ஏதடா மலையாளப் படத்தலைப்பு போல இருக்கேன்னு படிக்காம விட்டுராதீங்க. படிச்சுப் பாருங்க. பிடிச்சாலும் பிடிக்கலாம். இது என்னோட நினைவுக்கடலில் எழுகின்ற ஒரு அலை. காலையாவது நனைச்சுக்குங்க.
தூத்துக்குடியில் பழைய ஹார்பருக்கு எதிர்ப்பக்கம் உள்ள பொதுப்பணித்துறை குடியிருப்பில் மூன்றாண்டுகள் இருந்தோம். அது தந்தையார் அங்கு வேலை செய்து கொண்டிருந்த நேரம். நல்ல பெரிய காம்பவுண்டு சுவருக்குள் மூன்று வீடுகள். சில கெஸ்ட் ஹவுஸ்கள். நிறைய இடம். நிறைய மரங்கள்.
ஒரு நாள் பகற்பொழுதில் எல்லாரும் வீட்டு வாசலில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். வீட்டிற்கு முன்னேயும் நிறைய இடம். இங்கே எல்லாரும் என்பது நான், என்னுடைய தங்கை மற்றும் பாட்டி. அம்மா வீட்டுக்குள்ளும் அப்பா அலுவலகத்திலும் இருந்தார்கள்.
ஒரு நாட்டு நாய்க்குட்டி எப்படியோ பெரிய காம்பவுண்ட் கதவைத் தாண்டி உள்ளே வந்து விட்டது. சின்ன நாய். மெல்லிசாக இருந்தது. அழகென்று சொல்ல முடியாது. நாங்கள் மூவரும் இருப்பதைப் பார்த்து அங்கு வந்தது. பாட்டி ஒரு பிஸ்கட்டை எடுத்துப் போட்டார்கள். சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்துக் கொண்டது. பிறகு கொஞ்சம் சோறு. கொஞ்சம் அது. கொஞ்சம் இது என்று வீட்டில் ஒட்டிக் கொண்டது.
வந்த நாளிலேயே அதற்கு ராஜா என்று பெயரைச் சூட்டியாகி விட்டது. அதுவும் அந்தப் பெயருக்கு அன்றே பழகிக் கொண்டது.
வீட்டுக்குள் விட மாட்டோம். வெளியில் திரிய எவ்வளவு இடமிருக்கிறது. நன்றாகத் திரியும். கட்டிப் போடுவோம். குளிப்பாட்டுவோம். பேசாமல் இருக்கும். பொதுவாக நாய்கள் குளிக்க மறுக்கும் என்பார்கள். ஆனால் இந்த நாயை நானே தண்ணீர் ஊற்றி சோப்பு போட்டுக் குளிப்பாட்டினாலும் பேசாமல் இருக்கும்.
போட்டதைச் சாப்பிடும். அதே நேரத்தில் மீன் முள்ளுக்கும் அலையும். வீடு மீன்பிடித் துறைமுகத்துக்கு எதிரில் இருந்ததால் மரத்திற்கு அடைய வரும் பறவைகள் மீன்களையும் மீன் முட்களையும் போடும். அதற்கு அலையும் ராஜா. இத்தனைக்கும் வாரத்திற்கு ஒருமுறையாவது வீட்டில் அசைவம் இருக்கும்.
வீட்டிற்கு வருகின்றவர்களிடம் மரியாதையாக இருக்கும். அதே நேரத்தில் சிலரை விடவே விடாது. அதற்கு பால்காரன் மேல் அப்படி ஒரு கோவம். அவர் வரும் பொழுதெல்லாம் குலைத்துத் தள்ளிவிடும். அவரும் குச்சியைப் பிறக்கிக் கொண்டு அடிக்க வருவார். நாங்கள் வந்து இருவரையும் சமாதானப் படுத்துவோம்.
மற்றொன்று குறிப்பிட்டே ஆக வேண்டும். மீன் முள் பொறுக்கினால் நாங்கள் அடிப்போம். நான் அல்லது என் தங்கை. அப்பொழுதெல்லாம் பேசாமல் இருக்கும். அடியை வாங்கிக் கொள்ளும். எடுத்து வந்த மீன் முள்ளைத் தொடாது. நாம் அடிப்பதை நிறுத்தியதும் காலடியில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது படுத்துக் கொள்ளும். வேறு யாராவது வெளியாட்கள் கையை ஓங்கினால் அவ்வளவுதான்.
நன்றாக வளர்ந்தது ராஜா. வீட்டு நாய்க்குரிய அத்தனை பண்புகளுடனும் வளர்ந்தது. வீட்டில் ஒரு அங்கத்தினராகவே ஆனது.
ஒரு நாள் காலை வீட்டு வாசலில் நாயைக் காணவில்லை. இரவில் அவிழ்த்து விட்டிருப்பதால் எங்கேயாவது வெளியே போயிருக்கும் என்று தேடினோம். ஆனால் கிடைத்ததோ ராஜாவின் உடல்தான். வண்டி எதுவும் அடித்த மாதிரியும் தெரியவில்லை. உடம்பில் ஒரு காயமில்லை. ஆனால் இறந்திருந்தது.
தங்கையினரின் கண்ணீர் ரெண்டு நாட்களுக்கு நிற்கவில்லை. எல்லாருக்கும் ஒருவித தவிப்பும் துக்கமும் இருந்தது. யாரும் நிலையில்லை. இப்படியே எல்லாரும் இருப்பதைச் சகிக்க மாட்டாமல் அப்பா யாரிமோ இருந்து ஒரு நாயை வாங்கி வந்தார்.
மாலையில் நான் நாயை எங்கே என்று தேடிப் போனால் பாத்ரூமுக்குள் முயலைப் போல குட்டியாகப் படுத்திருந்தது. அது ஒரு பாமரேனியன் நாய்க்குட்டி. வெள்ளை வெளேரென்று.
அதற்குப் பெயரே குட்டி என்று நிலைத்து விட்டது. ராஜாவைப் பராமரித்ததிலும் குட்டியைப் பராமரித்ததிலும் வேறுபாடுகள் பல உண்டு. குட்டி எப்பொழுதும் வீட்டிற்குள்தான் இருக்கும். மெத்தை மேலெல்லாம் தேவைப்பட்டால் ஏறும். அதுவும் கூட அதற்கு எப்பொழுதாவது தோன்றினால்தான். இந்தக் களேபரத்தில் நாங்கள் ராஜாவை மறந்திருந்தோம்.
குட்டியை அடிக்க முடியாது. எல்லாரையும் கடிக்க வரும். அப்பாவிடம் மட்டும் அதற்குப் பயம். அம்மாவிடமும் அடி வாங்கும். நான் அடிப்பதேயில்லை. தங்கைகள் சில சமயம் அடிப்பார்கள். அது நான் வேலைக்கு வந்து விட்ட பொழுது. ஆகையால் எனக்கும் குட்டிக்கும் அவ்வளவு தொடர்பில்லாமல் போயிற்று.
பிறகு கோயில்பட்டிக்குக் குடி பெயர்ந்தோம். ஒரு முறை நான் விடுமுறைக்குச் சென்றிருந்தேன். குட்டி என்னிடமும் பாசமாகத்தான் பழகும். அன்றும் அப்படித்தான் பழகியது. நான் கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அது கீழே முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது.
ஏதோ சொன்னேன். பேசாமல் இருந்ததும் அதட்டலாக ஏதோ சொன்னேன். படக்கென்று தவ்வி என் கைவிரல் நுனியைக் கடித்து விட்டது. லேசாக சதை கிழிந்து விட்டது. நான் குய்யோ முய்யோ என்று கத்தவும் எல்லாரும் ஓடி வந்தார்கள்.
பாட்டி வெங்காயத்தை இடித்து விரலில் கட்டினார்கள். குட்டிக்கு ஊசி போட்டிருந்ததால் பிரச்சனையில்லை. இருந்தும் நானும் ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டேன்.
அன்றைக்குத்தான் மீண்டும் ராஜா எங்கள் நினைவுக்கு வந்தது.
அன்புடன்,
கோ.இராகவன்
Tuesday, September 06, 2005
Friday, September 02, 2005
பெண்ணைப் பெற்றவன்
பெண்ணைப் பெற்றவன்
பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.
இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.
சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.
என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.
அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.
சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?
பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.
"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"
பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.
"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"
இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.
"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"
கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.
"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.
"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"
அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.
கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.
வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.
ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."
உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!
அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.
ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!
என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.
"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.
சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.
"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன?
........ பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய ந,£ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?
எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?
உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"
கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான்.
பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு! சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு! தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு! கோதை நாச்சியாரோடு! மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.
அன்புடன்,
கோ.இராகவன்
பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.
இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.
சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.
என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.
அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.
சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?
பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.
"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"
பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.
"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"
இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.
"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"
கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.
"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.
"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"
அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.
கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.
வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.
ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."
உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!
அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.
ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!
என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.
"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.
சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.
"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன?
........ பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய ந,£ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?
எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?
உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"
கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான்.
பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு! சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு! தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு! கோதை நாச்சியாரோடு! மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.
அன்புடன்,
கோ.இராகவன்
Tuesday, August 30, 2005
எனக்குதான் புரியும்
காற்றுப் பல்லாக்கு
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை
நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை
வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை
மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்
அன்புடன்,
கோ.இராகவன்
இன்னமும் தூக்கி வருகிறது
நாம் சேர்ந்து வெளியேற்றிய மூச்சுகளை
நேற்று போலுண்டு
மறக்கவில்லை காதோரத்தில்
நாம் சேர்ந்து பிதற்றிய பேச்சுகளை
வெற்றுப் போர்வைகள்
விலகிக் கிடக்க, மேனி மறக்கவில்லை
ஒருவருக்கொருவர் பதித்துக் கொண்ட அச்சுகளை
மூச்சும்
பேச்சும்
அச்சும் - என்னை
நொச்சு நொச்சென்று
தொந்தரவு செய்தாலும்
நானுன்னைத் தொந்தரவு செய்யவில்லை
உன் நிலை எனக்குத் தெரியும்
அது எனக்குதான் புரியும்
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, August 29, 2005
வாழைப்பழப் பாயாசம்
வாழைப்பழப் பாயாசம்
மிகவும் சுவையான இந்தப் பாயாசம் வெல்லத்தைக் கொண்டு செய்யப் படுவது. சீனி சேர்க்கப் படுவதில்லை. ஆகையால் தமிழ் மணம் மிகுந்த பாயாசம்.
பச்சரிசி - ஒரு கோப்பை
வெல்லம் - ஒன்றரை கோப்பை ( இனிப்புப் பிரியர்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளல்லாம் )
பால் - இரண்டு கோப்பை
பழுத்த வாழைப்பழம் - மூன்று அல்லது நான்கு ( பச்சைப் பழமாக இருக்க வேண்டும். மலைப்பழமும் போடலாம். ஆனால் இரண்டு மடங்காகப் போட வேண்டும். மலைப்பழம் சிறியதாக இருக்கும். நாட்டுப் பழமும் பூலாஞ்செண்டும் ஆகாது )
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு ( வெறும் வானலியில் லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் )
செய்முறை
1 . அடிகனமான பாத்திரத்தில் பாலையும் அரிசியையும் போட்டு வேக விடவும். குக்கரில் வேகவைத்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
2. அரிசி குழைய வெந்ததும் அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.
3. வெல்லமும் அரிசியும் நன்றாகக் குழைந்து வருகையில் (வெல்ல வாடை கமகமவென வரும்) வெட்டி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகளையும் சேர்க்கவும்.
4. கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாகக் கிளறவும்.
5. எல்லாம் கலந்து பாயாசப் பதத்தில் வருகையில் ஏலக்காய்ப் பொடியும் முந்திரியும் திராட்சையும் கலக்கவும்.
6. கெட்டியான வாழைப் பழப் பாயாசம் தயார்.
இதையே மாம்பழத்தைக் கொண்டும் செய்யலாம். ஆனால் மல்கோவா போன்ற நாரில்லாத இனிப்பு மாம்பழங்களையே பயன்படுத்த வேண்டும். நன்கு கனிந்த பலாப்பழங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பலாப்பழத்தை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். வாழை விரைவில் வெந்து விடும். பலா சற்று நேரம் பிடிக்கும்.
செய்து உண்டு மகிழ்ந்து கருத்துச் சொல்லுங்கள்.
அன்புடன்,
கோ.இராகவன்
மிகவும் சுவையான இந்தப் பாயாசம் வெல்லத்தைக் கொண்டு செய்யப் படுவது. சீனி சேர்க்கப் படுவதில்லை. ஆகையால் தமிழ் மணம் மிகுந்த பாயாசம்.
பச்சரிசி - ஒரு கோப்பை
வெல்லம் - ஒன்றரை கோப்பை ( இனிப்புப் பிரியர்கள் தேவையான அளவு சேர்த்துக் கொள்ளல்லாம் )
பால் - இரண்டு கோப்பை
பழுத்த வாழைப்பழம் - மூன்று அல்லது நான்கு ( பச்சைப் பழமாக இருக்க வேண்டும். மலைப்பழமும் போடலாம். ஆனால் இரண்டு மடங்காகப் போட வேண்டும். மலைப்பழம் சிறியதாக இருக்கும். நாட்டுப் பழமும் பூலாஞ்செண்டும் ஆகாது )
நெய் - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
உலர் திராட்சை - தேவையான அளவு
ஏலக்காய் - தேவையான அளவு ( வெறும் வானலியில் லேசாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும் )
செய்முறை
1 . அடிகனமான பாத்திரத்தில் பாலையும் அரிசியையும் போட்டு வேக விடவும். குக்கரில் வேகவைத்தாலும் பரவாயில்லை. தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.
2. அரிசி குழைய வெந்ததும் அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும்.
3. வெல்லமும் அரிசியும் நன்றாகக் குழைந்து வருகையில் (வெல்ல வாடை கமகமவென வரும்) வெட்டி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகளையும் சேர்க்கவும்.
4. கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டு நன்றாகக் கிளறவும்.
5. எல்லாம் கலந்து பாயாசப் பதத்தில் வருகையில் ஏலக்காய்ப் பொடியும் முந்திரியும் திராட்சையும் கலக்கவும்.
6. கெட்டியான வாழைப் பழப் பாயாசம் தயார்.
இதையே மாம்பழத்தைக் கொண்டும் செய்யலாம். ஆனால் மல்கோவா போன்ற நாரில்லாத இனிப்பு மாம்பழங்களையே பயன்படுத்த வேண்டும். நன்கு கனிந்த பலாப்பழங்களையும் பயன்படுத்தலாம். ஆனால் பலாப்பழத்தை மிகவும் சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். வாழை விரைவில் வெந்து விடும். பலா சற்று நேரம் பிடிக்கும்.
செய்து உண்டு மகிழ்ந்து கருத்துச் சொல்லுங்கள்.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, August 25, 2005
போனது போனாய்
போனது போனாய்
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்
மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்
சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்
கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய்- நான்
நடைப் பொருளாவதற்குள்!
என்னை ஏன் கொண்டு போனாய்
எனக்குத் தெரியாத என்னை
எனக்குத் தெரியாமல் ஏன் கொண்டு போனாய்
மீண்டும் வந்தது வந்தாய்
உன்னையாவது தந்தாயா?
எனக்குத் தெரிந்த உன்னை
எனக்குத் தெரிந்தே ஏன் தராமல் போனாய்
சரி. வருவதுதான் வருவாய்
வருவாயைப் பார்க்காமல்
என்னை விலைக்காவது வாங்க வருவாய்
கடைப் பொருளுக்கும்
கடைப் பொருளல்லவே
விடைப் பொருள் தருவாய்- நான்
நடைப் பொருளாவதற்குள்!
Monday, August 22, 2005
சூர் கொன்ற ராவுத்தனே
கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே
இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.
ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.
கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.
கண்டுண்ட - கற்கண்டு உண்டசொல்லியர் - பேசுகின்றவர்கள்கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?
வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.
மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும்.
ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.
இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?
முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் மதச்சார்பற்ற பண்பு.
சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.
கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.
இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.
மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.
மொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே
இளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும்? அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.
ஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.
கள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.
கண்டுண்ட - கற்கண்டு உண்டசொல்லியர் - பேசுகின்றவர்கள்கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்?
வேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.
மதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும்.
ஆகையால்தால் "அயர்கினும் வேல் மறவேன்" என்றார் அருணகிரிநாதர்.
இன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் போகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா?
முருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் மதச்சார்பற்ற பண்பு.
சூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.
கூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.
இலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். "பறைக்கண் பேய்மகள்" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.
மனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.
Wednesday, August 10, 2005
அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்
அரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்
சென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!இளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண்? அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது? எப்படிப் பார்க்காமல் செல்வது?
அலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.
ஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும். திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா?
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.
இன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.
இவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.
விரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.
பிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.
உள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.
இதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.
எங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா? தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ! மாயவன் மெய்வண்ணமோ! அதை எங்கே பார்க்க முடியும்? சமணராகிய இளங்கோவே "கண்ணெண்ண கண்ணே" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.
ஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.
கூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.
அடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.
வலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.
வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேடிச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது? கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.
அன்புடன்,
கோ.இராகவன்
சென்ற மாதம் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன். அந்தச் சுற்றுலாவிலே திருவரங்கனையும் கண்டு வர எண்ணங் கொண்டு திருவரங்கம் சென்றேன்.
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே!கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே!இளங்கோ வாக்கு. பார்க்காத கண்ணென்ன கண்? அப்படிப் பார்க்கையில் இமைக்கின்ற கண்ணென்ன கண். கவிநயந் ததும்ப இளங்கோ எழுத வேண்டுமென்றால் அந்தப் பரந்தாமனின் அழகை என்ன சொல்வது? எப்படிப் பார்க்காமல் செல்வது?
அலையாழி அரிதுயிலும் மாயனைக் காண, மாலை நிறத்தவனைக் காண மாலையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோம். முன்பு சிறுவயதில் திருச்சியும் திருவரங்கமும் திருவானைக்காவலும் சமயபுரமும் சென்றிருக்கிறேன். அப்பொழுது திருவரங்கமும் ஆனைக்காவும் திருச்சிக்கு வெளியே இருக்கும் ஊர்கள்.
ஆனால் இன்றைக்கு திருச்சிக்குள்ளேயே இருக்கின்றன திருவானைக்காவும் திருவரங்கமும். திருவானைக்காவல் என்ற அழகிய தமிழ்ப் பெயர் மருவி பேருந்துகளில் திருவானைக் கோவில் என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். யாராவது திருத்தக் கூடாதா?
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவதற்காகவே ஓங்கி உயர்ந்த கோபுரம். பலவண்ணங்களை வீசிக் கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. தமிழ் கட்டடக் கலை முறையில் அமைந்திருந்த கோபுரம் சிறப்பாக இருந்தது.
இன்னமும் இருள்கவியாத மாலையாயினும் மக்களின் நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருந்தது. பள்ளியிலிருந்து வீடு திரும்பும் சிறுவர்களும் சிறுமியர்களும் வீதிகளில் விரைந்து கொண்டிருந்தனர். அங்காடிகளில் பொருட்களை விற்பவர்களும் வாங்குகின்றவர்களும் மிகுந்து நெரிசல் உண்டாகத் தொடங்கியிருந்தது.
இவர்களோடு அரங்கணைக் காண வந்த கண்ணிரண்டையும் சுமந்து வந்திருந்த கூட்டத்தினர். அவர்களோடு சேர்ந்து இருமருங்கிலும் பார்த்துக் கொண்டே கோயிலை அடைந்தோம்.
விரைந்து உட்சென்ற வேளையில் திருக்கதவம் சாத்தி வைத்திருந்தார்கள். இன்பத்தை பாக்கி வைக்காமல் தருவாய் என வேண்டி வந்த வேளையில் கதவைச் சாத்தி வைத்திருந்தது அங்கிருந்த அன்பர்களை முணுமுணுக்க வைத்தது. அடுத்த தரிசனம் இன்னும் அரைமணியில் என்றனர். காத்திருந்து உள்ளே சென்றோம். கூட்டம் சிறிது சிறிதாகப் பெருகி நிறைந்து கொண்டிருந்தது. பத்து ரூபாய் வரிசையில் போனால் விரைவாகப் பார்க்கலாம் எனக் கருதி அந்த வரிசையில் நின்றோம். அங்கு ஒரு இருபது நிமிட காத்திருத்தல்.
பிறகு உள்ளே விட்டார்கள். பெரிய மணி ஒலிக்க திருக்கோயிலினுள்ளே நடப்பது சுகானுபவம். பட்டால்தான் அதன் சுகம் புரியும். வரிசை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆண்டவனைத் தரிசிக்கப் போகும் ஆவலும் மிகுந்தது. ஆக்கப் பொறுத்தும் ஆறப் பொறாதார் பலர் வரிசையில் நெருக்கினார்கள்.
உள்மண்டபத்தில் புதிதாக வேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். கருங்கற்றூண்கள் புதிதாக போடப்பட்டிருந்தன. சுவற்றிலும் புதிதாக கற்களைப் பதித்திருந்தார்கள். பாரம்பரியம் மிக்க கோயிலுக்குள் இருக்கும் உணர்வு குறைந்து கொண்டே வந்தது. பழைய தூண்களோடு ஒட்டியிருந்த கிராணைட் ஸ்லாபுகள் ஆங்காங்கே கீழே விழுந்திருந்தன. பழசும் புதுசும் ஒட்டவில்லை போலும்.
இதோ பரந்தாமன் படுத்திருக்கின்றான். எங்கே ஒரு முறை முழுதாகப் பார்க்கலாம் என்று ஆவலுடன் பார்ப்பதற்குள், "நகருங்கள்! நகருங்கள்!" என்று சொல்லி விரைவு படுத்தினர். லேசுமாசாக பள்ளிகொண்டவனைக் கண்களில் கைது செய்து விட்டு வெளியே வந்தோம்.
எங்கும் நிறைந்தவனை எங்கும் காணலாம். அப்படியிருக்க சீரங்கத்தில் மட்டும்தான் போய்ப் பார்க்க வேண்டுமா? தேவையில்லைதான். ஆனால் அந்தக் குமிழ்ச் சிரிப்பும், பொய்த் தூக்கமும், அழகு திருவடிகளும் சிற்பியின் கைவண்ணமோ! மாயவன் மெய்வண்ணமோ! அதை எங்கே பார்க்க முடியும்? சமணராகிய இளங்கோவே "கண்ணெண்ண கண்ணே" என்று பாடியிருக்கிறார் என்றால், நான் எந்த மூலைக்கு.
ஆனால் ஆவல் முறையாகப் பூர்த்தியாகவில்லை. நின்று நிதானமாக தரிசிக்க முடியவில்லை. வெளிப்பிரகாரம் சுற்றி விட்டு ஐயங்கார் புளியோதரையும் சர்க்கரைப் பொங்கலும் பிரசாதமாக வாங்கி உண்டோம். வயிறு நிரம்பியபின் ரெண்டே ரெண்டு வடைகளை மட்டும் உள்ளே தள்ளி விட்டு, திருச்சிக்கான பேருந்தைப் பிடித்தோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, சென்னையில் அடையாறு வரை செல்ல வேண்டிய வேலை. அடையாறு வீட்டிற்குப் பக்கத்தில்தான். வண்டியில் செல்கையில் அனந்த பத்மநாபசுவாமி திருக்கோயிலைப் பார்த்தேன். நேரங் கிடைக்கையில் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். நேரமும் வந்தது. காலையில் சாப்பிட்டு விட்டு (நான் அதெல்லாம் பார்ப்பதில்லை. சாப்பிட்டு விட்டு போனால் கோவித்துக் கொள்ள மாட்டார் என்று நம்பிக்கை.) வண்டியில் விரைந்தேன்.
கூட்டம் இருக்கவில்லை. உள்ளே அரவணை மேல் பள்ளி கொண்ட பெருமாள் கண்ணிறையத் தெரிந்தான். படுக்கை பெரிய படுக்கையாதலால் கருவறையும் பெரிது. மூன்று கதவுகள். மூன்றின் வழியாகவும் பரந்தாமனைப் பார்க்க முடிந்தது.
அடிமுதல் முடிவரை, அழகை அங்குலம் அங்குலமாக கண்கள் அள்ளிப் பருகின. இமைக்க மறந்த கண்களால் அழகை அளக்க அளக்க ஆசையும் ஆவலும் தீரவேயில்லை.
வலக்கை ஒதுங்கி படுக்கைக்கு வெளியே நீட்டிக் கொண்டு, படுத்துக் கொண்டிருந்தாலும் பிடிப்பதற்கு இந்தக் கையை நீட்டிக் கொண்டிருப்பது சொல்லமலேயே விளங்கிற்று. இளங்கோ சொன்னதன் பொருள் எனக்குப் புரிந்தது.
வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனை அரங்கத்தில் பார்ப்பேன் என்று தேடிச் சென்றேன். உலகமே அரங்கம். அது கடவுள் அருளுக்குக் கிறங்கும். அங்கு இருப்பவனே இங்கும் எங்கும் இருந்து நோக்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து அருள் புரிவான் என்ற உண்மை விளங்கியது. கைகளைக் கூப்பித் தொழுதேன். கண்களை மூடிக் கொண்டேன். இதென்ன கூத்து.....கோயிலுக்கு வந்து கண்களை மூடிக்கொண்டா ஆண்டவனை வணங்குவது? கண்ணை மூடினாலும் திறந்தாலும் தெரிகின்ற ஆண்டவனை எப்படித் தொழுதால் என்ன!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! நின் சேவடி செவ்வித் திருக்காப்பு.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, August 08, 2005
திருவாசக இசைத்தட்டு - எனது பார்வையில்
திருவாசக இளையராஜாங்கம்
எல்லாரும் திருவாசகத்தை விமர்சித்துத் தெருவாசகமாக்கி விட்ட நிலையில் நான் மட்டும் சும்மா இருக்கலாமா? என் பங்குக்கு விமர்சித்திருக்கிறேன்.
இன்னிசைப் பூக்களான தமிழ்ப் பாக்கள் எத்தனை என்றால் பலப்பல. அவற்றில் மக்களைச் சேர்ந்தவை எவையென்றால்
சிற்சில.
எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளுக்குச் சிலர் இசையமைத்து ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். பல
ஔவையார் பாடல்கள் ஔவையார் திரைப்படத்தில் மனங் கவர்ந்தன. சில சிலப்பதிகாரப் பாடல்களுக்கு சலீல் சவுத்திரி
அருமையாக இசையமைத்து பி.சுசீலாவும் யேசுதாசும் பாடியிருக்கின்றார்கள். பின் தேவார திருவாசகப் பதிகங்கள்
திரையில் வந்தன. எம்.எஸ்.ஸ¤ம் சில சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பக்திப் பாடல்கள் என்ற வகையிலும்
பல வந்துள்ளன. விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசை வடிவில் வந்துள்ளது. பாரதியார் பாரதிதாசன்
பாடல்களும் வந்துள்ளன. இளையராஜாவின் இசையில் "கற்றது கைமண்ணளவு" என்ற ஔவையார் பாடல் தாய்
மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா பாட வந்துள்ளது. தளபதி படத்தில் "குனித்த புருவமும்" என்ற தேவாரப் பாடலும்
வந்துள்ளது. இன்னமும் சிலவும் இருக்கலாம்.
இவையனைத்திற்கும் இப்பொழுது வந்திருக்கும் திருவாசகத்திற்கும் என்ன வேறுபாடு? தமிழ்ப் பண்பாட்டிற்குப் பழக்கமான
இசை வடிவங்களில் மேற்கூரிய பாடல்கள் அனைத்தும் வந்துள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களை நாம் மூழ்கிச்
சுவைத்து மகிழ முடிந்தது. ஆனால் இப்பொழுதைய இளையராஜாவின் முயற்சி வேறுபட்டது. மேற்கத்திய இசை
வடிவத்தில் இறைவனை வணங்குவதற்குண்டான இலக்கண முறையைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்களுக்கு
இசையமைத்திருப்பது. அதிலும் பழம் பாடல்களுக்கு. ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில பைபிளையோ அராபிய
திருக்குரானையோ தமிழிசை முறைப்படிப் பாடுவது.
இது எளிதன்று. மிகக் கடினம். காரணம்? தமிழிசையில் பாடல்கள்/செய்யுட்கள் எழுதும் பொழுதே அதற்குரிய பாவை
முடிவு செய்து விடுவார்கள். வெண்பாவோ ஆசிரியப்பாவோ கலிப்பாவோ வஞ்சிப்பாவோ கொண்டுதான் செய்யுள்
எழுதப்படும். ஆக இங்கே மெட்டுக்குப் பாட்டுப் போட முடியாது. Oration என்ற மேற்கத்திய பாணியில் தமிழ்ப்
பாடலைப் பாட தமிழறிவும் தேவை. தமிழிசையறிவும் தேவை. மேற்கத்திய இசையறிவும் தேவை. இவை மூன்றுமே
இளையராஜாவிடம் இருப்பவைதான். அனைத்திற்கும் மேலாக இறையருளும் பங்கேற்றவர்களின் மதங்களை மீறிய
தமிழுணர்வும் இங்கே பெருங் காரியமாற்றியிருக்கின்றன.
திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு அதன் பெருமை தெரியும். ஜீ.யூ,போப் அவர்களின் மொழி பெயர்ப்பும் சிறப்பானது.
வரிக்கு வரி அவர் மொழி பெயர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்காது. Understanding
என்றால் கீழே நிற்பது என்று அவர் மொழி பெயர்க்கவில்லை. திருவாசகப் பாடல்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கி
அதனை ஆங்கில முறைப்படி படைத்திருக்கிறார் போப். இதுவும் மிகக் கடினமான செயலே. இசைத் தட்டோடு
வந்திருக்கும் பாட்டுப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் இது உங்களுக்குப் புரியும்.
தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில்
இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக்
கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில்
அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.
இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாகப் பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச்
சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக
இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.
பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும்
கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள்.
அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட
முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.
இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே
தேவைக்கேற்றவாரறு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும்
அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு
ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள்
கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.
திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த
இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி
வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த
வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.
இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும்
பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே!
அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல்
நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு.
நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன்
இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு.
ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல்
இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும்
அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.
மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று
தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில்
ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச்
செய்திருப்பார்கள்.
ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக
இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது
கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும்
தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு
பாடல்.
"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப்
பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல்
மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.
நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று
சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக
இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று
பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி
ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.
உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன்
குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு
வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர்
முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன்.
அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.
இசைத்தட்டில் இறுதியாக வருகின்ற பாடல் "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று வருகின்ற பதிகம். இந்தப் பாடலிலும்
பிரச்சனையில்லை. அதற்கு இளையராஜா இசையமைத்துப் பாடியதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் பிரச்சனை
செய்கிறார்கள்.
பாடல் வரிகளைக் கவனிக்க வேண்டும். "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று தொடங்கி, அதாவது புற்றிலிருக்கும்
பாம்பிற்கும் அஞ்சேன், "பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்" என்று வளருகிறது. வளர்ந்து "கற்றை வார் சடை எம்
அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி" என்று இறைவனைச் சொல்லி விட்டு, இந்த இறைவனைத் தவிர வேறொரு
இறைவன் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்று முடிகிறது பாடல். வரிகளைக் கீழே
தருகிறேன்.
புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்கற்றைவார் சடையெம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணிமுற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்து எம் பெம்மார்க்குஅற்றிலாத அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறேஇந்தப் பாடல் அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. அதாவது தான் அச்சப்படுகின்ற பத்து விடயங்களை மாணிக்க
வாசகர் அடுக்கியுள்ளார். சரி. பிரச்சனைக்கு வருவோம்.
சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் மாணிக்க வாசகருக்கு ஏன்
வெறுப்பு? இறையருள் பெற்றவருக்கு இதுவா பொறுப்பு? இப்படி எழுதினால் ஏது சிறப்பு? இதற்கு இசையமைக்காமல்
இளையராஜா செய்திருக்க வேண்டும் மறுப்பு?
இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்சனை. மாணிக்கவாசகரை சாதாரண மதவெறியராக்கி, இளையராஜாவை மதப்பித்தனாக்கி
பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் அது உண்மை போலத்தான் தோணும். ஆனால்
உண்மையல்ல. காரணமென்ன? தமிழ் நூல்களின் பண்பும் தமிழ் மொழியின் செழுமையும் தான். தமிழில் நுனிப்புல்
மேயக்கூடாது. வரிக்குவரி அப்படியே பொருள் கொண்டு படிக்கக் கூடாது.
காலத்தில் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானுக்கும் முந்தையது திருவாசகம் என்பதிலிருந்து அதன் பழமை
விளங்கும். அதனை ஒரு கிருத்துவப் பாதிரியார் மொழிமாற்றினார் என்பதிலிருந்து அதன் பெருமை விளங்கும். சரி.
பிரச்சனைக்கு என்ன விளக்கம்?
அல்லாவின் திருவருளாலே அண்ணல் (ஸல்) முகமது நபியவர்கள் திருவாக்கினின்றும் வெளிவந்தது திருக்குரான். அரபு
மொழியிலே அனைவருக்கும் புரியும் வகையிலே இசைநயத்தோடு அமைந்தது திருக்குரான். அரபு மொழியின்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைந்த இறையருள் நூல். அரபு மொழி அறிந்தவர் அதை உணரலாம். நல்வழி பெறலாம்.
அரபு மொழி அரைகுறையாகத் தெரிந்தவர் தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். விளக்கம் கொடுக்கவும்
உண்டான ஊடகங்களை இஸ்லாம் அருமையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
ஆனால் திருவாசகம் அப்படியில்லை. தமிழ் மொழி வளர்ச்சி கொண்டும், இன்றைக்கு பழக்கத்தில் வலுவிழந்தும் உள்ள
நிலை. பழைய செய்யுட்களைப் படிக்கையில் நல்ல தமிழறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாமாகத் தேடிப் போய்க் கேட்ட வேண்டியுள்ளது. ஆங்காங்கே நண்பர்கள் விளங்களை இட்டுள்ளனர். இருந்தாலும்
போய்ப் பார்க்கச் சோம்பல். பார்த்த சில விளக்கங்களில் செறிவு பற்றாமை.
இந்தப் பிரச்சனை எழுப்பியதும் வலைப்பூவில் ஒரு நண்பர் வியந்து சொன்னதை இங்கே தருகிறேன். "ஆகா! என்னே
படைப்புச் சுதந்திரம். வைரமுத்துவோ வாலியோ எழுதியிருந்தால் ஈகோ பிரச்சனையில் வரிகளை மாற்றுவதில் மறுப்பு
வரலாம். யாரோ மாணிக்க வாசகராமே. புது ஆள்தானே. இளையராஜா படக்கென்று மாற்றி எழுதி வாங்கியிருக்கலாமே!"
கிண்டலாக அந்த நண்பர் சொன்னது உண்மை நிலையை வேதனையோடு எண்ணித்தான்.
மாணிக்கவாசகரை ஒரு evangelist என்றும் மதப்பிரசங்கி என்றும் இகழ்கின்றவர்கள் திருவாதவூராரின் வாழ்க்கையையும்
அறியார். திருவாசகத்தின் பெருமையையும் அறியார். எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.
இறையருள் பெற்ற ஒரு கிருஸ்துவரோ, இஸ்லாமியரோ, பௌத்தரோ......யாராயிருந்தாலும் இப்படிச் சொல்லியிருப்பார்கள்.
காரணம் என்ன? அன்புதான். அன்பினால் அச்சம் வருமா என்று கேட்கலாம். கண்டிப்பாக வரும். பிள்ளைகளின்
மேலுள்ள அன்புதானே பெற்றோர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது!
நன்கு படித்துப் பெரியவர்களான பெற்றோர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் படிப்பின் ஆர்வலன்.
மற்றொருவன் விளையாடிப் பொழுது போக்குகின்றவர். இரண்டாமவனை நினைத்தால் பெற்றோருக்கு அச்சம் வரத்தானே
செய்யும்? விளையாடும் பிள்ளை முன்னுக்கு வருமா என்று!
விளையாடி முன்னுக்கு வந்தவர்களும் உண்டு. ஆனால் இந்தப் பெற்றோர்களுக்கு அது தெரியவில்லை. இவர்கள் படித்து
முன்னுக்கு வந்தவர்கள். நன்கு படித்தால் முன்னுக்கு வரலாம் என்று தெரியும். எடுத்துக்காட்டுகளாக அவர்களே
இருகிறார்கள். இன்னொரு பிள்ளையும் நிருபிக்கப் போகிறான். எங்கே இவன் மட்டும் தப்பி விடுவானோ என்ற அச்சம்.
அந்த அச்சமே திருவாதவூராருக்கும். அன்பே உருவானவர். எந்த மதப்பிரச்சாரமும்
செய்யவில்லை அவர். இறையருளைப் பெற்றவர். எல்லாம் தெய்வந்தான். ஈஷ்வரு அல்லா தேரே நாம். "சிவனை வணங்கி
நான் உய்வு பெற்று விட்டேன். இந்தப் பிள்ளை இன்னமும் உய்வு பெறவுமில்லை. சிவனை வணங்குகிறாற் போலவும்
தெரியவில்லை. எப்படிப் பிழைக்கும் என்று அச்சமாக இருக்கிறது." இப்படி அஞ்சுகிறார் மாணிக்க வாசகர்.
சிவன் பெயரைச் சொல்லாதவரை கொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை...எல்லாரையும் சிவநாமம் ஓதச் சொல்லு
என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை. இல்லை. இவைகள்தான் மதப்பிரச்சாரம். திருவாசகத்தை முழுமையாகப் படியுங்கள்.
குற்றமற உணருங்கள். மாணிக்கவாசகரின் அச்சத்தை அன்பு என்று உணருங்கள்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்ததை தவறு என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் முழுவதும் அவரே பாடியிருப்பதும் சிறப்பாகவே இருக்கிறது. பாட்டுக்கு
முன்னமே சிம்பொனி இசை வடிவத்திற்கு திருவாசகத்தைப் பொறுத்திப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கிறது.
இதுவரையில் திருவாசக ஒலிப்பேழையிலுள்ள பாடல்களின் விமரிசனத்தைப் பார்த்தோம். இனி முடிவுரைதான்.
இந்த இசைவடிவத்தின் வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உருகியது நினைவிற்கு வருகிறது. அவரும் ஒரு
இசைமேதை. திரையிசையிலும் பக்தியிசையிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது கண்களைக்
கசிந்துருகச் செய்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் ஒரு நேர்மையானவரின்
கருத்து அது. கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் ஏ.ஆர்.ரகுமானும் சொல்லியிருக்கின்றார்.
இளையராஜாவின் மீது ஆத்திரமோ, திருவாசகத்தின் மீது ஆத்திரமோ அல்லது தமிழின் மீது ஆத்திரமோ
என்னவோ...பெயரில் மட்டுமே ஞானமுள்ளவர்களால் இளையாராஜா கிழித்தெரியப் பட்டார். அவருடைய குலத்தைச்
சொல்லிக் காட்டி அவமானப் படுத்தப் பட்டார். திரையிசையில் அவர் தொய்வு கொண்டது நினைவுறுத்தப் பட்டு
சிரிக்கப்பட்டது. இதென்ன பைத்தியக்காரத்தனம்?
இசையை ரசி. அதில் குற்றமிருந்தால் சொல். அவர் குரல் சில இடங்களில் எடுபடவில்லை. உண்மைதான். ஒத்துக்
கொள்கிறோம். அதற்காக இந்தப் படைப்பையே குற்றம் சொல்வதா? இசையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத
ஔரங்கசீப்புகள் இசை விமரிசனம் செய்தன. கரித்துக் கொட்டின.
தமிழிலிலக்கியத்தில் பழக்கமோ ஆழமான அறிவோ இல்லாமல் திருவாசகத்தைக் குற்றம் சொன்னர். சிவனைப் பாடும்
பாடலுக்கு இசையமைத்தால் இளையாராஜா மதவெறியனாகவும் சூத்திரனாகவும் ஆகிவிட்டாராம்....இதென்ன கொடுமை.
அவருக்குத் தெரிந்ததைச் செய்திருக்கிறார் அவர். இசை தெரியும். தமிழ் தெரியும். இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்புள்ளது. அந்தத் தொடர்பை வெளிக் கொண்டு வந்ததிற்கு இப்படி ஒரு பரிசு.
அல்லாஹு அக்பர் என்றுதான் இஸ்லாமியர்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை மதச்சார்பற்றவர்கள் அல்லர் என்ற
முடிவுக்கு வரும் மடமையைத்தான் இந்த வீண் விமர்சகர்கள் செய்திருக்கின்றார்கள். சூரியனுக்குச் சேறு பூச
முயன்றிருக்கின்றார்கள்.
இதே வேறு மொழி இலக்கியம் எதற்காவது இளையராஜா இசையமைத்திருந்தால் அவரை அந்த மொழிக் குடிதாங்கி
என்று போற்றியிருப்பார்கள். போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும்
வேண்டும். இன்னமும் வேண்டும்.
சரி. தமிழன் மனப்பாங்கு தெரிந்ததுதானே. விட்டுத் தள்ளுங்கள்.
இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப் பட வேண்டியவைகள். இன்னும் எதிர் பார்க்கிறோம் இளையராஜா.
நிறைய இருக்கின்றன. சிம்பொனிகளும் ஓரேட்டோரியோக்களும் இருக்கட்டும். கொஞ்சம் சிலப்பதிகாரம், திருப்புகழ்,
திருப்பாவை, திருவெம்பாவை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய
இசைவடிவிலேயே தாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். தமிழ் காத்திருக்கிறது. இசையும் காத்திருக்கிறது.
அன்புடன்,
கோ.இராகவன்
எல்லாரும் திருவாசகத்தை விமர்சித்துத் தெருவாசகமாக்கி விட்ட நிலையில் நான் மட்டும் சும்மா இருக்கலாமா? என் பங்குக்கு விமர்சித்திருக்கிறேன்.
இன்னிசைப் பூக்களான தமிழ்ப் பாக்கள் எத்தனை என்றால் பலப்பல. அவற்றில் மக்களைச் சேர்ந்தவை எவையென்றால்
சிற்சில.
எனக்குத் தெரிந்த வரையில் திருக்குறளுக்குச் சிலர் இசையமைத்து ஆங்காங்கே பயன்படுத்தியிருக்கிறார்கள். பல
ஔவையார் பாடல்கள் ஔவையார் திரைப்படத்தில் மனங் கவர்ந்தன. சில சிலப்பதிகாரப் பாடல்களுக்கு சலீல் சவுத்திரி
அருமையாக இசையமைத்து பி.சுசீலாவும் யேசுதாசும் பாடியிருக்கின்றார்கள். பின் தேவார திருவாசகப் பதிகங்கள்
திரையில் வந்தன. எம்.எஸ்.ஸ¤ம் சில சிலப்பதிகாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார். பக்திப் பாடல்கள் என்ற வகையிலும்
பல வந்துள்ளன. விஸ்வநாதன் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசை வடிவில் வந்துள்ளது. பாரதியார் பாரதிதாசன்
பாடல்களும் வந்துள்ளன. இளையராஜாவின் இசையில் "கற்றது கைமண்ணளவு" என்ற ஔவையார் பாடல் தாய்
மூகாம்பிகை படத்தில் பி.சுசீலா பாட வந்துள்ளது. தளபதி படத்தில் "குனித்த புருவமும்" என்ற தேவாரப் பாடலும்
வந்துள்ளது. இன்னமும் சிலவும் இருக்கலாம்.
இவையனைத்திற்கும் இப்பொழுது வந்திருக்கும் திருவாசகத்திற்கும் என்ன வேறுபாடு? தமிழ்ப் பண்பாட்டிற்குப் பழக்கமான
இசை வடிவங்களில் மேற்கூரிய பாடல்கள் அனைத்தும் வந்துள்ளன. ஆகையால் அந்தப் பாடல்களை நாம் மூழ்கிச்
சுவைத்து மகிழ முடிந்தது. ஆனால் இப்பொழுதைய இளையராஜாவின் முயற்சி வேறுபட்டது. மேற்கத்திய இசை
வடிவத்தில் இறைவனை வணங்குவதற்குண்டான இலக்கண முறையைப் பின்பற்றி தமிழ்ப் பாடல்களுக்கு
இசையமைத்திருப்பது. அதிலும் பழம் பாடல்களுக்கு. ரொம்பச் சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில பைபிளையோ அராபிய
திருக்குரானையோ தமிழிசை முறைப்படிப் பாடுவது.
இது எளிதன்று. மிகக் கடினம். காரணம்? தமிழிசையில் பாடல்கள்/செய்யுட்கள் எழுதும் பொழுதே அதற்குரிய பாவை
முடிவு செய்து விடுவார்கள். வெண்பாவோ ஆசிரியப்பாவோ கலிப்பாவோ வஞ்சிப்பாவோ கொண்டுதான் செய்யுள்
எழுதப்படும். ஆக இங்கே மெட்டுக்குப் பாட்டுப் போட முடியாது. Oration என்ற மேற்கத்திய பாணியில் தமிழ்ப்
பாடலைப் பாட தமிழறிவும் தேவை. தமிழிசையறிவும் தேவை. மேற்கத்திய இசையறிவும் தேவை. இவை மூன்றுமே
இளையராஜாவிடம் இருப்பவைதான். அனைத்திற்கும் மேலாக இறையருளும் பங்கேற்றவர்களின் மதங்களை மீறிய
தமிழுணர்வும் இங்கே பெருங் காரியமாற்றியிருக்கின்றன.
திருவாசகத்தைப் படித்தவர்களுக்கு அதன் பெருமை தெரியும். ஜீ.யூ,போப் அவர்களின் மொழி பெயர்ப்பும் சிறப்பானது.
வரிக்கு வரி அவர் மொழி பெயர்க்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் அது சிறப்பாக இருந்திருக்காது. Understanding
என்றால் கீழே நிற்பது என்று அவர் மொழி பெயர்க்கவில்லை. திருவாசகப் பாடல்கள் சொல்லும் கருத்தை உள்வாங்கி
அதனை ஆங்கில முறைப்படி படைத்திருக்கிறார் போப். இதுவும் மிகக் கடினமான செயலே. இசைத் தட்டோடு
வந்திருக்கும் பாட்டுப் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் இது உங்களுக்குப் புரியும்.
தகட்டில் முதல் பாடலாக இருப்பது "பூவார் சென்னி" எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடல் ஏன் முதலிடத்தில்
இருக்கிறது என்பது பாடலின் தொடக்கத்திலேயே புரிந்து விடுகிறது. பெரிய அலை போல இசை வந்து நம்மை பரவசக்
கடலுக்குள் அழைத்துச் சென்று விடுகிறது. தப்பிக்க முடியவில்லை. பழைய நூற்றாண்டுத் தமிழ் மேற்கத்திய இசையில்
அரியணை போட்டு அமர்ந்து கொள்கிறது.
இந்தப் பாடல் இளையராஜாவின் குரலுக்கு அழகாகப் பொருந்தி வருகிறது. மிகவும் சிறப்பு. இறைவனின் சிறப்புகளைச்
சொல்லும் பாடல்கள். உணர்ச்சியின் உச்சியில் நின்று கொண்டு பாடியிருக்கிறார். அதனால்தான் பாடல் பெரியதாக
இருந்தாலும் முடியும் வரை நாம் மெய் மறந்து போகிறோம்.
பீத்தோவானின் கொஞ்சம் சிம்பொனி கேட்டிருக்கிறேன். ரொட்ஜர்ஸ் அண்டு ஹாமர்ஸின் பாடல்கள் கொஞ்சமும்
கேட்டதுண்டு. இவர்கள் மேற்கத்திய இசையில் ஊறித் திளைத்தவர்கள். அதே நேரத்தில் அவர்களும் மேற்கத்தியர்கள்.
அந்த அளவிற்கு பிசகாமல் செய்திருக்கிறார் இளையராஜா. இது The King and I படத்தில் சீன இசையைக் கையாண்ட
முறைமையைப் போல சிறப்பாக இருக்கிறது. கேட்டவர்கள் எல்லாம் இந்தப் பாடலுக்குத்தான் முதலிடம் கொடுக்கிறார்கள்.
இரண்டாவது வருகின்ற பாடல் "பொல்லா வினையேன்" எனத் தொடங்கும் பதிகம். ஆனால் ஆங்காங்கே
தேவைக்கேற்றவாரறு கொஞ்சம் முன்னுக்குப் பின்னாக வேறு பதிகங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதுவும்
அருமையாக இருக்கிறது. இந்தப் பாடல்தான் ஆறு பாடல்களிலும் நீளமானது. காரணமில்லாமலில்லை. தமிழ் வரிகளோடு
ஆங்கில வரிகளும் கலந்து உணர்ச்சிக் கலவையாக வரவேண்டுமே! அதற்குத் தோள்
கொடுத்திருக்கிறார்கள்....இல்லையில்லை உயிர் கொடுத்திருக்கிறார்கள் உடன் பாடிய ராய் ஹார்கோடும் குழுவினரும்.
திரையிசையில் இளையராஜாவின் முத்திரைக் கைத்திறன்கள் உண்டு. அவற்றை இலக்கண வரம்பிற்குட்பட்ட இந்த
இசைக்கோர்வையில் காட்டியிருக்கிறார். மெல்லிய ஓடையாகத் தொடங்கும் பாடல் தடாலென அருவியாகப் பெருகி
வழிந்து உணர்ச்சிப் பிரவாகமாய் மடை திறக்கிறது. விமானத்தில் பறந்து கொண்டு கடலைப் பார்க்கும் பரவசம். இந்த
வெளியீட்டில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான்.
இது நல்லது அது நல்லது என்றெல்லாம் பிரித்துச் சொல்ல முடியாத அருமையான பாடல். ஒவ்வொரு வரியையும்
பாடுகையில், அந்த வரியும் புரிகையில் (இதற்கு செய்யுட்களோடு கொஞ்சம் பழக்கமிருக்க வேண்டும்.) பரவசமே!
அதனால்தான் கேட்கும் பொழுது பெரிய பாடலாக இருந்தாலும் அலுப்புத் தெரியவில்லை. ஒரே பாடலாக இல்லாமல்
நாலைந்து பாடல்களாக கேட்பது போல உள்ளது இன்னமும் சிறப்பு.
நமசிவாய வாழ்க பதிகத்தை கே.வீ.மகாதேவன்
இசையில் பி.சுசீலா பாடக் கேட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வேறு சிலர் இசையில் வேறு சிலர் பாடவும் கேட்டதுண்டு.
ஆனாலும் மகாதேவன் போட்ட மெட்டுதான் எனக்கு வரும். அவ்வளவு உணர்ச்சியும் பண்பாடும் கலந்த இசை. இனிமேல்
இளையராஜாவின் மெட்டும் நினைவிற்கு வரும். இரண்டுக்கும் அடிப்படை இசைக் கோர்ப்பில் வேறுபாடு இருந்தாலும்
அவை சொல்ல வந்ததைச் சொல்லி விட்டன. மிகச் சிறப்பு.
மூன்றாவது பாடல். அலைகள் ஓய்வதில்லை படத்தில் இளையராஜாவும் சசிரேகாவும் பாடிய விழியில் விழுந்து என்று
தொடங்கும் பாடல் எல்லாரும் கேட்டிருப்பீர்கள். அப்படி ஒரு பாடல்தான் மூன்றாம் பாடல். அதாவது அந்தப் பாடலில்
ஆண்குரலும் பெண்குரலும் இணைந்து இழைந்து தேனாக ஒழுகும். சசிரேகாவும் இளையாராஜாவும் அருமையாகச்
செய்திருப்பார்கள்.
ஆனால் "பூவேறு கோனும்" எனத் தொடங்கும் இந்தப் பாடலில் சசிரேகாவிற்கு மாற்றாக பவதாரிணி. உச்சரிப்பு தெளிவாக
இருந்தாலும் ஒரு பிண்ணனிப் பாடகியாக பவதாரிணி செல்ல வேண்டிய தொலைவு இன்னமும் நிறைய என்பது எனது
கருத்து. இளையராஜாவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறுகிறார். சித்ராவையாவது பாட வைத்திருக்கிலாம். ஆனாலும்
தமிழர் என்பதால் என்னுடைய வாக்கு சசிரேகாவிற்கு. இளையராஜாவும் ஒரு தந்தைதானே. இருந்தாலும் ரசிக்கத்தக்க ஒரு
பாடல்.
"உம்பர்கட்கரசே" எனத் தொடங்கும் பாடல் நான்காவதாக வருகிறது. எனது கருத்தில் இதுதான் அனைத்துப்
பாடல்களிலும் இறுதியாக வருவது. இளையராஜாவே பாடியிருக்கின்றார். இந்தப் பாடல் ஜேசுதாசின் குரலுக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும். அவரை இளையராஜா பயன்படுத்தியிருக்கலாம். அப்படி அவர் பாடியிருந்தால் இந்தப் பாடல்
மிகவும் சிறப்பாக இருந்திருக்குமென்பது எனது கருத்து.
நல்ல வேளையாக அடுத்து வரும் பாடலை இளையராஜா குழுவினருக்குக் கொடுத்து விட்டார். நல்ல வேளையாக என்று
சொல்வதற்கு எனக்கே வருத்தமாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ இந்தப் பாடல் சற்று சுறுசுறுப்பாக
இருக்கிறது. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடும் "முத்து நாற்றமாம்" எனத் தொடங்கும் பாடல். மொத்தம் மூன்று
பாடகர்களும் மூன்று பாடகிகளும். உன்னி கிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் ஜேசுதாஸ், மஞ்சரி, ஆஷா, காயத்ரி
ஆகியோர் பாடியிருக்கின்றார்கள்.
உன்னி கிருஷ்ணன் பாடியிருக்கின்றார் என்பது பெயர்ப் பட்டியலைப் பார்த்தால்தான் தெரிகிறது. மது பாலகிருஷ்ணன்
குரலெடுத்துப் பாடியிருக்க வேண்டும். நம்மை ஆச்சரியப் படுத்துகிறவர் விஜய் ஜேசுதாஸ். நல்ல குரல்வளம். முன்னுக்கு
வருவதற்கு வாய்ப்புகள் நிறைய. வருவார். பெண்களில் மஞ்சரி சிறப்பாகவும் மற்றவர்கள் நன்றாகவும் செய்திருக்கிறார்கள்.
உண்மையைச் சொல்வதென்றால் எனக்கு ஆஷாவின் குரலையும் காயத்ரியின் குரலையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
சுண்ணமிடிக்கையில் பாடும் பாடலாதலால் உலக்கையிடிக்கும் ஒலியைத் தாளமாக வைத்துப் போட்டிருக்கிறார். இது அவர்
முதல் திரைப்படத்திலேயே செய்து விட்டது. அன்னக்கிளி படத்தில் வரும் "முத்துச் சம்பா" பாடலைத்தான் சொல்கிறேன்.
அதிலும் உலக்கைச் சத்தமே தாளமாக வரும். உற்சாகமான பாடல்.
இசைத்தட்டில் இறுதியாக வருகின்ற பாடல் "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று வருகின்ற பதிகம். இந்தப் பாடலிலும்
பிரச்சனையில்லை. அதற்கு இளையராஜா இசையமைத்துப் பாடியதிலும் பிரச்சனையில்லை. ஆனாலும் பிரச்சனை
செய்கிறார்கள்.
பாடல் வரிகளைக் கவனிக்க வேண்டும். "புற்றில் வாளரவும் அஞ்சேன்" என்று தொடங்கி, அதாவது புற்றிலிருக்கும்
பாம்பிற்கும் அஞ்சேன், "பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்" என்று வளருகிறது. வளர்ந்து "கற்றை வார் சடை எம்
அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணி" என்று இறைவனைச் சொல்லி விட்டு, இந்த இறைவனைத் தவிர வேறொரு
இறைவன் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் அச்சமாக இருக்கிறது என்று முடிகிறது பாடல். வரிகளைக் கீழே
தருகிறேன்.
புற்றில் வாளரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்கற்றைவார் சடையெம் அண்ணம் கண்ணுதல் பாதம் நண்ணிமுற்றுமோர் தெய்வம் தன்னை உண்டென நினைத்து எம் பெம்மார்க்குஅற்றிலாத அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறேஇந்தப் பாடல் அச்சப் பத்து என்ற தலைப்பில் வருகிறது. அதாவது தான் அச்சப்படுகின்ற பத்து விடயங்களை மாணிக்க
வாசகர் அடுக்கியுள்ளார். சரி. பிரச்சனைக்கு வருவோம்.
சிவபெருமானைத் தவிர வேறொரு தெய்வம் உண்டென்று நினைப்பவர்களைக் கண்டால் மாணிக்க வாசகருக்கு ஏன்
வெறுப்பு? இறையருள் பெற்றவருக்கு இதுவா பொறுப்பு? இப்படி எழுதினால் ஏது சிறப்பு? இதற்கு இசையமைக்காமல்
இளையராஜா செய்திருக்க வேண்டும் மறுப்பு?
இப்பொழுது புரிந்திருக்குமே பிரச்சனை. மாணிக்கவாசகரை சாதாரண மதவெறியராக்கி, இளையராஜாவை மதப்பித்தனாக்கி
பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். வெளிப்படையாகப் பார்த்தால் அது உண்மை போலத்தான் தோணும். ஆனால்
உண்மையல்ல. காரணமென்ன? தமிழ் நூல்களின் பண்பும் தமிழ் மொழியின் செழுமையும் தான். தமிழில் நுனிப்புல்
மேயக்கூடாது. வரிக்குவரி அப்படியே பொருள் கொண்டு படிக்கக் கூடாது.
காலத்தில் இஸ்லாமியர்களின் வேதமான திருக்குரானுக்கும் முந்தையது திருவாசகம் என்பதிலிருந்து அதன் பழமை
விளங்கும். அதனை ஒரு கிருத்துவப் பாதிரியார் மொழிமாற்றினார் என்பதிலிருந்து அதன் பெருமை விளங்கும். சரி.
பிரச்சனைக்கு என்ன விளக்கம்?
அல்லாவின் திருவருளாலே அண்ணல் (ஸல்) முகமது நபியவர்கள் திருவாக்கினின்றும் வெளிவந்தது திருக்குரான். அரபு
மொழியிலே அனைவருக்கும் புரியும் வகையிலே இசைநயத்தோடு அமைந்தது திருக்குரான். அரபு மொழியின்
சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அமைந்த இறையருள் நூல். அரபு மொழி அறிந்தவர் அதை உணரலாம். நல்வழி பெறலாம்.
அரபு மொழி அரைகுறையாகத் தெரிந்தவர் தெரிந்தவரிடம் விளக்கம் கேட்டுப் பெறலாம். விளக்கம் கொடுக்கவும்
உண்டான ஊடகங்களை இஸ்லாம் அருமையாக ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
ஆனால் திருவாசகம் அப்படியில்லை. தமிழ் மொழி வளர்ச்சி கொண்டும், இன்றைக்கு பழக்கத்தில் வலுவிழந்தும் உள்ள
நிலை. பழைய செய்யுட்களைப் படிக்கையில் நல்ல தமிழறிவு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாமாகத் தேடிப் போய்க் கேட்ட வேண்டியுள்ளது. ஆங்காங்கே நண்பர்கள் விளங்களை இட்டுள்ளனர். இருந்தாலும்
போய்ப் பார்க்கச் சோம்பல். பார்த்த சில விளக்கங்களில் செறிவு பற்றாமை.
இந்தப் பிரச்சனை எழுப்பியதும் வலைப்பூவில் ஒரு நண்பர் வியந்து சொன்னதை இங்கே தருகிறேன். "ஆகா! என்னே
படைப்புச் சுதந்திரம். வைரமுத்துவோ வாலியோ எழுதியிருந்தால் ஈகோ பிரச்சனையில் வரிகளை மாற்றுவதில் மறுப்பு
வரலாம். யாரோ மாணிக்க வாசகராமே. புது ஆள்தானே. இளையராஜா படக்கென்று மாற்றி எழுதி வாங்கியிருக்கலாமே!"
கிண்டலாக அந்த நண்பர் சொன்னது உண்மை நிலையை வேதனையோடு எண்ணித்தான்.
மாணிக்கவாசகரை ஒரு evangelist என்றும் மதப்பிரசங்கி என்றும் இகழ்கின்றவர்கள் திருவாதவூராரின் வாழ்க்கையையும்
அறியார். திருவாசகத்தின் பெருமையையும் அறியார். எனக்குத் தெரிந்த விளக்கம் சொல்கிறேன் புரிந்து கொள்ளுங்கள்.
இறையருள் பெற்ற ஒரு கிருஸ்துவரோ, இஸ்லாமியரோ, பௌத்தரோ......யாராயிருந்தாலும் இப்படிச் சொல்லியிருப்பார்கள்.
காரணம் என்ன? அன்புதான். அன்பினால் அச்சம் வருமா என்று கேட்கலாம். கண்டிப்பாக வரும். பிள்ளைகளின்
மேலுள்ள அன்புதானே பெற்றோர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கிறது!
நன்கு படித்துப் பெரியவர்களான பெற்றோர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் படிப்பின் ஆர்வலன்.
மற்றொருவன் விளையாடிப் பொழுது போக்குகின்றவர். இரண்டாமவனை நினைத்தால் பெற்றோருக்கு அச்சம் வரத்தானே
செய்யும்? விளையாடும் பிள்ளை முன்னுக்கு வருமா என்று!
விளையாடி முன்னுக்கு வந்தவர்களும் உண்டு. ஆனால் இந்தப் பெற்றோர்களுக்கு அது தெரியவில்லை. இவர்கள் படித்து
முன்னுக்கு வந்தவர்கள். நன்கு படித்தால் முன்னுக்கு வரலாம் என்று தெரியும். எடுத்துக்காட்டுகளாக அவர்களே
இருகிறார்கள். இன்னொரு பிள்ளையும் நிருபிக்கப் போகிறான். எங்கே இவன் மட்டும் தப்பி விடுவானோ என்ற அச்சம்.
அந்த அச்சமே திருவாதவூராருக்கும். அன்பே உருவானவர். எந்த மதப்பிரச்சாரமும்
செய்யவில்லை அவர். இறையருளைப் பெற்றவர். எல்லாம் தெய்வந்தான். ஈஷ்வரு அல்லா தேரே நாம். "சிவனை வணங்கி
நான் உய்வு பெற்று விட்டேன். இந்தப் பிள்ளை இன்னமும் உய்வு பெறவுமில்லை. சிவனை வணங்குகிறாற் போலவும்
தெரியவில்லை. எப்படிப் பிழைக்கும் என்று அச்சமாக இருக்கிறது." இப்படி அஞ்சுகிறார் மாணிக்க வாசகர்.
சிவன் பெயரைச் சொல்லாதவரை கொல்லு என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை...எல்லாரையும் சிவநாமம் ஓதச் சொல்லு
என்றா சொல்லியிருக்கிறார்? இல்லை. இல்லை. இவைகள்தான் மதப்பிரச்சாரம். திருவாசகத்தை முழுமையாகப் படியுங்கள்.
குற்றமற உணருங்கள். மாணிக்கவாசகரின் அச்சத்தை அன்பு என்று உணருங்கள்.
இந்தப் பாடலுக்கு இசையமைத்ததை தவறு என்றே சொல்ல முடியாது. மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
சிறப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் முழுவதும் அவரே பாடியிருப்பதும் சிறப்பாகவே இருக்கிறது. பாட்டுக்கு
முன்னமே சிம்பொனி இசை வடிவத்திற்கு திருவாசகத்தைப் பொறுத்திப் பார்ப்பதும் அழகாக வந்திருக்கிறது.
இதுவரையில் திருவாசக ஒலிப்பேழையிலுள்ள பாடல்களின் விமரிசனத்தைப் பார்த்தோம். இனி முடிவுரைதான்.
இந்த இசைவடிவத்தின் வெளியீட்டு விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் உருகியது நினைவிற்கு வருகிறது. அவரும் ஒரு
இசைமேதை. திரையிசையிலும் பக்தியிசையிலும் தனது சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர். அவரது கண்களைக்
கசிந்துருகச் செய்திருக்கிறது இந்த இசைக்கோர்வை. இசையை இசையாக மட்டுமே பார்க்கும் ஒரு நேர்மையானவரின்
கருத்து அது. கிட்டத்தட்ட இதே கருத்தைத்தான் ஏ.ஆர்.ரகுமானும் சொல்லியிருக்கின்றார்.
இளையராஜாவின் மீது ஆத்திரமோ, திருவாசகத்தின் மீது ஆத்திரமோ அல்லது தமிழின் மீது ஆத்திரமோ
என்னவோ...பெயரில் மட்டுமே ஞானமுள்ளவர்களால் இளையாராஜா கிழித்தெரியப் பட்டார். அவருடைய குலத்தைச்
சொல்லிக் காட்டி அவமானப் படுத்தப் பட்டார். திரையிசையில் அவர் தொய்வு கொண்டது நினைவுறுத்தப் பட்டு
சிரிக்கப்பட்டது. இதென்ன பைத்தியக்காரத்தனம்?
இசையை ரசி. அதில் குற்றமிருந்தால் சொல். அவர் குரல் சில இடங்களில் எடுபடவில்லை. உண்மைதான். ஒத்துக்
கொள்கிறோம். அதற்காக இந்தப் படைப்பையே குற்றம் சொல்வதா? இசையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத
ஔரங்கசீப்புகள் இசை விமரிசனம் செய்தன. கரித்துக் கொட்டின.
தமிழிலிலக்கியத்தில் பழக்கமோ ஆழமான அறிவோ இல்லாமல் திருவாசகத்தைக் குற்றம் சொன்னர். சிவனைப் பாடும்
பாடலுக்கு இசையமைத்தால் இளையாராஜா மதவெறியனாகவும் சூத்திரனாகவும் ஆகிவிட்டாராம்....இதென்ன கொடுமை.
அவருக்குத் தெரிந்ததைச் செய்திருக்கிறார் அவர். இசை தெரியும். தமிழ் தெரியும். இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்புள்ளது. அந்தத் தொடர்பை வெளிக் கொண்டு வந்ததிற்கு இப்படி ஒரு பரிசு.
அல்லாஹு அக்பர் என்றுதான் இஸ்லாமியர்கள் சொல்வார்கள். அதனால் அவர்களை மதச்சார்பற்றவர்கள் அல்லர் என்ற
முடிவுக்கு வரும் மடமையைத்தான் இந்த வீண் விமர்சகர்கள் செய்திருக்கின்றார்கள். சூரியனுக்குச் சேறு பூச
முயன்றிருக்கின்றார்கள்.
இதே வேறு மொழி இலக்கியம் எதற்காவது இளையராஜா இசையமைத்திருந்தால் அவரை அந்த மொழிக் குடிதாங்கி
என்று போற்றியிருப்பார்கள். போயும் போயும் தமிழ்ப் பாட்டுக்கு இசையமைத்தாரே இளையராஜா. அவருக்கு இதுவும்
வேண்டும். இன்னமும் வேண்டும்.
சரி. தமிழன் மனப்பாங்கு தெரிந்ததுதானே. விட்டுத் தள்ளுங்கள்.
இது போன்ற படைப்புகள் கண்டிப்பாக ஊக்குவிக்கப் பட வேண்டியவைகள். இன்னும் எதிர் பார்க்கிறோம் இளையராஜா.
நிறைய இருக்கின்றன. சிம்பொனிகளும் ஓரேட்டோரியோக்களும் இருக்கட்டும். கொஞ்சம் சிலப்பதிகாரம், திருப்புகழ்,
திருப்பாவை, திருவெம்பாவை, தேம்பாவணி, சீறாப்புராணம் என்று திரும்பிப் பாருங்கள். உங்களுக்குத் தோன்றிய
இசைவடிவிலேயே தாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம். தமிழ் காத்திருக்கிறது. இசையும் காத்திருக்கிறது.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, August 04, 2005
கந்தனுக்கு அலங்காரம் - 1
கந்தனுக்கு அலங்காரம்
கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.
இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.
காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பாடலாக இடுகிறேன். எல்லாம் முருகன் செயல்.
காப்புச் செய்யுள்
அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே
முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.
அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?
அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.
அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.
அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.
இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!
கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.
இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.
உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.
ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
கந்தரலரங்காரம் அருணகிரிநாதர் எழுதிய நூல். அருள் நூல். அழகு நூல். அறிவு நூல். முருகப் பெருமானின் திரு அலங்காரங்களை விளக்கும் நூல். உச்சி முதல் உள்ளங்கால் வரையிலான அழகினையும் முருகப் பெருமானின் ஊர்தியின் பெருமையையும், வெற்றி வேலின் திறமையையும் இவைகளினால் நாம் பெறும் வளமையையும் விவரித்து எழுதப்பட்ட நூல்.
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலையில் மலரும் பூக்களைக் கொண்டும் அலங்காரம் செய்யலாம். அப்படி இன்றைக்குச் செய்தது நாளைக்கு ஆகாது. என்றைக்கும் ஆகும் வகையில் என்றுமுள தீந்தமிழில் கந்தனுக்கு அலங்காரம் செய்துள்ளார் அருணகிரியார்.
இந்த நூலைப் படித்தாலும் கேட்டாலும் உள்ளத்தில் நினைத்தாலும் இன்பம் பெருகும். துன்பம் கருகும். உள்ளம் உருகும். பாம்பன் சுவாமிகள் அருணகிரியாரைக் குறித்துச் சொல்கையில் ஓசைமுனி என்பாராம். எந்த ஒரு ஓசையையும் தமிழ்ச் சொல்லாக்கி அந்தச் சொல்லையும் பூவாக்கி முருகனுக்கு அலங்காரம் செய்தவர் அருணகிரியார். இறைவன் அருளும் இறைவன் மீது அன்பும் உண்மையிலேயே இருந்தால்தான் இதெல்லாம் நடைமுறைக்கு வரும்.
காப்புச் செய்யுளோடு சேர்த்து மொத்தம் நூற்று எட்டு பாக்கள் உள்ளன. இந்த நூற்றி எட்டுப் பாப்பூக்களையும் படிப்பது இன்பமென்றாலும் நாம் எளிமையாக பாடியும் துதித்தும் மகிழத்தக்க சிறந்த பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்கு உரையளிக்க உள்ளேன். அனைத்துப் பாக்களுக்கும் உரையளிப்பது என்பது பேரறிஞர்களுக்கே கைவரும். எளியேனாகிய எனக்குப் புரிகின்ற செய்யுட்களை எடுத்து அவைகளுக்கு விளக்கம் கோர்த்து நீங்கள் படித்து மகிழ்ச்சியும் வளமும் பெறத் தருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு பாடலாக இடுகிறேன். எல்லாம் முருகன் செயல்.
காப்புச் செய்யுள்
அடலருணைத் திருக் கோபுரத்தே அதன் வாயிலுக்கு
வடவருகிற் சென்று கண்டுகொண்டேன் வருவார் தலையில்
தடபடெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே
முருகனை வணங்கி கந்தலரங்காரத்தைத் துவக்குகிறார் அருணகிரி. அவருக்கு முருகன் அருள் காட்டிய இடம் திருவண்ணாமலை. ஆகையால் திருவண்ணாமலையை வைத்தே துவக்குகிறார்.
அடல் என்றால் வலிமை. அடலேறு என்ற சொற்றொடரை நினைவு கொள்ள. அடலேறு என்றால் வலிமை மிகுந்த சிங்கம். அருணை என்பது திருவண்ணாமலை. அதற்கு ஏன் அருணை என்று பெயர்?
அருணம் என்றால் சிவப்பு. ஆகையால்தான் செஞ்சுடராக வானிலிருக்கும் சூரியனுக்கும் அருணன் என்று பெயர். நான்முகனும் நாரணனும் செருங்கு மிகுந்த பொழுது அடியும் முடியும் தெரியாத தீப்பிழம்பாக காட்சி தந்தார் பரமேசுவரன். அடியும் முடியும் காணாமல் தேடித் தோற்றார்கள் பிரம்மனும் பரந்தாமனும். ஆகையால் அண்ணாமலைக்கு அருணை என்றும் பெயருண்டு.
அடலருணை என்றால்? வலிமை மிகுந்த அருணை. அருணைக்கு என்ன வலிமை. சில புண்ணியத் தலங்கள் சென்றால்தான் பலன் கொடுக்கும். சில புண்ணியத் தலங்களைப் பற்றிப் பேசினாலே பலன் கிடைக்கும். ஆனால் உள்ளன்போடு நினைத்த பொழுதிலேயே பலன் கொடுக்கும் தலங்களில் ஒன்று திருவண்ணாமலை. அதனால்தான் அந்த ஊரை அடலருணை என்று அடைமொழியோடு அழைக்கிறார்.
அப்படிப் பெருமையுள்ள திருவண்ணாமலை வல்லாளராஜன் கோபுரத்தின் வடபுறமாக முருகப் பெருமான் கொலு வீற்றிருக்கிறார். இடப்புறமாகச் சென்றால் அங்கே விநாயகப் பெருமான் நன்றாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறார். அங்கே எல்லாரும் தலையில் தடபடனெக் குட்டிக் கொண்டு வணங்குகிறார். அவர்கள் படைக்கின்ற சர்க்கைரையில் செய்த தின்பண்டங்களை துதிக்கையில் எடுத்து வாயில் மொக்கிக் கொண்டு அருள் பாலிக்கிறார் பிள்ளையார்.
இப்பொழுது முதல் மூன்று அடிகளையும் படியுங்கள். அடலருணைத் திருக்கோபுரத்தே அதன் வாயிலுக்கு வட அருகில் சென்று கண்டுகொண்டேன். வருவார் தலையில் தடபடனெனப் படு குட்டுடன் சர்க்கரை மொக்கிய கை. புரிந்திருக்குமே!
கடதடக் கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே என்பது கடைசி வரி. அப்படி அருள் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருக்கின்ற பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே அவருக்குக்கு இளையவரான முருகப் பெருமானைக் கண்டுகொண்டேன் என்று முடிக்கிறார் அருணகிரி.
இதில் சொல்லாடலைப் பாருங்கள். கும்பக் களிற்றுக்கு இளைய களிற்றினையே! கும்பக் களிறு விநாயகர். அவருக்கு இளைய களிறு முருகப் பெருமான். அத்தோடு பாருங்கள் குட்டும் பொழுது உண்டாகும் ஒலியையும் பாட்டில் வைத்திருக்கிறார் அருணகிரி. "தடபடெனப் படு குட்டுடன்" என்ற அடியில் வருகிறது பாருங்கள்.
உண்பதைச் சொல்லப் பல பெயர்கள். கொறித்தல் என்றால் கொஞ்சமாகச் சாப்பிடுவது. நுங்குதல் என்றால் வயிறு நிரம்ப உண்ணுதல். மொக்குதல் என்பது வாய் நிரம்ப உண்ணுதல். ஆனை வாய் நிரம்ப உண்ணும். விநாயகப் பெருமானும் ஆனைமுகர்தானே. ஆகையார் அன்பர் தந்த இனிப்புப் பண்டங்களை துதிக்கையில் தூக்கி வாயில் திணிந்து மொக்கினாராம். "சர்க்கரை மொக்கிய கை". இப்படிப்பட்ட பிள்ளையாருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முருகப் பெருமானை வணங்கி அருள் வேண்டுகிறார் முருகப் பெருமான்.
ஒரு பாடலிலேயே பிள்ளையாரையும் முருகனையும் பாடும் இந்தப் பாடல் துதிக்கச் சிறந்தது. எந்தக் காரியத்தைச் செய்யும் முன்னும் இந்தப் பாடலை உளமாற நினைத்து விட்டு செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.
Wednesday, July 20, 2005
ஹாரி ஓம் பாட்டராய நமஹ
ஹாரி ஓம் பாட்டராய நமஹ
நாலு வருடங்களுக்கு முன்னாலே.......தன்னாலே ஒரு நண்பர் கொடுத்த புத்தகம்........பின்னாலே இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடும் என்று தெரிந்திருந்தால்ல்ல்ல்ல்ல்ல்.......அந்தப் புத்தகத்தை நான் வாங்கியிருக்கவே மாட்டேன்.
தற்செயலாக நண்பர் ஒருவரிடமிருந்து படிப்பதற்காக வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் முதல் புத்தகம். அதைப் படித்து முடிக்கும் முன்னமே அதுவரை வந்திருந்த நான்கு புத்தகங்களையும் வாங்கி நானே படிக்கத் தொடங்கினேன். ஒன்றை முடித்ததும் அடுத்தது. இப்படி நான்கு புத்தகங்களையும் நான் படித்து முடித்திருக்கையில் என்னாலும் சிலருக்கு ஹாரி பாட்டர் பைத்தியம் பிடித்திருந்தது.
அடுத்த புத்தகம் எப்பொழுது வருமென்று காத்திருந்து விழுந்தடித்து வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் ஐந்தாவது புத்தகம். இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுது ஆறாவது புத்தகமும் வந்திருக்கிறது.
ஆக கடந்த நான்கு ஆண்டுகளில் ஹாரிபாட்டரில் மூழ்கி முத்தெடுத்து அதை மற்றவர்களுக்கும் காட்டிய புண்ணியம் நிறையவே கிடைத்து விட்டது.
ஆறாவது புத்தகத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானதிலிருந்தே அந்தப் புத்தகத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல Strand புத்தகக் கடையில் விசாரித்து முன்பதிவிற்கு பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தேன். பின்னே முதல் நாளே வாங்கிப் படிக்க வேண்டுமே.
Strand புத்தகக் கடையில் முன்பதிவிற்கு பணம் வாங்க மறுத்து விட்டார்கள். காரணம்? சென்ற முறை எல்லாரும் ஐந்தாம் புத்தகத்தை அறுநூற்றுச் சொச்சத்திற்கு விற்றுக் கொண்திருந்த பொழுது ஐநூற்றுச் சொச்சத்திற்கு விற்றார்கள் அவர்கள். இந்த முறையும் அப்படிச் செய்ய விலையைச் சொல்லவில்லை. பெரிய கடைகளில் எழுநூறு, எண்ணூறு என்று பல விலைகளில் இலவசப் பொருட்களோடு முன்பதிவைச் செய்து கொண்டிருந்தார்கள்.
Strand புத்தகக் கடையின் ஒரு மாதம் முன்னால் ஹாரி பாட்டர் பதிவு செய்தவர்களை அழைத்து ஒரு வினாடிவினா நிகழ்ச்சியும் நடத்தி மேலும் பிரபலப் படுத்தினார்கள். அந்தச் சமயத்தில்தான் எனது வேலைப்பளு கூடி கடைப்பக்கமே போக முடியாமல் இருந்தது. அவர்களும் அறுநூற்று எழுபது ரூபாய் என்று விலை நிர்ணயித்து முன்பதிவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
புத்தகம் வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹாரி பாட்டர் வெறி பிடித்து தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்ல முடியாமல் இருந்த பொழுது ஒரு நண்பர் உதவிக்கு வந்தார். அவரது நண்பரின் அலுவலகம் Premire புத்தகக் கடைக்கு மிக அருவில். அவரை அனுப்பி அங்கே முன்பதிவு செய்து ரசீதை வாங்கித் தந்தார். வாழ்க அந்த நண்பர்கள்.
புத்தக வெளியீட்டுக்கு முதல்நாள் சரியான தூக்கமில்லை. பாலும் கசந்ததடி. படுக்கை நொந்ததடி கதைதான். காலையிலேயே குளித்து எழுந்து பைக்கை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் ரசீதைக் காட்டி புத்தகத்தை கையில் வாங்கியதும் ஒரு மகிழ்ச்சி. அடடா! எப்படிச் சொல்வது அதை.
ஆனால் அன்றைக்கும் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பகல் பொழுதில் படிக்க முடியவில்லை. மாலையில் கொஞ்ச நேரம் படித்தால்....திடீரென நண்பர்கள் வந்து விட்டார்கள். அன்றைய பொழுது முடிந்தது.
ஞாயிற்றுக் கிழமை புதிதாக தாயாகியிருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயே மாலை வரை பொழுது போய் விட்டது. பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்சம் படித்தேன். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக பக்கத்திலிருந்த ஜீவன் பீமா நகரிலுள்ள தோசா ஸ்டாப் என்ற கடைக்குச் சென்று சாப்பிட்டோம். கிளம்பும் பொழுது மழை பிடித்துக் கொண்டது. மழை விட்டு வீட்டுக்குப் போய் கொஞ்சம் படிக்கையிலேயே அலுப்பில் கண்ணயர்ந்து போனேன்.
அலுவலகம் வந்தால் e-copy மெயில்களில் தவழத் தொடங்கியிருந்தது. அதை இறக்கி வைத்து விட்டு வேலையைப் பார்த்தேன். அதற்குள் வலையில் விமர்சனங்களும் கதையில் வரும் ரகசிய விவரங்களும் வந்திருந்தன. நல்ல வேளையாக அவைகளை முழுமையாக படிக்கவில்லை. மீனாக்ஸ் அவரது வலைப்பூவில் பிறகு படிக்கிறேன் என்று பதிவிட்டேன். அதற்குள் டோண்டுவின் வலைப்பூவில் முதல் வரியிலேயே மிகப் பெரிய ரகசியத்தைப் போட்டுடைத்திருந்தார். அவரைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் பெரும்பாலும் விவரம் தெரிந்து போனது. இரண்டு நாட்கள் என்பது அதிகம். என்னைப் போன்ற அபாக்யவாதிகளும் இருக்கிறார்களே. திங்கள் இரவு மூன்று முப்பதுக்குத் தூங்கினேன். செவ்வாய் இரவு (புதன் காலை) ஐந்து முப்பதுக்கு புத்தகத்தை முடித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்...
புத்தகம் நன்றாகவே வந்திருக்கிறது. இரண்டு திருப்பங்களை நான் எதிர் பார்த்திருந்தேன். அவைகள் அப்படியே பலித்திருந்தன. Half-blood Prince யாரென்ற எனது ஊகம் மிகச் சரியாகவே இருந்தது. அதேபோல் இறந்து போவார் என்று நான் நினைத்திருந்த பாத்திரமே இறந்து போனது. அதைத்தான் டோண்டு சொல்லியிருந்தாலும், எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவல் நிறையவே இருந்ததால், புத்தகத்தை விறுவிறுப்பாகவே படிக்க முடிந்தது.
முடிக்கும் பொழுது மனதில் ஒரு இறுக்கம் பரவுவது உண்மைதான். ஆனால் இப்பொழுது கதை மிகச் சரியான பாதையில் போவதாகத் தோன்றுகிறது. அடுத்த புத்தகமே கடைசி புத்தகம். இப்பொழுது பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. அடுத்த புத்தகத்தில் எப்படி முடிகிறது என்று பார்க்கலாம். இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஹாரி ஓம் பாட்டராய நமஹ. கதையில் வரும் Time Turner (காலத்தின் முன்னும் பின்னும் செல்ல வைக்கும் மிகச் சிறிய கருவி ) இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் போய் அடுத்த புத்தகத்தையும் படித்திருக்கலாம். எல்லாம் வல்ல ஹாரிப் பெருமான் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.
அன்புடன்,
கோ.இராகவன்
நாலு வருடங்களுக்கு முன்னாலே.......தன்னாலே ஒரு நண்பர் கொடுத்த புத்தகம்........பின்னாலே இப்படி ஒரு நிலைக்குக் கொண்டு வந்து விடும் என்று தெரிந்திருந்தால்ல்ல்ல்ல்ல்ல்.......அந்தப் புத்தகத்தை நான் வாங்கியிருக்கவே மாட்டேன்.
தற்செயலாக நண்பர் ஒருவரிடமிருந்து படிப்பதற்காக வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் முதல் புத்தகம். அதைப் படித்து முடிக்கும் முன்னமே அதுவரை வந்திருந்த நான்கு புத்தகங்களையும் வாங்கி நானே படிக்கத் தொடங்கினேன். ஒன்றை முடித்ததும் அடுத்தது. இப்படி நான்கு புத்தகங்களையும் நான் படித்து முடித்திருக்கையில் என்னாலும் சிலருக்கு ஹாரி பாட்டர் பைத்தியம் பிடித்திருந்தது.
அடுத்த புத்தகம் எப்பொழுது வருமென்று காத்திருந்து விழுந்தடித்து வாங்கியதுதான் ஹாரி பாட்டரின் ஐந்தாவது புத்தகம். இரண்டாண்டுகள் கழித்து இப்பொழுது ஆறாவது புத்தகமும் வந்திருக்கிறது.
ஆக கடந்த நான்கு ஆண்டுகளில் ஹாரிபாட்டரில் மூழ்கி முத்தெடுத்து அதை மற்றவர்களுக்கும் காட்டிய புண்ணியம் நிறையவே கிடைத்து விட்டது.
ஆறாவது புத்தகத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானதிலிருந்தே அந்தப் புத்தகத்திற்கு என்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தேன். பெங்களூரின் பிரபல Strand புத்தகக் கடையில் விசாரித்து முன்பதிவிற்கு பெயரைப் பதிவு செய்து வைத்திருந்தேன். பின்னே முதல் நாளே வாங்கிப் படிக்க வேண்டுமே.
Strand புத்தகக் கடையில் முன்பதிவிற்கு பணம் வாங்க மறுத்து விட்டார்கள். காரணம்? சென்ற முறை எல்லாரும் ஐந்தாம் புத்தகத்தை அறுநூற்றுச் சொச்சத்திற்கு விற்றுக் கொண்திருந்த பொழுது ஐநூற்றுச் சொச்சத்திற்கு விற்றார்கள் அவர்கள். இந்த முறையும் அப்படிச் செய்ய விலையைச் சொல்லவில்லை. பெரிய கடைகளில் எழுநூறு, எண்ணூறு என்று பல விலைகளில் இலவசப் பொருட்களோடு முன்பதிவைச் செய்து கொண்டிருந்தார்கள்.
Strand புத்தகக் கடையின் ஒரு மாதம் முன்னால் ஹாரி பாட்டர் பதிவு செய்தவர்களை அழைத்து ஒரு வினாடிவினா நிகழ்ச்சியும் நடத்தி மேலும் பிரபலப் படுத்தினார்கள். அந்தச் சமயத்தில்தான் எனது வேலைப்பளு கூடி கடைப்பக்கமே போக முடியாமல் இருந்தது. அவர்களும் அறுநூற்று எழுபது ரூபாய் என்று விலை நிர்ணயித்து முன்பதிவுகளை ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.
புத்தகம் வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் ஹாரி பாட்டர் வெறி பிடித்து தொலைவில் இருக்கும் கடைக்குச் செல்ல முடியாமல் இருந்த பொழுது ஒரு நண்பர் உதவிக்கு வந்தார். அவரது நண்பரின் அலுவலகம் Premire புத்தகக் கடைக்கு மிக அருவில். அவரை அனுப்பி அங்கே முன்பதிவு செய்து ரசீதை வாங்கித் தந்தார். வாழ்க அந்த நண்பர்கள்.
புத்தக வெளியீட்டுக்கு முதல்நாள் சரியான தூக்கமில்லை. பாலும் கசந்ததடி. படுக்கை நொந்ததடி கதைதான். காலையிலேயே குளித்து எழுந்து பைக்கை எடுத்துக் கொண்டு கடைக்குப் போய் ரசீதைக் காட்டி புத்தகத்தை கையில் வாங்கியதும் ஒரு மகிழ்ச்சி. அடடா! எப்படிச் சொல்வது அதை.
ஆனால் அன்றைக்கும் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பகல் பொழுதில் படிக்க முடியவில்லை. மாலையில் கொஞ்ச நேரம் படித்தால்....திடீரென நண்பர்கள் வந்து விட்டார்கள். அன்றைய பொழுது முடிந்தது.
ஞாயிற்றுக் கிழமை புதிதாக தாயாகியிருந்த நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயே மாலை வரை பொழுது போய் விட்டது. பிறகு வீட்டுக்கு வந்து கொஞ்சம் படித்தேன். நண்பர்களின் வற்புறுத்தலுக்காக பக்கத்திலிருந்த ஜீவன் பீமா நகரிலுள்ள தோசா ஸ்டாப் என்ற கடைக்குச் சென்று சாப்பிட்டோம். கிளம்பும் பொழுது மழை பிடித்துக் கொண்டது. மழை விட்டு வீட்டுக்குப் போய் கொஞ்சம் படிக்கையிலேயே அலுப்பில் கண்ணயர்ந்து போனேன்.
அலுவலகம் வந்தால் e-copy மெயில்களில் தவழத் தொடங்கியிருந்தது. அதை இறக்கி வைத்து விட்டு வேலையைப் பார்த்தேன். அதற்குள் வலையில் விமர்சனங்களும் கதையில் வரும் ரகசிய விவரங்களும் வந்திருந்தன. நல்ல வேளையாக அவைகளை முழுமையாக படிக்கவில்லை. மீனாக்ஸ் அவரது வலைப்பூவில் பிறகு படிக்கிறேன் என்று பதிவிட்டேன். அதற்குள் டோண்டுவின் வலைப்பூவில் முதல் வரியிலேயே மிகப் பெரிய ரகசியத்தைப் போட்டுடைத்திருந்தார். அவரைக் குற்றம் சொல்ல முடியாது. காரணம் பெரும்பாலும் விவரம் தெரிந்து போனது. இரண்டு நாட்கள் என்பது அதிகம். என்னைப் போன்ற அபாக்யவாதிகளும் இருக்கிறார்களே. திங்கள் இரவு மூன்று முப்பதுக்குத் தூங்கினேன். செவ்வாய் இரவு (புதன் காலை) ஐந்து முப்பதுக்கு புத்தகத்தை முடித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்...
புத்தகம் நன்றாகவே வந்திருக்கிறது. இரண்டு திருப்பங்களை நான் எதிர் பார்த்திருந்தேன். அவைகள் அப்படியே பலித்திருந்தன. Half-blood Prince யாரென்ற எனது ஊகம் மிகச் சரியாகவே இருந்தது. அதேபோல் இறந்து போவார் என்று நான் நினைத்திருந்த பாத்திரமே இறந்து போனது. அதைத்தான் டோண்டு சொல்லியிருந்தாலும், எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவல் நிறையவே இருந்ததால், புத்தகத்தை விறுவிறுப்பாகவே படிக்க முடிந்தது.
முடிக்கும் பொழுது மனதில் ஒரு இறுக்கம் பரவுவது உண்மைதான். ஆனால் இப்பொழுது கதை மிகச் சரியான பாதையில் போவதாகத் தோன்றுகிறது. அடுத்த புத்தகமே கடைசி புத்தகம். இப்பொழுது பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. அடுத்த புத்தகத்தில் எப்படி முடிகிறது என்று பார்க்கலாம். இன்னும் இரண்டாண்டுகள் இருக்கின்றன. ஹாரி ஓம் பாட்டராய நமஹ. கதையில் வரும் Time Turner (காலத்தின் முன்னும் பின்னும் செல்ல வைக்கும் மிகச் சிறிய கருவி ) இருந்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னால் போய் அடுத்த புத்தகத்தையும் படித்திருக்கலாம். எல்லாம் வல்ல ஹாரிப் பெருமான் மனம் வைத்தால் எதுவும் நடக்கும்.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, July 11, 2005
என் கொங்கை நின் அன்பர்
என் கொங்கை நின் அன்பர்
கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!
வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?
வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.
திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சத்தை எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.
எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.
சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.
ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது.
உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார். எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.
நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!
இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல ஐயங்கார் சிவப்பு. நல்ல வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.
நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.
உண்மைதான். ஈசன் விளையாட்டில்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து நந்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.
நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.
"எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க"
இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. செண்பகப் பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?
சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு.
"எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்." அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.
இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம். வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?
சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.
அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.
அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக பரமேசுவரன் காப்பாற்றினான்.
பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?
நேராக பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான்.
எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.
அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.
வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.
புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.
சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.
"நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!" இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.
அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.
பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!
அன்புடன்,
கோ.இராகவன்
கதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அதனால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே! காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள்!
வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன?
வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் கைப் பக்குவம்தான் அரங்கனுக்கு வட்டிலில் விழும் உணவு. கொஞ்சமும் பிசகில்லாத கைச்சுத்தம். புளியோதரையோ சர்க்கரைப் பொங்கலோ வரதன் செய்தாலே தனி மணமும் குணமும்.
திரையை மூடிக்கொண்டு படைக்கும் பொழுது உண்மையிலேயே பெருமாள் கொஞ்சத்தை எடுத்து விடுகிறார் என்று ஊருக்குள் பேசிக் கொள்கின்றார்கள். யார் கண்டார் உண்மையை? பெருமாளோ! படைக்கின்ற தாத்தாச்சாரியோ! ஆனால் பெருமையெல்லாம் வரதனுக்குத்தான்.
எண்ணெய் கரிக்காத வடை. புளிக்காத ததியோன்னம். வரட்டாத புளியோதரை. திகட்டாத அக்காரவடிசில். பிசுபிசுப்பேயில்லாத நொய்யப்பம். எத்தனை வகைகள். அடடா! அண்டாப் பொங்கல் கிண்டினாலும் அரைப்படியில் கிண்டினாலும் சுவை மாறவே மாறது. எங்கிருந்து வந்ததோ இந்தக் கைவண்ணம்.
சீரான சீரங்கத்து வரதனின் கைவண்ணம் ஆனைக்காவையும் விட்டு வைக்கவில்லை. ஆனைக்கா வீரசைவர்கள் சீரங்கத்தின் எல்லையைக் கூட மிதிக்க மாட்டார்கள். ஆனாலும் வரதன் கைப்பக்குவம் கொல்லை வழியாக அவர்களுக்குப் போகும். இரண்டு இடங்களுக்கும் போகின்ற பொதுவான மக்கள் இங்கிருந்து வாங்கி அங்கு கொண்டு சென்று கொடுப்பார்கள்.
ஆனைக்கா கோயிலின் பெரிய சிவாச்சாரியாரும் வரதன் வதக்கியவைகளை வகை வகையாக வளைத்துக் கட்டுகின்றவரே! நாராயணா என்று மறந்தும் ஒரு பேச்சு பேச மாட்டார். ஆனால் பெருமாளுக்குப் படைத்த பிரசாதங்களை பிற சாதங்களாக கருதாமல் ஏற்றுக் கொள்ளும் பரந்த வாய்ப் பக்குவம் அவருக்கு இருந்தது.
உணவில் வேற்றுமை பாராட்டக் கூடாது என்ற நல்ல எண்ணம் மட்டும் எப்படியோ இருந்தது. கண்ணப்பன் படைத்த பன்றிக்கறியை பரம்பொருள் ஏற்றுக் கொண்டாரே என்று வக்கனை பேசுவார். எது எப்படியோ! வரதன் பெருமைதான் பெருகியிருந்தது.
நளனும் பீமனும் கூட வரதன் சமைக்கின்ற மாதிரிதான் சமைத்திருப்பார்கள் என்று எல்லாரும் பேசிக் கொள்கிறார்கள். என்னவோ இவர்கள் நளபாகத்தையும் பீமபாகத்தையும் பத்து நாள் உட்கார்ந்து தின்றது போல!
இந்தப் பிரபல வரதனுக்கும் வந்தது காதல். அதுவும் மோகனாவின் மேல். அழகுச் சிலைதான் அவள். இவனும் குறைந்தவன் அல்லன். நல்ல ஐயங்கார் சிவப்பு. நல்ல வடிவம். இடுப்பில் கச்சம். திறந்த மார்பு. குறுக்கே பூணூல். தென்கலை நாமங்கள். அள்ளி முடிந்த குடுமி. சவரம் செய்த முகம். வேறென்ன வேண்டும். மோகனாவும் மயங்கி விட்டாள். திருவானைக்காவல்காரி மனதைக் காவல் காக்க மறந்து விட்டாள். வரதனும் கண்ணனடி பற்றிக் கள்வனாகி விட்டான்.
நாளும் கிழமையும் எம்பெருமானைக் காண திருவானைக்கா போவது ஊரார் வழக்கம். ஆனால் மோகனாவைப் பார்க்கப் போவது வரதன் வழக்கம். எம்பெருமானும் எத்தனை நாள் பொறுப்பார்? தன்னைப் பார்க்காமல் மோகனாவைப் பார்க்கிறானே என்று சேர்த்து வைத்து பழி வாங்குவது போல மோகனாவைக் கதவை மூட வைத்து விட்டார்.
உண்மைதான். ஈசன் விளையாட்டில்தான் மோகனா கதவடைத்தது. மாதமோ மார்கழி. சைவப் பெண்ணல்லவா மோகனா! காலையில் எழுந்து நந்நீரில் நீராடி வெண்ணீறில் நீறாடி திருவெம்பாவை பாடிக் கொண்டு காலையில் கூட்டத்தோடு கோயிலுக்குப் போவாள்.
நல்ல பக்தி சிரத்தையுள்ள பெண். உள்ளமுருகிப் பாடுவாள். திருவெம்பாவையும் தேவாரப் பாசுரங்களும் மோகனா பாடினால் தேனாக ஒலிக்கும். பரமசிவனின் இளைய மகனுக்கு குடங்குடமாக தேனாபிஷேகம் செய்தால்தான் அப்படிக் குரல் வாய்க்குமாம். நல்ல குரல்வளம்.
"எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள்
என் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
என் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க"
இந்தப் பாட்டில்தான் அவளுக்கு அந்த சந்தேகம் வந்தது. வராமலா இருக்கும்? நல்ல தமிழறிவு மோகனாவிற்கு. செண்பகப் பாண்டியனுக்கு ஐயம் வந்த பொழுது மாட்டிக் கொண்டது தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவர் நக்கீரர். மோகனாவிற்கு வந்த பொழுது மாட்டிக் கொண்டவன் வரதன். தாங்குவானா வரதன்?
சரி. பிரச்சனைக்கு வருவோம். இந்தப் பாடல் என்ன சொல்கிறது? சிவனைப் பார்த்து சைவப் பெண்கள் சொல்வது போல அமைந்த திருவெம்பாவைப் பாட்டு.
"எம்பெருமானே! உனக்கு ஒன்று சொல்கின்றோம் கேள். சைவப் பெண்டிர்களாகிய எங்கள் கொங்கைகள் உன்னை வணங்குகின்றவர்களின் தோளை மட்டுமே சேரும்." அதாவது சைவர்களையே மணப்போமென்றும் உடலால் கூடுவோமென்றும் சொல்வது போல வருகிறது.
இப்பொழுது புரிந்திருக்குமே மோகனாவின் குழப்பம். வரதனோ பரம வைணவன். இவளோ சிவக் கொழுந்து. ஒத்து வருமா? கலப்புத் திருமணம் செல்லுபடியாகுமா? ஊரார் ஒப்புக் கொள்வார்களா? ஊராரை விடுங்கள். அவளது வீட்டிலேயே ஒப்புக் கொள்வார்களா?
சரி. மற்றவர்களை விடுங்கள். வாழப் போவது இவள்தானே. ஊரார் என்ன சொல்ல? பெற்றோரும் உற்றோரும் என்ன சொல்ல? வரதனைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்றே வைத்துக் கொள்வோம். அப்படி நடந்து விட்டால் அவள் இத்தனை நாள் உள்ளமுருகச் சொன்னது பொய் என்று ஆகிவிடும் அல்லவா? அதுதான் அவள் கவலை.
அதனால்தான் வரதன் வரும் வேளையில் படக்கென்று வீட்டுக்குள் சென்று கதவையும் தாழிட்டுக் கொண்டாள். திடுக்கிட்ட வரதனோ மனமும் வாயும் மூடிக் கொண்டான். அருகிலிருந்த மண்டபத்துத் தூணோடு ஒட்டிக் கொண்டான்.
அவன் கலக்கம் நீடிக்கவில்லை. விரைவிலேயே மோகனாவின் தோழியர் மூலம் வரதனுக்குத் தகவல் போய்ச் சேர்ந்தது. காரணம் புரியாததால் காவிரிக்குள் விழ இருந்தான். நல்ல வேளையாக பரமேசுவரன் காப்பாற்றினான்.
பிரச்சனை புரிந்ததும் அடுத்து வருவது தீர்வுதானே! இந்தப் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண்பான் வரதன்?
நேராக பெரிய சிவாச்சாரியாரைப் பார்த்தான். காலில் விழுந்தான். சிவதீட்சை வேண்டுமென்று வணங்கிக் கேட்டான். சீரங்கத்தை மறந்து விட்டு ஆனைக்காவிலேயே காவலிருக்கவும் உறுதி சொன்னான்.
எடுத்த எடுப்பிலேயே ஒத்துக்கொள்வாரா பெரிய சிவாச்சாரியார். திருமுறைகளைக் கரைத்துக் குடித்தவராயிற்றே. நிபந்தனைகளைப் போட்டார். திருவானைக்காவல் மடப்பள்ளிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று ஒரு கட்டளை வேறு போட்டார்.
அங்கே பார்த்த அதே வேலைதான். அங்கே பரந்தாமன். இங்கே பரமேசுவரன். இரண்டு இடத்திலும் இருப்பது பரம் தானே! மோகனா என்னும் வரம் கிடைக்க எதற்கும் அவன் தயார்தான். ஒத்துக் கொண்டான்.
வரதன் கையில் மீண்டும் கரண்டி. மோகனா கழுத்தில் தங்கத் தாலி. என்றைக்கும் அவளுடன் அவன் தங்கத் தாலி.
புதுப் பூணூல். நாமம் போயிற்று. திருநீற்றுப் பட்டை நெற்றியில் ஏறியது. நாராயண மந்திரம் சிவோகமாக ஒலித்தது. மோகனாவின் குளிர்விழியில் நாச்சியார் திருமொழி மறந்து போனது.
சீரங்கமோ பற்றி எரிந்தது. குலத் துரோகி வரதனைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். கிரியைகளைக் கூட முடித்து விட்டார்கள். அவன் சமைத்த மடப்பள்ளியை காவிரியைக் கொண்டு மீண்டும் மீண்டும் கழுவி தீட்டுக் கழிக்க யாகம் வளர்த்தார்கள். அவன் புழங்கிய வெங்கலப் பாத்திரங்கள் வீதிக்கு வந்தன. மண்பாண்டங்கள் பிறந்த வீட்டிற்குப் போயின.
"நாரிமணிக்காக நாராயணனை மறக்கலாமா? நீல மேனியனுக்குப் படைத்த கைகள் திருநீற்று மேனியனுக்கு படைக்கலாமா! வெண்ணெய் உண்டவனுக்கு படைத்துக் கொண்டிருந்தவன் விடமுண்டவனுக்குப் படைக்கலாமா? அப்படிப் படைத்தாலும் அந்த நஞ்சு விழுங்கிக்கு எட்டிக்காய் பாயாசமும் வேப்பங்காய் பொங்கலுமே ஆகும். காதலுக்காக மதம் மாறினானே இந்த மூர்க்கன்!" இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டார்கள்.
அங்கே அப்படியென்றால் திருவானைகாவில் வேறு மாதிரி. ஒரே கொண்டாட்டம். வரதன் கையால் பரமனுக்கு பலவிதப் பலகாரங்களைப் படைத்து அவற்றைத் தாமே உண்டனர். ஆயாசமே இல்லாமல் பாயாசங்களைப் பருகினார்கள். ஆசை குறையாமல் தோசைகளை அடுக்கினார்கள். பொன்னைக் கண்டதும் அதில் பொன்னார் மேனியனைக் கண்டார் சம்பந்தர். இவர்கள் வெண்பொங்கலில் வெந்நீறணிந்தவன் மேனியைக் கண்டு, சிவாநுபூதி பெற வெண்பொங்கலாக விழுங்கினார்கள்.
பரந்தாமனோ பரமசிவனோ அடித்துக் கொள்ளவில்லை. வட்டில் சோற்றுக்காகவா பரந்தாமன் வரதனை விட்டுக் கொடுத்து பரமன் பெற்றுக் கொண்டான்? எல்லாம் காரணமாகத்தான். நாளைக்கு வரதனோ அம்பிக்கை தரித்த தாம்பூலத்தைப் பிரசாதமாகப் பெறப் போகிறான். அதனால் நிற்காமல் மழை கொடுக்கும் காளமேகமாய் தீந்தமிழ்ப் பாக்களைப் பொழியப் போகிறான் என்றும் இவர்களுக்குத் தெரியவா போகிறது!
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, June 27, 2005
தென்னவன் தீதிலன்
"யோவ்! இன்சுபெக்டரு! வெளங்குவயாய்யா நீ. என்னத்தப் படிச்சி போலீசு வேலைக்கு வந்த? காசு குடுத்து வந்தியா? குத்தவாளிய கண்டுபிடிக்காம ஒரு தப்புஞ் செய்யாதவகள பிடிச்சி வெச்சிருக்கியே! என்னோட வகுத்தெரிச்சல் ஒன்னச் சும்மா விடாது. எத்தன தடவ மாரியாத்தாவுக்கு கூளு ஊத்திருக்கேன். என் வாயில விழாத. உனக்கு நல்லதில்ல! வீட்டுக்கும் நல்லதில்ல!" போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டு கத்திக் கொண்டிருந்தாள் சண்முகத்தாய்.
உள்ளே அவளது கணவன் பெருமாளைச் சந்தேகத்தில் பிடித்து வந்து முட்டிக்கு முட்டி தட்டிக் கொண்டிருந்தது போலீஸ். பெரிய திருட்டு. பெருமாள் மேல் சந்தேகம். பெரிய இடத்து பிரஷர். அதான் இந்த விசாரணை. வேறு வழி! மாசாமாசம் கவர் வருகிறதே.
ராத்திரி இழுத்து வரப்பட்ட பெருமாளைத் தேடி விடியற்காலையிலேயே போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டாள் சண்முகத்தாய். அவளுக்குத் துணையாக காலனியிலுள்ள உறவுக்காரப் பெண்கள். எல்லாம் ஒன்று விட்ட அக்கா தங்கைகளும் மச்சினிகளும்.
கூக்குரலில் தொடர்ந்தது சண்முகத்தாயின் ஓலம். மெலிந்த அவள் உடம்பின் மேல் சேலை விலகியிருப்பதையும் பொருட்படுத்தாது கதறிக் கொண்டிருந்தாள். இந்தக் குச்சி உடம்புக்குள் இப்படிக் கத்த எங்கிருந்துதான் சக்தி வந்ததோ! கூட வந்தவர்களும் அவளுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருந்தனர்.
வாசலில் நின்று கொண்டிருந்த கான்ஸ்டபிளும் அவள் வாயில் விழாமல் தப்பிவில்லை.
"அய்யா! பியூன் போலீசு, வாசல்லயே நிக்கியே. உள்ள போய் என்ன ஆச்சுன்னு பாக்கக் கூடாதா? பிடிச்சி வெச்சியே, சோறு வாங்கிக் குடுத்தியா? சம்பளம் கொடுக்குல்ல கெவருமெண்டு. வெச்சி வெச்சி திங்கியே! செமிக்குமா? வயித்தால போகும். ஒமட்டி ஒமட்டிக் கக்குவ. நீ உள்ள போயி பாக்கியா? நாம் போவட்டுமா?" திமிறிக்கொண்டு ஸ்டேஷனுக்குள் நுழையப் பார்த்தாள் சண்முகத்தாய். கூட வந்த பெண்கள் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
"நல்லா பிடிங்கம்மா! உள்ள வந்தா ஏடாகூடாமாயிரும். ஏம்மா! இங்க வந்து கும்மரிச்சம் போட்டா ஆச்சா? தப்புப் செஞ்சா விட்டுருவாங்களா? அதான் வாங்கு வாங்குன்னு வாங்குறாங்க. இங்க கத்துறதுக்கு முன்னால புருசனக்கு புத்தி சொல்லீருக்கனும். அத விட்டுட்டு..."
கான்ஸ்டபிள் சொன்னது சண்முகத்தாயை இன்னும் உசுப்பி விட்டது. "என்னது? எம்புருசனுக்கு புத்தி சொல்லவா! நல்லாச் சொன்னீகய்யா! பியூனு போலிசு வேலை பாக்குற ஒனக்கு என்ன பேச்சு! ஒங்க இன்சுபெக்டருகிட்ட போயி புத்தி சொல்லு. கூரு கெட்ட போலீசு. தோலாந்துருத்தி. தேவாங்கு."
சற்றே ஒல்லியாக இருந்த அந்த கான்ஸ்டபிளுக்குக் ஆத்திரம் வந்தது. பின்னே இப்படிப் பேசினால்! கையிலிருந்த லட்டியைச் சுழற்றிக்கொண்டு விரட்ட வந்தார். அவர் அடிக்க வரும் முன்னமே வந்திருந்த பெண்கள் அனைவரும் ஓலமிட்டார்கள்.
"ஐயோ! இப்படி பொம்பளைகளப் போட்டு அடிக்காகளே! கேக்க ஆளில்லியா! நாதியத்துப் போனோமே இந்தப் பொம்பள செம்மம்!"
அவர்களின் கூக்குரலில் கொஞ்சம் பயந்து போன கான்ஸ்டபிள் தயங்கினார். அந்நேரம் ஸ்டேஷனுக்குள்ளிருந்து மற்றொரு கான்ஸ்டபிள் பெருமாளைக் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார். சண்முகத்தாயைக் கூப்பிட்டு "இந்தாம்மா! ஒம் புருசன கூட்டிக்கிட்டு போ. ஒம் புருசன் தப்புப் பண்ணலன்னு இன்ஸ்பெக்டரு முடிவு செஞ்சிட்டாரு. வீட்டுக்குப் போயி நல்லாச் சமச்சுப் போடு. வாங்குன அடிக்கும் வீங்குன வீக்கத்துக்கும் மேலுக்கு நல்லதாச் செஞ்சு போடு." அவளிடம் ஒரு ஐம்பது ரூபாயைக் கொடுத்தார்.
ஒன்றும் பேசாமல் ரூபாயை வாங்காமல் பெருமாளை மட்டும் கைத்தாங்கலாகக் கூட்டிக் கொண்டு வெளியே வந்தாள் சண்முகத்தாய்.
நல்ல அடி. எல்லாம் உள்காயம். எங்கு தொட்டாலும் வலியால் முனகினான் பெருமாள். அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கீழேயிருந்த புழுதி மண்ணை வாரி வீசினாள்.
"பெரிய இன்சுபெக்டரு, கண்டுபிடிச்சிட்டாரய்யா! குத்தமே செய்யாத எம்புருசன அடிச்சியே, பாவி, நீ ஒரு போலீசா? உனக்கு காக்கிச் சட்ட ஒரு கேடா? தொப்பி வேற. கோமாளி அலங்காரம் மாதிரி. புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு போறியே ஜீப்பு. அதுதான இப்ப ஒனக்கு ரொம்பத் தேவ. டயரு பஞ்சராகி நடு ரோட்டுல நிக்கனும். நல்ல போலீசு நம்ம ஊருப் போலீசு. த்தூ" காறித் துப்பிளாள்.
ஒரு வழியாய் வீட்டிற்கு பெருமாளை அழைத்து வந்து படுக்க வைத்து உப்பு வறுத்து ஒத்தடம் கொடுத்தாள். உள்காயத்திற்கு இதமாய் கொழம்புக்கு வைக்க பக்கத்து வீட்டு செவ்வந்தியிடம் கருவாடு கடன் கேட்டாள்.
"ஏ செவ்வந்தி! நெத்திலி கெடக்கா? கொஞ்சங் கொடேன். கொழம்பு வெச்சா மேலுக்கு ஆகுமே."
மண்சட்டிகளை உருட்டி, இருந்த கொஞ்ச நெத்திலியைக் காகிதத்தில் சுற்றித் தந்தாள் செவ்வந்தி. "அடி பலமா சம்முகம்? அந்தப் போலீசுக்காரப் பாவி நல்லா நச்சிருக்காம் போல. வெளங்குவானா அவன்." உண்மையான அக்கறையும் கோவமும் செவ்வந்தியின் குரலில் இருந்தது.
மெல்லிய புன்னகையுடன் சொன்னாள் சண்முகத்தாயி. "போலீச வையாத. அவுக மேல ஒரு தப்புமில்ல. இந்தாளு தெனமும் என்ன போட்டு சாத்துறதுக்கும் வையுறதுக்கும், அண்ணந் தம்பி இல்லாதவ எனக்காக எங்கப்பா வந்து கேட்டிருக்கனும். அவரு கேக்கல. பாவம் பெரிய மனுசன் வாயப் பொத்திக்கிட்டு அழுகத்தாஞ் செஞ்சாரு. ஆனா பாரு. இன்னக்கி பெறாத தகப்பம் போல போலீசு கேட்டிருக்கு. முட்டியப் பேத்து விட்டுருக்கு. இனிமே கையும் காலுஞ் சும்மாயிருக்குமில்ல." கருவாடை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் சண்முகத்தாய்.
தென்னவன் தீதிலன்; நானவன் தன் மகள்;
-சிலப்பதிகாரத்தில் தனக்குக் கோயில் எடுத்த சேர மன்னனிடம் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கண்ணகி சொன்னது. வஞ்சிக் காண்டம். "தென்புலமாளும் பாண்டியன் குற்றமற்றவன். நான் அவனுக்கு மகளைப் போற்றவள்."
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, June 22, 2005
இன்னுமொரு பிரபல சந்திப்பு
டி.ராஜேந்தரைச் சந்திச்சது பத்தி ஒரு பதிவு போட்டிருந்தேன். அதுக்கப்புறம் நடந்த இன்னொரு தற்செயல் சந்திப்பு இது.
அக்டோபரு ஒம்பதாந் தேதி சனிக்கெழம காலைல பெங்களூரு இந்திரா நகருல இருக்குற ஸ்டேட் பேங்க் ஆ·ப் இந்தியாவுக்குப் போனேன். ஒரு ஒம்பதர இருக்கும். உள்ள போயி பாஸ்புக்க குடுத்துட்டு நின்னுக்கிட்டிருந்தேன். உள்ள வரிசையா நாற்காலி போட்டிருக்கும். நிக்காம சொகுசா உக்காந்துக்கிறத்தான். வாடிக்கையாளர் சேவையாம். இங்க பெங்களூர்ல ரயில்வே டிக்கட்டு எடுக்குற எடத்துலயும் வரிசைல நிக்க முடியாது. வரிசைல உக்காந்துக்கலாம். நல்ல வசதி.
சரி. கதைக்கு வருவம். அந்த வரிசைல கூட்டமில்ல. அங்கொருத்தரு இங்கொருத்தருன்னு உக்காந்திருந்தாங்க. அதுல ஒரு அம்மா, வயசானவங்க, கூட மக வயசுப் பொண்ணோட உக்காந்திருந்தாங்க. அவங்களப் பாத்ததுமே எனக்குச் சந்தேகம். "இவங்க அவங்களா? அவங்க எங்க இங்க வந்தாங்க?" போய்க் கேட்டுருவமான்னு யோசிச்சேன். எப்பிடிக் கேக்குறது. அவங்க இல்லைன்னா என்ன நெனப்பாங்க. சரின்னு பேங்கு வேலய முடிச்சிட்டு அவங்ககிட்ட போனேன். நீங்க அவங்கதான்னு கேட்டேன். அவங்க மொகத்துல மலர்ச்சி. ஆமாம்னு சொன்னதும் எனக்கும் சந்தோசம்.
அட அவங்க யாருன்னு சொல்லலையே! அவங்க ஒரு பின்னனிப் பாடகி. ஆதி மனிதன் காதலுக்கு அடுத்த காதலுக்குப் பாடிய பாடகி.
கண்டுபிடிச்சிருப்பீங்களே! பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகி ஜமுனாராணிதான் அவங்க. ரொம்ப வயசாத் தெரிஞ்சாங்க. நானும் அவங்களக் கண்டு பிடிச்சதுல அவுங்களுக்கு ரொம்பச் சந்தோசம். எப்பிடிக் கண்டுபிடிச்சேன்னு ஆச்சிரியமாக் கேட்டாங்க. டிவில பாத்துருக்கேன்னு சொன்னேன். அவுங்க மருமகளோட வந்திருந்தாங்க. இப்ப இங்க வந்துட்டாங்களாம். கச்சேரின்னு கூப்புட்டா சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் போறாங்களாம். அவங்க பதிமூனு பதினாலு வயசுல பாடவந்தாங்களாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாப்பது அஞ்சுல. அவங்க பாட வந்தே அறுவது வருசம் ஆயிப்போச்சு. அவுங்க தாய்மொழி தெலுங்காம். இருந்தும் உச்சரிப்பு நல்லாயிருந்துச்சேன்னு கேட்டேன். சென்னையில பொறந்து வளந்ததால தமிழு நல்ல பழக்கமாம். பேச்சுவாக்குல சுசீலா, ஜானகி, லீலா மாதிரிப் பாடகிகள நெனவு வச்சிருந்து சொன்னாங்க. அப்புறம் அவங்க பாட்டுகள் செலதச் சொல்லி நல்லா பாடியிருந்தாங்கன்னு சொன்னேன். அவங்க அத ரொம்பச் சந்தோசமா கேட்டுக்கிட்டாங்க. இன்னைக்குப் பாட்டுகளப் பத்திப் பேசுனோம். உச்சரிப்பு பத்தி கொஞ்சம் வருத்தமாச் சொன்னாங்க.
இந்த வாட்டியும் கையில ஆட்டோகிரா·பு வாங்க எந்தப் புத்தகமும் இல்ல. டெலிபோன் பில்லு கட்டுன ரசீது இருந்திச்சி. அதுல பின்னாடி வாழ்த்திக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாங்க. இங்லீசுல போட்டுக் குடுத்தாங்க. அப்புறம் அவங்களுக்கு நன்றி சொல்லீட்டு பொறப்பட்டுட்டேன். அம்புட்டுதேங்.
அன்புடன்,
கோ.இராகவன்
அக்டோபரு ஒம்பதாந் தேதி சனிக்கெழம காலைல பெங்களூரு இந்திரா நகருல இருக்குற ஸ்டேட் பேங்க் ஆ·ப் இந்தியாவுக்குப் போனேன். ஒரு ஒம்பதர இருக்கும். உள்ள போயி பாஸ்புக்க குடுத்துட்டு நின்னுக்கிட்டிருந்தேன். உள்ள வரிசையா நாற்காலி போட்டிருக்கும். நிக்காம சொகுசா உக்காந்துக்கிறத்தான். வாடிக்கையாளர் சேவையாம். இங்க பெங்களூர்ல ரயில்வே டிக்கட்டு எடுக்குற எடத்துலயும் வரிசைல நிக்க முடியாது. வரிசைல உக்காந்துக்கலாம். நல்ல வசதி.
சரி. கதைக்கு வருவம். அந்த வரிசைல கூட்டமில்ல. அங்கொருத்தரு இங்கொருத்தருன்னு உக்காந்திருந்தாங்க. அதுல ஒரு அம்மா, வயசானவங்க, கூட மக வயசுப் பொண்ணோட உக்காந்திருந்தாங்க. அவங்களப் பாத்ததுமே எனக்குச் சந்தேகம். "இவங்க அவங்களா? அவங்க எங்க இங்க வந்தாங்க?" போய்க் கேட்டுருவமான்னு யோசிச்சேன். எப்பிடிக் கேக்குறது. அவங்க இல்லைன்னா என்ன நெனப்பாங்க. சரின்னு பேங்கு வேலய முடிச்சிட்டு அவங்ககிட்ட போனேன். நீங்க அவங்கதான்னு கேட்டேன். அவங்க மொகத்துல மலர்ச்சி. ஆமாம்னு சொன்னதும் எனக்கும் சந்தோசம்.
அட அவங்க யாருன்னு சொல்லலையே! அவங்க ஒரு பின்னனிப் பாடகி. ஆதி மனிதன் காதலுக்கு அடுத்த காதலுக்குப் பாடிய பாடகி.
கண்டுபிடிச்சிருப்பீங்களே! பிரபலமாக இருந்த பின்னணிப்பாடகி ஜமுனாராணிதான் அவங்க. ரொம்ப வயசாத் தெரிஞ்சாங்க. நானும் அவங்களக் கண்டு பிடிச்சதுல அவுங்களுக்கு ரொம்பச் சந்தோசம். எப்பிடிக் கண்டுபிடிச்சேன்னு ஆச்சிரியமாக் கேட்டாங்க. டிவில பாத்துருக்கேன்னு சொன்னேன். அவுங்க மருமகளோட வந்திருந்தாங்க. இப்ப இங்க வந்துட்டாங்களாம். கச்சேரின்னு கூப்புட்டா சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் போறாங்களாம். அவங்க பதிமூனு பதினாலு வயசுல பாடவந்தாங்களாம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாப்பது அஞ்சுல. அவங்க பாட வந்தே அறுவது வருசம் ஆயிப்போச்சு. அவுங்க தாய்மொழி தெலுங்காம். இருந்தும் உச்சரிப்பு நல்லாயிருந்துச்சேன்னு கேட்டேன். சென்னையில பொறந்து வளந்ததால தமிழு நல்ல பழக்கமாம். பேச்சுவாக்குல சுசீலா, ஜானகி, லீலா மாதிரிப் பாடகிகள நெனவு வச்சிருந்து சொன்னாங்க. அப்புறம் அவங்க பாட்டுகள் செலதச் சொல்லி நல்லா பாடியிருந்தாங்கன்னு சொன்னேன். அவங்க அத ரொம்பச் சந்தோசமா கேட்டுக்கிட்டாங்க. இன்னைக்குப் பாட்டுகளப் பத்திப் பேசுனோம். உச்சரிப்பு பத்தி கொஞ்சம் வருத்தமாச் சொன்னாங்க.
இந்த வாட்டியும் கையில ஆட்டோகிரா·பு வாங்க எந்தப் புத்தகமும் இல்ல. டெலிபோன் பில்லு கட்டுன ரசீது இருந்திச்சி. அதுல பின்னாடி வாழ்த்திக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தாங்க. இங்லீசுல போட்டுக் குடுத்தாங்க. அப்புறம் அவங்களுக்கு நன்றி சொல்லீட்டு பொறப்பட்டுட்டேன். அம்புட்டுதேங்.
அன்புடன்,
கோ.இராகவன்
முருங்கைக் கீர சமாச்சாரம்
முருங்கக் கீர சாமாச்சாரம் பெரிய சமாச்சாரம். பல கலியாணங்களுக்குக் காரணமான சாமச்சாரம்.
கதைக்கு வருவம். பாரியும் பாரி மகள்களும் ஔவையாரு மேல எம்புட்டு பாசமா இருந்தாகன்னு தெரியுமுல்ல. ஔவையாரு ஊரூரா கோயிலு கோயிலா சுத்துற கெழவி. அப்படி சுத்திகிட்டு இருக்கைல, பாரி எறந்து போனான். இந்தப் பிள்ளைக நடுத்தெருவுக்கு வந்திருச்சி. பாவம். ஊருல இருக்க முடியாம காட்டுக்கு வந்துட்டாக. அங்க இருந்த ஒரு பழைய குடிசைல ஒண்டிக்கிட்டு கெடச்சத பொங்கிட்டும் தின்னுகிட்டும் இருந்தாக. இருந்தது மூணு சீல. கட்டுறது ரெண்டு பேரு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டாங்க.
இந்த வெவரம் தெரியாத ஔவையாரு அந்தக் காட்டுப் பக்கமா வந்தாரு. மழ வேற வந்திருச்சி. இந்தம்மா என்ன தேருலயா ஊரு சுத்துது. நடந்துதான போகனும். மழைக்கு ஒதுங்கிக்கிற எடமில்லாம தவிச்சது. அப்பத்தாங் கண்ணுல பட்டது குடிச. உள்ள பாத்தா இந்தப் பிள்ளைக. ஔவையாரப் பாத்ததும் ரெண்டு பிள்ளைகளூக்கும் கண்ணுல தண்ணியா ஊத்துது. நடந்ததெல்லாங் கேட்டு இந்தக் கெழவி ரொம்பவும் தவங்கிப் போச்சி. அப்புறமா ஔவையாருக்கு இருந்த ஒரு மாத்துச் சீலயக் குடுத்தாக. அதியமானு கொடுத்த நெல்லிக்காயி இன்னமு யாராரோ கொடுத்த என்னென்னமோ சாமனமெல்லாம் இந்தப் பிள்ளைக குடுத்த பழய சீலைக்கு ஈடாகாதுன்னு ஒரு பாட்டு பாடிச்சி. அப்புறமேட்டு பசிச்சது. அரிசியில்ல. கம்பில்ல. கேப்பயில்ல. குருதேலியில்ல. காட்டுல அந்தமானிக்கு முருங்கமரங்க நெறயா இருந்திச்சி. போயி எலய பிடிங்கிட்டு வந்து நல்லா ஆஞ்சி வெஞ்சனமா வெச்சிக் குடுத்தாக. ஔவையாரும் நல்லா சாப்பிட்டுட்டு ஒரு பாட்டு சொல்லுச்சாம்.
வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் சொரிந்த கையார்
வெய்யதாய் - நல்லா கொதிக்கக் கொதிக்கவுமில்லாம ஆறிப்போயிமில்லாம வெதுவெதுன்னு
நறுவிதாய் - நல்லாக் கமகமன்னு இருந்துச்சாம்
வேண்டளவுந் தின்பதாய் - வேணுங்கறம்புட்டு திங்கலாமுல. இன்னமும் வேணுமுன்ன மரத்துல பறிச்சிக்கிறது
நெய்தான் அளாவி - நல்ல நல்லெண்ணெய விட்டு
நிறம் பசந்த - பச்சப் பசேலுன்னு இருக்குற கீரய
பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் - தின்னா வயித்தக் கெடுக்காத நல்லா சத்துள்ள சாப்பாடுன்னு சொல்லி அமுதத்த கொடுத்தாகளே
கடகம் சொரிந்த கையார் - கையில வளவி மாட்டீருக்குற இந்த பிள்ளைக.
அப்புறமா தின்ன கீரைக்கு நன்றி செய்யுறதாச் சொல்லி அந்தப் பிள்ளைகளுக்குக் கொல்லி மல அரசங் கூட கலியாணம் முடிச்சி வெச்சிச்சி ஔவையாரு கெழவி.
இப்பப் புரிஞ்சதா முருங்கைக் கீர சமாச்சாரம்.
அன்புடன்,
கோ.இராகவன்
கதைக்கு வருவம். பாரியும் பாரி மகள்களும் ஔவையாரு மேல எம்புட்டு பாசமா இருந்தாகன்னு தெரியுமுல்ல. ஔவையாரு ஊரூரா கோயிலு கோயிலா சுத்துற கெழவி. அப்படி சுத்திகிட்டு இருக்கைல, பாரி எறந்து போனான். இந்தப் பிள்ளைக நடுத்தெருவுக்கு வந்திருச்சி. பாவம். ஊருல இருக்க முடியாம காட்டுக்கு வந்துட்டாக. அங்க இருந்த ஒரு பழைய குடிசைல ஒண்டிக்கிட்டு கெடச்சத பொங்கிட்டும் தின்னுகிட்டும் இருந்தாக. இருந்தது மூணு சீல. கட்டுறது ரெண்டு பேரு. எப்படியோ சமாளிச்சிக்கிட்டாங்க.
இந்த வெவரம் தெரியாத ஔவையாரு அந்தக் காட்டுப் பக்கமா வந்தாரு. மழ வேற வந்திருச்சி. இந்தம்மா என்ன தேருலயா ஊரு சுத்துது. நடந்துதான போகனும். மழைக்கு ஒதுங்கிக்கிற எடமில்லாம தவிச்சது. அப்பத்தாங் கண்ணுல பட்டது குடிச. உள்ள பாத்தா இந்தப் பிள்ளைக. ஔவையாரப் பாத்ததும் ரெண்டு பிள்ளைகளூக்கும் கண்ணுல தண்ணியா ஊத்துது. நடந்ததெல்லாங் கேட்டு இந்தக் கெழவி ரொம்பவும் தவங்கிப் போச்சி. அப்புறமா ஔவையாருக்கு இருந்த ஒரு மாத்துச் சீலயக் குடுத்தாக. அதியமானு கொடுத்த நெல்லிக்காயி இன்னமு யாராரோ கொடுத்த என்னென்னமோ சாமனமெல்லாம் இந்தப் பிள்ளைக குடுத்த பழய சீலைக்கு ஈடாகாதுன்னு ஒரு பாட்டு பாடிச்சி. அப்புறமேட்டு பசிச்சது. அரிசியில்ல. கம்பில்ல. கேப்பயில்ல. குருதேலியில்ல. காட்டுல அந்தமானிக்கு முருங்கமரங்க நெறயா இருந்திச்சி. போயி எலய பிடிங்கிட்டு வந்து நல்லா ஆஞ்சி வெஞ்சனமா வெச்சிக் குடுத்தாக. ஔவையாரும் நல்லா சாப்பிட்டுட்டு ஒரு பாட்டு சொல்லுச்சாம்.
வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த - பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் சொரிந்த கையார்
வெய்யதாய் - நல்லா கொதிக்கக் கொதிக்கவுமில்லாம ஆறிப்போயிமில்லாம வெதுவெதுன்னு
நறுவிதாய் - நல்லாக் கமகமன்னு இருந்துச்சாம்
வேண்டளவுந் தின்பதாய் - வேணுங்கறம்புட்டு திங்கலாமுல. இன்னமும் வேணுமுன்ன மரத்துல பறிச்சிக்கிறது
நெய்தான் அளாவி - நல்ல நல்லெண்ணெய விட்டு
நிறம் பசந்த - பச்சப் பசேலுன்னு இருக்குற கீரய
பொய்யா அடகென்று சொல்லி அமுதத்தை இட்டார் - தின்னா வயித்தக் கெடுக்காத நல்லா சத்துள்ள சாப்பாடுன்னு சொல்லி அமுதத்த கொடுத்தாகளே
கடகம் சொரிந்த கையார் - கையில வளவி மாட்டீருக்குற இந்த பிள்ளைக.
அப்புறமா தின்ன கீரைக்கு நன்றி செய்யுறதாச் சொல்லி அந்தப் பிள்ளைகளுக்குக் கொல்லி மல அரசங் கூட கலியாணம் முடிச்சி வெச்சிச்சி ஔவையாரு கெழவி.
இப்பப் புரிஞ்சதா முருங்கைக் கீர சமாச்சாரம்.
அன்புடன்,
கோ.இராகவன்
பாண்டி பஜாரில் விஜய டி ராஜேந்தர்
அடுக்கு மொழிக்காரர் டி.ஆர். அவரை ஒரு முறை தற்செயலாக சந்திக்க நேர்ந்தது. சந்திப்பும் ரொம்பக் கொஞ்ச நேரந்தான். இது அவர் விஜய டி ராஜேந்தராக மாறும் முன் நடந்தது.
தியாகராய நகரில் பாண்டி பஜாரில் ஏதோ பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். மாலை வேளை. இருட்டியிருந்தது. வீதியெங்கும் விளக்குகள் பொருத்தியிந்தது. பழைய இராஜகுமாரி தியேட்டர் பக்கத்தில் நிறைய பூக்கடைகள் உண்டு. அந்தப்பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தட்டுப்பட்டது ஒரு ஜீப். முன் சீட்டில் டிரைவர் தவிர இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். நன்றாகப் பார்த்தபின் தெரிந்தது அது டி.ஆர் என்று.
"அடடே! டி.ஆர்" என்று அருகில் சென்று வணக்கம் சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். கையில் ஆட்டோகிராப் வாங்க எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் சின்னதான டெலிபோன் புக் இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தைப் புரட்டி ஆட்டோகிராப் கேட்டேன். அன்புடன் டி.ஆர் என்று உருண்டை உருண்டையாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஏதாவது பேச வேண்டுமே என்று "எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டேன். கேட்டது தவறென்று உடனே புரிந்தது. அவரது கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. கன்னச் சதை லேசாக உதறத் துவங்கியது. தொண்டைக் குழி மேலும் கீழும் குதித்தது தாடியை மீறித் தெரிந்தது. குழறலாய் உடைந்த சொல்லில் பதில் வந்தது. "நல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேம்ப்பா!" அவரது கண்கள் நிரம்பியிருந்தாலும் இன்னும் உடைப்பெடுக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றா தெரியவில்லை. ஒரு மாதிரியான முள்மேல் நிற்கும் உணர்ச்சி. "ரொம்ப நன்றி. வர்ரேங்க" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். இதை வீட்டிலும் நண்பர்களிடத்திலும் சொன்னேன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். எப்படியோ நினைவில் நின்ற சந்திப்பு.
தியாகராய நகரில் பாண்டி பஜாரில் ஏதோ பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தேன். மாலை வேளை. இருட்டியிருந்தது. வீதியெங்கும் விளக்குகள் பொருத்தியிந்தது. பழைய இராஜகுமாரி தியேட்டர் பக்கத்தில் நிறைய பூக்கடைகள் உண்டு. அந்தப்பக்கமாக நடந்து கொண்டிருந்தேன். கண்ணில் தட்டுப்பட்டது ஒரு ஜீப். முன் சீட்டில் டிரைவர் தவிர இன்னொருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் யாரோ பேசிக்கொண்டிருந்தார்கள். நன்றாகப் பார்த்தபின் தெரிந்தது அது டி.ஆர் என்று.
"அடடே! டி.ஆர்" என்று அருகில் சென்று வணக்கம் சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொன்னார். கையில் ஆட்டோகிராப் வாங்க எந்தப் புத்தகமும் இல்லை. ஆனால் சின்னதான டெலிபோன் புக் இருந்தது. அதன் கடைசிப் பக்கத்தைப் புரட்டி ஆட்டோகிராப் கேட்டேன். அன்புடன் டி.ஆர் என்று உருண்டை உருண்டையாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஏதாவது பேச வேண்டுமே என்று "எப்பிடி இருக்கீங்க?" என்று கேட்டேன். கேட்டது தவறென்று உடனே புரிந்தது. அவரது கண்கள் கலங்கின. உதடுகள் துடித்தன. கன்னச் சதை லேசாக உதறத் துவங்கியது. தொண்டைக் குழி மேலும் கீழும் குதித்தது தாடியை மீறித் தெரிந்தது. குழறலாய் உடைந்த சொல்லில் பதில் வந்தது. "நல்ல்ல்ல்ல்ல்லா இருக்கேம்ப்பா!" அவரது கண்கள் நிரம்பியிருந்தாலும் இன்னும் உடைப்பெடுக்கவில்லை. எனக்கு என்ன செய்வதென்றா தெரியவில்லை. ஒரு மாதிரியான முள்மேல் நிற்கும் உணர்ச்சி. "ரொம்ப நன்றி. வர்ரேங்க" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டேன். இதை வீட்டிலும் நண்பர்களிடத்திலும் சொன்னேன். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான்தான் அவரிடத்தில் "எப்படி இருக்கீங்க" என்று கேட்ட முதல் நபராக இருக்கும் என்று சொல்லிச் சிரித்தார்கள். எப்படியோ நினைவில் நின்ற சந்திப்பு.
Monday, June 20, 2005
Gone With The Wind (காற்றோடு போனதே)
Gone With The Wind (காற்றோடு போனதே)
எழுதியவர் : Margeret Mitchell (மார்கரெட் மிஷெல்)
பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சிடப்பட்டு விற்பனையாகும் புத்தகம் "Gone with the wind" என்றால் மிகையாகாது. படித்தவர்களுக்கெல்லாம் பிடிக்கும் கதை. இல்லை. காவியம். சற்று பெரிய புத்தகம்தான். உள்ளே இருப்பதும் பெரிய விஷயமல்லவா! அமெரிக்கர்களுக்கு மிகவும் பிரியமான புத்தம் இது. அவர்கள் பார்த்த விஷயங்களையும் நடப்புகளையும் கபடமில்லாமல் சொல்லும் புத்தகமிது.
ஒரு பெண் ஒருவனை மனதில் நினைத்து விட்டால், பிறகு அவனை எந்தச் சூழ்நிலையிலும் மறக்க மாட்டாளென்று கூறுவார்கள். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால் இந்தக் கதையின் கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாரா (Scarlet O' Hara) அதற்கு இலக்கணமாக இருக்கிறார். எத்தனையோ இழப்புகள், திருமணம், குழந்தை, போர், உழைப்பு என்று நூறு பிரச்சனைகளுக்கு இடையிலும் முதல் காதலை மூளைக்குள்ளேயே மூட்டம் போட்டு வைத்திருக்கும் கதாபாத்திரம் ஸ்கார்லெட்டினுடையது. அமெரிக்காவில் தெற்குப் பகுதியில் டாரா என்ற பண்ணை வீட்டில் பிறந்து வளர்ந்த பணக்கார இளம்பெண் ஸ்கார்லெட். விளையாட்டுப் பெண். செல்லமாக வளர்ந்த பெண். காண்போரைக் கவரும் பேரழகு. அதில் அவளுக்கு பெருமையும் கர்வமும் உண்டு. இரண்டு தங்கைகளும் அவளுக்கு உண்டு. நிறைய ஆண் நன்பர்கள். அவளை மனதில் விதைத்தவர் பலர். ஆயினும் அவள் மனதைத் தைத்தவன் ஆஷ்லே (Ashley). அவனுக்கும் அவனது முறைப்பெண் மெலனிக்கும் (melanie) திருமணம் உறுதியாகிறது. பதறிய ஸ்கார்லெட், அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்தோ பரிதாபம். காதல் மறுக்கப்படுகிறது. பதினேழு வயது பெண்ணின் உள்ளம் உடைக்கப்படுகிறது. கதறிய பெண்ணின் காதல் உதறப்படுகிறது. ஸ்கார்லெட்டும் ஆஷ்லேயும் பேசுவது ரெட் பட்லர் (Rhett Butler) என்பவனின் காதில் விழுந்து விடுகிறது. ஸ்கார்லெட்டின் இரகசியம் அவனுக்குத் தெரிந்து போனதே!
ஏமாற்றத்தில் உண்டான தடுமாற்றத்தில் மெலனினின் அண்ணன் சார்லஸை திருமணம் செய்கிறாள். அஷ்லேயும் மெலனியை மணந்து கொள்கிறாள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. சார்லஸ் இறக்கிறான். அவளுக்கு குழந்தையும் பிறக்கிறது. அட்லாண்டாவில் சார்லஸின் வீட்டில் தங்கியிருக்கிறாள் ஸ்கார்லெட். அவளுடன் மெலனியும். மெலனியின் வேறு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆஷ்லேயோ போர்க்கைதியாக எதிரியிடத்தில். இதற்கிடையில் ஸ்கார்லெட்டுடனும் மெலனியுடனும் நன்றாக பழகுகிறான் ரெட் பட்லர். அவனை வேறு யாருக்குமே பிடிக்கவில்லை. போரில் தெற்கு அமெரிக்கவினர் பின்வாங்குகிறார்கள். பீரங்கி ஒலிகளுக்கு நடுவில் மெலலினுக்கு குழந்தை பிறக்கிறது. அவர்கள் டாராவிற்குத் தப்பித்துச் செல்ல உதவுகிறான் ரெட். ஆனால் வழியிலேயே அவர்களை விட்டுவிட்டு போரில் கலந்து கொள்ள போய்விடுகிறான்.
அன்னையின் மடி தேடி ஒரு வழியாக டாராவிற்கு வருகிறார்கள். அங்கேயும் அதிர்ச்சி. ஆம். எதிரிகள் எல்லாப் பண்ணை வீடுகளையும் பண்ணைகளையும் அழித்திருக்கிறார்கள். டாராவின் வீடு மட்டும் தப்பித்திருக்கிறது. மகிச்சியோடு டாராவிற்குள் நுழையும் ஸ்கார்லெட்டிற்கு அதிர்ச்சி. ஆம். ஸ்கார்லெட்டின் தாய் நிமோனியாவில் இறந்திருக்கிறாள். தந்தை சித்தம் கலங்கியிருக்கிறார். இரண்டு தங்கைகளும் நோயின் பிடியில். வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்த சில கருப்பர்கள் வேறு இருக்கிறார்கள். ஆனால் பொறுப்பானவர் யாரும் வீட்டில் இல்லை. ஏன்! ஒன்றுமே இல்லை. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. அவளது தோள்களில் சுமை இறங்குகிறது. அதையும் திறம்பட சமாளிக்கிறாள். விளையாட்டு ஸ்கார்லெட் பொறுப்புள்ளவளாக மாறுகிறாள். இப்போது மெலனியையும் அவளது குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பு வேறு. போர் முடிவுக்கு வருகிறது. எதிரிகளின் கட்டுப்பாட்டில் இப்போது அவர்களது பகுதி. அவர்களது குழறுபடிகள். அப்பப்பா! மென்மேலும் நெருப்புக் கனல்களாய் துன்பங்கள். அவளை மேலும் உறுதியாக்குகிறது அது. அத்தனையும் தாண்டி படிப்பவர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிறைகிறாள் ஸ்கார்லெட்.
அவள் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் வேளையிலும் காலுக்கு கீழே நிலம் நழுவுவது போல அடுக்கடுக்காய் பிரச்சனைகள். அத்தனை சோதனைகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் முடிவுகளை எடுத்து தீர்வு காணுகிறாள். பெண்ணியம் பேசியே பொழுதைப் போக்காமல் புரிய வைக்கிறாள் ஸ்கார்லெட். நவகிரகங்களானாலும் நடுவிலிருப்பது சூரியன் என்றால், இந்தக் கதையின் சூரியன் ஸ்காட்லெட். அவளைச் சுற்றியே எல்லாம் இயங்குகின்றன.
இந்தக் கதையின் மற்றொரு சிறப்பு, போரின் கொடுமைகளையும் அதன் பின்விளைவுகளையும் நெஞ்சை உலுக்கும் விதத்தில் சொல்லியிருப்பது. போரின் விளைவாக எப்படியெல்லாம் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவுகள், தொழில்முறைகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மாறுகின்றன என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார் மார்கரெட் மிஷெல். உலகத்தின் பல நாடுகளின் மீது போர் தொடுக்கும் அமெரிக்கா அவர்களது உள்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடந்தவைகளை ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அல்லது இந்தக் கதையை ஒரு முறையேனும் படித்துப் பார்க்க வேண்டும். நீங்களும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் இந்தக் கதையை படியுங்கள். இந்திய மதிப்பில் ரூபாய் நூற்று ஐம்பதிற்கு இந்தப் புத்தகம் கிடைக்கிறது. வாசித்து நேசிக்க வேண்டிய புத்தகம்.
இந்தக் கதையின் ஆசிரியை மார்கரெட் மிஷெலைப் பற்றியும் சுவையான தகவல்கள் உள்ளன. ஆயிரத்து தொள்ளாயிரமாம் ஆண்டு அட்லாண்ட்டாவில் பிறந்தவர் மார்கரெட் மிஷெல். அவரது இருபத்தியிரண்டாவது வயதில் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கிய அவர், Gone with the wind-ஐ எழுதத் தொடங்கியது 1926-இல். அதுவும் குதிரையேற்ற பயிற்சியின் போது கீழே விழுந்ததால் கிடைத்த கட்டாய ஓய்வின் போது. மார்கரெட் மிஷெலில் உயரம் ஐந்தடிக்கும் குறைவு. இந்தக் கதையை அவர் எழுதிய தாள்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்குமாம். கதை எழுதி கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களுக்குப் பிறகுதான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு அந்தப் புத்தகம் பெற்ற புகழை உலகே அறியும். புத்தகம் வெளியான மூன்று ஆண்டுகளிலேயே திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 1946-ல் சாலையைக் கடக்கும் போது ஒரு கார் மோதி இறந்தார் மார்கரெட்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இறுதியில் நடந்த உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவின் பண்பாடும் கலாச்சாரமும் பெரும் மாற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் முழுவதுமாக புரட்டிப் போடப் பட்டன. பேரிழப்பும் சீரழிவும் உள்ளத்தை உருக்குபவை. பெரிய பண்ணைக்காரர்களும் தொழிலதிபர்களும் பட்டாணி விற்கும் நிலைக்கு ஆளானார்கள். வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் இடையே இருந்த உறவு முறைகள் மாறின. பண்ணையில் வேலைக்கு கருப்பர்களை வாங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, ஒருவிதமான திடீர் சுதந்திரம் கருப்பர்களுக்குக் கிடைத்தது. ஆனால் தவறான வேளையில். தவறான வகையில். மிகவும் கட்டுப்பாடான வெள்ளை அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் பண்பாட்டுச் சீரழிவு புகுந்தது. விலைமாதர்களும் திருடர்களும் பெருகினர். சலூன்கள் என்றழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் பெருகின. வண்ணம் பூசி முகத்தழகைக் கூட்டிக் காட்டுவது தவறாக கருதப் பட்டது என்ற நிலை மாறியது. பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதும் கடினமானது. பல வீடுகளில் பெண்கள் திருமணமாகாமலே வாழும் நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளையெல்லாம் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் gone with the wind.
மார்கரெட் பிறந்த சமயத்தில் உள்நாட்டுப் போர் முடிந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்தது. போர்க்காலத்தில் தனது தந்தை பட்ட பாட்டை அடித்தளமாக வைத்து எழுதினார் மார்கரெட். அவரது உறவினர்களும் நண்பர்களும் கொடுத்த தகவல்களும் விவரங்களும் கதையை முழுமையாக்கின. அட்லாண்டாவிலேயெ பிறந்து வளர்ந்தவராதலால், கதையில் அந்த ஊரைப் பற்றி சொல்லும் பொழுது சிறப்பாகவும் முழுமையாகவும் சொல்லியிருக்கிறார். பெண்கள் தொழில் செய்வது கேவலமாக கருதப் பட்ட நிலை மாறி பெண்களாலும் தொழில் செய்ய முடியும் என்று நிரூபிக்கப் பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.
இந்தக் கதையைப் பற்றி இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகலாம். அவ்வளவு சரக்குள்ள கதை. படிக்கச் சிறந்த கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் நமது உள்ளங்களை கொள்ளை கொள்ளுவது மற்றுமல்ல, நமக்குள்ளே ஒரு பகுதியாகி விடும் தன்மையும் பெற்றவை. படியுங்கள். படித்து விட்டு சொல்லுங்கள். அசைபோடத் தோதான கதை.
எழுதியவர் : Margeret Mitchell (மார்கரெட் மிஷெல்)
பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகம் அச்சிடப்பட்டு விற்பனையாகும் புத்தகம் "Gone with the wind" என்றால் மிகையாகாது. படித்தவர்களுக்கெல்லாம் பிடிக்கும் கதை. இல்லை. காவியம். சற்று பெரிய புத்தகம்தான். உள்ளே இருப்பதும் பெரிய விஷயமல்லவா! அமெரிக்கர்களுக்கு மிகவும் பிரியமான புத்தம் இது. அவர்கள் பார்த்த விஷயங்களையும் நடப்புகளையும் கபடமில்லாமல் சொல்லும் புத்தகமிது.
ஒரு பெண் ஒருவனை மனதில் நினைத்து விட்டால், பிறகு அவனை எந்தச் சூழ்நிலையிலும் மறக்க மாட்டாளென்று கூறுவார்கள். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால் இந்தக் கதையின் கதாநாயகி ஸ்கார்லெட் ஓ ஹாரா (Scarlet O' Hara) அதற்கு இலக்கணமாக இருக்கிறார். எத்தனையோ இழப்புகள், திருமணம், குழந்தை, போர், உழைப்பு என்று நூறு பிரச்சனைகளுக்கு இடையிலும் முதல் காதலை மூளைக்குள்ளேயே மூட்டம் போட்டு வைத்திருக்கும் கதாபாத்திரம் ஸ்கார்லெட்டினுடையது. அமெரிக்காவில் தெற்குப் பகுதியில் டாரா என்ற பண்ணை வீட்டில் பிறந்து வளர்ந்த பணக்கார இளம்பெண் ஸ்கார்லெட். விளையாட்டுப் பெண். செல்லமாக வளர்ந்த பெண். காண்போரைக் கவரும் பேரழகு. அதில் அவளுக்கு பெருமையும் கர்வமும் உண்டு. இரண்டு தங்கைகளும் அவளுக்கு உண்டு. நிறைய ஆண் நன்பர்கள். அவளை மனதில் விதைத்தவர் பலர். ஆயினும் அவள் மனதைத் தைத்தவன் ஆஷ்லே (Ashley). அவனுக்கும் அவனது முறைப்பெண் மெலனிக்கும் (melanie) திருமணம் உறுதியாகிறது. பதறிய ஸ்கார்லெட், அவனிடம் காதலை வெளிப்படுத்துகிறாள். அந்தோ பரிதாபம். காதல் மறுக்கப்படுகிறது. பதினேழு வயது பெண்ணின் உள்ளம் உடைக்கப்படுகிறது. கதறிய பெண்ணின் காதல் உதறப்படுகிறது. ஸ்கார்லெட்டும் ஆஷ்லேயும் பேசுவது ரெட் பட்லர் (Rhett Butler) என்பவனின் காதில் விழுந்து விடுகிறது. ஸ்கார்லெட்டின் இரகசியம் அவனுக்குத் தெரிந்து போனதே!
ஏமாற்றத்தில் உண்டான தடுமாற்றத்தில் மெலனினின் அண்ணன் சார்லஸை திருமணம் செய்கிறாள். அஷ்லேயும் மெலனியை மணந்து கொள்கிறாள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் வெடிக்கிறது. சார்லஸ் இறக்கிறான். அவளுக்கு குழந்தையும் பிறக்கிறது. அட்லாண்டாவில் சார்லஸின் வீட்டில் தங்கியிருக்கிறாள் ஸ்கார்லெட். அவளுடன் மெலனியும். மெலனியின் வேறு குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள். ஆஷ்லேயோ போர்க்கைதியாக எதிரியிடத்தில். இதற்கிடையில் ஸ்கார்லெட்டுடனும் மெலனியுடனும் நன்றாக பழகுகிறான் ரெட் பட்லர். அவனை வேறு யாருக்குமே பிடிக்கவில்லை. போரில் தெற்கு அமெரிக்கவினர் பின்வாங்குகிறார்கள். பீரங்கி ஒலிகளுக்கு நடுவில் மெலலினுக்கு குழந்தை பிறக்கிறது. அவர்கள் டாராவிற்குத் தப்பித்துச் செல்ல உதவுகிறான் ரெட். ஆனால் வழியிலேயே அவர்களை விட்டுவிட்டு போரில் கலந்து கொள்ள போய்விடுகிறான்.
அன்னையின் மடி தேடி ஒரு வழியாக டாராவிற்கு வருகிறார்கள். அங்கேயும் அதிர்ச்சி. ஆம். எதிரிகள் எல்லாப் பண்ணை வீடுகளையும் பண்ணைகளையும் அழித்திருக்கிறார்கள். டாராவின் வீடு மட்டும் தப்பித்திருக்கிறது. மகிச்சியோடு டாராவிற்குள் நுழையும் ஸ்கார்லெட்டிற்கு அதிர்ச்சி. ஆம். ஸ்கார்லெட்டின் தாய் நிமோனியாவில் இறந்திருக்கிறாள். தந்தை சித்தம் கலங்கியிருக்கிறார். இரண்டு தங்கைகளும் நோயின் பிடியில். வீட்டிலும் பண்ணையிலும் வேலை செய்த சில கருப்பர்கள் வேறு இருக்கிறார்கள். ஆனால் பொறுப்பானவர் யாரும் வீட்டில் இல்லை. ஏன்! ஒன்றுமே இல்லை. உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. அவளது தோள்களில் சுமை இறங்குகிறது. அதையும் திறம்பட சமாளிக்கிறாள். விளையாட்டு ஸ்கார்லெட் பொறுப்புள்ளவளாக மாறுகிறாள். இப்போது மெலனியையும் அவளது குழந்தையையும் காப்பாற்றும் பொறுப்பு வேறு. போர் முடிவுக்கு வருகிறது. எதிரிகளின் கட்டுப்பாட்டில் இப்போது அவர்களது பகுதி. அவர்களது குழறுபடிகள். அப்பப்பா! மென்மேலும் நெருப்புக் கனல்களாய் துன்பங்கள். அவளை மேலும் உறுதியாக்குகிறது அது. அத்தனையும் தாண்டி படிப்பவர்களின் நெஞ்சத்தில் நீங்காமல் நிறைகிறாள் ஸ்கார்லெட்.
அவள் ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும் வேளையிலும் காலுக்கு கீழே நிலம் நழுவுவது போல அடுக்கடுக்காய் பிரச்சனைகள். அத்தனை சோதனைகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் முடிவுகளை எடுத்து தீர்வு காணுகிறாள். பெண்ணியம் பேசியே பொழுதைப் போக்காமல் புரிய வைக்கிறாள் ஸ்கார்லெட். நவகிரகங்களானாலும் நடுவிலிருப்பது சூரியன் என்றால், இந்தக் கதையின் சூரியன் ஸ்காட்லெட். அவளைச் சுற்றியே எல்லாம் இயங்குகின்றன.
இந்தக் கதையின் மற்றொரு சிறப்பு, போரின் கொடுமைகளையும் அதன் பின்விளைவுகளையும் நெஞ்சை உலுக்கும் விதத்தில் சொல்லியிருப்பது. போரின் விளைவாக எப்படியெல்லாம் அவர்களது பழக்கவழக்கங்கள், உணவுகள், தொழில்முறைகள், சம்பிரதாயங்கள் எல்லாம் மாறுகின்றன என்பதை அப்பட்டமாக காட்டியுள்ளார் மார்கரெட் மிஷெல். உலகத்தின் பல நாடுகளின் மீது போர் தொடுக்கும் அமெரிக்கா அவர்களது உள்நாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நடந்தவைகளை ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்க வேண்டும். அல்லது இந்தக் கதையை ஒரு முறையேனும் படித்துப் பார்க்க வேண்டும். நீங்களும் நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் இந்தக் கதையை படியுங்கள். இந்திய மதிப்பில் ரூபாய் நூற்று ஐம்பதிற்கு இந்தப் புத்தகம் கிடைக்கிறது. வாசித்து நேசிக்க வேண்டிய புத்தகம்.
இந்தக் கதையின் ஆசிரியை மார்கரெட் மிஷெலைப் பற்றியும் சுவையான தகவல்கள் உள்ளன. ஆயிரத்து தொள்ளாயிரமாம் ஆண்டு அட்லாண்ட்டாவில் பிறந்தவர் மார்கரெட் மிஷெல். அவரது இருபத்தியிரண்டாவது வயதில் பத்திரிகைகளில் பணிபுரியத் தொடங்கிய அவர், Gone with the wind-ஐ எழுதத் தொடங்கியது 1926-இல். அதுவும் குதிரையேற்ற பயிற்சியின் போது கீழே விழுந்ததால் கிடைத்த கட்டாய ஓய்வின் போது. மார்கரெட் மிஷெலில் உயரம் ஐந்தடிக்கும் குறைவு. இந்தக் கதையை அவர் எழுதிய தாள்களை அடுக்கி வைத்தால் அவரை விட உயரமாக இருக்குமாம். கதை எழுதி கிட்டத்தட்ட ஆறேழு வருடங்களுக்குப் பிறகுதான் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. அதன் பிறகு அந்தப் புத்தகம் பெற்ற புகழை உலகே அறியும். புத்தகம் வெளியான மூன்று ஆண்டுகளிலேயே திரைப்படமாகவும் எடுக்கப் பட்டது. அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது. 1946-ல் சாலையைக் கடக்கும் போது ஒரு கார் மோதி இறந்தார் மார்கரெட்.
பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இறுதியில் நடந்த உள்நாட்டுப் போரினால் அமெரிக்காவின் பண்பாடும் கலாச்சாரமும் பெரும் மாற்றம் கண்டது. குறிப்பாக அமெரிக்காவின் தெற்கு மாகாணங்கள் முழுவதுமாக புரட்டிப் போடப் பட்டன. பேரிழப்பும் சீரழிவும் உள்ளத்தை உருக்குபவை. பெரிய பண்ணைக்காரர்களும் தொழிலதிபர்களும் பட்டாணி விற்கும் நிலைக்கு ஆளானார்கள். வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் இடையே இருந்த உறவு முறைகள் மாறின. பண்ணையில் வேலைக்கு கருப்பர்களை வாங்கிக் கொண்டிருந்த நிலைமாறி, ஒருவிதமான திடீர் சுதந்திரம் கருப்பர்களுக்குக் கிடைத்தது. ஆனால் தவறான வேளையில். தவறான வகையில். மிகவும் கட்டுப்பாடான வெள்ளை அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையில் பண்பாட்டுச் சீரழிவு புகுந்தது. விலைமாதர்களும் திருடர்களும் பெருகினர். சலூன்கள் என்றழைக்கப்படும் கேளிக்கை விடுதிகள் பெருகின. வண்ணம் பூசி முகத்தழகைக் கூட்டிக் காட்டுவது தவறாக கருதப் பட்டது என்ற நிலை மாறியது. பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பதும் கடினமானது. பல வீடுகளில் பெண்கள் திருமணமாகாமலே வாழும் நிலை ஏற்பட்டது. இந்த நிகழ்வுகளையெல்லாம் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் gone with the wind.
மார்கரெட் பிறந்த சமயத்தில் உள்நாட்டுப் போர் முடிந்து அமைதி திரும்பிக் கொண்டிருந்தது. போர்க்காலத்தில் தனது தந்தை பட்ட பாட்டை அடித்தளமாக வைத்து எழுதினார் மார்கரெட். அவரது உறவினர்களும் நண்பர்களும் கொடுத்த தகவல்களும் விவரங்களும் கதையை முழுமையாக்கின. அட்லாண்டாவிலேயெ பிறந்து வளர்ந்தவராதலால், கதையில் அந்த ஊரைப் பற்றி சொல்லும் பொழுது சிறப்பாகவும் முழுமையாகவும் சொல்லியிருக்கிறார். பெண்கள் தொழில் செய்வது கேவலமாக கருதப் பட்ட நிலை மாறி பெண்களாலும் தொழில் செய்ய முடியும் என்று நிரூபிக்கப் பட்டதும் இதே காலகட்டத்தில்தான்.
இந்தக் கதையைப் பற்றி இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகலாம். அவ்வளவு சரக்குள்ள கதை. படிக்கச் சிறந்த கதை. இதில் வரும் கதாபாத்திரங்கள் நமது உள்ளங்களை கொள்ளை கொள்ளுவது மற்றுமல்ல, நமக்குள்ளே ஒரு பகுதியாகி விடும் தன்மையும் பெற்றவை. படியுங்கள். படித்து விட்டு சொல்லுங்கள். அசைபோடத் தோதான கதை.
Thursday, June 16, 2005
வெட்டு கத்திரி
வெட்டு கத்திரி
துணியை வெட்டும் கத்திரி அல்ல. செய்து வைத்தால் எல்லோரும் சேர்ந்து வெட்டும் கத்திரி. கத்திரி வதக்கல்களில் சற்று மாறுபட்ட வகை. இது மிகவும் எளிமையான பதார்த்தம். பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
கத்திரிக்காய் (பெரியதும் பயன்படுத்தலாம். சிறியதும் பயன்படுத்தலாம்).
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்ல எண்ணெய் - தேவையான அளவு
1. பெரிய கத்திரிக்காய் என்றால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். சிறிய கத்திரிக்காய் என்றால் நான்காக வெட்டிக்கொள்ளுங்கள். (கத்திரிக்காய் கழுவப்பட்டும் ஈரமின்றியும் இருக்க வேண்டும். காம்பை நீக்கியிருக்க வேண்டும்).
2. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூளை கலந்து கொள்ளவும்.
3. கத்திரிக்காயின் வெட்டப்பட்ட பக்கங்கள் இந்தக் கலவையில் படுமாறு அழுத்திப் புரட்டிக் கொள்ளவும்.
4. நான்-ஸ்டிக் அல்லது தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மிதமான தீயில் காய விடவும்.
5. தூள் கலவையில் புரட்டப்பட்ட கத்திரிக்காய் துண்டங்களை சட்டியில் இட்டு வேக விடவும். நன்றாக வேகும் வரை பக்கங்களை மாற்றி மாற்றி போடவும். கருகி விடக் கூடாது.
6. நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
இதை பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருந்தும். தயிற் சோற்றோடு சேர்த்து உண்டால், ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டி வரலாம். பெரிய கத்திரிக்கயானால் சுடு சோற்றோடு கலந்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து தின்றால் நன்றாக இருக்கும். தண்ணீரே தேவைப்படாத எண்ணெயும் குறைவாகப் பிடிக்கும் பதார்த்தமிது. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
துணியை வெட்டும் கத்திரி அல்ல. செய்து வைத்தால் எல்லோரும் சேர்ந்து வெட்டும் கத்திரி. கத்திரி வதக்கல்களில் சற்று மாறுபட்ட வகை. இது மிகவும் எளிமையான பதார்த்தம். பூரிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
கத்திரிக்காய் (பெரியதும் பயன்படுத்தலாம். சிறியதும் பயன்படுத்தலாம்).
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்ல எண்ணெய் - தேவையான அளவு
1. பெரிய கத்திரிக்காய் என்றால் வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளுங்கள். சிறிய கத்திரிக்காய் என்றால் நான்காக வெட்டிக்கொள்ளுங்கள். (கத்திரிக்காய் கழுவப்பட்டும் ஈரமின்றியும் இருக்க வேண்டும். காம்பை நீக்கியிருக்க வேண்டும்).
2. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புத் தூளை கலந்து கொள்ளவும்.
3. கத்திரிக்காயின் வெட்டப்பட்ட பக்கங்கள் இந்தக் கலவையில் படுமாறு அழுத்திப் புரட்டிக் கொள்ளவும்.
4. நான்-ஸ்டிக் அல்லது தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி மிதமான தீயில் காய விடவும்.
5. தூள் கலவையில் புரட்டப்பட்ட கத்திரிக்காய் துண்டங்களை சட்டியில் இட்டு வேக விடவும். நன்றாக வேகும் வரை பக்கங்களை மாற்றி மாற்றி போடவும். கருகி விடக் கூடாது.
6. நன்றாக வெந்ததும் தட்டில் எடுத்து சுடச்சுட பரிமாறவும்.
இதை பூரிக்குத் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருந்தும். தயிற் சோற்றோடு சேர்த்து உண்டால், ஒவ்வொரு நாளும் இதைச் செய்ய வேண்டி வரலாம். பெரிய கத்திரிக்கயானால் சுடு சோற்றோடு கலந்து சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து தின்றால் நன்றாக இருக்கும். தண்ணீரே தேவைப்படாத எண்ணெயும் குறைவாகப் பிடிக்கும் பதார்த்தமிது. நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவை கூடும். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
Monday, June 13, 2005
ஓம் புத்தகப் பிரியாயை நமஹ
ஓம் புத்தகப் பிரியாயை நமஹ
அதாகப் பட்டது...ஆதியிலே, வேலை வெட்டிகளைப் பாதியிலே நிறுத்தி விட்டு, கைகால் நொந்தவரெல்லாம் கூடித் தொடங்கினார்கள் எழுதுவதற்கு. தாங்களாக எழுதினால் போதுமா? படிப்பார் வேண்டாமா? எண்ணும் எழுத்தும் கண்ணென்றார்கள். கற்க கசடற என்றார்கள். சேதியிலே கேட்டதெல்லாம் சோதியிலே கலந்திட தாமும் படிக்கத் தொடங்கினார்கள். எழுதும் படிக்கும் வழக்கம் வந்தது.
அப்படி எழுதியும் படித்தும் வந்த மரபிலே இராகவன் தோன்றினான். அவன் உண்டு வீங்கியவன். புத்தகம் நிறைய வாங்கியவன். அதற்காக திட்டுகள் நிறையத் தாங்கியவன்.
அவனுடைய வீட்டுக்குள்ளே இருக்கும் புத்தகங்களைப் பட்டியல் போட நாமும் உள்ளே நுழைந்தேன். தமிழுக்கே அகராதி கேட்கும் இந்த அகராதி பிடித்தவன் ஆங்கிலத்தில் அடுக்கி வைத்திருந்தான் ஏடுகளை. ஆங்காங்கே தமிழும் கொஞ்சம். மிச்சமும் சொச்சமும் ஊரிலிருப்பதாக கதை கட்டினான். இருந்தாலும் விடாமல் இருக்கின்றவைகளை கணக்கெடுத்தோம். இதோ பட்டியல்.
அவனுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பேட்டியும் எடுத்தோம். அதைப் பிறகு இடுகிறோம்.
நந்தவனம் - மீ.ப.சோமு
அர்த்தமுள்ள இந்துமதம் - அனைத்து பாகங்களும் - கவியரசர் கண்ணதாசன்
மனோண்மணீயம் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை - விளக்கம் - சு.பாலசுப்பிரமணியன்
மதனகாமராஜன் கதைகள்
கந்தவேள் கருணை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் திருவிளையாடல் - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் அநுபூதி விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தரலங்காரம் விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
சிவனருட் செல்வர் - தவத்திரு கிருபானந்த வாரியார்
வாசன் உயர்தரத் தமிழ்க் கையகராதி
இல்லத்தரசிகளுக்கு இனிய சமையல் (அசைவம்) - யசோதா சண்முகம்
A-1 முஸ்லிம் சமையல் - பாத்திமா ஷாஜஹான்
தமிழ்ப் புலவர் கவி காளமேகம் - பூவை அமுதன்
பேய்க்கரும்பு - பாலகுமாரன்
கி.ராஜநாராயணன் கதைகள் - தொகுப்பு
பெயர் போன புளுகுகள் - தேவன்
ராஜத்தின் மனோரதம் - தேவன்
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் - பாகம் 1 முதல் 5.
கவிராஜன் கதை - வைரமுத்து
பாரதியார் கவிதைகள்
சிலப்பதிகாரம் - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
மணிமேகலை - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
சீவக சிந்தாமணி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குண்டலகேசி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
வளையாபதி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குப்பத்து சாஸ்திரிகள் - பி.வி.ஆர்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசனார்
கடல் கொண்ட தென்னாடு - கவியரசர் கண்ணதாசன்
பி.சுசீலா - குயிலை மிஞ்சும் இனிய கீதங்கள்
பத்துப்பாட்டு (திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு) விரிவுரை - புலவர். அ.மாணிக்கனார்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
அக்ரஹாரத்தில் கழுதை - அ.வெங்கட் சாமிநாதன்
விகடன் பழவவிழா மலர்
சிரிக்க வைக்கிறார் கிவாஜ
தனிப்பாடல் திரட்டு (முதல் தொகுதி) - விளக்கம் அ,மாணிக்கம்
சிலம்போ சிலம்பு - முனைவர் சுந்தர சண்முகனார்
சிலப்பதிகாரம் - விரிவுரை - புலியூர்க் கேசிகன்
திருப்புகழ் (தொகுப்பு) - அருணகிரிநாதர்
அன்புடன்,கோ.இராகவன்
அதாகப் பட்டது...ஆதியிலே, வேலை வெட்டிகளைப் பாதியிலே நிறுத்தி விட்டு, கைகால் நொந்தவரெல்லாம் கூடித் தொடங்கினார்கள் எழுதுவதற்கு. தாங்களாக எழுதினால் போதுமா? படிப்பார் வேண்டாமா? எண்ணும் எழுத்தும் கண்ணென்றார்கள். கற்க கசடற என்றார்கள். சேதியிலே கேட்டதெல்லாம் சோதியிலே கலந்திட தாமும் படிக்கத் தொடங்கினார்கள். எழுதும் படிக்கும் வழக்கம் வந்தது.
அப்படி எழுதியும் படித்தும் வந்த மரபிலே இராகவன் தோன்றினான். அவன் உண்டு வீங்கியவன். புத்தகம் நிறைய வாங்கியவன். அதற்காக திட்டுகள் நிறையத் தாங்கியவன்.
அவனுடைய வீட்டுக்குள்ளே இருக்கும் புத்தகங்களைப் பட்டியல் போட நாமும் உள்ளே நுழைந்தேன். தமிழுக்கே அகராதி கேட்கும் இந்த அகராதி பிடித்தவன் ஆங்கிலத்தில் அடுக்கி வைத்திருந்தான் ஏடுகளை. ஆங்காங்கே தமிழும் கொஞ்சம். மிச்சமும் சொச்சமும் ஊரிலிருப்பதாக கதை கட்டினான். இருந்தாலும் விடாமல் இருக்கின்றவைகளை கணக்கெடுத்தோம். இதோ பட்டியல்.
அவனுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பேட்டியும் எடுத்தோம். அதைப் பிறகு இடுகிறோம்.
நந்தவனம் - மீ.ப.சோமு
அர்த்தமுள்ள இந்துமதம் - அனைத்து பாகங்களும் - கவியரசர் கண்ணதாசன்
மனோண்மணீயம் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை - விளக்கம் - சு.பாலசுப்பிரமணியன்
மதனகாமராஜன் கதைகள்
கந்தவேள் கருணை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் திருவிளையாடல் - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் அநுபூதி விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தரலங்காரம் விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
சிவனருட் செல்வர் - தவத்திரு கிருபானந்த வாரியார்
வாசன் உயர்தரத் தமிழ்க் கையகராதி
இல்லத்தரசிகளுக்கு இனிய சமையல் (அசைவம்) - யசோதா சண்முகம்
A-1 முஸ்லிம் சமையல் - பாத்திமா ஷாஜஹான்
தமிழ்ப் புலவர் கவி காளமேகம் - பூவை அமுதன்
பேய்க்கரும்பு - பாலகுமாரன்
கி.ராஜநாராயணன் கதைகள் - தொகுப்பு
பெயர் போன புளுகுகள் - தேவன்
ராஜத்தின் மனோரதம் - தேவன்
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் - பாகம் 1 முதல் 5.
கவிராஜன் கதை - வைரமுத்து
பாரதியார் கவிதைகள்
சிலப்பதிகாரம் - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
மணிமேகலை - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
சீவக சிந்தாமணி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குண்டலகேசி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
வளையாபதி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குப்பத்து சாஸ்திரிகள் - பி.வி.ஆர்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசனார்
கடல் கொண்ட தென்னாடு - கவியரசர் கண்ணதாசன்
பி.சுசீலா - குயிலை மிஞ்சும் இனிய கீதங்கள்
பத்துப்பாட்டு (திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு) விரிவுரை - புலவர். அ.மாணிக்கனார்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
அக்ரஹாரத்தில் கழுதை - அ.வெங்கட் சாமிநாதன்
விகடன் பழவவிழா மலர்
சிரிக்க வைக்கிறார் கிவாஜ
தனிப்பாடல் திரட்டு (முதல் தொகுதி) - விளக்கம் அ,மாணிக்கம்
சிலம்போ சிலம்பு - முனைவர் சுந்தர சண்முகனார்
சிலப்பதிகாரம் - விரிவுரை - புலியூர்க் கேசிகன்
திருப்புகழ் (தொகுப்பு) - அருணகிரிநாதர்
அன்புடன்,கோ.இராகவன்
Thursday, June 09, 2005
கொளுத்துவோம்
மடமையைக் கொளுத்துவோம்
"தாயே! அண்ணல் காத்துக்கொண்டிருக்கிறார். பல்லக்கும் ஆயத்தமாக இருக்கிறது. புறப்படலாமா அம்மா?". பணிவோடு கேட்டுவிட்டு மறுமொழிக்காக அன்னையின் திருமுகத்தையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தான் அனுமன். இதுநாள்வரை மேகம் மறைத்த நிலவைப் போல ஒளி இழந்திருந்த சீதையின் திருமுகத்தில் புன்னகை பெருகி பொலிவைக் கூட்டியது. அனுமனுக்கோ கால்கள் தரையில் நிற்கவில்லை. அன்னையையும் அண்ணலையும் ஒருசேரக் காணும் பேறல்லவா கிடைக்கப் போகிறது. கூடுதலாக அன்னையின் புன்னகை அவன் உள்ளத்தை குதியாட்டம் போடவைத்தது.
"அனுமா! நல்ல செய்தி கொண்டு வந்தாய். என்னிடத்தில் இப்பொழுது தருவதற்கு அன்பைத்தவிர ஒன்றுமில்லை. அது உனக்கு என்றும் குறைவில்லாமல் உண்டு. நீடு வாழி! மகனே! என்று அண்ணல் காடேகினாறோ அன்றே பல்லக்கு ஏறுவதை புறக்கணித்துவிட்டேன். வனவாச வாக்கை முறிக்கும் கோடாலியல்லவா அது. நான் நடந்தே வருகிறேன். நீ என்னுடன் வந்து வழிகாட்டு. காத்துக் காத்துப் பூத்த என் கண்கள் அவரின் கோலக்காட்சியைக் காண ஆவலாக உள்ளன. நிறையப் பேசினால் அழுதுவிடுவேன் போல் இருக்கிறது. நேரத்தைக் கடத்தவேண்டாம். செல்வோம் வா" என அனுமனை அழைத்துக் கொண்டு நடந்தாள் ஜானகி. கால்களில் துள்ளல். கண்களில் கண்ணீர். உள்ளத்தில் உவப்பு. விரைந்து நடக்கவோ நாணம். மெதுவாகச் செல்ல மனம் விடவில்லை. தவிப்போடு நடந்தாள் வைதேகி.
கரிய திருமேனி கரும்பாறையில் அமர்ந்திருந்தது. வீடணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவன் முதலானோர் முன்னின்றனர். ஏனைய வானரக் கூட்டம் பின்னின்றது. இலக்குவன் அருகில் நின்றான். அவனுக்கோ அண்ணியெனும் அன்னையைக் காணும் ஆவல். அண்ணன் முகத்தில் அந்த ஆவலைக் காணத் திரும்பியன் குழப்பத்தில் ஆழ்ந்தான். கருப்பு நிறமென்றாலும் களையான இராமனின் வதனம் மேலும் கருத்து புயலுக்கு முந்திய முகிலைப் போல அமுக்கமாகவும் அச்சப்படுத்தும் விதமாகவும் இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தான் இலக்குவன். கூடிவரும் வேளையில் குழப்பம் நேர்ந்து விடக்கூடாதே என்று அவன் நெஞ்சம் வேண்டிக்கொண்டு இருந்தது.
கூட்டத்தில் எழுந்த சிறிய சலசலப்பு சீதையின் வரவுக்குக் கட்டியங் கூறியது. இராமனுக்கு எதிராக எதையுமே நினைத்திராத அவள் இன்று அவன் எதிரே தலைகுனிந்து அமைதியாக நின்றாள். விம்மலை வெளிக்காட்டாமல் உள்ளமும் உடலும் ஒடுங்கியிருந்தாள். அன்னையைக் கண்டு அன்போடு வணங்கி நின்றான் இலக்குவன். "இலக்குவா!" என்ற அண்ணனின் குரல் அபஸ்வரமாக அவன் செவிகளில் விழுவும் திரும்பிப் பணிந்து நின்றான். சிறிய தூறலாகத் தொடங்கும் பெருமழைபோல இராமன் திருவாயினின்று சொற்கள் வந்து விழலாயின. "இலக்குவா! நெருப்பு மூட்டு". முதலில் திடுக்கிட்டாலும் ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு விறகு சேகரித்தான் இலக்குவன். எல்லாம் ஈரவிறகுகளாகக் கிடைத்தன. அனைத்தையும் கூட்டி நெருப்பு மூட்டினான். புகையே இல்லாமல் ஈர விறகுகள் எரியத்தொடங்கின. புகையப்போவதெல்லாம் வேறிடத்தில் என்று அந்த ஈர விறகுகள் அறியுமோ என்னவோ!
"சீதா இந்த நெருப்பில் மூழ்கி என்னிடம் வா" உணர்ச்சியற்று ஒலித்தது அண்ணலின் குரல். அரண்டான் இலக்குவன். விதிர்த்தான் வீடணன். அதிர்ந்தான் அனுமன். கலங்கியது கூட்டம். அனுமனின் கண்களில் குற்றாலம் குமுறியது. உடம்பு வெடவெடவென நடுங்கியது. "அன்னையின் மீது ஐயன் ஐயம் கொண்டாரே! அன்னையைப் பார்க்கையில் பரிதவிப்பு தோன்றுகிறது. ஆனால் அண்ணலிடம் நான் என்ன சொல்ல இயலும். யார் பக்கம் இருப்பேன்". மருண்டு போனான் அனுமன். இராமன் கூறியது அனைவரின் காதுகளிலும் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆயினும் எங்குமில்லாத அமைதி.
இதுவரை ஒடுங்கியிருந்த சீதையின் பெண்மை விழித்தெழுந்தது. "ஸ்வாமி! இதுவரை உங்களை ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டறியாத நான், உங்களைக் கைப்பிடித்தவள் கேட்கிறேன். எதற்காக இந்த நெருப்புக் குளியல்?"
"தேவி! உன்னுடைய புனிதத்தன்மையை ஊராருக்கும் உலகோருக்கும் உணர்த்தும் சோதனைக் களமிது. தனலாடி வா"
"என் மீது ஐயமா? அதை உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்றல்லவா பழிப்பார்கள். அது உங்களைத் தீண்டியதா? இரகு குலத்தில் இதென்ன புது வழக்கம். நம் இல்லறத்துக்கே இது இழுக்கல்லவா. நீங்களே இப்படிச் சொன்னால், ஊரும் உலகமும் உங்களைப் பின்பற்றாதா?"
இராமனின் இதழ்களில் என்றுமில்லாத அமைதி குடிபுகுந்தது. இலக்குவனும் அனுமனும் கண்களில் காவிரி பெருக்கினர். அமைதியை உடைக்க வானர மன்னன் சுக்ரீவன் வாய்திறந்தான். "அம்மா! ஐயனுக்கு உங்கள் மீது சந்தேகம் இருக்குமென்று நாங்கள் கருதவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. நாளை நாட்டுக்கு அரசியாகப் போகும் நீங்கள் குற்றமற்றவராக இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அதை நீங்கள் உறுதிபடுத்துவது முறையல்லவா? தங்களை குற்றமற்றவர் என்று அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா"
"நன்று! கிஷ்கிந்தை மன்னர் சுக்ரீவரே நன்று! அப்படியானால் அரசுக் கட்டிலில் அமர்வதென்று அவர் முடிவெடுத்துவிட்டாரா? என்னைக் குற்றமற்றவள் என்று ஊருக்குச் சொல்லி பதவியைப் பிடிக்கப் போகிறாரா? என்னை நெருப்பில் ஏற்றி அவர் அரியணை ஏறப்போகிறாரா? நான் நெருப்பில் இறங்கினால் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று உறுதியிட்டுக் கூறயியலுமா? அதற்குப்பின்னும் யாரேனும் கேள்வி எழுப்பினால் என்ன செய்வார்? என்னைத் துறப்பாரா? பதவியைத் துறப்பாரா?" இராமனின் வில்லம்புகளை விடவும் வேகமாக சீதையின் சொல்லம்புகள் பாய்ந்தன.
"அம்மா! இந்த மண்ணுக்கு அவரைப்போல மன்னர் கிடைக்க வேண்டுமல்லவா? மக்கள் அவரை இழக்கலாமா?". சொற்களை உடைந்த கற்களைப் போல் அடுக்கினான் வீடணன்.
"இலங்கை வேந்தே! நல்ல மன்னரைப் பற்றி நீங்கள் வாய்திறந்து விட்டீர்கள். உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் உங்கள் அண்ணனை விட்டு நீங்கியது எதனால்? அவர் இந்த நாட்டு மக்களுக்கு அடாது செய்தாரா? அவருடைய ஆட்சியில் இலங்கை மக்கள் துன்பப்பட்டார்களா? இங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லாது போய்விட்டதா? சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விக்குத் தடையிட்டாரா? சொல்லுங்கள். மாற்றான் மனைவியாகிய என்னைத் தீண்ட நினைத்த குற்றத்தினால்தானே அவரை விட்டுவிலகினீர்கள். அதற்குன்டான தண்டனையை அவர் அடைந்துவிட்டார். அது முறைதான். இலங்கைக் குடிமகன் என்ற நிலையிலிருந்து நீங்கள் சொல்லுங்கள். உங்கள் தமையர் சிறந்த மன்னரா? இல்லையா?"
தலைகுனிந்தான் வீடணன். பெண்குலத்தின் பிரதிநிதியாக வைதேகி தொடர்ந்தாள். "என்னுடைய மாமன் நல்ல அரசர் இல்லையா? என் மகனை ஒத்த பரதன் சிறந்த மன்னன் இல்லையா? அவனுடைய ஆட்சியில் அயோத்தி மக்கள் நலமாகத்தானே வாழ்கிறார்கள். என்னவர் மன்னவரானாலும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிவார். பிறகு ஏன் இத்தனை பேச்சு என்று நினைக்கின்றீர்களா? அயோத்தி இவருக்கு முன்னும் இருந்தது. இவருக்குப் பின்னும் இருக்கும். அயோத்திக்கு வேறோர் அரசர் கிடைப்பார்கள். ஆனால் எனக்கு...?". உணர்ச்சியின் வேகத்தில் விம்மல் பொருமலாக மாறுகிறது. "நெருப்பில் இறங்க வேண்டியது நான். இறங்கச் சொன்னது அவர். நான் கேள்வி கேட்டது அவரிடம். அவரைத்தவிர அனைவரும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறீர்கள். அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அவர் கட்டிய மனைவி என்ற முறையில் கேட்க விருப்பப்படுகிறேன்."
பவழ இதழ்கள் திறந்தன. "தேவி! உன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நீயேதான். ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவரே காரணம். யாகாவாராயினும் நாகாக்க வேண்டும். காவாக்கல் ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். எந்த நிலையிலும் மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் தகாது. அதிலும் எதிர்பாலாரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவி! உனக்கு நினைவிருக்கிறதா? அன்று மானைத்தேடி நான் சென்ற நாள். நாம் பிரிந்த நாள். அன்று நீ செய்த பிழைக்குத் தண்டனையாகத்தான் இந்த அக்கினிப் பிரவேஸம்."
"ஸ்வாமி. அன்று நான் செய்த தவறா! இலக்குவன் கிழித்த கோட்டைத் தாண்டியதைச் சொல்கிறீர்களா?".
"இல்லை தேவி. இலக்குவன் கோட்டைத் தாண்டியது விருந்தோம்பலுக்காக. அதில் தினையளவும் தவறில்லை. நல்ல இல்லத்தரசியாக உன் கடமையை நீ செய்ய நினைத்தாய். அது பாராட்டுக்குறியது. ஆனால் இது மாரீசன் உன் பெயரையும் இலக்குவன் பெயரையும் உரக்கச் சொல்லி அழைத்தவேளை நடந்தது. முதலில் இலக்குவனை போய் பார்த்துவரச் சொன்னாய். அவன் முதலில் மறுத்தான். அப்போது நீ உரைத்தது நினைவிருக்கிறதா?"
ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் அன்று பேசியது இன்று நினைவுக்கு வந்தது ஜானகிக்கு. "இலக்குவா! நீ என் பேச்சை மீறலாமா? உன் அண்ணனுக்கு ஒரு துன்பமென்றால் போய்க்காப்பாற்ற மறுக்கிறாயே! என்ன உடன்பிறப்பு நீ! அன்று ஒரு தம்பி நாட்டை கைப்பற்ற சூழ்ச்சி செய்தான். இன்று நீ என்னைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாயா?". அப்பொழுது சொன்னதற்கு இப்பொழுது வருந்தினாள் சீதை.
இலக்குவன் சோகத்தின் வேகம் தாங்கமாட்டாது இலங்கை நிலத்தில் வீழ்ந்து அழுகிறான். தன்னால் தன் அன்னைக்கு நேர்ந்த இக்கட்டின் குற்ற உணர்ச்சி அவனைத் துன்புறுத்தியது. செவ்விதழ்கள் மீண்டும் அசைந்தன. "இப்பொழுது புரிகிறதா தேவி. அன்று ஒரு குற்றமும் அறியாத இலக்குவன் மீது நீ சாற்றிய குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறாய். அவன் அதை அன்றே மறந்துவிட்டான். ஆனால் அவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு பரிகாரமே இது".
மெல்லத் தெளிந்தாள் சீதை. "நன்று! மிக நன்று! வீட்டுக்குள் நடந்த விவாதத்திற்கு வீதியில் விசாரணை. அரங்கத்துக்குள் நடக்க வேண்டியது அம்பலத்துக்கு வந்தது ஏன்? தெரியாமல் செய்த பிழைக்கு ஊரார் அறிய தண்டனையா? குற்றம் என்னுடையதுதான். அன்று நான் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது. இலக்குவா அன்று நீ பட்ட வேதனையை இன்று நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. தவறுக்கு உண்டான தண்டனையை நான் ஏற்கனவே அடைந்து விட்டேன். அப்படியிருக்க வழக்கு மீண்டும் அவைக்கு வரக்காரணம் என்ன? ஒருவேளை தனிமையில் இலக்குவன் முன் என்னை இதே தண்டனைக்கு உட்படச் சொன்னால் ஒத்துக்கொண்டிருப்பேன். அந்தக் குற்றத்திற்கு ஊரரிய தண்டனை ஏற்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி ஒருவேளை நான் ஏற்றுக்கொண்டாலும் உலகம் இதை நாளை எப்படி எடுத்துக்கொள்ளும்? எதையும் பேசும். சீதையின் மேல் ஐயம் கொண்டுதான் இப்படிப் பட்ட தண்டனை கொடுக்கப்பட்டது என்றும் பேசும். இதையே காரணம் காட்டி நாளைய பெண்களை நெருப்பில் தள்ளினாலும் தள்ளும் இந்த உலகம். அப்படி நேர ஒரு தவறான வழிகாட்டியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. கோசலை நந்தா! நெருப்பைத் தழுவி உம்மைச் சேரச் சொன்னீர்கள். அது நடக்காது. உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மோதிரத்துடன் அனுமன் என்னைச் சந்திக்க வந்தான். என்னை அவன் தோள்களில் தொற்றிக் கொள்ளச் சொன்னான். ஒரு மகனாய் என்னை உங்களிடத்து சேர்ப்பேன் என்றான். அவனிடம் மறுத்து நான் சொன்னேன். அனுமா! இங்கிருந்து செல்லவும் இராவணனைக் கொல்லவும் என் சொல்லால் முடியும். ஆனால் அன்னார் வில்லுக்கு அது இழுக்கு. என்னைக் கவர்வதன் மூலம் அவரைச் சீண்டிப் பார்க்கிறான் இலங்கை வேந்தன். ஆதலால் அவர் வந்து வில்லால் அழைத்தால் மட்டுமே நான் வருவேன்."
"இப்படியெல்லாம் உங்கள் வில்லுக்குக் கூட மதிப்புக் கொடுத்த என் பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கத் தவறிவிட்டீர்களே! ஒரு நல்ல கணவன் மனைவிக்கு அழகு நாலுபேர் அறியாவண்ணம் குடும்ப விவகாரத்தை சீர்செய்வது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்யத் தவறிவிட்டீர்கள். உறவுகளுக்குள் குழப்பம் வந்தால் பிரிவுதான் சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாது நான் நெருப்பில் இறங்கப்போவதுமில்லை. ஆகவே உங்களைப் பிரிவது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்."
"அதுமட்டுமல்ல. என்று சந்தேகம் என்று வந்துவிட்டதோ அன்றே உறவு சீர்கெட்டுவிடும். அதை செம்மை செய்யும் வழிமுறைகள் இதுவரை இல்லை. நெருப்பு என்னை வென்றால், களங்கம் எனக்குக் கற்பிக்கப்படும். நெருப்பை நான் வென்றால், நெருப்பின் மீதே களங்க முத்திரை குத்தப்படும். இருவருக்கு இடையில் உள்ள பிரச்சனையில் மூன்றாவதாக நுழைய மனிதர்கள் என்ன, உயிரற்ற எந்தப் பொருளுக்கும் உரிமையில்லை. அப்படியிருக்க, சேர்ந்தாரைக் கொல்லிக்கு நீதிபதி பதவியா? பெண்களுக்காக நாளைக்கு அவர்கள் இப்படிப்பட்ட நீதிமன்றத்தில் நிற்கக்கூடாதென்பதற்காக என் கணவரைப் பிரிகிறேன். இலக்குவா! அன்று உன் தூய மனதிற்கு துன்பம் தந்தறக்காக என்னவரை ஒரு முறை பிரிந்து வருந்தினேன். இன்று என் பெண்மைக்கு நேர்ந்த துயரத்தில், வருத்தமின்றி என் கணவரைப் பிரிகிறேன். வருகிறேன்."
"நான் தனியாக இருந்தால் என்மீது தூற்றல்கள் இடையறாது விழும். கணவனைப் பிரிந்த பெண்களுக்குத் தாய் வீடுதானே முதல் அடைக்கலம். நாளைய மகளிர் குலம் தனியாக வாழும் திறம் பெறட்டும். தன்னுடைய கால்களில் தாமாகவே நிற்கும் திறம் பெறட்டும். பெண்ணாலும் தனித்து வாழ இயலும் என்ற நிலை உண்டாகட்டும். அதற்கு முதல்படியாக என்னுடைய முடிவு இருக்கட்டும். அம்மா! என்னைப் பெற்றவளே மண்மகளே! உன் மகள் அழுகிறாளம்மா! உன்னை அழைக்கிறாளம்மா! என்னை உன்னோடு சேர்த்துக்கொள்! அதன் மூலம் என் தூய்மை எல்லோர்க்கும் விளங்கட்டும். நாளை எந்தப் பெண் மீதும் பழிபோட நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். உன்னிடத்தில் பிறந்தாலும் உன்னோடு வாழ எனக்கு இதுவரை கொடுத்து வைக்கவில்லை. இனியாவது ஒரு மகளாக என் கடமையைச் செய்ய எனக்கு வழிகாட்டம்மா!" கதறினாள் சீதை.
விண்ணீர் விழுந்தாலே நெகிழ்பவள், தன் மகளின் கண்ணீரைப் பொறுப்பாளா? வெடித்துக்கொண்டு வந்தாள். மகளை வாரி அணைத்தாள். பழித்தோர் நடுவே இன்னும் தன் மகளை இருக்கவிடாமல் விரைந்து மறைந்தாள். மறைந்த இடத்தில் மேடிட்டிருந்தது. அங்கே மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை கொளுத்தப்பட்டிருந்தது.
"தாயே! அண்ணல் காத்துக்கொண்டிருக்கிறார். பல்லக்கும் ஆயத்தமாக இருக்கிறது. புறப்படலாமா அம்மா?". பணிவோடு கேட்டுவிட்டு மறுமொழிக்காக அன்னையின் திருமுகத்தையே ஆவலுடன் நோக்கிக்கொண்டிருந்தான் அனுமன். இதுநாள்வரை மேகம் மறைத்த நிலவைப் போல ஒளி இழந்திருந்த சீதையின் திருமுகத்தில் புன்னகை பெருகி பொலிவைக் கூட்டியது. அனுமனுக்கோ கால்கள் தரையில் நிற்கவில்லை. அன்னையையும் அண்ணலையும் ஒருசேரக் காணும் பேறல்லவா கிடைக்கப் போகிறது. கூடுதலாக அன்னையின் புன்னகை அவன் உள்ளத்தை குதியாட்டம் போடவைத்தது.
"அனுமா! நல்ல செய்தி கொண்டு வந்தாய். என்னிடத்தில் இப்பொழுது தருவதற்கு அன்பைத்தவிர ஒன்றுமில்லை. அது உனக்கு என்றும் குறைவில்லாமல் உண்டு. நீடு வாழி! மகனே! என்று அண்ணல் காடேகினாறோ அன்றே பல்லக்கு ஏறுவதை புறக்கணித்துவிட்டேன். வனவாச வாக்கை முறிக்கும் கோடாலியல்லவா அது. நான் நடந்தே வருகிறேன். நீ என்னுடன் வந்து வழிகாட்டு. காத்துக் காத்துப் பூத்த என் கண்கள் அவரின் கோலக்காட்சியைக் காண ஆவலாக உள்ளன. நிறையப் பேசினால் அழுதுவிடுவேன் போல் இருக்கிறது. நேரத்தைக் கடத்தவேண்டாம். செல்வோம் வா" என அனுமனை அழைத்துக் கொண்டு நடந்தாள் ஜானகி. கால்களில் துள்ளல். கண்களில் கண்ணீர். உள்ளத்தில் உவப்பு. விரைந்து நடக்கவோ நாணம். மெதுவாகச் செல்ல மனம் விடவில்லை. தவிப்போடு நடந்தாள் வைதேகி.
கரிய திருமேனி கரும்பாறையில் அமர்ந்திருந்தது. வீடணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவன் முதலானோர் முன்னின்றனர். ஏனைய வானரக் கூட்டம் பின்னின்றது. இலக்குவன் அருகில் நின்றான். அவனுக்கோ அண்ணியெனும் அன்னையைக் காணும் ஆவல். அண்ணன் முகத்தில் அந்த ஆவலைக் காணத் திரும்பியன் குழப்பத்தில் ஆழ்ந்தான். கருப்பு நிறமென்றாலும் களையான இராமனின் வதனம் மேலும் கருத்து புயலுக்கு முந்திய முகிலைப் போல அமுக்கமாகவும் அச்சப்படுத்தும் விதமாகவும் இருந்தது. ஒன்றும் புரியாமல் தவித்தான் இலக்குவன். கூடிவரும் வேளையில் குழப்பம் நேர்ந்து விடக்கூடாதே என்று அவன் நெஞ்சம் வேண்டிக்கொண்டு இருந்தது.
கூட்டத்தில் எழுந்த சிறிய சலசலப்பு சீதையின் வரவுக்குக் கட்டியங் கூறியது. இராமனுக்கு எதிராக எதையுமே நினைத்திராத அவள் இன்று அவன் எதிரே தலைகுனிந்து அமைதியாக நின்றாள். விம்மலை வெளிக்காட்டாமல் உள்ளமும் உடலும் ஒடுங்கியிருந்தாள். அன்னையைக் கண்டு அன்போடு வணங்கி நின்றான் இலக்குவன். "இலக்குவா!" என்ற அண்ணனின் குரல் அபஸ்வரமாக அவன் செவிகளில் விழுவும் திரும்பிப் பணிந்து நின்றான். சிறிய தூறலாகத் தொடங்கும் பெருமழைபோல இராமன் திருவாயினின்று சொற்கள் வந்து விழலாயின. "இலக்குவா! நெருப்பு மூட்டு". முதலில் திடுக்கிட்டாலும் ஒருவழியாகச் சமாளித்துக் கொண்டு விறகு சேகரித்தான் இலக்குவன். எல்லாம் ஈரவிறகுகளாகக் கிடைத்தன. அனைத்தையும் கூட்டி நெருப்பு மூட்டினான். புகையே இல்லாமல் ஈர விறகுகள் எரியத்தொடங்கின. புகையப்போவதெல்லாம் வேறிடத்தில் என்று அந்த ஈர விறகுகள் அறியுமோ என்னவோ!
"சீதா இந்த நெருப்பில் மூழ்கி என்னிடம் வா" உணர்ச்சியற்று ஒலித்தது அண்ணலின் குரல். அரண்டான் இலக்குவன். விதிர்த்தான் வீடணன். அதிர்ந்தான் அனுமன். கலங்கியது கூட்டம். அனுமனின் கண்களில் குற்றாலம் குமுறியது. உடம்பு வெடவெடவென நடுங்கியது. "அன்னையின் மீது ஐயன் ஐயம் கொண்டாரே! அன்னையைப் பார்க்கையில் பரிதவிப்பு தோன்றுகிறது. ஆனால் அண்ணலிடம் நான் என்ன சொல்ல இயலும். யார் பக்கம் இருப்பேன்". மருண்டு போனான் அனுமன். இராமன் கூறியது அனைவரின் காதுகளிலும் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆயினும் எங்குமில்லாத அமைதி.
இதுவரை ஒடுங்கியிருந்த சீதையின் பெண்மை விழித்தெழுந்தது. "ஸ்வாமி! இதுவரை உங்களை ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டறியாத நான், உங்களைக் கைப்பிடித்தவள் கேட்கிறேன். எதற்காக இந்த நெருப்புக் குளியல்?"
"தேவி! உன்னுடைய புனிதத்தன்மையை ஊராருக்கும் உலகோருக்கும் உணர்த்தும் சோதனைக் களமிது. தனலாடி வா"
"என் மீது ஐயமா? அதை உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்றல்லவா பழிப்பார்கள். அது உங்களைத் தீண்டியதா? இரகு குலத்தில் இதென்ன புது வழக்கம். நம் இல்லறத்துக்கே இது இழுக்கல்லவா. நீங்களே இப்படிச் சொன்னால், ஊரும் உலகமும் உங்களைப் பின்பற்றாதா?"
இராமனின் இதழ்களில் என்றுமில்லாத அமைதி குடிபுகுந்தது. இலக்குவனும் அனுமனும் கண்களில் காவிரி பெருக்கினர். அமைதியை உடைக்க வானர மன்னன் சுக்ரீவன் வாய்திறந்தான். "அம்மா! ஐயனுக்கு உங்கள் மீது சந்தேகம் இருக்குமென்று நாங்கள் கருதவில்லை. அப்படி இருக்க வாய்ப்பே இல்லை. நாளை நாட்டுக்கு அரசியாகப் போகும் நீங்கள் குற்றமற்றவராக இருக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள். அதை நீங்கள் உறுதிபடுத்துவது முறையல்லவா? தங்களை குற்றமற்றவர் என்று அவர்களுக்கு விளங்கவைக்க வேண்டியது உங்கள் கடமை அல்லவா"
"நன்று! கிஷ்கிந்தை மன்னர் சுக்ரீவரே நன்று! அப்படியானால் அரசுக் கட்டிலில் அமர்வதென்று அவர் முடிவெடுத்துவிட்டாரா? என்னைக் குற்றமற்றவள் என்று ஊருக்குச் சொல்லி பதவியைப் பிடிக்கப் போகிறாரா? என்னை நெருப்பில் ஏற்றி அவர் அரியணை ஏறப்போகிறாரா? நான் நெருப்பில் இறங்கினால் எல்லோரும் நம்பிவிடுவார்கள் என்று உறுதியிட்டுக் கூறயியலுமா? அதற்குப்பின்னும் யாரேனும் கேள்வி எழுப்பினால் என்ன செய்வார்? என்னைத் துறப்பாரா? பதவியைத் துறப்பாரா?" இராமனின் வில்லம்புகளை விடவும் வேகமாக சீதையின் சொல்லம்புகள் பாய்ந்தன.
"அம்மா! இந்த மண்ணுக்கு அவரைப்போல மன்னர் கிடைக்க வேண்டுமல்லவா? மக்கள் அவரை இழக்கலாமா?". சொற்களை உடைந்த கற்களைப் போல் அடுக்கினான் வீடணன்.
"இலங்கை வேந்தே! நல்ல மன்னரைப் பற்றி நீங்கள் வாய்திறந்து விட்டீர்கள். உங்களை ஒன்று கேட்கிறேன். நீங்கள் உங்கள் அண்ணனை விட்டு நீங்கியது எதனால்? அவர் இந்த நாட்டு மக்களுக்கு அடாது செய்தாரா? அவருடைய ஆட்சியில் இலங்கை மக்கள் துன்பப்பட்டார்களா? இங்கே பெண்களுக்கு பாதுகாப்பில்லாது போய்விட்டதா? சிறுவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்விக்குத் தடையிட்டாரா? சொல்லுங்கள். மாற்றான் மனைவியாகிய என்னைத் தீண்ட நினைத்த குற்றத்தினால்தானே அவரை விட்டுவிலகினீர்கள். அதற்குன்டான தண்டனையை அவர் அடைந்துவிட்டார். அது முறைதான். இலங்கைக் குடிமகன் என்ற நிலையிலிருந்து நீங்கள் சொல்லுங்கள். உங்கள் தமையர் சிறந்த மன்னரா? இல்லையா?"
தலைகுனிந்தான் வீடணன். பெண்குலத்தின் பிரதிநிதியாக வைதேகி தொடர்ந்தாள். "என்னுடைய மாமன் நல்ல அரசர் இல்லையா? என் மகனை ஒத்த பரதன் சிறந்த மன்னன் இல்லையா? அவனுடைய ஆட்சியில் அயோத்தி மக்கள் நலமாகத்தானே வாழ்கிறார்கள். என்னவர் மன்னவரானாலும் சிறப்பாகத்தான் ஆட்சி புரிவார். பிறகு ஏன் இத்தனை பேச்சு என்று நினைக்கின்றீர்களா? அயோத்தி இவருக்கு முன்னும் இருந்தது. இவருக்குப் பின்னும் இருக்கும். அயோத்திக்கு வேறோர் அரசர் கிடைப்பார்கள். ஆனால் எனக்கு...?". உணர்ச்சியின் வேகத்தில் விம்மல் பொருமலாக மாறுகிறது. "நெருப்பில் இறங்க வேண்டியது நான். இறங்கச் சொன்னது அவர். நான் கேள்வி கேட்டது அவரிடம். அவரைத்தவிர அனைவரும் ஒவ்வொரு விளக்கம் கொடுக்கிறீர்கள். அவர் என்ன கூறப்போகிறார் என்பதை அவர் கட்டிய மனைவி என்ற முறையில் கேட்க விருப்பப்படுகிறேன்."
பவழ இதழ்கள் திறந்தன. "தேவி! உன்னுடைய இந்த நிலைக்குக் காரணம் நீயேதான். ஒருவருடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவரே காரணம். யாகாவாராயினும் நாகாக்க வேண்டும். காவாக்கல் ஊரார் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக நேரிடும். எந்த நிலையிலும் மற்றவர் மனம் புண்படும்படி பேசுதல் தகாது. அதிலும் எதிர்பாலாரிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவி! உனக்கு நினைவிருக்கிறதா? அன்று மானைத்தேடி நான் சென்ற நாள். நாம் பிரிந்த நாள். அன்று நீ செய்த பிழைக்குத் தண்டனையாகத்தான் இந்த அக்கினிப் பிரவேஸம்."
"ஸ்வாமி. அன்று நான் செய்த தவறா! இலக்குவன் கிழித்த கோட்டைத் தாண்டியதைச் சொல்கிறீர்களா?".
"இல்லை தேவி. இலக்குவன் கோட்டைத் தாண்டியது விருந்தோம்பலுக்காக. அதில் தினையளவும் தவறில்லை. நல்ல இல்லத்தரசியாக உன் கடமையை நீ செய்ய நினைத்தாய். அது பாராட்டுக்குறியது. ஆனால் இது மாரீசன் உன் பெயரையும் இலக்குவன் பெயரையும் உரக்கச் சொல்லி அழைத்தவேளை நடந்தது. முதலில் இலக்குவனை போய் பார்த்துவரச் சொன்னாய். அவன் முதலில் மறுத்தான். அப்போது நீ உரைத்தது நினைவிருக்கிறதா?"
ஆத்திரத்திலும் ஆவேசத்திலும் அன்று பேசியது இன்று நினைவுக்கு வந்தது ஜானகிக்கு. "இலக்குவா! நீ என் பேச்சை மீறலாமா? உன் அண்ணனுக்கு ஒரு துன்பமென்றால் போய்க்காப்பாற்ற மறுக்கிறாயே! என்ன உடன்பிறப்பு நீ! அன்று ஒரு தம்பி நாட்டை கைப்பற்ற சூழ்ச்சி செய்தான். இன்று நீ என்னைக் கைப்பற்ற முயற்சி செய்கிறாயா?". அப்பொழுது சொன்னதற்கு இப்பொழுது வருந்தினாள் சீதை.
இலக்குவன் சோகத்தின் வேகம் தாங்கமாட்டாது இலங்கை நிலத்தில் வீழ்ந்து அழுகிறான். தன்னால் தன் அன்னைக்கு நேர்ந்த இக்கட்டின் குற்ற உணர்ச்சி அவனைத் துன்புறுத்தியது. செவ்விதழ்கள் மீண்டும் அசைந்தன. "இப்பொழுது புரிகிறதா தேவி. அன்று ஒரு குற்றமும் அறியாத இலக்குவன் மீது நீ சாற்றிய குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறாய். அவன் அதை அன்றே மறந்துவிட்டான். ஆனால் அவனுக்கு நேர்ந்த கொடுமைக்கு பரிகாரமே இது".
மெல்லத் தெளிந்தாள் சீதை. "நன்று! மிக நன்று! வீட்டுக்குள் நடந்த விவாதத்திற்கு வீதியில் விசாரணை. அரங்கத்துக்குள் நடக்க வேண்டியது அம்பலத்துக்கு வந்தது ஏன்? தெரியாமல் செய்த பிழைக்கு ஊரார் அறிய தண்டனையா? குற்றம் என்னுடையதுதான். அன்று நான் அப்பிடிப் பேசியிருக்கக் கூடாது. இலக்குவா அன்று நீ பட்ட வேதனையை இன்று நான் புரிந்துகொண்டேன். என்னை மன்னித்துவிடு. தவறுக்கு உண்டான தண்டனையை நான் ஏற்கனவே அடைந்து விட்டேன். அப்படியிருக்க வழக்கு மீண்டும் அவைக்கு வரக்காரணம் என்ன? ஒருவேளை தனிமையில் இலக்குவன் முன் என்னை இதே தண்டனைக்கு உட்படச் சொன்னால் ஒத்துக்கொண்டிருப்பேன். அந்தக் குற்றத்திற்கு ஊரரிய தண்டனை ஏற்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படி ஒருவேளை நான் ஏற்றுக்கொண்டாலும் உலகம் இதை நாளை எப்படி எடுத்துக்கொள்ளும்? எதையும் பேசும். சீதையின் மேல் ஐயம் கொண்டுதான் இப்படிப் பட்ட தண்டனை கொடுக்கப்பட்டது என்றும் பேசும். இதையே காரணம் காட்டி நாளைய பெண்களை நெருப்பில் தள்ளினாலும் தள்ளும் இந்த உலகம். அப்படி நேர ஒரு தவறான வழிகாட்டியாக இருக்க எனக்கு விருப்பமில்லை. கோசலை நந்தா! நெருப்பைத் தழுவி உம்மைச் சேரச் சொன்னீர்கள். அது நடக்காது. உங்களுக்குத் தெரியுமா? உங்கள் மோதிரத்துடன் அனுமன் என்னைச் சந்திக்க வந்தான். என்னை அவன் தோள்களில் தொற்றிக் கொள்ளச் சொன்னான். ஒரு மகனாய் என்னை உங்களிடத்து சேர்ப்பேன் என்றான். அவனிடம் மறுத்து நான் சொன்னேன். அனுமா! இங்கிருந்து செல்லவும் இராவணனைக் கொல்லவும் என் சொல்லால் முடியும். ஆனால் அன்னார் வில்லுக்கு அது இழுக்கு. என்னைக் கவர்வதன் மூலம் அவரைச் சீண்டிப் பார்க்கிறான் இலங்கை வேந்தன். ஆதலால் அவர் வந்து வில்லால் அழைத்தால் மட்டுமே நான் வருவேன்."
"இப்படியெல்லாம் உங்கள் வில்லுக்குக் கூட மதிப்புக் கொடுத்த என் பெண்மைக்கு மதிப்புக் கொடுக்கத் தவறிவிட்டீர்களே! ஒரு நல்ல கணவன் மனைவிக்கு அழகு நாலுபேர் அறியாவண்ணம் குடும்ப விவகாரத்தை சீர்செய்வது. ஆனால் நீங்கள் அப்படிச் செய்யத் தவறிவிட்டீர்கள். உறவுகளுக்குள் குழப்பம் வந்தால் பிரிவுதான் சிறந்த மருந்து. அதுமட்டுமல்லாது நான் நெருப்பில் இறங்கப்போவதுமில்லை. ஆகவே உங்களைப் பிரிவது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்."
"அதுமட்டுமல்ல. என்று சந்தேகம் என்று வந்துவிட்டதோ அன்றே உறவு சீர்கெட்டுவிடும். அதை செம்மை செய்யும் வழிமுறைகள் இதுவரை இல்லை. நெருப்பு என்னை வென்றால், களங்கம் எனக்குக் கற்பிக்கப்படும். நெருப்பை நான் வென்றால், நெருப்பின் மீதே களங்க முத்திரை குத்தப்படும். இருவருக்கு இடையில் உள்ள பிரச்சனையில் மூன்றாவதாக நுழைய மனிதர்கள் என்ன, உயிரற்ற எந்தப் பொருளுக்கும் உரிமையில்லை. அப்படியிருக்க, சேர்ந்தாரைக் கொல்லிக்கு நீதிபதி பதவியா? பெண்களுக்காக நாளைக்கு அவர்கள் இப்படிப்பட்ட நீதிமன்றத்தில் நிற்கக்கூடாதென்பதற்காக என் கணவரைப் பிரிகிறேன். இலக்குவா! அன்று உன் தூய மனதிற்கு துன்பம் தந்தறக்காக என்னவரை ஒரு முறை பிரிந்து வருந்தினேன். இன்று என் பெண்மைக்கு நேர்ந்த துயரத்தில், வருத்தமின்றி என் கணவரைப் பிரிகிறேன். வருகிறேன்."
"நான் தனியாக இருந்தால் என்மீது தூற்றல்கள் இடையறாது விழும். கணவனைப் பிரிந்த பெண்களுக்குத் தாய் வீடுதானே முதல் அடைக்கலம். நாளைய மகளிர் குலம் தனியாக வாழும் திறம் பெறட்டும். தன்னுடைய கால்களில் தாமாகவே நிற்கும் திறம் பெறட்டும். பெண்ணாலும் தனித்து வாழ இயலும் என்ற நிலை உண்டாகட்டும். அதற்கு முதல்படியாக என்னுடைய முடிவு இருக்கட்டும். அம்மா! என்னைப் பெற்றவளே மண்மகளே! உன் மகள் அழுகிறாளம்மா! உன்னை அழைக்கிறாளம்மா! என்னை உன்னோடு சேர்த்துக்கொள்! அதன் மூலம் என் தூய்மை எல்லோர்க்கும் விளங்கட்டும். நாளை எந்தப் பெண் மீதும் பழிபோட நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும். உன்னிடத்தில் பிறந்தாலும் உன்னோடு வாழ எனக்கு இதுவரை கொடுத்து வைக்கவில்லை. இனியாவது ஒரு மகளாக என் கடமையைச் செய்ய எனக்கு வழிகாட்டம்மா!" கதறினாள் சீதை.
விண்ணீர் விழுந்தாலே நெகிழ்பவள், தன் மகளின் கண்ணீரைப் பொறுப்பாளா? வெடித்துக்கொண்டு வந்தாள். மகளை வாரி அணைத்தாள். பழித்தோர் நடுவே இன்னும் தன் மகளை இருக்கவிடாமல் விரைந்து மறைந்தாள். மறைந்த இடத்தில் மேடிட்டிருந்தது. அங்கே மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை கொளுத்தப்பட்டிருந்தது.
Tuesday, June 07, 2005
பெண்ணைப் பெற்றவன்
பெண்கள் வீட்டின் கண்கள். ஏன் தெரியுமா? கண்ணீருக்குக் காரணம் இந்த இரண்டும்தான். ஆனந்தக் கண்ணீரோ! அழுகைக் கண்ணீரோ! பெண்களைப் பெற்றாலே கொஞ்சமாவது கண்களைக் கசக்க வேண்டும் என்பது உண்மை போல. நானும் பெண்ணைப் பெற்றவன்தான். ஆகையால்தான் அடித்துச் சொல்கிறேன்.
இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.
சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.
என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.
அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.
சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?
பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.
"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"
பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.
"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"
இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.
"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"
கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.
"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.
"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"
அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.
கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.
வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.
ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."
உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!
அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.
ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!
என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.
"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.
சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.
"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன? ........ பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய நீ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?
எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?
உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"
கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான். பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு!
சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு!
தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு!
கோதை நாச்சியாரோடு!
மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.
இல்லையென்று சாதிக்க வராதீர்கள். விளக்கமாகச் சொல்கிறேன். உங்களுக்கும் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தையைப் பேணி வளர்ப்பதும், கல்வி கற்பிப்பதும், ஆடலும் பாடலும் சொல்லிக் கொடுப்பதும், சீராட்டிக் கொண்டாடுவதும் எத்தனை சந்தோஷங்கள். மறுக்கவில்லை. ஆனால் அத்தனை சந்தோஷங்களையும் நீங்கிக் கொண்டு, நம்முடைய அன்பையெல்லாம் வாங்கிக் கொண்டு, மற்றொருவன் தோளைத் தாங்கிக் கொண்டு போகிறாளே! அப்பப்பா! எப்பேற்பட்ட கல்மனங் கொண்ட ஆண்பிள்ளைகளையும் அழுக வைத்துவிடும்.
சரி. ஒருவன் கையில் பிடித்துக் குடுத்து விட்டோமென்று நிம்மதியாக இருக்க முடிகிறதா? நம்மை விட்டுப் போனதுதான் போனாள்! இன்னொருத்தனுக்கு மனைவி ஆனதுதான் ஆனாள்! புக்ககத்தில் எல்லோருக்கும் மனம் கோணவும் கோணாள்! இருந்தாலும் நம்மை மட்டும் அடிக்கடி காணவும் காணாள்! சரி! அவள்தான் புக்காத்துப் பெண்ணாகி விட்டாள். நம்மையும் மறந்து விட்டாள். நம்முடைய உள்ளமாவது சும்மா உட்கார்ந்திருக்கிறதா? எப்பொழுதும் அவள் நினைவு. எப்படி இருக்கிறாளோ! எப்படிச் சாப்பிடுகிறாளோ! வேலைகளெல்லாம் செய்ய முடிகிறதோ! ஒழுங்காக பார்த்துக் கொள்கிறார்களோ! கவலைகள் எல்லாம் நமக்குத்தான்.
என் கதைக்கு வருவோம். அவள் கைக்குழந்தையாக இருக்கையில் எத்தனை இன்பங்கள் தெரியுமா! அதெல்லாம் சொன்னால்தான் புரியுமா! என் மகள்! செல்ல மகள்! ஆனால் பாருங்கள், எனக்குப் பிறக்கவில்லை. கீழே கிடந்தாள். புழுதியில் பூப்பந்தாகப் புரண்டிருந்தாள். நான் எடுத்து வளர்த்தேன். பாசத்தையெல்லாம் கொடுத்து வளர்த்தேன். அன்பிலும் ஆசையிலும் என் மகளென்றே அவளை வளர்த்தேன். யாரும் அதை மறுக்க முடியாது.
அவளுக்கு நீளக் கண்கள். தொட்டிலில் கிடக்கையில் கைகளில் எடுத்தால் மினுக்கென்று கண்களைச் சிமிட்டுவாள். கொள்ளை அழகு. அப்படியே பொக்கை வாயைக் காட்டி லேசாக குமிழ்ச் சிரிப்பு சிரிப்பாள்! அடடா! எனக்கு எல்லாம் மறந்து போகும். கையில் அப்படியே வைத்துக் கொண்டிருப்பேன். திருமகள் கையில் பூக்களை வைத்துக் கொண்டிருப்பது போல. எனக்கும் கைவலி தெரியாது. அந்தப் பஞ்சு உடலும் நோகாது. மெத்தை போலிருக்கும் பிஞ்சுக் கால்களை நீட்டி மிதிக்கையில் ஒருவிதமான மகிழ்ச்சியும் பெருமிதமும் முதுகுத் தண்டிலிருந்து புறப்படுமே! இதெல்லாம் ஒரு தகப்பனுக்கு மட்டுமே அகப்பட்டு சுகப்படும் ரகசியம்.
சிறப்பாக வளர்ந்தாள். எல்லாரின் கண்களையும் கவர்ந்தாள். விதவிதமாக உடுப்புகளில் வண்ண வண்ணப் பூக்களாக மலர்ந்தாள். எந்த உடுப்பும் அவளுக்கு எடுப்புதான். பச்சைப் பட்டுப் பாவாடை கேட்டாள். அதில் அலைமகளைப் போல ஜொலித்தாள். செக்கச் செவேலென்று சிற்றாடை. அலர்மேல் மங்கையே அவள்தானோ! என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
பாவி நான். நான் பெறவில்லையே. கொட்டடியில் இருந்தாலும் பசுவிற்கு கொட்டடி உறவாகுமா? ஆனாலும் அந்த அழகு தெய்வம் என்னை அப்பா என்று அன்போடு அழைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்! நான் பெற்ற பேறு அந்தப் பிள்ளைக் கனியமுதைப் பெற்றவர்களுக்குக் கிடைக்காமல் போனதே! எல்லாம் ஆண்டவன் செயல். தாயிடத்தில் கருவாக்கி, ஓரிடத்தில் உருவாக்கி, வேறிடத்தில் மெருவாக்க விட்டானே! அவன் செயலை யார் அறிவார்? உலகளந்தவன் எண்ணத்தை யார் அளப்பார்?
பக்தி அதிகம் அவளுக்கு. தெய்வப் பாசுரங்களைக் கோகிலங்கள் கூவுவது போலப் பாடுவாள். யாரையும் மயக்கும் அவள் கானம். விடியலிலேயே குளித்துவிட்டு பாடுவாள். மத்யமாவதியில் "சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்" என்று அவள் பாடினால்...............பரந்தாமனே பறந்து வந்து கேட்க வேண்டும். இல்லமெங்கும் அருள் துலங்கும். பாடலோடு ஆடலும் கற்றாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்" பாடி ஆடி அவளது பிஞ்சுப் பாதங்களால் மூன்று உலகங்களும் அளக்கும் பொழுது மூன்றாவது அடிக்கு என் தலை தகுமோ என்று வியப்பேன்.
"அம்மா! அன்று பரந்தாமன் அளந்த போது மூன்றாவது அடிக்குச் சிரசைக் காட்டினான் மாவலி. இன்றைக்கு மாவலி இல்லை. ஆனால் நான் இருக்கிறேன். உனது மலர்ப்பாதங்களை எனது தலையில் வையம்மா! இந்தத் தந்தையின் உச்சி கொஞ்சம் குளிரட்டும். எப்பொழுதும் உன் பெருமயை நினைத்து நினைத்தே தலை சூடேறியிருக்கிறதம்மா!"
பெண்களுக்குப் பருவம் வந்தால் பெற்றவனுக்கு பயம் வரும். காக்கவும் ஒருவன் கையில் சேர்க்கவும் எண்ணம் வரும். நான் அவளிடமே கேட்டேன்.
"அம்மா குழந்தை, அப்பா உனக்கு கலியாணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறேன். உன் கருத்து என்னம்மா? உனக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை பார்க்கட்டும்! சொன்னால் அப்பா சொன்னபடி செய்கிறேனம்மா!"
இப்படித்தான் கேட்டேன். அதற்கு அவள் என்ன சொன்னாள் தெரியுமா? காதல் வந்ததாம். கனவு வந்ததாம். வந்தவன் கையையும் பிடித்தானாம். அதுவும் மாட்டுக்கார மன்னாருடன். எனக்கு தலையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
அவனுடன் சிறுவயதுப் பழக்கம் அவளுக்கு. வயது வந்தால் எல்லாம் சரியாகப் போகுமென்று விட்டுவிட்டது தப்பாயிற்று. எடுத்துச் சொன்னேன்.
"குழந்தை, நாம் யார்? உன் தந்தை யார்? அவனொரு தமிழ்ப் பண்டிதன். கோயிலில் பாரளந்த பரந்தாமனுக்குக் பணிவிடை புரியும் தொண்டன். என் மகள், உனக்கு இப்படி ஒரு ஆசை வரலாமா? நீ யார்? உனது வளர்ப்பு என்ன? நீ கற்ற கலைகள் என்ன? ஆடலும் பாடலும் கூடும் நீ மாட்டிடையனை நாடல் எங்ஙனம்?"
கேட்டால் பதிலுக்குப் பதில் பேச்சு. நான் கற்றுத் தந்த தமிழை எனக்கு எதிராகத் திருப்புகிறாள்.
"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது" என்று பாடுகிறாள்.
"அம்மா! தமிழும் பாட்டால் அதற்கு இனிமை சேர்க்கும் கலையும் நான் தந்தது. பல்லாண்டுகளாக நான் பல்லாண்டு பாடியதைக் கேட்டுதான் நீ இப்பொழுது சொல்லாண்டு வருகிறாய். அப்படியிருக்க எனக்கே பாட்டுப் பாடிக் காட்டுகிறாயா! சைவத்தில் தந்தைக்கு மைந்தன் பாடம் சொன்ன கதையுண்டு. வைணவத்தில் தந்தைக்கு மகள் பாடம் சொல்லும் கதை உன்னால் வரப் போகிறதே!"
அவளுடைய காதலை நான் ஊரில் சொன்னால் என்ன ஆகும்? உற்றோர் சிரிப்பர். ஊரோர் சுழிப்பர். உலகோர் வெறுப்பர். ஒரே தடுமாற்றம். திரும்பத் திரும்ப எடுத்துச் சொன்னேன். ஆகாத அது. நடவாது அது. புலம்பினேன். மறந்து விடம்மா என்று கெஞ்சினேன். கையெடுத்துக் கும்பிட்டேன்.
கைகளால் கும்பிட்ட என்னிடம் வார்த்தைகளால் வம்பிட்டாள். எனக்கு விருப்பமில்லையென்றால் அந்த மாட்டுக்காரனை மணக்க மாட்டாளாம். ஆனால் வேறு யாரையும் மணக்கச் சொல்வதும் இந்த மண்ணை மறக்கச் சொல்வதும் ஒன்றாம். எனக்கு நெஞ்சே வெடித்து விட்டது.
வெங்கலப் பானை கீழே விழுந்தால் ஓசை வரும். மண்பானை விழுந்தால்? நொறுங்கிப் போனேன். இதற்குத்தானா பிள்ளையை வளர்ப்பது? முதலடியில் சுதாரிப்பதற்குள் அடுத்த அடி இடியாக நெஞ்சில் இறங்கியது. காலம் முழுதும் கன்னியாகவே வாழ்ந்து எனது கடைசி காலம் வரை என்னைப் பார்த்துக் கொண்டு இருந்து விடுவாளாம்.
ஒரு தகப்பன் மகளிடம் கேட்க வேண்டிய பேச்சா இது? என்ன பாடு பட்டிருப்பேன் அப்பொழுது! ஒரு முடிவுக்கு வந்தேன். "சரி. ஊரும் பழிக்கட்டும் உலகமும் ஒழிக்கட்டும், மகளும் விரும்பியவனை மணக்கட்டும்."
உள்ளூர் மன்னாரை திருவரங்கம் அழைத்துச் சென்று ரங்கமன்னாராக்கினேன். வேறென்ன செய்வது? வெளியூரில் போய் மாட்டுக்காரனைக் கூட்டுக்காரன் என்றால் தெரியவா போகிறது? பொய்தான். மகளுக்காக! பெண்ணைப் பெற்றவனய்யா நான்!
அங்கேயே திருமணமும் செய்து வைத்தேன். ஒரு நல்ல வேலையும் அவனுக்குச் செய்து வைத்தேன். ஆனாலும் பாருங்கள் பெரும் பொழுது அவனுக்குத் தூக்கம் தான். அவள் செய்து வைக்கும் புளியோதரையிலும் அக்காரவடிசலிலும் மேனி பளபளத்தான்.
ஊர் திரும்பவும் விருப்பமில்லை. பின்னே? மகளும் அரங்கத்திலேயே கணவனோடு ஒன்றி விட்டாள். எப்பொழுதும் தூங்கினாலும் தாங்குற வேளையில் தாங்குகிறானாம். இவளென்ன பூபாரமா? அவனுடைய நேரம் அவனிடத்தில் காரணமில்லாமல் செல்வமும் சேர்ந்தது. நான் மட்டும் திரும்பினால் நன்றாக இருக்குமா? அங்கே நாங்கள் மூவரும் காணமல் போனதுதான் எல்லாருக்கும் தெரிந்திருக்குமே! தனியாகச் சென்றால் தாளித்து விடுவார்களே!
என்ன செய்வது என்று யோசித்தேன். எனது அறிவை நல்ல வழிக்காக யாசித்தேன். ஆண்பிள்ளை பெறாதவனுக்குத் தனித்தட்டு. இல்லாவிட்டால் மகள் வீட்டுக் கதவைத் தட்டு.
"மாப்பிள்ளை வீட்டோடு சேர்ந்து இருப்பதா? அது சரியா?" எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வயது ஆகிவிட்டதல்லவா! முடிவெடுக்க முடியாமல் மூளை தடுமாறியது.
சரி. மானத்தை விட்டு விட்டு, எல்லா உணர்ச்சிகளையும் தொலைத்து விட்டு அவனுடைய பெரிய வீட்டிற்குப் போவதென்றே முடிவெடுத்தேன். வெறும் கை. அப்படியே போக முடியுமா? கையில் ஒன்றுமில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லும் விதமாக இரண்டு கைகளையும் கூப்பினேன். உள்ளே அவன் இருக்கவில்லை. எங்கு சுற்றினும் ரங்கனைத்தானே சேர வேண்டும். சுற்றினேன். காவிரிக்கரையில் காலை நீட்டிப் படுத்திருந்தான். அவனது நீட்டிய காலைப் பிடித்தேன். எனது தலையை அதில் இடித்தேன்.
"பரந்தாமா! மாதவா! கேசவா! எனது மகள் சொன்னதென்ன? ........ பட்டர் பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
அவளுக்கு, அந்த அழகிய கோதைக்கு இறங்கிய நீ இந்தப் பழகிய பட்டனுக்கு இறங்க மாட்டாயா?
எனது மகள் சூடிக் கொடுத்த மாலைகளை உனக்கு ஒவ்வொரு நாளும் அணிவித்தேனே! மாலையைக் கொடுத்த அவளை ஏற்றுக் கொண்ட நீ, அதற்கு மலர்களைக் கொய்த என்னை விட்டு விடலாமா? பரமபதம் காட்ட மாட்டாயா? முகுந்தா! வேங்கடவா! மாடு மேய்க்கும் சிந்தனை இன்னுமிருந்தால் இந்த விஷ்ணு சித்தனை நீ மறக்கலாமா? எனக்கு நல்ல வழியை மறுக்கலாமா?
உனக்கு நான் தமிழால் செய்த தொண்டுகளால்தானே என்னைப் பெரிய ஆழ்வார் என்று பொருள் கொள்ளும் படி பெரியாழ்வார் என்று எல்லோரும் அழைக்கிறார்கள். அந்த வாக்கு பொய்யாகும் படியான காடியத்தை நீ செய்யலாமா? அது உனக்குத்தானே குறையாகும்!"
கதறினேன். கண்களின் வழியாகக் கண்ணீரை அவன் காலடியில் உதறினேன். தூக்கம் கலைந்தது அவனுக்கு. மகளை ஆண்டவன் என்னையும் ஆட்கொண்டான். பிறகு நாளும் எனது பாக்களைக் கேட்டு மகிழ்ந்தான். அதுவும் என் செல்ல மகளோடு!
சூடிக் கொடுத்த சுடர்கொடியோடு!
தமிழோடு திருமாலையும் மணமாலை போட்டுக் கொண்ட ஆண்டாளோடு!
கோதை நாச்சியாரோடு!
மாப்பிள்ளை வீடு, பெண்ணைக் கொடுத்தது, கண்ணீர் விட்டு அழுதது எல்லாம் மறந்து போனது. எங்கும் பேரின்பம். அனைத்தும் சரணாகதி. எல்லாம் கண்ணன் செயல். பெண்ணைப் பெற்றவனுக்குப் பொன்னைப் பெற்றவனை விடவும் பெரிய இன்பம்.
Subscribe to:
Posts (Atom)