Showing posts with label தஸ்லீமா. Show all posts
Showing posts with label தஸ்லீமா. Show all posts

Thursday, August 16, 2007

தஸ்லீமாவைத் தாக்கியது சரியா?

தஸ்லீமாவைத் தெரியாதவர்கள் கிடையாது என்று சொல்லும் நிலைக்கு அவரது எதிர்ப்பாளர்கள் அவருக்குப் பிரபலத்தைத் தேடித் தருகிறார்கள். சமீபத்தில் அவர் தாக்கப்பட்டார். ஐதராபாத்தில்.

அவர் என்ன சொன்னார் என்று இன்னும் படிக்கவில்லை. நேரமின்மையின் காரணமாகவே அது. ஆனால் தாக்கப்பட்டார் என்று தெரிந்தும் வலைப்பூ பரபரப்பாக இல்லாமல் இருந்தது வியப்புதான். தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது. வலைப்பு அல்லோகல்லோலப் பட்டது. சிவசேனை அட்டகாசங்களும் வலைப்பூக்களில் பரவலாகப் பேசப்பட்டது. சிவசேனையின் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியதுதான். அதைக் கண்டித்ததும் சரிதான்.

ஆனால் தஸ்லீமா தாக்கப்பட்டது? நமது அமைதி வியப்புதான். அவர் கருப்பைச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசியதாகக் கேள்விப்படுகிறேன். பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகத்தில் பெரியாரும் அதே போன்ற...அல்லது அதே கருத்தைச் சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். (முதலில் பெரியார் சொன்னதையும் தஸ்லீமா சொன்னதையும் படிக்க வேண்டும்.)

தஸ்லீமா தாக்கப்பட்டது சரியா தவறா என்று நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். இதோ நீங்களே சொல்லுங்கள். ரகசிய வாக்கெடுப்புதான். தஸ்லீமா சொன்னதையும்...அவரை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தாக்கியதன் பின்னணியை மட்டும் வைத்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். அவன் இவனை அடித்த பொழுது எங்கே போனோம். இவனை அவன் கடித்த போது எங்கே போனோம் என்ற கேள்விகள் சண்டைகள் வேண்டாம். அதெல்லாம் நடக்கும் பொழுது அதற்கென்று ஓட்டெடுப்பு வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்தச் சூழ்நிலையை மட்டும் வைத்து, உங்கள் வாக்கை அளியுங்கள். பின்னூட்டத்தில் எதையும் சொல்ல விரும்பினால் அதையும் சொல்லுங்கள்.



அன்புடன்,
கோ.இராகவன்