Monday, June 13, 2005

ஓம் புத்தகப் பிரியாயை நமஹ

ஓம் புத்தகப் பிரியாயை நமஹ

அதாகப் பட்டது...ஆதியிலே, வேலை வெட்டிகளைப் பாதியிலே நிறுத்தி விட்டு, கைகால் நொந்தவரெல்லாம் கூடித் தொடங்கினார்கள் எழுதுவதற்கு. தாங்களாக எழுதினால் போதுமா? படிப்பார் வேண்டாமா? எண்ணும் எழுத்தும் கண்ணென்றார்கள். கற்க கசடற என்றார்கள். சேதியிலே கேட்டதெல்லாம் சோதியிலே கலந்திட தாமும் படிக்கத் தொடங்கினார்கள். எழுதும் படிக்கும் வழக்கம் வந்தது.

அப்படி எழுதியும் படித்தும் வந்த மரபிலே இராகவன் தோன்றினான். அவன் உண்டு வீங்கியவன். புத்தகம் நிறைய வாங்கியவன். அதற்காக திட்டுகள் நிறையத் தாங்கியவன்.

அவனுடைய வீட்டுக்குள்ளே இருக்கும் புத்தகங்களைப் பட்டியல் போட நாமும் உள்ளே நுழைந்தேன். தமிழுக்கே அகராதி கேட்கும் இந்த அகராதி பிடித்தவன் ஆங்கிலத்தில் அடுக்கி வைத்திருந்தான் ஏடுகளை. ஆங்காங்கே தமிழும் கொஞ்சம். மிச்சமும் சொச்சமும் ஊரிலிருப்பதாக கதை கட்டினான். இருந்தாலும் விடாமல் இருக்கின்றவைகளை கணக்கெடுத்தோம். இதோ பட்டியல்.

அவனுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி பேட்டியும் எடுத்தோம். அதைப் பிறகு இடுகிறோம்.

நந்தவனம் - மீ.ப.சோமு
அர்த்தமுள்ள இந்துமதம் - அனைத்து பாகங்களும் - கவியரசர் கண்ணதாசன்
மனோண்மணீயம் - பேராசிரியர் சுந்தரம்பிள்ளை - விளக்கம் - சு.பாலசுப்பிரமணியன்
மதனகாமராஜன் கதைகள்
கந்தவேள் கருணை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் திருவிளையாடல் - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தர் அநுபூதி விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
கந்தரலங்காரம் விரிவுரை - தவத்திரு கிருபானந்த வாரியார்
சிவனருட் செல்வர் - தவத்திரு கிருபானந்த வாரியார்
வாசன் உயர்தரத் தமிழ்க் கையகராதி
இல்லத்தரசிகளுக்கு இனிய சமையல் (அசைவம்) - யசோதா சண்முகம்
A-1 முஸ்லிம் சமையல் - பாத்திமா ஷாஜஹான்
தமிழ்ப் புலவர் கவி காளமேகம் - பூவை அமுதன்
பேய்க்கரும்பு - பாலகுமாரன்
கி.ராஜநாராயணன் கதைகள் - தொகுப்பு
பெயர் போன புளுகுகள் - தேவன்
ராஜத்தின் மனோரதம் - தேவன்
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்கள் - பாகம் 1 முதல் 5.
கவிராஜன் கதை - வைரமுத்து
பாரதியார் கவிதைகள்
சிலப்பதிகாரம் - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
மணிமேகலை - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
சீவக சிந்தாமணி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குண்டலகேசி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
வளையாபதி - விரிவுரை - பேராசிரியர் ஜே.ஸ்ரீசந்திரன்
குப்பத்து சாஸ்திரிகள் - பி.வி.ஆர்
தமிழ் இலக்கிய வரலாறு - மு.வரதராசனார்
கடல் கொண்ட தென்னாடு - கவியரசர் கண்ணதாசன்
பி.சுசீலா - குயிலை மிஞ்சும் இனிய கீதங்கள்
பத்துப்பாட்டு (திருமுருகாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு) விரிவுரை - புலவர். அ.மாணிக்கனார்
வந்தார்கள் வென்றார்கள் - மதன்
அக்ரஹாரத்தில் கழுதை - அ.வெங்கட் சாமிநாதன்
விகடன் பழவவிழா மலர்
சிரிக்க வைக்கிறார் கிவாஜ
தனிப்பாடல் திரட்டு (முதல் தொகுதி) - விளக்கம் அ,மாணிக்கம்
சிலம்போ சிலம்பு - முனைவர் சுந்தர சண்முகனார்
சிலப்பதிகாரம் - விரிவுரை - புலியூர்க் கேசிகன்
திருப்புகழ் (தொகுப்பு) - அருணகிரிநாதர்

அன்புடன்,கோ.இராகவன்

0 comments: