Monday, May 23, 2005

ஜோதி அணைந்த பாசு

பீகாரை நாம் விட நினைத்தாலும் பீகார் நம்மை விட மாட்டேன் என்கிறது. பீகாரில் குடியரசுத் தலைவர் ஆட்சி. சட்டப் பேரவை கலைக்கப் பட்டு விட்டது. பலருக்கு மகிழ்ச்சி. பலருக்கு எரிச்சல். என்ன செய்வது! அரசியலாயிற்றே!

கலைத்ததை நியாயப் படுத்தி ஒரு கூட்டத்தாரும் அநியாயப் படுத்தி ஒரு கூட்டத்தாரும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். நீதிமன்றத்தை நாடப் போவதாக பாஜாக சொல்கிறது. ஆனால் அனைவரையும் விட நகைச்சுவை உணர்வு தமக்கே அதிகம் என்று ஜோதிபாசு நிருபித்திருக்கிறார்.
லல்லுவும் பாஸ்வானும் கூட்டணி வைத்துக் கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காதாம். அதனால் கலைப்பு நியாயமானதாம்! ஏன் நிதிஷ¤ம் பாஸ்வானும் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாதா? அப்படி நடந்தால் அது குதிரை பேரம். அதைத் தடுக்க வேண்டும். ஆனால் குதிரையோ கழுதையோ எந்தப் பேரமும் நடக்கட்டும் ஆனால் லல்லுவும் பாஸ்வானும் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா. இந்த அரசியல் பிதாமகரை நினைக்கும் பொழுது எனக்குத் தோன்றுவது....ச்ச்சீ!

0 comments: