக்கையும் மூச்சையும் பிடித்துக் கொண்டு கச்சைக்குள் நுழைந்தான். அந்த ஒரு நொடியிலேயே உலகத்தின் எந்த நாற்றத்தையும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற அதிபயங்கர திறமையைப் பெற்றான் சித்திரை.&lt;br /&gt;&lt;br /&gt;திறவுகோலைக் கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. ஓரடி நீளமுள்ள இரும்புத் திறவுகோலை ஒருவழியாகக் கச்சைக்கு வெளியே இழுத்து வந்தான். அலும்பு தெரிந்தாலும் நேரத்தைக் கடத்த விரும்பாமல் அண்டியின் வயிற்றை நோக்கி நடந்தான். பிடிமாவின் மீது ஏறிய கதிரவும் அண்டியின் வயிற்றுக்கே வந்து விட்டான். அருகில் இருந்து பார்க்கையில்தான் அண்டியின் வயிற்றோடு சேர்ந்த பூட்டு தெளிவாகத் தெரிந்தது. மூவரும் சுற்றி நின்று கிணற்றுக்குள் பார்ப்பது போலப் பார்த்தனர். கதிரவன் சைகை காட்டியதும் சித்திரை திறவுகோலைப் பூட்டில் நுழைத்துத் திருகினான். கிர்ர்ர்ர்ர்ரென்று துருப்பிடித்த ஓசையோடு பூட்டு திறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கரகரவென வயிற்றின் நடுவில் பூட்டு இருந்த இடத்தில் ஒரு குழி திறந்தது. உள்ளே ஒரே இருட்டு. ஆனால் முதற்படி மட்டும் கண்ணில் திறந்தது. நல்ல பெரிய படி. பிடிமாவே நிற்கலாம். கதிரவன் குசுகுசுவெனச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சித்திரை..படிகள் ஒன்றும் பெரிதாக இருக்கின்றன. இது போல எத்தனை படிகள் இருக்குமோ தெரியாது. முதலில் நான் இறங்குகிறேன். பிறகு பிடிமா இறங்கட்டும். பின்னால் திறவுகோலை எடுத்துக் கொண்டு நீயும் வா." சொன்னவன் முதற்படியில் இறங்கி நின்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;நின்ற அடுத்த நொடியில்தான் விபரீதம் புரிந்தது. படி தானாக நகரத் தொடங்கியது. படக்கென்று வேகம் பிடித்து இருளுக்குள் மறைந்தது. பிடிமாவும் சித்திரையும் அதிர்ந்து போனார்கள். ஆனால் உடனே மற்றொரு படி அங்கு தோன்றியது. அது படிக்கட்டு அல்ல...நகரும் படி என்று புரிந்து கொண்டனர் இருவரும். நேரம் கடத்த விரும்பாமல் பிடிமா அடுத்த படியில் இறங்கினாள். அதுவும் விர்ரென்று உள்ளே நகன்றது. அடுத்த படியில் இறங்கினான் சித்திரை. இருட்டுக்குள் படி வழுக்கியது. எங்கோ பாதாளத்திற்குள் இறங்குவது போல அப்படியொரு வேகம். ஆனால் சுற்றிலும் என்ன இருக்கிறது என்றே தெரியாத இருட்டு. எங்கோ படியின் வேகத்தால் கதிரவன் கத்தும் ஒலியும் பிடிமாவின் பிளிறலும் கேட்டுத்தான் அவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ன குறிப்பிட்ட திசையில்தான் சென்றது என்றில்லை. கண்ட பக்கமும் படி சரக்சரக்கென்று திரும்பியது. வலது பக்கமே போவது போல இருக்கும். திடீரென வெடுக்கென்று இடப்பக்கம் திரும்பி படக்கென்று கீழே இறங்கும். ஒவ்வொரு சமயம் மேலே எழும்பும்...ஆனா எழும்பிய பிறகு தட்டை யாரோ நழுவ விட்டது போல படியும் விழும். முதலில் மூவரும் கத்திக்கதறினாலும் நேரம் செல்லச் செல்ல பழகி விட்டது. எந்தப் பிடிமானமும் இல்லாமல் விழுந்து விடுவார்களோ என்ற அச்சமும் தேவையில்லாமல் போனது. ஏனென்றால் ஓரிடத்தில் படி தலைகீழாகத் திரும்பிச் சென்றது. ஆனால் அவர்களும் கீழே விழவில்லை. அவர்களிடமிருந்த பொருட்களும் உடைகளும் கூடக் கீழே விழவில்லை. படியைப் பொருத்தவரையில் நேராகவே நிற்பது போன்ற நிலை.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நேரம் என்று கணக்கிட முடியாத நேரம் இந்தப் விசித்திரப் பயணம் தொடர்ந்தது. படுவேகத்தில் சென்று கொண்டிருந்த கதிரவனின் படி திடீரென்று நின்றது. ஒரு நொடியில் நின்றதும் தடுமாறினான் கதிரவன். பின்னாடியே பிடிமாவின் படியும் வந்து இடித்துக் கொண்டு நின்றது. அடுத்து இரண்டு மூன்று நொடிகளில் திறவுகோலோடு வரும் சித்திரையின் படியும் நிலைக்கு வந்தது. ஆனாலும் இருள் விலகவில்லை. கதிரவன் துணிச்சலோடு காலை எடுத்து வைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடியே அவன் ஒளிநிரம்பிய ஓரிடத்தில் அவன் இருந்தான். ஆனால் எங்கிருந்து வந்தோம் என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் வெளிச்சம் நிரம்பிய புது இடத்தில் இருந்தான். அப்படியே பிடிமாவும் சித்திரையும் கூட வந்து விட்டார்கள். இருட்டில் இருந்து வந்ததால் அவர்களுக்குக் கண்களைக் கூசியது. இடுக்கிக் கொண்டு பார்த்தார்கள். அவர்கள் பார்வைக்கு முதலில் தெரிந்தது தங்கமரம்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-481979525359112496?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/481979525359112496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=481979525359112496' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/481979525359112496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/481979525359112496'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/06/16.html' title='தங்க மரம் - 16'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-2614473523814301080</id><published>2008-06-14T03:12:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:46.188-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்படம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Dasavatharam'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kamalhasan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தசாவதாரம்'/><title type='text'>தசாவதாரம் விமர்சனம்</title><content type='html'>ஹறி ஓம் நாறாயணாய நமக&lt;br /&gt;&lt;br /&gt;இனிமேல் இந்த விமர்சனத்தைப் படிக்கின்றவர்கள் ஹறியருளால் திரைப்படத்தின் கதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகும்படியால்...விரும்பதாவர்கள் மேற்கொண்டு படிக்காமலும்...விரும்புகிறவர்கள் மேற்கொண்டு படிக்காமல் இல்லாதிருக்கவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SFOaW6VniRI/AAAAAAAACf8/iMweDSyV71c/s1600-h/dasavatharam-posters08.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SFOaW6VniRI/AAAAAAAACf8/iMweDSyV71c/s320/dasavatharam-posters08.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5211678912205523218" /&gt;&lt;/a&gt;உலகநாயகன் என்று தமிழ் கூறும் திரையுலகத்தாலும் ரசிகர்களாலும் போற்றப்படும் திரு.தாமரைநகையானாகிய கமல்ஹானசன் நடித்த தசாவதாரம் திரைப்படமானது கி.பி 12ம் நூற்றாண்டிலே... அதாவது கொடுங்கோற் சைவர்கள் பேயாட்சி செய்த ஊழிக்காலத்தில்...உத்தமர்களும் அமைதிவிரும்பிகளும் நற்சிந்தனையாளர்களுமாகிய வைணவர்கள் நாள்தோறும் அல்லலுற்று அழுது தொழுது பயனில்லாமல் போயிருந்ததுமான பாவப்பட்ட பொழுதுகளில் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்பிராஜன் பாத்திரத்தில் வீரம் கொப்புளிக்க நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல். ஆளுடைப்பிள்ளையாரைப் போலச் சிறுவனுக்கு வேடமிட்டுக் கல்லெறிய வைத்த கமலின் சிந்தனை சமயவொற்றுமை என்பதேயன்றி வேறொன்றில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணரும் வகையில் இருப்பதை மறுக்கவே முடியாது. அஞ்சும் எட்டும் ஒன்றுதான் என்ற நற்பண்பு எல்லாரும் பழக வேண்டியதேயானாலும் உயிரே போனாலும் அஞ்செழுத்தைச் சொல்ல மாட்டேன் என்று ஆவேசம் கொண்டு எட்டெழுத்தை முழங்குவது தான் அஞ்சாம்படை இல்லை என்று காட்டத்தான் என்பதையும் படம் பார்க்கும் அனைவரும் குற்றமற உணர்வர்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்புரி நூலைக் காட்டி...பிரதோஷாங்கள் சூழ்ந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷமும் சூழ நேறிடும் என்று மிரட்டும் பொழுது ஒரே கல்லில் இரண்டு மாந்தோப்பையே அடித்து விடும் அறிவாற்றலை வியந்து வியந்து பாராட்ட வேண்டியிருக்கும் என்பதையும் யாரும் மறந்து விட முடியாது. எட்டில் ஐந்து போகும்...ஆனால் ஐந்தில் எட்டு போகாது என்று சொல்வது கூட நமக்கெல்லாம் கணக்குப் பாடம் எடுக்கும் சீறிய நல்லெண்ணம் என்பது போற்றுதலுக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பட்ட புளகாங்கிதங்களோடும் தொடங்கிய படம் பலப்பல நாடுகளுக்கும் செல்கிறது. நாம் திரையில் பார்த்துப் பலகாலங்கள் ஆகியிருக்கும் கே.ஆர்.விஜயா, நாகேஷ், ஜெயப்பிரதா மற்றும் ரேகா ஆகியோரை இந்தப் படத்தில் மீண்டும் காண முடிகிறது. இந்தப் படத்தின் சிறப்பே அதனுடைய தொடர்ச் சங்கிலிதான். தொடங்கிய இடத்திலிருந்து ஓங்கி உத்தமன் உலகளந்தது போல தொடர்பு விட்டுவிடாமல் செல்வதுதான். ஆனால் அந்த வளர்ச்சிக்கு முடிவே கிடையாது என்று இறுதியில் நமக்குத் தெரியும் பொழுது இறைவனின் அருளுக்கும் முடிவே கிடையாது என்ற உண்மை புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் சென்ற காகுந்தன் இந்நாளில் சுனாமியாக வந்து உலகைக் காத்த உன்னதச் சித்திரம் தசாவதாரம், உண்மையிலேயே சுனாமி வந்த பொழுது மாமல்லபுரத்தில் முருகன் கோயில் வெளிவந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது... அந்தக் கோயிலைப் பெயர்த்தெடுத்து வேறொரு சமயத்தைச் சார்ந்த யாரோ கடலில் போட்டிருக்கக் கூடும் என்ற எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க விஞ்ஞானியின் கிருமி பாமை வில்லன்களிடமிருந்து காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து மெரினாபீச் வரையில் பெருமாள் சிலையைத் தூக்கிக்கொண்டு அசினோடு ஓடிக்கொண்டேயிருப்பதுதான் கதை. கடைசியில் கடவுளே காப்பாற்றுவதுதான் கதை. இந்தக் கதையில் அலங்காரமாக பத்து கமல்கள் இருப்பதுதான் தசாவதாரம். ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கமல் மெனக்கெட்டிருக்கிறார் என்பதே உண்மை. அத்தனை அவதாரங்கள் எடுத்த பொழுதிலும் ராமனும் கண்ணனும் வைணவர்கள் கொண்டாடுவது போல பலராம் நாயுடுவும் பூவராகனுமே பார்க்கின்றவர்கள் மனதில் திருப்பதி வெங்கடேசர் தாடைக் கற்பூரம் போல ஒட்டிக் கொள்கிறார்கள். பலராம் நாயுடு காமெடி கலக்கல் என்றால் பூவராகன் நேர்மைக் கலக்கல்.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி கமலும் நன்றாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குரலும் பேச்சும். வில்லனாக வரும் ஃப்ளெச்சர் கமலிம் நடிப்பும் அருமை. அந்த அப்பாவி முஸ்லீம் இளைஞன் கமலும் மனதில் நிற்கிறார். இருந்தாலும் நம்மை ராமபாணம் பட்ட அசுரர்கள் போல எரிச்சல் பட வைப்பது விஞ்ஞானி கமல்தான். சிலபல இடங்களில் ஹைபர் டென்ஷன் அசின் அந்த எரிச்சல்களைக் குறைக்கிறார் என்பதும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;இசையா? யாரோ ஹிமேஷ் ரேஷமைய்யாவாம். அவரைப் படத்தில் வரும் கற்பனைப் பாத்திரமான நம்பிராஜனின் இடத்தில் வைத்துப் பார்க்கப் பலர் விரும்பியிருப்பார்கள். அத்தனை அலுப்பூட்டும் இசை. முகுந்தா பாடல் மட்டும் தேவலாம். பேசாமல் தேவிஸ்ரீ பிரசாத்தையே பின்னணியோடு பாடல்களுக்கும் இசையமைக்கச் சொல்லியிருக்கலாம். அட... தேவையாவது கூப்பிட்டிருக்கலாம். ஹிந்தி ரசிகர்களை மனதில் வைத்து ரேஷமைய்யாவை அழைத்து வந்திருக்கிறார்கள். அதே போலப் பாடல் காட்சிகளும் அலுப்போ அலுப்பு. எழுந்து வெளியே போய்விடலாமா என்ற அளவிற்கு. அது தெரிந்துதானோ என்னவோ பாடல்களுக்கு நடுவில் சில கதைக்காட்சிகளையும் காட்டி நம்மை இருக்கையை விட்டு எழவிடாமல் செய்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண ரசிகனாகப் பார்ப்பதற்கு படம் நன்றாகவே இருக்கிறது. கண்டிப்பாகப் பார்க்கலாம். ஆனால் நீங்கள் ஒரு வைணவராக இருந்தால் படம் முழுக்கவே கண்டபடிக்குத் தொடர்ந்து உணர்ச்சிவசப்பட வேண்டியிருக்கும். அமெரிக்க வில்லன் கமல், ஜப்பான் கமல் மற்றும் ஜார்ஜ் புஷ் தவிர்த்து அனைத்து கமலுக்கும் விஷ்ணுவின் பெயர்கள்தான். அதுவும் இல்லாமல் கமலின் தந்தையின் பெயர் ராமசாமி நாயக்கர். கமல் ஏறும் லாரிகள் படகுகள்...அதிலெல்லாம் ராமானுஜம், ஸ்ரீராமஜெயம், கோவிந்தசாமி...இப்பிடி விஷ்ணுவின் பெயர்கள் இருக்கும். அதாவது கமல் விஷ்ணு சிலையைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார் அல்லவா. ஆகையால் அந்தப் பெயர்கள் வருவது பொருத்தமாகவும் பார்க்கின்றவர்களை மெய்சிலிரிக்க வைக்கவும் செய்யும். அதிலும் ரயிலில் இருந்து விழும் விஷ்ணு சிலை ஆற்று மணலில் நட்டுக்குத்தலாக நிற்கும் பொழுது பின்னணி இசையோடு நமக்கு மெய்சிலிர்க்கிறது. இராம நாராயணா! என்று உணர்ச்சி பெருக்கெடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் இல்லையென்று சொல்லிக் கொண்டிருந்த கமல்..கடவுள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார். ஹி ஹி. இரண்டுக்கும் பொருல் வெவ்வேறு என்று எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் சில கமல் ரசிக நண்பர்கள் அந்த வசனத்தைச் சொல்லி பேரானந்தத்தோடு மகிழ்ந்தது புன்னகைக்க வைத்தது. அதே போல கருணாநிதி ஜெயலலிதா காட்சிகளும் காமெடியே. படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;படம் முடியும் பொழுது 12ம் நூற்றாண்டில் உள்ளே போடப்பட்ட கோவிந்தராஜன் சிலை வெளியே வந்துவிடுவது போலக்காட்டுகிறார்கள். அதைப் பார்க்கின்ற வைணவர்களுக்கு....டச்சுக்காரர்கள் கடலில் போட்ட திருச்செந்தூர் முருகன் சிலை வெளியே வந்தது போல....சுனாமியினால் மாமல்லபுரத்தில் 2000 ஆண்டுப் பழைய முருகன் கோயில் வெளிவந்தது போல..... கோவிந்தராஜனும் வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கம் எழுவது நிச்சயம். அந்த ஏக்கத்தில் தவறேதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்கலாம். பார்க்கவும் வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவைப் படம் என்று சொல்லும்படி ஒன்று வந்திருப்பதே சிறப்புதான். ஆனால் கமலுக்கு ஒரு அறிவுரை. பலப்பல வேடங்களில் கலக்கியதெல்லாம் போதும். ஏதாவது மாறுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதாரம் வெற்றிப்படமாக அமைய எனது வாழ்த்துகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-2614473523814301080?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/2614473523814301080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=2614473523814301080' title='57 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2614473523814301080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2614473523814301080'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/06/dasavatharam-kamalhasan.html' title='தசாவதாரம் விமர்சனம்'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SFOaW6VniRI/AAAAAAAACf8/iMweDSyV71c/s72-c/dasavatharam-posters08.jpg' height='72' width='72'/><thr:total>57</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-6398754874623730036</id><published>2008-06-10T22:46:00.000-07:00</published><updated>2008-06-10T22:50:15.551-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 15</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/06/14.html"&gt;இங்கே&lt;/a&gt; படிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 15&lt;br /&gt;&lt;br /&gt;ககன் தொடர்ந்து கதையைச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கஜன் என்ற பறக்கும் ஆனை மிகவும் அறிவாளி. வந்ததும் முதலில் காட்டில் சில ஆனைகளைச் சந்தித்துப் பழக்கமாக்கிக் கொண்டது. வெளியூரில் இருந்து வந்ததும் உள்ளூரில் பழக்கம் உண்டாக்கிக் கொள்வதைப் போல. அந்த வழியாகத்தான் இருவர் கஜனுக்குப் பழக்கமானார்கள். அவர்களின் பெயர்கள் செங்கோமான் மற்றும் இளங்கோ.அவர்கள் நல்லவர்களாக இருக்கக் கண்டு தான் வந்த காரணத்தைக் கஜன் அவர்களிடம் சொன்னது. அதாவது உனது தாயார் குடுத்தனுப்பிய மாயக்கோலும் பெட்டியும் வைத்து. அவர்களும் உதவுவதாக உறுதி கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சூழ்நிலையில்தான் நான் தனியாக இருந்து எப்படி ஊழுவாயனை எதிரிப்பது அழிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். எனக்குத் தோன்றியதெல்லாம் ஒரே திட்டந்தான். எங்கள் அரசர் பூரசிடமிருந்து திருடிய மந்திரக்கோலை திரும்பவும் எடுத்துக் கொண்டால் ஊழிவாயனின் ஆற்றல் அழிந்து விடுமல்லவா. திரும்ப எப்படி எடுப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;பூரசு மன்னரின் மந்திரக்கோல் பூகன்களுக்குச் சொந்தமான தங்கமரத்தின் கிளைகளை ஒடித்து உருக்கிச் செய்யப்பட்டது. அந்தத் தங்கமரத்தின் பூவோ கனியோ ஒருவரிடம் இருந்தால் அவரை மந்திரக்கோல் எதிர்க்காது. ஏனென்றால் அவை தாய்மரத்து உறவுகள். இந்தத் திட்டத்தோடு தங்கமரத்தை நோக்கிச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமரத்தை அடையும் வழி பூகன்களுக்கே தெரியும். ஒவ்வொரு வழியிலும் ஒவ்வொருவிதமான காவல்கள் உண்டு. அத்தனை வழிகளும் எனக்குத் தெரியாது என்றாலும் ஒன்றிரண்டு மட்டும் தெரியும். அவற்றில் மிகவும் எளிதான வழி குண்டக்குழியில் இறங்குவது. அருகிலுள்ள காட்டின் நடுவில் சிறிய மலையுச்சியில் ஒரு குண்டக்குழி உள்ளது. அந்தக் குழியில் எப்பொழுது நெருப்பு எரிந்து கொண்டிருக்கும். அந்த நெருப்பில் குதித்தால் முப்பது நிமிடங்களில் தங்கமரத்தை அடைந்து விடலாம். அதாவது தணலேரியில் கரையேறலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்...அந்த முப்பது நிமிடங்களும் நெருப்பின் சூடு குதிப்பவரை வாட்டும். ஆனால் உடலுக்கும் உயிருக்கும் எந்த ஆபத்தும் நேராது. முப்பது நிமிடம் முடிந்ததும் வேதனை பறந்து விடும். திரும்பி வருவதற்கும் அதே வழிதான். எங்கள் இனத்தைக் காப்பதற்காக இந்த ஒரு மணி நேரச் சித்திரவதையை ஏற்றுக் கொள்ள முடிவு செய்து காட்டிற்குள் நுழைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் கஜன், செங்கோமான் மற்றும் இளங்கோ ஆகியோரைச் சந்தித்தேன். அவர்கள் ஊழிவாயனைத் தேடிச் சென்று கொண்டிருந்தார்கள். எப்படியோ எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. கஜன் பூமியில் இருந்தாலும் உனது தாய் லிக்திமா அதனோடு தகவல் தொடர்பு வைத்திருந்தார். ஆகையால் தங்கமரத்தைப் பற்றிய செய்தியை அவரிடம் சொன்னேன். அவருக்கும் அந்தத் திட்டம் நல்ல திட்டமாகவே பட்டது. நான் தனியாள் இல்லை என்ற தெம்போடு மூவரையும் அழைத்துக் கொண்டு மலையேறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நால்வரும் குண்டக்குழியில் குதித்தோம். நெருப்பு சுட்டது. தசை வலித்தது. தாள முடியாத வேதனை. தணியாத தண்ணீர்த் தாகம். ஆனால் எங்களுக்கும் எங்கள் பொருள்களுக்கும் எந்த அழிவும் உண்டாகவில்லை. முப்பது நிமிட மரணவேதனைக்குப் பிறகு தணலேறியில் இருந்தோம். ஒருவழியாகக் கரையைப் பற்றி ஏறினோம். அங்கே யாரும் ஏற முடியாத மண்மலை. ஏறினால் வழுக்கும். அந்த மலைமீதுதான் தங்கமரம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மரத்தின் அழகை எழுத்தில் வடிக்கவே முடியாது. பார்த்த எவராலும் விவரித்துச் சொல்லவே முடியாது. பசும்பொன்னிறத்து மரத்தில் மரகத இலைகள் பலபச்சை நிறங்களில் துளிர்த்து தடித்து அசைந்தாடும். அந்த மரகத இலைகளின் ஊடாக பவழ மொட்டுகள் முழித்துக்கொண்டிருக்கும். அந்த மொட்டுகள் மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த மரத்தை அடைந்த எங்களுக்கு அப்பொழுதுதான் ஊழிவாயனின் அறிவு புரிந்தது. ஆம். தங்கமரத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு அதற்குக் காவல் வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவும் இரண்டு நச்சுநாகங்களின். முப்பதடி நீளமுள்ளவை அந்தப் பாம்புகள். அவைகளின் பற்கள் நஞ்சில் ஊறியூறி நீலமானவை. அந்தப் பல்லால் கடிக்க வேண்டும் என்ற தேவையில்லை. பட்டாலே போதும் பரலோகம்தான். அந்த இரண்டு நாகங்களும் மரத்தைச் சுற்றி மண்மலையில் ஊர்ந்து கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்ததும் நான் சற்றுப் பயந்து பின்வாங்கினேன். பின்னால் இருந்த தணலேரியை நான் கவனிக்காமல் அதில் தடுமாறி விழுந்தேன். அது முப்பது நிமிடம் என்னை உள்ளே இழுத்துக் குண்டக்குழியில் திரும்பவும் தள்ளியது. அவர்கள் மூவரையும் அங்கேயே விட்டுவிட்டோமே என்ற வருத்தத்தில் சுடுநெருப்பின் வேதனையையும் பாராமல் திரும்பவும் குதித்தேன். ஆனால் தங்கமரத்தில் அருகில் அந்த மூவரும் இருக்கவில்லை. ஆனால் இரண்டு நச்சுநாகங்கள் மட்டும் வெறியோடு ஊர்ந்து கொண்டிருந்தன. அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து திரும்பவும் பூகனூரில் வந்து இருக்கிறேன். அடிக்கடி தங்கமரத்திற்குச் செல்வேன். ஆனால் எதுவும் செய்ய முடியாமல் வருத்தத்தோடு திரும்பி வருவேன். இதுதான் நீ கேட்ட கேள்விகளுக்கான விடை."&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லி முடித்த ககனின் முகத்தில் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையின் வலி தெரிந்தது. அப்பொழுது தனிமா கேட்டாள். "ககன் என்னைத் தங்கம்ரத்திற்கு அழைத்துச் செல்வாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-6398754874623730036?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/6398754874623730036/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=6398754874623730036' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6398754874623730036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6398754874623730036'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/06/15.html' title='தங்க மரம் - 15'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-8477617918781930108</id><published>2008-06-05T11:00:00.000-07:00</published><updated>2008-06-05T11:22:07.190-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரியாணி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='biryani'/><title type='text'>பிரியாணி - 2</title><content type='html'>ஒரு வீட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கிறனும். அதுவும் குடும்பத்தோட. அந்த வீடு பெருசுன்னாலும் அந்த வீட்டுக்குல பெரும்பகுதி அப்பாவோட அலுவலகம். அங்க தெனமும் காலைல வேலைக்கு வருவாங்க. சாந்தரம் போயிருவாங்க. அவங்களுக்கு யாருக்குமே தெரியக் கூடாது. வெளியவும் வரமுடியாது. இப்பிடி ரெண்டு வருசம் இருக்கனும். தெரிஞ்ச ஒரு நபர் மட்டும் வீட்டுக்கு வேண்டியதைத் திருட்டுத்தனமா கொண்டு வந்து குடுப்பாரு. அதுகூட அளவாத்தான் இருக்கும். வயசோ 13-14க்குள்ள. அதுலயும் பொண்ணு வேற. என்ன பண்றது?&lt;br /&gt;&lt;br /&gt;நாஜிகளைப் பத்திக் கேள்விப்பட்டவங்களுக்கும் நிறைய புத்தகம் படிக்கிற ஆர்வம் இருக்குறவங்களுக்கும் நான் சொல்ல வர்ரது புரிஞ்சிருக்கும். ஆமா. ஆனா பிராங்க். அந்தப் பொண்ணோட பேரு. ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண். அங்க நாஜிகளின் தொல்லையால நெதர்லாந்து தப்பிச்சு வந்த குடும்பம். ஆம்ஸ்டர்டாமில் ஒரு உணவுப் பொருள் தொழிலை உருவாக்கி வாழத் தொடங்குறாங்க. அப்பத்தான் வருது இரண்டாம் உலகப்போர். ஜெர்மனிக்காரங்க ஆம்ஸ்டர்டாமைப் பிடிச்சிர்ராங்க. யூதர்கள் எல்லாரும் நாட்டை விட்டுப் போயிரனும்னு சொல்றாங்க. இத நெதர்லாந்து மக்கள் ஒத்துக்கலை. ஆனால் ஜெர்மானிய ராணுவம் வெச்சதே சட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேற வழியில்லாம இந்த ஒளிஞ்சு வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறாரு ஆனாவின் அப்பா. கொஞ்சம் கூடச் சத்தமே வரக்கூடாது. ஏன்னா பகல்ல கீழ வேலை செய்றவங்க. இரவுல அமைதி. கொஞ்சம் சத்தம் போட்டாக்கூட வெளிய தெரிஞ்சு போகும் வாய்ப்பு உண்டு. ரெண்டு வருசம் இப்பிடி வாழ்க்கை. ஆனா அப்புறம் ஜெர்மனிக்காரங்களுக்குத் தெரிஞ்சு போகுது. அப்புறம் என்ன...பிடிச்சிக் குடும்பத்த ஜெர்மனிக்குக் கொண்டு போயிர்ராங்க. அங்க போய் குடும்பத்தைப் பிரிச்சி சிறைகளில் அடைச்சுக் கொடுமை படுத்துறாங்க. அதுல எல்லாரும் இறந்து போயிர்ராங்க. அப்பா ஓட்டோ பிராங்கைத் தவிர. போருக்குப் பிறகு ஆம்ஸ்டர்டாமுக்குத் திரும்பி வர்ரவர் கிட்ட ஒரு டைரியைக் குடுக்குறாங்க அவங்களுக்கு ரெண்டு வருஷமா உதவிய பெண்மணி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாவோட 13வது வயதுல அவர் கொடுத்த பரிசு அந்த டைரி. இரண்டு வருட வாழ்க்கைல நடந்ததையெல்லாம்...தன்னுடைய மனதில் இருந்ததையெல்லாம்.... அந்த டைரியில் அன்பா, ஆசையா, கோவமா, இயலாமையா, வெறுப்பா, அகிம்சையா... பலவிதங்கள்ள பதிஞ்சு வெச்சிருக்கா அந்தப் பொண்ணு. கைதுக்குப் பிறகு அந்த அறையிலிருந்து உதவி செய்த பெண் சேகரிச்சுப் பத்திரமா வெச்சிருந்து குடுத்திருக்காங்க. அந்த டைரியை வாங்குன ஒரு தந்தையோட மனநிலையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்பப்பா! அத டைரியாவா பாத்திருப்பாரு? அந்த மக பொறந்தப்ப கைல எப்படி வாங்குனாரோ.. அப்படித்தான வாங்கீருப்பாரு. பாவம்யா அந்த மனுசன். வாங்கருனவரு அதைப் புத்தகமாப் பதிப்பிச்சாரு. ஆனா பிராங்கின் டைரி என்ற பெயரில் மிகப் பிரபலம் பெற்றது அந்தப் புத்தகம். இப்ப அந்த வீடு ஆம்ஸ்டர்டாம்ல ஒரு கண்காட்சியா இருக்கு. சகிப்புத்தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டா.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ்க்கண்ட சுட்டிகள்ள போய்ப் பாருங்க. இன்னும் நெறைய விவரங்கள் கெடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Anne_Frank"&gt;http://en.wikipedia.org/wiki/Anne_Frank&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.annefrank.org/"&gt;http://www.annefrank.org/&lt;br /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/The_Diary_of_a_Young_Girl"&gt;http://en.wikipedia.org/wiki/The_Diary_of_a_Young_Girl&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;இங்க நெதர்லாந்துல வேலை நிறுத்தப் போராட்டமாம். அதுவும் பேருந்துகள். எதுக்கு வேலை நிறுத்தம்? சம்பளம் கூட்டத்தான். வேற எதுக்கு இருக்கும்!!!! ஆனா பாருங்க அவங்க வேலை நிறுத்தம் பண்ணனும்னு முடிவெடுத்த நேரம் பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பரிச்சை நடக்குற நேரம். ஜூன் 1ல இருந்துதான் எல்லாப் பள்ளிக்கூடமும் விடுமுறை. அப்ப எப்படிப் போராட்டம் பண்றது!&lt;br /&gt;&lt;br /&gt;லீவு இன்னும் விடலை. இப்பப் போராட்டமும் பண்ணனும். பிள்ளைகளுக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது. அதுக்கு என்ன செய்யனும்!!!!! செஞ்சாங்களே!&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது காலைல ஆறு மணில இருந்து ஒம்பது மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். அதே போல மாலை நாலு மணியிலிருந்து ஏழு மணி வரைக்கும் பேருந்துகள் ஓடும். ஆனா அப்ப யாருக்கும் பயணச்சீட்டு குடுக்கப்பட மாட்டாது. அதாவது காசு குடுக்க வேண்டாம். (நம்மதான் புத்திசாலியாச்சே! ஏற்கனவே பாஸ் வாங்கி வெச்சிருக்கோமே!!!!). மத்த நேரத்துல எல்லாம் பேருந்துகள் ஓடாது. டிராம், மெட்ரோ பயன்படுத்திக்க வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஜூன் ஒன்னாந் தேதி வந்துருச்சுல்ல. ஆகையால முழு அடைப்பு பேருந்துகளுக்கு. டிராம்+மெட்ரோவே சரணம். போராட்டம்னு வந்தாலும் கோரிக்கைன்னு வந்தாலும் பள்ளிப்பிள்ளைகளின் படிப்புன்னு வந்தா அதை மதிச்ச பெருந்தன்மையைப் பாராட்டித்தான் ஆகனும்.&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனையோ வள்ளி திருமணம் பாத்திருப்பீங்க. இந்த வள்ளிதிருமணம் பாருங்க. வயித்து வலி நிச்சயம். எஸ்.எஸ்.சந்திரன் முருகனாகவும் மனோரமா வள்ளியாவும் ஓமக்குச்சி நரசிம்மன் நாரதராகவும் உசிலைமணி பிள்ளையாராகவும் நடிச்சிருக்காங்க. Youtubeல இந்தப் பாடலை வலையேத்தியிருக்கும் வெல்லூர் விஜயகுமார் embedding disable செய்து வைத்திருக்கிறார். ஆகையால் இந்தச் சுட்டியை அழுத்திப் பாடலைப் பாருங்கள். சிரிப்பும் இலவசமாக வயிற்றுவலியும் உறுதியாகக் கிடைக்கும். இளையராஜாவின் பாடல்கள் நகைச்சுவையோடு ரீமிக்ஸ் செய்யப்பட்டு இளையராஜாவும் பி.எஸ்.சசிரேகாவும் பாடியிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://uk.youtube.com/watch?v=pghHNdpt4I0"&gt;http://uk.youtube.com/watch?v=pghHNdpt4I0&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="530" height="370"&gt;&lt;param name="movie" value="http://uk.youtube.com/p/09C8515D87F5B78F"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://uk.youtube.com/p/09C8515D87F5B78F" type="application/x-shockwave-flash" width="530" height="370"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-8477617918781930108?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/8477617918781930108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=8477617918781930108' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8477617918781930108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8477617918781930108'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/06/2.html' title='பிரியாணி - 2'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-1843048527840454888</id><published>2008-06-02T11:29:00.000-07:00</published><updated>2008-06-02T11:35:18.693-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 14</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/05/13.html"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 14&lt;br /&gt;&lt;br /&gt;அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் மூவரும் பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள். திடுதிடுவென்று உள்ளே ஓடி வந்த அண்டி எதையோ கீழே போட்டாள். ஏதோ மரத்தை வெட்டி வீழ்த்தியது போல பேரோசை.&lt;br /&gt;&lt;br /&gt;"பொம்மைகளே...இதோ உங்களுக்காக கனிகள். வாருங்கள். உண்ணுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;அண்டியின் அழைப்பு கேட்ட பிறகே துணிச்சலோடு வெளியே வந்தார்கள். அங்கே ஒரு பெரிய மாமரத்தையும் பலா மரத்தையும் வேரோடு பிடுங்கி வந்து போட்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாப்பிடுங்கள் பொம்மைகளே. நீங்கள் சாப்பிடும் அழகை நான் பார்க்க வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;அண்டியின் அன்புக்கட்டளையைத் தட்ட முடியாமல் மாம்பழங்களைப் பறித்து உண்டார்கள். பிடிமா பலாப்பழத்தைப் பிடுங்கிக் கால்களால் நசுக்கி உடைத்து உண்டாள். வயிறு நிறைந்தவுடன் மிச்சப்பழங்களைப் பிறகு உண்பதாகக் கூறிவிட்டார்கள். பொம்மைகள் சாப்பிடும் என்பதைப் பார்த்த அண்டிக்கு ஆனந்தமோ பேரானந்தம். இந்த பொம்மைகள் முன்பே கிடைத்திருந்தால் நிறைய மரங்களைப் பிடுங்கியிருக்கலாமே என்று வருத்தப்பட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்டியின் மகிழ்ச்சியைக் கண்ட கதிரவனும் சித்திரையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினார்கள். வாயைக் கிண்டினால் ஏதாவது கிடைக்குமல்லவா.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்டி...(சித்திரையைக் காட்டி) இந்தப் பொம்மை உளறுகிறது. நான் அதை ஒப்புக் கொள்ள மாட்டேன்." என்று தொடர்பே இல்லாமல் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியா? அந்தப் பொம்மை என்ன உளறியது?"&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்துக் கொண்டே சொன்னான் கதிரவன். "இப்பொழுது எங்களுக்குப் பசிக்கிறது என்று மரம் பிடுங்கிக் கொண்டு வந்தாயே... அந்த மரத்து மாம்பழங்கள் தங்கம் போல மின்னியது என்றேன் நான். இல்லை... பலாப்பழங்கள்தான் பொன்னாக ஒளிவீசியது என்கிறது இந்தப் பொம்மை. நீயே சொல். பலாப்பழங்களா ஜொலிக்கின்றன?"&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் சொன்னது இடியோசை போலச் சிரித்தாள். "ஹா ஹா ஹா... இதெல்லாம் ஜொலிப்பா? இந்தக் கனியெல்லாம் கனியா? தங்கமரத்துக் கனியே சிறப்பாக ஒளிரும். பார்த்தாலே கண்கள் குருடாகிவிடும் அளவிற்கு அழகாக ஒளிரும்."&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ சொல்லி வைக்க தங்கமரத்திற்கே குறிப்பு கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்த வாய்ப்பை விடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சித்திரை பேசினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அண்டி.. நீ சொல்வதை நான் நம்ப மாட்டேன். நான் பொம்மை என்பதால் என்னை ஏமாற்றப் பார்க்கிறாய். தங்கத்தில் மரம் இருக்குமா? அதை எப்படி நம்புவது?"&lt;br /&gt;&lt;br /&gt;பொம்மைகள் தங்கமரத்தைப் புரிந்து கொள்ளமல் நம்ப மறுக்கிறார்களே என்று அண்டிக்கு வருத்தம் வந்தது. "பொம்மைகளே நான் உண்மையைச் சொல்கிறேன். நம்புங்கள். உண்மையிலேயே தங்கமரம் இருக்கிறது. அது முழுக்க முழுக்க தங்கம். அந்த மரத்தில் மரகத இலைகள் துளிர்த்து.. பவழ மொட்டுகள் பூக்கும். அந்தப் பவழ மொட்டுகளோ மாணிக்கக் காய்களாகி வைரக் கனிகளாகும். அந்த வைரக் கனியின் ஜொலிப்பிற்கு முன்னால் எதுவும் நிற்க முடியாது. இதுதான் உண்மை."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கதிரவன் கேட்டான். "நீ பொய் சொல்ல மாட்டாய் அண்டி. நான் உன்னை நம்புகிறேன். ஆனால் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. தங்கமரம் என்று ஒன்று இருக்குமானால்... அது எங்கே இருக்கிறது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ அதுவா... தணலேரிக்கு அருகில் உள்ள ஏறாத மண்மலையில் உள்ளது."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. ஆனால் அங்கு செல்வதற்கு வழி இருக்க வேண்டுமே?"&lt;br /&gt;&lt;br /&gt;பொம்மைகள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தனக்கு விடை தெரிந்திருக்கிறதே என்று பெருமகிழ்ச்சி அண்டிக்கு. இவ்வளவு சிறப்பாக யாருமே இதுவரை பேசவில்லையே என்று லேசான வருத்தம் கூட எழுந்தது. ஆனாலும் தன்னுடைய அறிவைக் காட்டும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை அண்டி. "இருக்கிறதே. இதோ என் வயிற்றில். என்னுடைய வயிற்றின் தொப்புளுக்குள் இருக்கிறது தணலேரிக்குச் செல்லும் வழி.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனார்கள் மூவரும். சித்திரைதான் கேட்டுவிட்டான். "ஆகா.. உன் வயிற்றுக்குள் வழியா? அதுவும் தொப்புளுக்குள்ளா? அதை எப்படித் திறப்பது? யாராவது வழியைத் திறக்கிறேன் என்று வயிற்றைக் கிழித்து விட்டால்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா.. ஐயோ பொம்மை... இப்பிடி முட்டாளாக இருக்கிறாயே! அதனால்தான் நீ பொம்மை. இதோ அங்கிருக்கும் கதவைத் திறப்பதற்குத் திறவுகோலை இங்கே இடுப்பிடில் கட்டி வைத்திருக்கிறேனே." கச்சையில் கட்டியிருந்த சாவியையும் காட்டிக் கொடுத்து விட்டது அண்டி.&lt;br /&gt;&lt;br /&gt;விவரங்களைத் தேவையான அளவு தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் தூங்கப் போனார்கள் மூவரும். எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருந்த பொழுது.. இங்கே என்று தானே வந்து நின்றால்....அந்த இன்பம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ககனையும் தனிமாவையும் நீருக்கடியில் பூகனூரிலேயே விட்டுவிட்டோம். தனிமா ககனிடம் கேட்ட கேள்விகளுக்கு விடை சொல்லத் தொடங்கனினான் ககன்.&lt;br /&gt;&lt;br /&gt;"தனிமா, நீ எப்படி தண்ணீரில் விழுந்து பூகனூருக்குள் நுழைந்தாயோ.. அதே போலத்தான் உன்னுடைய தந்தையாகிய ஊழிவாயனும் நுழைந்தார். அவரிடம் அளப்பறிய சக்தி இருந்தது. அவருடைய பெருமைமிகு தோற்றம் அவரை எங்கள் பூகமன்னர் பூரசு நண்பராக்கிக் கொண்டார். அவரைப் பூகனூரிலேயே தங்க வைத்து கவனித்துக் கொண்டார். வந்த புதிதில் ஊழிவாயரும் ஒழுங்காகத்தான் இருந்தார். ஆனால் விரைவிலேயே அவருடைய ஆற்றல் குறையத் தொடங்கிவிட்டது. அதற்காக மன்னர் பூரசு மிகவும் வருந்தினார். ஆனாலும் ஊழிவாயனை மிகவும் மதிப்பாக நடத்தினர். பூகன்கள் பூமிக்கு நடுவில் சென்று குழம்பு எடுக்கும் துறையை அப்படியே அவர் பொறுப்பிலும் கொடுத்தார். ஆனால் அது ஊழியருக்குத் திருப்தி கொடுக்கவில்லை. அந்த நிலையில்தான் ஒரு தவறு செய்தார். ஆம். பூரசு மன்னரின் மந்திரக்கோலை திருடிக் கொண்டார். அத்தோடு நில்லாமல் மன்னரைச் சிறையிலும் அடைத்து விட்டார். பூகன்கள் அனைவரும் இனிமேல் ஊழிவாயனின் அடிமை என்றும் எதிர்த்து எதுவும் செய்தால் பூரசுக்கு ஆபத்து என்றும் மிரட்டினார். வேறு வழியில்லாமல் எல்லாரும் ஊழிவாயருக்கு அடிமையானோம். நானும் சில நண்பர்களும் தப்பித்து ஓடினோம். ஆனால் குண்டரப் பறவைகளை ஏவி எங்களை அழித்தார். என்னைத் தவிர நண்பர்கள் அனைவரும் மாண்டனர். நானும் மாண்டதாகவே ஊழியர் நினைத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரிக்கு நடுவில் பூமியைக் கிழித்து...அந்தக் குழம்பு பீய்ச்சி அடித்து...ஒரு கூம்புமலையை உருவாக்கினார். அதை அவருக்கான இடமாக்கி அரசு செய்தார். அப்படியிருக்கையில்தான் உன்னுடைய தாயாரான லிக்திமா அனுப்பிய பறக்கும் ஆனை கஜன் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-1843048527840454888?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/1843048527840454888/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=1843048527840454888' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/1843048527840454888'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/1843048527840454888'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/06/14.html' title='தங்க மரம் - 14'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-5394794229079175585</id><published>2008-05-17T16:12:00.000-07:00</published><updated>2008-05-17T17:12:42.013-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எஸ்.ஜானகி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='p.susheela'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பி.சுசீலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='s.janaki'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='p.suseela'/><title type='text'>சு-வா? ஜா-வா?</title><content type='html'>போட்டீன்னு வந்துருச்சுய்யா.... நல்லதோ கெட்டதோ... வந்தாச்சு... அப்ப என்ன செய்யனும்? ரெண்டு பேருக்கு ஒரு வேலையக் குடுத்து யாரு நல்லா செஞ்சாங்கன்னு பாக்கனும். அப்பத்தான ஒரு முடிவுக்கு வர முடியும்? அதுக்குத்தான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இசையரசிக்கு வலைப்பூ வெச்சிருக்குறதால நான் பி.சுசீலா பாடுன பாட்டு மட்டுந்தான் கேப்பேன்னு நீங்க நெனச்சா அது தப்பு. எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், எல்.ஆர்.ஈஸ்வரின்னு தொடங்கி இப்ப இருக்குற ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்னும் கேப்பேன். பிடிக்கனும். அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா &lt;a href="http://surveysan.blogspot.com/2008/05/blog-post_15.html"&gt;இங்க&lt;/a&gt; சர்வேசன் கெளப்புன பிரச்சனை பி.சுசீலாவா எஸ்.ஜானகியான்னுதான். ஆகையால மத்தவங்கள விட்டுருவோம். இவங்க ரெண்டு பேரோட நேரம்... நம்மளப் போல ஞானசூனியங்க கிட்டயும் கேள்வி ஞானங்க கிட்டயும் மாட்டனும்னு இருக்கு. என்ன செய்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஜானகியோட குரல் செயற்கையா இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு. அதுக்காக எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதோன்னு சந்தேகப்படுற அளவுக்கு எனக்கு ஐயப்பாடு கிடையாது. அவங்க பாடுன பல பாட்டுகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். ஒன்னா ரெண்டா...நெறைய இருக்கு. ஆனா இசையரசியின் பாடல்கள் மிகவும் பிடிக்கும். முதலிடம் அவங்களுக்கு. அவ்வளவுதான். அதுனால எஸ்.ஜானகிக்குப் பாடத் தெரியாதுன்னு சொல்ல மாட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. பதிவோட மையக்கருத்துக்கு வருவோம். எஸ்.ஜானகியா பி.சுசீலாவான்னு போட்டி வைக்கனும்ல. ரெண்டு பேத்துக்கும் ஒரே பாட்டைக் குடுத்துப் பாட வைப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;வைதேகி காத்திருந்தாள் படத்துல பி.சுசீலா பாடுன ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாட்டு இங்க இருக்கு.&lt;br /&gt;&lt;embed id="VideoPlayback" style="width:400px;height:326px" flashvars="" src="http://video.google.com/googleplayer.swf?docid=2617779300567534731&amp;hl=en" type="application/x-shockwave-flash"&gt; &lt;/embed&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதே பாட்டைத் தெலுங்குல எஸ்.ஜானகி பாடியிருக்காங்க. ஜாபில்லிக்கோசம் ஜாபில்லிக்கோசம்னு. அந்தப் பாட்டு இங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/pLguIpwuK3A&amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/pLguIpwuK3A&amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டையும் கேட்டுப் பாருங்க. உங்க கருத்து என்னனு மட்டும் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப ஒரே பாட்டை ரெண்டு பேரையும் பாட விட்டுக் கேட்டோம். ரெண்டு பேரும் ஒரே பாட்டுல பாடுனா? அதுக்கும் இளையராஜா கிட்டயும் எம்.எஸ்.விஸ்வநாதன் கிட்டயும் பேசி ஏற்பாடு செஞ்சாச்சு. ஆளுக்கு ஒரு பாட்டு கச்சிதமா போட்டுக் குடுத்துட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பூர தீபம் படத்துல காலம் காலமாய் பெண்தானே கற்பூர தீபம்னு ரெண்டு பேரும் சேந்து பாடுறாங்க. கேளுங்க. கேட்டுட்டு ஒங்க கருத்தைச் சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/SeZ6Z5ysm20&amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/SeZ6Z5ysm20&amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து யாருய்யா.. ஓ.. எம்.எஸ்.விஸ்வநாதனா? என்ன படங்க? சொல்லத்தான் நினைக்கிறேனா? நினைச்சுக்கிட்டே இருந்தா எப்படி? சொல்லுங்க. ஓ! படத்தோட பேரே அதானா? அந்தப் படத்துல பல்லவி என்று மன்னன் கேட்கப் பாடுவேனடின்னு ரெண்டு பேரும் பாடுறாங்க. கேளுங்க. கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="300" height="80"&gt;&lt;param name="movie" value="http://media.imeem.com/m/PonqmABoE2/aus=false/"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://media.imeem.com/m/PonqmABoE2/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="110" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட... ஒரு டூயட் பாட்டு வேற இருக்கா. சூப்பர். யாரு கூட டூயட். எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூடயா. அப்பச் சரி. என்ன படம்? கண்ணில் தெரியும் கதைகளா? என்ன பாட்டு? நான் ஒரு பொன்னோவியம் கண்டேன். நல்ல பாட்டு. இந்தப் படத்துல இந்தப் பாட்டுக்கு மட்டும் இளையராஜா இசை. சரி. அந்தப் பாட்டையும் கேட்டுருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="300" height="80"&gt;&lt;param name="movie" value="http://media.imeem.com/m/1RB103MqVK/aus=false/"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://media.imeem.com/m/1RB103MqVK/aus=false/" type="application/x-shockwave-flash" width="300" height="110" wmode="transparent"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னது கன்னடப் பாட்டு விட்டுப் போயிருச்சா? என்ன பாட்டு? பிரியாங்குற படமா? ஸ்ரீதேவி நடிச்சாங்களே.. ரஜினிகாந்த். ஆமா.. அந்தப் படத்துல டார்லிங் டார்லிங்குன்னு ஒரு பாட்டு பி.சுசீலா பாடியிருக்காங்க. அதுக்கென்ன? ஓ! அந்தப் படத்த கன்னடத்துல டப்பிங் பண்றப்போ அதே பாட்டை எஸ்.ஜானகி பாடியிருக்காங்களா? அப்பச் சரி. அதையும் கேட்டுருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஜானகி பாடியது&lt;br /&gt;&lt;embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&amp;audiodump=&amp;noadvt=9&amp;br=h&amp;song=Priya_Darling_Darling&amp;songname=Darling Darling" type=application/x-shockwave-flash width="289" height="256" FlashVars="folder=images/movies/Priya/&amp;iname=auro_hosting.gif,google.jpg,bloggers.gif,musicplugin.jpg,index.html,undefined,auro_hosting_p.gif,sitename.jpg&amp;autoplay=false&amp;bgcolor=black"&gt;&lt;/embed&gt;&lt;br&gt;&lt;a href="http://www.musicplug.in" target="_blank"&gt;&lt;font face=verdana, size=2&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.சுசீலா பாடியது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;embed src="http://www.musicplug.in/flash/musicplugin2.swf?mt=m&amp;audiodump=&amp;noadvt=9&amp;br=h&amp;song=Priya_Tamil_priya_Darling_Darling&amp;songname=Darling Darling" type=application/x-shockwave-flash width="289" height="256" FlashVars="folder=images/movies/Priya/&amp;iname=auro_hosting.gif,google.jpg,bloggers.gif,musicplugin.jpg,index.html,undefined,auro_hosting_p.gif,sitename.jpg&amp;autoplay=false&amp;bgcolor=black"&gt;&lt;/embed&gt;&lt;br&gt;&lt;a href="http://www.musicplug.in" target="_blank"&gt;&lt;font face=verdana, size=2&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மக்களே...எங்க ஓட்டுப் போடுறதுன்னு பாக்குறீங்களா? இங்க ஓட்டெல்லாம் போட வேண்டாம். கருத்து சொன்னாப் போதும். ஏன்னா இவங்க ரெண்டு பேருமே இசைத்துறையில் நிறைய சாதிச்சவங்க. நம்ம ரசிகர்கள். ஆகையால நம்ம கருத்துகளை மட்டும் சொல்லலாம். அந்த உரிமை நமக்கு இருக்கும். மக்களே ஸ்டார்ட் தி மூசிக் :)&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-5394794229079175585?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/5394794229079175585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=5394794229079175585' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/5394794229079175585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/5394794229079175585'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/05/psuseela-psusheela-sjanaki.html' title='சு-வா? ஜா-வா?'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-2230262422662529551</id><published>2008-05-17T03:53:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:48.421-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='tamil'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='keukenhof'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='biryani'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='27 Dresses'/><title type='text'>பிரியாணி - 1</title><content type='html'>அதாவதுங்க.. பிரியாணின்னா நமக்கு ... அதாவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். கடைசியா இந்தியாவுல சாப்ட பிரியாணி இன்னும் மறக்க முடியாம இருக்கு. அதுவும் காரசாரமான ஐதராபாத் பிரியாணி. ருசி நாக்குலயே இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சரி கதைக்கு வருவோம்...&lt;br /&gt;&lt;br /&gt;கியோக்கன்ஹாஃப் (Keukenhof) அப்படீங்குற ஊர் பேர் உங்களுக்குத் தெரிஞ்சிருக்காது. ஆனா அங்க என்ன இருக்குன்னு சொன்னா உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். டூலிப் (tulips) மலர்த் தோட்டங்களை அந்நியன் படத்துல கூமாரீஈஈஈஈஈன்னு பாடுவாரே... அந்தத் தோட்டங்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;போன வருசம் நான் இங்க நெதர்லாந்து வந்தப்பவே போயிருக்க வேண்டியது. ஆனா பாருங்க இந்தத் தோட்டங்கள் மூனு மாசத்துக்குத்தான் இருக்கும். அப்புறம் பூவே இருக்காது. மார்ச்சுல இருந்து மே மாசத்துக்குள்ளதான் பாக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இங்க வந்தது ஏப்ரல் கடைசி. வந்து ஒரு வாரத்துலயே அம்மை போட்டுருச்சு. அதுல இருந்து எந்திரிச்சு தெளிவாகுறதுக்குள்ள தோட்டங்கள் காஞ்சு போச்சு. இந்த வருசம் எப்பிடியாச்சும் போயிருனுமப்போய்னு இருந்தப்பதான் அம்மாவும் அப்பாவும் ரெண்டு மாசத்துக்கு இங்க வந்தாங்க. இப்ப இங்கதான் இருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சரீன்னு அவங்களையும் கூட்டீட்டு போனேன். அவங்க ஐரோப்பாவுல மொதல்ல போன சுற்றுலா கியோக்கன்ஹாஃப்க்குத்தான். ரொம்பவே ரசிச்சாங்க. ஒரு மாதிரி மூடுன மேகங்கள். அப்பப்போ தெறிச்ச தூறல்கள். ஒன்றா ரெண்டா என்று கூட்டிப் பாக்க நமக்கு 20 வெரல்களுக்கு மேல இல்லையேன்னு வருத்தப்பட வைக்கிற பலப்பல வண்ணங்களில் மலர்கள். காதலர்களுக்காகவே உண்டான தோட்டம் அது. கண்டிப்பா அவங்களுக்குப் பிடிச்சதுல வியப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழ இருக்குற படங்களைப் பாருங்க. நீங்களே சொல்வீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC69lD1J6HI/AAAAAAAACaw/gxWHniGCFNk/s1600-h/DSC03552-1.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC69lD1J6HI/AAAAAAAACaw/gxWHniGCFNk/s200/DSC03552-1.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5201303064040564850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7E4D1J6KI/AAAAAAAACbI/r7rLEsfG5Bc/s1600-h/DSC03568-2.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7E4D1J6KI/AAAAAAAACbI/r7rLEsfG5Bc/s200/DSC03568-2.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5201311087039473826" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7DXD1J6JI/AAAAAAAACbA/Bw4hPSs003c/s1600-h/DSC03546.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7DXD1J6JI/AAAAAAAACbA/Bw4hPSs003c/s200/DSC03546.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5201309420592162962" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7B_D1J6II/AAAAAAAACa4/hDhBSOT8r-E/s1600-h/DSC03525.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7B_D1J6II/AAAAAAAACa4/hDhBSOT8r-E/s200/DSC03525.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5201307908763674754" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7zhz1J6MI/AAAAAAAACbY/ehMnFgecv7c/s1600-h/DSC03596.JPG"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7zhz1J6MI/AAAAAAAACbY/ehMnFgecv7c/s200/DSC03596.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5201362381833889986" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7xfT1J6LI/AAAAAAAACbQ/rStRZNVzE1Y/s1600-h/DSC03627.JPG"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://3.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC7xfT1J6LI/AAAAAAAACbQ/rStRZNVzE1Y/s200/DSC03627.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5201360139860961458" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC71CD1J6NI/AAAAAAAACbg/0JuMdcLLvnY/s1600-h/DSC03684.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC71CD1J6NI/AAAAAAAACbg/0JuMdcLLvnY/s320/DSC03684.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5201364035396298962" /&gt;&lt;/a&gt;அத்தனை படங்கள்ளயும் எனக்குப் பிடிச்சது இந்தப் படம். பாருங்க காதலன் காதலிக்கு முத்தம் குடுக்குற மாதிரி இருக்கு. மலர்கள் மனதை பதமாக்கும். இதமாக்கும். எவ்வள்வு உண்மை. கண்களுக்கும் கருத்துக்கும் குளுமையோ குளுமை.&lt;br /&gt;&lt;br /&gt;************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நெதர்லாந்துலயும் அரிசி வெலை ஏறுது. ஆமா. இங்க நான் இருக்குற எடத்துல இந்திய உணவுப் பொருட்கள் வாங்கனும்னா ஒரே வழி பக்கத்துல இருக்குற ஒரு காஷ்மீரி கடைதான். ஆம்ஸ்டர்டாம்ல இன்னோரு ஓரத்துல ஒரு இலங்கைத் தமிழர் கடை இருக்கு. ஆனா அங்க போயிட்டு வர்ரதுக்கே பாதி நாளுக்கு மேலயே போயிரும். ஆகையால இங்க காஷ்மீரிக்காரங்க கடையிலேயே வாங்குறது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூர் பொன்னி அரிசி, நல்ல இட்டிலி அரிசி, உழுந்து, பருப்பு எல்லாமே கெடைக்கும். அந்தப் பருப்புகளுக்கு மொதல்ல வெலை ஏறுச்சு. இப்ப அரிசிக்கு. எனக்கு அரிசி இல்லைன்னா ஒன்னுமில்லை. ஆனா அம்மா அப்பா இருக்காங்க. அவங்களுக்காகத்தான் வாங்குறது. அதுவுமில்லாம எனக்குத் தோசைன்னா ரொம்பப் பிடிக்கும். மிக்சியில அப்பப்ப மாவரைச்சுச் சுட்டுக்குறது.&lt;br /&gt;&lt;br /&gt;*************************************************************&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலப் படங்கள்னாவே பிரம்மாண்டமும் கிராபிக்சும்னு பெரும்பாலும் ஒரு எண்ணம் இருக்குது. ஆனா பாருங்க....தமிழ்ப் படங்களை விட சிறப்பான கதையம்சங்களோடவும் நடிப்போடயும் ஆங்கிலப் படங்கள் நிறையவே வருது. சமீபத்துல அப்படிப் பாத்த இரண்டு படங்கள் 27 Dresses மற்றும் Nanny's Diaries. இரண்டுமே புதுமையான கதைக்களன். இந்த பிரியாணியில 27 Dresses படத்தப் பத்திப் பாப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஆனா ஃபிளெச்சர் (Anne Fltecher) அப்படீங்குற பெண் இயக்குனர் இயக்கிய படம். 27 முறை மணப்பெண்களின் தோழியா அலங்கார உடையணிந்த ஒரு பெண் 28வது முறை தனக்காகவே திருமண உடை அணியிறதுதான் கதை. சொல்லறப்பவே வித்தியாசமா இருக்குல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC71cz1J6OI/AAAAAAAACbo/YrwJN0uQXsA/s1600-h/27dresses.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC71cz1J6OI/AAAAAAAACbo/YrwJN0uQXsA/s320/27dresses.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5201364494957799650" /&gt;&lt;/a&gt;ஜேன், அவதான் அந்தப் பொண்ணு. ரொம்பவும் சுறுசுறுப்பு. நல்ல பொண்ணு. வேலை பாக்குற எடத்துல அவ பாஸ் மேல ஆசைப்படுறா. ஆனா அவரோட பாசும் ஜேனோட தங்கச்சியும் விரும்புறாங்க. பாஸ் இருக்காரே... அவரு மரக்கறி சாப்புடுறவரு. இயற்கையை ரசிக்கிறவரு. நல்லவரு. வல்லவரு. இப்பிடி பலப்பல. ஆனா ஜேனோட தங்கச்சி அதுக்கெல்லாம் நேர்மாறு. ஆனாலும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நடிக்கிறா. அவ கிட்ட ஜேன் சொல்லிப் பாத்தாலும் கேக்கலை. உண்மையச் சொல்லீட்டா ஒப்புக்கிறவர்தான் அந்த பாஸ். ஆனா இவ சொல்லனுமே.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம கதாநாயகி ஒரே நாள்ள ரெண்டு கல்யாணத்துல தோழியா இருக்க வேண்டி வருது. ஒன்னு அமெரிக்கக் கல்யாணம். இன்னொன்னு இந்தியக் கல்யாணம். இங்கயும் அங்கயும் மாறி மாறி ஓடி...உடைய மாத்தி...அத இதன்னு மாத்தி.. ரெண்டு எடத்துலயும் நல்ல பேரு வாங்குற. அந்த சமயத்துலதான் கெவினைச் சந்திக்கிறா. அவன் ஒரு பத்திரிக்கையாளன். ஆனா வேற பேர்ல எழுதுறான். அவனோட எழுத்து மேல ஜேனுக்கு ரொம்ப விருப்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டு பேரும் நட்பா பழகுறாங்க. 27 உடைகளையும் வெச்சு ஜேனை கெவின் படங்கள் எடுக்குறான். ஒரு கட்டுரை எழுதுறான். அத அவனுக்குத் தெரியாமலேயே பத்திரிக்கைல போட்டுர்ராங்க. அப்பத்தான் கெவின் யாருன்னு ஜேனுக்குத் தெரிய வருது. அவன் மேல கோவிச்சிக்கிட்டு பேசாம இருந்துர்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;ஜேனோட தங்காச்சீ பாஸை டாவடிச்சாளே.. அவங்க திருமணம் செஞ்சுக்கிறதா முடிவெடுக்குறாங்க. அக்காக்கு முன்னாடி தங்காச்சீ கல்யாணம். அதுனால அவங்க அம்மாவோட கல்யாண உடையை இளையமகளுக்குக் குடுக்குறாரு அப்பா. ஆனா அந்த மரமண்டை அந்த உடையை வெட்டித் தச்சு வேற உடையா மாத்தீர்ரா. ஜேனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம். தன்னோட கல்யாணத்துக்குப் போட வெச்சிருந்த உடையை... அதுவும் இறந்து போன அம்மாவோட கல்யாண உடையை கிழிச்சிட்டாளேன்னு ஆத்திரப் பட்டு பாஸ் கிட்ட தங்காச்சீ பத்தி உண்மையைச் சொல்லீர்ரா. நடக்க இருந்த திருமணம் நின்னு போகுது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கெவின் பயலும் அப்பப்பா அம்மா தாயே நானும் இருக்கேன்னு பின்னாடியே வர்ரான். ஆனா இவதான் கோவிச்சிக்கிட்டாளே. அதுனால ஒதுங்கிப் போறா.&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப ஆபீஸ்ல இருக்குற பாசு... இவகிட்ட புதுசா ஏற்படுற பிடிப்பைச் சொல்றாரு. ஆனா அவளுக்கு இப்ப அவர் மேல இருந்த ஆசை போயிருச்சு. எங்க போயிருச்சு? அதான். அந்தக் கெவின் பய இருக்கானே...அவன் கிட்ட போயிருச்சு. ஆனாலும் முந்தி தான் விரும்புனதையும்....தங்காச்சீ மேல பொறாமை இருந்ததையும் ஒத்துக்கிறா. ஒத்துக்கிட்டு ஓடுறா. எங்க? அந்தக் கெவின் கிட்டதான். அப்புறமென்ன முடிவு சுபமோ சுபம். கெவினும் ஜேனும் சேர்ந்துர்ராங்க. பின்னாடி பாசும் தங்காச்சீயும் கூட புரிஞ்சிக்கிட்டு சேந்துர்ராங்க. இதாங்க கதை. ஆனா... படத்தப் பாக்கனுமே... ஒரு எடத்துல கூட தொய்வு இல்லை. அவ்ளோ நேர்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;அதுலயும் ஜேனா நடிச்ச Katherine Heiglம் கெவினா நடிச்ச James Marsdenம் ரொம்பவே அருமையா நடிச்சிருப்பாங்க. வாய்ப்புக் கெடைச்சா படத்தக் கண்டிப்பா பாருங்க. உண்மையிலேயே பார்த்து மனசுக்குத் திருப்தியான படம். அதுலயும் ஜேனுக்கும் கெவினுக்கும் திருமணம் நடக்குறப்போ ஜேனின் தோழிகள் 27 பேரும், அவள் அவங்கவங்க கல்யாணத்துக்குப் போட்ட உடையோட வரிசையா நிப்பாங்க. பாக்கவே நல்லா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரியாணிகள் தொடரும்.....&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-2230262422662529551?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/2230262422662529551/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=2230262422662529551' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2230262422662529551'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2230262422662529551'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/05/1-biryani-1.html' title='பிரியாணி - 1'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SC69lD1J6HI/AAAAAAAACaw/gxWHniGCFNk/s72-c/DSC03552-1.JPG' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-2579505262631515214</id><published>2008-05-12T01:50:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:48.767-08:00</updated><title type='text'>தங்க மரம் - 13</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/05/12.html"&gt;இங்கே&lt;/a&gt; படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 13&lt;br /&gt;&lt;br /&gt;பறக்க முடியாமல் தடுமாறிய பிடிமா கீழே இறங்க நினைத்தது. ஆனால் அதுவும் முடியவில்லை. அப்பொழுதுதான் அந்த பெருத்த சிரிப்போசை கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகா.. ஆகா... அழகான பொம்மைகள். பறக்கும் யானைப் பொம்மை. அதன் மேல் ரெண்டு மனிதப் பொம்மைகள். ஹா ஹா ஹா"&lt;br /&gt;&lt;br /&gt;குரல் வந்த திசையில் பார்த்த பொழுதுதான் அவர்கள் கண்ணில் பட்டாள் அந்த அரக்கி. பத்தாள் உயரம். அந்த அளவிற்குத் தண்டி. பத்து ஆளை விழுங்கினாற் போல் வயிறு. விரிந்து சிக்கு விழுந்த தலைமுடி. கள்ளு குடித்துச் சிவந்த முண்டக்கண்கள். ஆனால் மூஞ்சியில் ஏதோ ஒரு கண்ணாடி முகமூடி மாட்டியிருந்தாள். நல்லவேளையாக அவளது அதியழகான முகத்தைக் கொஞ்சம் மறைத்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அவளைப் பார்த்ததும் சித்திரை கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"யாரடா இவள். நம்மைப் பொம்மை என்கிறாளே. இவளைப் போன்ற அரக்கிகள் எல்லாம் நம்மளைப் போன்றவர்களைப் பிடித்து விழுங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இவள் நம்மைச் சொப்பாக வைத்து விளையாடப் போகின்றாளோ."&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனிடம் சித்திரை சொன்னது லேசுமாசாக அவள் காதுகளில் விழுந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏஏஏஏ பொம்மைகளே! உங்களுக்குப் பறக்க மட்டுமே தெரியும் என்று நினைத்தேன். பேசவும் தெரிந்திருக்கிறதே. நீங்கள் பேசியது என் காதில் விழுந்து விட்டது."&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரையின் வாயால் சும்மாயிருக்க முடியவில்லை. இடுக்கண் வந்தாலும் வைரக் கடுக்கன் வந்தாலும் நகுகின்றவன் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அம்மா அழகரசி. உன் காதில் தடுமாறி ஆனையே விழுமே...நான் பேசியது விழாமல் போகுமா? உன் பேர் என்ன? எங்களை எதற்காக நிறுத்தி வைத்திருக்கின்றாய்?&lt;br /&gt;&lt;br /&gt;சித்திரை பேசப்பேச அவளுக்கு மகிழ்ச்சி கூடிக் கொண்டே போனது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகா ஆகா.. அழகாகப் பேசுகிறாய். என்னுடைய பெயர் அண்டி. நீங்கள் என்னுடைய இடத்திற்கு மேல் பறந்தீர்கள். மிகவும் அழகான பொம்மைகளான உங்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. உங்களை என்னுடைய வீட்டில் வைத்து அழகு பார்க்கப் போகின்றேன். என்னிடம் இருக்கும் மற்ற பொம்மைகள் உணர்ச்சியே இல்லாமல் பேசாமல் இருப்பவை. ஆனால் நீங்கள் எனக்குப் பொழுது போகும் வகையில் நன்றாகப் பேசுகின்றீர்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"அண்டிதான் உன் பெயரா! நல்ல பெயர். அண்டியாம் அண்டி. வேண்டாம். எதையாவது சொல்லி விடப் போகிறேன். சரி. உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது? அங்கு சாப்பிடுவதற்கு எதுவும் கிடைக்குமா?"&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய வீடு இந்த மலைக்குகையில் இருக்கிறது. உங்களுக்குச் சாப்பிடுவதற்கு வேண்டியன கிடைக்கும். நன்கு உருண்டு திரண்ட...பார்த்தாலே நாவூறும் எட்டு எருமைகளை இப்பொழுதுதான் அடித்துப் போட்டிருக்கிறேன். மாலைச் சிற்றுண்டிக்காக. நீங்கள் ஒரு பக்கமாகச் சாப்பிடுங்கள். நான் ஒரு பக்கமாகச் சாப்பிடுகிறேன். நீங்கள் எவ்வளவு சாப்பிட்டு விடப் போகின்றீர்கள். ஹா ஹா ஹா.. சாப்பிடும் பொம்மைகள். சாப்பிடும் பொம்மைகள்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகா...எட்டு எருமைகளை அடித்துப் போட்டிருக்கிறாளா... அது சரி. இவள் அடித்துப் போட்டிருக்கும் எட்டுக்கு முன்னால் நாம் சிறிதுதானே. நாம் வாயில் நுழைந்தால் போனதும் தெரியாது. வந்ததும் தெரியாது. ஆனாலும் எதற்கு வம்பு. இவள் எப்படியும் நம்மை விடமாட்டாள். இங்கே இறங்கித்தான் நாம் தப்பிப்பதற்கு ஏதாவது செய்ய வேண்டும் நீ சற்று அமைதியாக இரு. நான் பேசுகிறேன்." முணுமுணுப்பாக சித்திரையிடம் சொன்ன கதிரவன் அண்டியைப் பார்த்துச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;"எட்டு எருமை தின்னும் அண்டியே... உன்னுடைய வீட்டில் பொம்மைகளாக இருக்க நாங்கள் மூவரும் ஒப்புக்கொள்கிறோம். இப்பொழுது எங்களை இறக்கி விடு."&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவன் ஒப்புக்கொண்டவுடன் தனது மண்டையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்த அண்டி மூவரையும் கீழே இறக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"அதோ என்னுடைய வீடு. வாருங்கள்." என்று ஒரு பெரிய குகைக்குள் அழைத்துச் சென்றது. அந்தக் குகையை வீடு என்று சொல்ல முடியாது. ஆனால் அந்தப் பெரிய குகைக்குள் சின்னச் சின்ன குகைகள் இருந்தன. சூரிய வெளிச்சம் வருவதற்கும் வழிகள் இருந்தன. அந்த வழிகளில் ஒளிக்கதிர் வருவது பார்வைக்கு மிக அழகாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் அண்டி சொன்னது போலவே எட்டு எருமைகள் கிடந்தன. அண்டி அடித்த அடியில் குருதி கசிந்து பார்ப்பதற்குச் செக்கச் செவேல் என்று இருந்தன. அதைப் பார்த்ததும் அண்டியின் பசி குத்தாட்டம் போட்டது. பொம்மைகளை ஒரு நொடி மறந்து விட்டாள். கண்ணாடி முகமூடியைக் கழற்றி வைத்து விட்டு எட்டையும் கொஞ்சம் கொஞ்சமாக வாய்க்குள் திணித்துக் கொண்டாள். அவள் வாய்க்குள் திணித்துக் கொண்ட அழகைப் பார்த்த மூவருக்கும் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்ஸ்லபஷ்" என்று உதடுகளை நக்கிக் கொண்டவள்.. திரும்பவும் கண்ணாடி முகமூடியைப் போட்டுக் கொண்டாள். சற்றுத் திரும்பித் தேடிப் பார்த்து இவர்கள் இருக்கிறார்கள் என்று உறுதி செய்து கொண்டாள். "வாருங்கள் பொம்மைகளே. உங்களை பொம்மை அறைக்குள் அழைத்துச் செல்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுத் தள்ளி உள்ளேயிருந்த அறைக்குள் (குகைதான்) அழைத்துச் சென்றாள். அந்த அறைக்குள்ளே பலப்பல சிலைகள். இறைவனின் உருவச் சிலைகள்..மனிதர்களின் சிலை.. விலங்குகள்...பறவைகள் என்று பலப்பலச் சிலைகள் இருந்தன. கற்சிலைகளிலிருந்து உலோகம்..மரம் என்று பல வகைகள் வேறு. எங்கிருந்து எடுத்து வந்தாளோ!&lt;br /&gt;&lt;br /&gt;"இங்குதான் நீங்கள் இருக்க வேண்டும். இங்கேயே இருங்கள். நான் போய் உங்களுக்கு உணவு கொண்டு வருகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;மூவருக்கும் அடிவயிற்றை அமிலம் அரித்தது. கதிரவன் கேட்டு விட்டான். "அண்டி..எங்களுக்கு என்ன உணவு கொண்டு வரப் போகிறாய்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹா ஹா ஹா உங்களுக்கா...நீங்கள் சின்ன்ன்ன்ன்ன்ன்ன்னப் பொம்மைகள். ஆகையால் எட்டு எருமைகளை அடிக்க மாட்டேன். அதெல்லாம் எனக்குத்தான்" அவள் சொல்லும் போதே நிம்மதி வந்ததும் மூவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு ஒரேயொரு மலைப்பாம்பு மட்டும் போதுமே. இருங்கள் உடனே சென்று பிடித்து..அதன் கழுத்தைத் திருகிக் கிழித்துத் தருகிறேன். நீங்கள் சுவைத்துச் சுவைத்து உண்ணலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;வயிறு என்று ஒன்று இருப்பதே மூவருக்கும் மறந்து போனது.&lt;br /&gt;&lt;br /&gt;"தாயே அண்டி. மலையும் வேண்டாம். பாம்பும் வேண்டாம். நாங்கள் பொம்மைகள். அதையெல்லாம் சாப்பிட முடியாது. எங்களுக்கு மரங்களில் பழுக்கும் கனிகள்தான் உணவு. அவைகளைக் கொண்டு வந்தாலே போதும். புரிந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம்ம்... புரிந்தது புரிந்தது. நீங்கள் பொம்மைகள். உங்களால் நல்ல உணவைச் சாப்பிட முடியாது. மரங்களில் இருக்கும் கனிகளைத்தான் சாப்பிட வேண்டும். இதோ விரைவில் வருகிறேன்." என்று சொல்லிவிட்டுத் தடதடவென ஓடினாள். மூவரும் நிற்க முடியாமல் தடுமாறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் போனதும் குகையை ஆராய்ந்தார்கள். ஏதாவது வழி தென்படுகிறதா என்று அவர்கள் உள்ளே வந்த வாசலைத் தவிர வேறு வழிகள் எதுவும் தென்படவில்லை. அந்த வாயில் வழியே வெளியே போகவும் முடியவில்லை. ஏதோ ஒரு தடுப்பு இருந்தது. அதற்குள் அண்டி வரும் அதிர்வுகள் தெரிந்ததும் உள்ளே பொம்மையறைக்குள் வந்து விட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கின்றவர்களின் வசதிக்காக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s1600-h/EarthTree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s320/EarthTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191681341712966082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyPtm_TIeI/AAAAAAAACZc/9y1OKczOT0w/s1600-h/AlorTree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyPtm_TIeI/AAAAAAAACZc/9y1OKczOT0w/s320/AlorTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191682484174266850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-2579505262631515214?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/2579505262631515214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=2579505262631515214' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2579505262631515214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/2579505262631515214'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/05/13.html' title='தங்க மரம் - 13'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s72-c/EarthTree.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-1022145765837519838</id><published>2008-05-05T13:32:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:48.818-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 12</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/05/11.html"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 12&lt;br /&gt;&lt;br /&gt;தனிமா பிடிமாவை விட்டு வந்தது போல நாமும் விட்டுவிட்டோம். பிடிமாவின் நிலையை என்னவென்று பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனும் சித்திரையும் பிடிமாவின் மீது பரிவு காட்டியது அதன் கலக்கத்தைக் குறைத்து ஆசுவாசப்படுத்தியது. அதுவுமில்லாமல் சுடர்மகள் லிக்திமாவின் படத்தைப் பார்த்ததும் அவர்கள் மேல் நம்பிக்கையும் பிடிமாவிற்கு உண்டானது. நம்பிக்கை வந்தாலே தன்னைப் பற்றிச் சொல்லத்தானே விருப்பம் வரும். அதற்காகத் தன்னிடமிருந்த நாவிலூறியை வாயில் போட்டுக் கொண்டது பிடிமா. ஆலோரில் மனதினாலேயே அங்குள்ளவர்களிடம் தகவலைப் பரிமாற முடியும். ஆனால் பூமி மனிதர்கள் மனது தகவல்களைப் பெறும் திறனை காலவோட்டத்தில் இழந்து விட்டதால் அவர்களிடம் பேசுவதற்கு இந்த நாவிலூறி தேவைப்படுகிறது. அதை வாயில் போட்டுக் கொண்டால் அவர்களுக்குப் புரியும் மொழியில் தகவலைச் சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிமாவைப் பற்றியும் தனிமாவைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்ட கதிரவனுக்கு வந்திருப்பவர்கள் நண்பர்கள் என்றும் இருவரின் கொள்கையும் ஒன்றுதான் என்றும் மிக எளிதில் புரிந்து போனது. இந்த விஷயத்தை முதலில் அன்னையிடம் சொல்லி விட்டு காரியத்தில் இறங்க நினைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிமாவிற்கு உணவு ஏற்பாடு செய்து தரச் சொல்லி சித்திரையிடம் சொல்லி விட்டு நேராக வீட்டிற்குச் சென்றான். ஆனால் அங்கிருந்த நிலவரம் கலவரத்தையே உண்டாக்கியது. என்ன நடந்ததென்றே புரியவில்லை. அம்மாவைக் காணவில்லை. ஏதோ பிரச்சனை நடந்திருக்கிறது என்று மட்டும் புரிந்தது. வீட்டுக்குள் மட்டும் அலங்கோலமாக இருந்தது அவன் ஐயத்தை அதிகப் படுத்தியது. நிலமையைக் கண்டதும் ஊழிவாயன் மேல்தான் சந்தேகம் வந்தது. ஆனால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் சற்றும் தாமதிக்க விரும்பாமல் மீண்டும் சித்திரையிடமும் பிடிமாவிடமும் ஓடினான். அதற்குள் சூரிய வெளிச்சத்தாலும் சித்திரை ஒடித்துப் போட்ட நல்ல தென்னங்குறுத்துகளாலும் வயிறு நிரம்பி மிகவும் தெளிவாக இருந்தாள் பிடிமா. வீட்டில் கண்டதை இருவருக்கும் விளக்கினான் கதிரவன்.&lt;br /&gt;மூன்று பேரும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பட்டியல் இட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கதிரவனின் அன்னை அமுதம் என்ன ஆனார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிமாவோடு வந்த தனிமாவையும் காணவில்லை. அவளையும் கண்டுபிடிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழிவாயன் எங்கிருக்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும். அவனிடமிருந்து லிக்திமா, கதிரவனின் தந்தை, சித்திரையின் தந்தை...ஒருவேளை அமுதத்தையும் பிடித்துக் கொண்டு போயிருந்தால் அவரையும் சேர்த்து விடுவிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செயல்களை எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் முழித்தார்கள் நண்பர்கள் இருவரும். ஏதேனும் சின்னக் குறிப்பு கிடைத்தாலும் நன்றாக இருக்குமே என்ற இருவரின் கவலையையும் பிடிமா குடுத்த தகவல் போக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊழிவாயன் இருக்குமிடத்தை அடைய முதலில் தங்கமரத்தை அடைய வேண்டும் என்றும்... அந்தத் தங்கமரமோ ஏறாத மண்மலையில் இருக்கிறது. அந்த ஏறாத மண்மலையோ தணலேரிக்கு அருகில் இருப்பதாகவும் லிக்திமா ஏற்கனவே சொல்லி வைத்திருப்பதை பிடிமா சொன்னது. (லிக்திமாவிற்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தது என்பதைப் பிறகு பார்ப்போம்.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆக இப்பொழுது தணலேரியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஏரியில் நீரிருக்கும். தணலிருக்குமா? அல்லது வெறும் பெயரா? மண்ணிலே மலையிருக்கும். மலையே மண்ணாயிருக்குமா? தங்கத்தில் மரம் முளைக்குமா? ஒருவேளை தங்குவதற்கான மரமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சந்தேகங்கள் மூவரின் உள்ளத்திலும் எழுந்தன. அப்பொழுது பிடிமா சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"நண்பர்களே என் மீது ஏறிக் கொள்ளுங்கள். உங்களைச் சுமந்து என்னால் பறக்க முடியும். என்னுடைய இறக்கைகள் மிகவும் வலுவானவை. இந்தச் சூரியவொளி மிகுந்த ஆற்றலைக் கொடுக்கிறது எனக்கு. ஆகையால் பறந்து சென்று தேடுவதே வசதியாக இருக்கும். மேலும் என்னோடு வந்த தனிமாவும் அருகில் எங்கேயாவது விழுந்திருக்க வாய்ப்புள்ளது. வாருங்கள். என் மீது ஏறிக் கொள்ளுங்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;பிடிமாவின் அழைப்பை இருவராலும் மறுக்க முடியவில்லை. விண்ணிலிருந்து பார்த்தால் விசாலமான காட்சி கிடைக்கும். அது தேடுதலை எளிமையாக்கும் என்றும் புரிந்தது. சரியென்று ஒப்புக்கொண்டு பிடிமாவின் மேல் ஏறினார்கள். இருவரையும் சுமந்து கொண்டு ஜிவ்வென்று வானில் ஏறிப் பறந்தது பிடிமா.&lt;br /&gt;&lt;br /&gt;விண்ணிலிருந்து அழகான பூமியைக் காணும் காட்சி மூவரையும் பரவசப்படுத்தியது. களைப்பே தோன்றாமல் பறந்து கொண்டிருந்த பிடிமாவும் நண்பர்கள் இருவரும் அவர்கள் வேலையையே சற்று மறந்திருந்தார்கள் என்றாலும் மிகையாகது. கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணி நேரங்கள் பறந்த பிறகு மலைகள் நிறைந்த பகுதியை அடைந்தார்கள். அங்கு இறங்கி களைப்பாறி உணவு தேடலாம் என்று கதிரவனுக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;தோன்றியதைச் சொல்லும் முன்னமே பிடிமா விண்ணிலேயே நின்றது. அதனால் சிறிதும் நகரமுடியவில்லை. முழு ஆற்றலையும் பயன்படுத்தினாலும் அசையக் கூட முடியவில்லை. கீழேயும் விழவில்லை. என்னடா அதியம் என்று அசந்து போகும் வேளையில் கேட்டது இடியோசை போன்ற சிரிப்போசை.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கின்றவர்களின் வசதிக்காக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s1600-h/EarthTree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s320/EarthTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191681341712966082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyPtm_TIeI/AAAAAAAACZc/9y1OKczOT0w/s1600-h/AlorTree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyPtm_TIeI/AAAAAAAACZc/9y1OKczOT0w/s320/AlorTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191682484174266850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-1022145765837519838?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/1022145765837519838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=1022145765837519838' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/1022145765837519838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/1022145765837519838'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/05/12.html' title='தங்க மரம் - 12'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s72-c/EarthTree.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-7173518609072030007</id><published>2008-05-01T00:10:00.000-07:00</published><updated>2008-05-01T00:15:37.180-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்கமரம் - 11</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/04/10.html"&gt;இங்கே&lt;/a&gt; படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 11&lt;br /&gt;&lt;br /&gt;தங்கக்கத்தி தனிமாவின் கைகளில் சேர்ந்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன. தனிமா அவசரப்பட்டு பூகனைக் கொல்லவில்லை. சற்றுப் பொறுமையாக இருந்தாள். ஆனாலும் பூகன் அவள் மேல் பாய்ந்ததினால் ஆத்திரத்தோடே இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹே... யார் நீ?" அதட்டலோடு கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பார்த்தால் எப்படித் தெரிகிறது? உனக்குக் கண்கள் உண்டுதானே?" திமிராகக் கேட்டது அந்த பூகன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடி வாங்கிப் பிடி பட்ட பிறகும் பேச்சு பெரும் பேச்சு."&lt;br /&gt;&lt;br /&gt;"அது சரி... வந்திருப்பது பூகனூருக்கு.... பிடித்து வைத்திருப்பதோ பூகனை.... வெளியிலிருந்து வந்திருக்கும் நீ இவ்வளவு பேசும் பொழுது என் பேச்சு பெரும் பேச்சாவதில் வியப்பில்லையே." பூகனின் பேச்சில் ஆத்திரமும் எரிச்சலும் வெடித்துச் சிதறின.&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லச் சிரித்தாள் தனிமா. "பூகனாக மட்டுமே இருந்தால் பேசலாம். ஆனால் மானம் மரியாதை அனைத்தும் ஊழிவாயனிடம் அடகு வைத்து விட்டு வாயினை உண்ண மட்டுமே திறக்கின்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். பேசவும் திறப்பீர்கள் என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"ஆஆஆ அவமானம். பூகன்கள் அந்த ஊழிவாயனிடம் விரும்பியா வேலை செய்கின்றன? வேறு வழியில்லாமல் அந்த வெளியண்டத்து ஊழிவாயனிடம் அடங்கி நடக்கின்றார்கள். என்னைத் தவிர. நான் ஒருவன் இருப்பதையே அறியான் அந்த ஊழிவாயன். உன்னைப் பார்த்தால் கூட அந்த ஊழிவாயனின் முகச்சாயல் தெரிகின்றது. நீயும் அவனைப் போல மாயாவியாகத்தான் இருக்க வேண்டும். ஆகையால்தான் மனிதர்களே நுழைய முடியாத இந்தப் பூகனூருக்குள் நுழைந்து...என்னையும் பிடித்து....என்னையே குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறாய்." ஆத்திரத்தில் பொறுமினான் அந்த பூகன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமாவிற்கு நிலமை சட்டென்று புரிந்து போனது. ஆலோரில் இருக்கும் பொழுதே ஊழிவாயன் பூகன்களின் தலைவனை ஏமாற்றி மந்திரக்கோலை அபகரித்துக் கொண்டதை அறிவாள். ஆனால் அனைத்து பூகன்களும் அடிமையாகியிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு ஒரு பூகம் சுதந்திரமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பைய அந்த பூகனைக் கீழே இறக்கினாள். தங்கக் கத்தியையும் அந்தரத்திலேயே நகட்டி அந்த பூகன் கையில் வைத்தாள். அதற்கோ வியப்பு. தரையில் ஒரு நிலையில் இறங்கிய பிறகு கேட்டது. "நீ யார்?"&lt;br /&gt;&lt;br /&gt;"பூகனே. ஊழிவாயன் என்று நீங்கள் சொல்லும் நபரின் மகள் நான். என்னுடைய பெயர் தனிமா. ஊழிவாயனிடமிருந்து என்னுடைய தாயை விடுவிக்க வந்திருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;பூகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பளக் பளக் என்று முதலில் முழித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி. என்னுடைய பெயர் ககன். நீ அப்படியானால் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் என்று நான் நம்புவதற்குக் காரணம் இல்லையல்லவா!"&lt;br /&gt;&lt;br /&gt;ககன் சொன்னது எடுத்ததும் தனிமாவிற்குப் புரியாவிட்டாலும் தான் ஊழிவாயனுக்கு ஆதரவானவள் இல்லை என்பதைத்தான் அப்படிக் கேட்கிறான் ககன் என்று உணர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி தனிமா. அப்படியானால் நீ இங்கே வந்ததற்கான காரணத்தின் மேலதிகத் தகவல்களை நான் அறிந்து கொள்வதில் உனக்குத் தயக்கம் இருக்கப் போவதில்லை என்றே நம்புகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்து விட்டாள். "ஹா ஹா ஹா.. இல்லை இல்லை. தாராளமாகச் சொல்லலாம். நாங்கள் ஆலோரிகள். நானும் என்னுடைய ஆனையான பிடிமாவும் பூமிக்கு வந்தோம். பூமியின் எல்லைக்குள் நுழையும் பொழுது தடுமாறினோம். அப்படிக் கீழே விழுகையில் பிடிமா ஒருபுறம் போனாள். நான் இங்கு தவறி தண்ணீருக்குள் விழுந்து இங்கு வந்திருக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;தனிமா சொன்னது பூகனை யோசிக்க வைத்தது. "தனிமா...இப்பொழுது நீ எப்படி இங்கே வந்ததாகச் சொன்னாயோ அப்படித்தான் முன்னம் ஒருவன் உள்ளே வந்ததாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வேறு யாருமல்ல. யாரை நீ உன்னுடைய தந்தை என்று கூறிக்கொண்டு..அவனையே எதிர்க்க வந்திருப்பதாகக் கூறுகின்றாயோ...அந்த ஊழிவாயந்தான். நீயும் அதை வழியில் இங்கு வந்திருப்பதிலிருந்து இரண்டு விஷயங்கள் என்னுடைய யோசனைக்கு வருவதால் அவைகளை உன்னிடம் சொல்லிவிடுவதே நல்லது என்று இப்பொழுது தோன்றுகிறது. கேள்."&lt;br /&gt;&lt;br /&gt;கூர்ந்து கேட்கத் தொடங்கினாள் தனிமா.&lt;br /&gt;&lt;br /&gt;"முதலாவது. ஊழிவாயன் என்னதான் ஏமாற்றுக்காரனாக இருந்தாலும் அவன் ஆற்றலிலும் அறிவிலும் குறையுள்ளவன் என்று யாரும் சொல்ல முடியாத அளவிற்குச் சிறந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது. ஊழிவாயன் வந்திறங்கிய பொழுது அவனிடமிருந்த சக்தியனைத்தும் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்க முடியாத நிலை வந்தது. அதாவது சுருங்கச் சொன்னால்...இந்த பூமிக்கு வெளியே சிறந்து பணியாற்றிய அவனது ஆற்றலனைத்தும் பூமிக்குள் வந்ததும் சிறிது சிறிதாக தன்னை இழந்தது. அதாவது என்னை அந்தரத்தில் தொடாமல் நிறுத்தி வைத்திருக்க உன்னால் தொடர்ந்து செய்ய முடியாது போகும்."&lt;br /&gt;&lt;br /&gt;ககன் சொன்ன இரண்டு தகவல்களில் இரண்டாவது தகவல் தனிமாவை யோசிக்க வைத்தது. ஒரு பிரச்சனையை தீர்க்க வந்த அவளுக்குப் பிடிமாவை இழந்தது இன்னொரு பிரச்சனையாக வந்து நிற்கிறது. அவளை முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். ஆனால் தன்னுடைய ஆற்றலை விரைவில் இழக்க நேரிடும் என்ற எண்ணம் வேறு சலனப்படுத்தியது. கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாக ககனின் நட்பு வேறு கிடைத்திருக்கிறது. ஆனால் எதையும் சுருக்கமாகச் சொல்லத் தெரியாத ககனால் எவ்வளவு நன்மை என்றும் தெரியவில்லை. மொத்தத்தில் ஆற்றல் குறையும் முன்னமே விரைந்து செயல்படுவது நன்று என்று அவளுக்குத் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;"ககன். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது நான் விரைந்து செயலாற்ற வேண்டும் என்பது புரிகிறது. முதலில்....எனக்கு ஒன்று புரிய வேண்டும். ஆற்றலை அனைத்தும் இழந்தார் ஊழிவாயன் என்றால்....எப்படி பூகன்கள் அனைவரையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்? ஏன் எந்த பூகனும் எதிர்க்கவில்லை. நீ ஊழிவாயனை எதிர்ப்பதாகச் சொன்னாலும் இத்தனை ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லையே! ஏன்?"&lt;br /&gt;&lt;br /&gt;ககன் சொல்லத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-7173518609072030007?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/7173518609072030007/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=7173518609072030007' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/7173518609072030007'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/7173518609072030007'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/05/11.html' title='தங்கமரம் - 11'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-8696862777782015406</id><published>2008-04-21T01:56:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:49.800-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 10</title><content type='html'>சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/04/9.html"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 10&lt;br /&gt;&lt;br /&gt;கஜன் ஆலோரின் அரச ஆனை. அறிவிலும் செயலிலும் மற்ற ஆனைகளையெல்லாம் கட்டிக்காக்கும் சிறந்த ஆனை. ஆகையால்தான் அதை பூமிக்கு அனுப்ப முடிவெடுத்தாள் லிக்திமா. மாயப்பெட்டியிலும் மாயக்கோலிலும் இதுவரை நடந்தவைகளை ஒலியொளிப்படமாகப் பதிவு செய்து, கஜனுக்கு உதவுமாறு வேண்டுகோள் வைத்தாள். அந்த வேண்டுகோள் வைத்த கடைசிப் பகுதியைத்தான் கதிரவனும் சித்திரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAxbB2_TIbI/AAAAAAAACZE/1j1zQhKjba0/s1600-h/GajanFlying.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAxbB2_TIbI/AAAAAAAACZE/1j1zQhKjba0/s320/GajanFlying.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191624557950345650" /&gt;&lt;/a&gt;கதையைப் படிக்கின்ற அனைவருக்கும் வரும் ஐயம் இவர்கள் இருவருக்கும் வந்தது. இவையெப்படி அவர்கள் தந்தையார்களிடம் கிடைத்தனவென்று! தந்தையோ ஆனைப்பிரியர் என்று தெரியும். அதனால் எப்படியோ கஜன் அவர்களைத் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று நினைத்தார்களே தவிர..அவர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஒன்று. அவர்களுக்குக் கடமை புரிந்து போனது. முத்தைக் காப்பாற்ற வேண்டும். ஆலோருக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு  எப்படிக் கண்டுபிடிப்பது என்று குழம்பித்தான் போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று சடசடவென்று பேரோசை எழுந்தது. என்ன நடக்கிறது என்று ஊகிக்கும் முன்னரே ஏதோவொன்று மரத்தில் விழுந்து...கிளைகளையெல்லாம் ஒடித்துக் கொண்டு பொத்தடீர் என்று மண்ணில் விழுந்தது. பாஆஆஆஆஆம் என்ற பிளிறல் வேறு கேட்டது. ஆம் பிடிமாதான் அங்கு வந்து விழுந்திருந்தாள். ( பூமியின் சுற்றுவட்டத்திற்குள் நுழைந்ததும் தனிமாவும் பிடிமாவும் கீழே விழுந்ததை நினைவில் கொள்க)&lt;br /&gt;&lt;br /&gt;ஆலமரத்திலிருந்து இருவரும் கீழே விழுந்தார்கள். ஒலியொளிக்காட்சியும் கீழே விழுந்து லிக்திமா வேண்டுகோள் விடுக்கும் காட்சி அதில் தெரிந்தது.&lt;br /&gt;பிடிமாவின் இறக்கையைக் கண்டதும் அது ஆலோரின் ஆனையாகத்தான் இருக்க வேண்டும் என்று நண்பர்களுக்குப் புரிந்தது. ஒருவேளை கஜனாகவே இருக்குமோ என்று நினைத்தார்கள். ஆனால் விழுந்த ஆனை மிகவும் இளமையாக இருப்பதால் குழம்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தட்டுத்தடுமாறிக் கிடந்த பிடிமாவைக் கதிரவனும் சித்திரையும் எழுப்ப முயற்சித்தார்கள். ஆனால் பிடிமாவே இறக்கைகளை விரித்து எழுந்து விட்டது. அடி சறுக்கிய ஆனை எழாது என்ற தமிழ்ப் பழமொழியைப் பிடிமா பொய்யாக்கி விட்டதே என்று இருவருக்கும் திகைப்பு. எழுந்ததும் நன்றி சொல்ல முனைந்த பிடிமாவின் கண்களில் முதலில் பட்டது வட்டவடிவமான திரையில் தெரிந்த லிக்திமாதான். பிடிமாவின் மகிழ்ச்சி எப்படியிருந்திருக்கும் என்று விளக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆமாம். தனிமாவைக் காணவில்லை. தனிமா இல்லாத தனிமை பிடிமாவைக் கலவரப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலமையை ஓரளவு புரிந்து கொண்டார்கள் நண்பர்கள் இருவரும். ஆகையால் பிடிமாவைச் சமாதானப் படுத்த முனைந்தார்கள். அதே நேரத்தில் தனிமா வேறொரு இடத்தில் வேறொரு சந்திப்பில் இருந்தாள். ஆம். ஒரு பூகனுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்று மண்டலத்தில் சர்ரென்று இழுக்கப்பட்ட தனிமா எங்கு விழுகிறோம் என்று தெரியாமலே ஒரு குளத்தில் விழுந்தாள். விழுந்தவள் எந்தத் தரையையும் தட்டாமல் நீண்ட நேரம் தண்ணீருக்குள் போய்க்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரம் கழித்து அடித்தரையைத் தட்டினாள். அந்த இடத்தில் சின்னச்சின்ன மலைகள் இருந்தன. மலை என்பதை விட பெரிய பெரிய மேடுகள் என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்வது என்று எழுந்து நின்ற தனிமாவிற்கு அந்த மேட்டில் இருந்த ஒரு பொந்து தெரிந்தது. சற்றுக் குனிந்து நிமிர்ந்து பொந்துக்குள் நுழைந்தவளுக்கு பெரும் வியப்பு. பொந்துக்கு வெளியிலோ நிறைய நீர். பொந்துக்கு உள்ளேயோ ஒரு சொட்டு நீர் இல்லை. அழகிய சிறிய அரண்மனை போல இருந்தது. உள்ளே பிடிமா இருக்கிறாளா என்றுதான் முதலில் பார்க்கத் தோன்றியது. ஆனால் பிடிமாவோ கண்ணில் படவில்லை. வேறு யாரும் இருப்பது போலக்கூடத் தெரியவில்லை. இந்த இடத்தைப் பற்றி எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பொந்து அரண்மனைக்குள் நுழைந்தாள். ஓரிடத்தில் நிறைய நாற்காலிகள் கற்களில் செதுக்கப்பட்டிருந்தன. அந்த இடத்தைப் பார்த்தால் பொழுது போக்கும் இடம் போல இருந்தது. ஆனால் போக்கத்தான் யாரும் இல்லை. சரியென்று களைப்பினால் அங்கிருந்த நாற்காலியொன்றில் சாய்ந்து அமர்ந்தாள். அப்படியே கண்கள் செருகின.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்" என்ற ஓசையைக் கேட்டுப் படக்கென்று விழித்தவள் கண்முன்னே நின்று கொண்டிருந்தது ஒரு பூகன். கையில் பளபளப்பான வேலைப்பாடமைந்த தங்கக்கத்தியை வைத்து தனிமாவைக் குறி பார்த்துக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சொல்வதற்காக தனிமா வாயைத் திறந்தாள். அதற்குள் அந்த பூகன் அவள் மேல் பாய்ந்து கீழே தள்ளி கத்தியை அவள் கழுத்துக்குக் குறி வைத்தது. தனிமா சுதாரித்துக் கொண்டாள். மனதினாலேயே அந்த பூகனைக் கீழே பிடித்துத் தள்ளினாள். துள்ளிப் போய் தொலைவில் விழுந்தது அந்தப் பூகன். படக்கென்று கத்தியை அவள் மேல் வீசி விட்டு..தானும் பாய்ந்தது. ஆனால் தனிமா மனதினாலேயே அந்தக் கத்தியைப் பாதி வழியில் நிறுத்தினாள். பாய்ந்த பூகனையும் வழியிலேயே நிப்பாட்டினாள். தப்பிக்க முடியாத பூகன் அந்தரத்தில் தத்தளித்தது. அந்தரத்தில் நின்று கொண்டிருந்த தங்கக் கத்தியை தன்னிடம் வரவழைத்தாள் தனிமா. அதைப் பார்த்ததும் பூகனின் கண்கள் அச்சத்தால் விரிந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கின்றவர்களின் வசதிக்காக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s1600-h/EarthTree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://2.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyOrG_TIcI/AAAAAAAACZM/Az9usFNhG5I/s320/EarthTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191681341712966082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyPtm_TIeI/AAAAAAAACZc/9y1OKczOT0w/s1600-h/AlorTree.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAyPtm_TIeI/AAAAAAAACZc/9y1OKczOT0w/s320/AlorTree.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5191682484174266850" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-8696862777782015406?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/8696862777782015406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=8696862777782015406' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8696862777782015406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8696862777782015406'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/04/10.html' title='தங்க மரம் - 10'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SAxbB2_TIbI/AAAAAAAACZE/1j1zQhKjba0/s72-c/GajanFlying.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-6797678883158372624</id><published>2008-04-13T14:50:00.000-07:00</published><updated>2008-12-10T19:45:50.090-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008'/><title type='text'>தங்க மரம் - 9</title><content type='html'>நண்பர்களே இந்தியப் பயணம் மற்றும் பல காரணங்களால் இந்தத் தொடர் சற்றுத் தடைபட்டுப் போனது. இனிமேல் தொடர்ந்து ஓடும். :) சென்ற பகுதியை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/03/8.html"&gt;இங்கு&lt;/a&gt; படிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 9&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோரின் அரண்மனையில் அவசரக்கூட்டம். ஆலோரின் அரசி, லிக்திமா, விண்டா மற்றும் மெரிமா ஆகியோர் கூட்டத்தில் இருந்தனர். அனைவருக்கும் நிலமையின் தீவிரம் புரிந்திருந்ததால் ஒருவித அமைதியில் இருந்தனர். அரசிதான் முதலில் பேச்சைத் தொடங்கினாள். தேவதைகள் அமைதியாக இருக்குமானால் மக்களைக் காப்பாற்ற அரசியே பேச்சைத் தொடங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆலோரின் தேவதைகளே... ஆதிதான் ஆலோரைப் படைத்த தெய்வம் என்று அனைவரும் அறிவோம். அப்படியிருந்தும் தேவதைகளாகிய உங்களை வணங்கி வாழ்ந்து வந்தோம். இன்று உங்களுக்குள்ளேயே பிரச்சனை. ஒன்று முத்தைக் காப்பாற்ற முடியாமல் மூன்று தேவதைகள் இருந்தும் தொலைத்தது. இரண்டாவது நிலமகனாகிய சாண்டாவிற்கு மாற்றாக யார் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றார்கள் என்பது."&lt;br /&gt;&lt;br /&gt;குறுகுறுத்து லிக்திமா அமைதியாக இருக்கையில் பொங்கினாள் மெரிமா. "அரசி. இந்த நாற்காலியில் வெறும் அறுபது ஆண்டுகள் இருந்து விட்டு அனைத்தும் அறிந்தவர் போல் பேச வேண்டாம். தேவதைகளானாலும் ஆலோரின் மூத்த மக்கள் நாங்கள். எங்களில் மிகப் பெரியவர் சாண்டா. அவருடைய வலையில் வீழ்ந்த காரணத்தினால் எங்களை அவமதித்துப் பேச வேண்டாம். சாண்டாவைப் போல நாங்களும் விலகிப் போனால் ஆலோர் என்னாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். கடமையையும் பொறுப்பையும் அறிந்தே இங்கு இன்று பேசிக் கொண்டிருக்கிறோம்."&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சு வேறுவிதமாகப் போவதைக் கண்டு அதைத் தடுக்க விரும்பினாள் லிக்திமா. "மெரிமா.. அமைதி கொள். நீயின்றி அமையாது உலகு. உனது சினம் அழிவையே உண்டாக்கும். அது நன்றன்று." அரசியை நோக்கிச் சொன்னாள். "அரசி. பொறுமை. இங்கு அனைவருமே ஆலோரின் நலம் விரும்புகின்றவர்களே. நமக்குள்ளே பிளவு உண்டாக வேண்டிய நேரமல்ல இது. எதிர் வரும் சோதனை தரப்போகும் வேதனையிலிருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டிய சாதனையை யோசிப்போம். என்னிடம் ஒரு வழி இருக்கிறது. அனைவரும் சற்றுக் கவனமாகக் கேளுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரிடம் ஒரு பரபரப்பும் அதை மீறிய ஆர்வமும் எழுந்தது. ஆற்றலரசியின் திட்டம் என்னவென்று ஊன்றிக் கேட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"முத்தைக் கண்டுபிடிப்பது அவசியமே என்றாலும் முதலில் ஆலோரின் பொறுப்பு பெரியது. மண்மகன் என்று சாண்டாவிற்கு மட்டுமே பெயர். ஆனால் இப்பொழுது அது தனிமாவிற்கும் பொருந்தும். உண்மையிலேயே மண்ணின் மகள் அவள். அவள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பு அவளது பிஞ்சுத் தோள்களில். அதை அவள் செய்ய வேண்டியதற்கான ஆற்றலை என்னிடமிருந்தே பெறுவாள். அத்தோடு மெரிமாவும் விண்டாவும் சிறுது ஆற்றலை வழங்கினால் அனைத்தும் நலமாகவே நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது பிரச்சனை முத்து. அதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கொண்டு சென்றது சாண்டா. சாண்டாவை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. அரசி என்ற முறையில் நீயோ அல்லது கடவுள் என்ற வகையில் ஆதியோதான் குற்றத்திற்குத் தண்டனை வழங்க முடியும். முத்தைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை மட்டுமே நாம் இப்பொழுது பார்க்க முடியும். அதற்கு முதலில் முத்து எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டும்."&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கைகளையும் பாத்திரம் ஏந்துவது போலப் பிடித்தாள் லிக்திமா. உள்ளங்கையில் ஒளிப்பந்து ஒன்று தோன்றியது. மெல்லிய வெள்ளொளியாக இருந்தது அடர்ந்து பொன்னொளியானது. அது சுழன்று சுழன்று ஒரு பாத்திரமாகி ஒளி வீசியது. லிக்திமா கையை எடுத்த பிறகும் அந்தப் பொற்பாத்திரம் அந்தரத்தில் சுழன்று கொண்டேயிருந்தது."&lt;br /&gt;&lt;br /&gt;லிக்திமா மெரிமாவைப் பார்த்துச் சொன்னாள். "நீர்மகளே.... இளநீரை அதில் நிரப்பு."&lt;br /&gt;&lt;br /&gt;மெரியா தனது இரண்டு கைகளையும் சேர்த்து பாத்திரத்தில் காட்டினாள். மெழுகு இளகுவது போல இளகி அவள் கையிலிருந்து பாத்திரத்தில் நீரொழுகியது. தூய கண்ணாடி நீர் மிக மெலிதாக அழகாக பாத்திரத்தில் நிரம்பியது. ஆனாலும் வெற்றுப் பாத்திரமாகவே தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய தலையிலிருந்து ஒரு முடியைப் பிடித்து இழுத்தாள் லிக்திமா. பொறிப்பொறியாக வண்ண நெருப்புத் துகள்கள் தெறித்தன. பிடுங்கப்பட்ட முடி நெருப்பு இழையாக ஜொலித்தது. அதை பாத்திரத்தில் போட்டாள் லிக்திமா. விண்டாவைப் பார்த்து, "விண்டா, வழி-வளியை பாத்திரத்தில் விடுக" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹம்ம்ம்ம்ம்ம்மென்று மூச்சுக்காற்றை பாத்திரத்தில் விட்டான் விண்டா. நீரும் அதில் ஜொலிக்கும் இழையும் பாத்திரத்தின் சுழற்சிக்கு எதிர்த்திசையில் சுழன்றன. பாத்திரத்திலிருந்து ஒரு மெல்லிய நீர்த்திரை கிளம்பி விரிந்தது. அதில் பலப்பல அண்டங்கள் வரைபடமாகத் தெரிந்தன. லிக்திமா இட்ட நெருப்பு இழை ஒவ்வொரு அண்டமாக அதன் மீது நகண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SALylTo-FnI/AAAAAAAACY8/7Xkdlu4Tafk/s1600-h/magic_pot.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SALylTo-FnI/AAAAAAAACY8/7Xkdlu4Tafk/s320/magic_pot.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5188976443425429106" /&gt;&lt;/a&gt;"மூவரும் நன்றாகக் கேளுங்கள். இந்த இழையானது உலகம் முழுவதும் உள்ள அண்டங்களைத் தேடும். முத்தில் என்னுடைய ஆற்றல் இருப்பதால் அது எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடும். ஆனால் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சற்று நாளாகும். கண்டுபிடித்த உடன் அந்த அண்டமும் அதிலுள்ள கிரகமும் இந்தத் திரையில் ஒளிரும். பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்கலாம்."&lt;br /&gt;&lt;br /&gt;லிக்திமா சொல்லி நாட்கள் வாரங்களாயின..வாரங்கள் மாதங்கள் ஆன ஒரு சமயத்தில் இழை ஒரு கிரகத்தைத் தொட்டு ஒளிர்ந்தது. அது பூமி. அங்கு அனுப்புவதற்கு லிக்திமா தேர்ந்தெடுத்தாள் கஜனை. அவனோடு ஒரு சிறிய மாயப்பெட்டியையும் மாயக்கோலையும் கொடுத்தனுப்பினாள். (இந்தப் பெட்டிதான் கதிரவனுக்கு முதலில் கிடைத்தது. மாயக்கோல் சித்திரையிடம் கிடைத்தது).&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-6797678883158372624?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/6797678883158372624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=6797678883158372624' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6797678883158372624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/6797678883158372624'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/04/9.html' title='தங்க மரம் - 9'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/SALylTo-FnI/AAAAAAAACY8/7Xkdlu4Tafk/s72-c/magic_pot.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-8783068830983619440</id><published>2008-03-25T09:40:00.000-07:00</published><updated>2008-03-25T10:00:34.473-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='mellisai mannar'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='m.s.viswanathan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மெல்லிசை மன்னர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சுருளிராஜன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Churulirajan'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='churuli'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.எஸ்.விஸ்வநாதன்'/><title type='text'>பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு</title><content type='html'>சுருளிராஜன் நகைச்சுவை 70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் மிகவும் பிரபலம். அப்பொழுது இரண்டு திரைப்படங்களில் வந்த இரண்டு பாடல்கள் மிகவும் பிரபலம். ஒன்று "உப்புமா கிண்டி வையடி" என்ற பாடல். இதில் மலேசியா வாசுதேவன் சுருளிக்கும் வசந்தா சச்சுவிற்கும் பாடியிருப்பார்கள். நடுவில் சுருளியும் சச்சுவும் பேசியிருப்பார்கள். மெல்லிசை மன்னர் இசை. படத்தின் பெயரும் தெரியவில்லை. பாடலும் கிடைக்கவில்லை. கிடைத்தால் கொடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்னொரு பாடலின் வீடியோவே கிடைத்து விட்டது. ஹிட்லர் உமாநாத் படத்தில் இடம் பெற்ற இந்த வில்லுப்பாட்டுதான். இதிலும் சுருளிக்கு மலேசியா வாசுதேவனே பாடியிருக்கிறார். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை. மிகவும் அருமையான நகைச்சுவை வில்லுப்பாட்டு. கேட்டு ரசியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="355"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/AG0oQSU5M9E&amp;hl=en"&gt;&lt;/param&gt;&lt;param name="wmode" value="transparent"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/AG0oQSU5M9E&amp;hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-8783068830983619440?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/8783068830983619440/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=8783068830983619440' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8783068830983619440'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/8783068830983619440'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/03/blog-post.html' title='பூப்பறிச்சு மாலை கட்டி - சுருளி வில்லுப்பாட்டு'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-3732907530385532717</id><published>2008-03-03T10:10:00.000-08:00</published><updated>2008-12-10T19:45:50.377-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 8</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோரின் சுடர்மகளான லிக்திமாவிற்கு ஆதி முத்தைப் பரிசளித்தது அவளது கணவன் சாண்டாவிற்குப் பொறாமையை உண்டாக்கியது. எப்படியாவது முத்தைக் கொள்ள வேண்டும் என்று விரும்பினான் அவன். அப்பொழுது...&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;பாகம் - 1&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/2.html"&gt;பாகம் - 2&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/3.html"&gt;பாகம் - 3&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/4.html"&gt;பாகம் - 4&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/5.html"&gt;பாகம் - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/6.html"&gt;பாகம் - 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/7.html"&gt;பாகம் - 7&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 8&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பளபளக்கும் முத்தின் மேல் சாண்டாவிற்கு ஆசை கூடிக்கொண்டே போனது. இப்படியெல்லாம் ஆசை உண்டாவது சாண்டாவிற்கும் புதிது. தானுண்டு தன் வேலையுண்டு குடும்பம் உண்டு என்று இருந்தான். ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே வேலை என்று வந்து அதில் ஒருவருக்கு மட்டும் உயர்வு என்று எண்ணம் தோன்றுமானால் குழப்பம்தான் உண்டாகும். அதிலும் கணவனை விட மனைவி உயர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பகலில் ஓளிர்ந்தும் இரவில் அடர்ந்தும் இருக்கும் முத்து அவன் கண்களிலேயே இருந்தது. அதை எப்படி அடைவது என்று மட்டுமே அவன் யோசித்தான். தன்னுடைய கோபுரத்திற்குப் போகாமல் நேராக மெரிமாவைப் பார்க்கச் சென்றான். விண்டாவும் அங்குதான் இருந்தான் அப்பொழுது. அவர்களிடம் தன்னுடைய பஞ்சாயத்தைத் தொடங்கினான். நால்வரில் முதல்வன் அவன் என்பதால் அவனே முத்தை வைத்திருக்க உரியவன் என்று பேசி... அவர்கள் இருவரையும் லிக்திமாவிடம் சமாதானம் பேசி முத்தை வாங்கி வர அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;முத்தை வாங்கி சாண்டாவிடம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ விருப்பமோ இல்லாவிட்டாலும் குழப்பம் வளர்ந்து கொண்டே போகிறதே என்ற எண்ணத்தில் லிக்திமாவிடம் பேசச் சென்றார்கள். என்ன இருந்தாலும் நீர்மகள் அல்லவா மெரிமா. குழப்பம் என்றதும் உருகித்தான் போனாள். விண்டாதான் அவளைச் சமாதானப்படுத்தி லிக்திமாவிடம் தள்ளிக் கொண்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைப் பார்க்க வந்த மெரிமாவிற்கும் விண்டாவிற்கும் பானிகா குடிக்கக் கொடுத்து வரவேற்றாள். வந்தவர்கள் குழந்தை தனிமாவிற்கு பரிசுகள் கொடுத்தார்கள். வேலைப்பாடமைந்த ஒரு கண்டாடிப் புட்டியில் தன்னுடைய நீராதாரத்திலிருந்து எடுத்து வந்த தூநீரைக் கொடுத்தாள் மெரிமா. தங்கப் பெட்டி ஒன்றில் வளியை அடைத்துக் கொடுத்தான் விண்டா. இந்தப் பரிசுகளை யாருக்கும் இவர்கள் கொடுப்பதில்லை. அபூர்வப் பரிசுகளைப் பெறும் முதல் குழந்தை தனிமாதான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு என்ன சொல்வதென்று தெரியாமல் மெரிமா முசுமுசுவென்று அழுதுகொண்டிருந்ததால் விண்டாதான் முதலில் பேச்சைத் தொடங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"லிக்திமா, நீ சுடர்மகள். ஆற்றலரசி. குழப்பம் இவ்வளவு பெரிதாக விட்டிருக்கலாமா?"&lt;br /&gt;&lt;br /&gt;மெல்லச் சிரித்தாள் லிக்திமா. "விண்டா...குழப்பம் என்று நீ சொல்வது என்ன? முத்து என்னிடம் இருப்பதுதானே. சாண்டா கேட்டும் நான் கொடுக்காமல் இருப்பதுதானே. உன்னுடைய உள்ளங்கைகள் இரண்டிலும் மரகதங்கள் பதிந்திருக்கின்றனவே...அவற்றை மெரிமா கேட்டால் கொடுப்பாயா? அல்லது மெரிமாவின் நாவை அலங்கரிக்கும் நீலக்கல்லை நீ கேட்டால் மெரிமா தருவாளா?"&lt;br /&gt;&lt;br /&gt;சுடர்மகள் இப்படிக் கேட்டதும் மெரிமாவின் விசும்பல் கூடியது. தென்றலாக அவளை அணைத்துக் கொண்டு விண்டா பேசினான். "புரிகிறது லிக்திமா. ஆனால் ஆளுக்கொரு கல் இருக்க உனக்கு அதிகப்படியாக ஒரு முத்து கிடைத்திருபப்துதான் சாண்டாவிற்கு உறுத்தலாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கொடுப்பதாக நீயும் இல்லை. விடுவதாக அவனும் இல்லை. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுதான் என்ன?நால்வரில் முதல்வர் அவர்."&lt;br /&gt;&lt;br /&gt;"விண்டா.. நால்வர் நாம். அதில் முதல்வர் இரண்டாமவர் என்ற பேதம் ஏது? நால்வரில் ஒருவர் கடமை பிழைத்தாலும் அனைவருக்கும் கேடுதானே. நீயும் மெரிமாவும் இல்லாவிட்டால்... .காற்றும் நீருமில்லாத இந்த நிலம் மட்டும் இருந்து என்ன பயன்? நீங்கள் அனைவரும் இல்லாமல் வெறும் ஆற்றலை வைத்துக் கொண்டு நான் மட்டும் என்ன செய்ய முடியும்? நால்வரும் இணைந்து இயைந்து பணியாற்றுவதாலே ஆலோர் செழித்திருக்கிறது. அப்படியானால் நாம் அனைவரும் சமம். அதைக் காட்டத்தானோ என்னவோ ஆதி நான்கு கோபுரங்களையும் ஒரே அளவில் அமைத்து நடுவில் இருக்கும் அரச கோபுரத்தை மட்டும் பெரிதாக அமைத்திருக்கிறார்."&lt;br /&gt;&lt;br /&gt;கழுத்தில் இருந்த முத்துக் கோர்த்த சங்கிலியைக் கழற்றி உள்ளங்கையில் வைத்துக் காட்டினாள். "பார் விண்டா..இந்த முத்தை வைத்துக் கொண்டுதான் என்னுடைய ஒளியையும் ஆற்றலையும் நான் கட்டுப்படுத்துகிறேன். முத்து கிடைப்பதற்கு முன்பும் செய்து கொண்டுதான் இருந்தேன். ஆனால் முத்து வேலையை எளிமையாக்குகிறது. இதென்ன அழகு பொருளா? அப்படியானால் கொடுத்திருப்பேனே!"&lt;br /&gt;&lt;br /&gt;விண்டாவும் யோசனையில் இருந்தான். லிக்திமா முத்தைக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிந்து விட்டது. அதே நேரத்தில் சாண்டாவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. எதற்கும் சாண்டாவிடம் ஒருமுறை பேசுவதென்றும்... அது உதவாவிட்டால் அடுத்து ஆதிதான் மீதியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் விண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;எதையோ சொல்வதற்கு வாயைத் திறந்தான் விண்டா. ஆனால் ஏதோ ஒரு அதிர்வினால் தொடர்ந்து பேச முடியவில்லை. முதலில் கால்கள் நடுங்குவதாக அனைவரும் உணர்ந்தார்கள். ஆனால் அது கூடிக்கொண்டே போனது. லிக்திமாவும் விண்டாவும் ஓரளவு சுதாரித்துக் கொண்டாலும் தளும்பினாள் மெரிமா. நீர்மகள் அல்லவா. &lt;br /&gt;&lt;br /&gt;படக்கென்று மெரிமாவின் காலுக்கடியில் நிலம் பிளந்தது. நீரென்றால் பள்ளத்தில் பாய்வதுதானே. ஆவென இரைச்சலோடு பள்ளத்தில் வீழ்ந்தாள். மளுக்கென்று வெள்ளம் பெருக்கெடுத்து அறையெங்கும் தெறித்தது. லிக்திமாவில் நீர் பட்டதும் சுர்ரென்று கொதித்து ஆவியானது. அந்த நடுக்கத்திலும் நடந்ததைப் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்ட விண்டா சூறாவளியானான். விர்ரென்று சுழன்று பள்ளத்தில் பாய்ந்து மெரிமாவை வெளியே இழுத்தான். ஒரு அறைக்குள்ளேயே நிலநடுக்கம்...வெள்ளம்..சூறாவளி...ஒரே களேபரம். தொடர் தடுமாற்றத்தில் கையிலிருந்த முத்தைத் தவறவிட்டாள் லிக்திமா.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சங்கிலிக்காகவே காத்திருந்தது போலத் தரை திறந்தது. திறந்த பிளவில் முத்துக் கோர்த்த சங்கிலி விழவும் மீண்டும் தரை மூடவும் சரியாக இருந்தது. நொடிப்பொழுது கூட ஆகியிருக்குமா என்பதே ஐயம். அனைத்தும் பட்டென்று நடந்து முடிந்து. முத்துச் சங்கிலியைத் தொலைத்த அதிர்ச்சியில் வெளுத்து ஒளிர்ந்தாள் லிக்திமா. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R8xBV1EXnWI/AAAAAAAACW8/lQ8LWbQM0tw/s1600-h/pearl_falling.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R8xBV1EXnWI/AAAAAAAACW8/lQ8LWbQM0tw/s320/pearl_falling.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5173581915220319586" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அந்நேரத்தில் விண்டாவும் மெரிமாவைப் பற்றியிழுத்துக் காப்பாற்றினான். முத்து விழுந்ததையோ தரைக்குள் மறைந்ததையோ அவன் கவனிக்கவேயில்லை. மெரிமாவோ தொப்பலாக நனைந்து அலைபாய்ந்து கொண்டிருந்தாள். அவளைச் சிதறிவிடாமல் காற்றால் அணைத்துத் தேற்றினான் விண்டா. தன்னுடைய கோபுரத்திற்கு வந்தவர்களுக்கு இப்படியாகி விட்டதே என்று வருந்துவதா...இல்லை முத்தைத் தொலைத்து விட்டோமே என்று பதறுவதா என்று தெரியாமல் திகைத்தாள் சுடர்மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் காரணம் யார் என்பதை ஊகிப்பதில் கதையைப் படிப்பவர்களுக்குச் சிரமம் இருக்காது என்றே நினைக்கிறேன். மண்ணின் மகனான சாண்டாதான் இப்படிச் செய்தது. முத்து அவன் கைக்குக் கிடைத்து விட்டது. ஆனால் இரண்டு குற்றங்களைச் செய்துவிட்டான் அவன். ஒன்று... லிக்திமாவிற்கு ஆதி கொடுத்த பரிசைத் திருடியது. இரண்டு...தெய்வங்கள் நால்வரில் ஒருவரைத் தாக்கியது. தெய்வங்கள் நான்கும் ஒருவருக்கொருவர் துணை நின்று ஆலோரைக் காக்க வேண்டும் என்பது ஆதி இட்ட கட்டளை. அதை மீறித் தாக்குகின்றவர்கள் ஆதியைத் தாக்குகின்றவர்களாவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இரண்டு குற்றங்களையும் செய்து விட்டு ஆலோரில் இருக்க சாண்டா விரும்பவில்லை. ஆதிக்கு எட்டாத இடமென்று அவன் தேர்ந்தெடுத்து பூமியை. நிலத்தைக் காக்கும் கடவுளாகிய தான் இல்லாவிட்டால் ஆலோர் வீழ்ந்து விடும். அப்படி வீழாமல் இருக்க வேண்டுமெனில் தன்னுடைய காலில்தான் வந்து விழுவார்கள் என்ற மமதையோடு பூமிக்குச் சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்..&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-3732907530385532717?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/3732907530385532717/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=3732907530385532717' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/3732907530385532717'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/3732907530385532717'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/03/8.html' title='தங்க மரம் - 8'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R8xBV1EXnWI/AAAAAAAACW8/lQ8LWbQM0tw/s72-c/pearl_falling.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-353069643905213436</id><published>2008-02-25T10:14:00.000-08:00</published><updated>2008-02-25T10:19:19.157-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>தங்க மரம் - 7</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனும் சித்திரையும் ஆலமரத்தின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு பெட்டியையும் செங்கோலையும் சேர்த்து வைத்து உரசினார்கள். அப்பொழுது...&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;பாகம் - 1&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/2.html"&gt;பாகம் - 2&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/3.html"&gt;பாகம் - 3&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/4.html"&gt;பாகம் - 4&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/5.html"&gt;பாகம் - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/6.html"&gt;பாகம் - 6&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 7&lt;br /&gt;&lt;br /&gt;கிணிகிணியென்ற மணியோசையும் துண்டு துண்டாக வந்து விழுந்த சொற்களும் இருவரையும் குழப்பியது. உரசிக்கொண்டிருக்கும் பொழுதே பெட்டியும் கோலும் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டன. அப்படி ஒட்டிக்கொண்டதும் பளீர் என்று ஒளிக்கீற்று செங்கோலில் இருந்து புறப்பட்டது. அது கண்ணுக்குத் தெரியாத வட்டவடிமான மாயத்திரையில் பட்டு காட்சிகள் தெரிந்தன. வியப்பின் உச்சியில் இருவரும் காட்சிகளைக் காணத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;காட்சியில் முதலில் ஆலோர் வந்தது. அந்தப் பின்னணியில் அழகிய பெண்ணின் முகம் தெரிந்தது. அந்தப் பெண்ணைப் பார்க்கையில் பொலிவும் அறிவும் அருளும் அன்பும் நிரம்பிய தெய்வீகம் தெளிந்தது. ஒளிவீசும் செந்நிறக் கண்களும் சுற்றியும் ஜொலிக்கும் பொன்னிற ஒளியும் பார்த்த பொழுதிலேயே கதிரவனின் உள்ளத்திலும் சித்திரையின் உள்ளத்திலும் ஒரு மதிப்பை எழுப்பின. அந்த அருளுடைப் பெண்ணே பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"வணக்கம். நான் லிக்திமா. ஆலோர் கிரகத்து ஒளியரசி. சுடர்மகள் என்றும் என்னைச் சிறப்பித்து அழைப்பார்கள். உங்களுக்கு இந்தப் ஒளிப்படக் கருவியை அனுப்பியிருப்பது ஒரு உதவியை வேண்டித்தான். என்ன உதவி என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆலோரின் தோற்றத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன். பிறகு உதவியைச் சொல்கின்றேன்.''&lt;br /&gt;&lt;br /&gt;இப்பொழுது காட்சி மாறியது. ஆலோரின் சுவற்றில் இருக்கும் ஒரு கோபுரத்தின் உள்ளிருந்த அறை தோன்றியது. அந்த அறையின் ஒரு தங்கத் தொட்டிலில் சின்னஞ்சிறு குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. ஒளியின் பிறப்பிடம் போலச் சுடர் விட்டுக்கொண்டிருந்த லிக்திமா உலகின் எந்த இசைக்கருவியும் இசைக்கலைஞரும் தோற்றுப் போகும் இனிமையுடன் தாலாட்டுப் பாடிக் கொண்டிருந்தார். அவருடைய மாணிக்கக் கண்களும் கழுத்துச் சங்கியில் தொங்கிக் கொண்டிருந்த முத்தும் ஆனந்த ஜோதியை வீசிக் கொண்டிருந்தன. சட்டென்று உள்ளே நுழைந்தார் சாண்டா. பொன்னாடை இடுப்பில் மினுக்க வைரம் நெஞ்சில் மினுக்க நுழைந்தார். கதையைப் படிக்கின்றவர்களுக்கு அவர்தான் ஊழிவாயன் என்று அழைக்கப்பட்டவர் என்பது இப்பொழுதே புரிந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"லிக்திமா........ ஒரு வாரமாக நானும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அந்த முத்தைக் கொடுப்பதில் உனக்கென்ன குறைந்து விடப் போகின்றது? நான் யார் என்பது உனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"கணவனே..நீ யார்? சாண்டா. மண்ணின் மகன் என்று ஆலோர் போற்றும் மேலோன். ஆதியில் ஒன்றுமில்லாமல் இருந்தது. அந்த ஒன்றுமில்லாததுதான் எல்லாவற்றையும் தன்னுள் வைத்துக் கொண்டிருந்தது. அந்த ஆதியின் சோதியால்தான் எல்லாம் உண்டானது.  அதாவது ஆதியே அனைத்துமாய் ஆனது. அந்த எல்லாவற்றிலும் ஆலோர் கிரகமும் ஒன்று. உலகின் மற்ற கிரகங்களைப் போலில்லாமல் தட்டைக் கிரகமாக ஆலோரை உண்டாக்கினார் ஆதி. &lt;br /&gt;&lt;br /&gt;ஆலோரைப் பார்த்துக் கொள்ள தன்னிலிருந்தே நான்கு ஆற்றல்களை உண்டாக்கி அற்புத சக்திகளையும் கொடுத்தார். முதலில் மண்ணைப் பார்த்துக்கொள்ள உன்னை உருவாக்கினார். சாண்டா என்று பெயரும் இட்டு...உறுதியில் சிறந்து மக்களையும் மற்ற உயிர்களையும் தாங்கும் வலிமையைக் குறிக்க உனது நெஞ்சில் வைரம் பதித்தார். அடுத்து என்னை உண்டாக்கினார். ஒளியும் ஆற்றலும் என்னிடம் இருந்து நீங்கள் பொறுப்பேற்றுள்ள மண்ணின் உயிர்களுக்கு உண்டாகட்டும் என்று பணியும் கொடுத்தார். என்னைச் சிறப்பிக்க செவ்வொளி பரப்பும் மாணிக்கக் கண்களைக் கொடுத்தார். எனது ஒளியைக் கூட்டிக் குறைத்து இரவையும் பகலையும் உண்டாக்கினார். அதே போல நீருக்கு மெரிமாவையும் காற்றுக்கு விண்டாவையும் உருவாக்கினார். மெரிமாவிற்கு நீலக் கல்லை நாவில் பதித்தார். விண்டாவிற்கு மரகதத்தைக் இரண்டு உள்ளங்கைகளிலும் பதித்தார். நீரின்றி அமையாது உலகு என்பதால் மெரிமாவிற்கு நீர்மகள் என்ற சிறப்புப் பெயர். காற்றின்றி எதுவும் வாழாது என்பதால் விண்டாவிற்கு தென்றலன் என்ற சிறப்புப் பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோர் சுற்றுச் சுவற்றில் நான்கு கோபுரங்கள் அமைத்து நம் நால்வருக்கும் கொடுத்தார். அங்கிருந்து நாம் ஆலோரைக் காத்து வருகையில் உனக்கு என்னையும் விண்டாவிற்கு மெரிமாவையும் மணம் செய்து வைத்து வாழ்வளித்தார். அன்றிலிருந்து நாம் ஆலோரைக் காத்துப் பராமரித்துக் கொண்டு வருகின்றோம். சரிதானே!"&lt;br /&gt;&lt;br /&gt;"கேட்ட கேள்வி என்ன? சொல்லும் விடை என்ன? நான் யார் என்று கேட்டால் ஆலோரின் வரலாற்றையும் ஆதியின் பெயரையும் சொல்லி நானும் நீயும் ஒன்று என்று கதையளக்கின்றாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"குடும்பம் என்று வந்தால் கணவனும் மனைவியும் ஒன்றுதானே? இதில் பெரியோர் சிறியோர் என்ற பேதம் ஏது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆகா...அழகான பேச்சு...ஆனால் அது மறக்கடிப்பது உன்னுடைய ஆணவத்தை. சுடர்மகள் அல்லவா...அதனால் என்னுடைய சிறப்பை இருளில் தள்ளவும் உன்னுடைய பெருமையை வெளிச்சம் போட்டுக் காட்டவும் தெரிந்திருக்கிறது."&lt;br /&gt;&lt;br /&gt;"சாண்டா! என்ன பேசுகின்றாய்? எனக்கு ஆணவமா? உன்னை விட என் சிறப்பை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றேனா? சுடர்மகளாக என்னுடைய கடமையையும் மனைவியாக என்னுடைய வாழ்க்கையையும் ஒழுங்காக நடத்தியதால்தானே இரண்டு பரிசுகள் கிடைத்திருக்கின்றன."&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த இரண்டு பரிசுகளை நீ பெற்றதால் என்னிலும் பெரியவள் நீ என்ன மமதையில் பேசுகின்றாய். கணவன் மனைவிக்குள் பெரியவர் இல்லையென்று சொல்லி விட்டு உன்னை உயர்த்திக் காட்டும் அந்த முத்தை என்னிடம் கொடுக்க மறுக்கிறாய். அதன் மூலம் நால்வரில் பெரியவள் நீ என்று காட்டிக் கொள்ளத் துடிக்கிறாய். நீ ஒரு புகழ் விரும்பி."&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்டிக் கொண்டிருந்த தொட்டிலை நிறுத்தி விட்டு எழுந்தார் லிக்திமா. அவருடைய பேரொளி சற்றுக் குன்றியது போலத் தோன்றியது. ஆனாலும் மிடுக்கிற்குக் குறைவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;"நானா புகழ் விரும்பி? சாண்டா..... இந்த முத்து ஆதி பரிசளித்தது. நமது மகள் தனிமா பிறந்த பொழுது கிடைத்த பரிசு. பகலில் நான் ஒளிரும் பொழுது இந்த முத்து வெள்ளொளி வீசும். மாலை வரவர நீலமாகி இரவிலோ அடர்ந்து ஒளிவீசும். ஆற்றலை நான் வெளிப்படுத்துகையில் அதைச் சீர்மை செய்யவும் உதவுகிறது இந்த முத்து. அதைக் கேட்டால் எப்படித் தருவது? உனது நெஞ்சிலே பதித்திருக்கும் பெரிய வைரத்தை யாரேனும் கேட்டால் தர முடியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;லிக்திமாவின் பேச்சு சாண்டாவிற்கு ஆத்திரத்தையே கூட்டியது. "நான்கு தெய்வங்களும் ஆளுக்கு ஒன்று என்று கற்களை வைத்திருக்கையில்...உனக்கு மட்டும் ஏன் இரண்டு? நமக்குள்ளே பாகுபாடு காட்டத்தானே?"&lt;br /&gt;&lt;br /&gt;"சாண்டா... கொடுத்தது ஆதி. நாளையே உனக்கும் ஒரு பரிசு கிடைக்கலாம். அப்பொழுது மற்றவர்கள் பொறாமைப் பட வேண்டுமா? பெரும் பொறுப்பில் இருப்பவர்கள் நாம். வெறும் வெறுப்பில் இருந்தால் சரியாகுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"லிக்திமா. பேச்சைக் குறை. உனக்கான ஒன்று என்னிடம் இருந்தால் என்ன? என்னுடைய கழுத்தை இந்த முத்து அலங்கரித்தால் என்ன வந்துவிடப் போகிறது?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு மனைவியாக நான் வைத்திருக்கும் பொருளை நீ பயன்படுத்து தவறில்லை. ஆனால் இது கடமையில் வந்தது. அதை எப்படிக் கொடுக்க முடியும்?"&lt;br /&gt;&lt;br /&gt;சாண்டாவின் ஆத்திரம் வைரத்தில் தெரிந்தது. செக்கச்செவேல் என்று நெருப்பாய் ஜொலித்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் அந்த இடத்தில் இருந்து விலகி தன்னுடைய கோபுரத்திற்குச் சென்று விட்டான். மெரிமாவும் விண்டாவும் நிகழ்ச்சிகளைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். தெய்வங்களுக்குள்ளே சண்டை எழுந்தால் ஆலோரை யார் காப்பாற்றுவது. ஆதியே வந்துதான் இந்தப் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். பிரச்சனைக்குள் தலையிடாவிட்டாலும் தொடர்ந்து மெரிமாவும் விண்டாவும் நடப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய கோபுரத்திற்குச் சென்ற சாண்டாவின் உள்ளத்தில் ஒரு திட்டம் உருவாகியிருந்தது. அதைச் செயல்படுத்துவதன் மூலம் ஒரு தவறான எடுத்துக்காட்டாக தான் மாறப்போவது தெரியாமல் திட்டம் தீட்டினான் சாண்டா.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - படம் வரைந்து தரும் கிரண் பணிப்பளுவினால் இந்த வாரம் திட்டமிட்ட படி படம் தரமுடியவில்லை என்றும் அடுத்த வாரம் கண்டிப்பாக செய்து தருவதாகவும் உறுதி கூறியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-353069643905213436?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/353069643905213436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=353069643905213436' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/353069643905213436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/353069643905213436'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/02/7.html' title='தங்க மரம் - 7'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-5306958798607677720</id><published>2008-02-18T13:32:00.000-08:00</published><updated>2008-02-18T22:22:32.823-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008'/><title type='text'>தங்க மரம் - 6</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;இருண்டு கிடக்கும் ஆலோர் கிரகத்தைப் பிழைப்பிக்க தனிமாவாலும் பிடிமாவாலும் மட்டுமே முடியும் என்று அரசி சொன்னதைக் கேட்டுச் செயல் முடிக்க வாக்குறுதி அளித்தாள் தனிமா. பாதி உண்டிருந்த கிரகத்திற்காகப் புறப்பட்டாள் தனிமா.....&lt;br /&gt;&lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;பாகம் - 1&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/2.html"&gt;பாகம் - 2&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/3.html"&gt;பாகம் - 3&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/4.html"&gt;பாகம் - 4&lt;/a&gt;, &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/5.html"&gt;பாகம் - 5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்க மரம் - 6&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோரின் நடுக்கோபுர உச்சியிலிருந்து ஜிவ்வென எழும்பிப் பறந்தார்கள் தனிமாவும் பிடிமாவும். ம்ம். இல்லையில்லை. பிடிமாதான் இறக்கைகளை விரித்துப் பறந்தாள். தனிமா பிடிமாவின் மேல் உட்கார்ந்திருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழுப்பு நிறம்...மரகதத் தந்தம்..இரண்டு அழகிய இறக்கைகள் கொண்ட பெண்யானைதான் பிடிமா. அவள் மீது ஏறித்தான் பறந்து கொண்டிருந்தாள் தனிமா. அதுவும் பூமியை நோக்கி. அவ்வப்பொழுது திசைகாட்டியை எடுத்துப் பறக்கும் வழியைச் சரி பார்த்துக் கொண்டாள். விண்வெளியில் வழி மறந்து விட்டால் தொலைந்து போக வேண்டியதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலாக தன்னுடைய கிரகத்தை விட்டுத் தெரியவே தெரியாத இடத்திற்குப் போகிறாள். அதுவும் போரிடுவதற்கு. எப்படிப் போரிடப் போகின்றோமோ என்ற எண்ணம் அவ்வப்பொழுது தோன்றினாலும் உள்ளத்தில் உறுதி குறையவேயில்லை. அதுவுமில்லாமல் பறக்கும் பொழுது காணும் காட்சிகள் அவளுக்கும் பிடிமாவிற்கும் புதுமகிழ்ச்சியை உண்டாக்கின. பலப்பல சிறிய நட்சத்திரங்கள்..எரிகற்கள்..கிரகங்கள்..தொலைவில் மினுக்கும் தாரகைகள்...என்று நவரத்தினங்களைக் கொட்டி வைத்த சாலையில் செல்வது போல இருந்தது. தேவையான ஆற்றல் இருந்ததால் பறப்பது பிடிமாவிற்கு எளிதாகவே இருந்தது.&lt;br /&gt;அவ்வப்பொழுது ஒளித்தாரகைகளுக்குள் புகுந்து வெளிவருவதும் இருவருக்கும் சுகமாக இருந்தது. அந்தத் தாரகைகளில் இருந்து ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சம் ஏற்றிக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட பாதி தொலைவு கடந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர்தானே பேச்சுத்துணை.&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. பூமியை அடைய இன்னும் ஒன்றரை நாளாவது ஆகும் என்று தெரிகிறது. புறப்படும் பொழுது கட்டிக் கொடுத்த காரிசுகள் நிறைய இருக்கின்றன. ஆளுக்கொன்று கொறிப்போமா?"&lt;br /&gt;&lt;br /&gt;தலையை ஆட்டி மறுத்தாள் பிடிமா. "வேண்டாம் தனிமா. சற்று நேரம் போகட்டும். இப்பொழுது பசியில்லை." பேசிக்கொண்டே வந்த பிடிமா படக்கென்று நின்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் என்று கேட்க நினைத்து வாயைத் திறந்தாள் தனிமா. ஆனால் முடியவில்லை. அவளால் சிறிதும் அசைய முடியவில்லை. பிடிமாவாலும்தான். ஆகையால்தான் படக்கென்று நின்று விட்டாள். ஒரு நொடி இருவருமே திகைத்துப் போனார்கள். இப்பிடி அசையாமல் தொடர்ந்து நின்று விட்டால் ஆற்றல் வீணாகிவிடுமே. பிறகெப்படி பூமிக்குப் பறப்பது?&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் அவர்களுக்கு நேர்ந்தது சற்றுப் புரியத் தொடங்கியது. கண்ணுக்குத் தெரியாத ஒருவிதக் கண்ணாடிக் கயிற்றால் இருவரும் கட்டப்பட்டிருந்தார்கள். மிகமிக மென்மையான அந்தக் கயிற்றின் அழுத்தம் புரியவில்லை. ஆனால் இறுக்கம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பயங்கரம் அவர்களது கண்களுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. ஆம். அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு பெரிய சிலந்தி. பக்கவாட்டில் இருந்து நகர்ந்து அவர்களுக்கு முன்னால் நின்றது. அதன் வலையில்தான் தனிமாவும் பிடிமாவும் சிக்கியிருந்தார்கள். பார்க்கவே அருவெறுப்பாக இருந்த அந்தச் சிலந்தி எச்சில் ஒழுகும் கோரவாயின் கூரிய பற்களைக் காட்டிக் கொண்டு விரைந்து வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கைகால்களை அசைக்க முடியாவிட்டாலும் மனத்தால் எதையும் செய்யும் திறமையுள்ளவர்கள் ஆலோரிகள். மனதால் முறுக்கிக் கண்ணாடிக் கயிறுகளை நெகிழ்த்தினார்கள் தனிமாவும் பிடிமாவும். கயிறு அறுபடுவதைக் கண்டதும் சிலந்து மறுபடியும் கண்ணாடிக்கயிறுகளைக் கக்கியது. இவர்கள் அறுக்க அறுக்க சிலந்தியும் கயிறுகளைக் கக்கிக் கொண்டேயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே சென்று கொண்டிருந்தால் வேலைக்காகது என்பதைத் தனிமா புரிந்து கொண்டாள். மனதிற்குள்ளேயே பிடிமாவுக்குச் செய்தி அனுப்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"பிடிமா.. இந்தச் சிலந்தியை நாம் மனதால் தாக்குவோம். நீ அதன் எட்டு கால்களையும் ஒவ்வொன்றாய் மனதால் உடை. நான் அந்தக் கண்ணாடி கக்கும் வாயைக் கிழிக்கிறேன். இல்லையென்றால் தொடர்ந்து நாம் கட்டப்பட்டுக்கொண்டேயிருப்போம்."&lt;br /&gt;&lt;br /&gt;பிடிமாவுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. மனதால் சிலந்தியின் ஒரு காலைத் தும்பிக்கையால் பிடித்து இழுப்பது போல இழுத்தது. யாருமே இல்லாமல் தன்னுடைய கால் இழுபடுவதை உணர்ந்த சிலந்தி ஆத்திரத்தோடு திரும்பியது. அதே நேரத்தில் சரியாக அதன் வாயில் குத்தினாள் தனிமா.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய உணவு/எதிரிகள் கண் முன்னே கட்டுப்பட்டுக் கிடக்க தன்னைத் தாக்குவது யாரென்று தெரியாமல் தடுமாறியது சிலந்தி. காய் காய் என்று கத்திக் கொண்டு தன் காலை யாரோ பிடித்திருக்கிறார்கள் என்று நினைத்து....தன் காலைத் தானே கடித்தது. பிடிமாவும் விடாமல் காலைப் பிடித்து முறுக்க முறுக்க சிலந்தியில் அலறல் கூடியது. ஆனால் தொடர்ந்து அலறவும் விடாமல் தனிமா அதன் தாடையிலேயே குத்தினாள். தாடையும் உடைந்து கிழிந்து எச்சிலும் கண்ணாடியிழைக் கூழும் ஒழுகின. யாரும் இல்லாமல் தானே தாக்கப்பட்டுக் கொள்ளும் காட்சி மிகக்கொடூரமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஒரு காலை உடைத்து விட்ட பிடிமா அடுத்த காலுக்குத் தாவியது. மிகவிரைவிலேயே இரண்டு மூன்று கால்கள் நொறுங்கின. சிலந்தி நேராக நிற்க முடியாமல் லம்பி ஒரு பக்கமாய்ச் சாய்ந்தது. வாய் கிழிந்து போனதால் கண்ணாடிக் கயிறுகளை அதனால் பீய்ச்சியடிக்கவும் முடியவில்லை. வலியும் வேதனையும் தாளாமல் தானே விழுந்து புரண்டது.  அதுதான் சரியான நேரம் என்று தனிமாவும் பிடிமாவும் தங்களைக் கட்டியிருந்த கண்ணாடிக்கயிறுகளை அறுத்துக் கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனதினாலேயே இருவரும் வழிந்திருந்த கண்ணாடியிழைக் கூழால் சிலந்தியை இறுக்கக் கட்டினார்கள். நகரவும் முடியாமல் மூச்சு விடவும் முடியாமல் சிறிது நேரத்திலேயே சிலந்தி விறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சு விட்டபடியே தங்களைச் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள் தனிமாவும் பிடிமாவும். ஆளுக்கு இரண்டு காரிசுகளைக் கடித்துத் தின்றார்கள். களைப்பு சற்று நீங்கியது. அப்படியே சிறுது பானிகாவும் குடித்துக் கொண்டார்கள். நா வறட்சியைப் போக்கியதுடன் சிறிது தெம்பும் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கடத்த விரும்பாமல் உடனே புறப்பட்டார்கள். அப்பொழுதுதான் ஒரு பெரிய உண்மை இருவருக்குமே புரிந்தது. ஆம். இருவரின் ஆற்றலிலும் பெருமளவு சிலந்திச் சண்டையிலேயே வீணாகிப் போனது. மிச்சமிருக்கும் ஆற்றல் அவர்களை பூமியில் கொண்டு சேர்க்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் முன்னேறுவது என்ற முடிவோடு தொடர்ந்தார்கள். விரைந்து செல்ல முடியாத வகைக்கு ஆற்றல் பெருமளவில் குறைந்து வேகம் மட்டுப்பட்டது. வழியில் அங்காங்குள்ள ஒளிப்பொட்டுகளிலிருந்தும் தொலைதூரத் தாரகைகளில் இருந்தும் ஆற்றலைக் கொஞ்சம் பெற்றுக்கொண்டாலும்....அவையெல்லாம் போதவில்லை. ஒருவழியாக இருவரும் குற்றுயிரோடு தங்களை இழுத்துக் கொண்டு பால்வெளி மண்டலத்திற்குச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பால்வெளி மண்டலத்தில் நுழையும் பொழுதுதான் ஆற்றல் முழுவதும் தீர்ந்து மயங்கத் தொடங்கினார்கள். அந்த மயக்கம் தீர வரவேற்றான் கதிரவன். உலகையெல்லாம் தனது ஒளிக்கற்றைகளால் காக்கும் கதிரவனைச் சொல்கிறேன். அந்தக் கதிரவனின் வெள்ளொளியானது தெம்பைக் கொடுத்தாலும் ஏற்கனவே இருந்த ஆற்றலையெல்லாம் வீணடித்து விட்டதால்....இப்பொழுது கிடைக்கும் ஆற்றல் அவர்களை நகர்த்தவும் உயிரோடு வைத்திருக்கவும் மட்டுமே முடிந்தது. பூமியை நெருங்க நெருங்க களைப்புதான் இருவரையும் வாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;சரியாகக் காற்று மண்டலத்திற்குள் நுழைந்ததுமே புவியீர்ப்புவிசை அவர்களைப் பற்றி இழுத்தது. ஆனால் அதைத் எதிர்த்துப் பறக்கும் ஆற்றல் இல்லாமலையால் பிடிமா பிடிமானம் இழந்தது. நிலை குலைந்து கீழே விழுந்தாள் தனிமா. இருவரும் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று தரையை நோக்கி இழுக்கப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு - வழக்கமாக படம் வரைந்து தரும் கிரண் விடுமுறை முடிந்து திரும்பவும் அமெரிக்கா சென்று விட்டதால் அடுத்த வாரத்தில் இருந்து படங்கள் வரும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-5306958798607677720?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/5306958798607677720/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=5306958798607677720' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/5306958798607677720'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/5306958798607677720'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/02/6.html' title='தங்க மரம் - 6'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-1000898517184299301</id><published>2008-02-11T12:00:00.000-08:00</published><updated>2008-02-11T12:14:23.568-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008'/><title type='text'>தங்க மரம் - 5</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;சென்றான்&lt;/a&gt;. &lt;br /&gt;&lt;br /&gt;ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/2.html"&gt;மிரட்டுகிறாள்&lt;/a&gt;. மற்றும் &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/3.html"&gt;பாகம்-3&lt;/a&gt; &lt;a href="http://gragavan.blogspot.com/2008/02/4.html"&gt;பாகம்-4&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 5&lt;br /&gt;&lt;br /&gt;உருளைப் பெண்ணின் மிரட்டலைக் கேட்டு ஆத்திரத்தோடு இருந்த ஊழிவாயனின் எரிகின்ற சினத்தில் எண்ணெய் ஊற்றியது தேலி. அது ஊழிவாயனுக்கு ஏதும் கெட்டது நல்லது நடக்குமானால் முன்னால் எச்சரிக்கும் பறவை. காய் காய் என்று கத்தியது. அந்தக் கத்தலைக் கேட்டு தேலியிடன் சென்றால் ஊழிவாயன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஊழிவாயா.... நீ விரைந்து செயல் முடிக்க வேண்டிய வேளை வந்துவிட்டது. நீ பிடித்து வைத்திருக்கும் செங்கோமானின் மனைவி தன்னுடைய மகன் கதிரவனிடம் உன்னை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். அவன் வெற்றி பெறுவானோ! தோல்வி பெறுவானோ! ஆனால் உனக்கு ஒரு எதிரி உண்டாகி விட்டான்."&lt;br /&gt;&lt;br /&gt;ஊழிவாயனின் நெஞ்சிலிருந்த வைரம் செவேலென்று ஒளிர்ந்தது. "தேலி... இப்பொழுது அந்தச் சிறுவன் எங்கிருக்கிறான்? உடனே சொல்...நான் சென்று கொன்று வருகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;தேலி கிக்கித்தது. "ஹா ஹா எந்த இடத்தில் இருக்கிறான் என்று சொல்ல முடியாது. அது என்னுடைய ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இன்று அவனுடைய பிறந்தநாள். ஆகையால் இல்லத்தில் இருப்பான் என்றுதான் தோன்றுகிறது."&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நொடியிலேயே அந்த இடத்திலிருந்து மறைந்தான் ஊழிவாயன். மிக விரைவில் கதிரவனின் இல்லத்தில் தோன்றினான். "கதிரவா....வா இங்கே?"&lt;br /&gt;&lt;br /&gt;ஆரவாரத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் கேட்டு வெளியே வந்தார் அமுதம். வந்திருப்பவன் கொடியவன் என்று மட்டும் உடனே புரிந்தது. "யார் நீர்? என்ன வேண்டி உள்ளே வந்தீர்?" சற்று அதட்டலோடுதான் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ நீதான் அமுதமா? கதிரவனின் தாய்தானே? என்னைக் கண்டு அச்சப்படாமல் என்னையே அதட்டத் துணிந்த உம்மைச் சும்மா விடமாட்டேன். மந்திரங்களைக் கற்றவன் நான். அதைப் புரிக." உறுமினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"தமிழைக் கற்றவர்கள் நாங்கள். தமிழ்வேளை உற்றவர்கள் நாங்கள். உன்னுடைய மந்திரங்களும் தந்திரங்களும் எங்கள் உண்மைச் சொல்லுக்கும் செயலுக்கும் முன்னால் அற்றுப் போகும். அதைப் புரிக முதலில்." மறமும் அறமும் பொலிந்து சினந்தது அமுதத்தின் முகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஊழிவாயனின் சீற்றத்தை ஏற்றத்தில் வைத்தது. "பெண்ணே... உனது கணவனைப் பிடித்து வைத்திருக்கிறேன் இத்தனை ஆண்டுகளாக. அப்படியிருக்கையில் நீ என்ன செய்து விட முடியும்? உன்னுடைய மகன் என்ன செய்து விட முடியும்? உங்களைப் பொடியாக்கி மண்ணில் முளைக்கும் செடியாக்க நொடி கூடப் பிடிக்காது."&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய கணவனைப் பிடித்து வைத்திருப்பவன் வந்திருப்பவன் என்ற எண்ணம் அவருடைய உள்ளத்திலிருந்த அன்பையெல்லாம் கிளறி ஆத்திரமாக்கி ஊழிவாயன் மேல் பாய்ச்சியது. "கொடியவனே.....யார் பொடியாவார்? குற்றத்தைக் கொற்றம் என்று நினைக்கும் உன் போன்றவரே பொடியாவர். என்னவரை நீ பிடித்து வைத்திருக்கலாம்...ஆனால் நீ மாண்டு அவரும் மீண்டு வருவது உறுதி. இது வேலைப் பிடித்தவனின் காலைப் பிடித்த என் ஆணை. இப்பொழுதே அவரை விடுவித்துப் பிழைத்துப் போ. இல்லையேல் அழிவு உனது. பொலிவு எமது."&lt;br /&gt;&lt;br /&gt;"மடப் பெண்ணே...பேச்சைக் குறை. உன் தமிழறிவை பள்ளியில் காட்டு. இந்தக் காட்டுக்கள்ளியிடம் காட்டாதே. இது பார் ஏவி விடுகிறேன் நெருப்பை."&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்து விட்டார் அமுதம். "நெருப்பா? ஒவ்வொரு நாளும் எங்கள் அடுக்களையில் அதில்தான் வேகிறது பருப்பு. நீ ஏவி விடு. அதைச் சாம்பலாக்கி நான் காற்றில் தூவி விடுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;கையிலிருந்த மந்திரத்தண்டை எடுத்துத் திருகினான் ஊழிவாயன். தண்டிலிருந்து கபகபவென நெருப்புக் கொப்புளங்கள் பொங்கிப் பரவின. அந்தக் கொப்புளங்கள் அமுதத்தைச் சுற்றி வளைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"உணவு என்பது உயிருக்கு அடிப்படை. அதை உண்டாக்கத் தேவை தீயெனும் படை. பசிப்போரை எதிர்க்கும் நெருப்பே நீ இப்போர் மறந்து சமைப்போர் அடுப்பில் புகுக. உணவு உண்டாக்குக. மீந்த சாம்பல் எங்கள் வழிபாட்டுக் கொப்பரையில் திருநீறாகுக." அமுதம் சொல்லச் சொல்ல நெருப்புக் கொப்புளங்கள் அவரிடமிருந்து விலகி அடுப்பறைக்குள் சென்று அடுப்புக்குள் புகுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் அறியாத பெண் தான் ஏவிய நெருப்பை அணைத்ததை ஊழிவாயனால் ஏற்க முடியவில்லை. உடனே ஒரு மாயப்பேயை உருவாக்கி ஏவினான். அந்தப் பேயும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு முண்டக்கண்டை விழித்துக் கொண்டும்....பார்க்கச் சகிக்காத உருவத்தோடு சிவந்த நாக்கை நீட்டி மிரட்டியது. கூ கூ ஹிஹ் ஹிஹ் என்று ஓலமிட்டது. பேய்க்கு மிரளாதார் உண்டோ. ஆனால் அமுதம் மிரளவில்லை. "சீச்சீ...பேயே...போயேன். ஆண்டவனையே அச்சத்தால் வணங்காமல் அன்பால் வணங்குகின்றவர்கள் நாங்கள். உன்னைக் கண்டு அஞ்சினால்....அந்த இறைவனுக்குத்தான் இழுக்கு. மறைந்து தொலைந்து போ..." அச்சம் மிச்சமிருக்கும் வரைதான் எந்தக் கொடுமையும் தெரியும். பயம் மறைந்ததும் கொடூரத்தின் சுயம் மறைந்து விடும். அதுதான் அங்கும் நடந்தது. மாயப்பேய் மாயமாய்ப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய முந்தைய சாதனைகள் அத்தனையும் அமுதம் அழித்து அவமானப்படுத்திவிட்டதாகவே கருதினான். அதே நேரத்தில் அவரிடம் இருக்கும் சக்தி என்னதென்றும் அதன் அளவு எவ்வளவென்றும் கருதிட முடியாமல் தவித்தான். வலிமை தெரியாமல் அடுத்த படையை ஏவுவது அவனுக்குச் சரியானதாகப் படவில்லை. அந்த நொடியில் ஒரு திட்டம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அமுதம் என்ன நடக்கின்றது என்று யோசிக்கும் முன்னமே ஒரு மயக்கக் குளிகையை தரையில் உருட்டினான். அதிலிருந்து மயக்கப்புகை அறையெங்கும் பரவியது. வெட்டுப்பட்ட கொடி போல தரையில் வீழ்ந்தார் அமுதம்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரத்தண்டை மீண்டும் திருகினான். அதிலிருந்து சிறிய குமிழ் வெளிவந்தது. அந்தக் குமிழைப் பார்த்துச் சொன்னான். "கண்ணாடிக்குமிழே...இதோ இங்கே மயங்கிக் கிடக்கும் பெண்ணை சிறைப்படுத்திக் கொண்டு கூம்புமலைக்குச் செல்."&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கட்டளையைப் புரிந்து கொண்ட குமிழ் சிறிது சிறிதாக காற்றடைக்கப்படுவது போலப் பெரிதானது. அப்படியே மிதந்து சென்று அமுதம் மீது அமர்ந்து அப்படியே அவரை தனக்குள் அடைத்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்ம்ம்ம்...கூம்புமலைக்குச் செல்... வெளியிலிருந்து எந்தச் சத்தமும் உள்ளே வரக்கூடாது. உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் வெளியே வரக்கூடாது. இந்தப் பெண் பேசியே கூம்புமலையைச் சிதைத்து விடக்கூடும். ஆகையால் குரல் வெளியே வரவே கூடாது. செல்" உறுமினான் ஊழிவாயன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் குமிழ்..அப்படியே அந்தரத்தில் எழும்பிப் பறந்தது.... சட்டென்று மறைந்தது. ஊழிவாயனும்தான். அந்த பொழுதில்தான் காட்டிற்குள் கதிரவனும் சித்திரையும் ஒரு பெரிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-1000898517184299301?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/1000898517184299301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=1000898517184299301' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/1000898517184299301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/1000898517184299301'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/02/5.html' title='தங்க மரம் - 5'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-4482400395267134802</id><published>2008-02-04T13:36:00.000-08:00</published><updated>2008-12-10T19:45:50.719-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008'/><title type='text'>தங்க மரம் - 4</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் செய்தியைச் சொல்லச் &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;சென்றான்&lt;/a&gt;. &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/2.html"&gt;பாகம்-2&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/3.html"&gt;பாகம்-3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 4&lt;br /&gt;&lt;br /&gt;தாய் கொடுத்த பெட்டியை புது வேட்டியில் கட்டிக் கொண்டு ஓடினான் கதிரவன். எங்கே? அங்கேதான். வழக்கமாக சித்திரையைச் சந்திக்கும் இடத்திற்குத்தான். கதிரவனின் பாட்டனார் உயிர்தொடு செங்கையார் ஒரு மருத்துவர் என்று நாம் அறிவோம். அவரது மருத்துவச்சாலையைக் கோயிலாகவே கட்டியிருந்தார். வாழ்வளிக்கும் வள்ளலாகிய வள்ளி மணாளனுக்குக் கோயில் கட்டி...தீந்தமிழ்க் கடவுளுக்குக் கட்டிய அந்தக் கோயிலேயே மூலிகைத் தோட்டத்தையும் மருத்துவத் துறையும் அமைத்து சிறப்பாற்றி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் அந்தக் கோயிலும் மருத்துவத்துறையும் கதிரவனின் அன்னையின் பொறுப்பில் சிறப்பாக இருக்கின்றன. செங்கையாரிடம் கற்ற மாணாக்கர்கள் அங்கு மருத்துவம் செய்து வந்தால் நாட்டிலுள்ளோருக்கு அது பயனுள்ளதாகவே இருந்தது. கதிரவனும் அங்கு மருத்துவம் கற்றிருந்ததால் அவனும் ஒவ்வொரு பொழுது மருத்துவம் பார்த்தான். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த மருத்துவத்துறையின் மூலிகைத் தோட்டத்தின் வில்வமரம்தான் இவர்கள் இருவருக்கும் விளையாட்டு மரம். அங்கு கதிரவன் சென்ற பொழுது சித்திரை மருத்துவத்துறையில்தான் இருந்தான். மூலிகைத் தோட்டப் பராமரிப்பு அவர்கள் குடும்பத்தின் பொறுப்பு. சித்திரையின் தந்தை இளங்கோவின் காலத்திலிருந்து பொறுப்பாகச் செய்து வருகின்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R6eGLcFWpiI/AAAAAAAACWI/mLjw7CVFA6Q/s1600-h/MuruganTemple.jpg"&gt;&lt;img style="float:right; margin:0 0 10px 10px;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R6eGLcFWpiI/AAAAAAAACWI/mLjw7CVFA6Q/s320/MuruganTemple.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5163243028878894626" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கதிரவனை விடச் சித்திரை ஓராண்டு மூப்பு. வந்த நண்பனைக் கட்டியணைத்துப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னான். உற்ற நண்பர்களின் அணைப்பும் வாழ்த்தும் யாரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பெட்டியும் பொறுப்பும் கைவந்ததிலிருந்து உணர்ச்சிவசப்பட்டிருந்த கதிரவனின் பரபரப்பு நண்பனைக் கண்டதும் குறைந்தது. பொன்னவிரிலையைப் பதப்படுத்திக் கொண்டிருந்த சித்திரையின் கையைப் பிடித்து வில்வமரத்தடிக்கு அழைத்துச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மடியில் முடிந்து வைத்திருந்த பெட்டியை எடுத்து நண்பனின் கையில் வைத்தான். "சித்திரை, இன்று அம்மா இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்கள். இது அப்பா கொடுத்துச் சென்ற பெட்டியாம். அவர்..." கதிரவன் முடிக்கும் முன்னமே சித்திரை தொடர்ந்தான். "அவர் ஒரு கடமையை கொடுத்துச் சென்றிருக்கிறார். அது என்ன எதுவென்று அம்மாவிற்குத் தெரியாது. ஆனால் நீ ஆற்றல் மிக்கவனாக இருந்தால் கண்டு பிடித்துச் செய்து முடிப்பாய். சரிதானே?" சொல்லி விட்டுக் கண்ணைச் சிமிட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வியப்பில் வாயடைத்துப் போனான். "டேய்...இதை நீ எப்படி அறிவாய்?" சின்னக் கோவத்தில் நண்பனின் தோளில் குத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;குத்தை வாங்கிக் கொண்டு சிரித்தபடியே சொன்னான் சித்திரை. "எட்டு மாதங்களுக்கு முன் என்னுடைய பிறந்த நாளில் என்னுடைய அன்னை எனக்குச் சொன்னது. உனக்குப் பதினெட்டு வயதாகும் பொழுது உன்னிடம் உன் அம்மா சொல்வார் என்றும் அதுவரையில் உன்னிடத்தில் இதைப் பற்றி நான் பேசக்கூடாது என்றும் எனக்கு என் அம்மா கட்டளையிட்டிருந்தார்கள். ஆகையால்தான் உன்னிடம் சொல்லவில்லை."&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரைக்கும் எதிலும் ஒளிவு மறைவு என்று வைக்காத நண்பன் இப்படியொரு செய்தியை எட்டு மாதங்களாகச் சொல்லாமல் வைத்திருக்கிறானே என்ற ஆத்திரம் லேசாக இருந்தாலும் அம்மாவின் கட்டளை என்று சொன்னதும் அமைதியானான் கதிரவன். அதுவுமில்லாமல் தன்னிடம் ஒரு செய்தியைச் சொல்ல முடியாமல் எட்டு மாதங்கள் சித்திரை அடக்கி வைத்திருந்தான் என்பதை நினைத்ததும் நட்பின் பாசம் துளிர்த்தது. மறுபடியும் நண்பனைக் கட்டிக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதுகில் தட்டிக் கொடுத்த சித்திரை, கதிரவனைத் துறைக்குள் அழைத்துச் சென்றான். மூலிகை விதைகளையும் நாற்றுகளையும் அவை தொடர்பான மற்ற பொருட்களையும் வைத்திருக்கும் அறைக்குள் நுழைந்தார்கள். பலப்பல மூலிகை விதைகளில் கிளம்பும் கும்மென்ற மணத்தை முகர்ந்ததும் இருவருக்கும் உடலில் புத்துணர்ச்சி பரவியது. அங்கேயிருந்த ஒரு பெட்டகத்தைத் திறந்து ஒரு துணிப்பொட்டலத்தை எடுத்தான் சித்திரை. பெரிய வெள்ளைத்துணிப் பொட்டலம். அதைக் கதிரவனையே பிரிக்கச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணெயை நெய்த துணி போல வாங்கிய கையில் ஒரு வழுவழுப்பை உணர்ந்தான். ஈரமில்லாமல் இருந்தாலும் குளிர்ச்சி உள்ளங்கையைக் குத்தியது. பிரிக்கப் பிரிக்க வெள்ளையாக இருந்த துணிப்பொட்டலாம் வெளிர் மஞ்சளானது. இன்னும் இரண்டு சுற்று பிரிந்ததும் அப்படியே அடர் மஞ்சளாகியது. நிறம் அடர்ந்து கொண்டே போய் துணி செக்கச் செவேல் என்று ஆனது. மொத்தத் துணியையும் பிரித்ததும் உள்ளே அரையடி நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் பட்டையாக உள்ள செக்கச் சிவந்த உருளை கதிரவனின் கைப்பிடியில் சிக்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே விழுந்திருந்த பொட்டலத் துணி இப்பொழுது வெளுத்திருந்தாலும் உருளையைப் பிடித்திருந்த கதிரவனின் கை, கட்டியிருந்த வேட்டி, அவனது உடம்பு...என்று சிவப்பாகத் தெரிந்தது. மாயம் போல மயங்கியது கதிரவனின் மனது. வியப்பில் கேட்டான். "என்னடா இது? இப்படியொரு உருளைக் குச்சியை நான் பார்த்ததேயில்லையே. அனலில் இட்ட இருப்புக் கம்பி போல் ஒளிர்கிறது. ஆனால் தொட்டால் குளுமையாக இருக்கிறதே. இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?"&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சு விட்டான் சித்திரை. "தெரியவில்லையே. பெட்டியை வைத்துக் கொண்டு நீ இன்றைக்குத்தானே முழிக்கத் தொடங்கியிருக்கிறாய். நான் எட்டு மாதங்களாக முழித்துக் கொண்டிருக்கிறேன். சரி. முதலில் பொட்டலத்தைத் திரும்பக் கட்டு. இங்கு மருத்துவர்களும் நோயாளிகளும் வருவார்கள். நாம் வேறொரு இடத்தில் இதைப் பற்றிப் பேசலாம். நடுப்பகலுக்கு மேல்தான் ஓய்வுப் பொழுது."&lt;br /&gt;&lt;br /&gt;தான் கொண்டு வந்த பெட்டியையும் செங்கோலையும் ஒன்றாக வைத்து வெள்ளைத் துணியில் திருப்பக் கட்டினான். அப்படி அழுத்திக் கட்டும் பொழுது கிணுங்கிணுங்கென்று வெள்ளிமணியொலி கேட்டது. உடனே பொட்டலத்தைப் பிரித்து பெட்டியைக் கையிலெடுத்துக் குலுக்கினான். ஒன்றும் கேட்கவில்லை. செங்கோலையும் குலுக்கினான். எந்த ஓசையுமில்லை. யோசித்தபடியே மீண்டும் இரண்டையும் ஒன்றாக வைத்துக் கட்டினான். மறுபடியும் கிலுங்கிலுங்கென்ற் ஒலி கேட்டது. பெட்டியும் செங்கோலும் உரசும் பொழுது அந்த ஒலியெழுகிறதோ என்று இருவரும் நினைத்தார்கள். ஆனாலும் அங்கே வைத்து அதைப் பரிசோதிக்க அவர்களுக்கு அச்சமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நடுப்பகல் வரும் வரையில் காத்திருக்கப் பொறுமையில்லாமல் துணிப்பொட்டலத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினார்கள். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு மரங்களடர்ந்த பகுதியில் ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் ஏறிக் கொண்டார்கள். பொட்டலத்தைப் பிரித்து பெட்டியையும் செங்கோலையும் உரசினார்கள். கிலுங்கிலுங்கென்று ஒலியெழுந்தது. வெள்ளி மணியை காதோரம் வைத்து ஆட்டுவது போல.&lt;br /&gt;&lt;br /&gt;மணியோசை நல்லிசையாக இருவரின் மனதையும் மெல்ல மயக்கியது. அப்படியே தொடர்ந்து உரசுகையில் "ம....ங்க......ஆ.....பாதி....யார்....களி...." என்று சொற்கள் துண்டு துண்டாக வந்து விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்...&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-4482400395267134802?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/4482400395267134802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=4482400395267134802' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4482400395267134802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4482400395267134802'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/02/4.html' title='தங்க மரம் - 4'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R6eGLcFWpiI/AAAAAAAACWI/mLjw7CVFA6Q/s72-c/MuruganTemple.jpg' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-4203395241540731295</id><published>2008-01-28T11:18:00.000-08:00</published><updated>2008-12-10T19:45:50.906-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொடர்கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008'/><title type='text'>தங்க மரம் - 3</title><content type='html'>முன்கதைச் சுருக்கம்&lt;br /&gt;&lt;br /&gt;கதிரவனின் தாயார் அவனது பதினெட்டாவது வயதில் ஒரு சிறிய பெட்டியைக் கொடுத்து தந்தையாரின் கட்டளைப் படி ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொன்னார். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் உட்கார்ந்திருந்த கதிரவன் நண்பன் சித்திரையிடன் இந்தச் &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;செய்தியைச்&lt;/a&gt; சொல்லச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏரி சூழ் கூம்புமலையில் ஊழிவாயன் தன்னுடைய அறையில் இருந்த ஏழு உருளைகளை ஒவ்வொன்றாகத் திறந்து பார்க்கிறான். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நிறத்தில் ஒரு பெண் வந்து கொஞ்சலில் தொடங்கி மிரட்டலில் முடிக்கிறாள். அவளை விடுவிக்காவிடில் ஊழிவாயன் வீழ்வான் என்று &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/2.html"&gt;மிரட்டுகிறாள்&lt;/a&gt;. அதே நேரத்தில்......&lt;br /&gt;&lt;br /&gt;பாகம் - 3&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வோமா? நாம் கதையின் தொடக்கத்தில்தானே இருக்கிறோம். ஆகையால் இந்த அறிமுகங்கள் தேவையிருக்கிறது. அதுவுமில்லாமல் ஆலோர் பற்றித் தெரிந்து கொள்வது கதிரவனுக்குக் கிடைத்த பொறுப்பு பற்றியும் ஊழிவாயனைப் பற்றியும் மேலும் புரிந்து கொள்ள உதவும். ஆகையால் அறிமுகத்திற்குப் போவோமா.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோர் என்பது வேறொரு உலகம். நமது அண்டங்களை விட்டு வெகு தொலைவில் உள்ளது. அது ஒரு தட்டைக் கிரகம். நமது பூமியில் ஓரிடத்தில் தொடங்கி அப்படியே நேராகச் சென்றால் புறப்பட்ட இடத்திற்கே வந்து விடலாம். ஆனால் ஆலோரில் அப்படியில்லை. கிரகத்தின் ஒரு விளிம்பில் வந்து நிற்போம். அங்கிருந்து குதித்தால் அவ்வளவுதான். கிரகத்தை விட்டு விண்வெளியில் போய்விடுவோம். அதனால்தான் விளிம்பைச் சுற்றி மிக உயரமான மதில்கள் கதவில்லாமல் கட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மதில்களில் நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்களில். ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு காவல் தெய்வத்திற்கு. அந்த மதில்களுக்கு நடுவில்தான் ஆலோரின் இயக்கம் முழுவதும். கிரகத்தில் நட்டநடுவில் மிகப்பெரிய அரண்மனை. அதன் கோபுரம் காவல்தெய்வங்களின் கோபுரங்களை விடவும் உயரமானது. அந்தக் கோபுரத்தின் உச்சிமட்டும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R54rUsFWphI/AAAAAAAACWA/G6xSKWpMEn4/s1600-h/Alor.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R54rUsFWphI/AAAAAAAACWA/G6xSKWpMEn4/s320/Alor.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5160609857444161042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;ஆலோரில் வாழ்கிறவர்களுக்கு ஆலோரி என்று பெயர். ஆலோரியிலும் நமது பூமியில் இருப்பவை போலவே விலங்குகளும் பறவைகளும் உண்டு. ஆனால் அங்கு எல்லாமே பறக்கும். ஆனால் அனைத்தும் மதிற்சுவற்றுக்குள் மட்டுமே பறக்கும். ஆனைகளைத் தவிர. ஏனென்றால் ஆனைகள் கிரகத்தை விட்டும் அண்டங்களை விட்டும் பறக்கும் திறமை கொண்டவை. முன்பெல்லாம் நிறைய ஆனைகள் கிரகத்தைச் சுற்றிப் பறக்கும் காட்சியைக் காணலாம். ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த ஆனைகள் பறப்பதையும் பார்க்க முடிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆலோரிகள் உயிர்வாழ இரண்டு அடிப்படை விஷயங்கள் தேவை. முதலில் ஒளி. பிறகு உணவு. ஒளியின் ஆற்றலைக் கொண்டுதான் அவர்கள் அனைத்தையும் செய்யும் திறன் பெறுகிறார்கள். ஆலோரிகள் எந்தச் செயலையும் கையால் காலால் செய்ய மாட்டார்கள். மாறாக நினைவால் செய்வார்கள். ஒரு பொருளை நகர்த்த வேண்டுமென்றால் கையால் தள்ள மாட்டார்கள். மனதால் தள்ளுவார்கள். இப்படி அனைத்திற்கும் உள்ளத்தைப் பயன்படுத்திச் செய்வார்கள். அதற்குத்தான் அவர்களுக்கு ஒளியின் ஆற்றல் தேவைப்படுகிறது. உணவு அவர்கள் உடலை வளர்க்கத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. வாருங்கள். ஆலோரிக்குள் நுழைவோம். பார்க்கின்ற ஒவ்வொன்றும் ஒளியின்றி அரைஉயிரோடு இருப்பது போல இருக்கிறதல்லவா. பார்க்கின்ற மக்கள் கூட இயக்கமின்றி மிகமிக மெதுவாக அசைகின்றார்கள். அல்லது அப்படியே இருக்கின்றார்கள். மனிதர்களே அப்படியிருக்கையில் விலங்குகளைச் சொல்ல வேண்டுமா? பாருங்கள். எல்லாம் ஒவ்வொரு மூலையில் முடங்கிக் கிடப்பதை. நினைவாலே எல்லாவற்றையும் செய்யும் மக்கள் ஏன் இப்பிடிக் கட்டைகளைப் போலக் கிடக்கிறார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;குளங்களும் ஏரிகளும் கூட அசைவில்லாமல் இருந்தன. சுவாசிக்கக் காற்று இருக்கிறதா இல்லையா என்றே புரியாத நிலை. மொத்தத்தில் அப்படியொரு அழகான மாடமாளிகைகள் நிறைந்த சிறந்த கிரகம் அரைப்பிணம் போல் இருக்கிறது. சரி. நாம் அரண்மனைக்குச் செல்லும் பாதைக்குச் செல்வோம். ஏனென்றால் அந்த வழியில்தானே ஒரு இளம்பெண் நடந்து செல்கிறாள். அவள் ஒருத்தி மட்டுமே சுறுசுறுப்பாகவும் தெளிவாகவும் முழுவுயிரோடயும் இருக்கிறாள். ஆகையால்தான் அவள் சாதாரணமாக நடந்தாலும் விரைவாக நடப்பது போல உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்மனையின் பெரிய கதவு பூட்டப்பட்டிருந்தது. காவலுக்கும் யாருமில்லை. போரில் தோற்றுக் கொள்ளை போன அரண்மனையைப் போலத் தென்பட்டது. தன்னுடைய மனதில் கதவு திறக்க வேண்டும் என்று நினைத்தாள். அந்த நினைப்பினால் இரண்டு கதவுகளும் பிரிந்து திறந்தன. திறந்த கதவு கூட சக்தியில்லாமல் எந்த ஓசையையும் எழுப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பொலிவிழந்திருந்த அந்த அரண்மனையின் கொலு மண்டபத்தில் மிகமிக மெல்லிய வெளிச்சத்தில் உள்ளே நுழைந்தாள் அந்த இளம்பெண்.  அரண்மனைக் கொலுவில் பெரிய அரியாசனம் இருட்டுக்குள் ஒளிந்திருந்தது. அந்த இருட்டிலிருந்து "வா தனிமா. உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பெண் குரல் ஒலித்தது. குரலில் ஒரு கம்பீரம் இருந்தாலும் அடிக்கிணற்றிலிருந்து வந்தது போல் மிகவும் பல்வீனமாக இருந்தது. தனிமா என்று அழைக்கப்பட்டவள் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு வணங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"எழுந்திரு தனிமா. உன்னுடைய ஆற்றலை இரண்டு பெரிய கதவுகளைத் திறப்பதில் வீணாக்காதே. சிறிய கதவைத் திறந்தால் போதாதா? உனக்குரிய கடமை காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக ஆற்றலைப் பயன்படுத்து. மங்கிக் கிடங்கும் நமது ஆலோர் உன்னுடைய உதவியால் மட்டுமே ஒளிபெற முடியும். இழந்த ஒளியை மீண்டும் பெறும் நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு ஆலோர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நான் சொல்வது உனக்குப் புரியும் என்று நினைக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;தலையை அசைத்தாள் தனிமா. "புரிகிறது அரசி. இதற்காகத்தானே நமது உலகமே கால் வயிற்றுக்கு உண்டு....ஆற்றலையும் உணவையும் தியாகம் செய்து என்னை வளர்த்திருக்கின்றார்கள். அந்த உணவின் நன்றி என்னுடலின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து படிந்திருக்கிறது. கடமையைச் செய்வேன். இன்றே கிளம்பவும் ஆயத்தமாக உள்ளேன்."&lt;br /&gt;&lt;br /&gt;தனிமாவிடம் விரிவாகப் பேச அரசி விரும்பினாலும் தளர்ச்சி அவரை வாட்டியது. அவரும் கால் வயிறுதானே உண்கிறார். தளர்ச்சியையும் மீறி தனிமாவிடம் சொன்னார். "தனிமா, நீ செல்ல வேண்டியது பூமிக்கு. அங்கு சென்றதும் அங்கேயே உனக்கு வேண்டிய உணவையும் ஆற்றலையும் மிக எளிதாகப் பெறலாம். நாளைக்கே புறப்பட ஆயத்தங்களைச் செய். தேவையானவற்றை எடுத்துக் கொள். பிடிமாவும் ஆயத்தமாக இருக்கிறாள் அல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆம் அரசி. நானும் பிடிமாவும் எந்த நொடியிலும் எங்கள் உலகப்பற்றைக் காட்டக் காத்துக் கொண்டிருக்கிறோம். நமது உலகம் இழந்ததை மீண்டும் கொண்டு வந்து சேர்ப்போம்"&lt;br /&gt;&lt;br /&gt;தனிமாவின் குரலில் தெரிந்த உறுதி அரசியின் உள்ளத்தில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் எழுப்பியது. பழைய நாட்கள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கைப் பூ அவரது முகத்தில் புன்னகையாகப் பூத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன மக்களே....அறிமுகமெல்லாம் முடிந்து விட்டது. அடுத்த அத்தியாயத்திலிருந்து சுறுசுறு நிகழ்ச்சிகளும் திருதிரு திருப்பங்களுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்,&lt;br /&gt;ஜிரா (எ) கோ.இராகவன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/12995079-4203395241540731295?l=gragavan.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://gragavan.blogspot.com/feeds/4203395241540731295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=12995079&amp;postID=4203395241540731295' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4203395241540731295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/12995079/posts/default/4203395241540731295'/><link rel='alternate' type='text/html' href='http://gragavan.blogspot.com/2008/01/3.html' title='தங்க மரம் - 3'/><author><name>G.Ragavan</name><uri>http://www.blogger.com/profile/04538744962115402156</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='28' height='32' src='http://i80.photobucket.com/albums/j194/ragavang/DSCN1614-2.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R54rUsFWphI/AAAAAAAACWA/G6xSKWpMEn4/s72-c/Alor.JPG' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-12995079.post-4795442571214569497</id><published>2008-01-21T11:33:00.000-08:00</published><updated>2008-12-10T19:45:51.041-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Story'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தங்க மரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Thanga Maram'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='2008'/><title type='text'>தங்க மரம் - 2</title><content type='html'>சென்ற பாகத்தை &lt;a href="http://gragavan.blogspot.com/2008/01/1.html"&gt;இங்கே&lt;/a&gt; படிக்கவும்&lt;br /&gt;&lt;br /&gt;ஆளரவமில்லாக் காட்டில் வட்ட வடிவத்தில் ஒரு ஏரி. தளும்பித் தளும்பி நீர் தத்தளிக்கும் மிகப்பெரிய ஏரி. இருந்தாலும் எந்த ஒரு விலங்கும் அந்த ஏரியில் நீர் பருகவோ....அருகில் செல்லவோ இல்லை. ஏரியின் நட்டநடுவில் கூர்மையான உச்சியுடன் கடும்பாறைகளால் ஆன ஒரு கூம்புமலை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஏரிக்கு மேலே மலையைச் சுற்றி நிறைய குண்டரப் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. பறக்கும் பொழுதே வாயைத் திறந்து குரல் வெளியே கேட்காமல் தொடர்ந்து கத்தின. மற்றபடி வேறு எந்தப் பறவையும் அந்தப் பகுதியில் தென்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டரப் பறவையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். பார்க்க எப்படியிருக்குமென்று சொல்கிறேன். கால்கள் இல்லாத பறவை அது. இறக்கைகளும் கிடையாது. பளபளக்கும் பொன்மஞ்சள் நிறம். மற்றபடி பார்க்க வாத்து போலவே இருக்கும். ஆனால் உருவத்தில் மூன்று நான்கு மடங்கு பெரியதாக இருக்கும். இது உட்கார்ந்த இடத்திலிருந்து இறக்கையில்லாமலே அப்படியே மேலே எழும்பிப் பறக்கும். இந்தப் பறவைகளுக்கு உணவு நெருப்புக் குழம்பு. அந்தக் குழம்பின் ஆற்றலால் இவை பறக்கின்றன. அப்படிப் பறக்கையில் அவைகளின் பின்னால் சிறிது புகையெழும்பும். இதனுடைய மற்றைய சிறப்புகளைப் பிறகு பார்ப்போம். முதலில் கூம்புமலைக்குள் நுழைவோம். அங்கு என்ன நடக்கிறதென்று தெரிய வேண்டாமா!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R5T0gbisMjI/AAAAAAAACVg/M0z1bmPGLsQ/s1600-h/KoombuMalai.JPG"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;" src="http://4.bp.blogspot.com/_7yZu8VoJk6I/R5T0gbisMjI/AAAAAAAACVg/M0z1bmPGLsQ/s320/KoombuMalai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5158016311232311858" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இந்த மலை யாருக்குச் சொந்தமானது தெரியுமா? ஊழிவாயனுக்குச் சொந்தமானது. ஊழிவாயன் கதையைப் பிறகு பார்க்கலாம். முதலில் அவன் கோட்டைக்குள் நுழைவோம். கூம்புமலைக்குள் நுழைய இரகசிய வழி மட்டுமே உண்டு. ஆனால் பார்க்கும் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மலைக்குள் நிறைய பூகன்களும் பூகிகளும் ஊழிவாயனிடம் வேலைக்கு இருக்கிறார்கள். இவைகள் பூதங்கள். ஆனால் குள்ள பூதங்கள். ஆண் பூதங்களுகுப் பூகன்கள் என்றும் பெண் பூதங்களுக்குப் பூகிகள் என்றும் பெயர். குட்டையாக உருண்டையாக தலையில் இரண்டு கொம்புடன் பார்த்தாலே சிரிக்க வைக்கும் தோற்றத்தில் இவைகள் இருக்கும். ஆனால் அபார சக்தி பெற்றவை. ஊழிவாயனால்தான் அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை செய்ய வைக்க முடிந்தது. நிலத்தைக் குடைந்து சென்று பூமியின் நடுவில் இருக்கும் நெருப்புக் குழம்புகளை குண்டரப் பட்சிகளுக்கு உணவாகக் கொண்டு வருவதும் பூகன்களின் வேலைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. அந்த மலைக்குகைக்குள்ளே போவோம். அதுவும் ஊழிவாயனின் அறைக்குள்ளே. வட்டமாக இருந்த அறையின் சுவற்றில் மாயத்தீவட்டிகள் எரிந்தன. நெருப்பு எரிகையில் சுடுமல்லவா. அப்படிச் சுடாமல் இருக்கத்தான் இந்த மாயத்தீவட்டிகள். வேறொரு அறையில் பூகிகள் நெருப்பு உண்டாக்குவார்கள். ஆனால் தந்திரமாக அந்த நெருப்பின் ஒளியை மட்டும் மந்திரக்கயறுகளின் வழியாக மாயத்தீவட்டிக்குக் கொண்டு வந்திருக்கிறான் ஊழிவாயன். அந்த அறையிலேயே குமிழ் பொறிகளும் வைத்திருக்கிறான். அவைகளைத் திருகி வெளிச்சத்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் கூட அவனால் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படிப் பட்ட ஊழிவாயன் எப்படியிருப்பான் தெரியுமா? ஏழு அடி உயரம். பரந்து விரிந்த உடற்கட்டு. இடுப்பில் ஒரு ஆடை. அது குண்டரப்பறவைகளின் தோலால் ஆனது. பொன்னிறத்தில் பளபளத்தது. தலைமுடி வளர்ந்து இடுப்புவரை தொங்கியது. அதே நேரத்தில் உச்சந்தலையில் கூம்புக்குடுமி ஒன்று. நெஞ்சில் உள்ளங்கையளவு பெரிய வைரம் பதித்திருந்தான். அமைதி காணாத முகமும் உள்ளமும். தேவையில்லாத பரபரப்பும் வெறுப்பும் முகத்தில்.&lt;br /&gt;&lt;br /&gt;அறைக்குள் நுழைந்தவன் முதலில் மாயத்தீவட்டிகளின் ஒளியைக் குறைத்து இருட்டாக்கினான். ஆனாலும் அவன் அந்த அறைக்குள் அவனால் மிக எளிதாக நடமாட முடிந்தது. கையில் வைத்திருந்த தடியால் தரையில் ஒரு இடத்தில் மூன்று முறை தட்டினான். உடனே தரை திறந்து உள்ளிருந்து ஏழு ஆளுயர கருப்பு உருளைகள் மேலே வந்தன. முதல் உருளையின் முன் சென்று கைத்தடியை நீட்டினான். உருளையின் மேல் பகுதியில் சிறிய செவ்வகம் திறந்தது. அதன் வழியாக ஊதாநிறத்தில் வெளிச்சம் வந்தது. செவ்வகச் சன்னலில் ஒரு அழகான பெண்ணின் முகம் தெரிந்தது. ஊதா நிறத்திலுள்ள அவளுடைய மேனியிலிருந்துதான் அந்த ஒளி வந்தது. அவள் வாய் திறந்து பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஊழிவாயா...ஆழி போல் ஏரிசூழ் கூம்புமலைத் தலைவா...வைர நெஞ்சம் என்று ஊரார் சொல்வர். அந்த வைரத்தையே நெஞ்சில் பதித்தவா...என்னைப் பாரு...என்னைச் சேரு. நீயின்றி வாழ்க்கை சேறு. நல்ல மறுமொழி ஒன்று கூறு." கேட்ட குரலில் தாபமும் மோகமும் பொங்கிப் பெருகின.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்கும் பொழுதே ஊழிவாயன் உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்திற்குச் சென்றான். படக்கென்று தடியைக் காட்டி உருளையை மூடினான். அடுத்த உருளைக்குச் சென்று அதே போலத் திறந்தான். இந்த முறை கருநீலநிற ஒளி வந்தது. மீண்டும் பெண்ணின் முகம். ஆனால் அதே முகம். ஆனால் மேனி கருநீலநிறத்தில் இருந்தது. வாய் திறந்து பேசினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"தலைவா....வானம் காத்திருக்கிறது. அந்த வானத்தில் நிலவு காத்திருக்கிறது. நிலவில் ஒளியும், ஒளிக்குள் குளுமையும், குளுமைக்குள் ஆசையும் காத்திருக்கின்றன. காத்திருப்பது சுகம்தான். அந்தச் சுகத்திற்குச் சுகத்தைக் கொடுக்க நீ வா!" குரலில் மோகத்தின் அளவு கொஞ்சம் குறைந்திருந்தாலும் காதல் எக்கச்சக்கமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே பேச்சைக் கேட்காமல் மூடினான். அடுத்த உருளையைத் திறந்தான். அதே முகம். ஆனால் நீலநிறம். அந்த அறை முழுவதும் நீலம் பரவியது. "தலைவன் ஒருவன் இருந்தால் தலைவி ஒருத்தி வேண்டும். இந்தக் கூம்புமலை தலைவியைக் காண்பது எப்பொழுது? உனது அரியணையிலே நானும் அமர்ந்து தலைவியாகி உன்னுடைய கூம்புமலையை ஆள்வது எப்பொழுது?" கேட்கும் பொழுதே நெஞ்சில் நஞ்சு சேர்வது போல இருந்தது ஊழிவாயனுக்கு. படக்கென்று மூடிவிட்டு அடுத்த உருளையைத் திறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம். அதே பெண். ஆனால் பசுமை நிறம். அந்த அறை அழகிய வசந்தகாலப் புல்தரைபோலத் தோன்றியது. "ஊழிவாயா, நீ வாழ்வதற்கு நல்லதொரு வழியைச் சொல்கிறேன். இந்த வையகம் புகழும்படி நீ மெச்சப்படும் நிலையை அடைவதற்கான வழிமுறை நான் அறிவேன். நீ அதைக் கேள்." மோகம் காணமல் போய்....காதல் கறைந்து போய்....ஆசை அற்றுப்போய்...ஆனால் நல்லது சொல்லும் திறம் மட்டுமே பேச்சில் இருந்தது. ஆனால் அதைத் தொடர்ந்து கேட்காமல் உருளையை மூடிவிட்டு அடுத்த உருளைக்குச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் பளபளக்க அதே பெண்ணின் முகம் மீண்டும் தோன்றியது. அந்த அறையே பொன்னறையாக மிளிர்ந்தது. அவள் பேசினாள். நல்ல பொன்மொழிகளைச் சொன்னாள். அவைகளைக் கேட்டும் மனநிலை அவனுக்கு இருக்கவில்லை. அடுத்த உருளைக்குச் சென்றான். இந்த முறை ஒளிர்காவி நிறம். பொன்மொழிகள் மறைந்து குரலில் சீற்றம் தெரிந்தது. "ஊழிவாயா...என்னை அடைத்து வைத்திருப்பது உனக்கு நல்லதைத் தராது. அழிவையே தரும். ஆகையால் உன்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னை விடுவிப்பாய்." அந்தப் பெண்ணின் பேச்சை மதிக்காமல் கதவை மூடிவிட்டு கடைசி உருளைக்குச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;செக்கச் செவேல் என்ற ஒளி அறையை நிறைத்தது. குருதி பெருகிய போர்க்களத்தில் இருப்பது போல உணர்ந்தான் ஊழிவாயன். "மூடனே. என்னைப் பிடித்து வைத்திருப்பதனால் நீ உன்னுடைய இறுதி முடிவுக்கு அழைப்பிதழ் விடுத்திருக்கிறாய். வீணாய் மண்ணோடு மண்ணாகும் முன்னே என்னை விடுதலை செய்து பிழைத்துப் போவாய். இல்லையேல் உனது அறிவிழந்து ஆற்றலிழந்து....உனக்காக வே
