இப்ப வலைப்பூக்கள்ள எல்லாரும் அஞ்சு அஞ்சுன்னு சொல்றாங்களே. அதுக்காக அஞ்சாமலும் இருக்க முடியுமா? அஞ்சுவது அஞ்சாமை பேதமையாச்சே. நம்ம கோபிநாத்தும் சிறிலும் அவங்க எந்த வகையில வித்தியாசமானவங்கன்னு பதிவு போட்டுட்டு...அதுல நம்மளையும் கோத்து விட்டுட்டாங்க. நன்றி நண்பர்களே. ஆகையால என்னைப் பத்திய அஞ்சு குண்டக்க மண்டக்க தகவல்களைச் சொல்லியிருக்கேன். அஞ்சீராதீக.
1. எதையோ நெனச்சிக்கிட்டிருந்தா அதுவாவே ஆயிருவோமாமே! அது மாதிரி...சமயங்கள்ள சில நெனைப்புகள் வரும். ஏதோ ஒரு பாட்டு திடீர்னு நெனைவுக்கு வரும். பாத்தா ரெண்டொரு நாள்ள அதே பாட்டு பாக்கக் கிடைக்கும். இதே மாதிரி ஏதோ படத்தப் பத்தித் தோணும். கொஞ்ச நாள்ளயே அந்தப் படமும் பாக்கக் கிடைக்கும். பாட்டு படம்னு மட்டுமல்ல....பல விஷயங்கள்ள இப்பிடி நடக்குது. என்னோட வாழ்க்கைல நெறைய நிகழ்ச்சிகள். இது வெறும் தற்செயல் நிகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். ஆனா அடிக்கடி நடக்குது. நல்லதுகளும் எக்கச்சக்கமா நடந்திருக்கு. பல கெட்டதுகளும் நடந்தது. அதெல்லாம் மத்தவங்க தொடர்பான செய்திகள். ஆகையால எல்லாத்தையும் விவரமாச் சொல்ல விரும்பல.
2. சாப்பாட்டுலயும் நமக்குக் கொஞ்சம் குண்டக்க மண்டக்க ஆசைகள் உண்டு. இடியாப்பத்துக்குப் பூண்டுக் குழம்புல தொடங்குவோம். சர்க்கரைப் பொங்கலுக்குத் தேங்காச் சட்டினியும் மொச்சைக் கொழம்பும் முயற்சி செஞ்சிருக்கீங்களா? சரி. அத விடுங்க....மீன் துண்டுகளைப் பொரிகடலை மாவுல பெரட்டிப் பொரிச்சிச் சாப்பிட்டதுண்டோ? இத கோழிக்கும் செய்யலாம். ஆரஞ்சு சிக்கன் தெரியுமா? ஓட்ஸ்ல பிஸி-ஓட்ஸ்பாத் செஞ்சு சாப்புடுறதும்....கோதுமை ரவை தோசை சுடுறதும்....பூசணியையும் கோழியையும் சேத்துச் சமைக்கிறதும்..மீனைப் பொரிச்சிக் கொத்துமல்லி+புதினா+பச்சை மிளகாய்க் கூழ்ல சமைக்கிறதும்..இப்பிடி பல கண்டுபிடிப்புகள். இப்பிடி எதையாவது செஞ்சு சாப்பிட்டாத்தான் நாக்கு ஒத்துக்குது. முந்தியெல்லாம் புளி+மிளகாய்+உப்பு மட்டும் வெச்சு அரைச்சச் சண்டாளத் தொவையல பிடிபிடிச்ச நாக்கு இப்பல்லாம் ஒறைப்பையே ஏத்துக்குறதில்லை. எனக்குப் பிடிச்ச மாதிரி ரெண்டு பேராலதான் தொடர்ந்து வகைவகையா சமைக்க முடியும். ஒன்னு அம்மா. இன்னொன்னு நானு.
3. பொதுவா எல்லாரும் வேலைய நல்லா செஞ்சிக்கிட்டிருக்கும் பொழுது நான் அமைதியா இருப்பேன். ஏதோன்னு செஞ்சிக்கிட்டிருப்பேன். ஆனா எதாவது பிரச்சனைன்னா மட்டும் மூளை நல்லா வேலை செய்யும். உக்காந்து தெளிவா யோசிக்கும். இத ஒரு வாட்டி...ரெண்டு வாட்டி இல்ல...பல வாட்டி பாத்திருக்கேன். என்னவோ போங்க...ஊரோட ஒத்து வேலை செய்ற தெறமை இல்லையோன்னு நெனைச்சுக்குவேன். ஆனாலும் பிரச்சனை வந்தாலாவது மூளை வேலை செய்யுதேன்னு திருப்தி பட்டுக்கிறுவேன். அத்தோட சொல் பேச்சுக் கேளாமை வேற. பொதுவா யாராவது சொன்னா...அதக் கேட்டு நடக்கிறதில்லை. சொல் பேச்சுக் கேளாதவன் அப்படீங்குற பேர் எனக்கு வீட்டுல ரொம்ப உண்டு. அது உண்மையும் கூட.
4. கனவுகள். அதுல என்ன weirdனு கேக்குறீங்களா? முந்தியெல்லாம் பல கனவுகள் நெனைவுல இருக்கும். என்ன வந்ததுன்னு அடுத்த நாள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன். ஒரு கட்டத்துல என்ன ஆச்சுன்னா...கனவு கண்டுக்கிட்டிருக்கும் போதே "இது கனவு..இத நாளைக்கு நெனைவு வெச்சிருந்து மெயில் அனுப்பனும்னு தோணும்". பல சமயங்கள்ள கதைகள் கனவுல வந்திருக்கு. ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கனவில் வந்து சொல்லியதுதான் பெண்ணைப் பெற்றவன் அப்படீங்குற கதை.
5. இது காலேஜ்ல படிக்கைல நடந்தது. ஒரு குறிப்பிட்ட பேண்டும் சட்டையும் போட்டுட்டுப் போனா நல்லா எழுதி நல்ல மதிப்பெண் கிடைக்குங்குற நம்பிக்கை. அதுலயும் தேர்வு நாள்கள்ள மஞ்சப்பைதான். துணிக்கடைகள்ள முந்தி குடுத்துக்கிட்டிருந்தாங்களே! அந்த மஞ்சப்பைதான். அதுவுமில்லாமா ஒரு குறிப்பிட்ட எடம் இருக்கு. அந்த எடத்துல போய்தான் மொதல்ல உக்காருவேன். அங்க உக்காந்திருந்துட்டு சரியா தேர்வு நேரத்துல மட்டுந்தான் தேர்வறைக்குள்ள போவேன். ஆனா இதெல்லாம் வேலை செஞ்சிருக்கு. யார் கண்டா நானே ஒரளவுக்குப் படிச்சிருக்கலாம். ஆனால் இன்னமும் அந்த சட்டை இன்னும் இருக்கு. அது எனக்கு ரொம்பவும் பிடிச்ச சட்டை. ஒரு மாதிரி கருப்புச் சட்டை. லேசா ஊதா நிறத்துலயும் பழுப்பு நிறத்திலயும் பளபளன்னும் கொசகொசன்னு ஓவியங்கள் உள்ள சட்டை.
இப்ப நம்ம அஞ்சு பேரக் கூப்பிடனும்ல. விட முடியுமா? மாட்டிக்கிட்டீங்களா?
1. காபி
2. தேவ்
3. வல்லிசிம்ஹன்
4. ஓமப்பொடியார்
5. கோவி.கண்ணன்
அன்புடன்,
கோ.இராகவன்
Tuesday, March 20, 2007
12ம் (இறுதிப்) பகுதி கள்ளியிலும் பால்
முந்தைய பகுதி இங்கே
"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட தேன்மொழியின் ஆர்வம் நமக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரவணனையும் சந்தியாவையும் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தாள் தேன்மொழி. சரவணன் தேன்மொழியின் கணவனோடு பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவும் தேன்மொழியும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.
"நெதர்லாந்துக்கா? நானா? நான் ஏண்டி அங்க போகனும்? எல்லாரும் இதத்தான் கேக்குறாங்கன்னா...நீயுமா? ஒனக்குக்குத்தான் என்னையப் பத்தித் தெரியுமே."
"தெரியும். தெரியும். ஆனாலும் கல்யாணம் செஞ்சாச்சு. நான் அன்னைக்கே சொன்னேன். சரவணன் கேட்டதும் நீ ஒத்துக்குவன்னு. அதான் நடந்தது. அதே மாதிரி அவன் பின்னாடி குடுகுடுன்னு ஓடத்தான் போற." கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் தேன்மொழி.
"ஆகா....உலகமகா ஜோசியக்காரி. சினிமாவுக்குப் பாட்டெழுதுறத விட்டுட்டு நீ ஜோசியம் பாக்கப் போகலாம். கல்யாணம் ஏன் செஞ்சோம்? எனக்கா? இல்ல அவனுக்கா? கண்டிப்பா இல்ல. எங்களுக்கு வேணுங்குறதும் எங்கயும் கிடைக்கும். ஆனா சுந்தருக்கு? அவனுக்காகத்தான் கல்யாணம்."
"சுந்தருக்கா? அம்மா முரண்பாடுகளின் மொத்த உருவமே! தனியா அவனை வளர்க்க முடியும்னுதானே குழந்தையே பெத்துக்கிட்ட. அப்புறம் எதுக்கு கல்யாணம். திடீர்னு பயம் வந்திருச்சா?"
"இல்லடீ. இல்ல. No பயம். பிரச்சனை என்னன்னா? யாரோ தெரியாத donorனா பிரச்சனையே இல்லை. ஆனா இங்க...சரவணன். அவன் கிட்ட ரொம்ப நாள் மறைக்கவும் முடியலை. என்னோட கொழந்தைதான...எனக்கும் பங்கு உண்டுன்னு அவன் கேக்கும் போது மறுக்குறது சரியில்லைன்னு தோணுச்சு. அதான். அந்த ஒரு காரணந்தான். மத்தபடி இந்த கல்யாணத்தாலதான் எனக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் உருவாகனும்னு இல்ல. புரிஞ்சதா? அதுனால......."
"அதுனால?"
"நானும் சுந்தரும் சென்னையில என்னோட அப்பார்ட்மெண்டுல இருப்போம். எனக்கும் வேலை இருக்கு. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. அதுனால சரவணனோட வீட்டுலயும் இருக்க மாட்டேன். அப்பப்போ போய்ப் பாத்துக்கலாம். அவ்வளவுதான். ஆகையால சரவணன் மட்டும் நெதர்லாந்து கெளம்பிப் போறான். அடுத்த வாரம். தன்ன்ன்னியா!"
அந்த அடுத்த வாரம் விரைவிலேயே வந்தது. சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குப் போனார்கள் அனைவரும். வழக்கமாக தனிமையில் கட்டிக்கொள்ளும் சரவணனும் சந்தியாவும்..அன்று அனைவரின் முன்னிலையிலும் கட்டிக் கொண்டு பிரிந்தார்கள். சந்தியா அன்று அலுவலகத்திற்கு விடுப்பு. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.
"Hi Sandhya, itz Jaideep here. how are you doing?"
ஓ! அந்த சினிமாக்காரனா! "Hey Jaideep! how are you? i am doing very fine. whatz up?"
"Me fine. Today I saw you in the airport. And from that time.....something is bubbling in my stomach. how about evening? can you come to GRT grand? i am there in 2047. It will be nice if you can make it around 6."
ஏண்டா...அன்னைக்கு அந்த நடிகன் பின்னாடி ஓடுனியே...இன்னைக்கு என்ன...நான்? anyway....you are good...i know..சரி. ஒத்துக்கலாம். "Oh sure Jai. Itz treat to me....I will be there at 6. 2047, right?"
அந்த 2047ல் சரியாக ஆறு மணிக்கு இருந்தாள் சந்தியா. உள்ளே வெறும் ஷார்ட்சோடு காத்துக்கொண்டிருந்தான் ஜெய்தீப். வேறொரு இளைஞன் ஒருவனும் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். சந்தியாவின் கண்கள் அவனையும் நோட்டம் விடத் தவறவில்லை. வந்த சந்தியாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றான் ஜெய். "Hey Sandhya...meet my friend sukh. Please have a small talk. I will take bath and come fast." குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான் ஜெய்.
சுக்கின் விரல் சந்தியாவெங்கும் ஓடி....எவைகளையெல்லாம் களைய வேண்டுமோ...அவைகளையெல்லாம் களைந்தன. சந்தியாவிற்கு மட்டும் களையெடுக்கத் தெரியாதா என்ன? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தார். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்தார். விழலுக்கும் நீர் பாய்ச்சி மாய மாட்டார்.
"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே" சந்தியாவின் அலைபேசி பாடியது. எரிச்சல். "Wait Sukh. let me check whoze that?" அவசரமாக அலைபேசியை எடுத்தாள், "ஹலோ?"
"ஹே சந்தி! சரவணன் பேசுறேன். எப்படி இருக்க. இப்பதான் வந்து சேந்தேன்."
"One sec Sukh." சுக்கிடம் இருந்து தன்னை எடுத்துக் கொண்டு விலகினாள். "நல்லாயிருக்கோம். நீ எப்படி இருக்க? ஃபிளைட் வசதியா இருந்ததா?"
"நல்லாயிருந்தது. இப்பதான் வீட்டுக்குள்ள நொழைஞ்சேன். வழியெல்லாம் உன்னையும் சுந்தரையுந்தான் நெனச்சுக்கிட்டேயிருந்தேன். அதான் வந்ததும் கூப்டாச்சு. வீட்ல இருக்கியா? இன்னைக்கு ஆபீசுக்குப் போகலைன்னு சொன்னியே. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"
"ஆமா. வீட்டுலதான்..நல்லா தூங்கீட்டிருந்தேன். நீ கூப்டதும்தான் எந்திரிச்சேன். அதான் குரல்..."
"சரி. சரி. நீ தூங்கு. எனக்கும் தூக்கம் வருது. எட்டு மணிக்கு ஃபோன் பண்ணு. சரியா? Take care. Bye."
அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.
"Whoz that Sandhya? What are you contemplating?" எழுந்து வந்து சந்தியாவோடு உரசினான் சுக். குளித்து முடித்திருந்த ஜெய்தீப் குளியலறையிருந்து வெளியே வந்தான். "hey! what happened? I was expecting a visual treat 'when i come out. I opened the door expecting you both in action...but!"
"Hey Jai. We started. But Sandhya got a call and she in to thoughts. What happened Sandhya?" வாயால்தான் கேட்டான் சுக். ஆனால் கையும் பேசியது.
"From home. Some problem. Need to go immediately." ஏதோ யோசனையோடு சொன்னாள்.
"What? leaving now? just another 10 minutes Sandhya? please......." சுக் கெஞ்சினான்.
"No Sukh. I have to. something serious....now I really cant. Please understand. Anyway Jai is here. You still have option...I will join tomorrow." சுக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பினார்கள். ஆனால் வரும் பொழுது சந்தியாவின் அணைப்பிலிருந்த இறுக்கம் இப்பொழுது இல்லாமல் இருந்தது அவர்களால் உணர முடிந்தது.
அன்புடன்,
கோ.இராகவன்
"ஆமா...எப்ப நெதர்லாந்துக்குக் கெளம்புற? விசா எல்லாம் கெடைச்சிருச்சா? அதுக்கு ஏதாவது முயற்சி செஞ்சிருக்கியா?" இந்தக் கேள்வியைக் கேட்ட தேன்மொழியின் ஆர்வம் நமக்கு மட்டும் இல்லாமலா போகும்? சரவணனையும் சந்தியாவையும் வீட்டிற்கு விருந்திற்கு அழைத்திருந்தாள் தேன்மொழி. சரவணன் தேன்மொழியின் கணவனோடு பேசிக்கொண்டிருக்கையில் சந்தியாவும் தேன்மொழியும் உள்ளே பேசிக்கொண்டிருந்தனர்.
"நெதர்லாந்துக்கா? நானா? நான் ஏண்டி அங்க போகனும்? எல்லாரும் இதத்தான் கேக்குறாங்கன்னா...நீயுமா? ஒனக்குக்குத்தான் என்னையப் பத்தித் தெரியுமே."
"தெரியும். தெரியும். ஆனாலும் கல்யாணம் செஞ்சாச்சு. நான் அன்னைக்கே சொன்னேன். சரவணன் கேட்டதும் நீ ஒத்துக்குவன்னு. அதான் நடந்தது. அதே மாதிரி அவன் பின்னாடி குடுகுடுன்னு ஓடத்தான் போற." கண்ணைச் சிமிட்டிச் சொன்னாள் தேன்மொழி.
"ஆகா....உலகமகா ஜோசியக்காரி. சினிமாவுக்குப் பாட்டெழுதுறத விட்டுட்டு நீ ஜோசியம் பாக்கப் போகலாம். கல்யாணம் ஏன் செஞ்சோம்? எனக்கா? இல்ல அவனுக்கா? கண்டிப்பா இல்ல. எங்களுக்கு வேணுங்குறதும் எங்கயும் கிடைக்கும். ஆனா சுந்தருக்கு? அவனுக்காகத்தான் கல்யாணம்."
"சுந்தருக்கா? அம்மா முரண்பாடுகளின் மொத்த உருவமே! தனியா அவனை வளர்க்க முடியும்னுதானே குழந்தையே பெத்துக்கிட்ட. அப்புறம் எதுக்கு கல்யாணம். திடீர்னு பயம் வந்திருச்சா?"
"இல்லடீ. இல்ல. No பயம். பிரச்சனை என்னன்னா? யாரோ தெரியாத donorனா பிரச்சனையே இல்லை. ஆனா இங்க...சரவணன். அவன் கிட்ட ரொம்ப நாள் மறைக்கவும் முடியலை. என்னோட கொழந்தைதான...எனக்கும் பங்கு உண்டுன்னு அவன் கேக்கும் போது மறுக்குறது சரியில்லைன்னு தோணுச்சு. அதான். அந்த ஒரு காரணந்தான். மத்தபடி இந்த கல்யாணத்தாலதான் எனக்கும் சரவணனுக்கும் எந்த உறவும் உருவாகனும்னு இல்ல. புரிஞ்சதா? அதுனால......."
"அதுனால?"
"நானும் சுந்தரும் சென்னையில என்னோட அப்பார்ட்மெண்டுல இருப்போம். எனக்கும் வேலை இருக்கு. எனக்கும் அம்மா அப்பா இருக்காங்க. அதுனால சரவணனோட வீட்டுலயும் இருக்க மாட்டேன். அப்பப்போ போய்ப் பாத்துக்கலாம். அவ்வளவுதான். ஆகையால சரவணன் மட்டும் நெதர்லாந்து கெளம்பிப் போறான். அடுத்த வாரம். தன்ன்ன்னியா!"
அந்த அடுத்த வாரம் விரைவிலேயே வந்தது. சென்னை விமான நிலையத்தில் அவனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டிற்குப் போனார்கள் அனைவரும். வழக்கமாக தனிமையில் கட்டிக்கொள்ளும் சரவணனும் சந்தியாவும்..அன்று அனைவரின் முன்னிலையிலும் கட்டிக் கொண்டு பிரிந்தார்கள். சந்தியா அன்று அலுவலகத்திற்கு விடுப்பு. ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தாள். மாலை நான்கு மணி இருக்கும். ஒரு தொலைபேசி அழைப்பு.
"Hi Sandhya, itz Jaideep here. how are you doing?"
ஓ! அந்த சினிமாக்காரனா! "Hey Jaideep! how are you? i am doing very fine. whatz up?"
"Me fine. Today I saw you in the airport. And from that time.....something is bubbling in my stomach. how about evening? can you come to GRT grand? i am there in 2047. It will be nice if you can make it around 6."
ஏண்டா...அன்னைக்கு அந்த நடிகன் பின்னாடி ஓடுனியே...இன்னைக்கு என்ன...நான்? anyway....you are good...i know..சரி. ஒத்துக்கலாம். "Oh sure Jai. Itz treat to me....I will be there at 6. 2047, right?"
அந்த 2047ல் சரியாக ஆறு மணிக்கு இருந்தாள் சந்தியா. உள்ளே வெறும் ஷார்ட்சோடு காத்துக்கொண்டிருந்தான் ஜெய்தீப். வேறொரு இளைஞன் ஒருவனும் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து கொண்டு தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தான். சந்தியாவின் கண்கள் அவனையும் நோட்டம் விடத் தவறவில்லை. வந்த சந்தியாவைக் கட்டி அணைத்து முத்தமிட்டு வரவேற்றான் ஜெய். "Hey Sandhya...meet my friend sukh. Please have a small talk. I will take bath and come fast." குளியலறைக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொண்டான் ஜெய்.
சுக்கின் விரல் சந்தியாவெங்கும் ஓடி....எவைகளையெல்லாம் களைய வேண்டுமோ...அவைகளையெல்லாம் களைந்தன. சந்தியாவிற்கு மட்டும் களையெடுக்கத் தெரியாதா என்ன? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்தார். வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்தார். விழலுக்கும் நீர் பாய்ச்சி மாய மாட்டார்.
"வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலாவே" சந்தியாவின் அலைபேசி பாடியது. எரிச்சல். "Wait Sukh. let me check whoze that?" அவசரமாக அலைபேசியை எடுத்தாள், "ஹலோ?"
"ஹே சந்தி! சரவணன் பேசுறேன். எப்படி இருக்க. இப்பதான் வந்து சேந்தேன்."
"One sec Sukh." சுக்கிடம் இருந்து தன்னை எடுத்துக் கொண்டு விலகினாள். "நல்லாயிருக்கோம். நீ எப்படி இருக்க? ஃபிளைட் வசதியா இருந்ததா?"
"நல்லாயிருந்தது. இப்பதான் வீட்டுக்குள்ள நொழைஞ்சேன். வழியெல்லாம் உன்னையும் சுந்தரையுந்தான் நெனச்சுக்கிட்டேயிருந்தேன். அதான் வந்ததும் கூப்டாச்சு. வீட்ல இருக்கியா? இன்னைக்கு ஆபீசுக்குப் போகலைன்னு சொன்னியே. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?"
"ஆமா. வீட்டுலதான்..நல்லா தூங்கீட்டிருந்தேன். நீ கூப்டதும்தான் எந்திரிச்சேன். அதான் குரல்..."
"சரி. சரி. நீ தூங்கு. எனக்கும் தூக்கம் வருது. எட்டு மணிக்கு ஃபோன் பண்ணு. சரியா? Take care. Bye."
அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு யோசித்தாள்.
"Whoz that Sandhya? What are you contemplating?" எழுந்து வந்து சந்தியாவோடு உரசினான் சுக். குளித்து முடித்திருந்த ஜெய்தீப் குளியலறையிருந்து வெளியே வந்தான். "hey! what happened? I was expecting a visual treat 'when i come out. I opened the door expecting you both in action...but!"
"Hey Jai. We started. But Sandhya got a call and she in to thoughts. What happened Sandhya?" வாயால்தான் கேட்டான் சுக். ஆனால் கையும் பேசியது.
"From home. Some problem. Need to go immediately." ஏதோ யோசனையோடு சொன்னாள்.
"What? leaving now? just another 10 minutes Sandhya? please......." சுக் கெஞ்சினான்.
"No Sukh. I have to. something serious....now I really cant. Please understand. Anyway Jai is here. You still have option...I will join tomorrow." சுக்கிடம் இருந்து விடுவித்துக் கொண்டு உடைகளை மாட்டிக் கொண்டு கிளம்பினாள். அணைத்து முத்தமிட்டு வழி அனுப்பினார்கள். ஆனால் வரும் பொழுது சந்தியாவின் அணைப்பிலிருந்த இறுக்கம் இப்பொழுது இல்லாமல் இருந்தது அவர்களால் உணர முடிந்தது.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, March 15, 2007
11ம் பகுதி கள்ளியிலும் பால்
முந்தைய பகுதி இங்கே
"உண்மையாவா சொல்ற சந்தியா? நெஜமாவா?" நமக்கு ஒரு குழந்தை இருந்து அது நமக்கே தெரியாமல் இருந்து...பிறகு தெரிய வந்தால்? இவ்வளவு ஆச்சரியமாகத்தான் யாரும் கேட்பார்கள். சரவணனின் கேள்விக்கு ஆமாம் என்ற ஒரு சொல் விடைதான் சந்தியாவிடம் இருந்து கிடைத்தது.
"சரி. சந்தியா. நீ சொல்றத நம்புறேன். ஆனா இப்ப என்னால எதையும் யோசிக்க முடியல. நாளைக்குக் காலைல இதப் பத்திப் பேசிக்கலாம். Good Night" சரவணனால் பேச முடியவில்லை. எதையாவது யோசிக்க முடிந்தால்தானே அதைப் பேச முடியும். அப்படி யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடக்கூடாதே என்றுதான் காலையில் பேசுவதாகச் சொன்னான்.
திடீரென பெரிய மனிதனாக மாறிவிட்டது போல இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் மீன் போல உணர்ந்தான். என்னவோ ஊர் உலகத்தில் எல்லாரும் அவனையே பார்த்துக்கொண்டிப்பது போல. எதையோ சாதித்த பெருமை. ஆனாலும் என்னவோ சோகம் கலந்த ஆத்திரம். இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் மறந்து போனது. கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு சந்தியாவிற்கு ஒரு செய்தி அனுப்பினான். "GM Sandhy. Dont go to office. I'm coming 2 ur house 2 c u and sundar. wanna talk 2 u"
சொன்னது போலச் சரியாக பத்து மணிக்கு சந்தியாவின் வீட்டில் இருந்தான். அந்த நேரத்திலும் அவனுக்கு அங்கு சிவகாமி காபி போட்டுக் கொடுத்தார். சுந்தர் சரவணனிடம் எளிதாகச் சேர்ந்து கொண்டான். அவர்கள் கொஞ்சிக் கொண்டதையெல்லாம் விலாவாரியாக விவரிப்பதை விட ஒரு பாடலைச் சொல்லி எளிதாக விளக்கி விடுகிறேன்.
கவியரசரின் ஒரு பாடல். கவியரசர் என்றால் கண்ணதாசந்தான். வேறு யாரையும் நினைக்க வேண்டாம். ரிஷிமூலம் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியது. "நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத" என்று தொடங்கும் பாடலில் இப்படி வரும்.
மனைவி: திங்கள் ஒளி திங்களைப் போல்
உங்கள் பிள்ளை உங்களைப் போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை
கணவன்: நீ பெற்ற பிள்ளையின்
கோபமும் வேகமும்
உன்னைப் போலத் தோன்றுதே
அப்படித்தான் சுந்தரும் எளிதாக சரவணனுடன் சேர்ந்து கொண்டான் என்று நினைக்கிறேன். அந்தப் புதுமையான குடும்பத்திற்கும் கொஞ்சம் தனி நேரமும் இடமும் கிடைத்தது. அப்பொழுது சரவணனுன் சந்தியாவும் மனம் விட்டுப் பேசி சில முடிவுகள் எடுக்க முடிந்தது.
முதலில் சரவணன் இப்படிக் கேட்டான். "சந்தி, சுந்தர் எனக்கும் மகன். அப்ப அவன் எனக்கும் சொந்தம். அதுனால இவனோட அப்பா நாந்தானு மொதல்ல ரெக்கார்ட் பண்ணனும்."
"சரி. Thatz easy. செஞ்சிரலாம்."
"அப்புறம் நம்ம கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன?"
"என்னது கல்யாணமா? அப்படி வா வழிக்கு! ஒன்னோட கொழந்தைய பெத்துக்கிட்டேன்னு தெரிஞ்சதும்....கல்யாணம்னு என்னைய அடிமைப்படுத்தப் பாக்குறியா? நீ ஏன்டா இப்பிடி? இந்த ஒலகத்துல பெண்கள லேசா எப்படி அடிமைப் படுத்தலாம் தெரியுமா? கொழந்தைங்கள வெச்சு. குழந்தைங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாட்டுல நெறையாப் பொம்பளைங்க என்னைக்கோ புருஷங்களைத் தொரத்தீருப்பாங்க. நான் ஒன்னய கல்யாணம் செஞ்சுக்கனும். காலெமெல்லாம் ஒன்னையையும் ஒன்னோட கொழந்தையையும் பாத்துக்கிட்டு உன்னோட பேர எனக்கு இன்ஷியலா போடனும். அதான ஒனக்கு வேண்டியது?" சட்டென்று கேட்டாள் சந்தியா.
"Oh my god! ஒன்னோட சொற்பொழிவு முடிஞ்சதா? மண்டு. நீ எப்படி இருந்தாலும் S.Sandhyaதான். அத மொதல்ல தெரிஞ்சிக்க. இனிஷியலுக்காக சொல்லலை. சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. நம்ம கல்யாணம்னு செஞ்சுக்கிட்டாலும் ஒருத்தொருக்கொருத்தர் எடஞ்சலா இருக்கக் கூடாது. நம்ம நட்பு பழையபடிதான் தொடரும். எல்லா விஷயத்துலயும். உன்னோட சந்தோஷத்துக்கு நான் கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டேன். நீயும் சுந்தரும் வழக்கம் போல சென்னைலயே இருக்கலாம். சரியா? It is just an agreement recorded but not binding. Mutualy beneficial. Mutualy exclusive. Mutualy accepted"
சரவணன் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ என்று நினைத்தாள். ஆகையால் கொஞ்சம் யோசித்தாள். யோசனையெல்லாம் முடிந்த பிறகு அவன் சொல்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் அவளாகவும் அவன் அவனாகவும் இருந்து கொள்ள முடியும் என்றால் அவளுக்குச் சரி என்று தோன்றியது. ஒரு வேளை நாளை அவன் முருங்கை மரத்தில் ஏறினால்? சரி. வேப்பிலை அடித்துத் துரத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். அவள் மனம் இந்த பொம்மைத் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது. ஆனால் அவளுடைய தன்மானத்தை இழக்க விரும்பாமல் ஒரு பிரச்சனையை எழுப்பினாள்.
"சரவணா, எல்லாம் சரிதான். ஆனா artificial inseminationனு எல்லாருக்கும் சொல்லியிருக்கேன். இப்பப் போயி எப்படி மாத்திச் சொல்றது? அப்ப நான் சொன்னது பொய்னு தெரிஞ்சிடும். அப்புறம் எனக்குக் கண்டிப்பா கெட்ட பேர்தான் கிடைக்கும். you know how hypocrats think. இதுக்கு என்ன வழி?"
சரவணன் யோசித்தான். சந்தியாவும் தோற்கக் கூடாது. உண்மையும் வெளியே தெரிய வேண்டும். "Dont worry Sandhy. உனக்குக் குழந்தை பிறக்க நாந்தான் donorஆ இருந்தேன்னு சொல்லீர்ரேன். சுந்தர் பொறந்ததுக்குப் பிறகு யோசிச்சுப் பாக்கும் போது இந்த முடிவுக்கு வந்தோம்னு சொல்லீரலாம். அதெல்லாம் நான் பேசிக்கிறேன். இந்த விஷயத்த எல்லாம் யாரும் துருவித் துருவிக் கேக்க மாட்டாங்க. சரி. நான் இப்பவே ஒங்க அப்பா கிட்ட பேசுறேன். அப்படியே வீட்டுக்குப் போய் என்னோட அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லிச் சம்மதம் வாங்கீர்ரேன்."
சொன்னபடி சுந்தரராஜனிடமும் சிவகாமியுடனும் பேசினார். அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம். ஆனால் திருமணத்திற்கு உடனே ஒத்துக்கொண்டார்கள். நல்லவேளை என்று நினைத்திருப்பார்கள். அதே போல அவனுடைய வீட்டிலும் பேசிச் சம்மதமும் வாங்கி விட்டான். மாடு வாங்கப் போனால் கன்றோடு கூட்டிக் கொண்டு வருகிறானே என்று நினைத்தார்கள். ஆனால் குழந்தை சரவணனுடையதுதான் என்று உறுதியாக அவன் அடித்துச் சொன்னதும் அவர்களும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள்.
கண்ணனுக்கும் தகவல் போனது. வாணியும் மிகவும் மகிழ்ந்தாள். ராஜம்மாள் இதையும் நாலைந்து விதமாகப் பேசினாலும் அவரால் என்ன செய்ய முடியும்? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தார். மிகவும் எளிமையான பதிவுத் திருமணமாக நடந்தது. தாலியெல்லாம் கட்டிக்கொள்ள மறுத்து விட்டாள் சந்தியா. சரவணனும் அதில் விருப்பமில்லாமல் இருந்தான். மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். அது கூட மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத்தான். அவர்களின் முதலிரவும்(!) நல்லபடியாக நடந்தது.
தன்னுடைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள் சந்தியா. அவளுடைய பெற்றோர்களும் இருக்கிறார்களே. அவர்கள் டி.நகர் வீட்டில் கண்ணனோடு இருக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் சந்தியா குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள்? சரவணன் அவனது பெற்றோர்களை விட்டு வருகிறானானா என்ன? பிறகு அவள் மட்டும் ஏன் என்று கேட்டு எல்லார் வாயையும் அடைத்து விட்டாள். சரவணன் விரைவிலேயே நெதர்லாண்டு திரும்ப வேண்டும் என்பதால் இங்கு கொஞ்ச நாளும் அவன் வீட்டில் கொஞ்ச நாளுமாகக் களி(ழி)த்தான்.
(அடுத்த பகுதியில் இந்தக் கதை முடியும்.)
தொடரும்.....
"உண்மையாவா சொல்ற சந்தியா? நெஜமாவா?" நமக்கு ஒரு குழந்தை இருந்து அது நமக்கே தெரியாமல் இருந்து...பிறகு தெரிய வந்தால்? இவ்வளவு ஆச்சரியமாகத்தான் யாரும் கேட்பார்கள். சரவணனின் கேள்விக்கு ஆமாம் என்ற ஒரு சொல் விடைதான் சந்தியாவிடம் இருந்து கிடைத்தது.
"சரி. சந்தியா. நீ சொல்றத நம்புறேன். ஆனா இப்ப என்னால எதையும் யோசிக்க முடியல. நாளைக்குக் காலைல இதப் பத்திப் பேசிக்கலாம். Good Night" சரவணனால் பேச முடியவில்லை. எதையாவது யோசிக்க முடிந்தால்தானே அதைப் பேச முடியும். அப்படி யோசிக்காமல் எதையாவது சொல்லிவிடக்கூடாதே என்றுதான் காலையில் பேசுவதாகச் சொன்னான்.
திடீரென பெரிய மனிதனாக மாறிவிட்டது போல இருந்தது. கண்ணாடித் தொட்டிக்குள் இருக்கும் மீன் போல உணர்ந்தான். என்னவோ ஊர் உலகத்தில் எல்லாரும் அவனையே பார்த்துக்கொண்டிப்பது போல. எதையோ சாதித்த பெருமை. ஆனாலும் என்னவோ சோகம் கலந்த ஆத்திரம். இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கம் மறந்து போனது. கிட்டத்தட்ட ஐந்து மணிக்கு சந்தியாவிற்கு ஒரு செய்தி அனுப்பினான். "GM Sandhy. Dont go to office. I'm coming 2 ur house 2 c u and sundar. wanna talk 2 u"
சொன்னது போலச் சரியாக பத்து மணிக்கு சந்தியாவின் வீட்டில் இருந்தான். அந்த நேரத்திலும் அவனுக்கு அங்கு சிவகாமி காபி போட்டுக் கொடுத்தார். சுந்தர் சரவணனிடம் எளிதாகச் சேர்ந்து கொண்டான். அவர்கள் கொஞ்சிக் கொண்டதையெல்லாம் விலாவாரியாக விவரிப்பதை விட ஒரு பாடலைச் சொல்லி எளிதாக விளக்கி விடுகிறேன்.
கவியரசரின் ஒரு பாடல். கவியரசர் என்றால் கண்ணதாசந்தான். வேறு யாரையும் நினைக்க வேண்டாம். ரிஷிமூலம் என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் டி.எம்.சௌந்தரராஜனும் பி.சுசீலாவும் பாடியது. "நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத" என்று தொடங்கும் பாடலில் இப்படி வரும்.
மனைவி: திங்கள் ஒளி திங்களைப் போல்
உங்கள் பிள்ளை உங்களைப் போல்
உங்களைத்தான் நாடுகிறான்
என்னிடம் ஆசையில்லை
கணவன்: நீ பெற்ற பிள்ளையின்
கோபமும் வேகமும்
உன்னைப் போலத் தோன்றுதே
அப்படித்தான் சுந்தரும் எளிதாக சரவணனுடன் சேர்ந்து கொண்டான் என்று நினைக்கிறேன். அந்தப் புதுமையான குடும்பத்திற்கும் கொஞ்சம் தனி நேரமும் இடமும் கிடைத்தது. அப்பொழுது சரவணனுன் சந்தியாவும் மனம் விட்டுப் பேசி சில முடிவுகள் எடுக்க முடிந்தது.
முதலில் சரவணன் இப்படிக் கேட்டான். "சந்தி, சுந்தர் எனக்கும் மகன். அப்ப அவன் எனக்கும் சொந்தம். அதுனால இவனோட அப்பா நாந்தானு மொதல்ல ரெக்கார்ட் பண்ணனும்."
"சரி. Thatz easy. செஞ்சிரலாம்."
"அப்புறம் நம்ம கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன?"
"என்னது கல்யாணமா? அப்படி வா வழிக்கு! ஒன்னோட கொழந்தைய பெத்துக்கிட்டேன்னு தெரிஞ்சதும்....கல்யாணம்னு என்னைய அடிமைப்படுத்தப் பாக்குறியா? நீ ஏன்டா இப்பிடி? இந்த ஒலகத்துல பெண்கள லேசா எப்படி அடிமைப் படுத்தலாம் தெரியுமா? கொழந்தைங்கள வெச்சு. குழந்தைங்க மட்டும் இல்லைன்னா இன்னைக்கு நாட்டுல நெறையாப் பொம்பளைங்க என்னைக்கோ புருஷங்களைத் தொரத்தீருப்பாங்க. நான் ஒன்னய கல்யாணம் செஞ்சுக்கனும். காலெமெல்லாம் ஒன்னையையும் ஒன்னோட கொழந்தையையும் பாத்துக்கிட்டு உன்னோட பேர எனக்கு இன்ஷியலா போடனும். அதான ஒனக்கு வேண்டியது?" சட்டென்று கேட்டாள் சந்தியா.
"Oh my god! ஒன்னோட சொற்பொழிவு முடிஞ்சதா? மண்டு. நீ எப்படி இருந்தாலும் S.Sandhyaதான். அத மொதல்ல தெரிஞ்சிக்க. இனிஷியலுக்காக சொல்லலை. சுந்தருக்காக மட்டுந்தான் சொல்றேன். புரிஞ்சிக்கோ. நம்ம கல்யாணம்னு செஞ்சுக்கிட்டாலும் ஒருத்தொருக்கொருத்தர் எடஞ்சலா இருக்கக் கூடாது. நம்ம நட்பு பழையபடிதான் தொடரும். எல்லா விஷயத்துலயும். உன்னோட சந்தோஷத்துக்கு நான் கண்டிப்பா குறுக்க நிக்க மாட்டேன். நீயும் சுந்தரும் வழக்கம் போல சென்னைலயே இருக்கலாம். சரியா? It is just an agreement recorded but not binding. Mutualy beneficial. Mutualy exclusive. Mutualy accepted"
சரவணன் சொல்லி முடித்ததும் அவசரப்பட்டுச் சொல்லிவிட்டோமோ என்று நினைத்தாள். ஆகையால் கொஞ்சம் யோசித்தாள். யோசனையெல்லாம் முடிந்த பிறகு அவன் சொல்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் அவளாகவும் அவன் அவனாகவும் இருந்து கொள்ள முடியும் என்றால் அவளுக்குச் சரி என்று தோன்றியது. ஒரு வேளை நாளை அவன் முருங்கை மரத்தில் ஏறினால்? சரி. வேப்பிலை அடித்துத் துரத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டாள். அவள் மனம் இந்த பொம்மைத் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது. ஆனால் அவளுடைய தன்மானத்தை இழக்க விரும்பாமல் ஒரு பிரச்சனையை எழுப்பினாள்.
"சரவணா, எல்லாம் சரிதான். ஆனா artificial inseminationனு எல்லாருக்கும் சொல்லியிருக்கேன். இப்பப் போயி எப்படி மாத்திச் சொல்றது? அப்ப நான் சொன்னது பொய்னு தெரிஞ்சிடும். அப்புறம் எனக்குக் கண்டிப்பா கெட்ட பேர்தான் கிடைக்கும். you know how hypocrats think. இதுக்கு என்ன வழி?"
சரவணன் யோசித்தான். சந்தியாவும் தோற்கக் கூடாது. உண்மையும் வெளியே தெரிய வேண்டும். "Dont worry Sandhy. உனக்குக் குழந்தை பிறக்க நாந்தான் donorஆ இருந்தேன்னு சொல்லீர்ரேன். சுந்தர் பொறந்ததுக்குப் பிறகு யோசிச்சுப் பாக்கும் போது இந்த முடிவுக்கு வந்தோம்னு சொல்லீரலாம். அதெல்லாம் நான் பேசிக்கிறேன். இந்த விஷயத்த எல்லாம் யாரும் துருவித் துருவிக் கேக்க மாட்டாங்க. சரி. நான் இப்பவே ஒங்க அப்பா கிட்ட பேசுறேன். அப்படியே வீட்டுக்குப் போய் என்னோட அப்பா கிட்டயும் அம்மா கிட்டயும் சொல்லிச் சம்மதம் வாங்கீர்ரேன்."
சொன்னபடி சுந்தரராஜனிடமும் சிவகாமியுடனும் பேசினார். அவர்களுக்குப் பெரிய ஆச்சரியம். ஆனால் திருமணத்திற்கு உடனே ஒத்துக்கொண்டார்கள். நல்லவேளை என்று நினைத்திருப்பார்கள். அதே போல அவனுடைய வீட்டிலும் பேசிச் சம்மதமும் வாங்கி விட்டான். மாடு வாங்கப் போனால் கன்றோடு கூட்டிக் கொண்டு வருகிறானே என்று நினைத்தார்கள். ஆனால் குழந்தை சரவணனுடையதுதான் என்று உறுதியாக அவன் அடித்துச் சொன்னதும் அவர்களும் ஒருவழியாக ஒத்துக்கொண்டார்கள்.
கண்ணனுக்கும் தகவல் போனது. வாணியும் மிகவும் மகிழ்ந்தாள். ராஜம்மாள் இதையும் நாலைந்து விதமாகப் பேசினாலும் அவரால் என்ன செய்ய முடியும்? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தார். மிகவும் எளிமையான பதிவுத் திருமணமாக நடந்தது. தாலியெல்லாம் கட்டிக்கொள்ள மறுத்து விட்டாள் சந்தியா. சரவணனும் அதில் விருப்பமில்லாமல் இருந்தான். மோதிரம் மட்டும் மாற்றிக் கொண்டார்கள். அது கூட மற்றவர்களின் வற்புறுத்தலுக்காகத்தான். அவர்களின் முதலிரவும்(!) நல்லபடியாக நடந்தது.
தன்னுடைய வீட்டை விட்டு வர மறுத்து விட்டாள் சந்தியா. அவளுடைய பெற்றோர்களும் இருக்கிறார்களே. அவர்கள் டி.நகர் வீட்டில் கண்ணனோடு இருக்கப் போவதாகச் சொன்னார்கள். ஆனால் சந்தியா குறுக்கே விழுந்து தடுத்து விட்டாள்? சரவணன் அவனது பெற்றோர்களை விட்டு வருகிறானானா என்ன? பிறகு அவள் மட்டும் ஏன் என்று கேட்டு எல்லார் வாயையும் அடைத்து விட்டாள். சரவணன் விரைவிலேயே நெதர்லாண்டு திரும்ப வேண்டும் என்பதால் இங்கு கொஞ்ச நாளும் அவன் வீட்டில் கொஞ்ச நாளுமாகக் களி(ழி)த்தான்.
(அடுத்த பகுதியில் இந்தக் கதை முடியும்.)
தொடரும்.....
Tuesday, March 13, 2007
10ம் பகுதி கள்ளியிலும் பால்
முந்தைய பகுதி இங்கே
"நீ எதுக்கு முசுமுசுன்னு அழுகுற? அதான் டாக்டர் கிட்ட போறோமே. ஒன்னயப் பாத்து இவனோட அழுகையும் கூடுது பாரு." சிவகாமி சந்தியாவை அதட்டினார். எதற்கு என்று கேட்கின்றீர்களா? வரிசையாகச் சொல்கிறேன்.
1. கவிப்பூ தேன்மொழியின் "கள்ளியிலும் பால்" கையெழுத்து நிகழ்ச்சிக்காகச் சுந்தரைத் தூக்கிக் கொண்டு சந்தியாவும் சிவகாமியும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றனர்.
2. அங்கு எக்கச்சக்க கூட்டம் தேனை மொய்த்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தேன்மொழி சந்தியாவை முன்னால் அழைத்து ஒரு புத்தகத்தைப் பரிசளித்தாள்.
3. அந்நேரம் பார்த்து சுந்தர் முனகலில் தொடங்கி அழுகைக்கு மாறி கதறலுக்குத் தாவினான். சிவகாமி என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.
4. தேன்மொழியிடம் அவசரமாக விடை பெற்று இருவரும் வெளியே வந்தனர். நேராக மலர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை மருத்துவர் மதிவதனனைப் பார்க்கச் சென்றார்கள்.
5. வழியில் சரவணன் சந்தியாவைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சிவகாமியிடம் அழைப்பது யாரென்று பார்க்கச் சொன்னாள் சந்தியா. யாராக இருந்தாலும் பிறகு பேசுவதாகச் சொல்லச் சொன்னாள். ஆனால் அது சரவணன் என்பதால் சிவகாமி "சுந்தருக்கு உடம்பு சரியில்லை. மலருக்குப் போறோம். பிறகு பேசுறோம்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டார்.
6. ஏற்கனவே சுந்தர் அழுவதால் கலங்கியிருந்த சந்தியா இதைக் கேட்டதும் மிகவும் துவண்டு போனாள். என்ன செய்வது என்று ஒரு அச்சம். அது மெல்லிய அழுகையாகக் கண்களில் வழிந்தது.
அப்பொழுதுதான் சிவகாமி சந்தியாவை அழாமல் இருக்கச் சொன்னார். சுந்தர் அழுவதுதான் அவள் அழுகைக்கான முழுக்காரணம் என்பது சிவகாமியின் நினைப்பு.
சிவகாமியிடம் பேசிய பிறகு குழம்பிப் போனான் சரவணன். சுந்தருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது அவனைக் குழப்பியது. சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்தான். பெரியவரும் கூட. அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து பயந்தான். அப்பொழுது அடையாறில்தான் இருந்ததால் மலருக்கே நேராகச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.
இதுவரை வாசகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சரவணன் சுந்தர் சந்திப்பு மலர் மருத்துவமனை வாசலில் நடந்தது. சரவணனை அங்கு எதிர்பார்க்காத சந்தியா கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள். அழுததன் காரணமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்து சிவகாமி சம்பிரதாயமாக "நல்லாயிருக்கியா சரவணா" என்று முதலில் கேட்டார்.
பிறகு, "நீயே சொல்லுப்பா சந்தியாகிட்ட. சுந்தர் அழுகுறான்னு இவளும் முசுமுசுன்னு அழுகுறா. குழந்தைன்னா அப்படி இப்பிடி ஏதாவது இருக்கும். அழுதா ஆச்சா?" என்று சொன்னவர் சந்தியாவைப் பார்த்து "வா உள்ள போகலாம்" என்று அழைத்து உள்ளே சென்றார்.
மலர் மருத்துவமனையில் சுந்தரின் பெயர் ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அங்கு பிறந்தவந்தானே. அதுவுமில்லாமல் மதிவதனன்தான் சுந்தருக்கு முதலிலிருந்தே மருத்துவம் பார்ப்பது. ஆகையால் அவனை நன்றாக அறிவார் அவர். சுந்தருடைய விவரங்களை மருத்துவமனை ரிசப்ஷனில் சரிபார்க்கையில் சரவணனுக்குச் சுந்தர் சந்தியாவின் குழந்தை என்று தெரிந்து போனது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நெருங்கிய தோழி. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்புடைய தோழி. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தியையே சொல்லாமல் மறைத்திருந்தால்? ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்விகள் முளைக்குமல்லவா? அதுவுமில்லாமல் சந்தியாவிற்குக் குழந்தை பிறந்தது....இவனுக்கே குழந்தை பிறந்தது போலத் தோன்றியது. ஒவ்வொரு பொழுது நாமும் இப்பிடிச் சொல்வோம். "ஏய்...என்னோட மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி." என்று. அந்த மாதிரி...சந்தியாவை வெளியாள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.
உண்மையைச் சொன்னால் மொத்தத்தில் தடுமாறித்தான் போனான் சரவணன். நல்லவேளை. அவன் சற்று யோசித்து முடிவெடுக்கின்றவன். ஆகையால் அங்கு எதுவும் கேட்கவும் விரும்பவில்லை. சந்தியாவும் சிவகாமியையும் திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் படுக்கையில் சாய்ந்து படுத்தவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். அப்படியா யோசிப்பார்கள்? அதுவும் இரவு பத்து மணி வரைக்கும். பிறகு யோசனைகளைத் தலையணக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு சந்தியாவை அலைபேசியில் அழைத்தான்.
சந்தியா அதற்குள் சுதாரித்திருந்தாள். இனிமேல் எதையும் மறைப்பதில் பயனில்லை. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு அவளும் வந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி என்று அவள் துணிந்திருந்தாள். அதுவுமில்லாமல் வயிற்றுச் சூட்டினால் அழுத சுந்தர் மருந்து குடித்து விட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சரியாக அந்நேரத்தில் சரவணனின் அலைபேசி அழைப்பு வந்தது.
"ஹே சந்தி, என்ன பண்ற?"
"ஒன்னும் பண்ணலடா. சும்மா உக்காந்திருக்கேன்."
"சுந்தருக்கு இப்ப எப்படி இருக்கு?" நேரடியாக பிரச்சனைக்குள் தலையை விட்டான் சரவணன்.
"மருந்து குடுத்தப்புறம் நல்லா தூங்குறான். வயித்து வலி குறைஞ்சிருக்கனும்." அவளும் சளைத்தவள் இல்லையே.
"சுந்தரப் பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்லலையே சந்தி! ஏம்மா?" சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மீது ஆத்திரத்தை விட வருத்தம்தான் வரும். அந்த வருத்தத்தில்தான் கேட்டான் சரவணன்.
"உண்மதான். கண்டிப்பா ஒங்கிட்ட சொல்லீருக்கனும். ஆனா ஏதோ நெனைச்சுக்கிட்டு மறைச்சிட்டேன். உன் கிட்ட மறைச்சது என்னைக் குத்தாத நாளே கிடையாது. ஆனா இந்தக் குழந்தையைப் பெத்துக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா?"
"என்னது நானா? என்ன சொல்ற?" சரவணன் என்ற பெயரை ஹிரோஷிமா நாகசாகி என்று மாற்றியிருக்கலாம். இல்லை ஈராக் என்று மாற்றியிருக்கலாம்.
"ஆமா. நீ சென்னைல இருந்த வரைக்கும் உன்னோட துணையும் நட்பும் இருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா நீ நெதர்லாண்ட் போனப்புறம் திடீர்னு ஒலகத்துல தனியா நிக்குற மாதிரி நெனைப்பு வந்தது. ஒன்னய திரும்ப வான்னும் கூப்பிட முடியலை. நீ என்னை அங்க வரச்சொன்னப்பவும் ஒத்துக்க முடியலை. இந்த நிலமைல என்னோட தனிமையப் போக்க ஒரு குழந்தை வேணும்னு தோணிச்சு. அதான் பெத்துக்கிட்டேன். அதுனால என்னோட தனிமை போச்சு. என்னை விட்டு நீ போனதுக்கு உன்னையப் பழி வாங்குனதா ஒரு திருப்தி. அதான் உங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சேன். ஆனா என்னைக்காவது உண்மை வெளிய வரும்னு தெரியும். அதுனால எனக்குக் கஷ்டம் வந்தா உதவ நீ இருக்கன்னு தெரியும். அதுனாலதான் அப்படியே விட்டுட்டேன். இதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புன்னா நீ கொடுக்குற தண்டனை எதானாலும் சரி. ஏத்துக்கத் தயார்." திரைப்பட வசனம் போல இருந்தாலும் சந்தியா உண்மையைத்தான் சொன்னாள்.
"எல்லாம் சரிம்மா. எதுன்னாலும் எங்கிட்டதான வந்து கேப்ப! அப்படியிருக்குறப்போ ஒனக்குக் கொழந்த வேணும்னதும் என்னோட நெனைப்பு வரலயே. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. அந்த அளவுக்கா என் மேல கோவம்?" சரவணனும் உண்மையைத்தான் சொன்னான்.
"இல்லடா. இல்ல. குழந்தை வேணும்னதும் நான் மொதல்ல உன்னையத்தான் நெனச்சேன். அதுனால.......Sundar is our son. அதாவது சுந்தர் ஒனக்கும் எனக்கும் பொறந்தவன்."
தொடரும்.....
"நீ எதுக்கு முசுமுசுன்னு அழுகுற? அதான் டாக்டர் கிட்ட போறோமே. ஒன்னயப் பாத்து இவனோட அழுகையும் கூடுது பாரு." சிவகாமி சந்தியாவை அதட்டினார். எதற்கு என்று கேட்கின்றீர்களா? வரிசையாகச் சொல்கிறேன்.
1. கவிப்பூ தேன்மொழியின் "கள்ளியிலும் பால்" கையெழுத்து நிகழ்ச்சிக்காகச் சுந்தரைத் தூக்கிக் கொண்டு சந்தியாவும் சிவகாமியும் ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றனர்.
2. அங்கு எக்கச்சக்க கூட்டம் தேனை மொய்த்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் தேன்மொழி சந்தியாவை முன்னால் அழைத்து ஒரு புத்தகத்தைப் பரிசளித்தாள்.
3. அந்நேரம் பார்த்து சுந்தர் முனகலில் தொடங்கி அழுகைக்கு மாறி கதறலுக்குத் தாவினான். சிவகாமி என்ன செய்தும் அழுகை நிற்கவில்லை.
4. தேன்மொழியிடம் அவசரமாக விடை பெற்று இருவரும் வெளியே வந்தனர். நேராக மலர் மருத்துவமனைக்குச் சென்று குழந்தை மருத்துவர் மதிவதனனைப் பார்க்கச் சென்றார்கள்.
5. வழியில் சரவணன் சந்தியாவைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறான். சிவகாமியிடம் அழைப்பது யாரென்று பார்க்கச் சொன்னாள் சந்தியா. யாராக இருந்தாலும் பிறகு பேசுவதாகச் சொல்லச் சொன்னாள். ஆனால் அது சரவணன் என்பதால் சிவகாமி "சுந்தருக்கு உடம்பு சரியில்லை. மலருக்குப் போறோம். பிறகு பேசுறோம்" என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டார்.
6. ஏற்கனவே சுந்தர் அழுவதால் கலங்கியிருந்த சந்தியா இதைக் கேட்டதும் மிகவும் துவண்டு போனாள். என்ன செய்வது என்று ஒரு அச்சம். அது மெல்லிய அழுகையாகக் கண்களில் வழிந்தது.
அப்பொழுதுதான் சிவகாமி சந்தியாவை அழாமல் இருக்கச் சொன்னார். சுந்தர் அழுவதுதான் அவள் அழுகைக்கான முழுக்காரணம் என்பது சிவகாமியின் நினைப்பு.
சிவகாமியிடம் பேசிய பிறகு குழம்பிப் போனான் சரவணன். சுந்தருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னது அவனைக் குழப்பியது. சுந்தரராஜன் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைத்தான். பெரியவரும் கூட. அவருக்கு எதுவும் பிரச்சனை இருக்கலாம் என்று நினைத்து பயந்தான். அப்பொழுது அடையாறில்தான் இருந்ததால் மலருக்கே நேராகச் சென்று விடலாம் என்று முடிவு செய்தான்.
இதுவரை வாசகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சரவணன் சுந்தர் சந்திப்பு மலர் மருத்துவமனை வாசலில் நடந்தது. சரவணனை அங்கு எதிர்பார்க்காத சந்தியா கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள். அழுததன் காரணமாக மூக்கை உறிஞ்சிக் கொண்டிருந்தாள். சரவணனைப் பார்த்து சிவகாமி சம்பிரதாயமாக "நல்லாயிருக்கியா சரவணா" என்று முதலில் கேட்டார்.
பிறகு, "நீயே சொல்லுப்பா சந்தியாகிட்ட. சுந்தர் அழுகுறான்னு இவளும் முசுமுசுன்னு அழுகுறா. குழந்தைன்னா அப்படி இப்பிடி ஏதாவது இருக்கும். அழுதா ஆச்சா?" என்று சொன்னவர் சந்தியாவைப் பார்த்து "வா உள்ள போகலாம்" என்று அழைத்து உள்ளே சென்றார்.
மலர் மருத்துவமனையில் சுந்தரின் பெயர் ஏற்கனவே பதியப்பட்டிருந்தது. அங்கு பிறந்தவந்தானே. அதுவுமில்லாமல் மதிவதனன்தான் சுந்தருக்கு முதலிலிருந்தே மருத்துவம் பார்ப்பது. ஆகையால் அவனை நன்றாக அறிவார் அவர். சுந்தருடைய விவரங்களை மருத்துவமனை ரிசப்ஷனில் சரிபார்க்கையில் சரவணனுக்குச் சுந்தர் சந்தியாவின் குழந்தை என்று தெரிந்து போனது. அவனுக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே சொல்லுங்கள்? ஒரு நெருங்கிய தோழி. அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்புடைய தோழி. அவளுக்குக் குழந்தை பிறந்த செய்தியையே சொல்லாமல் மறைத்திருந்தால்? ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்விகள் முளைக்குமல்லவா? அதுவுமில்லாமல் சந்தியாவிற்குக் குழந்தை பிறந்தது....இவனுக்கே குழந்தை பிறந்தது போலத் தோன்றியது. ஒவ்வொரு பொழுது நாமும் இப்பிடிச் சொல்வோம். "ஏய்...என்னோட மருமகனா இருந்தாலும் மகன் மாதிரி." என்று. அந்த மாதிரி...சந்தியாவை வெளியாள் என்று அவனால் நினைக்க முடியவில்லை.
உண்மையைச் சொன்னால் மொத்தத்தில் தடுமாறித்தான் போனான் சரவணன். நல்லவேளை. அவன் சற்று யோசித்து முடிவெடுக்கின்றவன். ஆகையால் அங்கு எதுவும் கேட்கவும் விரும்பவில்லை. சந்தியாவும் சிவகாமியையும் திரும்ப வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு இவன் வீட்டிற்குச் சென்றான். வீட்டில் படுக்கையில் சாய்ந்து படுத்தவன் யோசித்துக் கொண்டேயிருந்தான். அப்படியா யோசிப்பார்கள்? அதுவும் இரவு பத்து மணி வரைக்கும். பிறகு யோசனைகளைத் தலையணக்கு அடியில் தள்ளி வைத்து விட்டு சந்தியாவை அலைபேசியில் அழைத்தான்.
சந்தியா அதற்குள் சுதாரித்திருந்தாள். இனிமேல் எதையும் மறைப்பதில் பயனில்லை. உண்மையைச் சொல்லிவிட வேண்டியதுதான் என்ற நிலைக்கு அவளும் வந்திருந்தாள். என்ன நடந்தாலும் சரி என்று அவள் துணிந்திருந்தாள். அதுவுமில்லாமல் வயிற்றுச் சூட்டினால் அழுத சுந்தர் மருந்து குடித்து விட்டு அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். சரியாக அந்நேரத்தில் சரவணனின் அலைபேசி அழைப்பு வந்தது.
"ஹே சந்தி, என்ன பண்ற?"
"ஒன்னும் பண்ணலடா. சும்மா உக்காந்திருக்கேன்."
"சுந்தருக்கு இப்ப எப்படி இருக்கு?" நேரடியாக பிரச்சனைக்குள் தலையை விட்டான் சரவணன்.
"மருந்து குடுத்தப்புறம் நல்லா தூங்குறான். வயித்து வலி குறைஞ்சிருக்கனும்." அவளும் சளைத்தவள் இல்லையே.
"சுந்தரப் பத்தி எங்கிட்ட ஒன்னுமே சொல்லலையே சந்தி! ஏம்மா?" சமயங்களில் நமக்கு வேண்டியவர்கள் ஏதாவது செய்து விட்டால் அவர்கள் மீது ஆத்திரத்தை விட வருத்தம்தான் வரும். அந்த வருத்தத்தில்தான் கேட்டான் சரவணன்.
"உண்மதான். கண்டிப்பா ஒங்கிட்ட சொல்லீருக்கனும். ஆனா ஏதோ நெனைச்சுக்கிட்டு மறைச்சிட்டேன். உன் கிட்ட மறைச்சது என்னைக் குத்தாத நாளே கிடையாது. ஆனா இந்தக் குழந்தையைப் பெத்துக்கிறதுக்கு நீதான் காரணம் தெரியுமா?"
"என்னது நானா? என்ன சொல்ற?" சரவணன் என்ற பெயரை ஹிரோஷிமா நாகசாகி என்று மாற்றியிருக்கலாம். இல்லை ஈராக் என்று மாற்றியிருக்கலாம்.
"ஆமா. நீ சென்னைல இருந்த வரைக்கும் உன்னோட துணையும் நட்பும் இருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. ஆனா நீ நெதர்லாண்ட் போனப்புறம் திடீர்னு ஒலகத்துல தனியா நிக்குற மாதிரி நெனைப்பு வந்தது. ஒன்னய திரும்ப வான்னும் கூப்பிட முடியலை. நீ என்னை அங்க வரச்சொன்னப்பவும் ஒத்துக்க முடியலை. இந்த நிலமைல என்னோட தனிமையப் போக்க ஒரு குழந்தை வேணும்னு தோணிச்சு. அதான் பெத்துக்கிட்டேன். அதுனால என்னோட தனிமை போச்சு. என்னை விட்டு நீ போனதுக்கு உன்னையப் பழி வாங்குனதா ஒரு திருப்தி. அதான் உங்கிட்ட சொல்ல முடியாமத் தவிச்சேன். ஆனா என்னைக்காவது உண்மை வெளிய வரும்னு தெரியும். அதுனால எனக்குக் கஷ்டம் வந்தா உதவ நீ இருக்கன்னு தெரியும். அதுனாலதான் அப்படியே விட்டுட்டேன். இதுக்காக உன் கிட்ட மன்னிப்பு கேக்க மாட்டேன். ஏன்னா நான் செஞ்சது தப்புன்னா நீ கொடுக்குற தண்டனை எதானாலும் சரி. ஏத்துக்கத் தயார்." திரைப்பட வசனம் போல இருந்தாலும் சந்தியா உண்மையைத்தான் சொன்னாள்.
"எல்லாம் சரிம்மா. எதுன்னாலும் எங்கிட்டதான வந்து கேப்ப! அப்படியிருக்குறப்போ ஒனக்குக் கொழந்த வேணும்னதும் என்னோட நெனைப்பு வரலயே. அதத்தான் என்னால தாங்கிக்க முடியல. அந்த அளவுக்கா என் மேல கோவம்?" சரவணனும் உண்மையைத்தான் சொன்னான்.
"இல்லடா. இல்ல. குழந்தை வேணும்னதும் நான் மொதல்ல உன்னையத்தான் நெனச்சேன். அதுனால.......Sundar is our son. அதாவது சுந்தர் ஒனக்கும் எனக்கும் பொறந்தவன்."
தொடரும்.....
Monday, March 12, 2007
முருகனும் தெய்வயானையும்
சமீபத்தில் முருகனைப் பற்றி ஹரிஹரன் ஒரு பரபரப்புப் பதிவு போட அதற்குப் பதிலாக விடாதுகருப்பு ஒரு பதிவு போட. பிறகு முத்துக்குமரனின் வடமொழி பற்றிய ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் விழுந்தது. அதை வைத்து முத்துக்குமரன் ஒரு பதிவு போட அதில் அனானி நண்பர் ஒருவர் இந்தப் பிரச்சனை குறித்து என்னுடைய கருத்து என்ன என்று கேட்டிருந்தார்.
முருகனைப் பற்றி தகவல் பரிமாற்றம் என்ற வகையில் நடக்கும் கலந்துரையாடலில் கருத்துச் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. அனைத்தும் அறிந்தவன் அல்லன் என்றாலும் தெரிந்ததைச் சொல்வது சரிதானே. அதைத்தான் இங்கு சொல்லப் போகிறேன். அதை ஏற்கனவே முத்துக்குமரனின் இந்தப் பதிவில் கூறியிருந்தாலும் சற்று விளக்கமாக இங்கு சொல்கிறேன். அதற்குக் காரணம் அங்கு மற்றொரு நண்பர் கேட்ட கேள்வி. முருகனை வள்ளி தெய்வயானையோடு போற்றி வணங்கும் நான் எனக்கும் முருகனுக்கும் நேர்மையாக கருத்தை எடுத்து வைக்கிறேன். அனைத்தும் முருகன் செயல். "யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"
ஜிரா: "எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட."
GR,
Refer line 6 in Tirumurukatrupadai. Here the 'Karpu' mentioned is Deivayanai. Read great scholar Kamil V. Zvlebil's legendary research work on Muruka.
Thanks
VRP
சரி. பழைய தமிழ்நூல்களைப் பார்த்தால் முருகனையும் வள்ளியையும் மட்டுமே காணமுடியும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமாக இருந்தாலும் வள்ளியும் முருகனும்தான் வருவார்கள். தெய்வயானையைப் பற்றிய குறிப்பு கிடையாது. தமிழில் முதலில் எழுந்த இறைநூல் திருமுருகாற்றுப்படை என்பார்கள். அதுவுமில்லாமல் ஆற்றுப்படை வீடுகளைத் தொகுத்ததும் அந்த நூல்தான். அந்த நூலில்தான் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் சொல்லப்படுகிறது. பலர் பழநிதானே முதற்படை வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் கனி கிடைக்காது நின்றது...பிறகு தந்தைக்கு மந்திரம் சொன்னது...பிறகு சூரனை வென்றது..பிறகு தெய்வயானையை மணந்தது...வள்ளியை மணந்தது....இரண்டு மனைவியரோடு நின்றது என்று வரிசையாக நினைப்பார்கள்.
ஆனால் நக்கீரர் மக்களை இறைவனிடம் ஆற்றுப்படுத்துவதறாக எடுத்துக்கொண்டது ஆறுவீடுகள். அவைகள் வரிசையாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று வரும். ஆகையால் இதுதான் சரியான வரிசை. இதில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இப்பொழுது தெய்வயானையை மணம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் திருமுருகாற்றுப்படையில் அப்படியொரு திருமணம் நடந்ததாகவே நக்கீரர் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆனால் வள்ளியைப் பற்றிய குறிப்பு பெயரோடு உண்டு. "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே" என்று குறிப்பிடுகிறார். அதாவது முருகப் பெருமான் குறக்கொடியாம் குலக்கொடி வள்ளியொடு மகிழ்ச்சி தரும் புன்னகை பொலிய அமர்ந்திருக்கிறாராம். வள்ளி என்று சொல்லி அவள் குறத்தி என்ற சொல்லியிருக்கிறார்.
சரி. நண்பர் குறிப்பிடும் ஆறாம் வரிக்கு வருவோம். இது திருப்பரங்குன்றத்திற்கு உரியது. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்" என்பது அந்த வரி. இதற்குப் பொருள் என்ன?
மறு இல் கற்பின் - குற்றமற்ற பண்புடையவளின்
வாணுதல் கணவன் - ஒளிர்பொலி நெற்றி கொண்ட கணவன்
நற்பண்புடைய ஒரு பெண்ணின் கணவன் என்பது அந்த வரிக்கான பொருள். அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சரி. பெயரைக் குறிப்பிடா விட்டாலும் யாருடைய மகள் என்று சொல்லியிருக்கலாமே? வள்ளி என்பவள் குறத்தி என்று விரித்துச் சொன்ன நக்கீரருக்கு தெய்வயானை என்பவள் ஆனை வளர்த்த மகள் என்றோ தேவேந்திரன் மகளென்றோ சொல்லியிருக்கலாமே!
ஒருவேளை நக்கீரருக்குத் தேவேந்திரனைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா என்றால் அதுவும் இல்லை. "யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்" என்றும் சொல்லி விடுகிறார். அதாவது ஆனை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் முருகனைப் போற்றினான் என்று சொல்ல வருகிறார்.
நண்பர் வி.ஆர்.பி சொல்லியிருப்பது போல கற்பு என்ற சொல்லாடல் தெய்வயானையைக் குறிப்பதாகக் கொண்டால்....ஏன் தெய்வயானையை மட்டும் கற்பு என்ற சொல்லால் குறிப்பிட வேண்டும்? வள்ளிக்குக் கற்பு கிடையாதா? இவைகளே எனக்கு எழும் கேள்விகள்.
ஆனால் பிற்காலத்தைய நூல்களில் கண்டிப்பாக தெய்வயானை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மறுக்க முடியாது. ஆனால் சங்க நூல்களில்? என்னறிவுக்கு எட்டி இல்லை. இன்னொரு தகவல். பிள்ளையாரின் துணையால்தான் முருகன் வள்ளியை மணந்தார் என்ற குறிப்பும் திருமுருகாற்றுப்படையில் இல்லை.
இவையனைத்தும் எனக்குத் தெரிந்த கருத்துகள். இந்தக் கருத்துக்கு மறுப்புக் கருத்திருந்தால் தெரிந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி
அன்புடன்,
கோ.இராகவன்
முருகனைப் பற்றி தகவல் பரிமாற்றம் என்ற வகையில் நடக்கும் கலந்துரையாடலில் கருத்துச் சொல்வது சரியென்றே தோன்றுகிறது. அனைத்தும் அறிந்தவன் அல்லன் என்றாலும் தெரிந்ததைச் சொல்வது சரிதானே. அதைத்தான் இங்கு சொல்லப் போகிறேன். அதை ஏற்கனவே முத்துக்குமரனின் இந்தப் பதிவில் கூறியிருந்தாலும் சற்று விளக்கமாக இங்கு சொல்கிறேன். அதற்குக் காரணம் அங்கு மற்றொரு நண்பர் கேட்ட கேள்வி. முருகனை வள்ளி தெய்வயானையோடு போற்றி வணங்கும் நான் எனக்கும் முருகனுக்கும் நேர்மையாக கருத்தை எடுத்து வைக்கிறேன். அனைத்தும் முருகன் செயல். "யாம் ஓதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததினால்!"
ஜிரா: "எனக்குத் தெரிந்து தெய்வயானையைப் பழைய தமிழ் நூல்களில் காண முடியாது. திருமுருகாற்றுப்படை உட்பட."
GR,
Refer line 6 in Tirumurukatrupadai. Here the 'Karpu' mentioned is Deivayanai. Read great scholar Kamil V. Zvlebil's legendary research work on Muruka.
Thanks
VRP
சரி. பழைய தமிழ்நூல்களைப் பார்த்தால் முருகனையும் வள்ளியையும் மட்டுமே காணமுடியும். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமாக இருந்தாலும் வள்ளியும் முருகனும்தான் வருவார்கள். தெய்வயானையைப் பற்றிய குறிப்பு கிடையாது. தமிழில் முதலில் எழுந்த இறைநூல் திருமுருகாற்றுப்படை என்பார்கள். அதுவுமில்லாமல் ஆற்றுப்படை வீடுகளைத் தொகுத்ததும் அந்த நூல்தான். அந்த நூலில்தான் முதல் படைவீடாக திருப்பரங்குன்றம் சொல்லப்படுகிறது. பலர் பழநிதானே முதற்படை வீடாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் கனி கிடைக்காது நின்றது...பிறகு தந்தைக்கு மந்திரம் சொன்னது...பிறகு சூரனை வென்றது..பிறகு தெய்வயானையை மணந்தது...வள்ளியை மணந்தது....இரண்டு மனைவியரோடு நின்றது என்று வரிசையாக நினைப்பார்கள்.
ஆனால் நக்கீரர் மக்களை இறைவனிடம் ஆற்றுப்படுத்துவதறாக எடுத்துக்கொண்டது ஆறுவீடுகள். அவைகள் வரிசையாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்று வரும். ஆகையால் இதுதான் சரியான வரிசை. இதில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இப்பொழுது தெய்வயானையை மணம் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால் திருமுருகாற்றுப்படையில் அப்படியொரு திருமணம் நடந்ததாகவே நக்கீரர் சொல்லவில்லை என்பது என் கருத்து. ஆனால் வள்ளியைப் பற்றிய குறிப்பு பெயரோடு உண்டு. "குறவர் மடமகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே" என்று குறிப்பிடுகிறார். அதாவது முருகப் பெருமான் குறக்கொடியாம் குலக்கொடி வள்ளியொடு மகிழ்ச்சி தரும் புன்னகை பொலிய அமர்ந்திருக்கிறாராம். வள்ளி என்று சொல்லி அவள் குறத்தி என்ற சொல்லியிருக்கிறார்.
சரி. நண்பர் குறிப்பிடும் ஆறாம் வரிக்கு வருவோம். இது திருப்பரங்குன்றத்திற்கு உரியது. "மறு இல் கற்பின் வாணுதல் கணவன்" என்பது அந்த வரி. இதற்குப் பொருள் என்ன?
மறு இல் கற்பின் - குற்றமற்ற பண்புடையவளின்
வாணுதல் கணவன் - ஒளிர்பொலி நெற்றி கொண்ட கணவன்
நற்பண்புடைய ஒரு பெண்ணின் கணவன் என்பது அந்த வரிக்கான பொருள். அதில் தெய்வயானையைப் பற்றிய குறிப்பு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. சரி. பெயரைக் குறிப்பிடா விட்டாலும் யாருடைய மகள் என்று சொல்லியிருக்கலாமே? வள்ளி என்பவள் குறத்தி என்று விரித்துச் சொன்ன நக்கீரருக்கு தெய்வயானை என்பவள் ஆனை வளர்த்த மகள் என்றோ தேவேந்திரன் மகளென்றோ சொல்லியிருக்கலாமே!
ஒருவேளை நக்கீரருக்குத் தேவேந்திரனைப் பற்றித் தெரியாமல் இருந்திருக்குமா என்றால் அதுவும் இல்லை. "யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன்" என்றும் சொல்லி விடுகிறார். அதாவது ஆனை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் முருகனைப் போற்றினான் என்று சொல்ல வருகிறார்.
நண்பர் வி.ஆர்.பி சொல்லியிருப்பது போல கற்பு என்ற சொல்லாடல் தெய்வயானையைக் குறிப்பதாகக் கொண்டால்....ஏன் தெய்வயானையை மட்டும் கற்பு என்ற சொல்லால் குறிப்பிட வேண்டும்? வள்ளிக்குக் கற்பு கிடையாதா? இவைகளே எனக்கு எழும் கேள்விகள்.
ஆனால் பிற்காலத்தைய நூல்களில் கண்டிப்பாக தெய்வயானை பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. மறுக்க முடியாது. ஆனால் சங்க நூல்களில்? என்னறிவுக்கு எட்டி இல்லை. இன்னொரு தகவல். பிள்ளையாரின் துணையால்தான் முருகன் வள்ளியை மணந்தார் என்ற குறிப்பும் திருமுருகாற்றுப்படையில் இல்லை.
இவையனைத்தும் எனக்குத் தெரிந்த கருத்துகள். இந்தக் கருத்துக்கு மறுப்புக் கருத்திருந்தால் தெரிந்து கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்.
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி
அன்புடன்,
கோ.இராகவன்
தூத்துக்குடியை ஆண்டவந்தான் காப்பாத்தனும்
உண்மை அதுதாங்க. போன வாரம் தூத்துக்குடிக்கு அவசர வேலையாப் போக வேண்டியிருந்தது. அப்பப் பாத்ததையும் கேட்டதையும் வெச்சுத்தான் சொல்றேன் தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.
மதுரைப் பக்கத்தில இருந்து தூத்துக்குடிக்குப் போறவங்க பாஞ்சாலங்குறிச்சிக்கான குறுக்குச்சாலை வழியாகப் போகனும். அப்படித் தூத்துக்குடிக்குள்ள நொழையும் போது மொதல்ல புதிய பேருந்து நிலையம் வரும். அது நான் சின்னப்பிள்ளையிலேயே பழைய பேருந்து நிலையமாயிருச்சு. இருந்தாலும் அது ரெண்டாவது வந்ததால இன்னைக்கும் புதிய பேருந்து நிலையந்தான். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில்வே தண்டவாளம் ஓடும். அதுதான் தூத்துக்குடியப் பிரிக்கிறது.
அந்த ரயில்வே தண்டவாளத்துல ஒன்னாங் கேட்டு, ரெண்டாங் கேட்டு, மூனாங்கேட்டுன்னு மூனு கதவுகள். ரயில் போறப்ப மட்டும் மூடுவாங்க. அதுல மூனாங்கேட்டுங்குறது புதிய பேருந்து நிலையம் பக்கத்துல இருக்கு. அது வழியாத்தான் பழைய பேருந்து நிலையத்துக்கும் ஊருக்குள்ளயும் போயாகனும். ஆனா பாருங்க...அங்க எப்பவுமே ஒரே நெரிசல். கூட்டம். போக்குவரத்துக் குழப்பம்னு எக்கச்சக்க பிரச்சனைகள்.
சரி...இந்த மாதிரிப் பிரச்சனைகளை ஒரு மேம்பாலம் தீத்துருதே. அதுனால ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாலம் கெட்டத் தொடங்குனாங்க. அதுக்கேத்த மாதிரி பெரிய தூண்களை எழுப்பியும் சாரச்சுவரு கட்டியும்னு வேலை தொடங்குச்சு. ஆனா இன்னைக்கும் அது அப்படியே இருக்கு. வேலை அதுக்கப்புறம் நடக்கலை.
ஏன்னா அதுக்குக் காரணம் தூத்துக்குடி பெரியசாமிதான்னு ஊருக்குள்ள பேச்சு. இவரு பலமுறை சட்டமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. கட்சித் தலைமையிடம் நல்ல செல்வாக்கு. ஊருக்குள்ளயும் வெளியயும் நல்ல சொத்து. அவருதான் பாலங்கட்ட விடாம தடுக்கிறது. அதுக்கு வெளிப்படையா சொல்ற காரணம்...பாலங்கட்டுனாலும் பிரச்சனை தீராதாம். ஆனா உண்மையான காரணம் வேற. பாலம் வந்துச்சுன்னா பக்கத்துலயே இருக்குற அவரோட மக பேர்ல கெட்டுன பெரிய ஓட்டல அது மறைக்குமே. அதுவுமில்லாம அந்த மகதான இப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கூட. அமைச்சரும் கூட.
அத்தோட விட்டாரா? இன்னொரு புதுத்திட்டத்தையும் கொண்டு வந்துருக்காரு. அதாவது தூத்துக்குடி வளர்ந்துக்கிட்டே போகுதாம். அதுனால ரயில் நிலையத்த ஏற்கனவே இருக்குற எடத்துல இருந்து நகட்டி ஊருக்கு வெளிய இருக்குற மீளவட்டானுக்குக் (பக்கத்துச் சிற்றூர்) கொண்டு போயிரனுமாம். அப்படிக் கொண்டு போயிட்டா...பழைய தண்டவாளங்க தேவையில்லையே. கேட்டப் பூட்ட வேண்டிய அவசியமில்லையே. அப்ப மேம்பாலம் வேணும்னு கேக்க மாட்டாங்கள்ள. அதுவுமில்லாம மீளவட்டான் வட்டாராத்துல இவரு நெலம் வாங்கிப் போட்டிருக்காருன்னு சொல்றாங்க. ரயில் நிலையம் அங்க போயிட்டா? நெலத்தோட மதிப்பு எங்கயோ போயிரும்ல. அடேங்கப்பா! ஒரே கல்லுல ரெண்டு மாந்தோப்பு.
இதுல இன்னொரு நகைச்சுவை என்னன்னா....முந்தி தூத்துக்குடிக் கலெக்டரா இருந்த ஹேமந்த்குமார் சின்ஹாங்குறவரு ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொன்னூறுகள்ளயே தூத்துக்குடிக்கான ரயில்வே நிலையத்தை மீளவட்டானுக்கு மாத்தனும்னு சொன்னாரு. அப்ப அதக் குறுக்க விழுந்து தடுத்தது இவர்தானாம்.
இப்படி ஒரு மக்ரூன் மாதிரி (தூத்துக்குடிக்காரங்களுக்கு லட்ட விட மக்ரூன் பெருசு) பிரச்சனை இருக்கும் போது எதிர்க்கட்சி புகுந்து விளையாடியிருக்க வேண்டாமோ? ஆனா முக்கிய எதிர்க்கட்டிகளான அதிமுகவும் மதிமுகவும் சத்தமே காட்டலை. ஆனா பாருங்க திமுகவோட கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சி கிண்டலடிக்கி. முனிசிபல் ஆபீஸ் முன்னாடி மிகப் பெரிய தட்டி வெச்சிருக்காங்க. அதுலதான் நான் சொன்ன தகவல்களைக் கிண்டலாச் சொல்லியிருக்காங்க. அதுல காங்கிரஸ் கட்சியோட உள்ளூரு, மாநில, அகில இந்தியப் புள்ளிகளோட அத்தன பேரோட படங்களும் இருக்கு. இருந்தாலும் இன்னும் ஒரு முடிவும் தெரியல. வேலை நடக்குற அடையாளமே காணோம். அதிகுமவுக்கும் மதிமுகவுக்கும் கிடைச்ச எதோ ஒன்னு காங்கிரசுக்குக் கிடைக்கலையோ என்னவோ!
அதுவுமில்லாம ஊருக்குள்ள சாலைகளைப் பாக்கனுமே.....பிறந்தநாள் கொண்டாடுவாங்களே அது மாதிரி சாலைல போறவங்க வர்ரவங்க அந்தக் குழிக்கு மூனு வயசு. இந்தக் குண்டுக்கு நாலு வயசுன்னு பேசுறாங்க. ஆனாலும் குழிங்களும் குண்டுங்களும் நாளொரு குட்டியா போட்டு வம்ச விருத்தி செய்றாங்க. அதுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் வழியக் காணோம். இது எந்தக் கட்சியில இருந்து சட்டமன்ற உறுப்பினர் வந்தாலும் இந்த நெலமைதான். அதான் சொன்னேன்....தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.
(இந்தப் பதிவிற்கான தகவல்கள் தூத்துக்குடி வாழ் மக்கள் சிலரிடம் இருந்தும் தூத்துக்குடிச் சுவரொட்டிகளில் இருந்தும் ரோடுகள், பாலங்கள் ஆகியவற்றின் நிலமைகளை நேரில் பார்த்ததில் இருந்தும் பெறப்பட்டன.)
அன்புடன்,
கோ.இராகவன்
மதுரைப் பக்கத்தில இருந்து தூத்துக்குடிக்குப் போறவங்க பாஞ்சாலங்குறிச்சிக்கான குறுக்குச்சாலை வழியாகப் போகனும். அப்படித் தூத்துக்குடிக்குள்ள நொழையும் போது மொதல்ல புதிய பேருந்து நிலையம் வரும். அது நான் சின்னப்பிள்ளையிலேயே பழைய பேருந்து நிலையமாயிருச்சு. இருந்தாலும் அது ரெண்டாவது வந்ததால இன்னைக்கும் புதிய பேருந்து நிலையந்தான். அந்தப் பேருந்து நிலையத்தை ஒட்டி ரயில்வே தண்டவாளம் ஓடும். அதுதான் தூத்துக்குடியப் பிரிக்கிறது.
அந்த ரயில்வே தண்டவாளத்துல ஒன்னாங் கேட்டு, ரெண்டாங் கேட்டு, மூனாங்கேட்டுன்னு மூனு கதவுகள். ரயில் போறப்ப மட்டும் மூடுவாங்க. அதுல மூனாங்கேட்டுங்குறது புதிய பேருந்து நிலையம் பக்கத்துல இருக்கு. அது வழியாத்தான் பழைய பேருந்து நிலையத்துக்கும் ஊருக்குள்ளயும் போயாகனும். ஆனா பாருங்க...அங்க எப்பவுமே ஒரே நெரிசல். கூட்டம். போக்குவரத்துக் குழப்பம்னு எக்கச்சக்க பிரச்சனைகள்.
சரி...இந்த மாதிரிப் பிரச்சனைகளை ஒரு மேம்பாலம் தீத்துருதே. அதுனால ரெண்டு வருசத்துக்கு முன்னாடி பாலம் கெட்டத் தொடங்குனாங்க. அதுக்கேத்த மாதிரி பெரிய தூண்களை எழுப்பியும் சாரச்சுவரு கட்டியும்னு வேலை தொடங்குச்சு. ஆனா இன்னைக்கும் அது அப்படியே இருக்கு. வேலை அதுக்கப்புறம் நடக்கலை.
ஏன்னா அதுக்குக் காரணம் தூத்துக்குடி பெரியசாமிதான்னு ஊருக்குள்ள பேச்சு. இவரு பலமுறை சட்டமன்ற உறுப்பினரா இருந்திருக்காரு. கட்சித் தலைமையிடம் நல்ல செல்வாக்கு. ஊருக்குள்ளயும் வெளியயும் நல்ல சொத்து. அவருதான் பாலங்கட்ட விடாம தடுக்கிறது. அதுக்கு வெளிப்படையா சொல்ற காரணம்...பாலங்கட்டுனாலும் பிரச்சனை தீராதாம். ஆனா உண்மையான காரணம் வேற. பாலம் வந்துச்சுன்னா பக்கத்துலயே இருக்குற அவரோட மக பேர்ல கெட்டுன பெரிய ஓட்டல அது மறைக்குமே. அதுவுமில்லாம அந்த மகதான இப்போதைய சட்டமன்ற உறுப்பினரும் கூட. அமைச்சரும் கூட.
அத்தோட விட்டாரா? இன்னொரு புதுத்திட்டத்தையும் கொண்டு வந்துருக்காரு. அதாவது தூத்துக்குடி வளர்ந்துக்கிட்டே போகுதாம். அதுனால ரயில் நிலையத்த ஏற்கனவே இருக்குற எடத்துல இருந்து நகட்டி ஊருக்கு வெளிய இருக்குற மீளவட்டானுக்குக் (பக்கத்துச் சிற்றூர்) கொண்டு போயிரனுமாம். அப்படிக் கொண்டு போயிட்டா...பழைய தண்டவாளங்க தேவையில்லையே. கேட்டப் பூட்ட வேண்டிய அவசியமில்லையே. அப்ப மேம்பாலம் வேணும்னு கேக்க மாட்டாங்கள்ள. அதுவுமில்லாம மீளவட்டான் வட்டாராத்துல இவரு நெலம் வாங்கிப் போட்டிருக்காருன்னு சொல்றாங்க. ரயில் நிலையம் அங்க போயிட்டா? நெலத்தோட மதிப்பு எங்கயோ போயிரும்ல. அடேங்கப்பா! ஒரே கல்லுல ரெண்டு மாந்தோப்பு.
இதுல இன்னொரு நகைச்சுவை என்னன்னா....முந்தி தூத்துக்குடிக் கலெக்டரா இருந்த ஹேமந்த்குமார் சின்ஹாங்குறவரு ஆயிரத்து தொள்ளாயிரத்துத் தொன்னூறுகள்ளயே தூத்துக்குடிக்கான ரயில்வே நிலையத்தை மீளவட்டானுக்கு மாத்தனும்னு சொன்னாரு. அப்ப அதக் குறுக்க விழுந்து தடுத்தது இவர்தானாம்.
இப்படி ஒரு மக்ரூன் மாதிரி (தூத்துக்குடிக்காரங்களுக்கு லட்ட விட மக்ரூன் பெருசு) பிரச்சனை இருக்கும் போது எதிர்க்கட்சி புகுந்து விளையாடியிருக்க வேண்டாமோ? ஆனா முக்கிய எதிர்க்கட்டிகளான அதிமுகவும் மதிமுகவும் சத்தமே காட்டலை. ஆனா பாருங்க திமுகவோட கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கட்சி கிண்டலடிக்கி. முனிசிபல் ஆபீஸ் முன்னாடி மிகப் பெரிய தட்டி வெச்சிருக்காங்க. அதுலதான் நான் சொன்ன தகவல்களைக் கிண்டலாச் சொல்லியிருக்காங்க. அதுல காங்கிரஸ் கட்சியோட உள்ளூரு, மாநில, அகில இந்தியப் புள்ளிகளோட அத்தன பேரோட படங்களும் இருக்கு. இருந்தாலும் இன்னும் ஒரு முடிவும் தெரியல. வேலை நடக்குற அடையாளமே காணோம். அதிகுமவுக்கும் மதிமுகவுக்கும் கிடைச்ச எதோ ஒன்னு காங்கிரசுக்குக் கிடைக்கலையோ என்னவோ!
அதுவுமில்லாம ஊருக்குள்ள சாலைகளைப் பாக்கனுமே.....பிறந்தநாள் கொண்டாடுவாங்களே அது மாதிரி சாலைல போறவங்க வர்ரவங்க அந்தக் குழிக்கு மூனு வயசு. இந்தக் குண்டுக்கு நாலு வயசுன்னு பேசுறாங்க. ஆனாலும் குழிங்களும் குண்டுங்களும் நாளொரு குட்டியா போட்டு வம்ச விருத்தி செய்றாங்க. அதுக்குக் குடும்பக் கட்டுப்பாட்டுக்கும் வழியக் காணோம். இது எந்தக் கட்சியில இருந்து சட்டமன்ற உறுப்பினர் வந்தாலும் இந்த நெலமைதான். அதான் சொன்னேன்....தூத்துக்குடிய ஆண்டவந்தான் காப்பாத்தனும்னு.
(இந்தப் பதிவிற்கான தகவல்கள் தூத்துக்குடி வாழ் மக்கள் சிலரிடம் இருந்தும் தூத்துக்குடிச் சுவரொட்டிகளில் இருந்தும் ரோடுகள், பாலங்கள் ஆகியவற்றின் நிலமைகளை நேரில் பார்த்ததில் இருந்தும் பெறப்பட்டன.)
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, March 08, 2007
9ம் பகுதி கள்ளியிலும் பால்
முந்தைய பகுதி இங்கே
சந்தியாவைப் பற்றி நாம் நிறைய பார்த்து விட்டோம். ஆனால் சரவணனைப் பற்றி? சரவணன் பல பெண்களோடு பழக்கம் உள்ளவன். புகை அவனுக்கும் பகை. குடிப்பழக்கம்......தொடர் குடியன் அல்ல. ஆனால் தேவைப்பட்டால் அவனால் சிறிது குடிக்க முடியும். மற்ற படி அதன் மேல் அவனுக்கு விருப்பம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் சொல்லி சரவணனை உத்தமன் என்று சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அவன் சாதாரண மனிதன். சந்தியாவிற்குச் சொன்னது இவனுக்கும் ஆகும். ஏமாற்று வேலை, அரசியல், திருட்டு, கொள்ளை, பொறாமை ஆகிய பழக்கங்கள் எல்லாம் நல்ல பழக்கம்....பலருடன் படுப்பது மட்டும் கெட்ட பழக்கம் என்றால் அவன் கெட்டவந்தான்.
சரவணனுக்குச் சந்தியா மிக முக்கியமான உறவு. நட்புறவுதான். அவன் மனதில் நினைப்பதையெல்லாம் அவனது மற்ற நண்பர்களை விட அவளிடம் மிகவும் வெளிப்படையாகப் பேச முடியும். அப்படிப் பட்ட நெருக்கமே அவர்கள் இருவரையும் முதன்முதலில் நெருங்க வைத்தது. ஆனால் இருவரும் அதைக் கை குலுக்குவது போலத்தான் ஆரம்ப காலங்களில்....ஏன் இப்பொழுதும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நெதர்லாண்டில் வேலை கிடைத்ததும் முதலில் அவனை யோசிக்க வைத்தது சந்தியாதான். அவளைப் பிரிந்து அவனால் இருக்க முடியுமா என்றுதான். ஆனால் பக்கத்தில் இருந்தால்தான் உறவா என்று படக்கென்று நெதர்லாண்டு போய் விட்டான். தொடக்கத்தில் அடிக்கடி மெயிலிலும் தொலைபேசியிலும் தொடர்பு வைத்திருந்தான். நாள்பட நாள்பட மெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் குறைந்து கொண்டேயிருந்தன. இருவரின் பணிப்பளுதான் அதற்குக் காரணம். இந்தியாவிற்கு வருவதே அவளுக்காகத்தான். சந்தியாவிற்கும் அங்கேயே ஒரு வேலையைப் பார்த்தான். ஆனால் சந்தியா மறுத்து விட்டாள். அதில் அவனுக்கும் வருத்தந்தான். ஆனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
அது சரியா தவறா என்று விவாதம் செய்து கொண்டேயிருந்தால் அடுத்து என்ன நடந்தது என்பதைப் பார்க்க முடியாது. ஆகையால் கதைக்குப் போகலாம்.
சந்தியாவின் வீட்டிற்குப் போவதற்காகவே நன்றாக உடையணிந்து கொண்டு கும்மென்று வந்தான். சுந்தரராஜனுக்கு ஒரு நல்ல தங்கப்பேனாவும் சிவகாமிக்கு ஒரு அழகான கிச்சன் செட்டும் கொண்டு வந்திருந்தான். அவனை வரவேற்றுக் கதவைத் திறந்தது சந்தியாதான். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து விட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். அவள் செல்லமாக முறைத்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள்.
"என்னம்மா...வீட்டுல யாரையும் காணோம்?" அமைதியான வீடு அவனைக் கேட்க வைத்தது.
தலையைச் சாய்த்துச் சாய்த்து சந்தியா சொன்னாள். "சொல்லவே மறந்துட்டேன் டா. இன்னைக்குக் கண்ணன் புதுக்கார் எடுக்குறான். அதுக்குதான் அம்மாவும் அப்பாவும் போயிருக்காங்க. இப்பதான் கெளம்பிப் போனாங்க." முதலில் சரவணனை வீட்டிற்கு அவசரப்பட்டு வரச்சொல்லி விட்டோமே என்று சந்தியாவும் அஞ்சினாள். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் வாணி சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. ஆகையால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி சுந்தரையும் அப்பாவோடும் அம்மாவோடும் அனுப்பி வைத்தாள். ஆனாலும் அவர்கள் வெளியே போவதைப் பற்றிச் சரவணனிடம் சொல்லாமல் மறைத்தாள். சொல்லி விட்டால் பிறகு வருகிறேன் என்பானே! அதே போலச் சரவணன் வருகிறான் என்று வீட்டிலும் சொல்லவில்லை.
பொத்தென்று சோஃபாவில் விழுந்தான். சந்தியாவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு. "எனக்குச் சொல்லீருக்கலாமே. நான் நாளைக்கு வந்திருப்பேனே! ம்ம்ம்....நீ போகலையா? உன்னோட தம்பிதான கண்ணன்?"
"ஆமா. என்னோட தம்பிதான். போயிருக்கலாம்தான். ஆனா நானும் போயிட்டா வீட்டுல உன்னை யார் வரவேற்குறது." சமாளித்தாள். சரவணனுக்கு லெதர் சோஃபா. சந்தியாவிற்கு சரவணன் சோஃபா.
"ஆகா....என்னோட செல்லம். சரி. இப்ப எனக்குப் பசிக்குதே. காபியாவது போட்டுக் கொடு. டின்னருக்கு என்ன பண்றது?"
அவனது மடியிலிருந்து எழுந்தாள். "இரு காபி போட்டுத் தாரேன். அம்மா டிபன் ஒன்னும் செய்யலை. மேரி ப்ரவுன்ல ஆர்டர் பண்ணீறலாம். சரியா?"
"ஓகே. எதையாவது செய். மொதல்ல ஒரு காபி குடு." பிறகு சந்தியா காபி கொடுத்ததையும் மேரி பிரவுனில் ஆர்டர் கொடுத்ததையும் தன்னைக் கொடுத்ததையும் இப்பொழுது கண்டு கொள்ள வேண்டாம். அடுத்து மேலே போகலாம்.
சுந்தரையும் தூக்கிக் கொண்டு போனது நல்லதாகவே இருந்தது. சிவகாமியும் வாணியும் இருந்ததால் அவனைப் பார்த்துக் கொள்வது எளிதாயிற்று. கண்ணனுடனும் அவன் நன்றாக ஒட்டிக் கொண்டான். கண்ணனுக்கும் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி. ஒரு மகிழ்ச்சி. காரை எடுத்து பூஜை போட்ட கையோடு தங்கமாளிகைக்குச் சென்று சின்னதாக ஒரு தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தான். வாணிக்கும் நிம்மதி. நினைத்தபடியே எல்லாம் நடக்கிறதே. நல்ல வேளையாக ராஜம்மாளை வீட்டிலேயே விட்டுச் சென்றனர். அப்படியே இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் சுந்தரைத் தூக்கிக் கொண்டு பெசண்ட் நகர் திரும்பினர். சந்தியா சொல்லிச் சரவணன் வந்து சென்றதை தெரிந்து கொண்டனர்.
கண்ணன் தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தது சந்தியாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தருக்கு மொட்டை எடுப்பதற்குக் கண்ணனை அழைப்பதில் சிரமம் இருக்காது என்ற முடிவுக்கு அவளால் எளிதாக வரமுடிந்தது. பிரச்சனையிருந்தாலும் வாணி சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நிம்மதியும் சரவணனுடனான பிரியாணியும் அவளை ஒரு மகிழ்சி மேகத்தில் மிதக்க வைத்தது.
அடுத்து வந்த சனி ஞாயிறு சரவணனுக்குப் பரபரப்பாகவே இருந்தது. இந்தியாவிற்கு வரும் முன்பே சாட்டிங்கில் ஒரு கிளியைப் பிடித்து வைத்திருந்தான். அவளோடு பொழுது போனது. நிறைய காபி குடித்தாலும் சுவையில்லையென்றால் நாவில் நிற்காது. அந்த நிலையில்தான் கிளிக்கு டாடா காட்டினான் சரவணன். கிளியும் எண்ணிக்கைக் கணக்கை எண்ணிக் கை தட்டிச் சென்றது.
ஆனால் சந்தியா எங்கும் போகவில்லை. எதனாலோ தேவையிருக்கவில்லை. அவளுடைய வாரயிறுதியும் மகிழ்ச்சியாகவே கழிந்தது. அதற்கு அடுத்த வாரம் இருவருக்கும் மிக வேகமாகச் சென்றது. சரவணனுக்குத் தெரிந்தவர்களைச் சென்று பார்க்க வேண்டியிருந்தாலும் செவ்வாய்க் கிழமை மாலை சந்தியாவோடு fishermen's cove போகத் தயங்கவில்லை. அதற்கு நேரம் கிடைத்த அவனுக்குப் பெசண்ட் நகர் செல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை. :-)
அத்தோடு வியாழக்கிழமை லேண்ட்மார்க்கிற்கு கள்ளியிலும் பால் கவிதைத் தொகுப்பின் கையெழுத்து நிகழ்ச்சிக்காக தேன்மொழி சந்தியாவையும் குடும்பத்தாரையும் அழைத்தாள். சந்தியாவும் ஒப்புக் கொண்டாள். அதுவும் அங்கு வரும் நெரிசலைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல்! ம்ம்ம்...என்ன செய்வது? அவளா இந்தக் கதையை எழுதுகிறாள்? நானல்லவா. எத்தனை முறைதான் அவளைத் தப்பிக்க முடியும்?
தொடரும்....
சந்தியாவைப் பற்றி நாம் நிறைய பார்த்து விட்டோம். ஆனால் சரவணனைப் பற்றி? சரவணன் பல பெண்களோடு பழக்கம் உள்ளவன். புகை அவனுக்கும் பகை. குடிப்பழக்கம்......தொடர் குடியன் அல்ல. ஆனால் தேவைப்பட்டால் அவனால் சிறிது குடிக்க முடியும். மற்ற படி அதன் மேல் அவனுக்கு விருப்பம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் சொல்லி சரவணனை உத்தமன் என்று சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. அவன் சாதாரண மனிதன். சந்தியாவிற்குச் சொன்னது இவனுக்கும் ஆகும். ஏமாற்று வேலை, அரசியல், திருட்டு, கொள்ளை, பொறாமை ஆகிய பழக்கங்கள் எல்லாம் நல்ல பழக்கம்....பலருடன் படுப்பது மட்டும் கெட்ட பழக்கம் என்றால் அவன் கெட்டவந்தான்.
சரவணனுக்குச் சந்தியா மிக முக்கியமான உறவு. நட்புறவுதான். அவன் மனதில் நினைப்பதையெல்லாம் அவனது மற்ற நண்பர்களை விட அவளிடம் மிகவும் வெளிப்படையாகப் பேச முடியும். அப்படிப் பட்ட நெருக்கமே அவர்கள் இருவரையும் முதன்முதலில் நெருங்க வைத்தது. ஆனால் இருவரும் அதைக் கை குலுக்குவது போலத்தான் ஆரம்ப காலங்களில்....ஏன் இப்பொழுதும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நெதர்லாண்டில் வேலை கிடைத்ததும் முதலில் அவனை யோசிக்க வைத்தது சந்தியாதான். அவளைப் பிரிந்து அவனால் இருக்க முடியுமா என்றுதான். ஆனால் பக்கத்தில் இருந்தால்தான் உறவா என்று படக்கென்று நெதர்லாண்டு போய் விட்டான். தொடக்கத்தில் அடிக்கடி மெயிலிலும் தொலைபேசியிலும் தொடர்பு வைத்திருந்தான். நாள்பட நாள்பட மெயில்களும் தொலைபேசி அழைப்புகளும் குறைந்து கொண்டேயிருந்தன. இருவரின் பணிப்பளுதான் அதற்குக் காரணம். இந்தியாவிற்கு வருவதே அவளுக்காகத்தான். சந்தியாவிற்கும் அங்கேயே ஒரு வேலையைப் பார்த்தான். ஆனால் சந்தியா மறுத்து விட்டாள். அதில் அவனுக்கும் வருத்தந்தான். ஆனாலும் அவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.
அது சரியா தவறா என்று விவாதம் செய்து கொண்டேயிருந்தால் அடுத்து என்ன நடந்தது என்பதைப் பார்க்க முடியாது. ஆகையால் கதைக்குப் போகலாம்.
சந்தியாவின் வீட்டிற்குப் போவதற்காகவே நன்றாக உடையணிந்து கொண்டு கும்மென்று வந்தான். சுந்தரராஜனுக்கு ஒரு நல்ல தங்கப்பேனாவும் சிவகாமிக்கு ஒரு அழகான கிச்சன் செட்டும் கொண்டு வந்திருந்தான். அவனை வரவேற்றுக் கதவைத் திறந்தது சந்தியாதான். யாரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்து விட்டு அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்தான். அவள் செல்லமாக முறைத்துக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றாள்.
"என்னம்மா...வீட்டுல யாரையும் காணோம்?" அமைதியான வீடு அவனைக் கேட்க வைத்தது.
தலையைச் சாய்த்துச் சாய்த்து சந்தியா சொன்னாள். "சொல்லவே மறந்துட்டேன் டா. இன்னைக்குக் கண்ணன் புதுக்கார் எடுக்குறான். அதுக்குதான் அம்மாவும் அப்பாவும் போயிருக்காங்க. இப்பதான் கெளம்பிப் போனாங்க." முதலில் சரவணனை வீட்டிற்கு அவசரப்பட்டு வரச்சொல்லி விட்டோமே என்று சந்தியாவும் அஞ்சினாள். ஆனால் வீட்டிற்கு வந்த பிறகுதான் வாணி சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. ஆகையால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படி சுந்தரையும் அப்பாவோடும் அம்மாவோடும் அனுப்பி வைத்தாள். ஆனாலும் அவர்கள் வெளியே போவதைப் பற்றிச் சரவணனிடம் சொல்லாமல் மறைத்தாள். சொல்லி விட்டால் பிறகு வருகிறேன் என்பானே! அதே போலச் சரவணன் வருகிறான் என்று வீட்டிலும் சொல்லவில்லை.
பொத்தென்று சோஃபாவில் விழுந்தான். சந்தியாவின் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு. "எனக்குச் சொல்லீருக்கலாமே. நான் நாளைக்கு வந்திருப்பேனே! ம்ம்ம்....நீ போகலையா? உன்னோட தம்பிதான கண்ணன்?"
"ஆமா. என்னோட தம்பிதான். போயிருக்கலாம்தான். ஆனா நானும் போயிட்டா வீட்டுல உன்னை யார் வரவேற்குறது." சமாளித்தாள். சரவணனுக்கு லெதர் சோஃபா. சந்தியாவிற்கு சரவணன் சோஃபா.
"ஆகா....என்னோட செல்லம். சரி. இப்ப எனக்குப் பசிக்குதே. காபியாவது போட்டுக் கொடு. டின்னருக்கு என்ன பண்றது?"
அவனது மடியிலிருந்து எழுந்தாள். "இரு காபி போட்டுத் தாரேன். அம்மா டிபன் ஒன்னும் செய்யலை. மேரி ப்ரவுன்ல ஆர்டர் பண்ணீறலாம். சரியா?"
"ஓகே. எதையாவது செய். மொதல்ல ஒரு காபி குடு." பிறகு சந்தியா காபி கொடுத்ததையும் மேரி பிரவுனில் ஆர்டர் கொடுத்ததையும் தன்னைக் கொடுத்ததையும் இப்பொழுது கண்டு கொள்ள வேண்டாம். அடுத்து மேலே போகலாம்.
சுந்தரையும் தூக்கிக் கொண்டு போனது நல்லதாகவே இருந்தது. சிவகாமியும் வாணியும் இருந்ததால் அவனைப் பார்த்துக் கொள்வது எளிதாயிற்று. கண்ணனுடனும் அவன் நன்றாக ஒட்டிக் கொண்டான். கண்ணனுக்கும் நெஞ்சில் ஒரு நெகிழ்ச்சி. ஒரு மகிழ்ச்சி. காரை எடுத்து பூஜை போட்ட கையோடு தங்கமாளிகைக்குச் சென்று சின்னதாக ஒரு தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தான். வாணிக்கும் நிம்மதி. நினைத்தபடியே எல்லாம் நடக்கிறதே. நல்ல வேளையாக ராஜம்மாளை வீட்டிலேயே விட்டுச் சென்றனர். அப்படியே இரவு உணவை முடித்து விட்டு சுந்தரராஜனும் சிவகாமியும் சுந்தரைத் தூக்கிக் கொண்டு பெசண்ட் நகர் திரும்பினர். சந்தியா சொல்லிச் சரவணன் வந்து சென்றதை தெரிந்து கொண்டனர்.
கண்ணன் தங்கச்சங்கிலி வாங்கிக் கொடுத்தது சந்தியாவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தருக்கு மொட்டை எடுப்பதற்குக் கண்ணனை அழைப்பதில் சிரமம் இருக்காது என்ற முடிவுக்கு அவளால் எளிதாக வரமுடிந்தது. பிரச்சனையிருந்தாலும் வாணி சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நிம்மதியும் சரவணனுடனான பிரியாணியும் அவளை ஒரு மகிழ்சி மேகத்தில் மிதக்க வைத்தது.
அடுத்து வந்த சனி ஞாயிறு சரவணனுக்குப் பரபரப்பாகவே இருந்தது. இந்தியாவிற்கு வரும் முன்பே சாட்டிங்கில் ஒரு கிளியைப் பிடித்து வைத்திருந்தான். அவளோடு பொழுது போனது. நிறைய காபி குடித்தாலும் சுவையில்லையென்றால் நாவில் நிற்காது. அந்த நிலையில்தான் கிளிக்கு டாடா காட்டினான் சரவணன். கிளியும் எண்ணிக்கைக் கணக்கை எண்ணிக் கை தட்டிச் சென்றது.
ஆனால் சந்தியா எங்கும் போகவில்லை. எதனாலோ தேவையிருக்கவில்லை. அவளுடைய வாரயிறுதியும் மகிழ்ச்சியாகவே கழிந்தது. அதற்கு அடுத்த வாரம் இருவருக்கும் மிக வேகமாகச் சென்றது. சரவணனுக்குத் தெரிந்தவர்களைச் சென்று பார்க்க வேண்டியிருந்தாலும் செவ்வாய்க் கிழமை மாலை சந்தியாவோடு fishermen's cove போகத் தயங்கவில்லை. அதற்கு நேரம் கிடைத்த அவனுக்குப் பெசண்ட் நகர் செல்லத்தான் நேரம் கிடைக்கவில்லை. :-)
அத்தோடு வியாழக்கிழமை லேண்ட்மார்க்கிற்கு கள்ளியிலும் பால் கவிதைத் தொகுப்பின் கையெழுத்து நிகழ்ச்சிக்காக தேன்மொழி சந்தியாவையும் குடும்பத்தாரையும் அழைத்தாள். சந்தியாவும் ஒப்புக் கொண்டாள். அதுவும் அங்கு வரும் நெரிசலைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல்! ம்ம்ம்...என்ன செய்வது? அவளா இந்தக் கதையை எழுதுகிறாள்? நானல்லவா. எத்தனை முறைதான் அவளைத் தப்பிக்க முடியும்?
தொடரும்....
Tuesday, March 06, 2007
8ம் பகுதி கள்ளியிலும் பால்
முந்தைய பாகம் இங்கே.
அலுவலகத்தில் சந்தியாவிடம் அன்று பேசியவர்கள் எல்லாரும் காயங்களோடு திரும்பினார்கள். அந்த அளவிற்குக் கடித்து வைத்திருந்தாள். விமான நிலையத்தில் இருந்து நேராக அலுவலகத்திற்கு எதிலும் மோதாமல் அவள் வந்து சேர்ந்ததே அதிசயந்தான். பெருமாள்சாமி அவளை வீட்டிற்கு அழைத்ததற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு அவள் அலுவலகம் புறப்பட்டாள். சரவணன் அவளுக்கு விடை கொடுத்து விட்டு பிறகு ஃபோன் செய்வதாகச் சொல்லியிருந்தான்.
அதெல்லாம் அவளுக்கு ஒன்றுமில்லை. ஆனால் சரவணனுக்கு நல்ல வரன் பார்த்திருப்பதாகச் சொன்னதுதான் அவளைக் காக்கை போல கொத்திக் கொண்டிருந்தது. ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். அது இனிமேல் இல்லாமல் போகுமென்றால்? ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகி விட்டால்? அவளது நிலை? அவளும் திருமணம் செய்து கொள்வதா? அது நடக்குமா? அவன் ஆண். இவளோ பெண். அதிலும் குழந்தை பெற்றவள்? அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. யோசித்ததையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
தேன்மொழியைத் தொலைபேசியில் அழைத்தாள். ஆனால் அடுத்த வாரம் இருக்கும் புத்தக வெளியீட்டு வேலையாக அவள் இருப்பதால் இரவில் அழைப்பதாகச் சொல்லி விட்டாள். அடுத்த வார புதனன்று சென்னையில் காமராஜ் மெமோரியல் ஹாலில் வெளீயீடு. பிரபல திரைப்படப் பாடலாசிரியர் என்பதால் பல பிரபலமானவர்கள் வருவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் இருப்பதால் அவரும் வருகிறார். அதுவுமில்லாமல் தேன்மொழியின் ரசிகர்கள் வேறு. அதற்கு அடுத்த நாள் லேண்ட்மார்க்கில் ரசிகர் சந்திப்பு. புத்தகம் வாங்குகின்றவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுக்கும் விழா. அத்தனைக்குமான ஏற்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தன. அதனால்தான் அவள் சந்தியாவுடன் சரியாகப் பேச முடியவில்லை.
தேன் மட்டுமா? சரவணனும்தான். ஃபோன் செய்வதாகச் சொன்னவன்...காலையரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்ந்த மலர் இரவில் வாடிய பின்னும் அழைக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட இல்லை. அவனை அழைக்கவும் செய்தி அனுப்பவும் சந்தியாவின் மனநிலையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவள் என்ன மிதமா? அதே போலத் தேன்மொழியும் சொன்னபடி இரவில் அழைக்கவில்லை. காத்திருந்த சந்தியா எப்படியோ ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.
ஆனால் விடியல் அவளுக்கு விடியலாகத்தான் இருந்தது. அவளை எழுப்பியதே சரவணனின் குறுஞ்செய்திதான். "de word sweet is obsolete 4m now and further sandhya is what we have to use :-) good morning. vil cal at 10. hv a gud day" படித்ததும் சந்தியாவின் முகத்தில் புன்னகை. படபடவென அவள் கிளம்பி அலுவலகம் வந்து விட்டாள். ஆனால் பத்து மணிதான் வழக்கம் போல வந்தது. அதுவும் சரவணனின் தொலைபேசி அழைப்போடு.
"ஏ! சந்தி! சாரிடா. நேத்து பயங்கர பிசி." மொபைல் வழியாக தேவனின் திருச்சபைச் செய்தி கேட்டுப் பரவசமடைந்தாள்.
"நல்லாயிருக்கேன். இன்னைக்கு நீ என்ன பண்ற? லஞ்சுக்கு இங்க வர்ரியா?"
"லஞ்சுக்கு முடியாது. ஆனா நாலு மணிக்கு மேல ஒன்னால முடியும்னா ஈ.சி.ஆர் ரிசார்ட் போலாம். சரியா?" உண்மையிலேயே சந்தியாவிற்கு அது திருச்செய்திதான். ஒப்புக்கொண்டாள். அதே போல நாலு மணிக்கு இருவரும் சென்றார்கள். Fishermen's Cove என்ற அந்த நட்சத்திர விடுதியின் கடலைப் பார்த்த ஃபிரெஞ்சு ஜன்னல் அறை அவர்களுக்கு உதவியது.
வழியெல்லாம் வெட்டிக் கதை பேசிக் கொண்டு வந்தவர்கள். அறைக்குள் வந்ததும்...கதவை மூடியதும்....ஒருவரையொருவர் மூடிக் கொண்டனர். ஏதோ கின்னசில் முத்த சாதனையெல்லாம் இருக்கிறதாமே...அவையெல்லாம் புறமுதுகிட்டு ஓடின. "பொருத்தம் உடலிலும் வேண்டும். புரிந்தவன் துணையாக வேண்டும்" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கின்றாரே. அதுதான் அங்கு நடந்தது. எல்லா விரல்களுக்கும் வீணை நாதம் கொடுக்காது. வீணையின் நெளிவு சுளிவுகள் விரலுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்டும் விரலுக்குத் தக்க ஒலியை வீணையும் கொடுக்க வேண்டும். அதுதான் அங்கு நடந்தது. எத்தனையோ விரல் மீட்டிய வீணைதான். ஆனால் அப்பொழுதெல்லாம் ஓசையை உண்டாக்கியது இப்பொழுது இசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அந்த இசைதான் விரலுக்குள் ஒளிந்திருக்கும் திறமையையெல்லாம் வெளிக்கொண்டு வந்தது.
இருவரையும் ஒன்றாகக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஷவரும் அந்தக் குளியலறையும் அதிலிருந்த பெரிய கண்ணாடியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தன.
"சந்தி....இதெப்படிடா?"
"எது?"
"உங்கிட்ட மட்டும் ஒன்னு இருக்கே"
"உங்கிட்டயும்தான் ஒன்னு இருக்கு"
"ஏய்ய்ய்ய்ய்ய்ய்...."
"பின்னே என்னவாம்....i love u soooooooooooooooooooo much!" பச்.
"i too da sandhy. நான் முழுமையான நானா இருந்ததும் இருக்குறதும் ஒங்கிட்ட மட்டுந்தான். தெரியுமா?"
"சரி. இருக்கப் போறது?"
"அதுவும் அப்படித்தான். no change at any circumstance." பச்.
"உனக்குக் கல்யாணம் ஆனாக் கூடவா? ம்ம்ம்..."
"எனக்கா? என்ன சந்தி? நீயா இப்பிடிக் கேக்குற?"
"இல்லடா. ஏதோ வரனெல்லாம் வந்திருக்காமே."
"oh myyyyy god. அதையேங் கேக்குற? எல்லாத்தையும் ஒதுக்கியாச்சு. அதுனாலதான் நேத்து ஒனக்கு ஃபோன் பண்ண முடியலை."
"நெஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா? promise?"
"bra miss...oooopppps...promise" பச்.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று சொன்னால் இந்தக் கதையை மஞ்சள் பத்திரிகையில்தான் போட வேண்டும். ஏழு மணிக்கு இருவரும் கடற்கரை ஓரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசியதைக் கவனிப்போம்.
"அம்மா அப்பா நல்லாயிருக்காங்களா சந்தி? போன தடவ வந்தப்போ பாத்தது. கண்ணனுக்குக் கல்யாணம் ஆயிருச்சுல்ல. எதுவும் விசேஷம்?"
"எல்லாரும் நல்லாயிருக்காங்க. கண்ணனும் நல்லாயிருக்கான். ஒரு பையன் அவனுக்கு. அரவிந்துன்னு பேரு. ஆனா இப்போ டி.நகர் வீட்டுல இருக்கான். அவனோட மாமியார் இப்ப கூடதான் இருக்காங்க. அதுனாலயும் அவங்க வீட்டுக்காரங்க வரப்போக இருக்குறதால டி.நகர் வீடுதான் சரீன்னு முடிவு செஞ்சோம்."
"அதுவும் நல்லதுதான். அவனையும் ஒரு வாட்டி பாக்கனும். போன வாட்டி எப்படியோ முடியாமப் போயிருச்சு. சரி. ஒன்னோட சினிமா ஃபிரண்டு எப்படியிருக்கா?"
"ஹலோ...அதென்ன சினிமாக்கார ஃபிரண்டு. தேன்மொழி ஒனக்கும் தெரியுந்தானே. அவளைப் பேரைச் சொல்லி யாரும் கூப்பிடுறதில்லை. கவிப்பூ தேன்மொழின்னுதான் கூப்புடுறாங்க. அதுவுமில்லாம அவ கள்ளியிலும் பால்னு ஒரு கவிதைத் தொகுப்பு போடுறா. புதங்கிழமை புத்தகவெளியீடு. அதுக்காகக் குழந்தையத் தூங்க வெச்சிட்டு அவளும் அவ வீட்டுக்காரனும் வேலை பாக்குறாங்க." சொல்லி விட்டுக் கிண்டலாகச் சிரித்தாள்.
போலியாகக் கெஞ்சினான் சரவணன். "ஆத்தா! மகமாயி. மன்னிசுரும்மா...அவ உன்னோட ஃபிரண்டாவே இருக்கட்டும். நமக்கும் கவிதைக்கும் ரொம்பத்த்த்த்தூரம். அது இருக்கட்டும். அப்பா அம்மாவைப் பாக்க எப்ப வீட்டுக்கு வரட்டும்?"
"வீட்டுக்கா? நாளைக்கு வாடா. ஆறு மணிக்கு மேல வா. அப்பத்தான் நானும் ஆபீஸ் முடிச்சிட்டு வரச் சரியா இருக்கும். ஒன்னு பண்ணு. நைட் சாப்பாடு வீட்டுலதான். சரியா?"
"நீ சொன்னா சரிதான்."
"அடடே! நான் என்ன சொன்னாலும் சரியா?"
"ஆமாம் மேடம். நீங்க என்ன சொன்னாலும் அது சரியில்லை. ஹா ஹா ஹா"
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். வீட்டிற்கு அவன் காற்றில் ஏறிப் போனான். அவள் மேகத்தில் வந்தாள். வந்து சுந்தரைப் பார்த்ததும்தான் அவளுக்குப் பக்கென்றது. நாளை இரவு உணவிற்கு அவனை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கின்றாளே!!!!!!!!!!!
தொடரும்.....
அலுவலகத்தில் சந்தியாவிடம் அன்று பேசியவர்கள் எல்லாரும் காயங்களோடு திரும்பினார்கள். அந்த அளவிற்குக் கடித்து வைத்திருந்தாள். விமான நிலையத்தில் இருந்து நேராக அலுவலகத்திற்கு எதிலும் மோதாமல் அவள் வந்து சேர்ந்ததே அதிசயந்தான். பெருமாள்சாமி அவளை வீட்டிற்கு அழைத்ததற்கு மறுப்புத் தெரிவித்து விட்டு அவள் அலுவலகம் புறப்பட்டாள். சரவணன் அவளுக்கு விடை கொடுத்து விட்டு பிறகு ஃபோன் செய்வதாகச் சொல்லியிருந்தான்.
அதெல்லாம் அவளுக்கு ஒன்றுமில்லை. ஆனால் சரவணனுக்கு நல்ல வரன் பார்த்திருப்பதாகச் சொன்னதுதான் அவளைக் காக்கை போல கொத்திக் கொண்டிருந்தது. ஒரு செயலை எப்பொழுது செய்வோம்? துணிச்சல் இருந்தால்தானே? அந்தத் துணிச்சல் தன்னம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று பல பெயர்களில் கிடைக்கும். ஆனால் சந்தியாவிற்கு அந்தத் துணிச்சல் வருவதே சரவணனிடமிருந்துதான். அது இனிமேல் இல்லாமல் போகுமென்றால்? ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகி விட்டால்? அவளது நிலை? அவளும் திருமணம் செய்து கொள்வதா? அது நடக்குமா? அவன் ஆண். இவளோ பெண். அதிலும் குழந்தை பெற்றவள்? அவளால் எதையும் யோசிக்க முடியவில்லை. யோசித்ததையும் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
தேன்மொழியைத் தொலைபேசியில் அழைத்தாள். ஆனால் அடுத்த வாரம் இருக்கும் புத்தக வெளியீட்டு வேலையாக அவள் இருப்பதால் இரவில் அழைப்பதாகச் சொல்லி விட்டாள். அடுத்த வார புதனன்று சென்னையில் காமராஜ் மெமோரியல் ஹாலில் வெளீயீடு. பிரபல திரைப்படப் பாடலாசிரியர் என்பதால் பல பிரபலமானவர்கள் வருவார்கள். ஏ.ஆர்.ரகுமான் இந்தியாவில் இருப்பதால் அவரும் வருகிறார். அதுவுமில்லாமல் தேன்மொழியின் ரசிகர்கள் வேறு. அதற்கு அடுத்த நாள் லேண்ட்மார்க்கில் ரசிகர் சந்திப்பு. புத்தகம் வாங்குகின்றவர்களுக்குக் கையெழுத்திட்டுக் கொடுக்கும் விழா. அத்தனைக்குமான ஏற்பாடுகள் ஓடிக் கொண்டிருந்தன. அதனால்தான் அவள் சந்தியாவுடன் சரியாகப் பேச முடியவில்லை.
தேன் மட்டுமா? சரவணனும்தான். ஃபோன் செய்வதாகச் சொன்னவன்...காலையரும்பி பகலெல்லாம் போதாகி மாலையில் மலர்ந்த மலர் இரவில் வாடிய பின்னும் அழைக்கவில்லை. ஒரு குறுஞ்செய்தி கூட இல்லை. அவனை அழைக்கவும் செய்தி அனுப்பவும் சந்தியாவின் மனநிலையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவள் என்ன மிதமா? அதே போலத் தேன்மொழியும் சொன்னபடி இரவில் அழைக்கவில்லை. காத்திருந்த சந்தியா எப்படியோ ஒரு வழியாகத் தூங்கிப் போனாள்.
ஆனால் விடியல் அவளுக்கு விடியலாகத்தான் இருந்தது. அவளை எழுப்பியதே சரவணனின் குறுஞ்செய்திதான். "de word sweet is obsolete 4m now and further sandhya is what we have to use :-) good morning. vil cal at 10. hv a gud day" படித்ததும் சந்தியாவின் முகத்தில் புன்னகை. படபடவென அவள் கிளம்பி அலுவலகம் வந்து விட்டாள். ஆனால் பத்து மணிதான் வழக்கம் போல வந்தது. அதுவும் சரவணனின் தொலைபேசி அழைப்போடு.
"ஏ! சந்தி! சாரிடா. நேத்து பயங்கர பிசி." மொபைல் வழியாக தேவனின் திருச்சபைச் செய்தி கேட்டுப் பரவசமடைந்தாள்.
"நல்லாயிருக்கேன். இன்னைக்கு நீ என்ன பண்ற? லஞ்சுக்கு இங்க வர்ரியா?"
"லஞ்சுக்கு முடியாது. ஆனா நாலு மணிக்கு மேல ஒன்னால முடியும்னா ஈ.சி.ஆர் ரிசார்ட் போலாம். சரியா?" உண்மையிலேயே சந்தியாவிற்கு அது திருச்செய்திதான். ஒப்புக்கொண்டாள். அதே போல நாலு மணிக்கு இருவரும் சென்றார்கள். Fishermen's Cove என்ற அந்த நட்சத்திர விடுதியின் கடலைப் பார்த்த ஃபிரெஞ்சு ஜன்னல் அறை அவர்களுக்கு உதவியது.
வழியெல்லாம் வெட்டிக் கதை பேசிக் கொண்டு வந்தவர்கள். அறைக்குள் வந்ததும்...கதவை மூடியதும்....ஒருவரையொருவர் மூடிக் கொண்டனர். ஏதோ கின்னசில் முத்த சாதனையெல்லாம் இருக்கிறதாமே...அவையெல்லாம் புறமுதுகிட்டு ஓடின. "பொருத்தம் உடலிலும் வேண்டும். புரிந்தவன் துணையாக வேண்டும்" என்று கண்ணதாசன் சொல்லியிருக்கின்றாரே. அதுதான் அங்கு நடந்தது. எல்லா விரல்களுக்கும் வீணை நாதம் கொடுக்காது. வீணையின் நெளிவு சுளிவுகள் விரலுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மீட்டும் விரலுக்குத் தக்க ஒலியை வீணையும் கொடுக்க வேண்டும். அதுதான் அங்கு நடந்தது. எத்தனையோ விரல் மீட்டிய வீணைதான். ஆனால் அப்பொழுதெல்லாம் ஓசையை உண்டாக்கியது இப்பொழுது இசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அந்த இசைதான் விரலுக்குள் ஒளிந்திருக்கும் திறமையையெல்லாம் வெளிக்கொண்டு வந்தது.
இருவரையும் ஒன்றாகக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த ஷவரும் அந்தக் குளியலறையும் அதிலிருந்த பெரிய கண்ணாடியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தன.
"சந்தி....இதெப்படிடா?"
"எது?"
"உங்கிட்ட மட்டும் ஒன்னு இருக்கே"
"உங்கிட்டயும்தான் ஒன்னு இருக்கு"
"ஏய்ய்ய்ய்ய்ய்ய்...."
"பின்னே என்னவாம்....i love u soooooooooooooooooooo much!" பச்.
"i too da sandhy. நான் முழுமையான நானா இருந்ததும் இருக்குறதும் ஒங்கிட்ட மட்டுந்தான். தெரியுமா?"
"சரி. இருக்கப் போறது?"
"அதுவும் அப்படித்தான். no change at any circumstance." பச்.
"உனக்குக் கல்யாணம் ஆனாக் கூடவா? ம்ம்ம்..."
"எனக்கா? என்ன சந்தி? நீயா இப்பிடிக் கேக்குற?"
"இல்லடா. ஏதோ வரனெல்லாம் வந்திருக்காமே."
"oh myyyyy god. அதையேங் கேக்குற? எல்லாத்தையும் ஒதுக்கியாச்சு. அதுனாலதான் நேத்து ஒனக்கு ஃபோன் பண்ண முடியலை."
"நெஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா? promise?"
"bra miss...oooopppps...promise" பச்.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று சொன்னால் இந்தக் கதையை மஞ்சள் பத்திரிகையில்தான் போட வேண்டும். ஏழு மணிக்கு இருவரும் கடற்கரை ஓரத்தில் மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே பேசியதைக் கவனிப்போம்.
"அம்மா அப்பா நல்லாயிருக்காங்களா சந்தி? போன தடவ வந்தப்போ பாத்தது. கண்ணனுக்குக் கல்யாணம் ஆயிருச்சுல்ல. எதுவும் விசேஷம்?"
"எல்லாரும் நல்லாயிருக்காங்க. கண்ணனும் நல்லாயிருக்கான். ஒரு பையன் அவனுக்கு. அரவிந்துன்னு பேரு. ஆனா இப்போ டி.நகர் வீட்டுல இருக்கான். அவனோட மாமியார் இப்ப கூடதான் இருக்காங்க. அதுனாலயும் அவங்க வீட்டுக்காரங்க வரப்போக இருக்குறதால டி.நகர் வீடுதான் சரீன்னு முடிவு செஞ்சோம்."
"அதுவும் நல்லதுதான். அவனையும் ஒரு வாட்டி பாக்கனும். போன வாட்டி எப்படியோ முடியாமப் போயிருச்சு. சரி. ஒன்னோட சினிமா ஃபிரண்டு எப்படியிருக்கா?"
"ஹலோ...அதென்ன சினிமாக்கார ஃபிரண்டு. தேன்மொழி ஒனக்கும் தெரியுந்தானே. அவளைப் பேரைச் சொல்லி யாரும் கூப்பிடுறதில்லை. கவிப்பூ தேன்மொழின்னுதான் கூப்புடுறாங்க. அதுவுமில்லாம அவ கள்ளியிலும் பால்னு ஒரு கவிதைத் தொகுப்பு போடுறா. புதங்கிழமை புத்தகவெளியீடு. அதுக்காகக் குழந்தையத் தூங்க வெச்சிட்டு அவளும் அவ வீட்டுக்காரனும் வேலை பாக்குறாங்க." சொல்லி விட்டுக் கிண்டலாகச் சிரித்தாள்.
போலியாகக் கெஞ்சினான் சரவணன். "ஆத்தா! மகமாயி. மன்னிசுரும்மா...அவ உன்னோட ஃபிரண்டாவே இருக்கட்டும். நமக்கும் கவிதைக்கும் ரொம்பத்த்த்த்தூரம். அது இருக்கட்டும். அப்பா அம்மாவைப் பாக்க எப்ப வீட்டுக்கு வரட்டும்?"
"வீட்டுக்கா? நாளைக்கு வாடா. ஆறு மணிக்கு மேல வா. அப்பத்தான் நானும் ஆபீஸ் முடிச்சிட்டு வரச் சரியா இருக்கும். ஒன்னு பண்ணு. நைட் சாப்பாடு வீட்டுலதான். சரியா?"
"நீ சொன்னா சரிதான்."
"அடடே! நான் என்ன சொன்னாலும் சரியா?"
"ஆமாம் மேடம். நீங்க என்ன சொன்னாலும் அது சரியில்லை. ஹா ஹா ஹா"
இருவரும் சேர்ந்து சிரித்தார்கள். வீட்டிற்கு அவன் காற்றில் ஏறிப் போனான். அவள் மேகத்தில் வந்தாள். வந்து சுந்தரைப் பார்த்ததும்தான் அவளுக்குப் பக்கென்றது. நாளை இரவு உணவிற்கு அவனை வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கின்றாளே!!!!!!!!!!!
தொடரும்.....
Monday, March 05, 2007
காலபைரவன் - விமர்சனம்
இவருதாங்க காகாகாகாலபைரவன்தூத்துக்குடியில் ஒரு பொழுது போகாத சனிக்கிழமை மதியம் பார்த்த படம்தான் காலபைரவன். நிக்கோலஸ் கேஜ் நடித்த காலபைரவன். அட...அதாங்க...Ghost Rider. தூத்துக்குடி மக்களோட மக்களா உக்காந்து அவங்க எப்படி ரசிக்கிறாங்கன்னு ரசிச்சுப் பாத்த படம் காலபைரவன்.
ரெண்டு மணிக்குப் படம்னு சொன்னாங்க. ஒன்னே முக்காலுக்குப் போய் நின்னப்போ தொணைக்குக் கூட யாருமேயில்லை. சரியா ரெண்டு மணிக்குத்தான் டிக்கெட் குடுத்தாங்க. படம் போடும் போது கிட்டத்தட்ட ரெண்டரை.
உக்காந்திருந்தது மின்விசிறி ஓடிக்கிட்டிருந்த ஏசி வகுப்பு. அதுனால திரைக்கு முன்னால தடுப்புக்கு ஒரு கண்ணாடி இருந்தது. அது வழியாப் பாத்தா படம் ஒழுங்காத் தெரியும்லன்னு பக்கத்துல உக்காந்திருந்த சின்னப் பயக கேட்டாங்க. மொத வாட்டி வர்ராங்க போல. தெரியும்னு சொன்னேன். அதக் கேட்ட பெறகுதான் அவங்களுக்கு நிம்மதி.
படத்தோட கதை ரொம்ப லேசு. ஒரு சாத்தான். அது தப்பு பண்ணுது. அதாவது ஒப்பந்தம் போடுது. ஒப்பந்தம் போடுறது தப்பான்னு கேக்காதீங்க. என்ன மாதிரி ஒப்பந்தங்குறதுதான் சூழ்ச்சி. படத்துல யாரெல்லாம் சாத்தான் கிட்ட ஒப்பந்தம் போடுறாங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஊர்ல இருக்குற மக்களெல்லார் கிட்டயும் ஒரு ஒப்பந்தம் போடுது சாத்தான். அவங்க வாழ்க்கைல அவங்க விரும்புனதெல்லம் செஞ்சு குடுக்குமாம்...ஆனா அவங்க ஆன்மாக்கள் எல்லாம் சாத்தானுக்கடிமைன்னு. அதுனால எல்லா ஆன்மாக்களையும் அந்த ஊர்லயே சிறை வைக்கிறான் சாத்தான். அந்த நரகத்தக் காவல் காக்க சாத்தான் உருவாக்குனதுதான் காலபைரவன். காலபைரவனோ ஆன்மாக்கள் படுற துன்பத்தப் பாத்து அந்த ஒப்பந்தத்தையே திருடிக்கிட்டு ஓடீர்ரான். இப்ப சாத்தானோட ஒப்பந்தம் சாத்தான் கைய விட்டுப் போயிருச்சு. அதுனால ஆன்மாக்கள் எல்லாம் தப்பிச்சு அந்த பாழடைஞ்சு போன ஊருக்குள்ளயே அடஞ்சு கெடக்குதுங்க.
அடுத்து என்ன செய்யனும்? இன்னொரு காலபைரவனச் செய்யனும். மிஸ்டர். சாத் கூட அதத்தான் செய்றாரு. ஒரு பைக் ஓட்டுறவனோட அப்பாவுக்கு கான்சர். அத குணப்படுத்துறதாகவும் அதுக்குப் பதிலா அந்த பைக் பையன் அவனோட ஆன்மாவை சாத்தானுக்குக் குடுத்துறனும்னும் இன்னொரு ஒப்பந்தம் போடுது சாத்தான். அந்தப் பையன் அந்த ஒப்பந்தத்தைத் தெறக்கும் போது கை கிழிச்சி ரத்தச் சொட்டே கையெழுத்தா விழுந்துருது. அடுத்த நாள் காலைல அவனோட அப்பா நல்லாயிர்ராரு. ஆனா அன்னைக்கு நிகழ்ச்சியில சாத்தான் அவர நெருப்புல தள்ளிக் கொன்னுருது. கேட்டதுக்கு...அவரைக் குணப்படுத்துறதப் பத்தித்தான் ஒப்பந்தம். அது நடந்ததுல்லன்னு திமிராக் கேக்குது. அத்தோட சாத்தானுக்குத் தேவை வரும் போது அவனைப் பயன்படுத்திக்கும்...இப்ப அவன் பைக் ஓட்டுறதுல சாதிக்கட்டும்னு சொல்லீட்டுப் போயிருது.
இவனும் பைக் சாதனைல பெரிய ஆளாயிர்ரான். ஆறு எலிகாப்டர வரிசையா நிக்க வெச்சு பைக்ல தாண்டுறான். விபத்து நடந்தாக் கூட அவனைச் சாத்தான் காப்பாத்துது. நாளைக்கு வேலைக்கு ஆள் வேணுமே. அப்பத்தான் சாத்தானோட மகன் அந்த ஒப்பந்தத்தத் திருட முயற்சிக்கிறான். அப்பனக் கவுத்துட்டு இவன் பெரிய ஆளாகத் திட்டம். அப்பத்தான் உலக ஆன்மாக்கள இவன் கட்டுப்படுத்தலாம்னு. ரொம்பவே அழகாகவும் கும்முன்னும் இருக்குறவரச் சாத்தானோட மகன்னு சொல்றாங்க. அந்த நடிகர் மேல நமக்குப் பரிதாபந்தான் வருது. அவருக்கு ஒதவி செய்ய மூனாளு. நிலப்பூதம். காத்துப் பூதம். நீர்ப்பூதம்னு மூனு பேரு.
இவருதாங்க சாத்தாரோட மகரு...அதுக்குள்ள அந்த பைக் பையன் வளர்ந்து நிக்கோலஸ் கேஜ் ஆயிர்ராரு. அப்பத்தான் நமக்கு ஒன்னு புரியுது. நிக்கோலஸ் கேஜுக்கு ஏஜ் ரொம்ப ஆயிருச்சுன்னு. அதுக்கு அவரு என்ன செய்ய முடியும்! சாத்தான் ஒரு பைக்கோட வந்து கேஜப் பாக்குது. "இந்தாப்பா...இந்த மாதிரி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒருத்தன் ஒப்பந்தத் திருடீட்டு ஓடீட்டான். அந்த ஒப்பந்தத்த எப்படியாவது கண்டுபிடிக்க என்னோட மகன் முயற்சி செய்றான். நீ என்னோட மகனோட கதையை முடிச்சிட்டு அந்த ஒப்பந்தத்தையும் எங்கிட்ட கொண்டாந்து தரனும்னு சொல்லுது. இவனால மறுக்க முடியலை. ஏன்னா அவனோட ஆன்மாதான் சாத்தானுக்கு அடிமையாச்சே. அதுனால ராத்திரி வந்தாலே அவன் எரியிற எலும்புக்கூடா மாறி...எரியிற பைக்குல போறான். காகாகாகாலபைரவன் பைக்ல போறாரு.
அவனை அழிக்க இந்தப் பூதங்கள் ஒன்னொன்னா முயற்சி செய்யுது. ஆனா ஒவ்வொரு பூதமா கொன்னுர்ரான். கதாநாயகன்னா ஒரு காதலி இருக்கனுமே. அவளை வில்லன் கடத்தீட்டுப் போய் மெரட்டனுமே. அது இங்கயும் நடக்குது. இப்ப ஒப்பந்ததக் கண்டு பிடிச்சி அதை சாத்தான் மகன் கிட்ட ஒப்படைக்க வேண்டிய வேலையும் கேஜுக்கு வந்துருது. ஒருவழியா பழைய காலபைரவனக் கண்டுபிடிச்சி ஒப்பந்தத்த வாங்குறாரு. புதுக் காலபைரவன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுட்டு அவரு ரிட்டயர் ஆயிர்ராரு. அதுக்கப்புறம் என்ன? வில்லனை அழிச்சி காதலியைக் காப்பாத்துறாரு. தன்னுடைய காதலன் மனுசனே இல்லைன்னு தெரிஞ்சு காதலி மொதல்ல வருத்தப்பட்டாலும் பிறகு ஒத்துக்கிறாங்க. அப்பத்தான் சாத்தான் வந்து இன்னொரு ஒப்பந்தம் போடுது. இனிமே காலபைரவனா இருக்க வேண்டியதில்லை. அந்த வேலைய ரிசைன் பண்ணீட்டா திரும்பவும் மனுசனாக்கீர்ரேன்னு. ஆனா கேஜ் ஒத்துக்குற மாட்டேங்குறாரு. கெட்டவங்க கிட்ட இருந்து ஒலகத்தக் காப்பாத்துறதுதான் காலபைரவனோட வேலைன்னு சொல்லீட்டு எரியிற பைக்குல ஜம்முன்னு எலும்புக்கூடா போறாரு.
இதுதாங்க கதை. ஆனா அதை முழுசாப் பாக்க விடாம தேட்டர்ல வெட்டுக எக்கச்சக்கம். திடீர்னு சத்தம் ஒன்னு வரும். படம் வேற வரும். பாத்துக்கிட்டிருக்கும் போதே திரையில இருட்டு விழுந்து அப்படியே வெளிச்சம் திரும்ப வரும். நடுவுல பக்கத்துப் பயக படத்தப் பத்தி உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கிட்டிருக்காங்க. "ஏலா கோயிலுக்குள்ள போயிருவாம் பாரேன்." தூத்துக்குடி வட்டாரத்துல சர்ச்சும் கோயில்தான். "அந்தக் கெழவனும் காலபைரவன்லா...அதான் அவனுக்கு எரியுற குதிரல." "ஏலே..முத்தங் கொடுக்காம் பாரேன். வெளிநாட்டுல எங்ஙன பாத்தாலும் இப்பிடித்தாம்ல. ஒரே ஜாலியா இருக்குமாம். எல்லாமே ரொம்ப லேசு." இப்பிடி கொடுத்த காசுக்குக் கூடவே சினிமா கெடைச்சது.
படத்துல சிறப்புன்னு சொன்னா அந்த எரியிற எலும்புக்கூடு எரியிற பைக்குல சாகசங்கள் எக்கச்சக்கமா செய்றதுதான். நல்லா எடுத்திருக்காங்க. ஆனா மத்த எல்லா கிராபிக்சும்...ம்ம்ம்ம்.....ராஜகாளியம்மன்...கோட்டைப்புரத்து மாரியம்மன்....வீரகாளி வெக்காளியம்மன் படங்கள் பாத்த மாதிரி இருந்தது. இன்னொன்ன பாராட்டியே ஆகனும். ஒலிமாற்றம். அதாங்க டப்பிங்கு. ரொம்ப நல்லாவே செஞ்சிருக்காங்க. நிக்கோலஸ் கேஜோட குரல் எனக்குத் தெரியும்னாலும்...புதுக்குரல்னு உறுத்தாம நல்லாப் பேசியிருந்தாங்க. இப்பல்லாம் இந்த மாதிரி நெறையப் படங்கள் வருதே. ஹாரி பாட்டர் கூட தமிழ்ல வருது. ஆனா பாக்கத்தான் மனசில்லை. புத்தகத்த படிச்சிர்ரோம்ல. அதான்.
என்ன? படத்தப் பாக்கலாமான்னு கேக்குறீங்களா? ம்ம்ம்ம்...நேரமிருக்கு....எப்படியாவது போக்கனும்னா பாக்கலாம்.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Comments (Atom)
