Sunday, September 09, 2007

பி.மு பி.பி

என்னனு பாக்குறீங்களா? இதுவும் கி.மு கி.பி மாதிரிதான். ஆனா ஈழம் தொடர்பானது. பிராபகரனுக்கு முன்பு. பிரபாகரனுக்குப் பின்பு.

அதுக்குள்ள பிமு பிபி பத்திப் பேச வேண்டிய நேரம் வந்திருச்சான்னு கேக்காதீங்க. ஆனா யோசிக்க வேண்டிய நேரம் வந்திருச்சு. என்ன யோசனைன்னு கேக்குறீங்களா? சொல்றேன். ஆனா ஒன்னு. இந்தக் கட்டுரை ஒரு வெளியாள் சிந்தனைங்குற மனசுல வெச்சுக்கிட்டுப் படிங்க. எந்த வண்ணமும் பூசாம இப்பிடிப்பட்ட சமயத்துல என்ன நடக்கும்னு யோசிங்க. அதப் பின்னூட்டமா போடுங்க. நாகரீகமான பின்னூட்டமா இருக்கனும். தனிநபர்த் தாக்குதலாவோ இனத்தாக்குதலாவோ இல்லாம இருந்தா நல்லாருக்கும்னு கேட்டுக்கிறேன்.

இன்றைக்கு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்குத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்னு எல்லாருக்கும் தெரியும். குறைந்த பட்சம் அப்படித்தான்னு நெறையப் பேரு நெனச்சுக்கிட்டிருக்கோம். இன்னைக்கு நெலமை எல்லாருக்கும் தெரிஞ்சதுதானே. நாளைக்கு? பிரபாகரன் ரொம்ப நாளைக்கு இருப்பாருன்னு வெச்சுக்குவமே. அதுக்குள்ள ஈழப் பிரச்சனை தீந்திருச்சுன்னா நல்லது. இல்லைன்னா?

ஏன் சொல்றேன்னா....அந்தப் பக்கம் பாத்தீங்கன்னா.....ஆளு மாறிக்கிட்டே இருந்தாலும் யாராவது தலைவர்னு இருந்துக்கிட்டேயிருக்காங்க. அதுக்குக் காரணம் அரசியல்+ஜனநாயகம். நல்லது செய்றாங்களோ கெட்டது செய்றாங்களோ.....பண்டாரநாயக, பிரேமதாச, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்கே...இப்ப மகிந்த ராஜபக்ஷன்னு ஒருத்தர் இருந்துக்கிட்டேயிருக்காங்க. இப்ப இருக்குற மகிந்த போனாலும் அடுத்து ஒரு மந்திரிகா வர்ரதுக்கு வாய்ப்புகளும் வசதிகளும் நெறைய இருக்கு. ஆனா....இந்தப் பக்கம்?

ஏற்கனவே கருணாஸ் அது இதுன்னு பிரிஞ்சி போயி பிரச்சனைகள் வேற இருக்குது. இந்த நிலையில அடுத்த கட்டத் தலைவரா யாரு வருவாங்க? எப்படி வருவாங்க? அதுக்கான வழிமுறைகள் என்ன? அதுபத்தி எதுவுமே வெளிப்படையாத் தெரியலையே. இப்படி இருக்குறதால சாதக பாதக அம்சங்கள் என்னென்ன? சாதகத்துலயும் பாதகத்துலயும் எது நெறைய?

ஆக பிபின்னு யோசிச்சா....இந்தப் பக்கம் என்ன நடக்கலாம்னு தெளிவாத் தெரியாத நெலை. கூட்டணிப் பூசலாகலாம். நாலஞ்சுக் குழுவாகலாம். இப்ப எதுக்குற மாதிரி எதுக்க முடியாமப் போகலாம். அதுவே சிங்களப் பேரினவாதத்தைத் நிலைநிறுத்த அடுத்தடுத்த சிங்களத்தலைவர்கள் வந்துக்கிட்டேயிருப்பாங்க. ஆனா இங்க? தெளிவில்லாத நிலைதான் தோணுது. இதைத்தான் சிங்கள அரசாங்கமும் இனவாதிகளும் எதிர்பாப்பாங்கன்னு நெனைக்கிறேன். அதுக்காக முயற்சிகளும் செய்வாங்க. அது எவ்ளோ பலன் தருமோ தெரியாது. ஆனா எத்தனை நாளைக்கு? கண்டிப்பா என்னால பிபிய தமிழர்களுக்கு நல்ல விதமா இருக்கும்னு நெனைக்க முடியலை. ஈழத்தமிழர்கள் நல்லாயிருக்கனும்னு நெனைக்கிறது உண்டுதான். ஆனா இந்த விஷயத்துல?

மக்களே ஒங்க கருத்துகளைச் சொல்லுங்க.

அன்புடன்,
கோ.இராகவன்

2 comments:

said...
This comment has been removed by the author.
said...

ஜிரா,

அதற்கு இப்ப தேவை இல்லை என தோன்றுகிறது.

நன்றி