இன்றைக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு தமிழ் நாட்டு இளம் பெண்களின் பேச்சு எப்படியிருக்கும் என்று ஒரு நகைச்சுவையான கற்பனை. கற்பனையில் உலகம் நிறையவே மாறிவிட்டது. அதனால் படிக்கிறவர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டாம். எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்.
ரமாவும் சுமாவும் கல்லூரி மாணவிகள். கல்லூரி நேரத்தில் ஒழுங்காக நூலகத்தில் உட்கார்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.
"ஏய் சுமா? மல்லிகை மொட்டு சிடி வாங்கினியா? நான் நேத்துதான் வாங்கினேன். ராத்திரி கண்ண மூடிப் படுத்துக்கிட்டு அதக் கேட்டுட்டும் மோந்து பாத்துகிட்டும் தூங்கினேன். ரொம்ப நல்லா இருந்தது."
"அடடா! நான் இனிமேதான் வாங்கனும். எத்தனை பாட்டு இருக்கு? எல்லாம் நல்லாயிருக்கா? ஆமா வாடையமைப்பாளர் யாரு?"
"இசை ஏ.ஆர்.ரகுமான் போட்டிருக்கார். பாட்டெல்லாம் நல்லாயிருக்கு. வாடையமைப்பாளர் சசி. ரொம்பப் புதுமையா இருக்குடி. மல்லிகைக் கொடின்னு ஒரு பாட்டு. அதுல ஒரு மாதிரி மல்லிகை மணம் வருது. அடடா! என்னமா இருக்கு தெரியுமா? அதே மாதிரி பீச்சுக்குப் போனேன் பாட்டுல பீச்சுல வருமே....அதே மாதிரி உப்புக்காத்து வாடைய ரொம்ப நேச்சுரலா போட்டிருக்காரு. அப்பப்ப பானீபூரி வாடையும் லேசான கருவாட்டு வாடையும் ரொம்ப நேச்சுரலா இருக்கு."
"ஐயோ! ரமா! நீ வேற ஏத்தி விடுறயே! சசி ஒவ்வொரு வாடையும் கம்யூட்டர்ல போடுறாராமே. நல்லா இருக்கா?"
"சூப்பராயிருக்கு சுமா. கதிரவன் மாதிரி வாடையமைப்பாளர்கள் இயற்கையாவே வாடைய ரெக்கார்ட் பண்ணுவாங்களாம். ஆனா சசிதான் கம்யூட்டர் வெச்சி வாடையமைக்கிறார். அதுவும் எல்லாருக்கும் பிடிச்சுதான் இருக்கு. என்ன இருந்தாலும் டிஜிட்டல் ரெக்கார்டிங் ஆச்சே!"
"தியேட்டர்ல போய் பாக்கனும் நீ. திருச்சி எக்ஸ்பிரஸ் படத்த தியேட்டர்ல பாக்கும் போது கும்முன்னு இருந்துச்சே. நல்ல டால்பி ஸ்மெல்லர்ஸ். ஒவ்வொரு வாசனையும் தெளிவா இருந்ததே. நீயுந்தான வந்த?"
"ஆமாமா. அந்த ரயில்வே ஸ்டேஷன் சீன்ல.....ஒரு நாத்தம் வருமே. தியேட்டர்ல இருக்கோமான்னு எனக்கே டவுட் வந்துருச்சி. ஆனா ஒன்னுப்பா....பழநி பஞ்சாமிர்தத்த கமல் நக்கும் போது எனக்கு வாயில எச்சி ஊறிடிச்சி."
"அதெல்லாம் கம்யூட்டர்ல போட்டதுதானே. நல்லாதான் இருந்தது. பழைய ஆளுங்கதாம்ப்பா இன்னமும் நேச்சுரலா ரெக்கார்ட் பண்ணனும்னு சொல்வாங்க. பழைய படமெல்லாம் அப்படிதான வந்தது."
"ஆமாம் சுமா. நம்ம சின்னக் குழந்தையா இருந்தப்போ வாசனைய ரெக்கார்டே பண்ண முடியாதாமே. வெறும் ஒலியும் ஒளியும்தானாம்."
அப்பொழுது ரமாவிற்கு ·போன் வருகிறது. ரமாவின் தாயார் வீட்டிலிருந்து கூப்பிடுகிறார். ரமா கொஞ்ச நேரம் பேசிவிட்டு ·போனை வைத்து விடுகிறாள். அந்த இடத்தில் கொஞ்ச நேரம் கம்மென்று பாயாச வாடை.
"ரமா...இன்னைக்கு வீட்டுல என்ன விசேஷம்? பாயாச வாடை பலமா இருக்கு."
"ஊருல இருந்து சித்தி சித்தப்பால்லாம் வந்துருக்காங்க. அதான். இந்த மொபைல் ·போனால இதுதான் பிரச்சனை. அன்னைக்கு நம்ம காலேஜ் போகாம ஹோட்டலுக்குப் போனோமே. கரெக்ட்டா அப்பதான் வீட்லருந்து போன். டேபிள்ள என்னடான்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னு ஆர்டர் பண்ணி வெச்சிருக்காங்க. அந்த வாடையெல்லாம் போகாம நான் ·போன பொத்தி வெச்சுக்கிட்டு பேச வேண்டியிருந்தது. நல்ல வேள என்கிட்ட கேமராவை ஆஃப் பண்ணி வெச்சிருந்தேன். இல்லைன்னா நான் இருக்குற எடம் தெரிஞ்சி போயிருக்கும்."
"ஆமா. நல்ல வேள. தப்பிச்சோம். இல்லைன்னா உங்க வீட்லருந்து எங்க வீட்டுக்கும் விஷயம் போயி ஒரே பிரச்சனையாப் போயிருக்கும்."
சுமாவுக்கு ஒரு சந்தேகம். "ஏய்! அன்னைக்கு உன்னோட பாய் பிரண்ட் ஏதோ பெர்பியூம் போட்டுட்டு வந்தான்னு மொபைல்ல ரெக்கார்டு பண்ணியே. அதக் கொஞ்சம் போடுடி. நல்ல ஸ்மெல்."
"சுமா! இதெல்லாம் வேண்டாம். அந்த வாடையத்தான் ஒரு வாட்டி போட்டேன்ல. அப்புறம் என்ன அடிக்கடி. ரொம்ப அலையாத!"
"சரிம்மா. விட்டுத்தள்ளு. என்னவோ மேன்லியா நல்லா இருந்ததேன்னு கேட்டேன். சரி. சரி. அந்த மல்லிகை மொட்டு சிடியை நாளைக்குக் கொண்டு வா. நான் கம்ப்யூட்டர்ல போட்டு காப்பி பண்ணிக்கிறேன்."
இருவரும் ஒருவருக்கொருவர் டாட்டா சொல்லி விட்டு வீட்டிற்குக் கிளம்புகிறார்கள்.
அவ்வளவுதான். கதை முடிந்தது. மக்களே! இந்தக் கற்பனையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இப்படியும் நடக்குமா?
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, November 21, 2005
பட்டியல் போடுவோமா?
பட்டியல் போடுவோமா?
நட்சத்திர வாரம் தொடங்கியாச்சு. மொத நாள் எல்லாரையும் போல அறிமுகம் போட்டாச்சு. வேறென்ன போடலாம்? ஒரு பட்டியல்? அதுவும் இந்த வாரம் என்னென்ன போடலாமுன்னு ஒரு பட்டியல் போட்டா எல்லாருக்கும் வசதியா இருக்குமில்லையா! ஹோட்டல்ல மெனு குடுக்குற மாதிரி. நமக்கு ஏதாவது பிடிச்ச மாதிரி இருந்தா அன்னைக்கு மட்டும் பிளாக் வந்து படிச்சிக்கலாம். இல்லையா!
சரி. பட்டியலைப் பாப்போமா!
திங்கள் - 21 நவம்பர் - என்னைத் தெரியுமா போட்டாச்சு. பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கோம். அதுனால இன்னைக்கு இதுக்கு மேல ஒங்கள தொந்தரவு செய்யல.
செவ்வாய் - 22 நவம்பர் - ஒரு நகைச்சுவைக் கதை. படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னு உங்களுக்கு ஆத்திரம் வரக்கூடாது. கொஞ்சம் கேணத்தனமா இருக்கும். ஒருவேளை ஒங்களுக்குப் பிடிச்சுப் போனா, புதுமையா இருந்ததுன்னு சொல்லீரலாம். சரியா?
புதன் - 23 நவம்பர் - ஒரு கதை. இதுவும் கற்பனைக் கதைதான். காலைல கதை. மாலைல கவிதை. இரண்டு கவிதைகள். இரண்டும் நான் ஏற்கனவே எழுதியவை. இருந்தாலும் அத இன்னைக்குப் போடனுமுன்னு ஒரு ஆசை. கவிதைக்குக் கீழ, அந்தக் கவிதையை எப்போ எதுக்கு எழுதினேன்னு ஒரு சின்ன குறிப்பு குடுத்திரலாம்.
வியாழன் - 24 நவம்பர் - ஒரு கதை. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டாமுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு இந்தக் கதை போதும்.
வெள்ளி - 25 நவம்பர் - பெங்களூரில் ஒரு நாள். பெங்களூருக்கு நான் வந்தப்ப நடந்த ஒரு அனுபவம். அப்புறம் மாலையில் தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டு ஒரு நாளுக்கும் வித்தியாசம் எக்கச்சக்கம்.
சனி - 26 நவம்பர் - கனவுகளே! ஆயிரம் கனவுகளே! எனக்கு வந்த கனவுகளைப் பத்தி ஒரு பதிவு. பகல்ல கனவு.
ஞாயிறு - 27 நவம்பர் - ஒரு திரைப்பட விமர்சனம். நான் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்பட விமர்சனம். இந்தப் பதிவைப் போடும் முன்னாடி எந்தப் படமுன்னு சரியா ஊகிச்சா பரிசு காத்திருக்கு. ஊகிங்க ஊகிங்க.
என்ன நண்பர்களே.....பட்டியலைப் பாத்தீங்களா? என்ன நினைக்கிறீங்க பட்டியலைப் பத்தி! எதையாவது மாத்தனுமா? பட்டியல் பற்றிய ஒங்க கருத்துகளை அள்ளி விடுங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
நட்சத்திர வாரம் தொடங்கியாச்சு. மொத நாள் எல்லாரையும் போல அறிமுகம் போட்டாச்சு. வேறென்ன போடலாம்? ஒரு பட்டியல்? அதுவும் இந்த வாரம் என்னென்ன போடலாமுன்னு ஒரு பட்டியல் போட்டா எல்லாருக்கும் வசதியா இருக்குமில்லையா! ஹோட்டல்ல மெனு குடுக்குற மாதிரி. நமக்கு ஏதாவது பிடிச்ச மாதிரி இருந்தா அன்னைக்கு மட்டும் பிளாக் வந்து படிச்சிக்கலாம். இல்லையா!
சரி. பட்டியலைப் பாப்போமா!
திங்கள் - 21 நவம்பர் - என்னைத் தெரியுமா போட்டாச்சு. பட்டியல் போட்டுக்கிட்டு இருக்கோம். அதுனால இன்னைக்கு இதுக்கு மேல ஒங்கள தொந்தரவு செய்யல.
செவ்வாய் - 22 நவம்பர் - ஒரு நகைச்சுவைக் கதை. படிச்சிட்டு சிரிப்பு வரலைன்னு உங்களுக்கு ஆத்திரம் வரக்கூடாது. கொஞ்சம் கேணத்தனமா இருக்கும். ஒருவேளை ஒங்களுக்குப் பிடிச்சுப் போனா, புதுமையா இருந்ததுன்னு சொல்லீரலாம். சரியா?
புதன் - 23 நவம்பர் - ஒரு கதை. இதுவும் கற்பனைக் கதைதான். காலைல கதை. மாலைல கவிதை. இரண்டு கவிதைகள். இரண்டும் நான் ஏற்கனவே எழுதியவை. இருந்தாலும் அத இன்னைக்குப் போடனுமுன்னு ஒரு ஆசை. கவிதைக்குக் கீழ, அந்தக் கவிதையை எப்போ எதுக்கு எழுதினேன்னு ஒரு சின்ன குறிப்பு குடுத்திரலாம்.
வியாழன் - 24 நவம்பர் - ஒரு கதை. அதுக்கு மேல ஒன்னும் சொல்ல வேண்டாமுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு இந்தக் கதை போதும்.
வெள்ளி - 25 நவம்பர் - பெங்களூரில் ஒரு நாள். பெங்களூருக்கு நான் வந்தப்ப நடந்த ஒரு அனுபவம். அப்புறம் மாலையில் தூத்துக்குடியில் ஒரு நாள். இரண்டு ஒரு நாளுக்கும் வித்தியாசம் எக்கச்சக்கம்.
சனி - 26 நவம்பர் - கனவுகளே! ஆயிரம் கனவுகளே! எனக்கு வந்த கனவுகளைப் பத்தி ஒரு பதிவு. பகல்ல கனவு.
ஞாயிறு - 27 நவம்பர் - ஒரு திரைப்பட விமர்சனம். நான் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்பட விமர்சனம். இந்தப் பதிவைப் போடும் முன்னாடி எந்தப் படமுன்னு சரியா ஊகிச்சா பரிசு காத்திருக்கு. ஊகிங்க ஊகிங்க.
என்ன நண்பர்களே.....பட்டியலைப் பாத்தீங்களா? என்ன நினைக்கிறீங்க பட்டியலைப் பத்தி! எதையாவது மாத்தனுமா? பட்டியல் பற்றிய ஒங்க கருத்துகளை அள்ளி விடுங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு
தடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்குஉண்மையைச் சொல்லட்டுமா......வருடம் தவறாமல் செல்கின்றவன் நான். இந்த ஆண்டு பல காரணங்களால்..நேரமின்மை என்பதே உண்மையான நியாயமான காரணம்...செல்ல முடியவில்லை. நடந்ததைப் பார்த்தால் அடுத்த ஆண்டு இன்னும் கூட்டம் குறையுமென்று தெரிகிறது. இது எனக்கு வருத்தம்தான்.
Sunday, November 20, 2005
என்னைத் தெரியுமா!
என்னைத் தெரியுமா!
அன்பு நண்பர்களே, என்னைத் தெரியுமா? என்னுடைய பெயர் இராகவன் என்பதைத் தவிர, இந்த வார தமிழ்மண நட்சத்திரம் என்பதைத் தவிர. தெரியாவிட்டால் உங்களுக்கு என்னை முறையாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது கடமையாகிறது.
உலகத்திலேயே மிகவும் புண்ணியப்பட்ட பூமி என்று என்னைக் கேட்டால் தூத்துக்குடி என்று சொல்வேன். நான் பிறந்த ஊராயிற்றே. எனது ஆரம்பகால நினைவுகளை முழுமையாகக் கொண்ட ஊராயிற்றே. ஆகையால் தூத்துக்குடியை நினைக்கும் பொழுது மட்டும் ஒரு ரெட்டிப்பு சந்தோஷம்.
அப்புறம் மதுரை, கரூர், கோவில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று பல சுற்றுகள் சுற்றியாகி விட்டது. இப்பொழுது இருப்பு பெங்களூரில். பொறுப்பு மென்பொருளில். ஆகையால் இப்பொழுது நான் பெங்களூரியன். ஆனால் ஆழத்தில் தோண்டித் தூர் வாரிப் பார்த்தால் ஒரு தூத்துக்குடிச் சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். மற்ற ஊர்களில் எல்லாம் இல்லாத ஒரு ஒட்டுதல் தூத்துக்குடிக்கு மட்டும்.
எழுத்து என்பது எனக்கு எப்படிப் பழக்கம்? யோசித்துப் பார்க்கிறேன். எனக்குச் சின்ன வயதில் படிக்கும் வழக்கம் நிறைய உண்டு. நடுத்தரக் குடும்பத்தில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பது கனவாக இருந்த அளவுக்கு நடுத்தரக் குடும்பம்.
ஆகையால் லெண்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வரும். வீட்டில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களே பெரும்பாலும் வரும். எனக்கு? அதற்கும் ஒரு வழியை ஆண்டவன் காட்டத்தான் செய்தார். என்னுடைய நண்பன் ராஜேஷின் தந்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். அவர்கள் வீட்டில் அம்புலிமாமா, ரத்னபாலா, பொம்மை, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். ராணி காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அங்குதான் தவமாய்த் தவமிருப்பேன்.
அதே நேரத்தில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களையும் படிக்காமல் விட்டதில்லை. அவைகளையும் புரட்டாமல் விட மாட்டேன். படிப்பது என்பது அவ்வளவு சுகம். படைப்பது?
அப்படியாக நான் படிக்கையில் எழுதும் ஆர்வமும் வந்தது. மூன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அப்பொழுது எழுதத் தொடங்கிய கதை ராமாயணம். ஒரு ஊரில் ஒரு தந்தை. அவருக்கு நான்கு மகன்கள் என்று போகும். தப்பும் தவறுமாக ஒரு பக்கம் எழுதியிருப்பேன். ஆனால் ஊக்கமில்லாமையால் அது தொடராமல் போனது.
பிறகு அப்படி இப்படி என்று எப்படியோ அங்கும் இங்குமாய் எழுதி இப்பொழுது தமிழ்மணத்திற்கும் வந்தாயிற்று. வந்ததோடு இல்லாமல் நட்சத்திரம் என்ற புதிய பட்டம் கிடைத்த கௌரவம். வரும்பொழுது வாங்கிக் கொள்வது சரிதானே.
இத்தனைக்கும் யார் காரணம்? யோசித்துப் பார்த்தால் பலர் நினைவிற்கு வருகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில். அத்தனையையும் பயன்படுத்திக் கொண்ட என்னுடைய ஆழ்மன ஆசையையும் சொல்லியே ஆகவேண்டுமல்லவா.
சின்ன வயதில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள். ஏன் தெரியுமா? என் வயதொத்தவர்களும் குறைந்தவர்களும் என்னைச் சுற்றித்தான் உட்கார்ந்திருப்பார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்வேன். கருத்தும் இருக்காது. திருத்தும் இருக்காது. ஆனாலும் கதை. காலில்லாக் கதை. அவர்களும் ஆவென வாய் திறந்து கேட்பார்கள். அதனால் வீட்டில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள்.
அதாவது கதை சொல்லும் ஆர்வம். நாலு பேருக்கு நாம் சொல்லி அவர்கள் விரும்பிக் கேட்டால் ஒரு சந்தோஷம். அந்த வயதில் நான் சொன்ன கதைகள் எனக்கு இந்த வயதில் நினைவில்லை. ஆனால் கதை சொன்னது நினைவிருக்கிறது.
இந்த கதை சொல்லும் அடையாளம் வயது வளர வளர குறைந்து போனது. படிப்பும் ஒரு காரணம். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நான் எதையாவது எழுதிப் படித்தால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடமா அல்லது தமிழில் எழுதப்படும் கதையா என்று என் தந்தை ஐயப்பட்டு எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு.
ஆனால் முழுமையான எழுத்துப் பயிற்சி இல்லை. தினமும் ஒரு கவிதை என்று ஒரு குழு இருந்தது. அங்கு சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது அந்தக் குழு இல்லை என்பது வருத்தமான விஷயம். அந்தக் குழுவினர் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். இங்கிருக்கும் தமிழறிஞர்களையும் அழைத்திருந்தார்கள். அதில் ஒரு பட்டிமன்றம். அதற்கு என்னை நடுவராக உட்கார வைத்து விட்டார்கள். எப்படியோ நடத்தி முடித்து கொஞ்சம் பாராட்டுகளையும் பெற்றேன்.
மறுபடியும் ஒரு பட்டி மன்றம். மகேந்திரன் என்ற நண்பர் வழியாக. பெங்களூர் டவுன் ஹாலில் நடந்தது. இந்த முறை அணித்தலைவர் பதவி. பாரதியின் படைப்புகளில் விஞ்சியது நாட்டுக்காகவா? வீட்டுக்காகவா? எனக்கு வீடு பேறு கிடைத்தது. பேசும் பொழுது மற்றவர்களை விட கைதட்டல் நிறைய கிடைத்தது. ஆனால் வெற்றி அடுத்த அணிக்கு. அதனால் என்ன. செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்தோமே என்ற மகிழ்ச்சி.
மறுபடியும் கொஞ்சம் தொய்வு. நான் எழுதும் கவிதைகள் செய்யுள் போல இருப்பதாக என்னுடைய நண்பர் பிரதீப் கருத்துக் கூறினார். அவர் சொன்னதிலும் காரணமில்லாமல் இல்லை. அப்பொழுது ஆசிரியப்பாவைக் கொஞ்சம் பழகத் தொடங்கியிருந்தேன்.
ஃபோரம் ஹப்பில் கொஞ்சம் கதைகள் எழுதினேன். வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்திருந்த நேரம். விக்கிரமாதித்தன் கதையையும் வீரப்பன் கதையையும் குழப்பி ஒரு நகைச்சுவைத் தொடர்கதை எழுதினேன். அது கொஞ்சம் நன்றாக ரசிக்கப்பட்டது. ஒன்றிரண்டு சிறு கதைகளும் எழுதினேன். பக்குவமில்லாத எழுத்து நடையில் (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு நீங்க சொல்றது புரியுது. ஹி ஹி)
மறுபடியும் கொஞ்சம் தொய்வு. இந்த முறை வேலையால். கிட்டத்தட்ட ஒரு வருடம். பிறகு தமிழ் மன்றத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு முத்தமிழ் மன்றத்தின் அறிமுகமும் கிடைத்தது. கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். நடை கொஞ்சம் கை வந்தது. அதே நேரத்தில் மீண்டும் ஃபோரம் ஹப். அங்கு கவிதைகள் பகுதிக்கு நடத்துனராகப் பதவி. எனக்கென்ன தெரியும் கவிதையைப் பத்தி என்று சொன்னாலும் கேட்கவில்லை. நம்பிக்கையோடு கொடுத்ததை நம்பிக் கையோடு பெற்று முடிந்தவரை சிறப்பாகச் செய்து வருகிறேன்.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து கைவந்து கொண்டிருந்த வேளையில்தான் தமிழ் மணத்தின் அறிமுகம். ஒரு பெரிய வட்டத்தில் கலந்த உணர்வு. இங்கும் நல்ல நண்பர்கள். நல்ல பதிவுகள். படிக்க நிறைய அனுபவங்களும் விஷயங்களும் கிடைக்கும் இடம். அருவியிலிருந்து நேரே வாயைப் பிளந்து தண்ணீர் குடிக்கும் நிலை. எவ்வளவு தண்ணீர்! ச்சேசே...ஒரே ஒரு வாயைப் படைத்தானே பிரம்மன் என்று நினைக்கும் நிலை. அவ்வளவு விஷயக் கடல். அதை விட தாங்கள் நினைப்பதைச் சொல்ல மக்களுக்கு ஒரு இடம்.
அப்படிப்பட்ட இனிய தமிழ் மணத்தில் இப்பொழுது எழுதி உங்களுக்கெல்லாம் பதித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நிறைய. இறைவன் அருளால் அனைத்தும் நடக்கும்.
ஆகையால் முதலில் அனைவருக்கும், வாய்ப்பளித்த மதி கந்தசாமி மற்றும் காசி ஆறுமுகத்திற்கும் தமிழ் மணத்தின் நட்சத்திரமாக நன்றி சொல்லி விட்டு இந்த ஒருவாரப் பயணத்தைத் துவக்குகிறேன். வழக்கம் போல உங்களோடு கை கோர்த்துக் கொண்டு.
அன்புடன்,
கோ.இராகவன்
அன்பு நண்பர்களே, என்னைத் தெரியுமா? என்னுடைய பெயர் இராகவன் என்பதைத் தவிர, இந்த வார தமிழ்மண நட்சத்திரம் என்பதைத் தவிர. தெரியாவிட்டால் உங்களுக்கு என்னை முறையாக அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது கடமையாகிறது.
உலகத்திலேயே மிகவும் புண்ணியப்பட்ட பூமி என்று என்னைக் கேட்டால் தூத்துக்குடி என்று சொல்வேன். நான் பிறந்த ஊராயிற்றே. எனது ஆரம்பகால நினைவுகளை முழுமையாகக் கொண்ட ஊராயிற்றே. ஆகையால் தூத்துக்குடியை நினைக்கும் பொழுது மட்டும் ஒரு ரெட்டிப்பு சந்தோஷம்.
அப்புறம் மதுரை, கரூர், கோவில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று பல சுற்றுகள் சுற்றியாகி விட்டது. இப்பொழுது இருப்பு பெங்களூரில். பொறுப்பு மென்பொருளில். ஆகையால் இப்பொழுது நான் பெங்களூரியன். ஆனால் ஆழத்தில் தோண்டித் தூர் வாரிப் பார்த்தால் ஒரு தூத்துக்குடிச் சின்னப் பையன் உட்கார்ந்திருப்பான். மற்ற ஊர்களில் எல்லாம் இல்லாத ஒரு ஒட்டுதல் தூத்துக்குடிக்கு மட்டும்.
எழுத்து என்பது எனக்கு எப்படிப் பழக்கம்? யோசித்துப் பார்க்கிறேன். எனக்குச் சின்ன வயதில் படிக்கும் வழக்கம் நிறைய உண்டு. நடுத்தரக் குடும்பத்தில் புத்தகங்களை வாங்கிப் படிப்பது என்பது கனவாக இருந்த அளவுக்கு நடுத்தரக் குடும்பம்.
ஆகையால் லெண்டிங் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வரும். வீட்டில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களே பெரும்பாலும் வரும். எனக்கு? அதற்கும் ஒரு வழியை ஆண்டவன் காட்டத்தான் செய்தார். என்னுடைய நண்பன் ராஜேஷின் தந்தை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். அவர்கள் வீட்டில் அம்புலிமாமா, ரத்னபாலா, பொம்மை, பூந்தளிர் ஆகிய புத்தகங்கள் படிக்கக் கிடைக்கும். ராணி காமிக்ஸ் புத்தகங்களும் கிடைக்கும். அங்குதான் தவமாய்த் தவமிருப்பேன்.
அதே நேரத்தில் பெரியவர்கள் படிக்கும் புத்தகங்களையும் படிக்காமல் விட்டதில்லை. அவைகளையும் புரட்டாமல் விட மாட்டேன். படிப்பது என்பது அவ்வளவு சுகம். படைப்பது?
அப்படியாக நான் படிக்கையில் எழுதும் ஆர்வமும் வந்தது. மூன்றாம் வகுப்பு என்று நினைக்கிறேன். அப்பொழுது எழுதத் தொடங்கிய கதை ராமாயணம். ஒரு ஊரில் ஒரு தந்தை. அவருக்கு நான்கு மகன்கள் என்று போகும். தப்பும் தவறுமாக ஒரு பக்கம் எழுதியிருப்பேன். ஆனால் ஊக்கமில்லாமையால் அது தொடராமல் போனது.
பிறகு அப்படி இப்படி என்று எப்படியோ அங்கும் இங்குமாய் எழுதி இப்பொழுது தமிழ்மணத்திற்கும் வந்தாயிற்று. வந்ததோடு இல்லாமல் நட்சத்திரம் என்ற புதிய பட்டம் கிடைத்த கௌரவம். வரும்பொழுது வாங்கிக் கொள்வது சரிதானே.
இத்தனைக்கும் யார் காரணம்? யோசித்துப் பார்த்தால் பலர் நினைவிற்கு வருகின்றார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில். அத்தனையையும் பயன்படுத்திக் கொண்ட என்னுடைய ஆழ்மன ஆசையையும் சொல்லியே ஆகவேண்டுமல்லவா.
சின்ன வயதில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள். ஏன் தெரியுமா? என் வயதொத்தவர்களும் குறைந்தவர்களும் என்னைச் சுற்றித்தான் உட்கார்ந்திருப்பார்கள். வாய்க்கு வந்ததைச் சொல்வேன். கருத்தும் இருக்காது. திருத்தும் இருக்காது. ஆனாலும் கதை. காலில்லாக் கதை. அவர்களும் ஆவென வாய் திறந்து கேட்பார்கள். அதனால் வீட்டில் என்னைப் பாம்பாட்டி என்பார்கள்.
அதாவது கதை சொல்லும் ஆர்வம். நாலு பேருக்கு நாம் சொல்லி அவர்கள் விரும்பிக் கேட்டால் ஒரு சந்தோஷம். அந்த வயதில் நான் சொன்ன கதைகள் எனக்கு இந்த வயதில் நினைவில்லை. ஆனால் கதை சொன்னது நினைவிருக்கிறது.
இந்த கதை சொல்லும் அடையாளம் வயது வளர வளர குறைந்து போனது. படிப்பும் ஒரு காரணம். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது நான் எதையாவது எழுதிப் படித்தால், அது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாடமா அல்லது தமிழில் எழுதப்படும் கதையா என்று என் தந்தை ஐயப்பட்டு எட்டிப் பார்த்த நிகழ்ச்சிகளும் உண்டு.
ஆனால் முழுமையான எழுத்துப் பயிற்சி இல்லை. தினமும் ஒரு கவிதை என்று ஒரு குழு இருந்தது. அங்கு சில கவிதைகள் எழுதியிருக்கிறேன். இப்பொழுது அந்தக் குழு இல்லை என்பது வருத்தமான விஷயம். அந்தக் குழுவினர் பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார்கள். இங்கிருக்கும் தமிழறிஞர்களையும் அழைத்திருந்தார்கள். அதில் ஒரு பட்டிமன்றம். அதற்கு என்னை நடுவராக உட்கார வைத்து விட்டார்கள். எப்படியோ நடத்தி முடித்து கொஞ்சம் பாராட்டுகளையும் பெற்றேன்.
மறுபடியும் ஒரு பட்டி மன்றம். மகேந்திரன் என்ற நண்பர் வழியாக. பெங்களூர் டவுன் ஹாலில் நடந்தது. இந்த முறை அணித்தலைவர் பதவி. பாரதியின் படைப்புகளில் விஞ்சியது நாட்டுக்காகவா? வீட்டுக்காகவா? எனக்கு வீடு பேறு கிடைத்தது. பேசும் பொழுது மற்றவர்களை விட கைதட்டல் நிறைய கிடைத்தது. ஆனால் வெற்றி அடுத்த அணிக்கு. அதனால் என்ன. செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்தோமே என்ற மகிழ்ச்சி.
மறுபடியும் கொஞ்சம் தொய்வு. நான் எழுதும் கவிதைகள் செய்யுள் போல இருப்பதாக என்னுடைய நண்பர் பிரதீப் கருத்துக் கூறினார். அவர் சொன்னதிலும் காரணமில்லாமல் இல்லை. அப்பொழுது ஆசிரியப்பாவைக் கொஞ்சம் பழகத் தொடங்கியிருந்தேன்.
ஃபோரம் ஹப்பில் கொஞ்சம் கதைகள் எழுதினேன். வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்திருந்த நேரம். விக்கிரமாதித்தன் கதையையும் வீரப்பன் கதையையும் குழப்பி ஒரு நகைச்சுவைத் தொடர்கதை எழுதினேன். அது கொஞ்சம் நன்றாக ரசிக்கப்பட்டது. ஒன்றிரண்டு சிறு கதைகளும் எழுதினேன். பக்குவமில்லாத எழுத்து நடையில் (இப்ப மட்டும் என்ன வாழுதுன்னு நீங்க சொல்றது புரியுது. ஹி ஹி)
மறுபடியும் கொஞ்சம் தொய்வு. இந்த முறை வேலையால். கிட்டத்தட்ட ஒரு வருடம். பிறகு தமிழ் மன்றத்தின் அறிமுகம் கிடைத்தது. அங்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு முத்தமிழ் மன்றத்தின் அறிமுகமும் கிடைத்தது. கொஞ்சம் எழுதத் தொடங்கினேன். நடை கொஞ்சம் கை வந்தது. அதே நேரத்தில் மீண்டும் ஃபோரம் ஹப். அங்கு கவிதைகள் பகுதிக்கு நடத்துனராகப் பதவி. எனக்கென்ன தெரியும் கவிதையைப் பத்தி என்று சொன்னாலும் கேட்கவில்லை. நம்பிக்கையோடு கொடுத்ததை நம்பிக் கையோடு பெற்று முடிந்தவரை சிறப்பாகச் செய்து வருகிறேன்.
இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக எழுத்து கைவந்து கொண்டிருந்த வேளையில்தான் தமிழ் மணத்தின் அறிமுகம். ஒரு பெரிய வட்டத்தில் கலந்த உணர்வு. இங்கும் நல்ல நண்பர்கள். நல்ல பதிவுகள். படிக்க நிறைய அனுபவங்களும் விஷயங்களும் கிடைக்கும் இடம். அருவியிலிருந்து நேரே வாயைப் பிளந்து தண்ணீர் குடிக்கும் நிலை. எவ்வளவு தண்ணீர்! ச்சேசே...ஒரே ஒரு வாயைப் படைத்தானே பிரம்மன் என்று நினைக்கும் நிலை. அவ்வளவு விஷயக் கடல். அதை விட தாங்கள் நினைப்பதைச் சொல்ல மக்களுக்கு ஒரு இடம்.
அப்படிப்பட்ட இனிய தமிழ் மணத்தில் இப்பொழுது எழுதி உங்களுக்கெல்லாம் பதித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு நிறைய. இறைவன் அருளால் அனைத்தும் நடக்கும்.
ஆகையால் முதலில் அனைவருக்கும், வாய்ப்பளித்த மதி கந்தசாமி மற்றும் காசி ஆறுமுகத்திற்கும் தமிழ் மணத்தின் நட்சத்திரமாக நன்றி சொல்லி விட்டு இந்த ஒருவாரப் பயணத்தைத் துவக்குகிறேன். வழக்கம் போல உங்களோடு கை கோர்த்துக் கொண்டு.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, November 14, 2005
கந்தனும் ஸ்கந்தனும்
கந்தனும் ஸ்கந்தனும்
இன்னைக்கு இந்த ரெண்டும் ஒரே சாமியத்தான் குறிக்குது. அதுனால பலபேரு ஸ்கந்தன் அப்படீங்குற வடமொழிப் பெயருல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுதான் கந்தன் அப்படீங்குற பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. ஆனா ஒத்துக்காதீங்க.
பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. தமிழனோட முதற்கடவுள் முருகன். அந்தப் பேரையும் எப்படி யோசிச்சு வெச்சிருக்காங்க தெரியுமா?
அகர உகர மகரங்களின் சேர்க்கைதான ஓங்காராம். அதாவது அ+உ+ம = ஓம்.
இதுல,
அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)
உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)
மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)
இதெல்லாம் அன்னைக்கே நம்மாளுங்க யோசிச்சு வெச்சிருக்காங்க. மத்த நாடுகள்ல எல்லாம் இதெல்லாம் யோசிக்கும் முன்னாடியே இந்த மாதிரி யோசிச்சிருக்காங்க.
இதுல முருகுங்குற பேரப் பாருங்க. மு+ரு+கு = முருகு. இந்த மூனு எழுத்துகள்ளயும் உகரம் வருது பாத்தீங்களா? முருகனைப் பணிந்தால் காக்கப்படலாமுன்னு சொல்றதுக்காக அப்படி. அதுவுமில்லாம முருகன் என்ன செய்தாலும் அது காத்தல்தான்னு சொல்றதுக்குதான் அப்படிப் பேரு. பேர் வைக்கிறதுல கூட ஒரு சூச்சுமம்.
இப்படி முருகுன்னு யோசிச்சுப் பேரு வெச்சவனா, ஸ்கந்தன்ல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுக் கூப்பிடுவான்?
ஸ்கந்தன்னு சொல்ற பேருக்கும் கந்தன்னு சொல்ற பேருக்கும் பொருள் வேறுபாடு ரொம்ப இருக்கு. பொருளில் ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாதது.
மொதல்ல ஸ்கந்தனப் பாப்போம். ஸ்கந்தன்னா என்ன பொருள்? வடமொழியில் இதுக்கு ரெண்டு பொருளாம்.
சத்ரூன் சோஷயதீதீ ஸ்கந்தகா - பகைவர்களுடைய வலிமையை குறைக்கின்றவன் என்று பொருள்.
ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலீ கல்மஷ நாசீனீம் - கலியுகத்தின் கொடுமைகளில் இருந்து நீக்க வல்லது ஸ்கந்தனின் கீர்த்தி.
(வடமொழி எனக்குத் தெரியாது. ஆகையால நான் எழுதுனதுல எழுத்துப் பொருட் பிழை இருந்தா மன்னிச்சுக்கிருங்க.)
இந்த ரெண்டு வெளக்கமுமே மேம்போக்கான வெளக்கமே தவிர ஸ்கந்தன்னா என்னன்னு ஆழமா விளக்கலை.
ஆனால் கந்தன் என்கிற பேரப் பாருங்க. அதுக்கு ஆழமான விளக்கம் இருக்கு.
"கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" அப்படீங்குற சங்கத் தமிழ் வரிகள் எதைச் சொல்லுது தெரியுமா? கந்துன்னா என்னன்னு சொல்லுது.
சரி. கந்துன்னா என்ன? ஆனை பார்த்திருப்பீங்க. அந்த ஆனைய அந்தக்காலத்துல தமிழர்கள் நெறையப் பயன்படுத்துனாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போவாங்க. போருக்காக இருக்கலாம். கட்டிடம் கட்ட இருக்கலாம். வேறு எதுக்கும் இருக்கலாம். (மதுரைல ஆனையக் கட்டிப் போரடிச்சாங்களாம் அந்தக் காலத்துல. அதுக்காகக் கூட இருக்கலாம்.)
அப்ப ஒரு இடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போறப்போ எங்க கட்டிப் போடுறது? போற எடத்துல எல்லாம் கொட்டாரம் இருக்குமா?
அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான். ஆனையோட கழுத்துல ஒரு சங்கிலியக் கெட்டி (இல்லைன்னா கயத்தக் கட்டி), அந்தச் சங்கிலிய ஒரு பெரிய கட்டைல கட்டீருவாங்க. ஆன போற எடத்துக்கெல்லாம் அந்தக் கட்டைய இழுத்துக்கிட்டே போகும். எங்க தங்கனுமுன்னு முடிவு செய்யுறாங்களோ அங்க ஒரு பெரிய குழியத் தோண்டி அந்தக் கட்டைய அதுல பொதைச்சிருவாங்க. இப்ப ஆனையக் கட்டிப் போட்டாச்சு இல்லையா.
சரி. கந்துன்னா என்னன்னு இன்னமும் சொல்லலையே. ஆன இழுத்துக்கிட்டே திரியுற அந்தக் கட்டைக்குத்தான் கந்துன்னு பேரு.
அப்புறம் கந்தனுக்கும் அதுக்கும் உள்ள தொடர்பு? அந்த கந்துங்குற கட்ட எப்பவுமே ஆனை கூடவே இருக்கு. ஆனா தேவையானப்போ அந்த ஆனையைக் கட்டுப்படுத்துது பாத்தீங்களா!
அது போல முருகக் கடவுள் எப்பவுமே நம்ம கூடயே இருந்து தேவையான பொழுதுகளில் நம்மளக் கட்டுப்படுத்திக் காப்பாத்துவாருன்னு சொல்லி அவருக்குக் கந்தன்னு பேரு வெச்சாங்க. புரிஞ்சதா?
அன்புடன்,
கோ.இராகவன்
(இந்தப் பதிவு இராமநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க.....)
இவங்க ரெண்டு பேரும் ஒன்னா? வெவ்வேறயா? பல கோயில்கள்ள ஸ்கந்தன்னு எழுதீருக்கே. புத்தகத்துல போட்டிருக்கேன்னு சொல்றது தெரியுது. ஆனா ரெண்டு பேரும் வேறவேறங்குறதுதான் உண்மை.இன்னைக்கு இந்த ரெண்டும் ஒரே சாமியத்தான் குறிக்குது. அதுனால பலபேரு ஸ்கந்தன் அப்படீங்குற வடமொழிப் பெயருல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுதான் கந்தன் அப்படீங்குற பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. ஆனா ஒத்துக்காதீங்க.
பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. தமிழனோட முதற்கடவுள் முருகன். அந்தப் பேரையும் எப்படி யோசிச்சு வெச்சிருக்காங்க தெரியுமா?
அகர உகர மகரங்களின் சேர்க்கைதான ஓங்காராம். அதாவது அ+உ+ம = ஓம்.
இதுல,
அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)
உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)
மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)
இதெல்லாம் அன்னைக்கே நம்மாளுங்க யோசிச்சு வெச்சிருக்காங்க. மத்த நாடுகள்ல எல்லாம் இதெல்லாம் யோசிக்கும் முன்னாடியே இந்த மாதிரி யோசிச்சிருக்காங்க.
இதுல முருகுங்குற பேரப் பாருங்க. மு+ரு+கு = முருகு. இந்த மூனு எழுத்துகள்ளயும் உகரம் வருது பாத்தீங்களா? முருகனைப் பணிந்தால் காக்கப்படலாமுன்னு சொல்றதுக்காக அப்படி. அதுவுமில்லாம முருகன் என்ன செய்தாலும் அது காத்தல்தான்னு சொல்றதுக்குதான் அப்படிப் பேரு. பேர் வைக்கிறதுல கூட ஒரு சூச்சுமம்.
இப்படி முருகுன்னு யோசிச்சுப் பேரு வெச்சவனா, ஸ்கந்தன்ல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுக் கூப்பிடுவான்?
ஸ்கந்தன்னு சொல்ற பேருக்கும் கந்தன்னு சொல்ற பேருக்கும் பொருள் வேறுபாடு ரொம்ப இருக்கு. பொருளில் ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாதது.
மொதல்ல ஸ்கந்தனப் பாப்போம். ஸ்கந்தன்னா என்ன பொருள்? வடமொழியில் இதுக்கு ரெண்டு பொருளாம்.
சத்ரூன் சோஷயதீதீ ஸ்கந்தகா - பகைவர்களுடைய வலிமையை குறைக்கின்றவன் என்று பொருள்.
ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலீ கல்மஷ நாசீனீம் - கலியுகத்தின் கொடுமைகளில் இருந்து நீக்க வல்லது ஸ்கந்தனின் கீர்த்தி.
(வடமொழி எனக்குத் தெரியாது. ஆகையால நான் எழுதுனதுல எழுத்துப் பொருட் பிழை இருந்தா மன்னிச்சுக்கிருங்க.)
இந்த ரெண்டு வெளக்கமுமே மேம்போக்கான வெளக்கமே தவிர ஸ்கந்தன்னா என்னன்னு ஆழமா விளக்கலை.
ஆனால் கந்தன் என்கிற பேரப் பாருங்க. அதுக்கு ஆழமான விளக்கம் இருக்கு.
"கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" அப்படீங்குற சங்கத் தமிழ் வரிகள் எதைச் சொல்லுது தெரியுமா? கந்துன்னா என்னன்னு சொல்லுது.
சரி. கந்துன்னா என்ன? ஆனை பார்த்திருப்பீங்க. அந்த ஆனைய அந்தக்காலத்துல தமிழர்கள் நெறையப் பயன்படுத்துனாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போவாங்க. போருக்காக இருக்கலாம். கட்டிடம் கட்ட இருக்கலாம். வேறு எதுக்கும் இருக்கலாம். (மதுரைல ஆனையக் கட்டிப் போரடிச்சாங்களாம் அந்தக் காலத்துல. அதுக்காகக் கூட இருக்கலாம்.)
அப்ப ஒரு இடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போறப்போ எங்க கட்டிப் போடுறது? போற எடத்துல எல்லாம் கொட்டாரம் இருக்குமா?
அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான். ஆனையோட கழுத்துல ஒரு சங்கிலியக் கெட்டி (இல்லைன்னா கயத்தக் கட்டி), அந்தச் சங்கிலிய ஒரு பெரிய கட்டைல கட்டீருவாங்க. ஆன போற எடத்துக்கெல்லாம் அந்தக் கட்டைய இழுத்துக்கிட்டே போகும். எங்க தங்கனுமுன்னு முடிவு செய்யுறாங்களோ அங்க ஒரு பெரிய குழியத் தோண்டி அந்தக் கட்டைய அதுல பொதைச்சிருவாங்க. இப்ப ஆனையக் கட்டிப் போட்டாச்சு இல்லையா.
சரி. கந்துன்னா என்னன்னு இன்னமும் சொல்லலையே. ஆன இழுத்துக்கிட்டே திரியுற அந்தக் கட்டைக்குத்தான் கந்துன்னு பேரு.
அப்புறம் கந்தனுக்கும் அதுக்கும் உள்ள தொடர்பு? அந்த கந்துங்குற கட்ட எப்பவுமே ஆனை கூடவே இருக்கு. ஆனா தேவையானப்போ அந்த ஆனையைக் கட்டுப்படுத்துது பாத்தீங்களா!
அது போல முருகக் கடவுள் எப்பவுமே நம்ம கூடயே இருந்து தேவையான பொழுதுகளில் நம்மளக் கட்டுப்படுத்திக் காப்பாத்துவாருன்னு சொல்லி அவருக்குக் கந்தன்னு பேரு வெச்சாங்க. புரிஞ்சதா?
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, November 09, 2005
தீபாவளி - 2005
தீபாவளி - 2005
சின்ன வயசு தீபாவளிகளையும் அதனால் கிடைத்த வலிகளையும் ஒரு பட்டியல் போட்டப்புறம் இந்த வருசம் தீபாவளி எப்படி இருந்ததுன்னு எழுதனுமுன்னு தோணிச்சு. அதான் இந்தக் கட்டுரை.
பண்டிகைன்னாலே திங்குறதும் கொண்டாடுறதும் தான. ஆகையால தீபாவளிப் பலகாரகங்களைப் பத்தி மொதல்ல பாப்போம்.
ஊர்ப் பலகாரங்களிலேயே எனக்கு அதிரசமும் சுசியமும் ரொம்பப் பிடிக்கும். அப்படீன்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமுன்னு நினைக்கிறேன். அதிரசம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. சுசியத்துக்கு ஊரூருக்கு ஒவ்வொரு பேரு. உருண்டைய இருக்கும். உள்ள இனிப்பா பூரணம் இருக்கும். அதுதான் சுசியம். எண்ணெய்ல பொரிச்சி எடுக்குறது.
அதிரசம் கொஞ்சம் சிரமம். ஆகையால இந்த தீபாவளிக்குச் சுசியம் செய்யலாமுன்னு ஆசை. ஆனா எப்படிச் செய்யுறதுன்னு தெரியாது. இனிப்பு உருண்டைய மாவுல முக்கி எண்ணெயில போடுறத பாத்துருக்கேன். முழுப் பாசிப்பருப்புல செஞ்சதுன்னு தெரியும். ஆகையால நானே என்னுடைய ஆராய்சியைத் தொடங்கி சுசியம் சுடலாமுன்னு நெனச்சேன். ஒருவேளை ஆராய்ச்சி தோல்வியாயிட்டா? அதுக்குதான இருக்கு ரவாலட்டு. நானொரு ரவாலட்டு ஸ்பெஷலிஸ்ட். அப்படியே அம்மாகிட்ட இருந்து வந்தது. ரவாலட்டும் செய்வோமுன்னு முடிவு செஞ்சேன். அப்பத்தான் ஒன்னு போனாலும் இன்னோன்னு இருக்குமுன்னு தீபாவளிக்கு மொத நாள் சாங்காலமே ஏற்பாடுகளைத் தொடங்கினேன்.
மொதல்ல பாசிப்பருப்பைக் கொஞ்சமா தண்ணி ஊத்தி குக்கர்ல வெச்சாச்சு. அப்படியே ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா வறுத்து ஆற வெச்சாச்சு. ஆற வெச்ச ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா அரைச்சுக்கிட்டு அதுக்குப் பாதிக்குக் கொஞ்சம் குறைவா சீனியை அரைச்சிக்கிட்டாச்சு. ரெண்டையும் கலந்து ஒரு சட்டியில எடுத்துக்கிட்டேன். அப்புறம் நெய்யக் காய்ச்சி அதுல முந்திரியும் திராட்சையும் போட்டு, அந்த நெய்யை அப்படியே ரவைக் கலவைல கொட்டி, சூடு ஆறும் முன்னாடியே உருண்டை பிடிச்சாச்சு. கமகமன்னு வாடை. பக்கத்து வீட்டுக்கே போயிருச்சு. அவங்களுக்கு ஒரு அஞ்சு உருண்டை.
அடுத்தது வெல்லத்தப் பொடிச்சு வேக வைத்த பாசிப்பருப்புல கலந்தேன். என்னவோ கோளாறு. கொழகொழன்னு இருந்தது. கட்டியா இருந்தாதானே உருண்டை பிடிக்க வரும். சரி. ஆண்டவன் விட்ட வழின்னு, கொஞ்சம் அரிசிமாவையும் மைதா மாவையும் கலந்து கரைச்சிக்கிட்டேன். சஃபோலா கரடி ஆயிலை ஊத்திக் காயவெச்சு, உருண்டைய மாவுல முக்கிப் போட்டா..........எல்லாம் ஒடஞ்சு போயி எண்ணெய்யோட கலந்திருச்சி.
ஒரே சோகம். ச்ச. ஒரு பலகாரம் செய்ய வரலையேன்னு வருத்தப்பட்டு அடுப்ப அணைச்சாச்சு. இப்ப ரெண்டு இனிப்பு ஆச்சு. ஒன்னு ரவாலட்டு. ரெண்டாவது இனிப்புப் பருப்பு. பின்னே அந்தப் பருப்பை என்ன செய்வது?
தீபாவளி அன்னைக்குக் காலைல ஏழு மணிக்கெல்லாம் ஃபோன். அப்பாதான். வாழ்த்துகள் சொல்லத்தான் எழுப்புனாரு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லீட்டு மறுபடியும் படுத்தாச்சு. அப்படியே ஒரு எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தீபாவளி மெசேஜ் டைப் பண்ணி, அனுப்ப வேண்டியவங்களுக்கெல்லாம் மொபைல்ல அனுப்பினேன்.
அப்படியே குளிச்சி முடிச்சிட்டு பூஜைய முடிச்சேன். அரளிப்பூவும் குட்டிக்குட்டியா ரோஜாப்பூக்களும் இருந்தது. சாமி ஷெல்ஃபைத் தொடச்சு மறுபடியும் அடுக்கி விளக்கேத்தி சாமியும் கும்பிட்டாச்சு. அப்புறமென்ன சாப்பிட வேண்டியதுதான.
பக்கத்துல தங்கீருக்குற ரெண்டு நண்பர்களை தீபாவளிக் காலைச் சாப்பாட்டிற்கு வரச் சொல்லீருந்தேன். வந்தவங்கு இனிப்பு வகைகளையும் தோசையும் குடுத்து திருப்திப் படுத்தியாச்சு. அதுல பாருங்க, அந்த இனிப்புப் பருப்பை ரெண்டாவது வாட்டி கேட்டு வாங்கிச் சாப்பிட்டாங்க.
பெறகு கொஞ்ச நேரம் டீவி. ஆனா ஒழுங்கா டீவி பாக்க யார் விட்டா? ஒரே வேட்டுச் சத்தம். போன வருசத்தை விட இந்த வருசம் சத்தம் கூடியிருக்கு. சின்ன வயசில் இருந்தே அதிர் வேட்டுகளை விட வேடிக்கை வானங்களிலே ஈடுபாடு உண்டு. அதுனால இந்த வருசம் ஒன்னும் வாங்கலை. ஆஃபீசுல தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துல வான வேடிக்கைகள் காட்டுனாங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. அதுலயே திருப்தி வந்துருச்சு.
சன் டீவிய அப்படியே விட்டுட்டு ஜெயாவைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்ததே. இளையராஜாவுக்கு வயசாச்சுன்னு இந்த நிகழ்ச்சி பாத்துதான் தெரிஞ்சது. ஜெயச்சந்திரன் வந்து பாடுவாருன்னு காத்திருந்தேன். ஆனா நான் காத்திருக்குற வரைக்கும் அவரு வரலை. மதியம் அத்தை வீட்டுக்குச் சாப்பிடப் போகுற நேரம் ஆச்சே. டீவியை நிப்பாட்டீட்டு கெளம்பியாச்சு. ரவாலட்டோடதான். விட முடியுமா?
ஒரு பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம். பைக்குல ஒருவழியா போய்ச் சேந்தேன். ரோடுகள் ரொம்ப மோசம். பாத்ததும் மாமா கேட்டுட்டார். வேற எத? என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னுதான். கடந்த ரெண்டு மாசத்துல கொஞ்சம் பூசுன மாதிரி ஆயிட்டேன். அதான்.
மாமா வடகர்நாடகாவைச் சேர்ந்தவர். அதுனால அன்னைக்கு அவங்க முறைப்படி சாப்பாடும் பூஜையும். ஊரிலிருந்து அவங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. ஆகையால அவங்களே சமைச்சிருந்தாங்க.
கோதுமைப் போளி கடலைப் பருப்பு வெச்சதுதான் அவங்களுக்கு பிரதானம். ஹோளிகே-ன்னு சொல்வாங்க. அதுல நெய்யையும் பாலையும் ஊத்திச் சாப்பிடனும். எனக்கு நெய் தொண்டையில எறங்காது. என்னோட எலையில பெரிய போளிய வெச்சு, மறுக்க மறுக்க நெய்யக் கொட்டுனாங்க. வேற வழி! முடிச்சதும் அப்பளமும் வெங்காய பஜ்ஜி வந்தது. இது அத்தை ஸ்பெஷல். கூட ஊறுகாய். அப்பத்தான் நெறைய ஹோளிகேயைத் திகட்டாம திங்கலாமாம். ஊறுகாய் இல்லாமலேயே திகட்டாமச் சாப்பிட்டான் மச்சினன்.
கேக்கக் கேக்க விடாம இன்னும் ரெண்டு ஹோளிகேகளையும் அதோட அதுகளுக்கு நெய்க்குளியல் வேற. "முருகா! இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை"ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டேன்.
அத்தோட விட்டாங்களா? எலைல விழுந்தது ரெண்டு சப்பாத்தியும் சென்னா கறியும். அட ஆண்டவா! வயிறா! வண்ணாந்தாழியா! அப்புறம் சோறு வேறு. இதில் விஷயம் என்னன்னா....ஒரு வாட்டி மட்டும் சோறு போடக்கூடாதம். ஒரு கரண்டி போட்டதும் கண்டிப்பா இன்னொரு கரண்டி போடனுமாம். ஆம்பரான்னு ஒன்னு. நம்மூரு ரசம் போல. அத ஊத்திச் சாப்பிட்டாச்சு. அப்புறம் தயிர். அடேங்கப்பா. எந்திரிக்க முடியல.
அப்புறம் கொஞ்ச நேரம் பேசீட்டு இருந்திட்டு வீட்டுக்குக் கெளம்புனேன். விஜய் டீவியில மிஸஸ்.டவுட்பயர் ஓடிச்சு. தமிழில். நல்லாவே இருந்தது. அத முழுசும் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில் விட்டு விட்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.
மதியம் அவ்வளவு சாப்பிட்டாலும் ராத்திரி பட்டினியா கிடக்க முடியும்? மூனு தோசையச் சுட்டுச் சாப்பிட்டேன். தொட்டுக்க வெங்காயம் தாளிச்சுப் போட்ட தயிர். அந்த நேரத்துல வான வேடிக்கைகள் நல்லா இருந்தது. மாடியில நின்னு ரசிச்சுப் பாத்தேன்.
அப்புறம் சிஸ்சும் பில்லும் ஃபோன் பண்ணினாங்க. சிஸ்-பில்லுன்னா தெரியும் தானே. சிஸ் - சிஸ்டர். பில் - பிரதர் இன் லா. அவங்ககிட்ட கொஞ்ச நேரம் கத பேசீட்டு வெச்சாச்சு.
அட! ஒரு விஷயத்தைச் சொல்லலையே. பெங்களூர்ல பெஞ்ச மழைல ரோடெல்லாம் சகதி. பைக்லயும் ஒரே சகதி. வண்டியப் பாத்த அத்த, "என்ன ராகவா! வண்டி பழசு மாதிரி தெரியுது"ன்னு வேற சொல்லீட்டாங்க. சாங்காலமா வாளில தண்ணி எடுத்துட்டு வந்து கழுவினேன். நல்லாக் கழுவி வண்டியோட மானத்தைக் காப்பாத்தினேன். (அதுக்கப்புறம் பெஞ்ச மழைல மறுபடியும் வண்டி சகதியானது வேறு கத.)
நெறைய வெடி போட்டதுல, ஏழெட்டு மணி வாக்குல பயங்கர ஹீட். வீட்டுக்குள்ளயும் வெளியேயும் ஒரே வெக்கை. வெடி மருந்து நாத்தம் வேற. என்னடா வேதனைன்னு நெனைக்கும் போதே மழை பேஞ்சு அத்தனையையும் அமத்தீருச்சு. வருணபகவானுக்கு மானசீக ஃபோன் போட்டு நன்றி சொல்லீட்டுப் படுத்துத் தூங்கியாச்சு. இப்படித்தாங்க போச்சு என்னோட தீபாவளி.
கடைசியா ஒரு விஷயம். தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாளைக்கு எனக்கு வயிறு சரியில்லைங்க. எல்லாம் ஹோளிகேயின் நெய் வண்ணமுன்னு நெனைக்கிறேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
சின்ன வயசு தீபாவளிகளையும் அதனால் கிடைத்த வலிகளையும் ஒரு பட்டியல் போட்டப்புறம் இந்த வருசம் தீபாவளி எப்படி இருந்ததுன்னு எழுதனுமுன்னு தோணிச்சு. அதான் இந்தக் கட்டுரை.
பண்டிகைன்னாலே திங்குறதும் கொண்டாடுறதும் தான. ஆகையால தீபாவளிப் பலகாரகங்களைப் பத்தி மொதல்ல பாப்போம்.
ஊர்ப் பலகாரங்களிலேயே எனக்கு அதிரசமும் சுசியமும் ரொம்பப் பிடிக்கும். அப்படீன்னா என்னன்னு எல்லாருக்கும் தெரியுமுன்னு நினைக்கிறேன். அதிரசம் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீங்க. சுசியத்துக்கு ஊரூருக்கு ஒவ்வொரு பேரு. உருண்டைய இருக்கும். உள்ள இனிப்பா பூரணம் இருக்கும். அதுதான் சுசியம். எண்ணெய்ல பொரிச்சி எடுக்குறது.
அதிரசம் கொஞ்சம் சிரமம். ஆகையால இந்த தீபாவளிக்குச் சுசியம் செய்யலாமுன்னு ஆசை. ஆனா எப்படிச் செய்யுறதுன்னு தெரியாது. இனிப்பு உருண்டைய மாவுல முக்கி எண்ணெயில போடுறத பாத்துருக்கேன். முழுப் பாசிப்பருப்புல செஞ்சதுன்னு தெரியும். ஆகையால நானே என்னுடைய ஆராய்சியைத் தொடங்கி சுசியம் சுடலாமுன்னு நெனச்சேன். ஒருவேளை ஆராய்ச்சி தோல்வியாயிட்டா? அதுக்குதான இருக்கு ரவாலட்டு. நானொரு ரவாலட்டு ஸ்பெஷலிஸ்ட். அப்படியே அம்மாகிட்ட இருந்து வந்தது. ரவாலட்டும் செய்வோமுன்னு முடிவு செஞ்சேன். அப்பத்தான் ஒன்னு போனாலும் இன்னோன்னு இருக்குமுன்னு தீபாவளிக்கு மொத நாள் சாங்காலமே ஏற்பாடுகளைத் தொடங்கினேன்.
மொதல்ல பாசிப்பருப்பைக் கொஞ்சமா தண்ணி ஊத்தி குக்கர்ல வெச்சாச்சு. அப்படியே ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா வறுத்து ஆற வெச்சாச்சு. ஆற வெச்ச ரவையையும் ஏலக்காயையும் ஒன்னா அரைச்சுக்கிட்டு அதுக்குப் பாதிக்குக் கொஞ்சம் குறைவா சீனியை அரைச்சிக்கிட்டாச்சு. ரெண்டையும் கலந்து ஒரு சட்டியில எடுத்துக்கிட்டேன். அப்புறம் நெய்யக் காய்ச்சி அதுல முந்திரியும் திராட்சையும் போட்டு, அந்த நெய்யை அப்படியே ரவைக் கலவைல கொட்டி, சூடு ஆறும் முன்னாடியே உருண்டை பிடிச்சாச்சு. கமகமன்னு வாடை. பக்கத்து வீட்டுக்கே போயிருச்சு. அவங்களுக்கு ஒரு அஞ்சு உருண்டை.
அடுத்தது வெல்லத்தப் பொடிச்சு வேக வைத்த பாசிப்பருப்புல கலந்தேன். என்னவோ கோளாறு. கொழகொழன்னு இருந்தது. கட்டியா இருந்தாதானே உருண்டை பிடிக்க வரும். சரி. ஆண்டவன் விட்ட வழின்னு, கொஞ்சம் அரிசிமாவையும் மைதா மாவையும் கலந்து கரைச்சிக்கிட்டேன். சஃபோலா கரடி ஆயிலை ஊத்திக் காயவெச்சு, உருண்டைய மாவுல முக்கிப் போட்டா..........எல்லாம் ஒடஞ்சு போயி எண்ணெய்யோட கலந்திருச்சி.
ஒரே சோகம். ச்ச. ஒரு பலகாரம் செய்ய வரலையேன்னு வருத்தப்பட்டு அடுப்ப அணைச்சாச்சு. இப்ப ரெண்டு இனிப்பு ஆச்சு. ஒன்னு ரவாலட்டு. ரெண்டாவது இனிப்புப் பருப்பு. பின்னே அந்தப் பருப்பை என்ன செய்வது?
தீபாவளி அன்னைக்குக் காலைல ஏழு மணிக்கெல்லாம் ஃபோன். அப்பாதான். வாழ்த்துகள் சொல்லத்தான் எழுப்புனாரு. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் வாழ்த்துச் சொல்லீட்டு மறுபடியும் படுத்தாச்சு. அப்படியே ஒரு எட்டு மணிக்கெல்லாம் எழுந்து தீபாவளி மெசேஜ் டைப் பண்ணி, அனுப்ப வேண்டியவங்களுக்கெல்லாம் மொபைல்ல அனுப்பினேன்.
அப்படியே குளிச்சி முடிச்சிட்டு பூஜைய முடிச்சேன். அரளிப்பூவும் குட்டிக்குட்டியா ரோஜாப்பூக்களும் இருந்தது. சாமி ஷெல்ஃபைத் தொடச்சு மறுபடியும் அடுக்கி விளக்கேத்தி சாமியும் கும்பிட்டாச்சு. அப்புறமென்ன சாப்பிட வேண்டியதுதான.
பக்கத்துல தங்கீருக்குற ரெண்டு நண்பர்களை தீபாவளிக் காலைச் சாப்பாட்டிற்கு வரச் சொல்லீருந்தேன். வந்தவங்கு இனிப்பு வகைகளையும் தோசையும் குடுத்து திருப்திப் படுத்தியாச்சு. அதுல பாருங்க, அந்த இனிப்புப் பருப்பை ரெண்டாவது வாட்டி கேட்டு வாங்கிச் சாப்பிட்டாங்க.
பெறகு கொஞ்ச நேரம் டீவி. ஆனா ஒழுங்கா டீவி பாக்க யார் விட்டா? ஒரே வேட்டுச் சத்தம். போன வருசத்தை விட இந்த வருசம் சத்தம் கூடியிருக்கு. சின்ன வயசில் இருந்தே அதிர் வேட்டுகளை விட வேடிக்கை வானங்களிலே ஈடுபாடு உண்டு. அதுனால இந்த வருசம் ஒன்னும் வாங்கலை. ஆஃபீசுல தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துல வான வேடிக்கைகள் காட்டுனாங்க. அது ரொம்ப நல்லா இருந்தது. அதுலயே திருப்தி வந்துருச்சு.
சன் டீவிய அப்படியே விட்டுட்டு ஜெயாவைக் கொஞ்ச நேரம் பார்த்தேன். இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடந்ததே. இளையராஜாவுக்கு வயசாச்சுன்னு இந்த நிகழ்ச்சி பாத்துதான் தெரிஞ்சது. ஜெயச்சந்திரன் வந்து பாடுவாருன்னு காத்திருந்தேன். ஆனா நான் காத்திருக்குற வரைக்கும் அவரு வரலை. மதியம் அத்தை வீட்டுக்குச் சாப்பிடப் போகுற நேரம் ஆச்சே. டீவியை நிப்பாட்டீட்டு கெளம்பியாச்சு. ரவாலட்டோடதான். விட முடியுமா?
ஒரு பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம். பைக்குல ஒருவழியா போய்ச் சேந்தேன். ரோடுகள் ரொம்ப மோசம். பாத்ததும் மாமா கேட்டுட்டார். வேற எத? என்னப்பா வெயிட் போட்டிருக்கன்னுதான். கடந்த ரெண்டு மாசத்துல கொஞ்சம் பூசுன மாதிரி ஆயிட்டேன். அதான்.
மாமா வடகர்நாடகாவைச் சேர்ந்தவர். அதுனால அன்னைக்கு அவங்க முறைப்படி சாப்பாடும் பூஜையும். ஊரிலிருந்து அவங்க சொந்தக்காரங்க வந்திருந்தாங்க. ஆகையால அவங்களே சமைச்சிருந்தாங்க.
கோதுமைப் போளி கடலைப் பருப்பு வெச்சதுதான் அவங்களுக்கு பிரதானம். ஹோளிகே-ன்னு சொல்வாங்க. அதுல நெய்யையும் பாலையும் ஊத்திச் சாப்பிடனும். எனக்கு நெய் தொண்டையில எறங்காது. என்னோட எலையில பெரிய போளிய வெச்சு, மறுக்க மறுக்க நெய்யக் கொட்டுனாங்க. வேற வழி! முடிச்சதும் அப்பளமும் வெங்காய பஜ்ஜி வந்தது. இது அத்தை ஸ்பெஷல். கூட ஊறுகாய். அப்பத்தான் நெறைய ஹோளிகேயைத் திகட்டாம திங்கலாமாம். ஊறுகாய் இல்லாமலேயே திகட்டாமச் சாப்பிட்டான் மச்சினன்.
கேக்கக் கேக்க விடாம இன்னும் ரெண்டு ஹோளிகேகளையும் அதோட அதுகளுக்கு நெய்க்குளியல் வேற. "முருகா! இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை"ன்னு சொல்லி மனசைத் தேத்திக்கிட்டேன்.
அத்தோட விட்டாங்களா? எலைல விழுந்தது ரெண்டு சப்பாத்தியும் சென்னா கறியும். அட ஆண்டவா! வயிறா! வண்ணாந்தாழியா! அப்புறம் சோறு வேறு. இதில் விஷயம் என்னன்னா....ஒரு வாட்டி மட்டும் சோறு போடக்கூடாதம். ஒரு கரண்டி போட்டதும் கண்டிப்பா இன்னொரு கரண்டி போடனுமாம். ஆம்பரான்னு ஒன்னு. நம்மூரு ரசம் போல. அத ஊத்திச் சாப்பிட்டாச்சு. அப்புறம் தயிர். அடேங்கப்பா. எந்திரிக்க முடியல.
அப்புறம் கொஞ்ச நேரம் பேசீட்டு இருந்திட்டு வீட்டுக்குக் கெளம்புனேன். விஜய் டீவியில மிஸஸ்.டவுட்பயர் ஓடிச்சு. தமிழில். நல்லாவே இருந்தது. அத முழுசும் பாத்தேன். அப்புறம் ஜெயா டீவியில் விட்டு விட்டு சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி.
மதியம் அவ்வளவு சாப்பிட்டாலும் ராத்திரி பட்டினியா கிடக்க முடியும்? மூனு தோசையச் சுட்டுச் சாப்பிட்டேன். தொட்டுக்க வெங்காயம் தாளிச்சுப் போட்ட தயிர். அந்த நேரத்துல வான வேடிக்கைகள் நல்லா இருந்தது. மாடியில நின்னு ரசிச்சுப் பாத்தேன்.
அப்புறம் சிஸ்சும் பில்லும் ஃபோன் பண்ணினாங்க. சிஸ்-பில்லுன்னா தெரியும் தானே. சிஸ் - சிஸ்டர். பில் - பிரதர் இன் லா. அவங்ககிட்ட கொஞ்ச நேரம் கத பேசீட்டு வெச்சாச்சு.
அட! ஒரு விஷயத்தைச் சொல்லலையே. பெங்களூர்ல பெஞ்ச மழைல ரோடெல்லாம் சகதி. பைக்லயும் ஒரே சகதி. வண்டியப் பாத்த அத்த, "என்ன ராகவா! வண்டி பழசு மாதிரி தெரியுது"ன்னு வேற சொல்லீட்டாங்க. சாங்காலமா வாளில தண்ணி எடுத்துட்டு வந்து கழுவினேன். நல்லாக் கழுவி வண்டியோட மானத்தைக் காப்பாத்தினேன். (அதுக்கப்புறம் பெஞ்ச மழைல மறுபடியும் வண்டி சகதியானது வேறு கத.)
நெறைய வெடி போட்டதுல, ஏழெட்டு மணி வாக்குல பயங்கர ஹீட். வீட்டுக்குள்ளயும் வெளியேயும் ஒரே வெக்கை. வெடி மருந்து நாத்தம் வேற. என்னடா வேதனைன்னு நெனைக்கும் போதே மழை பேஞ்சு அத்தனையையும் அமத்தீருச்சு. வருணபகவானுக்கு மானசீக ஃபோன் போட்டு நன்றி சொல்லீட்டுப் படுத்துத் தூங்கியாச்சு. இப்படித்தாங்க போச்சு என்னோட தீபாவளி.
கடைசியா ஒரு விஷயம். தீபாவளி முடிஞ்சு ரெண்டு நாளைக்கு எனக்கு வயிறு சரியில்லைங்க. எல்லாம் ஹோளிகேயின் நெய் வண்ணமுன்னு நெனைக்கிறேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, November 02, 2005
பொற்சிலையும் சொற்குவையும்
பொற்சிலையும் சொற்குவையும்
நிற்பதற்கு அன்றைக்குத் தில்லையின் எல்லையில் கூட இடமேயில்லை என்ற நிலை. பின்னே! மாமன்னர் ராசராசன் வருகின்றானே! அதுவும் ஒரு பெரிய பிரச்சனையை முன்னிட்டு. தில்லைக்கு ராசராசன் வருகின்றான் என்றால் உடன் தமக்கை குந்தவை நாச்சியாரையும் அழைத்து வரத்தான் போகிறான். பாலோடு சுவை வருவது போல உடன் வருவார் வந்தியத்தேவர். ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் வேறு உடன் வருகின்றார்கள். இளங்குழவிகளாகிய ராசேந்திரனும் குந்தவையும் கூட வருவதைக் காண்பதற்கே கூட்டம் கூடியிருந்தது.
ஆனால் வழக்கமாய் இறைவணக்கத்திற்கு மட்டும் வருகின்ற மன்னன் இந்த முறை வழக்கிற்கு வருகின்றான். மேலோட்டமாகப் பார்த்தால் பிரச்சனையே இல்லையென்று தோன்றும். ஆனால் அதில் தமிழின் மானமே அடங்கியிருந்தது. எல்லாம் ராசராசன் நம்பியாண்டார் நம்பியைச் சந்தித்ததால் வந்த வினை.
நம்பியோ தமிழ்த் தும்பி. அவரும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆசை கொண்டு ராசராசனிடம் வெளியிட்டார். ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் இறைவனைத் தமிழில் வணங்க விரும்பியதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலம். அதிலும் தேவாரத் தீந்தமிழ்ப் பாக்களைத் தொகுத்து நாள்தோறும் இறைவனை வழிபட விரும்பினார். ஆனால் அவரறிந்தவை ஒரு சில தேவாரப் பண்களே.
மற்றவை எல்லாம் எங்கே போயின? அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் ஊரூராகச் சென்று திருக்கோயில் பல ஏறிப் பாடிய அருந்தமிழ்ப் பண்கள் எங்கே? கதவு திறக்கவும் மூடவும் பாடிய தெய்வப் பதிகங்கள் எங்கே? பூம்பாவைக்கு உயிர் தந்த அமுதப் பாக்கள் எங்கே? எல்லாம் மறைந்து கரைந்து போயினவா! இல்லை. பூட்டப்பட்டன. இறைவணக்கத்திற்க்கு தகுதி அற்றவை எனக் குற்றம் சாட்டப் பட்டன. தில்லை வாழ் அந்தணர் கையிலிருந்த அந்த அற்புத ஓலைச்சுவடிகளுக்கு பலர் பாடிய உரிமை போய் மூடிய அறையே கிடைத்தது. அவைகளை நாடியவரும் தேடியவரும் சோர்ந்து ஓடிடும் நிலை.
இதென்ன கொடுமை! தமிழுக்குத் தமிழகத்திலேயே தாழா! இத்தனை காலம் பெரியவர்கள் பாடியதெல்லாம் பாழா! நம்பியால் இதைப் பொறுக்க முடியவில்லை. ஆண்டவன் அருட்பாக்களைக் காக்க ஆள்பவனை நாடினார். தமிழுக்கு எதிரான வங்கொடுமையைச் சாடினார். நிலமையை உணர்ந்து தமிழுக்கு இடப்பட்ட விலங்கை உடைக்க ராசராசனும் விரும்பினான். தமக்கையோடு கூடி ஆலோசித்துத் தில்லை சென்றான். பெரிய சிவாச்சாரியிடம் பதமாகவே சொன்னான். தேவார ஓலைச்சுவடிகளைத் தருமாறு வேண்டினான்.
ஆனால் சிவாச்சாரிக்கு ஓலைச்சுவடிகளை வெளியே விட விருப்பமேயில்லை. எப்படித் தடுப்பது என்று எண்ணி ஒரு குயுக்தியான மறுமொழி கொடுத்தார். "சோழர் பெரும! தாங்கள் அறியாததல்ல. தேவாரப் பண்கள் சமயக் குரவரால் பாடப் பட்டவை. தெய்வத் தன்மை பொருந்தியவை. அப்படிப்பட்ட பாக்கள் இந்த அறைக்குள் எப்படிச் சென்றன என்று அறியோம். பன்னெடுங்காலமாக இப்படி மூடிக்கிடக்கின்றன. இதைத் தில்லை வாழ் அந்தணர்களாகிய நாங்கள் சமயக்குரவர்களின் விருப்பமாகவே எண்ணுகிறோம். இறைவனோடு ஒன்று கலந்த அவர்களுக்கே இந்த ஓலைச்சுவடிகள் மீது உரிமையுண்டு என்பதே எங்கள் நம்பிக்கை. அவர்களே வந்துதான் இந்த அறையைத் திறந்து ஓலைச்சுவடிகளை எடுக்க வேண்டுமென்று இறைவன் விருப்பம் கொண்டுள்ளதாகவே தினமும் இறைத்தொண்டு புரிந்து வரும் நாங்கள் நம்புகிறோம். அதையும் மீறித் திறந்தால் நாட்டிற்கும் மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய தங்களுக்கும் ஏதேனும் குறை நேறுமோ என்று அஞ்சுகின்றோம். உங்கள் மீதும் நாட்டின் மீதும் நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் உணர்ந்து எங்களை இதற்கு மேலும் வற்புறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்."
சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை தெரிந்தாலும் வெல்லத்தை உதட்டிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்த பெரிய சிவாச்சாரியின் எண்ணத்துப் பொருட்கறையை ராசராசன் உணர்ந்தான். அப்பொழுதைக்கு அவர்களை ஒன்றும் கேட்காமல் தஞ்சை திரும்பினான். ஆணையிட்டுத் திறந்திருக்கலாம். அப்படித் திறந்து எடுத்தால் பின்னால் ஏது நேர்ந்தாலும் அந்தணர் பேச்சை மீறி அறையைத் திறந்த குற்றம் தன் மேல் என்று பொதுமக்களும் எண்ணக்கூடும் என்பதையும் அறிந்திருந்தான் மன்னன்.
குறிப்பிட்ட நல்ல நாளொன்றில் தானும் சமயக்குரவர் மூவரும் வந்து ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்வதாக ஓலையொன்றை தில்லையர்களுக்கு அனுப்பினார். பெரிய சிவாச்சாரி உண்மையிலேயே திகைத்துப் போனார். மன்னன் எண்ணத்தைக் கொஞ்சமும் அவரால் ஊகிக்க முடியவில்லை. "மறைந்த அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் வரவா போகின்றார்கள்! மன்னனால் எப்படி அழைத்து வர முடியும். மானிடன் முடிக்கக் கூடிய செயலா அது! சரி. வரட்டும் பார்க்கலாம்!" சிவாச்சாரிக்கும் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
அப்படி ராசராசன் குறிப்பிட்ட நந்நாளில்தான் தில்லையில் கூட்டம் நிறைந்திருந்தது. ஆறு குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் ராசராசனும் அவனது தேவியர் இருவரும் வந்தனர். உடன் வந்த மற்றொரு தேரில் குந்தவை நாச்சியாரும் வந்தியத் தேவரும் இருந்தனர். அவர்களோடு ராசேந்திரனும் குந்தவையும். அடுத்து வந்த தேரில் நம்பியாண்டார் நம்பி இருந்தார். பின்னால் மூன்று பெரும் பல்லக்குகள் வந்தன. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்குகள் பட்டுத்திரைச்சீலைகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. அந்தத் திரைச்சீலைகளில் ஐந்தெழுத்து மந்திரமும் ஆவுடையாரும் எழுதப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பின்னால் பெரிய பட்டத்தானை வந்தது. அதில் பொன்னம்பாரி ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் அதில் யாரும் இருக்கவில்லை.
இருமருங்கிலும் நின்று மன்னனை வாழ்த்தி மக்கள் ஆர்ப்பரித்தனர். சோழ வளநாட்டைப் புகழ்ந்து குரலெழுப்பினர். அனைவருக்கும் தனது கையை அசைத்து அன்பைத் தெரிவித்த ராசராசன் நேராகத் தில்லையம்பலம் சென்றான். அந்தணர் கூட்டமே புனித நீர்க்குட மதிப்பளிக்க நின்று கொண்டிருந்தது. அவைகளை ஏற்றுக் கொண்ட மன்னன், உடன் வந்தவரோடும் பல்லக்குகளோடும் பட்டத்தானையோடும் கோயிலுள் நுழைந்தான். மூன்று பல்லக்குகளும் இறக்கி வைக்கப்பட்டன. நடப்பவைகளை ஒன்றும் புரியாமல் பெரிய சிவாச்சாரி பார்த்துக் கொண்டிருந்தார். மன்னன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடும் குழப்பத்தோடும் காத்திருந்தார். மக்களும்தான். ஆனால் நீண்ட நேரம் காக்க வைக்கவில்லை ராசராசன்.
"தில்லையூர் அந்தணர்களின் தலைவரும் தில்லைக் கோயில் பொறுப்பாளியுமாகிய பெரிய சிவாச்சாரியிடம் நான் ஒப்புக் கொண்ட வகையில் நாடெங்கும் சென்று தீந்தமிழ் பாடி இறைவனோடு கலந்த சமயக் குரவர் மூவரையும் அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் ஒப்புக் கொண்ட படி தேவாரச் சுவடிகளைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்."
அசந்து போனார் சிவாச்சாரி. "அப்பரா வந்திருக்கிறார்! சுந்தர் வந்திருக்கிறார் என்றாலும் நம்ப முடியவில்லையே! ஞானசம்பந்தர் உண்மையிலே வந்து விட்டாரோ! சரி யார் வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்!" இப்படி மனதில் நினைத்தவர் அரசனிடத்தில் இப்படி கேட்டுக் கொண்டார். "மாமன்னரே! மும்முடிச் சோழராகிய தாங்கள் கங்கையும் கொண்டான். தங்கள் மனம் நினைத்தால் நடவாதது ஒன்றில்லை. ஆனாலும் வந்தவர்கள் தேவாரப் பாடல்களைத் தந்தவர்கள்தானா என்று அறிய எனது மனம் ஆவலில் ததும்புகிறது. சமயக்குரவர் மூவரையும் எங்கள் கண்குளிரக் காட்டுங்கள்." பேச்சில் மட்டும் இதமும் பதமும் இருந்தது.
"ஆகட்டும்" என்று மட்டும் சொன்ன ராசராசன் தானே பல்லக்குகளின் அருகில் சென்றான். முதற் பல்லக்கின் அருகின் நின்று சொன்னான். "கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நமசிவாய என்ற சொல்லைக் காட்டிக் கரை கண்ட பெருந்தொண்டர்! தாயும் தந்தையுமாய் ஆண்டவனைத் தொழுது என்றும் திருக்கோயில்களில் புற்களை உழுது செம்மைப் படுத்திய பெருந்தகை! அப்பர் என்று மதிப்புடன் போற்றப் படும் திருநாவுக்கரசர்! இதோ உங்களுக்காக வந்திருக்கிறார்!" பல்லக்கின் சீலையைத் திறந்தான். உள்ளே அப்பரைப் போலவே ஒரு பொற்பாவை இருந்தது.
இரண்டாவது பல்லக்கின் அருகில் சென்றான். "குழந்தையின் அழுகை கூடத் தொழுகை என்று உமையம்மை ஏற்று ஞானப்பால் புகட்டிய தமிழ்க் குழந்தை! கை தட்டித் தட்டிப் பாடினால் குழந்தையின் கை சிவக்கும் என்று பொன்னில் தாளம் தந்த ஓசை கொடுத்த நாயகியின் செல்லப் பிள்ளை! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கருதித் தமிழில் பாடி பூம்பாவைக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமான் மீண்டும் தமிழுக்காக வந்துள்ளார்!" பல்லக்குத் திறக்கவும் உள்ளே பொற்சிலையாக நின்றார் திருஞானசம்பந்தர்.
"இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய ஊரூராய் நடந்தவர் உண்டு. ஆனால் தனது காதலுக்காக இறைவனே தூது நடக்கப் பெற்ற சுந்தரர்! சித்தமெங்கும் நிறைந்த இறைவனை பித்தன் என்று வைத வன்தொண்டர்! அந்தப் பித்தன் என்றை சொல்லையே வைத்துத் துவக்கிப் பண் சமைத்த நம்பி ஆருரன் இன்று இங்கு வந்து தான் முன் சமைத்த பண்களைக் கேட்கின்றார்." மூன்றாம் பல்லக்கின் திரையும் விலகி உள்ளிருந்த நம்பி ஆரூரனின் பொற்சிலையைக் காட்டியது.
அசந்து போனார் சிவாச்சாரி. "மன்னா! இது முறையா! பொய்யும் பொய்த்துப் போய் உண்மை உய்த்த நாவினராகிய தங்கள் வாய்ச்சொல் பிழையாதல் முறையா! சமயக் குரவர் மூவரையும் அழைத்து வருகிறேன் என்று சொல்லி மூன்று பொற்சிலைகளைக் கொண்டு வந்தால் எப்படி? இதை எப்படி ஏற்றுக் கொள்வது?"
சிவாச்சாரி சொன்னதும் சிரித்து விட்டான் ராசராசன். சிவாச்சாரி தொலைந்தார் என்றே எல்லாரும் முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் ராசராசன் இதமாகச் சொன்னான். "தில்லையரே! இந்த அம்பலத்தில் ஆவுடையாராக நீங்கள் வணங்குவது யாரை?"
"எல்லாம் வல்ல ஈசனைத்தான் ஆவுடையாராக வணங்குகிறோம்."
அடுத்த கேள்வியும் வந்தது மன்னனிடமிருந்து. "ஒற்றைக் காலைத் தூக்கிக் கற்றைச் சடையை விரித்து பற்றைப் பழிக்கும் உடுக்கையைத் தட்டிக் கொண்டு அம்புலியின் கீற்றையும் ஆற்றையும் சூடியாடுகின்றனாக நீங்கள் வணங்குவது யாரை?"
"அதுவும் ஈசனைத்தான்!"
"அப்படி இருக்க, இந்தப் பொற்சிலைகள் மட்டும் ஏன் சமயக் குரவர்கள் ஆகா? நீங்கள் ஏற்க மறுக்க நியாயமான காரணம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை."
"சோழர் பெரும! சமயக் குரவர் மூவரும் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேற்றுத் தட்டிய பொற்சிலை என்றால் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?"
"சிவாச்சாரி! சமயக் குரவர்கள் இப்பொழுது எங்கே என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?" படக்கென ஒரு கேள்வி ராசராசனிடமிருந்து.
"ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனைத் தொழுது பாடித் தொண்டாற்றியவர்கள் இறைவனோடு கலந்தனர் என்பது கருத்து."
"சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். நீங்கள் வணங்கும் சிலை இறைவனா? இல்லை இறைவன் சிலையா? இதற்கு விடை சொல்லுங்கள் சிவாச்சாரி!"
சிவாச்சாரி ஒரு நொடி திகைத்துப் போனார். ஆனாலும் அவருக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார். "மன்னா! இறைவனே சிலை. சிலையே இறைவன்."
சிவாச்சாரி சொன்னதை விளக்கச் சொன்னான் ராசராசன்.
"எங்கும் நிறைந்த இறைவன் இந்தக் கல்லில் நிறைந்திருக்கிறான். ஆகையால்தான் அப்படிச் சொன்னேன்."
"நல்லது. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?"
"ஆம். மன்னா! அப்படித்தான் நான் நம்புகிறேன்." சிவாச்சாரியார் உறுதியாகச் சொன்னார்.
"அப்படியானால் எங்கும் நிறைந்த இறைவன் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்திருக்கின்றான் என்றுதானே பொருள். அப்படி இந்தப் பொற்சிலைகளில் இறைவன் நிறைந்திருக்கிறான் என்றால் இறைவனோடு இரண்டறக் கலந்த அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்தவர்கள்தானே. ஆகையால் மீண்டும் சொல்கின்றேன். சமயக் குரவர்கள் தங்கள் பாக்களைக் கேட்கிறார்கள். கொடுக்கின்றீர்களா?"
சிவாச்சாரியாருக்குப் பேச்சு வரவில்லை. என்ன சொன்னாலும் மன்னன் விட மாட்டான் என்று தெரிந்து போனது. எதற்கு நாடாளும் வேந்தனோடு வீண்வம்பு என்று தெளிந்து திறவுகோலைக் கொடுத்தார்.
திறவுகோலைக் கம்பீரமாகப் பெற்றுக் கொண்ட ராசராசன் பூட்டியிருந்த அறையை நோக்கிச் சென்றான். கதவு கூட துடைக்கப் படாமல் இருந்தது. திறவுகோல் பட்டதும் பூட்டு நெகிழ்ந்து விழுந்தது. நாள்பட்ட பூச்சு துருப்பிடித்து இற்றுப் போயிருந்தது. கதவைத் தள்ளித் திறந்து ஒட்டடை நிறைந்த அறைக்குள் நுழைந்தார். நம்பியாண்டார் நம்பியையும் அழைத்தார்.
அந்த அறைக்குள்ளே பைந்தமிழ்ப் புதையலைக் காணவில்லை. மாறாக கரையான் புற்று மட்டும் பெரிதாக வளர்ந்திருந்தது. வெற்றி கொண்டோம் என்று நினைத்து மகிழ்ந்த வேளையில் அந்த வெற்றியெல்லாம் அற்றுப் போனதே எனச் சோர்ந்தான். நம்பி தான் ராசராசனுக்குத் தெம்பூட்டினார். "சோழ மன்னா! பற்றை விலக்கினால் இறை கிடைக்கும். புற்றை விலக்கினால் உன் தமிழ்ப் பசிக்கு இரை கிடைக்கலாம். தேடுக."
மன்னனும் ஆலவாயண்ணலை உள்ளத்தில் நிறுத்தி புற்றைத் தட்டினான். மண் உதிரவும் உள்ளிருந்து பழம் ஓலைச் சுவடிகள் சிதறின. சேற்றில் விழுந்த பொற்காசுகளை அள்ளுவது போல ஓலைச் சுவடிகளை அகமும் முகமும் மலர்ந்து அள்ளினான் ராசராசன். அந்தோ பரிதாபம். ஒன்று நன்றாக இருந்தால் ஒன்று பழுதாகி உதிர்ந்தது. இப்படி பாதிக்குப் பாதி பூதியாகியிருந்தது. "ஆண்டவா!" தன்னை மறந்து கதறினான் ராசராசன்.
அவன் அழுகைக்கு உடனே ஆறுதல் கிடைத்தது. ஆம். மங்கலப் பொற்சலங்கையின் ஒலி எழும்பியது. ஈசன் குரல் எழுப்பினார். "ராசராசா! இருப்பவைகளைக் கொள்க. பழையன கழிந்தன. என்றும் புதியன நிலைத்தன. வருந்தற்க."
பெருமகிச்சிக் கடலில் மிதந்தான் மன்னன். மக்கள் அனைவரும் இன்பமாய் ஆர்ப்பரித்தனர். சிவாச்சாரி வெலவெலத்துப் போயிருந்தார். இப்படியும் நடக்குமோ என்று வியந்து வியந்து குமைந்து போனார். அவர் கண்முன்னேயே பிழைத்த ஓலைச்சுவடிகள் எடுத்துச் செல்லப் பட்டன. இறைவன் திருவடிகளில் வைத்து வழிபடப் பட்டன. அவரை எதிர் நோக்குவார் யாருமில்லை. இறைவனே சொன்ன பிறகு மறுபேச்சேது.
பொற்பேழையில் அந்த ஓலைச்சுவடிகள் அடுக்கப்பட்டு பட்டத்தானையின் பொன்னம்பாரியில் ஏற்றப்பட்டன. ராசராசனும் ஆனையேறி அம்பாரியின் பின் அமர்ந்து வெள்ளிப் பிடியும் மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கவிரியைக் கொண்டு வீசினான். ஆனை தஞ்சையை நோக்கித் திரும்பியது. தமிழ் தனக்கான இடத்தை மீண்டும் மீண்டு கொண்டது.
அதே நேரத்தில் பூரிப்போடு தனது கணவன் வந்தியத்தேவருக்கு முகவியர்வை போக்கிக் கொண்டிருந்தாள் குந்தவை நாச்சியார். பின்னே இன்றைய நாடகத்தின் மையப் பாத்திரமே அவர்தானே. குந்தவையும் ராசராசனும் போட்ட திட்டப்படி திருக்கோயிலுள் ஒளிந்து நின்று பொற்சிலம்பை ஒலித்ததும் குரல் கொடுத்ததும் அவர்தானே.
அன்புடன்,
கோ.இராகவன்
நிற்பதற்கு அன்றைக்குத் தில்லையின் எல்லையில் கூட இடமேயில்லை என்ற நிலை. பின்னே! மாமன்னர் ராசராசன் வருகின்றானே! அதுவும் ஒரு பெரிய பிரச்சனையை முன்னிட்டு. தில்லைக்கு ராசராசன் வருகின்றான் என்றால் உடன் தமக்கை குந்தவை நாச்சியாரையும் அழைத்து வரத்தான் போகிறான். பாலோடு சுவை வருவது போல உடன் வருவார் வந்தியத்தேவர். ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் வேறு உடன் வருகின்றார்கள். இளங்குழவிகளாகிய ராசேந்திரனும் குந்தவையும் கூட வருவதைக் காண்பதற்கே கூட்டம் கூடியிருந்தது.
ஆனால் வழக்கமாய் இறைவணக்கத்திற்கு மட்டும் வருகின்ற மன்னன் இந்த முறை வழக்கிற்கு வருகின்றான். மேலோட்டமாகப் பார்த்தால் பிரச்சனையே இல்லையென்று தோன்றும். ஆனால் அதில் தமிழின் மானமே அடங்கியிருந்தது. எல்லாம் ராசராசன் நம்பியாண்டார் நம்பியைச் சந்தித்ததால் வந்த வினை.
நம்பியோ தமிழ்த் தும்பி. அவரும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆசை கொண்டு ராசராசனிடம் வெளியிட்டார். ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் இறைவனைத் தமிழில் வணங்க விரும்பியதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலம். அதிலும் தேவாரத் தீந்தமிழ்ப் பாக்களைத் தொகுத்து நாள்தோறும் இறைவனை வழிபட விரும்பினார். ஆனால் அவரறிந்தவை ஒரு சில தேவாரப் பண்களே.
மற்றவை எல்லாம் எங்கே போயின? அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் ஊரூராகச் சென்று திருக்கோயில் பல ஏறிப் பாடிய அருந்தமிழ்ப் பண்கள் எங்கே? கதவு திறக்கவும் மூடவும் பாடிய தெய்வப் பதிகங்கள் எங்கே? பூம்பாவைக்கு உயிர் தந்த அமுதப் பாக்கள் எங்கே? எல்லாம் மறைந்து கரைந்து போயினவா! இல்லை. பூட்டப்பட்டன. இறைவணக்கத்திற்க்கு தகுதி அற்றவை எனக் குற்றம் சாட்டப் பட்டன. தில்லை வாழ் அந்தணர் கையிலிருந்த அந்த அற்புத ஓலைச்சுவடிகளுக்கு பலர் பாடிய உரிமை போய் மூடிய அறையே கிடைத்தது. அவைகளை நாடியவரும் தேடியவரும் சோர்ந்து ஓடிடும் நிலை.
இதென்ன கொடுமை! தமிழுக்குத் தமிழகத்திலேயே தாழா! இத்தனை காலம் பெரியவர்கள் பாடியதெல்லாம் பாழா! நம்பியால் இதைப் பொறுக்க முடியவில்லை. ஆண்டவன் அருட்பாக்களைக் காக்க ஆள்பவனை நாடினார். தமிழுக்கு எதிரான வங்கொடுமையைச் சாடினார். நிலமையை உணர்ந்து தமிழுக்கு இடப்பட்ட விலங்கை உடைக்க ராசராசனும் விரும்பினான். தமக்கையோடு கூடி ஆலோசித்துத் தில்லை சென்றான். பெரிய சிவாச்சாரியிடம் பதமாகவே சொன்னான். தேவார ஓலைச்சுவடிகளைத் தருமாறு வேண்டினான்.
ஆனால் சிவாச்சாரிக்கு ஓலைச்சுவடிகளை வெளியே விட விருப்பமேயில்லை. எப்படித் தடுப்பது என்று எண்ணி ஒரு குயுக்தியான மறுமொழி கொடுத்தார். "சோழர் பெரும! தாங்கள் அறியாததல்ல. தேவாரப் பண்கள் சமயக் குரவரால் பாடப் பட்டவை. தெய்வத் தன்மை பொருந்தியவை. அப்படிப்பட்ட பாக்கள் இந்த அறைக்குள் எப்படிச் சென்றன என்று அறியோம். பன்னெடுங்காலமாக இப்படி மூடிக்கிடக்கின்றன. இதைத் தில்லை வாழ் அந்தணர்களாகிய நாங்கள் சமயக்குரவர்களின் விருப்பமாகவே எண்ணுகிறோம். இறைவனோடு ஒன்று கலந்த அவர்களுக்கே இந்த ஓலைச்சுவடிகள் மீது உரிமையுண்டு என்பதே எங்கள் நம்பிக்கை. அவர்களே வந்துதான் இந்த அறையைத் திறந்து ஓலைச்சுவடிகளை எடுக்க வேண்டுமென்று இறைவன் விருப்பம் கொண்டுள்ளதாகவே தினமும் இறைத்தொண்டு புரிந்து வரும் நாங்கள் நம்புகிறோம். அதையும் மீறித் திறந்தால் நாட்டிற்கும் மன்னர்களுக்கெல்லாம் மன்னராகிய தங்களுக்கும் ஏதேனும் குறை நேறுமோ என்று அஞ்சுகின்றோம். உங்கள் மீதும் நாட்டின் மீதும் நாங்கள் கொண்டுள்ள அக்கறையை நீங்கள் உணர்ந்து எங்களை இதற்கு மேலும் வற்புறுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்."
சர்க்கரை தடவிய பேச்சில் அக்கறை தெரிந்தாலும் வெல்லத்தை உதட்டிலும் கள்ளத்தை உள்ளத்திலும் வைத்த பெரிய சிவாச்சாரியின் எண்ணத்துப் பொருட்கறையை ராசராசன் உணர்ந்தான். அப்பொழுதைக்கு அவர்களை ஒன்றும் கேட்காமல் தஞ்சை திரும்பினான். ஆணையிட்டுத் திறந்திருக்கலாம். அப்படித் திறந்து எடுத்தால் பின்னால் ஏது நேர்ந்தாலும் அந்தணர் பேச்சை மீறி அறையைத் திறந்த குற்றம் தன் மேல் என்று பொதுமக்களும் எண்ணக்கூடும் என்பதையும் அறிந்திருந்தான் மன்னன்.
குறிப்பிட்ட நல்ல நாளொன்றில் தானும் சமயக்குரவர் மூவரும் வந்து ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்வதாக ஓலையொன்றை தில்லையர்களுக்கு அனுப்பினார். பெரிய சிவாச்சாரி உண்மையிலேயே திகைத்துப் போனார். மன்னன் எண்ணத்தைக் கொஞ்சமும் அவரால் ஊகிக்க முடியவில்லை. "மறைந்த அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் வரவா போகின்றார்கள்! மன்னனால் எப்படி அழைத்து வர முடியும். மானிடன் முடிக்கக் கூடிய செயலா அது! சரி. வரட்டும் பார்க்கலாம்!" சிவாச்சாரிக்கும் தாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.
அப்படி ராசராசன் குறிப்பிட்ட நந்நாளில்தான் தில்லையில் கூட்டம் நிறைந்திருந்தது. ஆறு குதிரைகள் பூட்டிய பெரிய தேரில் ராசராசனும் அவனது தேவியர் இருவரும் வந்தனர். உடன் வந்த மற்றொரு தேரில் குந்தவை நாச்சியாரும் வந்தியத் தேவரும் இருந்தனர். அவர்களோடு ராசேந்திரனும் குந்தவையும். அடுத்து வந்த தேரில் நம்பியாண்டார் நம்பி இருந்தார். பின்னால் மூன்று பெரும் பல்லக்குகள் வந்தன. அழகிய வேலைப்பாடுகள் அமைந்த பல்லக்குகள் பட்டுத்திரைச்சீலைகள் கொண்டு மூடப்பட்டிருந்தன. அந்தத் திரைச்சீலைகளில் ஐந்தெழுத்து மந்திரமும் ஆவுடையாரும் எழுதப்பட்டிருந்தன. அவைகளுக்குப் பின்னால் பெரிய பட்டத்தானை வந்தது. அதில் பொன்னம்பாரி ஏற்றப்பட்டிருந்தது. ஆனால் அதில் யாரும் இருக்கவில்லை.
இருமருங்கிலும் நின்று மன்னனை வாழ்த்தி மக்கள் ஆர்ப்பரித்தனர். சோழ வளநாட்டைப் புகழ்ந்து குரலெழுப்பினர். அனைவருக்கும் தனது கையை அசைத்து அன்பைத் தெரிவித்த ராசராசன் நேராகத் தில்லையம்பலம் சென்றான். அந்தணர் கூட்டமே புனித நீர்க்குட மதிப்பளிக்க நின்று கொண்டிருந்தது. அவைகளை ஏற்றுக் கொண்ட மன்னன், உடன் வந்தவரோடும் பல்லக்குகளோடும் பட்டத்தானையோடும் கோயிலுள் நுழைந்தான். மூன்று பல்லக்குகளும் இறக்கி வைக்கப்பட்டன. நடப்பவைகளை ஒன்றும் புரியாமல் பெரிய சிவாச்சாரி பார்த்துக் கொண்டிருந்தார். மன்னன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆவலோடும் குழப்பத்தோடும் காத்திருந்தார். மக்களும்தான். ஆனால் நீண்ட நேரம் காக்க வைக்கவில்லை ராசராசன்.
"தில்லையூர் அந்தணர்களின் தலைவரும் தில்லைக் கோயில் பொறுப்பாளியுமாகிய பெரிய சிவாச்சாரியிடம் நான் ஒப்புக் கொண்ட வகையில் நாடெங்கும் சென்று தீந்தமிழ் பாடி இறைவனோடு கலந்த சமயக் குரவர் மூவரையும் அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் ஒப்புக் கொண்ட படி தேவாரச் சுவடிகளைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்."
அசந்து போனார் சிவாச்சாரி. "அப்பரா வந்திருக்கிறார்! சுந்தர் வந்திருக்கிறார் என்றாலும் நம்ப முடியவில்லையே! ஞானசம்பந்தர் உண்மையிலே வந்து விட்டாரோ! சரி யார் வந்திருக்கின்றார்கள் என்று பார்க்கலாம்!" இப்படி மனதில் நினைத்தவர் அரசனிடத்தில் இப்படி கேட்டுக் கொண்டார். "மாமன்னரே! மும்முடிச் சோழராகிய தாங்கள் கங்கையும் கொண்டான். தங்கள் மனம் நினைத்தால் நடவாதது ஒன்றில்லை. ஆனாலும் வந்தவர்கள் தேவாரப் பாடல்களைத் தந்தவர்கள்தானா என்று அறிய எனது மனம் ஆவலில் ததும்புகிறது. சமயக்குரவர் மூவரையும் எங்கள் கண்குளிரக் காட்டுங்கள்." பேச்சில் மட்டும் இதமும் பதமும் இருந்தது.
"ஆகட்டும்" என்று மட்டும் சொன்ன ராசராசன் தானே பல்லக்குகளின் அருகில் சென்றான். முதற் பல்லக்கின் அருகின் நின்று சொன்னான். "கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நமசிவாய என்ற சொல்லைக் காட்டிக் கரை கண்ட பெருந்தொண்டர்! தாயும் தந்தையுமாய் ஆண்டவனைத் தொழுது என்றும் திருக்கோயில்களில் புற்களை உழுது செம்மைப் படுத்திய பெருந்தகை! அப்பர் என்று மதிப்புடன் போற்றப் படும் திருநாவுக்கரசர்! இதோ உங்களுக்காக வந்திருக்கிறார்!" பல்லக்கின் சீலையைத் திறந்தான். உள்ளே அப்பரைப் போலவே ஒரு பொற்பாவை இருந்தது.
இரண்டாவது பல்லக்கின் அருகில் சென்றான். "குழந்தையின் அழுகை கூடத் தொழுகை என்று உமையம்மை ஏற்று ஞானப்பால் புகட்டிய தமிழ்க் குழந்தை! கை தட்டித் தட்டிப் பாடினால் குழந்தையின் கை சிவக்கும் என்று பொன்னில் தாளம் தந்த ஓசை கொடுத்த நாயகியின் செல்லப் பிள்ளை! தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று கருதித் தமிழில் பாடி பூம்பாவைக்கு உயிர் கொடுத்த ஞானசம்பந்தப் பெருமான் மீண்டும் தமிழுக்காக வந்துள்ளார்!" பல்லக்குத் திறக்கவும் உள்ளே பொற்சிலையாக நின்றார் திருஞானசம்பந்தர்.
"இறைவனுக்கும் அடியவர்களுக்கும் தொண்டு செய்ய ஊரூராய் நடந்தவர் உண்டு. ஆனால் தனது காதலுக்காக இறைவனே தூது நடக்கப் பெற்ற சுந்தரர்! சித்தமெங்கும் நிறைந்த இறைவனை பித்தன் என்று வைத வன்தொண்டர்! அந்தப் பித்தன் என்றை சொல்லையே வைத்துத் துவக்கிப் பண் சமைத்த நம்பி ஆருரன் இன்று இங்கு வந்து தான் முன் சமைத்த பண்களைக் கேட்கின்றார்." மூன்றாம் பல்லக்கின் திரையும் விலகி உள்ளிருந்த நம்பி ஆரூரனின் பொற்சிலையைக் காட்டியது.
அசந்து போனார் சிவாச்சாரி. "மன்னா! இது முறையா! பொய்யும் பொய்த்துப் போய் உண்மை உய்த்த நாவினராகிய தங்கள் வாய்ச்சொல் பிழையாதல் முறையா! சமயக் குரவர் மூவரையும் அழைத்து வருகிறேன் என்று சொல்லி மூன்று பொற்சிலைகளைக் கொண்டு வந்தால் எப்படி? இதை எப்படி ஏற்றுக் கொள்வது?"
சிவாச்சாரி சொன்னதும் சிரித்து விட்டான் ராசராசன். சிவாச்சாரி தொலைந்தார் என்றே எல்லாரும் முடிவு கட்டி விட்டார்கள். ஆனால் ராசராசன் இதமாகச் சொன்னான். "தில்லையரே! இந்த அம்பலத்தில் ஆவுடையாராக நீங்கள் வணங்குவது யாரை?"
"எல்லாம் வல்ல ஈசனைத்தான் ஆவுடையாராக வணங்குகிறோம்."
அடுத்த கேள்வியும் வந்தது மன்னனிடமிருந்து. "ஒற்றைக் காலைத் தூக்கிக் கற்றைச் சடையை விரித்து பற்றைப் பழிக்கும் உடுக்கையைத் தட்டிக் கொண்டு அம்புலியின் கீற்றையும் ஆற்றையும் சூடியாடுகின்றனாக நீங்கள் வணங்குவது யாரை?"
"அதுவும் ஈசனைத்தான்!"
"அப்படி இருக்க, இந்தப் பொற்சிலைகள் மட்டும் ஏன் சமயக் குரவர்கள் ஆகா? நீங்கள் ஏற்க மறுக்க நியாயமான காரணம் எதுவும் எனக்குத் தோன்றவில்லை."
"சோழர் பெரும! சமயக் குரவர் மூவரும் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேற்றுத் தட்டிய பொற்சிலை என்றால் எப்படி நம்புவது? என்ன ஆதாரம்?"
"சிவாச்சாரி! சமயக் குரவர்கள் இப்பொழுது எங்கே என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?" படக்கென ஒரு கேள்வி ராசராசனிடமிருந்து.
"ஆண்டாண்டு காலமாய் ஆண்டவனைத் தொழுது பாடித் தொண்டாற்றியவர்கள் இறைவனோடு கலந்தனர் என்பது கருத்து."
"சரி. அப்படியே வைத்துக் கொள்வோம். நீங்கள் வணங்கும் சிலை இறைவனா? இல்லை இறைவன் சிலையா? இதற்கு விடை சொல்லுங்கள் சிவாச்சாரி!"
சிவாச்சாரி ஒரு நொடி திகைத்துப் போனார். ஆனாலும் அவருக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார். "மன்னா! இறைவனே சிலை. சிலையே இறைவன்."
சிவாச்சாரி சொன்னதை விளக்கச் சொன்னான் ராசராசன்.
"எங்கும் நிறைந்த இறைவன் இந்தக் கல்லில் நிறைந்திருக்கிறான். ஆகையால்தான் அப்படிச் சொன்னேன்."
"நல்லது. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்று நீங்கள் நம்புகின்றீர்களா?"
"ஆம். மன்னா! அப்படித்தான் நான் நம்புகிறேன்." சிவாச்சாரியார் உறுதியாகச் சொன்னார்.
"அப்படியானால் எங்கும் நிறைந்த இறைவன் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்திருக்கின்றான் என்றுதானே பொருள். அப்படி இந்தப் பொற்சிலைகளில் இறைவன் நிறைந்திருக்கிறான் என்றால் இறைவனோடு இரண்டறக் கலந்த அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் இந்தப் பொற்சிலைகளிலும் நிறைந்தவர்கள்தானே. ஆகையால் மீண்டும் சொல்கின்றேன். சமயக் குரவர்கள் தங்கள் பாக்களைக் கேட்கிறார்கள். கொடுக்கின்றீர்களா?"
சிவாச்சாரியாருக்குப் பேச்சு வரவில்லை. என்ன சொன்னாலும் மன்னன் விட மாட்டான் என்று தெரிந்து போனது. எதற்கு நாடாளும் வேந்தனோடு வீண்வம்பு என்று தெளிந்து திறவுகோலைக் கொடுத்தார்.
திறவுகோலைக் கம்பீரமாகப் பெற்றுக் கொண்ட ராசராசன் பூட்டியிருந்த அறையை நோக்கிச் சென்றான். கதவு கூட துடைக்கப் படாமல் இருந்தது. திறவுகோல் பட்டதும் பூட்டு நெகிழ்ந்து விழுந்தது. நாள்பட்ட பூச்சு துருப்பிடித்து இற்றுப் போயிருந்தது. கதவைத் தள்ளித் திறந்து ஒட்டடை நிறைந்த அறைக்குள் நுழைந்தார். நம்பியாண்டார் நம்பியையும் அழைத்தார்.
அந்த அறைக்குள்ளே பைந்தமிழ்ப் புதையலைக் காணவில்லை. மாறாக கரையான் புற்று மட்டும் பெரிதாக வளர்ந்திருந்தது. வெற்றி கொண்டோம் என்று நினைத்து மகிழ்ந்த வேளையில் அந்த வெற்றியெல்லாம் அற்றுப் போனதே எனச் சோர்ந்தான். நம்பி தான் ராசராசனுக்குத் தெம்பூட்டினார். "சோழ மன்னா! பற்றை விலக்கினால் இறை கிடைக்கும். புற்றை விலக்கினால் உன் தமிழ்ப் பசிக்கு இரை கிடைக்கலாம். தேடுக."
மன்னனும் ஆலவாயண்ணலை உள்ளத்தில் நிறுத்தி புற்றைத் தட்டினான். மண் உதிரவும் உள்ளிருந்து பழம் ஓலைச் சுவடிகள் சிதறின. சேற்றில் விழுந்த பொற்காசுகளை அள்ளுவது போல ஓலைச் சுவடிகளை அகமும் முகமும் மலர்ந்து அள்ளினான் ராசராசன். அந்தோ பரிதாபம். ஒன்று நன்றாக இருந்தால் ஒன்று பழுதாகி உதிர்ந்தது. இப்படி பாதிக்குப் பாதி பூதியாகியிருந்தது. "ஆண்டவா!" தன்னை மறந்து கதறினான் ராசராசன்.
அவன் அழுகைக்கு உடனே ஆறுதல் கிடைத்தது. ஆம். மங்கலப் பொற்சலங்கையின் ஒலி எழும்பியது. ஈசன் குரல் எழுப்பினார். "ராசராசா! இருப்பவைகளைக் கொள்க. பழையன கழிந்தன. என்றும் புதியன நிலைத்தன. வருந்தற்க."
பெருமகிச்சிக் கடலில் மிதந்தான் மன்னன். மக்கள் அனைவரும் இன்பமாய் ஆர்ப்பரித்தனர். சிவாச்சாரி வெலவெலத்துப் போயிருந்தார். இப்படியும் நடக்குமோ என்று வியந்து வியந்து குமைந்து போனார். அவர் கண்முன்னேயே பிழைத்த ஓலைச்சுவடிகள் எடுத்துச் செல்லப் பட்டன. இறைவன் திருவடிகளில் வைத்து வழிபடப் பட்டன. அவரை எதிர் நோக்குவார் யாருமில்லை. இறைவனே சொன்ன பிறகு மறுபேச்சேது.
பொற்பேழையில் அந்த ஓலைச்சுவடிகள் அடுக்கப்பட்டு பட்டத்தானையின் பொன்னம்பாரியில் ஏற்றப்பட்டன. ராசராசனும் ஆனையேறி அம்பாரியின் பின் அமர்ந்து வெள்ளிப் பிடியும் மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கவிரியைக் கொண்டு வீசினான். ஆனை தஞ்சையை நோக்கித் திரும்பியது. தமிழ் தனக்கான இடத்தை மீண்டும் மீண்டு கொண்டது.
அதே நேரத்தில் பூரிப்போடு தனது கணவன் வந்தியத்தேவருக்கு முகவியர்வை போக்கிக் கொண்டிருந்தாள் குந்தவை நாச்சியார். பின்னே இன்றைய நாடகத்தின் மையப் பாத்திரமே அவர்தானே. குந்தவையும் ராசராசனும் போட்ட திட்டப்படி திருக்கோயிலுள் ஒளிந்து நின்று பொற்சிலம்பை ஒலித்ததும் குரல் கொடுத்ததும் அவர்தானே.
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, October 28, 2005
தீபாவளியும் தீபாவலியும்
தீபாவளியும் தீபாவலியும்
தீபாவளி வந்தாச்சு. என்னென்னவோ கொண்டாட்டங்கள். குதூகலங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்னு மாறிக்கிட்டே வருது. தீபாவளி கொண்டாடும் முறையும்தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பரிசு world space radio. ஆபீஸ்ல ஒரு ஆஃபர் சேல்ஸ் போட்டிருந்தான் ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து இன்ஸ்டால் பண்ணீருவாங்க.
இத்தன தீபாவளி கொண்டாடிருக்கமே...எத்தன தீபாவளி நெனவிருக்குன்னு பாத்தா.....கணிசமா கொஞ்ச தீபாவளிகள் தனியா வரிசைல வந்து நிக்குதுங்க.
தீபாவளிக்கும் எனக்கும் உறவு ரொம்ப நல்லவே இருந்ததுன்னு பொய் சொல்ல விரும்பல. ஏன்னா....எனக்கு ஆன விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கோ அல்லது தீபாவளியை ஒட்டியோதான் ஆயிருக்கு.
விளாத்திகுளம் பக்கத்துல புதூர். அதுதான் எங்க மூதாதையார் ஊர். இப்பவும் அந்தூர்ல எங்க சித்தப்பா குடும்பமும் மத்த சொந்த பந்தங்களும் இருக்காங்க.
தீபாவளி வந்துச்சுன்னா.....சொந்தக்கார சாதிக்கார பொம்பளைங்களெல்லாம் வெரதம் இருந்து பூஜை செய்வாங்க. இந்த வெரதத்துல பலவிதம் இருக்கு. அத இன்னோரு சமயம் பாப்போம்.
தீபாவளி இரவில் அருப்புக்கோட்டை ரோட்டுல உள்ள ஜின்னிங் பாக்டரி வாசல்ல இருக்குற வில்வ மரத்தடியில பூஜை பண்ணுவாங்க. மரத்தடியில செலை எதுவும் இருக்காது. களிமண் கொண்டாந்து அதப் பெசைஞ்சி சுத்துச் சுவரு மூணு அடுக்கு வெச்சி (எல்லாம் தோராயந்தான்) நடுவுல உருண்டை பிடிச்சி வெப்பாங்க. அதுக்குக் குங்குமமும் மஞ்சளும் வெச்சா சாமி தயார்.
பூஜைக்குள்ள ஏற்பாடுகள் வீட்டுல நடக்கும் பாருங்க...அப்பபா......விரதம் இருக்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தட்டு. அதுல 21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி (மண்ட வெல்லம் கெடையாது. வெல்லக்கட்டின்னு சின்னதா இருக்கும்.), 21 முடி போட்ட நோம்புக் கயிறு, 21 வெத்தல, 21 பாக்கு, காதோலை கருகமணின்னு நெறைய அடுக்கி வெச்சிருப்பாங்க.
காதோலை கருகமணின்னா தெரியுமா? அடிக்கிற மிட்டாய் ரோஸ் கலர்ல ஓலையைச் சுருட்டி அதை ஒரு சின்ன கருப்பு வளையல்ல செருகீருப்பாங்க. அதுதான் காதோலை கருகமணி. (இதப்பத்தியும் ஒரு தனி பதிவு போடனும்.)
அப்புறம் பூவு, சூடம், வெளக்கு, மாவெளக்குன்னு எடுத்துக்கிட்டு போவாங்க. கொழுக்கட்ட வெளக்கு வைக்கிறவங்களும் உண்டு. பெரிய சுமங்கலிப் பெண் (அநேகமா ஒரு பெரிய பாட்டி) வந்து பூஜையைத் துவக்குவாங்க.
மந்திரமும் தெரியாது. ஆகமும் தெரியாது. ஆனா ஆத்மார்த்த பூஜை நடக்கும். தமிழில் அச்சடிச்ச ஒரு கதை புத்தகம் இருக்கும். அதைப் படிப்பாங்க. அதுக்கப்புறம் அம்மனோட போற்றி இருக்கும். அதைச் சொல்லுவாங்க. அப்புறம் சூடம் காமிச்சி, பூஜை முடியும். அந்நேரம் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்குற சீதாராமு டாக்கிசில் படமும் முடிஞ்சிருக்கும்.
பூஜையெல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் மரத்தைச் சுத்துவாங்க. அந்த மரம் ரொம்பவே பழைய மரம். ஆகையால ஊர்ப் பொம்பளைகளுக்கு அந்த மரம்னா ஒரு செண்ட்டிமெண்ட்டு. (இராமநாதன், சென்ட்டிமென்ட்டுன்னு தொடர்ந்து அடிச்சா செந்த்டிமெந்த்டு அப்படீன்னு வருது. அதான் செண்ட்டிமெண்ட்டுன்னு லேசா அடிச்சிட்டேன். ஹி ஹி)
நானும் சின்னப்பய, எல்லோரோடையும் சேந்து மரத்தச் சுத்துனேன். ரெண்டு மூணு மரம் ஒன்னாச் சேந்து வளந்த மரம் அது. வேணுக்குமுன்னே ரெண்டு மரத்துக்குள்ள நசுங்கி நெளிச்சி போனேன்.
எல்லாரும் ஒழுங்கா மரத்தச் சுத்திக்கிட்டு இருந்தாங்க. நடுராத்திரி. திடீருன்னு நான் அம்மான்னு கத்துறேன். எல்லாரும் ஓடி வந்து பாத்தாங்க. ஒரு பெரிய பாட்டில் துண்டு பாதத்தைக் கிழிச்சிக்கிட்டு ஆழமாப் போயிருக்கு. ரத்தம் சொளுசொளுன்னு ஊத்துது.
என்னையத் தூக்கிக்கிட்டு அங்க இருக்குற ஆஸ்பித்திரிக்கு ஓடுறாங்க. அந்த டாக்டர் எனக்கு அக்கா முறை வேணும். ஊசீல மருந்து ஏத்துறாங்க.....எனக்கு ஊசீன்னா பயம்.....வலி வேற. மூனு பேரு என்னைய அழுத்திப் பிடிச்சிக்கிட்டதும் ஊசி மருந்தோட ஏறுச்சு. ஓஓஓஓஓஒன்னு கத்துனது இன்னும் நல்லா நெனவிருக்கு. பக்கத்துல இருந்த சோடா பாக்டரிக்காரரு தூக்கத்துல எந்திரிச்சி வந்துட்டாரு.
இப்படிப் போச்சு அந்தத் தீபாவளி. அடுத்த வருசம் என்னாச்சு தெரியுமா? ஒன்னும் ஆகலை. தீபாவளி நல்லபடியாப் போச்சு. தீபாவளிக்குப் பின்னாடியே கார்த்திகை வரும். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் எல்லா வீட்டுலயும் வெளக்கு ஏத்தி வெச்சிருப்பாங்க. ரொம்ப அழகா இருக்கும்.
எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க தூத்துக்குடி காமராஜ் காலேஜ் ஃபுரபசர் குடும்பம். அவங்களுக்கு ஊருல இருந்து வெடிகள் நெறைய வரும். அந்த வீட்டுப் பையன் என்னோட நண்பன். அன்னைக்கும் வீட்டுல நெறைய அகல் வெளக்குகள ஏத்தி வெச்சிட்டு காத்துல அணையாம வாசல்ல உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.
அப்ப பக்கத்து வீட்டுலயும் வெளக்கு வெச்சிருந்தாங்க. அங்க போய்ப் பாக்கலாமுன்னு வேகமா வெளிய ஓடி பக்கத்து வீட்டுக்குள்ள வேகமா நொழஞ்சேன். ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிக்கிட்டே கீழ விழுந்தேன்.
பின்னே...என்னோட ஒரு தொடையே வெந்துருச்சே. என்னோட நண்பன்னு சொன்னேனே அவன் பென்சில் பிடிச்சிக்கிட்டு இருந்தான். அவன் வாசல்ல நின்னத நான் பாக்கல. நான் வேகமா வந்தத அவன் எதிர்பாக்கல. சர்ருன்னு தொடைல பட்டு தொடை வெந்துருச்சு.
அப்ப ஸ்டெச்சிலான் கால்சட்டை ரொம்ப பேமஸ். கலர்கலரா இருக்கும். அதுதான் போட்டிருந்தேன். அது தீயில உருகி தோலில் ஒட்டிக்கிச்சு வேற.
அதப் பாத்ததும் எங்கத்தைக்கு மயக்கம் வந்துருச்சு. கிறுகிறுன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பக்கத்து வீட்டு ஃபுரபசர்தான் என்னை சைக்கிள்ள தூக்கீட்டுப் போயி டாக்டர் கிட்ட காட்டுனாரு.
அந்த டாக்டரும் ஒரு ஊசில மருந்த ஏத்தி சினிமா டாக்டரு மாதிரி மேல பாத்து அமுக்குனாரு. அந்த வலியிலயும் நான் கதறுனேன். ஊசிய புண்ணப் பாத்துக் கொண்டு வந்தாரு. "ஐயோ டாக்டர். வேண்டாம். புண்ணுல ஊசி போடாதீங்க வலிக்கும்"....நாந்தான் கதறுனது.
ஆனா அவரு புண்ணுல ஊசி போடல. அந்த மருந்த புண்ணுல பீச்சி அடிச்சாரு. அப்புறமா தொடச்சு மருந்து போட்டு கட்டு கட்டினாரு.
ரொம்ப நாள் நான் கஷ்டப்பட்டு (மூனாவது படிச்சப்ப) நடந்தேன். உக்கார முடியாது. ஓட முடியாது. தூக்கத்துல தொடை மேல் அடுத்த கால் பட்டுட்டா எரியும். அப்புறம் ஒடனே தூக்கம் வராது. இன்னும் நெறைய.
இன்னும் நெறைய தீபாவளிகள் இருக்கு. இப்ப இவ்வளவு போதும். இதுனால நான் சொல்ல வர்ரது என்னன்னா....
1. அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
2. வெடி வெடிக்கும் போது பாத்துப் பத்திரமா வெடிங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
தீபாவளி வந்தாச்சு. என்னென்னவோ கொண்டாட்டங்கள். குதூகலங்கள். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்னு மாறிக்கிட்டே வருது. தீபாவளி கொண்டாடும் முறையும்தான். இந்த ஆண்டு தீபாவளிக்கு எனக்கு நானே கொடுத்துக்கிட்ட பரிசு world space radio. ஆபீஸ்ல ஒரு ஆஃபர் சேல்ஸ் போட்டிருந்தான் ஆர்டர் கொடுத்துட்டேன். நாளைக்கு வீட்டுக்கு வந்து இன்ஸ்டால் பண்ணீருவாங்க.
இத்தன தீபாவளி கொண்டாடிருக்கமே...எத்தன தீபாவளி நெனவிருக்குன்னு பாத்தா.....கணிசமா கொஞ்ச தீபாவளிகள் தனியா வரிசைல வந்து நிக்குதுங்க.
தீபாவளிக்கும் எனக்கும் உறவு ரொம்ப நல்லவே இருந்ததுன்னு பொய் சொல்ல விரும்பல. ஏன்னா....எனக்கு ஆன விபத்துகள் எல்லாம் பெரும்பாலும் தீபாவளிக்கோ அல்லது தீபாவளியை ஒட்டியோதான் ஆயிருக்கு.
விளாத்திகுளம் பக்கத்துல புதூர். அதுதான் எங்க மூதாதையார் ஊர். இப்பவும் அந்தூர்ல எங்க சித்தப்பா குடும்பமும் மத்த சொந்த பந்தங்களும் இருக்காங்க.
தீபாவளி வந்துச்சுன்னா.....சொந்தக்கார சாதிக்கார பொம்பளைங்களெல்லாம் வெரதம் இருந்து பூஜை செய்வாங்க. இந்த வெரதத்துல பலவிதம் இருக்கு. அத இன்னோரு சமயம் பாப்போம்.
தீபாவளி இரவில் அருப்புக்கோட்டை ரோட்டுல உள்ள ஜின்னிங் பாக்டரி வாசல்ல இருக்குற வில்வ மரத்தடியில பூஜை பண்ணுவாங்க. மரத்தடியில செலை எதுவும் இருக்காது. களிமண் கொண்டாந்து அதப் பெசைஞ்சி சுத்துச் சுவரு மூணு அடுக்கு வெச்சி (எல்லாம் தோராயந்தான்) நடுவுல உருண்டை பிடிச்சி வெப்பாங்க. அதுக்குக் குங்குமமும் மஞ்சளும் வெச்சா சாமி தயார்.
பூஜைக்குள்ள ஏற்பாடுகள் வீட்டுல நடக்கும் பாருங்க...அப்பபா......விரதம் இருக்குற ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு தட்டு. அதுல 21 அதிரசம், 21 வாழப்பழம், 21 வெல்லக்கட்டி (மண்ட வெல்லம் கெடையாது. வெல்லக்கட்டின்னு சின்னதா இருக்கும்.), 21 முடி போட்ட நோம்புக் கயிறு, 21 வெத்தல, 21 பாக்கு, காதோலை கருகமணின்னு நெறைய அடுக்கி வெச்சிருப்பாங்க.
காதோலை கருகமணின்னா தெரியுமா? அடிக்கிற மிட்டாய் ரோஸ் கலர்ல ஓலையைச் சுருட்டி அதை ஒரு சின்ன கருப்பு வளையல்ல செருகீருப்பாங்க. அதுதான் காதோலை கருகமணி. (இதப்பத்தியும் ஒரு தனி பதிவு போடனும்.)
அப்புறம் பூவு, சூடம், வெளக்கு, மாவெளக்குன்னு எடுத்துக்கிட்டு போவாங்க. கொழுக்கட்ட வெளக்கு வைக்கிறவங்களும் உண்டு. பெரிய சுமங்கலிப் பெண் (அநேகமா ஒரு பெரிய பாட்டி) வந்து பூஜையைத் துவக்குவாங்க.
மந்திரமும் தெரியாது. ஆகமும் தெரியாது. ஆனா ஆத்மார்த்த பூஜை நடக்கும். தமிழில் அச்சடிச்ச ஒரு கதை புத்தகம் இருக்கும். அதைப் படிப்பாங்க. அதுக்கப்புறம் அம்மனோட போற்றி இருக்கும். அதைச் சொல்லுவாங்க. அப்புறம் சூடம் காமிச்சி, பூஜை முடியும். அந்நேரம் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்குற சீதாராமு டாக்கிசில் படமும் முடிஞ்சிருக்கும்.
பூஜையெல்லாம் முடிஞ்சதும் எல்லாரும் மரத்தைச் சுத்துவாங்க. அந்த மரம் ரொம்பவே பழைய மரம். ஆகையால ஊர்ப் பொம்பளைகளுக்கு அந்த மரம்னா ஒரு செண்ட்டிமெண்ட்டு. (இராமநாதன், சென்ட்டிமென்ட்டுன்னு தொடர்ந்து அடிச்சா செந்த்டிமெந்த்டு அப்படீன்னு வருது. அதான் செண்ட்டிமெண்ட்டுன்னு லேசா அடிச்சிட்டேன். ஹி ஹி)
நானும் சின்னப்பய, எல்லோரோடையும் சேந்து மரத்தச் சுத்துனேன். ரெண்டு மூணு மரம் ஒன்னாச் சேந்து வளந்த மரம் அது. வேணுக்குமுன்னே ரெண்டு மரத்துக்குள்ள நசுங்கி நெளிச்சி போனேன்.
எல்லாரும் ஒழுங்கா மரத்தச் சுத்திக்கிட்டு இருந்தாங்க. நடுராத்திரி. திடீருன்னு நான் அம்மான்னு கத்துறேன். எல்லாரும் ஓடி வந்து பாத்தாங்க. ஒரு பெரிய பாட்டில் துண்டு பாதத்தைக் கிழிச்சிக்கிட்டு ஆழமாப் போயிருக்கு. ரத்தம் சொளுசொளுன்னு ஊத்துது.
என்னையத் தூக்கிக்கிட்டு அங்க இருக்குற ஆஸ்பித்திரிக்கு ஓடுறாங்க. அந்த டாக்டர் எனக்கு அக்கா முறை வேணும். ஊசீல மருந்து ஏத்துறாங்க.....எனக்கு ஊசீன்னா பயம்.....வலி வேற. மூனு பேரு என்னைய அழுத்திப் பிடிச்சிக்கிட்டதும் ஊசி மருந்தோட ஏறுச்சு. ஓஓஓஓஓஒன்னு கத்துனது இன்னும் நல்லா நெனவிருக்கு. பக்கத்துல இருந்த சோடா பாக்டரிக்காரரு தூக்கத்துல எந்திரிச்சி வந்துட்டாரு.
இப்படிப் போச்சு அந்தத் தீபாவளி. அடுத்த வருசம் என்னாச்சு தெரியுமா? ஒன்னும் ஆகலை. தீபாவளி நல்லபடியாப் போச்சு. தீபாவளிக்குப் பின்னாடியே கார்த்திகை வரும். தூத்துக்குடி புதுக்கிராமத்தில் எல்லா வீட்டுலயும் வெளக்கு ஏத்தி வெச்சிருப்பாங்க. ரொம்ப அழகா இருக்கும்.
எங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருந்தவங்க தூத்துக்குடி காமராஜ் காலேஜ் ஃபுரபசர் குடும்பம். அவங்களுக்கு ஊருல இருந்து வெடிகள் நெறைய வரும். அந்த வீட்டுப் பையன் என்னோட நண்பன். அன்னைக்கும் வீட்டுல நெறைய அகல் வெளக்குகள ஏத்தி வெச்சிட்டு காத்துல அணையாம வாசல்ல உக்காந்து பாத்துக்கிட்டு இருந்தேன்.
அப்ப பக்கத்து வீட்டுலயும் வெளக்கு வெச்சிருந்தாங்க. அங்க போய்ப் பாக்கலாமுன்னு வேகமா வெளிய ஓடி பக்கத்து வீட்டுக்குள்ள வேகமா நொழஞ்சேன். ஆஆஆஆஆஆஆஆஆஆன்னு அலறிக்கிட்டே கீழ விழுந்தேன்.
பின்னே...என்னோட ஒரு தொடையே வெந்துருச்சே. என்னோட நண்பன்னு சொன்னேனே அவன் பென்சில் பிடிச்சிக்கிட்டு இருந்தான். அவன் வாசல்ல நின்னத நான் பாக்கல. நான் வேகமா வந்தத அவன் எதிர்பாக்கல. சர்ருன்னு தொடைல பட்டு தொடை வெந்துருச்சு.
அப்ப ஸ்டெச்சிலான் கால்சட்டை ரொம்ப பேமஸ். கலர்கலரா இருக்கும். அதுதான் போட்டிருந்தேன். அது தீயில உருகி தோலில் ஒட்டிக்கிச்சு வேற.
அதப் பாத்ததும் எங்கத்தைக்கு மயக்கம் வந்துருச்சு. கிறுகிறுன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. பக்கத்து வீட்டு ஃபுரபசர்தான் என்னை சைக்கிள்ள தூக்கீட்டுப் போயி டாக்டர் கிட்ட காட்டுனாரு.
அந்த டாக்டரும் ஒரு ஊசில மருந்த ஏத்தி சினிமா டாக்டரு மாதிரி மேல பாத்து அமுக்குனாரு. அந்த வலியிலயும் நான் கதறுனேன். ஊசிய புண்ணப் பாத்துக் கொண்டு வந்தாரு. "ஐயோ டாக்டர். வேண்டாம். புண்ணுல ஊசி போடாதீங்க வலிக்கும்"....நாந்தான் கதறுனது.
ஆனா அவரு புண்ணுல ஊசி போடல. அந்த மருந்த புண்ணுல பீச்சி அடிச்சாரு. அப்புறமா தொடச்சு மருந்து போட்டு கட்டு கட்டினாரு.
ரொம்ப நாள் நான் கஷ்டப்பட்டு (மூனாவது படிச்சப்ப) நடந்தேன். உக்கார முடியாது. ஓட முடியாது. தூக்கத்துல தொடை மேல் அடுத்த கால் பட்டுட்டா எரியும். அப்புறம் ஒடனே தூக்கம் வராது. இன்னும் நெறைய.
இன்னும் நெறைய தீபாவளிகள் இருக்கு. இப்ப இவ்வளவு போதும். இதுனால நான் சொல்ல வர்ரது என்னன்னா....
1. அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.
2. வெடி வெடிக்கும் போது பாத்துப் பத்திரமா வெடிங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, October 24, 2005
சிகப்பு ரோஜாக்கள்
சிகப்பு ரோஜாக்கள்
சிகப்பு ரோஜாக்கள்
அவளுக்குப் பிடிக்கும்
அவளும் ரோஜா
அவள் பெயரும் ரோஜா
ஒவ்வோர் ஆண்டும்
திருமண நாளில்
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்
அவள் கணவன் பரிசாய்
நாற்பதாண்டுகளாய் அப்படித்தான்
இந்த ஆண்டிலோ
அவன் இல்லை
வராத வழி போயினான்
ஆயினும் வந்தது
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்
வழக்கம் போல
அவனது அழகான கையெழுத்தில்
"அன்பே ரோஜா!
இந்த ஆண்டும்
இரட்டிப்பானதடி
உன் மேல் அன்பு!
இந்த ஆண்டும்
பெருகியதடி
உன் மேல் காதல்!
என் செல்லக் கண்ணே!"
அவளுக்கு வியப்பில்லை
அவனை அவளே அறிவாள்
முன்னதாகவே
எதையும் செய்து முடிப்பவன்
விட்டுச் செல்லும் முன்பே
கட்டிச் சென்றால்
கடையில் முன்பணத்தை
தெரிந்து செய்தானோ
தெரியாது செய்தானோ
நினைக்க நினைக்க
உப்பளமாகின அவள் கண்கள்
சீராக நறுக்கினாள்
ரோஜாத் தண்டுகளை
அழகான தொட்டியிலிட்டு
அவன் படத்தின் முன்னிட்டாள்
கண்ணீர்க் கால்வாய்களில்
காதலும் சோகமும் உடைப்பெடுத்தது
இன்னொரு ஆண்டும் கழிந்தது
அவனன்றி ஓரணுவும் அசையவில்லை!
அன்புடன்,
கோ.இராகவன்
சிகப்பு ரோஜாக்கள்
அவளுக்குப் பிடிக்கும்
அவளும் ரோஜா
அவள் பெயரும் ரோஜா
ஒவ்வோர் ஆண்டும்
திருமண நாளில்
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்
அவள் கணவன் பரிசாய்
நாற்பதாண்டுகளாய் அப்படித்தான்
இந்த ஆண்டிலோ
அவன் இல்லை
வராத வழி போயினான்
ஆயினும் வந்தது
அவள் வீட்டு வாயிலில்
பூங்கொத்தொன்று
சிகப்பு ரோஜாக்களாய்
வழக்கம் போல
அவனது அழகான கையெழுத்தில்
"அன்பே ரோஜா!
இந்த ஆண்டும்
இரட்டிப்பானதடி
உன் மேல் அன்பு!
இந்த ஆண்டும்
பெருகியதடி
உன் மேல் காதல்!
என் செல்லக் கண்ணே!"
அவளுக்கு வியப்பில்லை
அவனை அவளே அறிவாள்
முன்னதாகவே
எதையும் செய்து முடிப்பவன்
விட்டுச் செல்லும் முன்பே
கட்டிச் சென்றால்
கடையில் முன்பணத்தை
தெரிந்து செய்தானோ
தெரியாது செய்தானோ
நினைக்க நினைக்க
உப்பளமாகின அவள் கண்கள்
சீராக நறுக்கினாள்
ரோஜாத் தண்டுகளை
அழகான தொட்டியிலிட்டு
அவன் படத்தின் முன்னிட்டாள்
கண்ணீர்க் கால்வாய்களில்
காதலும் சோகமும் உடைப்பெடுத்தது
இன்னொரு ஆண்டும் கழிந்தது
அவனன்றி ஓரணுவும் அசையவில்லை!
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, October 12, 2005
கோதுமைக் களவாணி
கோதுமைக் களவாணி
எனது சின்ன வயதில் நடந்தது அது. இன்றும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது அந்த நினைவு. தெளிந்த நீரோடைகுள்ளே கிடக்கும் கல்லைப் போல. பையைத் தூக்கிக்கொண்டு படியில் தடதடவென இறங்கினேன். கும்மாளமும் உற்சாகமும் கூடி வந்தது அன்று. சுந்தரும் அவன் பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். வழக்கமாக பள்ளிக்கூடம் போகும் நேரமது. கையைக் கோர்த்துக்கொண்டு வேகமாக நடந்தோம். கதிருகடைக்கு பக்கத்திலேயே குமாரும் காத்திருந்தான். மூவரும் சேர்ந்து நெல்லிக்காய் தண்டிக்கு பொடிப்பொடியாக கற்களைப் பொறுக்கிக் கொண்டோம். விருவிருவென வேகத்தைக் கூட்டினோம். பின்னே! கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால்! அந்த நினைப்பே வேகமாக நடக்க வைத்தது.
கோதுமைக் களவாணியை அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும், அடிக்கடி போவோர் வருவோருக்கும் நன்றாகத் தெரியும். பைத்தியம் என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்டவள். அறுபதை நெருங்கும் வயது. ஒட்டுப் போட்ட கந்தல். குளித்தறியாத அழுக்கு மேனி. சடை விழுந்த செம்பட்டைத் தலை. அவளது ஊரும் பேரும் யாருக்கும் தெரியாது. ஏதோவது ஒரு நேரத்தில் நல்ல மனநிலையில் இருக்கையில் கேட்டால் "பாப்பா மேரி பாத்தீமா தேவி" என்ற சர்வமத பெயரைச் சொல்வாள். ஆளும் பேரும் மாறிமாறி கேட்டாலும் வேறு எந்தப் பெயரையும் அவள் சொல்லியதேயில்லை. இப்படியொரு பெயரை எங்கே பிடித்தாளோ? ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள்? எப்போது களவாண்டாள்? யார் வீட்டில் களவாண்டாள்? யாருக்கும் இந்த விவரங்கள் தெரியாது. ஆனாலும் எப்படியோ அவளுக்கு அந்த பெயர் வந்து விட்டது. மூட்டை கோதுமையைக் காயப் போட்டிருந்த வேளையில் திருடி விட்டாளென்று சொல்வார்கள். இத்தனைக்கும் அந்தத் தெருவில் கோதுமையை பயன்படுத்துகிறவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கோதுமையை மூட்டையாக வாங்கிக் கொண்டிருந்தது மளிகைக் கடை கதிரு மட்டும்தான். ஆனால் கதிரும் கோதுமையைக் காயப் போட்டதுமில்லை. திருட்டு கொடுத்ததுமில்லை. எது எப்படியோ? பாப்பா மேரி பாத்தீமா தேவிக்கு கோதுமைக் களவாணி என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.
எல்லோருக்கும் பிடித்த அந்தப் பெயர் அவளுக்கு ஏனோ பிடிக்காமலே போனது. அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது உறுதியாக அவளது சுயமரியாதையைச் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அவள் அகோர பத்ரகாளியாக அவதாரமெடுப்பாள். வாயில் சொல்லும் கையில் கல்லுமாய் அந்தத் தெருவையே வதைப்பாள். தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் சொல்லி அர்ச்சிப்பாள். அவள் வீசியெறியும் கற்களுக்கு பயந்து கொண்டு அந்தப் பக்கம் போவதற்கு யோசித்தாலும் அவள் சிந்தும் செந்தமிழ் மொழிகளை நன்றாகக் கேட்டு உள்ளூற ஊர் மகிழும். யாருடைய நல்ல நேரமோ! அவள் கல்லெறி குறிக்கு எல்லோரும் தப்பிக் கொண்டே இருந்தார்கள்.
அவள் யார்? எந்த ஊர்? என்கின்ற ஆராய்ச்சியில் இறங்குவார் யாருமில்லை. எல்லாம் விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர் கதைதான். ஆனாலும் அவளைப் பற்றிய வதந்திகள் ஆயிரமாயிரம். பாகிஸ்தான் உளவாளி. இலங்கை இராணுவக்காரி. அமெரிக்க ஏஜெண்ட். பெரிய விஞ்ஞானி. மில் ஓனர் வைப்பாட்டியாயிருந்து கைவிடப்பட்டவள். பிள்ளைகள் கைகழுவிய பெரிய பணக்காரி. ஜமீந்தார் ராணி. இசைப் பைத்தியம் பிடித்த பாடகி. பெற்ற மகனைக் கொன்றவள். ஹைதராபாத் நிஜாமின் ஆசைநாயகி. இப்படியெல்லாம் பத்தாதென்று அந்தக் காலத்து அரக்கி பரம்பரையில் வந்தவளென்று நம்புகிறவர்களும் உண்டு.
அவளுடைய சொத்து என்று சொல்லப் போனால் ஒரு பெரிய துணிமூட்டை. அதை துணி மூட்டை என்பதை விட பொதிமூட்டை என்பதே பொருந்தும். எல்லாம் எங்கிருந்து பொறுக்கினாளோ! அவ்வளவு துணிகள். பிறகு ரெண்டு ஊசி. பழைய பேப்பரில் சுற்றி வைத்திருப்பாள். அப்புறம் நூல்கண்டு. கதிரு கடையில் அவளுக்கு நூல்கண்டு சும்மாவே கிடைக்கும். அவள் காலை வேளையில்தான் போய் நூல்கண்டு கேட்பாள். அவள் வந்து நூல்கண்டு கேட்டால் அன்றைக்கு கடையில் வியாபாரம் கொழிக்கும் என்பது கதிரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் இன்று வரைக்கும் பொய்த்ததேயில்லை. எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். மூட்டையிலிருந்து துணியை உருவி அணிந்திருக்கும் துணியோடு சேர்த்துத் தைப்பாள். அப்படித் தைத்து தைத்து அவளது ஆடை பலவண்ண நிறங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும்.
இது போக இன்னும் சில அசையாச் சொத்துகள் உண்டு அவளிடம். சாப்பிட அலுமினியச் சொம்பும் தட்டும். அந்தச் சொம்பில் எப்போதும் ரெண்டு மூன்று பெரிய கற்கள் இருக்கும். கோதுமைக் களவாணி என்று யாரவது சொன்னால் முதலில் பறப்பவை அந்த கற்களாகத்தான் இருக்கும். வீசியெறிந்த பின் மீண்டும் அதே கற்களை தேடிப் பொறுக்கி வைத்துக் கொள்வாள். அந்தக் கற்களின் மேல் அவளுக்கு என்ன பாசமோ! வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ! எப்போதோ இடிந்து போன அவளது வீட்டுக் கல்லாகக் கூட இருக்கக் கூடும். எங்கேயாவது செடிகளில் கொடிகளில் பூ பூத்திருக்கக் கண்டால் இரண்டு பூக்களைப் பறித்து கல்லிருக்கும் சொம்பிற்குள் போடுவாள். பூஜை செய்கிறாள் என்று கேலி செய்வோம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் போவாள்.
பசித்தால் ஏதாவது வீட்டு வாசலில் நின்று கொண்டு "அக்கா!" என்று அழைப்பாள். எல்லோருமே அவளுக்கு அக்காதான். சின்னக் குழந்தையிலிருந்து கோயில் ஐயர் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோருமே அக்காக்கள்தான். அவள் கேட்டால் இல்லையென்று பொதுவாக யாரும் சொன்னதேயில்லை. முதலில் சொம்பில் தண்ணி கேட்பாள். கற்களையும் தட்டையும் கழுவிவிட்டு தட்டில் போடுவதை வாங்கிக் கொள்வாள். சைவம் அசைவம் என்றெல்லாம் அவள் பாகுபாடு பார்த்ததில்லை. போட்டதைத் தின்பாள். தின்ற வீட்டு வாசலருகே அமர்ந்து இராகம் போட்டு பாடுவாள். கேட்டால் ஒரு சொல்லும் காதில் தெளிவாக விழாது. விழுந்தாலும் புரியாது. அவளது இராகம். அவளது பாடல். அப்படிப் பாடுகையில் அவள் குரல் குழைந்திருக்கும். ஒரு மகிழ்ச்சி தெரியும்.
அன்றைக்கு அவளுக்கு கிடைத்தது அல்வா டீச்சர் வீட்டு இட்லி. அலமேலு டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர் அல்வா டீச்சர். நான், சுந்தர், குமார் மூவரும் பொறுக்கி வைத்திருந்த கற்களோடு அவளை நெருங்கினோம். கற்கள் போட்டு வைத்திருந்த சொம்பில் தண்ணீர் ஒரு மடக்கு குடித்துக் கொண்டும் இட்டிலியை துண்டு துண்டாக விழுங்கிக் கொண்டுமிருந்தவள், முதலில் எங்களைக் கவனிக்கவில்லை. பிறகு தலையைத் தூக்கிப் பார்த்து முகத்தைக் கோணி பழிப்புக் காட்டினாள். மூவரும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அப்படிக் காட்டும் பொழுது வாய்க்குளிருந்த இட்டிலி பிதுங்கி வெளியே விழுந்தது. கொஞ்சம் கடைவாயில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. "உர்ர்ர்ர்ர்ர்ர்" குரங்கு போல கத்தினோம். அவள் கண்டுகொள்ளாமல் இட்டிலி மேல் கவனத்தைச் செலுத்தினாள்.
எங்கள் பொறுமை எல்லை மீறியது. "கோதுமக் களவாணி!!!!!!!!!!" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. "அம்மா!!!!!!" அலறிவிட்டேன். நெற்றியில் சின்னதாய் தோல் கிழிந்து இரத்தம் லேசாய்த் துளிர்த்தது. அது வலித்தது. குமாரும் சுந்தரும் பயந்து ஒடி விட்டனர். நான் வலியில் கையால் நெற்றியைப் பொத்திக்கொண்டு முனகினேன்.
என் மேல் கல் விழுந்ததைப் பார்த்ததும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் கோதுமைக் களவாணி. மூட்டையிலிருந்து ஒரு துணியை உருவி என்னிடம் நீட்டினாள். நான் வாங்கவில்லை. அவளும் விடவில்லை. துணியை வாங்கச் சொல்லி வற்புறுத்தினாள். நான் அழுதுகொண்டே விலகிப் போனேன். கடைசியில் அவளே நெற்றியைத் துடைக்க வந்தாள். நான் பயந்து அலறினேன். இதற்குள் வாசலில் சத்தம் கேட்டு டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று புண்ணைத் துடைத்து மருந்து போட்டார்கள். நடந்தவைகளை கேட்டு ஒன்றிரண்டு அறிவுரைகளைச் சொன்னார்கள். எல்லாம் கேட்டுவிட்டு டீச்சர் கொடுத்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன். கோதுமைக் களவாணி வீட்டுக்கல்லை தேடியெடுத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததுமே சின்னதாய் சிநேகமாய் சிரித்தாள். நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிப் போனேன். அதற்குப் பிறகு யாராவது கோதுமைக் களவாணி என்று அழைத்தால் அவளுக்கு கோவமே வருவதில்லை. கல்லையும் சொல்லையும் எறிவதேயில்லை. நாளாவட்டத்தில் அந்தப் பெயரை நாங்கள் மறந்தே போனோம்.
அன்புடன்,
கோ.இராகவன்
எனது சின்ன வயதில் நடந்தது அது. இன்றும் நன்றாகவும் தெளிவாகவும் இருக்கிறது அந்த நினைவு. தெளிந்த நீரோடைகுள்ளே கிடக்கும் கல்லைப் போல. பையைத் தூக்கிக்கொண்டு படியில் தடதடவென இறங்கினேன். கும்மாளமும் உற்சாகமும் கூடி வந்தது அன்று. சுந்தரும் அவன் பள்ளிக்கூடப் பையைத் தூக்கிக்கொண்டு வந்தான். வழக்கமாக பள்ளிக்கூடம் போகும் நேரமது. கையைக் கோர்த்துக்கொண்டு வேகமாக நடந்தோம். கதிருகடைக்கு பக்கத்திலேயே குமாரும் காத்திருந்தான். மூவரும் சேர்ந்து நெல்லிக்காய் தண்டிக்கு பொடிப்பொடியாக கற்களைப் பொறுக்கிக் கொண்டோம். விருவிருவென வேகத்தைக் கூட்டினோம். பின்னே! கோதுமைக் களவாணி இல்லாமல் போய்விட்டால்! அந்த நினைப்பே வேகமாக நடக்க வைத்தது.
கோதுமைக் களவாணியை அந்தத் தெருவில் இருந்தவர்களுக்கும் இருப்பவர்களுக்கும், அடிக்கடி போவோர் வருவோருக்கும் நன்றாகத் தெரியும். பைத்தியம் என்று எல்லோராலும் முடிவு கட்டப்பட்டவள். அறுபதை நெருங்கும் வயது. ஒட்டுப் போட்ட கந்தல். குளித்தறியாத அழுக்கு மேனி. சடை விழுந்த செம்பட்டைத் தலை. அவளது ஊரும் பேரும் யாருக்கும் தெரியாது. ஏதோவது ஒரு நேரத்தில் நல்ல மனநிலையில் இருக்கையில் கேட்டால் "பாப்பா மேரி பாத்தீமா தேவி" என்ற சர்வமத பெயரைச் சொல்வாள். ஆளும் பேரும் மாறிமாறி கேட்டாலும் வேறு எந்தப் பெயரையும் அவள் சொல்லியதேயில்லை. இப்படியொரு பெயரை எங்கே பிடித்தாளோ? ஆனால் எல்லோருக்கும் பிடித்ததென்னவோ கோதுமைக் களவாணி என்ற பெயர்தான். எங்கே களவாண்டாள்? எப்போது களவாண்டாள்? யார் வீட்டில் களவாண்டாள்? யாருக்கும் இந்த விவரங்கள் தெரியாது. ஆனாலும் எப்படியோ அவளுக்கு அந்த பெயர் வந்து விட்டது. மூட்டை கோதுமையைக் காயப் போட்டிருந்த வேளையில் திருடி விட்டாளென்று சொல்வார்கள். இத்தனைக்கும் அந்தத் தெருவில் கோதுமையை பயன்படுத்துகிறவர்கள் மிகக் குறைவுதான். அதிலும் கோதுமையை மூட்டையாக வாங்கிக் கொண்டிருந்தது மளிகைக் கடை கதிரு மட்டும்தான். ஆனால் கதிரும் கோதுமையைக் காயப் போட்டதுமில்லை. திருட்டு கொடுத்ததுமில்லை. எது எப்படியோ? பாப்பா மேரி பாத்தீமா தேவிக்கு கோதுமைக் களவாணி என்ற பெயர் நின்று நிலைத்து விட்டது.
எல்லோருக்கும் பிடித்த அந்தப் பெயர் அவளுக்கு ஏனோ பிடிக்காமலே போனது. அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பது உறுதியாக அவளது சுயமரியாதையைச் சுட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அந்தப் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அவள் அகோர பத்ரகாளியாக அவதாரமெடுப்பாள். வாயில் சொல்லும் கையில் கல்லுமாய் அந்தத் தெருவையே வதைப்பாள். தமிழில் எத்தனை கெட்ட வார்த்தைகள் உள்ளதோ அத்தனையும் சொல்லி அர்ச்சிப்பாள். அவள் வீசியெறியும் கற்களுக்கு பயந்து கொண்டு அந்தப் பக்கம் போவதற்கு யோசித்தாலும் அவள் சிந்தும் செந்தமிழ் மொழிகளை நன்றாகக் கேட்டு உள்ளூற ஊர் மகிழும். யாருடைய நல்ல நேரமோ! அவள் கல்லெறி குறிக்கு எல்லோரும் தப்பிக் கொண்டே இருந்தார்கள்.
அவள் யார்? எந்த ஊர்? என்கின்ற ஆராய்ச்சியில் இறங்குவார் யாருமில்லை. எல்லாம் விண்டவர் கண்டிலர். கண்டவர் விண்டிலர் கதைதான். ஆனாலும் அவளைப் பற்றிய வதந்திகள் ஆயிரமாயிரம். பாகிஸ்தான் உளவாளி. இலங்கை இராணுவக்காரி. அமெரிக்க ஏஜெண்ட். பெரிய விஞ்ஞானி. மில் ஓனர் வைப்பாட்டியாயிருந்து கைவிடப்பட்டவள். பிள்ளைகள் கைகழுவிய பெரிய பணக்காரி. ஜமீந்தார் ராணி. இசைப் பைத்தியம் பிடித்த பாடகி. பெற்ற மகனைக் கொன்றவள். ஹைதராபாத் நிஜாமின் ஆசைநாயகி. இப்படியெல்லாம் பத்தாதென்று அந்தக் காலத்து அரக்கி பரம்பரையில் வந்தவளென்று நம்புகிறவர்களும் உண்டு.
அவளுடைய சொத்து என்று சொல்லப் போனால் ஒரு பெரிய துணிமூட்டை. அதை துணி மூட்டை என்பதை விட பொதிமூட்டை என்பதே பொருந்தும். எல்லாம் எங்கிருந்து பொறுக்கினாளோ! அவ்வளவு துணிகள். பிறகு ரெண்டு ஊசி. பழைய பேப்பரில் சுற்றி வைத்திருப்பாள். அப்புறம் நூல்கண்டு. கதிரு கடையில் அவளுக்கு நூல்கண்டு சும்மாவே கிடைக்கும். அவள் காலை வேளையில்தான் போய் நூல்கண்டு கேட்பாள். அவள் வந்து நூல்கண்டு கேட்டால் அன்றைக்கு கடையில் வியாபாரம் கொழிக்கும் என்பது கதிரின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையும் இன்று வரைக்கும் பொய்த்ததேயில்லை. எதையாவது தைத்துக் கொண்டிருப்பாள். மூட்டையிலிருந்து துணியை உருவி அணிந்திருக்கும் துணியோடு சேர்த்துத் தைப்பாள். அப்படித் தைத்து தைத்து அவளது ஆடை பலவண்ண நிறங்களில் மினுக்கிக் கொண்டிருக்கும்.
இது போக இன்னும் சில அசையாச் சொத்துகள் உண்டு அவளிடம். சாப்பிட அலுமினியச் சொம்பும் தட்டும். அந்தச் சொம்பில் எப்போதும் ரெண்டு மூன்று பெரிய கற்கள் இருக்கும். கோதுமைக் களவாணி என்று யாரவது சொன்னால் முதலில் பறப்பவை அந்த கற்களாகத்தான் இருக்கும். வீசியெறிந்த பின் மீண்டும் அதே கற்களை தேடிப் பொறுக்கி வைத்துக் கொள்வாள். அந்தக் கற்களின் மேல் அவளுக்கு என்ன பாசமோ! வீட்டுக் கல்லு என்று சொல்லிக் கொஞ்சுவாள். எந்த வீட்டுக் கல்லோ! எப்போதோ இடிந்து போன அவளது வீட்டுக் கல்லாகக் கூட இருக்கக் கூடும். எங்கேயாவது செடிகளில் கொடிகளில் பூ பூத்திருக்கக் கண்டால் இரண்டு பூக்களைப் பறித்து கல்லிருக்கும் சொம்பிற்குள் போடுவாள். பூஜை செய்கிறாள் என்று கேலி செய்வோம். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாமல் போவாள்.
பசித்தால் ஏதாவது வீட்டு வாசலில் நின்று கொண்டு "அக்கா!" என்று அழைப்பாள். எல்லோருமே அவளுக்கு அக்காதான். சின்னக் குழந்தையிலிருந்து கோயில் ஐயர் வரை ஆண் பெண் வேறுபாடு இல்லாமல் எல்லோருமே அக்காக்கள்தான். அவள் கேட்டால் இல்லையென்று பொதுவாக யாரும் சொன்னதேயில்லை. முதலில் சொம்பில் தண்ணி கேட்பாள். கற்களையும் தட்டையும் கழுவிவிட்டு தட்டில் போடுவதை வாங்கிக் கொள்வாள். சைவம் அசைவம் என்றெல்லாம் அவள் பாகுபாடு பார்த்ததில்லை. போட்டதைத் தின்பாள். தின்ற வீட்டு வாசலருகே அமர்ந்து இராகம் போட்டு பாடுவாள். கேட்டால் ஒரு சொல்லும் காதில் தெளிவாக விழாது. விழுந்தாலும் புரியாது. அவளது இராகம். அவளது பாடல். அப்படிப் பாடுகையில் அவள் குரல் குழைந்திருக்கும். ஒரு மகிழ்ச்சி தெரியும்.
அன்றைக்கு அவளுக்கு கிடைத்தது அல்வா டீச்சர் வீட்டு இட்லி. அலமேலு டீச்சருக்கு நாங்கள் வைத்த பட்டப் பெயர் அல்வா டீச்சர். நான், சுந்தர், குமார் மூவரும் பொறுக்கி வைத்திருந்த கற்களோடு அவளை நெருங்கினோம். கற்கள் போட்டு வைத்திருந்த சொம்பில் தண்ணீர் ஒரு மடக்கு குடித்துக் கொண்டும் இட்டிலியை துண்டு துண்டாக விழுங்கிக் கொண்டுமிருந்தவள், முதலில் எங்களைக் கவனிக்கவில்லை. பிறகு தலையைத் தூக்கிப் பார்த்து முகத்தைக் கோணி பழிப்புக் காட்டினாள். மூவரும் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தோம். பதிலுக்கு எங்களைப் பார்த்து வக்கனை காட்டினாள். அப்படிக் காட்டும் பொழுது வாய்க்குளிருந்த இட்டிலி பிதுங்கி வெளியே விழுந்தது. கொஞ்சம் கடைவாயில் அசிங்கமாக ஒட்டிக் கொண்டிருந்தது. "உர்ர்ர்ர்ர்ர்ர்" குரங்கு போல கத்தினோம். அவள் கண்டுகொள்ளாமல் இட்டிலி மேல் கவனத்தைச் செலுத்தினாள்.
எங்கள் பொறுமை எல்லை மீறியது. "கோதுமக் களவாணி!!!!!!!!!!" அவள் காது கிழிய கத்திவிட்டு நாங்கள் மூவரும் ஆளுக்கொரு பக்கமாய் ஓடினோம். அவளுக்கு கோவம் பொத்துக் கொண்டு வந்தது. தட்டைக் கீழே வைத்துவிட்டு முதலில் இரண்டு கெட்ட வார்த்தைகளை வீசியவள், சொம்பைக் கவிழ்த்து வீட்டுக் கற்களை கையில் எடுத்து எங்கள் மேல் வீசினாள். மூவரும் மூன்று பக்கங்களில் நின்று கொண்டிருந்தோம். ஆளுக்கொரு கல்லாக ஒவ்வொருவர் மீதும் வீசினாள். நாங்களும் பதிலுக்கு அவள் மேல் பொறுக்கி வைத்திருந்த கல்லை கல்லை வீசினோம். இரண்டொரு கற்கள் அவள் மேலே விழுந்தன. அவளது ஆத்திரம் கூடியது. வசவும் நாறியது. அதைக் கேட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்த வேளையில் எதிர்பாராத விதமாக குமார் விட்டெறிந்த கல் நேராக வந்து எனது நெற்றியைத் தாக்கியது. "அம்மா!!!!!!" அலறிவிட்டேன். நெற்றியில் சின்னதாய் தோல் கிழிந்து இரத்தம் லேசாய்த் துளிர்த்தது. அது வலித்தது. குமாரும் சுந்தரும் பயந்து ஒடி விட்டனர். நான் வலியில் கையால் நெற்றியைப் பொத்திக்கொண்டு முனகினேன்.
என் மேல் கல் விழுந்ததைப் பார்த்ததும் மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தாள் கோதுமைக் களவாணி. மூட்டையிலிருந்து ஒரு துணியை உருவி என்னிடம் நீட்டினாள். நான் வாங்கவில்லை. அவளும் விடவில்லை. துணியை வாங்கச் சொல்லி வற்புறுத்தினாள். நான் அழுதுகொண்டே விலகிப் போனேன். கடைசியில் அவளே நெற்றியைத் துடைக்க வந்தாள். நான் பயந்து அலறினேன். இதற்குள் வாசலில் சத்தம் கேட்டு டீச்சர் வெளியே வந்தார்கள். என்னை அவர்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்று புண்ணைத் துடைத்து மருந்து போட்டார்கள். நடந்தவைகளை கேட்டு ஒன்றிரண்டு அறிவுரைகளைச் சொன்னார்கள். எல்லாம் கேட்டுவிட்டு டீச்சர் கொடுத்த காபியையும் குடித்துவிட்டு வெளியே வந்தேன். கோதுமைக் களவாணி வீட்டுக்கல்லை தேடியெடுத்துக் கழுவிக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததுமே சின்னதாய் சிநேகமாய் சிரித்தாள். நான் ஒதுங்கி ஒதுங்கி ஓடிப் போனேன். அதற்குப் பிறகு யாராவது கோதுமைக் களவாணி என்று அழைத்தால் அவளுக்கு கோவமே வருவதில்லை. கல்லையும் சொல்லையும் எறிவதேயில்லை. நாளாவட்டத்தில் அந்தப் பெயரை நாங்கள் மறந்தே போனோம்.
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, October 06, 2005
கடவுளும் காதலும் (சிலேடை)
நல்லவை தீயவை
நயப்பது உண்டு
இல்லை என்பார்
இகலில் உண்டு
கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு
பாவலர் பன்முறை
பண்ணிற் படைத்தும்
ஆவலெப் பொழுதிலும்
அடங்கிட மறுக்கும்
மடமுடை மானிடர்
மனதில் நின்றும்
வடமிடும் வாழ்க்கையின்
வளத்திற் கென்றும்
தடமது கண்டிலர்
தரணியி லின்றே
கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே
நண்பர்களே, கடவுளுக்கும் காதலுக்கும் நான் எழுதிய சிலேடை இது. புரியும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் சொல்லுங்கள். நானே விளக்குறேன்.
இது ஆசிரியப்பாவின் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியது. எழுதி நாலரை வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது ஆசிரியப்பாவின் இலக்கணமே மறந்து விட்டது.
அன்புடன்,
கோ.இராகவன்
நயப்பது உண்டு
இல்லை என்பார்
இகலில் உண்டு
கவலை கூடிடுங்
கைவிடக் கண்டு
பாவலர் பன்முறை
பண்ணிற் படைத்தும்
ஆவலெப் பொழுதிலும்
அடங்கிட மறுக்கும்
மடமுடை மானிடர்
மனதில் நின்றும்
வடமிடும் வாழ்க்கையின்
வளத்திற் கென்றும்
தடமது கண்டிலர்
தரணியி லின்றே
கடவுளும் காதலும்
கருத்தினி லொன்றே
நண்பர்களே, கடவுளுக்கும் காதலுக்கும் நான் எழுதிய சிலேடை இது. புரியும் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் சொல்லுங்கள். நானே விளக்குறேன்.
இது ஆசிரியப்பாவின் இலக்கணத்திற்கு உட்பட்டு எழுதியது. எழுதி நாலரை வருடங்கள் ஆகின்றன. இப்பொழுது ஆசிரியப்பாவின் இலக்கணமே மறந்து விட்டது.
அன்புடன்,
கோ.இராகவன்
இரகசியத் தோட்டம்
Secret Garden
Author : Frances Hodgson Burnett
இரகசியத் தோட்டம்
ஒரு அழகான தோட்டத்தை மனக்கண்ணால் உருவாக்கிப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் உருவாக்கிப் பாருங்கள். தோட்டத்தைச் சுற்றிச் சுவர்கள். உங்களுக்குப் பிடித்த மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், நீரோடைகள், நீரூற்றுகள், அழகான புல்தரைகள். அத்தனையும் உங்களுக்குப் பிடித்த வகையில். அழகாய் ஆடும் ஊஞ்சல். அதில் அசைந்தாடும் நினைவுகள். வண்ண வண்ணப் பறவைகள். காற்றிலிருந்து சுரங்களைப் பிரித்து பாடும் குயில்கள். ஆடும் மயில்கள். ஓடும் மான்கள். நாடும் கிளிகள். கூடும் முயல்கள். அடடா! ஆண்டுதோறும் வசந்தகாலமாக இருந்தாலும் அந்தத் தோட்டம் அலுக்காது அல்லவா! அப்படிப் பட்ட தோட்டத்தை யாரும் திருடிவிட்டால்! அப்படித் திருடியது ஒரு சிறுமியென்றால்! என்ன இது? தோட்டத்தை எப்படித் திருட முடியும்? அதுவும் ஒரு சிறுமி, என்று கேட்பது எளிது. ஆனால் அதை உண்மை என்று நிரூபிப்பது கடினம். அப்படி நிரூபிப்பதுதான் ப்ரான்ஸஸ் ஹோட்ஜ்சன் பர்னட் எழுதிய சீக்ரட் கார்டன்.
கதை பத்தொன்பதாம் நூற்றண்டு இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. வெள்ளையர்கள் ஆட்சிக்காலம். அவர்களின் கேளிக்கை மிகுந்த வாழ்க்கை முறை. அடிமை வேலைக்காரர்கள். அப்படிப்பட்ட ஒரு தம்பதியரின் குழந்தைதான் சிறுமி மேரி. முழுக்க முழுக்க ஆயா ஒருத்தியின் கவனிப்பிலேயே வளர்ந்தவள். செல்லமாக வளர்ந்ததால் அடம் பிடிக்கும் தன்மையும் பிடிவாத குணமும் சேர்ந்து கொண்ட சிறுமி. துணிச்சலும் அகம்பாவமும் வேறு. அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் வருகிறது. காலரா பரவி பெற்றோர்கள் பலியாகிறார்கள். இங்கிலாந்திலுள்ள மாமாவிடம் அனுப்பப்படுகிறாள்.
க்ரேவன், ஒரு பெரிய பணக்காரர். பெரிய கோட்டை போன்ற பழைய வீட்டில் வசிக்கிறார். அழகான மலைப்பாங்கான பிரதேசம். நிலவளமும் நீர்வளமும் நிறைந்தது. அந்த வீட்டில் பல அறைகள் மூடப்பட்டுள்ளன. யாரும் புழங்குவதில்லை. அவளைப் பார்த்துக் கொள்ளும் பொருப்பு க்ரேவனின் உதவியாளராகிய மெட்லாக் (Medlock) என்ற பெண்மணியிடம் ஒப்படைக்கப் படுகிறது. மெட்லாக்கின் உதவியாளராகிய மார்த்தா, மேரியை கவனித்துக் கொள்கிறாள். சிடுசிடுவென்று எப்போதும் இருக்கும் மேரி, மார்த்தாவின் அன்பால் சிறிது மாறுகிறாள்.
தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரியிடம் ஒரு சாவி கிடைக்கிறது. அது மூடப்பட்டுள்ள ஒரு தோட்டத்தின் சாவி. பத்தாண்டுகளுக்கு முன்னால் மூடப்பட்ட தோட்டம் பாழ்பட்டு கிடக்கிறது. க்ரேவனின் மனைவியின் தோட்டம் அது. ஊஞ்சலில் ஆடுகையில், மரக்கிளை ஒடிந்து இறக்கிறாள் திருமதி க்ரேவன். அப்போது மூடப்பட்டு சாவி தொலைக்கப்பட்ட தோட்டமது. இப்போது மேரியின் கைகளில். யாருக்கும் தெரியாமல் தோட்டத்தைச் சீரமைக்கிறாள். அவளுக்கு உதவுகிறான் மார்த்தாவின் தம்பி டிக்கான். யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். க்ரேவன் வாழ்க்கையில் நொந்தவர். மேலும் முதுகு லேசாக வளைந்தவர். மனைவி இறந்தபின் வீட்டில் அதிகம் தங்கமால் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் இரவு வேளையில் அழுகுரல் ஒன்று மேரிக்கு கேட்கிறது. அது க்ரேவனின் மகன் காலினுடைய (Colin) அழுகுரல். மிகவும் செல்லமாக வளர்ந்த பையன். அதனால் கெட்டுப் போயிருக்கிறான். பிறந்ததில் இருந்தே தந்தையால் கைவிடப்பட்டதால் கட்டிலிலேயே வளர்கிறான். நடந்ததேயில்லை. சக்கர நாற்காலியே வாழ்க்கையாகிப் போனவன். அவனை மேரி சந்திக்கிறாள். இரகசியத் தோட்டம் பற்றி அவனுக்கும் தெரிகிறது. மேரியுடனும் டிக்கானுடனும் அவனும் இரகசியத் தோட்டத்திற்குப் போகிறான். காலினுக்கு எல்லோரும் பயப்படுவதால் அவனுடைய கட்டளைக்குப் பயந்து யாரும் அவர்களைப் பின்தொடர்வதில்லை. மேலும் பெரிய தோட்டங்கள் நிரம்பிய வீடென்பதால் அவர்களை வீட்டுக்குள்ளிருந்தும் கவனிக்க முடியவில்லை.
தோட்டம் செழிக்கிறது, காலினும் நடக்கப் பழகுகிறான். அவனுடைய மனமும் மாறுகிறது. நல்ல சிறுவனாக மாறுகிறான். தந்தை வந்ததும் நடந்து காண்பிக்க விரும்புகிறான். அதனால் நடப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் மூவரும். க்ரேவன் வந்தாரா? மகன் நடப்பதைக் கண்டாரா? தோட்டம் பற்றிய இரகசியம் என்னவாயிற்று என்பதே முடிவு.
பாழ்பட்ட தோட்டம் பண்படுவது போல இரண்டு குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக திருந்துவதுதான் கதை. மிகவும் அற்புதமான இந்தக் கதையைப் படிக்கப் படிக்க இன்பம். கீழே வைக்க முடியாது. எல்லா கதைகளிலும் கெட்ட குழந்தைகள் தண்டனை பெறுவதாகத்தான் வரும். ஆனால் இந்தக் கதையில் அவர்கள் திருந்தி நல்ல பிள்ளைகள் என்று பெயரெடுக்கிறார்கள். நல்ல கதை. கண்டிப்பாகப் படியுங்கள். இந்தக் கதை internet-இல் இலவசமாகக் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.
http://www.americanliterature.com/CG/CGINDX.HTML
அன்புடன்,
கோ.இராகவன்
Author : Frances Hodgson Burnett
இரகசியத் தோட்டம்
ஒரு அழகான தோட்டத்தை மனக்கண்ணால் உருவாக்கிப் பாருங்கள். உங்களுக்குப் பிடித்த மாதிரியெல்லாம் உருவாக்கிப் பாருங்கள். தோட்டத்தைச் சுற்றிச் சுவர்கள். உங்களுக்குப் பிடித்த மரங்கள், செடிகள், கொடிகள், பூக்கள், நீரோடைகள், நீரூற்றுகள், அழகான புல்தரைகள். அத்தனையும் உங்களுக்குப் பிடித்த வகையில். அழகாய் ஆடும் ஊஞ்சல். அதில் அசைந்தாடும் நினைவுகள். வண்ண வண்ணப் பறவைகள். காற்றிலிருந்து சுரங்களைப் பிரித்து பாடும் குயில்கள். ஆடும் மயில்கள். ஓடும் மான்கள். நாடும் கிளிகள். கூடும் முயல்கள். அடடா! ஆண்டுதோறும் வசந்தகாலமாக இருந்தாலும் அந்தத் தோட்டம் அலுக்காது அல்லவா! அப்படிப் பட்ட தோட்டத்தை யாரும் திருடிவிட்டால்! அப்படித் திருடியது ஒரு சிறுமியென்றால்! என்ன இது? தோட்டத்தை எப்படித் திருட முடியும்? அதுவும் ஒரு சிறுமி, என்று கேட்பது எளிது. ஆனால் அதை உண்மை என்று நிரூபிப்பது கடினம். அப்படி நிரூபிப்பதுதான் ப்ரான்ஸஸ் ஹோட்ஜ்சன் பர்னட் எழுதிய சீக்ரட் கார்டன்.
கதை பத்தொன்பதாம் நூற்றண்டு இந்தியாவிலிருந்து தொடங்குகிறது. வெள்ளையர்கள் ஆட்சிக்காலம். அவர்களின் கேளிக்கை மிகுந்த வாழ்க்கை முறை. அடிமை வேலைக்காரர்கள். அப்படிப்பட்ட ஒரு தம்பதியரின் குழந்தைதான் சிறுமி மேரி. முழுக்க முழுக்க ஆயா ஒருத்தியின் கவனிப்பிலேயே வளர்ந்தவள். செல்லமாக வளர்ந்ததால் அடம் பிடிக்கும் தன்மையும் பிடிவாத குணமும் சேர்ந்து கொண்ட சிறுமி. துணிச்சலும் அகம்பாவமும் வேறு. அவளுடைய வாழ்க்கையிலும் ஒரு மாற்றம் வருகிறது. காலரா பரவி பெற்றோர்கள் பலியாகிறார்கள். இங்கிலாந்திலுள்ள மாமாவிடம் அனுப்பப்படுகிறாள்.
க்ரேவன், ஒரு பெரிய பணக்காரர். பெரிய கோட்டை போன்ற பழைய வீட்டில் வசிக்கிறார். அழகான மலைப்பாங்கான பிரதேசம். நிலவளமும் நீர்வளமும் நிறைந்தது. அந்த வீட்டில் பல அறைகள் மூடப்பட்டுள்ளன. யாரும் புழங்குவதில்லை. அவளைப் பார்த்துக் கொள்ளும் பொருப்பு க்ரேவனின் உதவியாளராகிய மெட்லாக் (Medlock) என்ற பெண்மணியிடம் ஒப்படைக்கப் படுகிறது. மெட்லாக்கின் உதவியாளராகிய மார்த்தா, மேரியை கவனித்துக் கொள்கிறாள். சிடுசிடுவென்று எப்போதும் இருக்கும் மேரி, மார்த்தாவின் அன்பால் சிறிது மாறுகிறாள்.
தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் மேரியிடம் ஒரு சாவி கிடைக்கிறது. அது மூடப்பட்டுள்ள ஒரு தோட்டத்தின் சாவி. பத்தாண்டுகளுக்கு முன்னால் மூடப்பட்ட தோட்டம் பாழ்பட்டு கிடக்கிறது. க்ரேவனின் மனைவியின் தோட்டம் அது. ஊஞ்சலில் ஆடுகையில், மரக்கிளை ஒடிந்து இறக்கிறாள் திருமதி க்ரேவன். அப்போது மூடப்பட்டு சாவி தொலைக்கப்பட்ட தோட்டமது. இப்போது மேரியின் கைகளில். யாருக்கும் தெரியாமல் தோட்டத்தைச் சீரமைக்கிறாள். அவளுக்கு உதவுகிறான் மார்த்தாவின் தம்பி டிக்கான். யாருக்கும் தெரியாமல் இரகசியமாக வைத்திருக்கிறார்கள். க்ரேவன் வாழ்க்கையில் நொந்தவர். மேலும் முதுகு லேசாக வளைந்தவர். மனைவி இறந்தபின் வீட்டில் அதிகம் தங்கமால் சுற்றிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு நாள் இரவு வேளையில் அழுகுரல் ஒன்று மேரிக்கு கேட்கிறது. அது க்ரேவனின் மகன் காலினுடைய (Colin) அழுகுரல். மிகவும் செல்லமாக வளர்ந்த பையன். அதனால் கெட்டுப் போயிருக்கிறான். பிறந்ததில் இருந்தே தந்தையால் கைவிடப்பட்டதால் கட்டிலிலேயே வளர்கிறான். நடந்ததேயில்லை. சக்கர நாற்காலியே வாழ்க்கையாகிப் போனவன். அவனை மேரி சந்திக்கிறாள். இரகசியத் தோட்டம் பற்றி அவனுக்கும் தெரிகிறது. மேரியுடனும் டிக்கானுடனும் அவனும் இரகசியத் தோட்டத்திற்குப் போகிறான். காலினுக்கு எல்லோரும் பயப்படுவதால் அவனுடைய கட்டளைக்குப் பயந்து யாரும் அவர்களைப் பின்தொடர்வதில்லை. மேலும் பெரிய தோட்டங்கள் நிரம்பிய வீடென்பதால் அவர்களை வீட்டுக்குள்ளிருந்தும் கவனிக்க முடியவில்லை.
தோட்டம் செழிக்கிறது, காலினும் நடக்கப் பழகுகிறான். அவனுடைய மனமும் மாறுகிறது. நல்ல சிறுவனாக மாறுகிறான். தந்தை வந்ததும் நடந்து காண்பிக்க விரும்புகிறான். அதனால் நடப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள் மூவரும். க்ரேவன் வந்தாரா? மகன் நடப்பதைக் கண்டாரா? தோட்டம் பற்றிய இரகசியம் என்னவாயிற்று என்பதே முடிவு.
பாழ்பட்ட தோட்டம் பண்படுவது போல இரண்டு குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக திருந்துவதுதான் கதை. மிகவும் அற்புதமான இந்தக் கதையைப் படிக்கப் படிக்க இன்பம். கீழே வைக்க முடியாது. எல்லா கதைகளிலும் கெட்ட குழந்தைகள் தண்டனை பெறுவதாகத்தான் வரும். ஆனால் இந்தக் கதையில் அவர்கள் திருந்தி நல்ல பிள்ளைகள் என்று பெயரெடுக்கிறார்கள். நல்ல கதை. கண்டிப்பாகப் படியுங்கள். இந்தக் கதை internet-இல் இலவசமாகக் கிடைக்கிறது. படித்துப் பாருங்கள்.
http://www.americanliterature.com/CG/CGINDX.HTML
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, September 28, 2005
மாறிப் போன பயணங்கள்
மிகச்சிறிய வயதில் (எனக்கு வயது நினைவில்லை. நம்புங்கள். என்னைக் கைக்குழந்தையாக கையில் வைத்துக் கொண்டு எனது அத்தை உறங்கிக் கொண்டிருந்த அம்மாவைக் காட்டி, "யாரு அது சொல்லு" என்று கொஞ்சியதும் நினைவில் இருக்கிறது.) தூத்துக்குடியில் எனது அத்தை வீட்டில் இருந்தேன். இரண்டு வயதிலிருந்து எனது அத்தைதான் கொஞ்ச காலம் வளர்த்தார்கள்.
விளாத்திகுளம், நாகலாபுரம் தாண்டி இருக்கும் புதூர்தான் எங்கள் தந்தை வழி மூதாதையர்களின் சொந்த ஊர். தூத்துக்குடியிலிருந்து நேர் பஸ் உண்டு. ஆனால் அடிக்கடி இருக்காது. விளாத்திகுளம் போய் மாறுவதும் சில சமயம் செய்திருக்கிறோம்.
இரண்டு பஸ் கம்பெனிகள். பெயர்கள் இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. மீரான் டிரான்ஸ்போர்ட், லயன் டிராஸ்போர்ட். இரண்டு வண்டிகளுமே கொஞ்சம் பழைய வண்டிகள். சொல்லி வைத்தாற்போல் இரண்டிலுமே கொஞ்சம் வயதில் பெரியவர்தான் ஓட்டுனராக இருப்பார். கட்டபொம்மன் பேருந்துகளில் கொஞ்சம் இளவயது ஓட்டுனர்கள் இருப்பார்கள்.
அந்தச் சின்ன வயதில் நான் லயன் வண்டியில்தான் போக வேண்டும் என்று அடம் பிடித்திருக்கிறேன். காரணங்கள் இரண்டு.
1. அது நேராகப் புதூருக்குப் போகும்.
2. அதில் இடப்பக்க ஜன்னலை ஒட்டி ஒரே நீளமாக ஒரு சீட் இருக்கும்.
விளாத்திகுளத்திற்கு கட்டபொம்மன் வண்டிகள் நிறைய உண்டு. அங்கு போய்விட்டால் அருப்புக்கோட்டை போகும் பல வண்டிகள் கிடைக்கும். அந்தப் பேருந்துகள் புதூர் வழியாகத்தான் போகும். தூத்துக்குடியிலிருந்து புதூர் வழியாக அருப்புக்கோட்டை செல்லும் கட்டபொம்மன் பேருந்துகளும் உண்டு. ஆனால் எனக்குப் பிடித்தது லயனும் மீரானும்தான்.
கட்டபொம்மன் வண்டிகளைக் கேடீசி (கட்டபொம்மன் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன்) என்பார்கள். மதுரைக்குப் பாண்டியன். கோவைப் பக்கம் சேரன். சென்னையில் பல்லவன். தஞ்சைப் பக்கம் சோழன். இவ்வளவுதான் எனக்குத் தெரிந்து முதலில் இருந்த போக்குவரத்துக் கழகங்கள். இவை பல்கிப் பெருகி இன்றைக்கு எல்லாம் ஒன்றே என்று ஆகிவிட்டன.
இந்த லயன் வண்டியிலும் மீரான் வண்டியிலும் போவது பெரியவர்களுக்குப் பிடிக்காது. ஏனென்றால் அவை மெதுவாகச் செல்லும். அதிலும் ஒரு நாளைக்கு இரண்டு முறைதான் அவை புறப்படும். காலையில் ஒன்று. மாலையில் ஒன்று. நாங்கள் பெரும்பாலும் மாலையில்தான் செல்வோம்.
அதுவுமில்லாமல் லயன் வண்டி எல்லா இடங்களிலும் நிற்குமாம். அதுவும் தாமதத்திற்குக் காரணம். நான் இரண்டு பக்கங்களிலும் உள்ள ஊர்களைப் பார்த்துக் கொண்டே செல்வேன். தேவையில்லாத கேள்விகளைக் கேட்டிருக்கின்றேன். அந்த வயதில் சரியான அந்தக் கேள்விகள் இந்த வயதில் கேணத்தனமாகத் தோன்றுகின்றன.
எட்டையாபுரம் போகும் வழியில் எப்போதும் வென்றான் என்று ஒரு ஊர் உண்டு. "எப்பொதென்றான்" என்று வேகமாகச் சொல்லும் போது கேட்கும். நடத்துனர் அடிக்கடி அப்படிச் சொல்வதால் என் காதில் "எப்போண்டா" என்று விழுந்திருக்கிறது. "ஏந்த்த இந்த ஊருல போண்டா போடுவாங்களா? நம்ம புதுக்கிராமம் டீக்கட போண்டா மாதிரி இருக்குமா?" என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.
கொஞ்சம் வளர்ந்த பிறகு எப்போதும் வென்றானுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று கேணத்தனமாக ஒரு கதையை என் அத்தையிடம் சொல்லியிருக்கிறேன். அதை நிச்சயமாக ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டிருப்பார். "ஹர்ஷா எப்ப சண்ட போட்டாலும் ஜெயிச்சாராம். அதான் இந்த ஊருக்கு எப்போதும் வென்றான்னு பேரு." அங்கே அதிசயமாக ஓரு இடத்தில் கொட்டியிருந்த செம்மண்ணைக் காட்டி, "ரொம்ப சண்ட போட்டப்போ...ரெத்தம் சிந்தித்தான் செக்கச் செவேல்னு இருக்கு." இதையெல்லாம் கேட்கும் பொழுது என் அத்தைக்கு எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து அவர் மேல் பரிதாபப் படுகிறேன்.
தூத்துக்குடியில் இருந்து புறப்படும் லயன் வண்டி குறுக்குச்சாலை வழியாகப் போகும். அதென்ன குறுக்குச்சாலை? அது நான்கு ஊர்ச்சாலைகள் கூடுமிடம். பாஞ்சாலங்குறிச்சி, தூத்துக்குடி, எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய நான்கு ஊர்ச்சாலைகளும் கூடும் சாலை குறுக்குச்சாலை. அந்தக் காலத்திலேயே எப்படி பெயர் வைத்திருக்கின்றார்கள் பாருங்கள்.
அதற்கப்புறம் உள்ள ஊர்களின் பெயர்கள் எனக்கு இப்பொழுது நினைவில் இல்லை. ஆனால் யாராவது சொன்னால் கண்டிப்பாகத் தெரியும். அடுத்து நினைவிருக்கும் ஊர் விளாத்திகுளம்தான்.
விளாத்திகுளத்திற்கு முன்னால் சிறிய பாலம் உண்டு. வழக்கமான பாலங்களைப் போல கீழே நீர் ஓடுவதும் தூண்கள் சாலையைத் தாங்கிக் கொண்டிருக்கும் படியும் இருக்காது. பாலம் குழிந்து தரையோடு இருக்கும். மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி ஓடும். அப்பொழுதெல்லாம் போக்குவரத்து பாதிக்கப்படும். ஆனால் அதெல்லாம் நான் கைக்குழந்தையாக இருந்த காலங்களில். எனக்கு விவரம் தெரிந்து அந்தப் பாலத்தில் வெள்ளத்தைப் பார்த்ததில்லை.
விளாத்திகுளத்தை விட்டு வெளியில் செல்லும் இடத்தில் ஒரு பெரிய கண்மாய் உண்டு. அதில் நான் சிறுவயதில் தளும்பத் தளும்பத் தண்ணீரைப் பார்த்திருக்கிறேன். இப்பொழுது அந்தக் கண்மாய் ஆக்கிரமிப்பால் குறுகிக் காய்ந்து வெடித்துப் போயிருக்கிறது.
அடுத்தது நாகலாபுரம். அதுவும் ஒரு சிற்றூர்தான். அங்கு கூட்டமாக இருக்கும். நாகலாபுரம் வந்தாலே புதூர் வந்து விட்டது போல இருக்கும். ஊருக்கு வெளியே ஒரு டெண்ட்டு கொட்டகை. அதைக் கடந்து போகையில் எந்தப் படம் அங்கே ஓடுகிறது என்று எனக்குக் கண்டிப்பாய்ப் பார்க்க வேண்டும். ஜன்னல் ஓரத்தில் எட்டி எக்கிப் பார்ப்பேன்.
புதூருக்குள் நுழையும் போதே இருக்கங்குடி விலக்குக்குப் பக்கத்தில் இருக்கும் வெற்றிலைக் கொடிக்கால்கள் தெரியும். அடுத்தது முருகன் கோயில். அப்படியே புதூர் பேருந்து நிலையம். அங்கும் பெரிய தட்டி வைக்கப் பட்டிருக்கும். சினிமா போஸ்டர்களோடு. ரத்னா, சீதாராம் என்று இரண்டு டெண்ட்டு கொட்டகைகள். இவற்றில் சீதாராம் கொட்டகை எங்கள் நிலத்தில் அமைந்திருந்தது. ஆகையால் அங்கே வீட்டின் பெயரைச் சொன்னால் ஓசியிலேயே படம் பார்க்கலாம்.
புதூரில் இறங்கியதும் அங்கே தெரிந்தவர் கடையில் பெட்டி படுக்கைகளை வைப்போம். காரணம் ஒரு அரைக்கிலோமீட்டர் ஊருக்குள் நடக்க வேண்டும். ஒன்றும் பெரிய தொலைவு இல்லை. ஆனாலும் அப்படித்தான். பிறகு வீட்டிற்கு நடந்து போய் அங்கிருந்து யாரையாவது சைக்கிளில் அனுப்பி எடுத்து வருவோம். சுற்றி பெரும்பாலும் எப்படியாவது உறவாகத்தான் இருப்பார்கள். ஆகையால் இளம் பையன்களை சைக்கிளில் பை எடுக்க பெரியவர்கள் அனுப்புவார்கள்.
இப்பொழுது லயன் பேருந்துகள் ஓடுவதில்லை. கட்டபொம்மனைத் தூக்கிப்(ல்) போட்டாயிற்று. பெரும்பாலும் தேவைப்படுகின்ற சமயங்களில் கார் வைத்துக்கொண்டுதான் போகின்றோம். நாங்கள் பை வைத்த கடை இன்னும் இருக்கிறது. ஆனாலும் பைகள் காரில் நேராக வீட்டிற்குப் போகின்றன. நாகலாபுரம் கொட்டகையில் என்ன படமென்று கூட எட்டிப் பார்க்கவில்லை. சீதாராம் கொட்டகைக்குக் குத்தகை முடிந்தது. ஆகையால் அவர்கள் கொட்டகையைக் கலைத்து விட்டார்கள். ரத்னா மட்டும் இன்னும் இருக்கிறது. போன முறை போயிருந்த பொழுது Lord of the rings தமிழில் பார்த்ததுதான் மிச்சம்.
அன்புடன்,
கோ.இராகவன்
Sunday, September 25, 2005
தருமனும் தருமமும்
தருமனும் தருமமும்
அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் பெருமிதம்.
பின்னே. ஐந்து தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்கம் புக வந்து, தனியொருவனாகப் போகிறான் அல்லவா. முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். மிஞ்சியன் தருமனே. அவனை, தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் இருவர் முகத்திலும் பெருமிதம்.
தருமதேவன் சொர்க்கத்திலேயே தங்க முடியாது. அவனுடைய உலகத்திற்குச் சென்று காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். ஆகையால் மகனைச் சொர்க்கம் ஏற்றி விட்டு அவனும் உடனே விலக வேண்டும். கடமை தவறினால் சர்வேசுவரன் விட மாட்டான்.
தருமனுக்கும் மகிழ்ச்சிதான். "சொர்க்கத்தில் தம்பியரைச் சந்திக்கலாம். திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதிரியையும் சந்திக்கலாம். என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல தன்னையும் நொறுக்கி விடாமல் இருக்க பேசாமல் அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது." இன்னும் உயிராசை தருமனை விடவில்லை.
ஆசைகளும்தான். "பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் தேவையில்லாமல் போர் நினைவுகளும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் வரும். நம்முடைய பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அவர் நம்மை மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூறுவரும் நிச்சயம் நரகத்தில் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை. கர்ணர் எங்கிருப்பார்? நமது அண்ணன் ஆகையால் சொர்கத்தில்தான் இருக்க வேண்டும்." புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.
"அவர் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?" தருமனின் மூளை கணக்குப் போட்டது. முடிவும் கண்டது. "சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும். அட! இதென்ன நறுமணம். மனதை மயக்குகிறதே. சொர்கம் வந்து விட்டதா?"
ஆம். உண்மையிலேயே சொர்கம் வந்து விட்டது. புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை. "மகனே. உடலோடு சொர்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. அதற்கு மேல் நான் என் கடமையைச் செய்யச் செல்ல வேண்டும். நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்."
தருமதேவதை புட்பக விமானத்தில் புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். அவைகளில் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது. ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.
ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துறத்தவில்லை. பசுவும் மருளவில்லை. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாகச் சென்ற பாதையில் நடந்தான் தருமன். சொர்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். என்ன இருந்தாலும் ஊருக்குப் புதிதுதானே.
"இதென்ன சொர்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட அருமையாக இருக்கிறதே. இங்கே ஒரு ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? ஒரெ விலங்குகளும் பறவைகளுமாகத் தெரிகின்றனவே. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. ஒவ்வொருவராக எங்கு போய்த் தேடுவது?"
கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி நடந்தான் தருமன். "பெரிய ஊர் போலத் தெரிகிறது. இவ்வளவு பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் போய்ப் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று ஊருக்குள் போய் கேட்கலாம்."
இப்படி நினைத்துக் கொண்டு நடக்கையில் எதிரே ஓடி வந்தான் சகுனி. "தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்." பாசம் மிகுந்த குரலில் அழைத்தான் சகுனி.
"அடடா! முதலில் போயும் போயும் சகுனி முகத்திலா விழிக்க வேண்டும். இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"
"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.
"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.
சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."
இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான். "மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? நான் செய்த காரியங்கள் அனைத்தையும் இறைவன் பெயரால் செய்ததால் சொர்கம் எனக்கு கதவு திறந்தது. காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். ஆனாலும் இறைவனை விடாது தொழுது, அவன் பெயரிலேயே அனைத்தையும் செய்ததால் இறைவன் அருளிய பரிசு இது."
தருமனக்கு இன்னொரு ஐயம் வந்தது. "அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?"
சிரித்து விட்டான் சகுனி. தருமனுக்குப் பதமாகச் சொன்னான் ஒரு மறுமொழி. "சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே. நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் கொஞ்சம் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் இப்பொழுது வருகிறது. சொர்க்கத்திற்கு நன்றி."
"என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?" ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.
"ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பா அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. போய்ப் பார்க்கலாம்."
யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். சரி பெரியம்மாவையும் பெரியப்பாவையும் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.
சற்று முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடினாள். அவள் சரக்கென்று கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. "அண்ணா என்று அழைத்தான்."
கர்ணனும் திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடத்தில் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. "தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. "அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நட்புக்காக துரியோதனனுக்குக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! எனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாதே!"
அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். "தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம்." தருமனின் கண்ணைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.
சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். இருமருங்கிலும் புத்தம்புது வீடுகள். மாட மாளிகைகள். கூட கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் செந்தாமரையும் வெண்டாமரையும் பூத்துக் குலுங்கின. அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.
சூரியன் கண்ணில் தென்படவேயில்லை. ஆனாலும் வெளிச்சம் பரவியிருந்தது. அந்த வெளிச்சமும் கண்ணை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. என்னவோ ஒரு மென்மையான ஒளி பரவியிருந்தது போல சுகமாக இருந்தது.
பெரியம்மாவையும் பெரியப்பாவையும் பார்க்க அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராஷ்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பொன்னிறது மரத்தில் வெள்ளி இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. பார்த்த கண்ணை தருமனால் எடுக்க முடியவில்லை. மூவரின் கையிலும் கோப்பைகள் இருந்தன. ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். "மதிப்பிற்குரிய பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்."
கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.
"மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்கத்தில் காண மகிழ்ச்சியே. நீ வருவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாகச் சேர்வதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனன் மிகவும் மகிழ்வான்."
திருதுராஷ்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.
"தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூறுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?" கவுரவர்கள் நூறுவரும் சொர்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் குந்தி சொன்னாள்.
"யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். மற்றவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்."
தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் இங்கே வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்க ஆசை கொண்டான்.
"அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?"
"நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்"
குந்தியை இடைமறித்தார் திருதிராஷ்டிரர். "குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்."
லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் சேர்த்துச் சமைத்தது. சுட்ட இறைச்சி. செந்நெற் சோறு. கிண்ணம் நிறைய நெய். பழவகைகள் என்று இருந்தது. அமர்ந்து உண்டான். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.
உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். கர்ணனைப் பார்த்து கேட்டான். "அண்ணா! சொர்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா! மண்ணுலகிற்கும் இந்த விண்ணுலகிற்கும் என்ன வேறுபாடு?"
"தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர். இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாகாதவர்களும் இறைவனை வணங்காதவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று சொல்கிறார்கள். நரகத்தில் நெருப்பில் உழல்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்ததில்லை.
இந்தச் சொர்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். இங்கு ஊனம் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியிருக்கும் பருவநிலை. மழையை விரும்பினால் விரும்பியவருக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் மற்றவருக்கு அதே இடம் நிலாக் காயலாம். இல்லை வெயிலும் அடிக்கலாம். எல்லாம் நமது மனத்தையும் ஆசையையும் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய உணவும் பானங்களும் கிடைக்கும். இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு கூடிக் களிப்புறலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்."
தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.
தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. "எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான். அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"
பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிர்ஷ்டனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. "பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் வேகத்தை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உரித்தாயே! உன் தோலைப் போர்க்களத்தில் உரித்தது மறந்து போனதா? ஆனால்.........பாஞ்சாலியும் உன்னோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!"
தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.
தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. "குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!" பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.
தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். "திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!"
இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராஷ்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். "மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன். ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்கத்தில் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..
சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். அது ஆடவருக்கு ஆண்டவன் அளிக்கும் பரிசு. இறைவனை நம்பி வணங்கி வரும் ஆண்டவர்களுக்கு என்றென்றும் இன்பம் தருவதே சொர்கம். இங்கே இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்."
உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. "இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?" எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.
திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். "பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைக் காப்பதுதானே பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் என்ன நினைத்தால் உங்களுக்கு என்ன வந்தது?"
தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். "திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கு விளக்கம் சொன்னால் எப்படி?"
சிரித்து விட்டாள் பாஞ்சாலி. "ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!
எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். உங்கள் சகோதரர் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை பல காலம் கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அவன் விலகலாம் என்று கணக்குப் போட முடியாது.
இதை சொர்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது அங்குள்ள நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்."
இப்பொழுது திருதுராஷ்டிரன் வாயைத் திறந்தான். "யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவிற்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்திற்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்."
தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராஷ்டிரன் விட்ட இடத்தில் கர்ணன் தொடர்ந்தான். "தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை."
முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். "இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்திற்கு வருவதற்கான ஒரு சோதனையா! உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்." கதறினான் தருமன்.
கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. "மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.
நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் உனக்காக எங்கும் இருப்பவர் இங்கும் தெரிவார்."
"இல்லை. இல்லை. என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை."
சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனேயே கை விட்டார்கள். சொர்கத்தினர் அவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு சிந்தனைகள் சிலந்தை வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடினான். தடக்கென்று காலை ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான். ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென அவன் உடல் இமயத்தில் இடித்தது விழுந்தது. அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.
அன்புடன்,
கோ.இராகவன்
அந்தப் புட்பக விமானம் கால தேச வர்த்தமானங்களைக் கடந்து உயரப் போய்க் கொண்டிருந்தது. அழகிய பொன் விமானம். அதற்கு முத்து விதானம். தருமனும் தருமதேவதையும் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் பெருமிதம்.
பின்னே. ஐந்து தம்பியருடனும் திரவுபதியுடனும் நாட்டைத் துறந்து சொர்கம் புக வந்து, தனியொருவனாகப் போகிறான் அல்லவா. முதலில் திரவுபதி வீழ்ந்தாள். அடுத்து சகாதேவன். கொஞ்ச நேரத்திலேயே நகுலன். அந்தோ! அழகிய அருச்சுனனும் மாண்டான். பலசாலி பீமன் கூட பாவம். வீழ்ந்தான். மிஞ்சியன் தருமனே. அவனை, தன் மகனை உடலோடும் உயிரோடும் சொர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு போகிறான் தருமதேவதை. ஆகையால்தான் இருவர் முகத்திலும் பெருமிதம்.
தருமதேவன் சொர்க்கத்திலேயே தங்க முடியாது. அவனுடைய உலகத்திற்குச் சென்று காலம் தவறாமல் காலன் பணியைச் செய்ய வேண்டும். ஆகையால் மகனைச் சொர்க்கம் ஏற்றி விட்டு அவனும் உடனே விலக வேண்டும். கடமை தவறினால் சர்வேசுவரன் விட மாட்டான்.
தருமனுக்கும் மகிழ்ச்சிதான். "சொர்க்கத்தில் தம்பியரைச் சந்திக்கலாம். திரவுபதையைச் சந்திக்கலாம். பெரிய பாட்டனார் பீஷ்மரையும், ஆசான் துரோணரையும், குலகுரு கிருபாச்சாரியரையும் சந்திக்கலாம். தாயார் குந்தியையும் கூடவே சிற்றன்னை மாதிரியையும் சந்திக்கலாம். என்னதான் இருந்தாலும் பெரியப்பா திருதுராட்டினரையும் பெரியம்மா காந்தாரியையும் கண்டிப்பாக வணங்க வேண்டும். பீமன் என்று நினைத்து இரும்புத் தூணை நொறுக்கினாரே பெரியப்பா. அது போல தன்னையும் நொறுக்கி விடாமல் இருக்க பேசாமல் அவர் காலில் விழுந்து வணங்குவதே நல்லது." இன்னும் உயிராசை தருமனை விடவில்லை.
ஆசைகளும்தான். "பேசாமல் தம்பியரையும் தாயாரையும் திரவுபதையையும் கூட்டிக் கொண்டு ஒருபுறமாக சென்று ஒதுங்கி வாழ வேண்டும். பின்னே! மற்ற உறவினர்களைச் சந்திக்கையில் தேவையில்லாமல் போர் நினைவுகளும் அதில் நடந்த கொலைகளும் அக்கிரமங்களும் வரும். நம்முடைய பொய்யால்தான் துரோணரும் வீழ்ந்தார். அவர் நம்மை மன்னிக்க மாட்டார். அவரிடமிருந்தும் தள்ளியிருப்பதே நல்லது. துரியோதனாதிகள் நூறுவரும் நிச்சயம் நரகத்தில் இருப்பார்கள். ஆகையால் அவர்களால் பிரச்சனையில்லை. கர்ணர் எங்கிருப்பார்? நமது அண்ணன் ஆகையால் சொர்கத்தில்தான் இருக்க வேண்டும்." புதிதாக இந்த அண்ணன் பாசம் வேறு.
"அவர் நம்மோடு வருவாரா? ஒருவேளை துரியோதனனோடு இருக்க அவரும் நரகத்திற்குப் போயிருந்தால்?" தருமனின் மூளை கணக்குப் போட்டது. முடிவும் கண்டது. "சரி. அம்மாவிடம் சொல்லிக் கூப்பிடலாம். அம்மாவின் மீது அண்ணனுக்குப் பாசமுண்டு. இல்லையென்றால் உண்மையைச் சொல்லக்கூடாது என்ற வரமும் வாங்கி, போர்க்களத்தில் தான் வீழ்ந்தால் தன்னை மடியில் தூக்கி வைத்துக் கதற வேண்டும் என்று கேட்டிருப்பாரா? அம்மாவை வைத்துத்தான் அண்ணனை வளைக்க வேண்டும். அட! இதென்ன நறுமணம். மனதை மயக்குகிறதே. சொர்கம் வந்து விட்டதா?"
ஆம். உண்மையிலேயே சொர்கம் வந்து விட்டது. புட்பக விமானமும் நின்றது. மகனை இறங்கச் சொன்னான் தருமதேவதை. "மகனே. உடலோடு சொர்கம் புகுந்தான் என் மகன் என்ற பெருமை எனக்கு. இனியும் உன்னோடு நான் வரலாகாது. தரும விதிகளின் படி உன்னை இங்கு அழைத்து வரத்தான் கடமை. அதற்கு மேல் நான் என் கடமையைச் செய்யச் செல்ல வேண்டும். நீ இப்படியே சென்றால் உனக்கு வேண்டியவர்களையெல்லாம் காண்பாய். நான் வருகிறேன்."
தருமதேவதை புட்பக விமானத்தில் புறப்பட்டதும் வந்தடைந்த இடத்தை நன்றாகக் கவனித்தான். பச்சைப் பசேலென்று எங்கும் புல்வெளிகள். மரங்கள். செடிகள். கொடிகள். அவைகளில் மலர்கள் பூத்து நறுமணம் எங்கும் பரவியிருந்தது. கடும் வெயிலும் இல்லை. நடுக்கும் குளிரும் இல்லை. இதமான தட்பவெட்பம் சுகமாக இருந்தது. ஒரு பெரிய ஆறு ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றில் தண்ணீர் நிறைய ஓடினாலும் கரையைத் தாண்டவில்லை. சொர்கமல்லவா! வெள்ளம் வராது.
ஆற்றில் எல்லா உயிர்களும் ஒன்றாகவே தண்ணீர் குடித்தன. புலியும் பசுவும் கூடிக் குடித்தன. புலியும் பசுவைத் துறத்தவில்லை. பசுவும் மருளவில்லை. வரிசையாக நடப்பட்டிருந்த மரங்களின் ஓரமாகச் சென்ற பாதையில் நடந்தான் தருமன். சொர்கத்தின் விந்தைகளை வியப்பாக பார்த்துக் கொண்டு சென்றான். என்ன இருந்தாலும் ஊருக்குப் புதிதுதானே.
"இதென்ன சொர்கம். மயன் நமக்குக் கட்டிக் கொடுத்த மாளிகையையும் தோட்டத்தையும் விட அருமையாக இருக்கிறதே. இங்கே ஒரு ஆனந்த அமைதி நிலவுகிறதே. எப்படி? ஒரெ விலங்குகளும் பறவைகளுமாகத் தெரிகின்றனவே. மனிதர்கள் எங்கே இருப்பார்கள்? தேவர்கள் எங்கே இருப்பார்கள்? நான் வருகிறேன் என்று யாருக்கும் சொல்லவில்லையா? கிருஷ்ணர் கூட வந்து வரவேற்கவில்லையே. ஒவ்வொருவராக எங்கு போய்த் தேடுவது?"
கொஞ்ச தூரம் செல்லச் செல்ல பொன் மாளிகைகள் தொலைவில் தென்பட்டன. அங்குதான் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எண்ணி நடந்தான் தருமன். "பெரிய ஊர் போலத் தெரிகிறது. இவ்வளவு பெரிய அழகான மாளிகைகள் தெரிகின்றன. நமக்கு வேண்டியவர்கள் எல்லாம் இங்குதான் இருக்க வேண்டும். ஒவ்வொருவராகப் போய்ப் பார்க்கலாம். முதலில் யாரைப் பார்ப்பது? திரவுபதியைப் பார்த்து நாளாயிற்று. அவளோடு கூடிக் களிக்க வேண்டும். தாயாரை முதலில் பார்த்தாலும் நல்லதே. ஆசி வாங்கலாம். இவர்கள் எங்கேயிருக்கின்றார்கள் என்று ஊருக்குள் போய் கேட்கலாம்."
இப்படி நினைத்துக் கொண்டு நடக்கையில் எதிரே ஓடி வந்தான் சகுனி. "தருமா! வா! வா! நீ வருவதாகச் சொன்னார்கள். அதான் ஓடி வந்தேன்." பாசம் மிகுந்த குரலில் அழைத்தான் சகுனி.
"அடடா! முதலில் போயும் போயும் சகுனி முகத்திலா விழிக்க வேண்டும். இவர் எப்படி இங்கு வந்தார்? இவர் செய்த அட்டூழியங்களுக்கு நரகத்தில் எண்ணெய்க் கொப்பரையில் வெந்து கொண்டிருப்பார் என்று நினைத்தேன். தீயவர்கள் நரகத்தில் நெருப்புக்கு இரை என்றுதானே வேதம் சொல்கிறது. இவரைப் பார்த்தால் சுகமாக உண்டு வாழ்கிறவரைப் போலிருக்கிறாரே!"
"என்ன தருமா யோசனை?" சகுனி இடைமறித்தார்.
"இல்லை மாமா. எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்று தேடினேன். இங்கே என்ன ஏது என்று ஒன்றும் புரியவில்லை. இது சொர்கந்தானா?" கொஞ்சம் ஐயத்தோடே கேட்டான் தருமன்.
சிரித்து விட்டான் சகுனி. "மருமகனே! உன்னை உண்மையான பாசத்தோடு நான் வரவேற்றதிலிருந்தே தெரியவில்லையா! இது சொர்கந்தான் மருமகனே."
இத்தனை கொடுமை செய்த மாமனும் சொர்கத்தில் இருப்பதை தருமன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. தருமன் நினைத்ததைச் சகுனி புரிந்து கொண்டான். "மருமகனே! ஏதடா இவ்வளவு அடாது செய்த மாமன் சொர்கத்திலும் விடாது தொடர்ந்து வருகிறானே என்று பார்க்கிறாயா? நான் செய்த காரியங்கள் அனைத்தையும் இறைவன் பெயரால் செய்ததால் சொர்கம் எனக்கு கதவு திறந்தது. காந்தார தேசத்திலிருந்து அஸ்தினாபுரம் வந்தவன் நான். ஆனாலும் இறைவனை விடாது தொழுது, அவன் பெயரிலேயே அனைத்தையும் செய்ததால் இறைவன் அருளிய பரிசு இது."
தருமனக்கு இன்னொரு ஐயம் வந்தது. "அப்படியென்றால் தாங்கள் காந்தார தேசத்துச் சொர்கத்தில் அல்லவா இருக்க வேண்டும்? இங்கு என்ன செய்கின்றீர்கள்? காந்தாரி பெரியம்மா இருப்பதால் இங்கும் வந்து விட்டீர்களா?"
சிரித்து விட்டான் சகுனி. தருமனுக்குப் பதமாகச் சொன்னான் ஒரு மறுமொழி. "சொர்கம் என்பது தேசங்களுக்கல்ல. நேசங்களுக்கு. இங்கு அன்பின் வழியதுதான் அனைவரின் நிலை. மாண்டாரை அன்றி உயிரோடு மீண்டார் சொர்கத்தின் மகத்துவத்தை அறியார் என்பது உண்மைதான் போலும். மேலும் நீ உன் காந்தாரி பெரியம்மாவைப் பற்றிச் சொன்னாய். மருமகனே. நானும் ஒரு அண்ணன். எனக்கும் சகோதரி மேல் கொஞ்சம் பாசம் உண்டு. இங்கு வந்த பிறகு அது பல்கிப் பெருகி விட்டது. மேலும் காந்திரியைப் பார்க்கும் பொழுது உண்டாகும் அதே பாசம் உனது தாய் குந்தியைப் பார்த்தாலும் இப்பொழுது வருகிறது. சொர்க்கத்திற்கு நன்றி."
"என்ன அம்மாவையும் பெரியம்மாவையும் பார்த்தீர்களா?" ஆவல் பொங்கக் கேட்டான் தருமன்.
"ஆம் தருமா! உன்னுடைய தாயும் நலம். பெரியம்மாவும் நலம். இன்னொன்றும் சொல்ல வேண்டும். இங்கு உனது பெரியம்மா கண்களைக் கட்டிக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் சொர்கத்தில் குருடர்கள் இல்லை. உன்னுடைய பெரியப்பா அனைத்தையும் பார்க்கலாம். ஆகையால் கண்ணைக் கட்டிக் கொள்ளாத உனது பெரியம்மாவைப் பார்க்க உனக்கே புதுமையாக இருக்கும். சரி. வா. போய்ப் பார்க்கலாம்."
யுதிஷ்டிரன் வியப்பின் உச்சிக்கே போனான். சரி பெரியம்மாவையும் பெரியப்பாவையும் சந்தித்து ஆசி பெற எண்ணி சகுனியுடன் சென்றான்.
சற்று முன்னே நடந்திருப்பார்கள். யாரோ ஒரு பெண் சிரித்துக்கொண்டே சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு ஓடினாள். அவள் சரக்கென்று கடந்து போனதால் அடையாளம் தெரியவில்லை. பின்னால் ஒரு ஆண்மகனும் ஓடினான். அட! அது கர்ணன். தருமனுக்குப் பாசம் பொத்துக் கொண்டு வந்தது. "அண்ணா என்று அழைத்தான்."
கர்ணனும் திரும்பிப் பார்த்தான். முகத்தில் வியப்பும் அன்பும் தெரிந்தன. கொடுத்துப் பழக்கப் பட்ட கர்ணனிடத்தில் கொடுக்க அன்பும் நிறைய இருந்தது. "தம்பி, நலமா? உன்னை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்." தருமனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.
தருமனுக்குக் கண்ணில் தண்ணீர் வழிந்தது. "அண்ணா என்று உங்களை வாய் நிறைய பூமியில் கூப்பிட முடியாமல் போனதை நினைத்து நான் வருந்தாத நாளே இல்லை. நீங்கள் இருந்து ஆட்சி செய்ய வேண்டிய அரியணையை நட்புக்காக துரியோதனனுக்குக் கொடுக்க போர் புரிந்தீர்களே. ஐயோ! உங்களுக்கு உரிய அந்த ஆட்சியை நான் அபகரித்தேனே. அண்ணா! எனக்கு மன்னிப்பே கிடையாது. இந்த பாவத்திற்கு விமோசனமே கிடையாதே!"
அழுத தம்பியைத் தேற்றினான் கர்ணன். "தம்பி யுதிஷ்டிரா, அழாதே. வா! நாம் முதலில் அன்னையைக் காணலாம். பிறகு தம்பியர்களைக் காணலாம்." தருமனின் கண்ணைத் துடைத்து அழைத்துச் சென்றான் கர்ணன். சகுனியும் உடன் சென்றான்.
சற்று நடந்ததுமே ஊர் வந்தது. அழகிய எடுப்பான வீதிகள். இருமருங்கிலும் புத்தம்புது வீடுகள். மாட மாளிகைகள். கூட கோபுரங்கள். நடுநடுவே அழகிய மலர்ச்சோலைகள். மடுக்கள். மடுக்களைச் சுற்றி அழகிய பொன்னிற அன்னங்கள். மடுவில் செந்தாமரையும் வெண்டாமரையும் பூத்துக் குலுங்கின. அந்தி வேளையோ எந்த வேளையோ என்று தெரியாமல் அல்லியும் மலர்ந்திருந்தது.
சூரியன் கண்ணில் தென்படவேயில்லை. ஆனாலும் வெளிச்சம் பரவியிருந்தது. அந்த வெளிச்சமும் கண்ணை உறுத்தவில்லை. தோலைச் சுடவில்லை. வியர்க்கவில்லை. என்னவோ ஒரு மென்மையான ஒளி பரவியிருந்தது போல சுகமாக இருந்தது.
பெரியம்மாவையும் பெரியப்பாவையும் பார்க்க அவர்கள் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கவில்லை. காந்தாரியும் திருதுராஷ்டிரனும் குந்தியும் ஒரு பெயர் தெரியாத மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பொன்னிறது மரத்தில் வெள்ளி இலைகளும் வைர மொட்டுகளும் பவழப் பூக்களும் நிறைந்திருந்தன. பார்த்த கண்ணை தருமனால் எடுக்க முடியவில்லை. மூவரின் கையிலும் கோப்பைகள் இருந்தன. ஏதோ அருந்திக் கொண்டிருந்தனர். கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
மூவரையும் வணங்கி விட்டு கர்ணன் சொன்னான். "மதிப்பிற்குரிய பெரியப்பாவிற்கும் பெரியம்மாவிற்கும் எனது வணக்கங்கள். தாயார் குந்திக்கும் எனது வணக்கங்கள். நமது யுதிஷ்ட்டிரன் நம்மிடம் வந்துள்ளான். அவனது வணக்கங்களை உங்களுக்குக் காணிக்கையாக்குகிறான்."
கர்ணன் சொன்னதும் தருமன் மூவரையும் பணிந்து எழுந்தான். குந்தி அவனை உச்சி முகர்ந்து அன்பை வெளிப்படுத்தினாள். யாருக்கும் பேச்சு வரவில்லை. காந்தாரிதான் முதலில் பேச்சைத் துவக்கினாள்.
"மகனே தருமா! உன்னை இன்றுதான் நான் கண்கொண்டு காண்கிறேன். உனது பெரியப்பாவும் அப்படித்தான். உன்னைச் சொர்கத்தில் காண மகிழ்ச்சியே. நீ வருவதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். எங்களோடு நீ வந்து சேர்ந்து நமது குடும்பம் ஒன்றாகச் சேர்வதில் மெத்த மகிழ்ச்சி. உன்னைச் சந்திப்பதில் சுயோதனன் மிகவும் மகிழ்வான்."
திருதுராஷ்டிரனும் காந்தாரியும் எப்பொழுதும் துரியோதனனை சுயோதனன் என்றுதான் அழைப்பார்கள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா.
"தாயே தங்கள் அனைவரையும் இங்கு மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தம்பி துரியோதனனோடு சேர்த்து நூறுவரையும் சந்திக்க மகிழ்ச்சிதான் எனக்கு. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்பொழுது?" கவுரவர்கள் நூறுவரும் சொர்கத்திலா இருக்கிறார்கள் என்ற ஐயம் தருமனுக்கு. தருமனின் ஐயத்தைத் தீர்க்கும் வகையில் குந்தி சொன்னாள்.
"யுதிஷ்டிரா! உனது தம்பிகள் நூற்று ஐவரும் இங்குதான் இருக்கின்றார்கள். மற்றவர்கள் இப்பொழுது எங்கேயிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. ஆனால் சற்று முன்னேதான் சுயோதனனோடு பீமனும் விஜயனும் சென்றார்கள். அனேகமாக மானசரோவருக்குச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். பீமன் அங்கு சென்ற கதையைச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சுயோதனனுக்கும் அங்கு செல்ல ஆசை வந்தது. ஆகையால் அவர்கள் மூவரும் மானசரோவர் சென்று நீராடப் போயிருக்கிறார்கள்."
தருமனுக்குத் திடுக்கென்றது. ஏற்கனவே ஒருமுறை இப்படித்தான் துரியோதனன் பீமனைக் கட்டி ஆற்றில் போட்டான். அதே போல இப்பொழுதும் செய்து விட்டால் என்று அவன் மனம் அஞ்சியது. கொஞ்சமும் யோசிக்காமல் அனுப்பிய குந்தியின் மேல் லேசான கோவம் வந்தது. ஆனால் இங்கே வெளிக்காட்டினால் நன்றாக இருக்காது என்று பேசாமல் இருந்தான். நகுல சகாதேவர்களையாவது பார்க்க ஆசை கொண்டான்.
"அம்மா! நான் நகுலனையும் சகாதேவனையும் பார்க்க வேண்டும். அவர்கள் எங்கே அம்மா?"
"நகுலனும் சகாதேவனும் மாதரியோடும் தந்தையாரோடும் ஓடம் விளையாடுகிறார்கள். இன்னும் சற்று நேரத்தில் நம்மோடு வந்து சேர்வார்கள். அவர்களை அழைத்து வர பிதாமகர் பீஷ்மரும் பெரிய பாட்டியார் சத்தியவதியும் போயிருக்கிறார்கள்"
குந்தியை இடைமறித்தார் திருதிராஷ்டிரர். "குந்தி, முதலில் தருமன் தனது களைப்பைப் போக்கட்டும். தருமா! நீ நிற்பது கற்பக மரத்தடியில். உனக்கு வேண்டியவைகளைக் கேட்டு அருந்து. நல்ல கனிகளைக் கேள். இல்லை உனக்கு எது வேண்டுமோ அதைக் கேள். கிடைக்கும்."
லேசாகப் பசித்தது தருமனுக்கு. கற்பகமரத்திடம் எதையும் கேட்கலாம் அல்லவா. உண்டால் தனக்கு உண்மையிலேயே நிறைவு தரும் உணவு வேண்டும் என்று கேட்டான். ஒரு தங்கத் தாம்பாளத்தில் பலவித உணவுகள் வந்தன. காய்கறிகளைச் சேர்த்துச் சமைத்தது. சுட்ட இறைச்சி. செந்நெற் சோறு. கிண்ணம் நிறைய நெய். பழவகைகள் என்று இருந்தது. அமர்ந்து உண்டான். கர்ணனும் சகுனியும் அமுதரசம் வேண்டுமென்று கற்பக மரத்திடம் கேட்டு அருந்தினார்கள்.
உண்ட பின்பு தருமன் சற்று அமைதியானான். கர்ணனைப் பார்த்து கேட்டான். "அண்ணா! சொர்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள் அண்ணா! மண்ணுலகிற்கும் இந்த விண்ணுலகிற்கும் என்ன வேறுபாடு?"
"தம்பி, சொர்கம் என்பது இன்பபுரி. இங்கு இறைவனின் அன்புக்குப் பாத்திரமானர்கள் வாழும் ஊர். இறைவனின் அன்பிற்குப் பாத்திரமாகாதவர்களும் இறைவனை வணங்காதவர்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என்று சொல்கிறார்கள். நரகத்தில் நெருப்பில் உழல்வார்கள் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நான் பார்த்ததில்லை.
இந்தச் சொர்கத்தில் பசியில்லை. பட்டினியில்லை. வேண்டிய பொழுது வேண்டியதைச் சாப்பிடலாம். எல்லாம் கிடைக்கும். உடலும் ஒத்துளைக்கும். இங்கு ஊனம் இல்லை. ஒருவரின் அனைத்து அவயங்களும் எல்லா வகையிலும் ஒத்துழைக்கும். இரவுமில்லை. பகலுமில்லை. நமது மனம் எப்படி விரும்புகிறதோ அப்படியிருக்கும் பருவநிலை. மழையை விரும்பினால் விரும்பியவருக்கு மட்டும் மழை பெய்யும். ஆனால் மற்றவருக்கு அதே இடம் நிலாக் காயலாம். இல்லை வெயிலும் அடிக்கலாம். எல்லாம் நமது மனத்தையும் ஆசையையும் பொருத்தது. ஆங்காங்கே கற்பகதருக்கள். வேண்டிய உணவும் பானங்களும் கிடைக்கும். இங்கே பெண்கள் எப்பொழுதுமே தூயவர்கள். அவர்களோடு கூடிக் களிப்புறலாம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்."
தருமனுக்கு அலுப்புத் தட்டத் தொடங்கியது. அவன் மனமும் உடலும் திரவுபதிக்காக ஏங்கியது. திரவுபதி இப்பொழுது இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான். நினைத்த இடமோ கற்பக மரத்தடி. அது திரவுபதியின் மனதை மாற்றி அங்கு வரவழைத்தது.
தொலைவில் திரவுபதி வருவது தருமனின் கண்களுக்குப் புலப்பட்டது. "எத்தனை முறை பார்த்த முகம். எளிதில் மறக்குமா! அந்த நடையும் உடையுமே சொல்லுமே பாஞ்சாலியின் பாங்கை! ஆனால் உடன் வருவது யார்? தெரிந்தவன் போல இருக்கிறது. நகுலனா? இல்லையே. நகுலன் தந்தையோடும் தாயோடும் ஓடம் விளையாடப் போயிருக்கிறானே. சகாதேவனும் உடன் சென்றிருக்கிறான். அருச்சுனனும் பீமனும் துரியோதனனைக் கூட்டிக் கொண்டு மானசரோவரம் வரை சென்றிருக்கிறார்கள். வேறெந்த ஆண்மகன் பாஞ்சாலியின் தோள் மீது கை போட்டுக் கொண்டு விளையாட முடியும்?"
பாஞ்சாலியும் உடன் வருகின்றவனும் இன்னும் நெருங்கி வந்தார்கள். இப்பொழுது அது யாரென்று யுதிர்ஷ்டனுக்குத் தெரிந்தது. தெரிந்ததுமே தலை சுற்றியது. இரத்தம் கொதித்தது. "பாவி துச்சாதனா! நீயா! எவ்வளவு துணிவிருந்தால் பாஞ்சாலியின் தோளில் கை போட்டுக் கொண்டு வருவாய்! குருஷேத்திரத்தில் கண்ட பீமனின் கதையின் வேகத்தை உனது நெஞ்சு மறந்து விட்டதா! அவை நடுவே அவளை அம்மணமாக்க நினைத்து சீலையை உரித்தாயே! உன் தோலைப் போர்க்களத்தில் உரித்தது மறந்து போனதா? ஆனால்.........பாஞ்சாலியும் உன்னோடு குலவிக் கொண்டு வருகிறாளே! என்ன ஆயிற்று!"
தருமனின் ஐயத்திற்குக் காரணமில்லாமல் இல்லை. திரவுபதியானவள் துச்சாதனனோடு கூடிக் குலவிக் கொண்டுதான் வந்தாள். ஏதோ காதலர் இருவர் மகிழ்ந்து சுகித்து அந்த நினைவுகளில் திளைத்து வருவது போல இருந்தது. அருகில் வரட்டும் என்று கொதித்துக் கொண்டிருந்தான் தருமன்.
தருமனைக் கண்டதுமே திரவுபதியின் முகம் விடியற்காலை மலர் போல மலர்ந்தது. "குந்தி நந்தனா வணக்கம். உங்கள் வரவு நல்வரவாகுக!" பணிந்து வரவேற்றாள். அப்படியே அங்கிருந்த மற்றவர்களுக்கும் வணக்கம் சொன்னாள். துச்சாதனனும் தருமனை வரவேற்று மற்றவர்களை வணங்கினான்.
தருமன் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து கத்தினான். "திரவுபதி! இதென்ன அலங்கோலம். துச்சாதனனோடு தோளோடு தோள் சேர்த்துக் கொஞ்சிக் கொண்டு வருகின்றாயே! நீ குலமகளா? விலைமகளா? உனக்கு அறிவு மழுங்கிப் போயிற்றா!"
இப்படி அவன் கேட்டது எல்லாரையும் திடுக்கிட வைத்தது. திருதுராஷ்டிரர் எதையோ சொல்ல வந்தார். ஆனால் திரவுபதி அவரைத் தடுத்து தானே பேசினாள். "மாமா! சற்று அமைதியாக இருங்கள். நான் அவருக்கு விடை சொல்கிறேன். ஆரிய புத்திரரே! கணவன் என்ற வகையில் அதிகாரத்தைக் காட்ட இது ஒன்றும் மண்ணுலகம் இல்லை. இந்திரப்பிரஸ்த சட்டங்கள் சொர்கத்தில் நீதிமன்றத்தில் மதிக்கப்படுவதில்லை..
சொர்கம் என்பது இன்பமயமானது. இங்கு பெண்கள் என்றென்றும் நித்தியகன்னிகள். அது ஆடவருக்கு ஆண்டவன் அளிக்கும் பரிசு. இறைவனை நம்பி வணங்கி வரும் ஆண்டவர்களுக்கு என்றென்றும் இன்பம் தருவதே சொர்கம். இங்கே இல்லை என்று சொல்ல எதுவும் இல்லை. துச்சாதனனோடு நான் கூடினேன். ஆமாம். இருந்தும் நான் கன்னிகைதான். ஐயமிருந்தால் என்னைக் கூடித் தெளிவு பெறுங்கள்."
உலகமே சுழல்வது போல இருந்தது தருமனுக்கு. தருமங்கள் அனைத்தையும் அறிந்தவன் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கே திரவுபதியின் பேச்சு குழப்பமாக இருந்தது. "இதென்ன பைத்தியக்காரத்தனம். கண்டவனோடு கூடுவதா பெண்மை?" எதையோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டான்.
திரவுபதியிடம் சீற்றமில்லை. ஆனால் உறுதியாகச் சொன்னாள். "பெண்மை என்றால் என்னவென்பதை ஆண்மை விளக்கக்கூடாது. ஒரு பெண்ணின் கன்னித்தன்மைதானே ஆடவர்க்குத் தேவை. அதைக் காப்பதுதானே பெண்ணின் கடமை என்று மண்ணுலகில் சொல்கின்றீர்கள். அதற்குத்தானே எங்களுக்கு அத்தனை கட்டுப்பாடுகள். இதோ பாருங்கள். உடலை முழுமையாக மூடியிருக்கிறேன். எனது அங்கங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. எந்த ஆடவனும் என்னைப் பார்த்து கிறங்க மாட்டான். அதுதானே உங்களுக்கு வேண்டியது. பெண்கள் மனதில் என்ன நினைத்தால் உங்களுக்கு என்ன வந்தது?"
தருமன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டான். "திரவுபதி, நீ என் மனைவி. பாண்டவர் ஐவருக்கும் மனைவியாகக் கடமைப் பட்டவள். எங்கள் பிள்ளைகள் விளைந்த நிலம் நீ. இப்படி மற்றவர்களோடு கூடினால் எப்படி? அதற்கு விளக்கம் சொன்னால் எப்படி?"
சிரித்து விட்டாள் பாஞ்சாலி. "ஆரிய புத்திரருக்கு இன்னும் விளங்கவில்லை போலும். மனைவி என்றால் அழைத்ததும் வந்து கூட வேண்டும். வேசி போல நடந்து கொள்ள வேண்டும். மறுக்கக் கூடாது. இல்லையா! உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுப் போடும் இயந்திரமாக இருந்தால் போதும். அல்லவா!
எங்கள் மாதவிடாய்க் கணக்கை வைத்துதானே நாங்கள் ஒருவனுக்கு மட்டுமே ஆனவள் என்று ஆண்களால் உபதேசிக்கப்பட்ட மண்ணுலக நீதி சொல்கிறது. இது விண்ணுலகம். ஆனாலும் மண்ணுலகத்திலும் புரட்சி செய்தவர் நீர். உங்கள் சகோதரர் ஐவருக்கும் மனைவியாக நான் இருந்ததே மண்ணுலகில் பெரும் புரட்சிதான். இதை பல காலம் கடந்தாலும் ஆணாதிக்க வெறியர்கள் கேலி செய்து கொண்டுதான் இருப்பார்கள்.
அப்படிப் புரட்சி செய்த நீங்கள் கூட விளைநிலம் என்று பேசத் தொடங்கி விட்டீர்கள். சொர்கத்தின் நீதி தெரியாமல் பேசாதீர்கள். இங்கே மாதவிலக்கு என்ற தொல்லையே எங்களுக்கு இல்லை. ஆகையால் எங்களோடு யார் கூடினாலும் பிரச்சனையில்லை. ஆகையால் எங்களோடு கூடியவன் விட்டு விலகினால் எத்தனை நாள் கழித்து அவன் விலகலாம் என்று கணக்குப் போட முடியாது.
இதை சொர்கத்திலுள்ள ஆடவர்கள் அனைவருமே அறிவார்கள். நீங்கள் உயிரோடு இங்கு வந்திருக்கின்றீர்கள். உயிரோடு உங்கள் இதயமும் வந்ததால், அது அங்குள்ள நியாயங்களையே இங்கும் பேசுகிறது. பாவம்! பொருந்தாத இடத்தில் இருக்கின்றீர்கள்."
இப்பொழுது திருதுராஷ்டிரன் வாயைத் திறந்தான். "யுதிஷ்டிரா! பெண்கள் பிள்ளைகளைப் பெறுவதால் மண்ணுலகில் அவர்களை அடக்கி அதையே அவர்கள் சிறப்பு என்று அவர்களும் எண்ணும் அளவிற்குச் செய்ய முடிந்தது. ஆனால் இது சொர்கம். இங்கு பெண்கள் கருத்தரிப்பதே இல்லை. ஆகவே அவர்கள் யாரிடம் கூட வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து கொள்கிறார்கள். மேலும் இங்கு ஆண்களும் தங்கள் நிலையை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் வன்முறை கொண்டு கூடுவதில்லை. சொர்கம் அவர்களுக்கு அந்த அறிவைத் தந்திருக்கிறது. ஆகையால் வன்முறை செய்து விட்டு பெண்களின் ஆடை மீதும் நடவடிக்கை மீதும் குற்றம் சொல்வதுமில்லை. சொர்கத்திற்கு வரும் பொழுதே அனைவரும் நல்லவர்களாகவும் இங்குள்ள விதிகளுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்."
தருமனுக்குக் கிறுக்குப் பிடிக்கத் தொடங்கியிருந்தது. திருதுராஷ்டிரன் விட்ட இடத்தில் கர்ணன் தொடர்ந்தான். "தம்பி தருமா! இறைவனை வணங்கி அவன் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர்களுக்கான சொர்கமும் அதன் விதிகளும் சொர்கத்தின் உண்மையான குடியினருக்குத் தானாகப் புரியும். தெரியும். ஆகையால் இங்கு இதனால் குழப்பங்கள் எதுவுமே வருவதில்லை."
முழுப் பைத்தியமாகியிருந்தான் தருமன். இரண்டடி பின்னால் சென்று கத்தினான். "இல்லை. நீங்கள் சொல்வதெல்லாம் பொய். என்னை ஏமாற்றப் பார்க்கின்றீர்கள். இதுவும் சொர்கத்திற்கு வருவதற்கான ஒரு சோதனையா! உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் எல்லாரும் உண்மையிலேயே எனது உறவினர்களா? இல்லை மாயையா? எனக்கு உடனடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரைப் பார்க்க வேண்டும். அவர் எங்கேயிருக்கிறார்? அவரிடம் என்னை அழைத்துப் போங்கள். என்னை அழைத்துப் போங்கள்." கதறினான் தருமன்.
கொஞ்சம் முன்னால் வந்து சொன்னான் சகுனி. "மருமகனே! கிருஷ்ணன், ருத்ரன் என்றெல்லாம் நீ வணங்கியது மண்ணோடு போயிற்று. இங்கேயும் அங்கேயும் எங்கேயும் இறைவன் ஒருவனே. நீ விரும்புகிற வடிவத்தில் உனக்காக ஓடிவந்த இறைவன் உருவாயும் அருவாயும் இருப்பவன். கல்லில் இருப்பதால் கல்லே கடவுள் அல்ல. இறைவன் கல்லிலும் சொல்லிலும் நமக்கு உள்ளிலும் நம்மைக் கடந்தும் இருப்பவன்.
நீ உன் பண்பாட்டோடு ஒட்டி இறைவனைப் படைத்தாய். வணங்கினாய் உனக்காக உன் மீது கருணை கொண்டு நீ விரும்பியபடியே வந்தார் இறைவன். ஆனால் சொர்கம் அனைவருக்கும் பொதுவானது. ஆகையால் இறைவனை இங்கே தேடிப் போகவேண்டியதில்லை. உண்மையாக அழைத்தால் உனக்காக எங்கும் இருப்பவர் இங்கும் தெரிவார்."
"இல்லை. இல்லை. என்னை ஏமாற்றுகின்றீர்கள். என்னைக் குழப்புகின்றீர்கள். நான் இங்கிருந்து செல்கிறேன். உங்களோடு என்னால் இருக்க முடியாது. இது ஏதோ மூளையைக் குழப்பும் மாயை நிறைந்த சோதனை."
சொல்லிக் கொண்டே திரும்பி ஓடினான் தருமன். முதலில் தருமனைத் தடுக்க நினைத்தவர்கள் அந்தத் திட்டத்தை உடனேயே கை விட்டார்கள். சொர்கத்தினர் அவர்கள் தத்தம் வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
விடுவிடுவென ஓடினான் தருமன். எங்கே போவதென்றே தெரியவில்லை. அவன் உள்ளம் முழுவதும் நூறு சிந்தனைகள் சிலந்தை வலை கட்டியிருந்தன. எங்கே ஓடுகிறோம் என்பதே தெரியாமல் ஓடினான். தடக்கென்று காலை ஏதோ ஒன்று இடறியது. தடுமாறி கீழே சரிந்தான். கீழே என்றால் உண்மையிலேயே கீழே. சர்ர்ர்ர்ர்ர்ரென்று மண்ணுலகை நோக்கி வீழ்ந்தான். ஓவென்ற ஓலம் உலகிற்கே கேட்கும் வகையில் கத்தினான். ஆனால் யார் காதிலும் விழவில்லை. சத்தென அவன் உடல் இமயத்தில் இடித்தது விழுந்தது. அந்த ஒரு நொடியில் உண்மையிலேயே உயிரை விட்டான் தருமன்.
அன்புடன்,
கோ.இராகவன்
Sunday, September 18, 2005
பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - இரண்டு
இரண்டாம் பாகம்
இத்தனை விடுதிகளா என்று மலைத்திருப்பீர்கள். இன்னும் இருக்கின்றன. குறிப்பாக இந்திரா நகரில் இருக்கும் மற்றொரு சைவ விடுதியைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். அதுதான் இட்லி பஜார். சி.எம்.ஹெய்ச் ரோடு என்பது இந்திரா நகரின் மிகவும் பிரபலமான ரோடு. பல பெரிய கடைகள் அங்கே உள்ளன. அங்கு இருப்பதுதான் இட்லி பஜார். தமிழர்களால் நடத்தப் படுவது. சுத்த சைவம். இங்கு மீல்சும் கிடைக்கிறது.
இருந்தாலும் இங்கு பலகாரங்களே மிகப் பிரபலம். கையைக் கடிக்காத விலை. வாயை விடாத சுவை என்று சமீபத்தில் பிரபலமான கடைகளில் இதுவும் ஒன்று. இங்கு இட்டியிலேயே பல வகை. தோசையில் பல வகை என்று நமது நாவிற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அனைத்திலும் கொத்துமல்லி இட்டிலி முன்னிலையில் இருக்கிறது என்று சொல்வேன். மெத்தன வெந்த இட்டிலிகளை நான்காக வெட்டி, அவைகளைக் கொத்துமல்லிச் சட்டினியில் பிரட்டி எடுத்துத் தேங்காய்ச் சட்டினியோடும் பொடியோடும் தருவார்கள். கண் முந்தியதோ. கை முந்தியதோ. வாய் முந்தியதோ. வயிறு முந்தியதோ என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அடையும் நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் மெல்லிசாக இருந்தாலும் சிவக்கச் சுட்டுத் தருகிறார்கள். கூட அவியலும். சொல்லவே வேண்டாம். கண்டிப்பாக ஒருமுறையேனும் போக வேண்டிய கடை.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விடுதி ஹள்ளி மனே. அதாவது தமிழில் பட்டி வீடு. பட்டிக்காட்டு வீடு என்ற பெயரில் கர்நாடக உணவு வகைகள் கிடைக்கின்றன. மல்லேஷ்வரத்தில் இருக்கிறது இந்த ஹள்ளி மனே. இங்கும் மீல்ஸ் மற்றும் டிபன் வகைகள் கிடைக்கும். ஐம்பது ரூவாயில் மீல்ஸ். தக்காளி சூப் தருகிறார்கள். நானும் பனீர் பட்டர் மசாலாவும் வருகிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சப்ஜி தருகிறார்கள் என நினைக்கிறேன். பிறகு புலாவும் தாலும் (அதாங்க பருப்பு). அப்புறம் வழக்கமான கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், தயிர் என்று சம்பிரதாயமாக முடியும்.
கர்நாடக சாம்பார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். தமிழர்கள் எல்லாரும் பெங்களூர் வந்ததுமே கன்னட சாம்பார் எதிர்ப்புச் சங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். பருப்பிருக்கும். ஆனால் இருக்காது. காயிருக்கும். ஆனால் இருக்காது. சுவையிருக்கும். ஆனால் இருக்காது. லேசாக இனிப்பாக இருக்கும் அந்தச் செந்நிறக் குழம்பில் மிதக்கும் வெள்ளரிக்காயைக் கண்டு பயந்து பரதேசம் போனவர்களைப் பட்டியல் போட முடியாது. பயமுறுத்தவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.
ரசம் கொஞ்சம் தப்பித்துக் கொண்டது. அதே முறையான உடுப்பிக்காரர்களின் மென்சின் சாறு (மிளகாய்ச் சாறு) என்றால் விடாதீர்கள். கொஞ்சம் கிண்ணத்தில் வாங்கிச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கும்.
சரி. ஹள்ளி மனேக்கு வருவோம். இங்கு வழக்கமான இட்டிலி தோசை வகைகள் எல்லாம் கிடைக்கும். கர்நாடகத்தில் அக்கி ரொட்டி என்று பிரபலம். அக்கி என்றால் அரிசி. அரிசியில் செய்த ரொட்டிதான் அக்கி ரொட்டி. செய்வது எளிதுதான். ஆனாலும் பழக்கம் வேண்டும். முடியாதவர்கள் நேராக ஹள்ளி மனேக்குச் சென்று வாங்கித் திங்கலாம். ஏற்கனவே சர்க்கரை. இதற்கு மேலே அக்கி ரொட்டியா என்று சர்க்கரை வியாதிக்காரர்கள் அலுத்துக் கொள்ள வேண்டாம். அங்கே ராகி ரொட்டியும் கிடைக்கிறது. கேழ்வரகில் செய்த ரொட்டி. சுவையாக இருக்கும். எண்ணெய் குறைவாக ஊற்றிச் செய்யச் சொல்லுங்கள். கூட தேங்காய்ச் சட்டினியும் வெங்காயச் சட்டினியும் தருகிறார்கள். ஒன்றோடு நிறுத்த மாட்டீர்கள். கூட்டம் குறைவாக இருக்கும். ஆகையால் நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டியிருக்கும்.
காமத் யாத்ரீ நிவாஸ் பற்றியும் சொல்ல வேண்டும். இதுவும் கன்னட ஓட்டல்தான். பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கிறது. இங்கு மீல்ஸ் என்றால் சப்பாத்தி கிடைக்காது. ஜோளத ரொட்டிதான் கிடைக்கும். அதாவது சோள ரொட்டி. சப்பாத்தி போலத்தான் இருக்கும். ஆனால் சுவையில் சின்ன மாற்றம். வடகர்நாடகாவில் சோளம் மிகப் பிரசித்தம். அத்தோடு கத்தரிக்காய்க் கூட்டு. இது போதும் அவர்களுக்கு. வெளுத்து வாங்குவார்கள்.
இப்பொழுது காமத் யாத்ரீ நிவாஸ் அவ்வளவு நன்றாக இல்லை என்று சொல்கிறவர்களும் உண்டு. நானும் போய் நாளாகிறது. பெங்களூரிலிருந்து மைசூர் போகும் வழியில் ஒரு காமத் யாத்ரீ நிவாஸ் இருக்கிறது. அங்கே உணவோடு வெற்றி வேரில் செய்த பொருட்களும் கிடைக்கும். நான் இரண்டு வெற்றி வேர் விசிறிகள் வாங்கினேன். வெற்றி வேர் செருப்பு, பை, பர்ஸ் என்று பல பொருட்கள் கிடைக்கின்றன.
மேலும் அங்கு போனால் கஷாயா பேக்கு என்று கேளுங்கள். அதாவது கஷாயா வேண்டும். இது சுக்குத் தண்ணி போலத்தான். ஆனால் பாலோடு கலந்து தருவார்கள். மெல்லிய நறுமணம் கமழ சுவையாக தொண்டைக்குள் கஷாயா இறங்கும் சுகமே அலாதி. அதுவும் மாலை வேளையில் லேசாக காத்து வீசும் பொழுதென்றால் கேட்கவே வேண்டாம். இன்னொந்து கஷயா என்று நீங்கள் கேட்கா விட்டால் உணவை வாழ்வதற்காகவே சாப்பிடுகிறவர் நீங்கள். அங்கே ரவாதோசையும் நன்றாக இருக்கும்.
பெங்களூரில் நாட்பட இருப்பவர்கள் கேட்டிருக்கும் மற்றொரு உணவு ராகி மொத்தே. கேள்வரகுக் களியின் உருண்டை வடிவம். தேவே கவுடாவிற்கு மிகவும் பிடித்த உணவு. வடகன்னடட்தில் சோளம் என்றால் தெற்கில் கேப்பை. இதை எல்லாரும் விரும்பி உண்வுவது கடினந்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சைவ அசைவ முறைகளில் சாப்பிடலாம். சைவ முறையென்றால் தயிரே சிறந்தது. ராகி மொத்தேயை தட்டில் போட்டுப் பிசைந்து அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து கொண்டு, கொஞ்சம் உறைப்பாக எதையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அமுதமாக இருக்கும். நான் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டும் சாப்பிட்டிருக்கிறேன். விதான சவுதாவை ஒட்டியிருக்கும் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குள் போக முடிந்தவர்கள் அங்கிருக்கும் விடுதியில் சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும்.
அசைவ முறைப்படி என்றால் கறிக்குழம்புதான். கருப்பாக இருக்கும் உருண்டையின் தலையில் கறிக்குழம்பை ஊற்றிச் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தீர்களானால் அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது விளங்கும். ஆனால் ஒன்று. ராகி மொத்தே சாப்பிட வேண்டுமானால் நல்ல விடுதியைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அங்கு நீங்கள் சந்திக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டுச் செல்லுங்கள்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகையில் மற்றொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். ஆமாம். ஆந்திர ஓட்டல்களைத்தான். ஆந்திரா ஸ்டைல் என்ற பெயரைப் போட்டுக் கொண்டு பெங்களூரில் தெருவிற்கு ஒரு ஓட்டலாவது இருக்கிறது. அவைகள் எந்த அளவிற்கு ஆந்திர உணவுகளைக் குடுக்கின்றன என்று தெரியாது. அவைகளில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம் நானும் அங்கு போய் வெளுத்து வாங்கியிருக்கிறேன்.
நந்தினி என்றால் காமதேனுவின் மகள். அள்ளக் குறையாத உணவு தரும் நந்தினிக்காகத்தான் விசுவாமித்திரரே சண்டை போட்டாராம். அந்தப் பெயரில் அமைந்திருக்கும் இந்த ஆந்திர ஓட்டல் பெங்களூரில் பல கிளைகளை வைத்துள்ளது. அனைத்திலும் சுவை கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கும்.
இங்கு ஆந்திர மீல்ஸ் கிடைக்கும். அத்தோடு ரொட்டி, நான் போன்ற வடக்கத்தி உணவுகளும் கிடைக்கும். அத்தோடு அசைவ உணவு வகைகளும் இங்கு மிகவும் பிரசித்தம். ஐதராபாத் பிரியாணியும் இங்கு கிடைக்கும். ஆனாலும் இங்கு எனக்கு மிகவும் பிடித்தது தோசை இட்டிலி கூட்டணிதான்.
மாலை வேளைகளில் மட்டும் தோசை+கோழிக் குழம்பு, தோசை+ஆட்டுக்கறிக் குழம்பு ஆகியவை கிடைக்கும். நாட்டுக் கோடி புலுசு, மாம்ச புலுசு என்று சொல்வார்கள். சேப்பாலு புலுசு (மீன் குழம்பு)ம் கிடைக்கும். இட்டிலிப் பிரியர்கள் தோசைக்குப் பதிலாக இட்டிலி வாங்கிக் கொள்ளலாம். லேசான குளிரடிக்கும் பெங்களூரின் மாலை வேளைகளில் (குறிப்பாக மழைக்காலத்தில்) இந்தக் கூட்டணியை அடித்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. சைவப் பிரியர்களுக்காக கேரட் 65 கிடைக்கிறது. நன்றாகவே இருக்கிறது. சிக்கன் 65 அளவிற்கு இல்லையென்றாலும் சைவர்களுக்குச் சுவையாகவே இருக்கும்.
இத்தோடு இரண்டாம் பாகம் முடிந்தது. அடுத்த பாகத்திலும் ஆந்திரா தொடரும். அதுவும் ஒரு அருமையான ஓட்டலோடு.
இத்தனை விடுதிகளா என்று மலைத்திருப்பீர்கள். இன்னும் இருக்கின்றன. குறிப்பாக இந்திரா நகரில் இருக்கும் மற்றொரு சைவ விடுதியைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். அதுதான் இட்லி பஜார். சி.எம்.ஹெய்ச் ரோடு என்பது இந்திரா நகரின் மிகவும் பிரபலமான ரோடு. பல பெரிய கடைகள் அங்கே உள்ளன. அங்கு இருப்பதுதான் இட்லி பஜார். தமிழர்களால் நடத்தப் படுவது. சுத்த சைவம். இங்கு மீல்சும் கிடைக்கிறது.
இருந்தாலும் இங்கு பலகாரங்களே மிகப் பிரபலம். கையைக் கடிக்காத விலை. வாயை விடாத சுவை என்று சமீபத்தில் பிரபலமான கடைகளில் இதுவும் ஒன்று. இங்கு இட்டியிலேயே பல வகை. தோசையில் பல வகை என்று நமது நாவிற்கு வேலை கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள். அனைத்திலும் கொத்துமல்லி இட்டிலி முன்னிலையில் இருக்கிறது என்று சொல்வேன். மெத்தன வெந்த இட்டிலிகளை நான்காக வெட்டி, அவைகளைக் கொத்துமல்லிச் சட்டினியில் பிரட்டி எடுத்துத் தேங்காய்ச் சட்டினியோடும் பொடியோடும் தருவார்கள். கண் முந்தியதோ. கை முந்தியதோ. வாய் முந்தியதோ. வயிறு முந்தியதோ என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அடையும் நன்றாகவே இருக்கிறது. கொஞ்சம் மெல்லிசாக இருந்தாலும் சிவக்கச் சுட்டுத் தருகிறார்கள். கூட அவியலும். சொல்லவே வேண்டாம். கண்டிப்பாக ஒருமுறையேனும் போக வேண்டிய கடை.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொரு விடுதி ஹள்ளி மனே. அதாவது தமிழில் பட்டி வீடு. பட்டிக்காட்டு வீடு என்ற பெயரில் கர்நாடக உணவு வகைகள் கிடைக்கின்றன. மல்லேஷ்வரத்தில் இருக்கிறது இந்த ஹள்ளி மனே. இங்கும் மீல்ஸ் மற்றும் டிபன் வகைகள் கிடைக்கும். ஐம்பது ரூவாயில் மீல்ஸ். தக்காளி சூப் தருகிறார்கள். நானும் பனீர் பட்டர் மசாலாவும் வருகிறது. அனேகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சப்ஜி தருகிறார்கள் என நினைக்கிறேன். பிறகு புலாவும் தாலும் (அதாங்க பருப்பு). அப்புறம் வழக்கமான கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், தயிர் என்று சம்பிரதாயமாக முடியும்.
கர்நாடக சாம்பார்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். தமிழர்கள் எல்லாரும் பெங்களூர் வந்ததுமே கன்னட சாம்பார் எதிர்ப்புச் சங்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்வார்கள். பருப்பிருக்கும். ஆனால் இருக்காது. காயிருக்கும். ஆனால் இருக்காது. சுவையிருக்கும். ஆனால் இருக்காது. லேசாக இனிப்பாக இருக்கும் அந்தச் செந்நிறக் குழம்பில் மிதக்கும் வெள்ளரிக்காயைக் கண்டு பயந்து பரதேசம் போனவர்களைப் பட்டியல் போட முடியாது. பயமுறுத்தவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.
ரசம் கொஞ்சம் தப்பித்துக் கொண்டது. அதே முறையான உடுப்பிக்காரர்களின் மென்சின் சாறு (மிளகாய்ச் சாறு) என்றால் விடாதீர்கள். கொஞ்சம் கிண்ணத்தில் வாங்கிச் சாப்பிடுங்கள். நன்றாக இருக்கும்.
சரி. ஹள்ளி மனேக்கு வருவோம். இங்கு வழக்கமான இட்டிலி தோசை வகைகள் எல்லாம் கிடைக்கும். கர்நாடகத்தில் அக்கி ரொட்டி என்று பிரபலம். அக்கி என்றால் அரிசி. அரிசியில் செய்த ரொட்டிதான் அக்கி ரொட்டி. செய்வது எளிதுதான். ஆனாலும் பழக்கம் வேண்டும். முடியாதவர்கள் நேராக ஹள்ளி மனேக்குச் சென்று வாங்கித் திங்கலாம். ஏற்கனவே சர்க்கரை. இதற்கு மேலே அக்கி ரொட்டியா என்று சர்க்கரை வியாதிக்காரர்கள் அலுத்துக் கொள்ள வேண்டாம். அங்கே ராகி ரொட்டியும் கிடைக்கிறது. கேழ்வரகில் செய்த ரொட்டி. சுவையாக இருக்கும். எண்ணெய் குறைவாக ஊற்றிச் செய்யச் சொல்லுங்கள். கூட தேங்காய்ச் சட்டினியும் வெங்காயச் சட்டினியும் தருகிறார்கள். ஒன்றோடு நிறுத்த மாட்டீர்கள். கூட்டம் குறைவாக இருக்கும். ஆகையால் நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டியிருக்கும்.
காமத் யாத்ரீ நிவாஸ் பற்றியும் சொல்ல வேண்டும். இதுவும் கன்னட ஓட்டல்தான். பெங்களூரில் மெஜஸ்டிக் பகுதியில் இருக்கிறது. இங்கு மீல்ஸ் என்றால் சப்பாத்தி கிடைக்காது. ஜோளத ரொட்டிதான் கிடைக்கும். அதாவது சோள ரொட்டி. சப்பாத்தி போலத்தான் இருக்கும். ஆனால் சுவையில் சின்ன மாற்றம். வடகர்நாடகாவில் சோளம் மிகப் பிரசித்தம். அத்தோடு கத்தரிக்காய்க் கூட்டு. இது போதும் அவர்களுக்கு. வெளுத்து வாங்குவார்கள்.
இப்பொழுது காமத் யாத்ரீ நிவாஸ் அவ்வளவு நன்றாக இல்லை என்று சொல்கிறவர்களும் உண்டு. நானும் போய் நாளாகிறது. பெங்களூரிலிருந்து மைசூர் போகும் வழியில் ஒரு காமத் யாத்ரீ நிவாஸ் இருக்கிறது. அங்கே உணவோடு வெற்றி வேரில் செய்த பொருட்களும் கிடைக்கும். நான் இரண்டு வெற்றி வேர் விசிறிகள் வாங்கினேன். வெற்றி வேர் செருப்பு, பை, பர்ஸ் என்று பல பொருட்கள் கிடைக்கின்றன.
மேலும் அங்கு போனால் கஷாயா பேக்கு என்று கேளுங்கள். அதாவது கஷாயா வேண்டும். இது சுக்குத் தண்ணி போலத்தான். ஆனால் பாலோடு கலந்து தருவார்கள். மெல்லிய நறுமணம் கமழ சுவையாக தொண்டைக்குள் கஷாயா இறங்கும் சுகமே அலாதி. அதுவும் மாலை வேளையில் லேசாக காத்து வீசும் பொழுதென்றால் கேட்கவே வேண்டாம். இன்னொந்து கஷயா என்று நீங்கள் கேட்கா விட்டால் உணவை வாழ்வதற்காகவே சாப்பிடுகிறவர் நீங்கள். அங்கே ரவாதோசையும் நன்றாக இருக்கும்.
பெங்களூரில் நாட்பட இருப்பவர்கள் கேட்டிருக்கும் மற்றொரு உணவு ராகி மொத்தே. கேள்வரகுக் களியின் உருண்டை வடிவம். தேவே கவுடாவிற்கு மிகவும் பிடித்த உணவு. வடகன்னடட்தில் சோளம் என்றால் தெற்கில் கேப்பை. இதை எல்லாரும் விரும்பி உண்வுவது கடினந்தான். ஆனால் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை சைவ அசைவ முறைகளில் சாப்பிடலாம். சைவ முறையென்றால் தயிரே சிறந்தது. ராகி மொத்தேயை தட்டில் போட்டுப் பிசைந்து அதில் தயிரை ஊற்றிப் பிசைந்து கொண்டு, கொஞ்சம் உறைப்பாக எதையும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அமுதமாக இருக்கும். நான் பச்சை மிளகாயை கடித்துக் கொண்டும் சாப்பிட்டிருக்கிறேன். விதான சவுதாவை ஒட்டியிருக்கும் எம்.எல்.ஏ ஹாஸ்டலுக்குள் போக முடிந்தவர்கள் அங்கிருக்கும் விடுதியில் சாப்பிட்டுப் பாருங்கள். நன்றாக இருக்கும்.
அசைவ முறைப்படி என்றால் கறிக்குழம்புதான். கருப்பாக இருக்கும் உருண்டையின் தலையில் கறிக்குழம்பை ஊற்றிச் சாப்பிடுகிறவர்களைப் பார்த்தீர்களானால் அவர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது விளங்கும். ஆனால் ஒன்று. ராகி மொத்தே சாப்பிட வேண்டுமானால் நல்ல விடுதியைத் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அங்கு நீங்கள் சந்திக்கும் கன்னட நண்பர்களிடம் கேட்டுச் செல்லுங்கள்.
இப்படி அடுக்கிக் கொண்டே போகையில் மற்றொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். ஆமாம். ஆந்திர ஓட்டல்களைத்தான். ஆந்திரா ஸ்டைல் என்ற பெயரைப் போட்டுக் கொண்டு பெங்களூரில் தெருவிற்கு ஒரு ஓட்டலாவது இருக்கிறது. அவைகள் எந்த அளவிற்கு ஆந்திர உணவுகளைக் குடுக்கின்றன என்று தெரியாது. அவைகளில் சிலவற்றைச் சொல்லியே ஆகவேண்டும். காரணம் நானும் அங்கு போய் வெளுத்து வாங்கியிருக்கிறேன்.
நந்தினி என்றால் காமதேனுவின் மகள். அள்ளக் குறையாத உணவு தரும் நந்தினிக்காகத்தான் விசுவாமித்திரரே சண்டை போட்டாராம். அந்தப் பெயரில் அமைந்திருக்கும் இந்த ஆந்திர ஓட்டல் பெங்களூரில் பல கிளைகளை வைத்துள்ளது. அனைத்திலும் சுவை கிட்டத்தட்ட ஒரே போலத்தான் இருக்கும்.
இங்கு ஆந்திர மீல்ஸ் கிடைக்கும். அத்தோடு ரொட்டி, நான் போன்ற வடக்கத்தி உணவுகளும் கிடைக்கும். அத்தோடு அசைவ உணவு வகைகளும் இங்கு மிகவும் பிரசித்தம். ஐதராபாத் பிரியாணியும் இங்கு கிடைக்கும். ஆனாலும் இங்கு எனக்கு மிகவும் பிடித்தது தோசை இட்டிலி கூட்டணிதான்.
மாலை வேளைகளில் மட்டும் தோசை+கோழிக் குழம்பு, தோசை+ஆட்டுக்கறிக் குழம்பு ஆகியவை கிடைக்கும். நாட்டுக் கோடி புலுசு, மாம்ச புலுசு என்று சொல்வார்கள். சேப்பாலு புலுசு (மீன் குழம்பு)ம் கிடைக்கும். இட்டிலிப் பிரியர்கள் தோசைக்குப் பதிலாக இட்டிலி வாங்கிக் கொள்ளலாம். லேசான குளிரடிக்கும் பெங்களூரின் மாலை வேளைகளில் (குறிப்பாக மழைக்காலத்தில்) இந்தக் கூட்டணியை அடித்துக் கொள்ள ஒன்றுமேயில்லை. சைவப் பிரியர்களுக்காக கேரட் 65 கிடைக்கிறது. நன்றாகவே இருக்கிறது. சிக்கன் 65 அளவிற்கு இல்லையென்றாலும் சைவர்களுக்குச் சுவையாகவே இருக்கும்.
இத்தோடு இரண்டாம் பாகம் முடிந்தது. அடுத்த பாகத்திலும் ஆந்திரா தொடரும். அதுவும் ஒரு அருமையான ஓட்டலோடு.
Wednesday, September 14, 2005
பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று
பெங்களூரில் ஓட்டல்கள் பாகம் - ஒன்று
கொஞ்சம் சீரியசான விஷயங்களையே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒரு மாறுதலுக்குச் சின்ன தொடர். பெங்களூரில் நான் ருசித்த ரசித்த உணவு விடுதிகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். சின்ன அறிமுகமே தொடராக வருகிறது பாருங்கள்.
என்னுடைய உணவுப் பழக்கம் என்ன? மிகவும் எளிமையான சிக்கலான உணவுப் பழக்கமே என்னுடையது. காலையில் கார்ன் ஃப்ளேக்ஸும் பாலும். பகலில் அலுவலகத்தில் சப்பாத்தியும் கூட்டும். கூட ஒரு கப் தயிர். ஒவ்வொரு வேளை சப்பாத்தியைக் குறைத்துக் கொண்டு சோறு எடுத்துக் கொள்வதுண்டு. இரவில் பெரும்பாலும் கோதுமை ரவைதான். உடன் பாசிப்பருப்பும் காய்கறிகளும் போட்டு கதம்பமாகச் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். தயிரும் சேர்த்துக் கொள்வதுண்டு.
இரவில் தொட்டுக்கொள்ள ஏதேனும் வேண்டுமென்று தோன்றினால் ஃபிரீசரில் இருந்து இரண்டு சிக்கன் சாசேஜ்களையோ சிக்கன் ஃபிங்கர்களையோ லேசாக எண்ணெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு.
இது பெரும்பாலான வார நாட்களில் நடப்பது. வார இறுதியில் சைவமோ அசைவமோ தோன்றியதைச் செய்து சாப்பிடுவது. ஆனால் அத்தோடு முடிகிறதா பெங்களூரில். எத்தனையெத்தனையோ வகையான ஓட்டல்கள் புதிது புதிதாக வருகையில் எதைத் தேர்ந்தெடுப்பது?
எனது வயிற்றைச் சோதனைச் சாலையாக்கி ஓரளவுக்கு சிறந்த ஓட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அங்கே என்ன கிடைக்கும் என்பதையும் முடிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் தமிழன். தென்னிந்தியன். ஆகையால் முதலில் தமிழ் நாட்டு உணவு விடுதிகளையும் தென்னிந்திய விடுதிகளையும் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
கதம்பம் என்ற ஓட்டலைச் சொல்லியே ஆக வேண்டும். ஜெயநகரில் இருக்கிறது. முன்பு டிக்கென்சன் ரோட்டிலும் இருந்தது. இப்பொழுது அதை மூடி விட்டார்கள். மிகவும் அருமையான ஐயங்கார் உணவுகள் கிடைக்கும். அங்கு கிடைக்கும் மெது தோசை மிகவும் அருமை. மெல்லிய துணி போன்ற இரண்டு தோசைகளோடு பருப்புத் துவையலும் குருமாவும் குடுப்பார்கள். மேசையில் பொடியும் எண்ணெய்யும் இருக்கும். நான் குருமாவை தலாக்கி விட்டு பொடியையும் எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்வேன். அடடா! அனுபவிக்க வேண்டுமய்யா!
அவர்களின் அடுத்த சிறந்த படைப்பு புளியோதரை. கூட கெட்டித் தயிர் ஒரு கப் தருவார்கள். ஸ்பூனில் தயிரை எடுத்து புளியோதரையோடு கலந்து சுவைத்தால் அமுதம் என்பதற்குப் பொருள் விளங்கும். அடுத்தது வெண்பொங்கல். உதிரியாக இருக்காது. கொழகொழப்பாக இருக்கும். அதனோடு தேங்காய்ச் சட்டினியும் புளிக்கரைசலும். தேங்காய்ச் சட்டினிக்கு மங்களம் பாடி மூடி வைத்து விட்டு, தாளித்த புளிக்கரைசலை (லேசான தித்திப்பு இருக்கும்) பொங்கலோடு கலந்தடிக்க மூன்று நாட்களுக்கு நாக்கு அதை மறக்காது.
எல்லா தமிழ் உணவுகளும் கிடைக்குமென்றாலும் இவை மூன்றுமே கதம்பத்தில் எனக்குப் பிடித்தவை.
அடுத்து சொல்ல வேண்டியது எம்.டீ.ஆரைப் பற்றித்தான். அவர்களின் ரெடிமேட் உணவுகள் எங்கும் கிடைக்கின்றன. மாவள்ளி டிஃபன் ரூம் என்பதுதான் எம்.டீ.ஆர். பெங்களூரிலுள்ள பழைய ஓட்டல். இன்னும் மாறாமல் இருக்கிறது. இங்கு ஸ்பெஷல் என்றால் மீல்ஸ்தான். எழுபத்தைந்து ரூபாய். முதலிலேயே டோக்கன் வாங்கி விட்டு வரிசையில் நின்று இடத்தைப் பிடிக்க வேண்டும். அவ்வளவு கூட்டம் வரும்.
முன்பெல்லாம் வெள்ளி முலாம் பூசிய தட்டில்தான் பரிமாறினார்கள். இப்பொழுது கூட்டம் கூடக் கூட எவர்சில்வர் தட்டில்தான் பரிமாறல். ஆனால் பழச்சாறு மட்டும் வெள்ளி பூசிய டம்ளரில் வரும். மீல்ஸ் என்பது அள்வில்லாதது. தோசை/சப்பாத்தி/பூரி/ருமாலி ரொட்டி இவற்றில் ஒன்று கொடுப்பார்கள். எத்தனை வேண்டுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.
பிறகு ஒரு கலந்த சாதம் வரும். புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய்ச் சோறு என்று ஏதாவது ஒன்று இருக்கும். கூட்டுகளும் சட்டினிகளும் வரும். கூட சிப்ஸ் கொடுப்பார்கள். பாயாசம் இருக்கும். ஒரு ஸ்வீட் இருக்கும். பழச்சாறைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. அடுத்தது சாம்பார், ரசம் இரண்டும் சோற்றோடு வரும். முடிந்ததும் தயிர்ச் சாதத்தைப் பரிமாறுவார்கள். கடைசியில் ஃபுரூட் சாலட் ஐஸ்கிரீமோடு கொஞ்சிக் கொண்டு வரும். முடிக்கையில் பீடாவும் வாழைப் பழமும் கிடைக்கும். பகலில் சாப்பிட்டால் இரவு உணவு தேவையேயில்லை.
காலையிலும் மாலையிலும் டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். ரவா இட்டிலி மிகப் பிரசித்தம். கெட்டிச் சட்டினியோடு வரும். உருளைக் கிழங்கு சாகு கொடுப்பார்கள். அப்படியே இட்டிலின் தலையில் நெய்க் குளியல் நடக்கும். ஆனால் என்னுடைய ஓட்டு மீல்ஸ்க்குத்தான். ஒரு நாளைக்கு இத்தனை மீல்ஸ் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆகையால் சீக்கிரம் போவது நல்லது. ஜெயநகரில் ஊர்வசி தியேட்டருக்கும் லால்பாக் மெயின் கேட்டுக்கும் இடையில் இருக்கிறது.
இல்லை. இதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுச் சாப்பாடுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் தமிழ்க் குடிதாங்கிகளுக்கென்றே இருக்கிறது கிருஷ்ணா கஃபே. கோரமங்களாவில் இருக்கிறது. சிறப்பாகச் செய்கிறார்கள். இங்கு நான் சாப்பிட்டதெல்லாமே நன்றாக இருந்தது. பகலில் சாப்பாட்டிற்கு அப்பாவையும் அம்மாவையும் ஒருமுறை கூட்டிச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
இத்தனை ஓட்டல்களைச் சொன்னபின் பிருந்தாவனத்தைச் சொல்லவிட்டால் வத்தல்குழம்பு என்னை மன்னிக்கவே மன்னிக்காது. ஆமாம். அருமையான வத்தக்குழம்பு அங்கே கிடைக்கும். பெங்களூரின் மையப் பகுதியான எம்.ஜி ரோட்டில் இருக்கிறது இந்த ஓட்டல். உடுப்புக்காரரின் ஓட்டல். ஆனாலும் தமிழர்கள் மிகவும் விரும்புவது.
மீல்சில் சப்பாத்தியும் உண்டு. அப்பளம் கேட்கக் கேட்கத் தருவார்கள். அருமையான வத்தல் குழம்பும் கிடைக்கும். மீல்ஸ் சாப்பிட்டால் மறக்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். புளிப்பும் உறைப்புமாய் சுர்ரென்று இருக்கும். டிபன் பிரியர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. வகை வகையாய் இட்டிலிகளையும் தோசைகளையும் சுட்டுத் தாக்குகிறார்கள். எல்லாமே அருமை. பொடியை எண்ணெய்யோடு குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பார்கள். வேண்டிய மட்டும் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் டிபன்களில் எனக்குப் பிடித்தது நீர்தோசை. என்னடா நீர்யானை போல பெருசாக இருக்குமா என்று நினைக்காதீர்கள். மிகவும் மெல்லிய தோசையிது. அற்புதமாக இருக்கும். இத்தோடு இனிப்பான பழக்கலவையும் தருவார்கள். தோசையோடு சாப்பிட அல்ல. தோசைக்குப் பின்னே சாப்பிட. மிகவும் சுவையோ சுவை.
தென்னிந்திய உணவு வகைகளை விரும்புகிறவர்கள் இந்தக் குறிப்பிட்ட ஓட்டல்களுக்குச் சென்றே ஆகவேண்டும். இப்பொழுது தமிழ்நாட்டுப் புகழ் முருகன் இட்டிலிக் கடையையும் திறந்திருக்கிறார்கள் கோரமங்களாவில். அங்கு இதுவரை சென்றதில்லை. சென்றால் அதைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்கிறேன்.
இத்தோடு பாகம் ஒன்று முடிந்தது. இன்னும் ஒன்றிரண்டு சைவ விடுதிகளையும் மற்ற விடுதிகளையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
(பின் குறிப்பு : கோ.கணேஷிற்கு - சத்தியமாக நான் எந்த நோட்டுப் புத்தகத்தையும் கொண்டு போய் குறிப்பு எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.)
அன்புடன்,
கோ.இராகவன்
கொஞ்சம் சீரியசான விஷயங்களையே எழுதிக் கொண்டிருந்தால் எப்படி என்று ஒரு மாறுதலுக்குச் சின்ன தொடர். பெங்களூரில் நான் ருசித்த ரசித்த உணவு விடுதிகளைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம். சின்ன அறிமுகமே தொடராக வருகிறது பாருங்கள்.
என்னுடைய உணவுப் பழக்கம் என்ன? மிகவும் எளிமையான சிக்கலான உணவுப் பழக்கமே என்னுடையது. காலையில் கார்ன் ஃப்ளேக்ஸும் பாலும். பகலில் அலுவலகத்தில் சப்பாத்தியும் கூட்டும். கூட ஒரு கப் தயிர். ஒவ்வொரு வேளை சப்பாத்தியைக் குறைத்துக் கொண்டு சோறு எடுத்துக் கொள்வதுண்டு. இரவில் பெரும்பாலும் கோதுமை ரவைதான். உடன் பாசிப்பருப்பும் காய்கறிகளும் போட்டு கதம்பமாகச் செய்து சாப்பிடுவதுதான் வழக்கம். தயிரும் சேர்த்துக் கொள்வதுண்டு.
இரவில் தொட்டுக்கொள்ள ஏதேனும் வேண்டுமென்று தோன்றினால் ஃபிரீசரில் இருந்து இரண்டு சிக்கன் சாசேஜ்களையோ சிக்கன் ஃபிங்கர்களையோ லேசாக எண்ணெய்யில் வதக்கிக் கொள்வதுண்டு.
இது பெரும்பாலான வார நாட்களில் நடப்பது. வார இறுதியில் சைவமோ அசைவமோ தோன்றியதைச் செய்து சாப்பிடுவது. ஆனால் அத்தோடு முடிகிறதா பெங்களூரில். எத்தனையெத்தனையோ வகையான ஓட்டல்கள் புதிது புதிதாக வருகையில் எதைத் தேர்ந்தெடுப்பது?
எனது வயிற்றைச் சோதனைச் சாலையாக்கி ஓரளவுக்கு சிறந்த ஓட்டல்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன். அங்கே என்ன கிடைக்கும் என்பதையும் முடிந்த வரை உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் தமிழன். தென்னிந்தியன். ஆகையால் முதலில் தமிழ் நாட்டு உணவு விடுதிகளையும் தென்னிந்திய விடுதிகளையும் பற்றிச் சொல்லி விடுகிறேன்.
கதம்பம் என்ற ஓட்டலைச் சொல்லியே ஆக வேண்டும். ஜெயநகரில் இருக்கிறது. முன்பு டிக்கென்சன் ரோட்டிலும் இருந்தது. இப்பொழுது அதை மூடி விட்டார்கள். மிகவும் அருமையான ஐயங்கார் உணவுகள் கிடைக்கும். அங்கு கிடைக்கும் மெது தோசை மிகவும் அருமை. மெல்லிய துணி போன்ற இரண்டு தோசைகளோடு பருப்புத் துவையலும் குருமாவும் குடுப்பார்கள். மேசையில் பொடியும் எண்ணெய்யும் இருக்கும். நான் குருமாவை தலாக்கி விட்டு பொடியையும் எண்ணெய்யையும் சேர்த்துக் கொள்வேன். அடடா! அனுபவிக்க வேண்டுமய்யா!
அவர்களின் அடுத்த சிறந்த படைப்பு புளியோதரை. கூட கெட்டித் தயிர் ஒரு கப் தருவார்கள். ஸ்பூனில் தயிரை எடுத்து புளியோதரையோடு கலந்து சுவைத்தால் அமுதம் என்பதற்குப் பொருள் விளங்கும். அடுத்தது வெண்பொங்கல். உதிரியாக இருக்காது. கொழகொழப்பாக இருக்கும். அதனோடு தேங்காய்ச் சட்டினியும் புளிக்கரைசலும். தேங்காய்ச் சட்டினிக்கு மங்களம் பாடி மூடி வைத்து விட்டு, தாளித்த புளிக்கரைசலை (லேசான தித்திப்பு இருக்கும்) பொங்கலோடு கலந்தடிக்க மூன்று நாட்களுக்கு நாக்கு அதை மறக்காது.
எல்லா தமிழ் உணவுகளும் கிடைக்குமென்றாலும் இவை மூன்றுமே கதம்பத்தில் எனக்குப் பிடித்தவை.
அடுத்து சொல்ல வேண்டியது எம்.டீ.ஆரைப் பற்றித்தான். அவர்களின் ரெடிமேட் உணவுகள் எங்கும் கிடைக்கின்றன. மாவள்ளி டிஃபன் ரூம் என்பதுதான் எம்.டீ.ஆர். பெங்களூரிலுள்ள பழைய ஓட்டல். இன்னும் மாறாமல் இருக்கிறது. இங்கு ஸ்பெஷல் என்றால் மீல்ஸ்தான். எழுபத்தைந்து ரூபாய். முதலிலேயே டோக்கன் வாங்கி விட்டு வரிசையில் நின்று இடத்தைப் பிடிக்க வேண்டும். அவ்வளவு கூட்டம் வரும்.
முன்பெல்லாம் வெள்ளி முலாம் பூசிய தட்டில்தான் பரிமாறினார்கள். இப்பொழுது கூட்டம் கூடக் கூட எவர்சில்வர் தட்டில்தான் பரிமாறல். ஆனால் பழச்சாறு மட்டும் வெள்ளி பூசிய டம்ளரில் வரும். மீல்ஸ் என்பது அள்வில்லாதது. தோசை/சப்பாத்தி/பூரி/ருமாலி ரொட்டி இவற்றில் ஒன்று கொடுப்பார்கள். எத்தனை வேண்டுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.
பிறகு ஒரு கலந்த சாதம் வரும். புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய்ச் சோறு என்று ஏதாவது ஒன்று இருக்கும். கூட்டுகளும் சட்டினிகளும் வரும். கூட சிப்ஸ் கொடுப்பார்கள். பாயாசம் இருக்கும். ஒரு ஸ்வீட் இருக்கும். பழச்சாறைப் பற்றியும் சொல்லியாகி விட்டது. அடுத்தது சாம்பார், ரசம் இரண்டும் சோற்றோடு வரும். முடிந்ததும் தயிர்ச் சாதத்தைப் பரிமாறுவார்கள். கடைசியில் ஃபுரூட் சாலட் ஐஸ்கிரீமோடு கொஞ்சிக் கொண்டு வரும். முடிக்கையில் பீடாவும் வாழைப் பழமும் கிடைக்கும். பகலில் சாப்பிட்டால் இரவு உணவு தேவையேயில்லை.
காலையிலும் மாலையிலும் டிபன் ஐட்டங்கள் கிடைக்கும். ரவா இட்டிலி மிகப் பிரசித்தம். கெட்டிச் சட்டினியோடு வரும். உருளைக் கிழங்கு சாகு கொடுப்பார்கள். அப்படியே இட்டிலின் தலையில் நெய்க் குளியல் நடக்கும். ஆனால் என்னுடைய ஓட்டு மீல்ஸ்க்குத்தான். ஒரு நாளைக்கு இத்தனை மீல்ஸ் என்று கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆகையால் சீக்கிரம் போவது நல்லது. ஜெயநகரில் ஊர்வசி தியேட்டருக்கும் லால்பாக் மெயின் கேட்டுக்கும் இடையில் இருக்கிறது.
இல்லை. இதையெல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுச் சாப்பாடுதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் தமிழ்க் குடிதாங்கிகளுக்கென்றே இருக்கிறது கிருஷ்ணா கஃபே. கோரமங்களாவில் இருக்கிறது. சிறப்பாகச் செய்கிறார்கள். இங்கு நான் சாப்பிட்டதெல்லாமே நன்றாக இருந்தது. பகலில் சாப்பாட்டிற்கு அப்பாவையும் அம்மாவையும் ஒருமுறை கூட்டிச் சென்றிருந்தேன். மிகவும் ரசித்துச் சாப்பிட்டார்கள்.
இத்தனை ஓட்டல்களைச் சொன்னபின் பிருந்தாவனத்தைச் சொல்லவிட்டால் வத்தல்குழம்பு என்னை மன்னிக்கவே மன்னிக்காது. ஆமாம். அருமையான வத்தக்குழம்பு அங்கே கிடைக்கும். பெங்களூரின் மையப் பகுதியான எம்.ஜி ரோட்டில் இருக்கிறது இந்த ஓட்டல். உடுப்புக்காரரின் ஓட்டல். ஆனாலும் தமிழர்கள் மிகவும் விரும்புவது.
மீல்சில் சப்பாத்தியும் உண்டு. அப்பளம் கேட்கக் கேட்கத் தருவார்கள். அருமையான வத்தல் குழம்பும் கிடைக்கும். மீல்ஸ் சாப்பிட்டால் மறக்காமல் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். புளிப்பும் உறைப்புமாய் சுர்ரென்று இருக்கும். டிபன் பிரியர்களையும் அவர்கள் விட்டு வைப்பதில்லை. வகை வகையாய் இட்டிலிகளையும் தோசைகளையும் சுட்டுத் தாக்குகிறார்கள். எல்லாமே அருமை. பொடியை எண்ணெய்யோடு குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்திருப்பார்கள். வேண்டிய மட்டும் அள்ளிப் போட்டுக் கொள்ளலாம். கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
ஆனால் டிபன்களில் எனக்குப் பிடித்தது நீர்தோசை. என்னடா நீர்யானை போல பெருசாக இருக்குமா என்று நினைக்காதீர்கள். மிகவும் மெல்லிய தோசையிது. அற்புதமாக இருக்கும். இத்தோடு இனிப்பான பழக்கலவையும் தருவார்கள். தோசையோடு சாப்பிட அல்ல. தோசைக்குப் பின்னே சாப்பிட. மிகவும் சுவையோ சுவை.
தென்னிந்திய உணவு வகைகளை விரும்புகிறவர்கள் இந்தக் குறிப்பிட்ட ஓட்டல்களுக்குச் சென்றே ஆகவேண்டும். இப்பொழுது தமிழ்நாட்டுப் புகழ் முருகன் இட்டிலிக் கடையையும் திறந்திருக்கிறார்கள் கோரமங்களாவில். அங்கு இதுவரை சென்றதில்லை. சென்றால் அதைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்கிறேன்.
இத்தோடு பாகம் ஒன்று முடிந்தது. இன்னும் ஒன்றிரண்டு சைவ விடுதிகளையும் மற்ற விடுதிகளையும் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
(பின் குறிப்பு : கோ.கணேஷிற்கு - சத்தியமாக நான் எந்த நோட்டுப் புத்தகத்தையும் கொண்டு போய் குறிப்பு எடுக்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.)
அன்புடன்,
கோ.இராகவன்
Monday, September 12, 2005
பன்னீர் இலையில்
பன்னீர் இலையில்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அந்த அரசாங்கப் பேருந்து கிளம்பும் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் தனியாகப் போகிறேன். திருச்செந்தூருக்குத் தனியாகப் போகிறேன். இதுவரை அப்படிப் போனதேயில்லை.
தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவரையில் (சிறு வயதில்) பால்பண்ணை ஸ்டாப்பிலோ பீங்கான் ஆபீசு ஸ்டாப்பிலோ போய் ஏறினால் அழகான ஊர்களின் வழியே போய் திருச்செந்தூரைச் சேரலாம். அப்பொழுது கூட ஒரு கூட்டமே வரும்.
தூத்துக்குடி, மதுரை, கரூர், கோயில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று வந்த பிறகும் கூட தனியாகப் போனதில்லை. இப்பொழுது போகிறேன். மனம் என்னவோ செய்தது. ஆனாலும் பெருமையாக இருந்தது. தனியாக முருகனைப் பார்க்கப் போகிறேனே.
மாலை ஏழு மணி ஆகியிருந்ததால் இருள் கவியத் துவங்கியிருந்தது. வெளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் நான் ஓடிய ஆடிய தெருக்கள் இன்னும் இருக்கின்றன என்று நினைக்கும் பொழுது ஏதோ ஒரு பாசம் எழுந்தது.
ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன் பட்டிணம் எல்லாம் தாண்டி திருச்செந்தூருக்குள் நுழையும் பொழுதே கோபுரம் தெரிந்தது. நியான் விளக்குகளால் வேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாசமா பக்தியா என்று தெரியவில்லை. கன்னத்தில் போட்டுக் கொண்டேன். வாய் மெல்ல முருகா என்று எனக்குத் தெரியாமலேயே முணுமுணுத்தது.
திருச்செந்தூர் பேருந்துகளில் கோயில் வாசல் என்று எழுதியிருக்கும். அதற்கு ஏற்றாற்போல கோயில் வாசலில் சென்று இறக்கி விடுவார்கள். இப்பொழுது நாழிக்கிணற்றுக்கு அருகில் புதிதாக பேருந்து நிலையம் கட்டி அங்கு இறக்கி விடுகிறார்கள். நானும் அங்கு இறங்கினேன்.
பனைமரங்கள் கண்ணில் தென்பட்டன. எனக்கு பனைமரங்களைக் கண்டாலே ஒருவித அன்பு பொங்கும். பனம்பழம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என்றால் சொல்லவே வேண்டாம். தேவஸ்தான தங்கும் அறைகளைத் தவிர்த்து விட்டு நல்ல விடுதியைத் தேடினேன்.
ஓரளவு நன்றாக இருந்த விடுதியில் இடம் பிடித்தேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வாடகை. ஒத்துக்கொண்டு அந்த நூறோடு இன்னொரு நூறையும் அட்வான்ஸ் என்ற பெயரில் கொடுத்தேன். அறைக்குச் சென்று குளித்து விட்டு உடைகளை மாற்றினேன். முக்காப் பேண்ட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றேன். நடை சாத்தியிருந்தது. அப்படியே கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கடற்கரையில் அமர்ந்தேன்.
சுனாமி வந்த ஒன்றிரண்டு மாதங்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு கடற்கரையில் இருந்தது. தருமபுரி ஆதீன மடத்தில் முன்பெல்லாம் பக்தர்கள் படுத்துத் தூங்குவார்கள். இப்பொழுது கடற்கரையை ஒட்டி இருப்பதால் யாரையும் அங்கே படுக்க அனுமதிப்பதில்லை.
கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன். பதினோரு மணிக்கு மேல் கடற்கரையில் யாரையும் போலீசார் அனுமதிப்பதில்லை. விடுதியை நோக்கி நடந்தேன். வழியில் சுக்குத் தண்ணி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஆசை உந்த அதை வாங்கிக் குடித்தேன். எனக்குப் பிடித்த கருப்பட்டி போட்டுக் காய்ச்சிய சுக்குத் தண்ணீர். ருசித்துக் குடித்தேன்.
நான் வாங்கியதைப் பார்த்ததும் மேலும் இரண்டு மூன்று பேர் துணிந்து வாங்கிக் குடித்தார்கள். பிறகு மேலும் இருவர்.
கோயில் வாசலில் இருக்கும் கடையில் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதற்காக வாங்கினேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் கோபால் பல்பொடியும் வாங்கினேன். இதெல்லாம் இங்கே வாங்கினால்தானே......
விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நேராகக் கோயிலுக்குச் சென்றேன். சட்டையைக் கழட்டி இடுப்பில் சுற்றிக் கொண்டேன். இன்னமும் முருகனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தார்கள். கருவறைக்குள் இருக்கும் கந்தனைக் காண கூட்டமில்லை. நேராக வரிசைக்குச் சென்றேன்.
தட்டில் திருநீற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு ஐயர் தயாராக இருந்தார். ஆனால் திரைச்சீலை போட்டுக் கொண்டு முருகன் தயாராக இல்லை.
திருச்செந்தூர்த் திருநீற்றிற்குத் தனி மணம் உண்டு. மிகவும் மென்மையாக மெத்தென்று இருக்கும் திருநீற்றை நெற்றி நிறைக்கப் பூசினாலெ ஒரு களை வந்துவிடும். அழகு பார்க்காமல் அங்கு எல்லாரும் பூசிக் கொள்வார்கள். பழைய வழக்கம் என்ன வென்றால் திருநீற்றை பன்னீர் இலையில் வைத்துத் தருவது.
பழைய வழக்கமது. நீளமாக அழகாக இருக்கும் பச்சைப் பன்னீர் இலையில் வெள்ளைத் திருநீற்றைத் தருவார்கள். திருநீறோடு பன்னீர் இலையின் வாடையும் கலந்து சுகமாக மூக்கில் ஏறும். முன்பு நானும் அப்படி வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு கிடைக்கப் போவதில்லை. திருநீற்றுத் தட்டில் பன்னீரிலை இல்லை.
ஒருவேளை பத்து ரூபாய் தட்டில் போட்டால் பன்னீரிலையில் திருநீறு கிடைக்குமோ என்று நினைத்தேன். அடுத்த நொடியிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். முருகன் குடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டுமென்று உள்ளம் முடிவெடுத்தது.
அதற்குள் திருப்பள்ளியெழுச்சி முடிந்தது கந்தன் காட்சி தந்தான். "சீர்கெழு செந்தில்" என்று இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். எப்பொழுதும் சீர் மிகுந்த என்று பொருள். கந்தனின் கருணை மிக்க முகம் கண்டதும் கண்ணீர் பெருகியது. "முருகா! முருகா!" என்று உள்ளம் கதறியது. கையிரண்டையும் மேலே தூக்கி வணங்கினேன். அஞ்சும் முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றியது! அஞ்சேல் எனச் சொல்லி வேல் தோன்றியது! நெஞ்சில் பலகாலும் கண்டிருந்த அவனிரு கால்கள் தோன்றின. அன்போடு வணங்கி விட்டு ஐயர் எனது கையில் தள்ளிய திருநீற்றை நெற்றி நிறைய பூசிக் கொண்டு கருவறைப் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தேன்.
வெளிப்பிரகாரம் வந்ததும் அப்படியே அமைதியான காலையில் சுகமாக அந்தக் கற்கட்டிடத்தில் நடந்தேன். அங்கே ஒரு ஐயர் சந்தனத்தை ஒருவர் கையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுந்தான் சந்தனமா? எனக்குக் கிடைக்கக் கூடாதா? கிடைத்தால் நானும் பூசிக்கொள்ள மாட்டேனா?
படக்கென்று எனது கையை நீட்டினேன். தூய சந்தனம். அப்பொழுது அரைத்தது என நினைக்கிறேன். கமகமத்தது. கிண்ணத்திலிருந்து என் கையில் விழுந்தது. அத்தோடு படக்கென்று இன்னொன்றும் விழுந்தது. அட! பன்னீர் இலையில் திருநீறு.
அன்புடன்,
கோ.இராகவன்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அந்த அரசாங்கப் பேருந்து கிளம்பும் பொழுதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. நான் தனியாகப் போகிறேன். திருச்செந்தூருக்குத் தனியாகப் போகிறேன். இதுவரை அப்படிப் போனதேயில்லை.
தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இருந்தவரையில் (சிறு வயதில்) பால்பண்ணை ஸ்டாப்பிலோ பீங்கான் ஆபீசு ஸ்டாப்பிலோ போய் ஏறினால் அழகான ஊர்களின் வழியே போய் திருச்செந்தூரைச் சேரலாம். அப்பொழுது கூட ஒரு கூட்டமே வரும்.
தூத்துக்குடி, மதுரை, கரூர், கோயில்பட்டி, சென்னை, பெங்களூர் என்று வந்த பிறகும் கூட தனியாகப் போனதில்லை. இப்பொழுது போகிறேன். மனம் என்னவோ செய்தது. ஆனாலும் பெருமையாக இருந்தது. தனியாக முருகனைப் பார்க்கப் போகிறேனே.
மாலை ஏழு மணி ஆகியிருந்ததால் இருள் கவியத் துவங்கியிருந்தது. வெளியில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிறு வயதில் நான் ஓடிய ஆடிய தெருக்கள் இன்னும் இருக்கின்றன என்று நினைக்கும் பொழுது ஏதோ ஒரு பாசம் எழுந்தது.
ஆத்தூர், காயல்பட்டினம், வீரபாண்டியன் பட்டிணம் எல்லாம் தாண்டி திருச்செந்தூருக்குள் நுழையும் பொழுதே கோபுரம் தெரிந்தது. நியான் விளக்குகளால் வேல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாசமா பக்தியா என்று தெரியவில்லை. கன்னத்தில் போட்டுக் கொண்டேன். வாய் மெல்ல முருகா என்று எனக்குத் தெரியாமலேயே முணுமுணுத்தது.
திருச்செந்தூர் பேருந்துகளில் கோயில் வாசல் என்று எழுதியிருக்கும். அதற்கு ஏற்றாற்போல கோயில் வாசலில் சென்று இறக்கி விடுவார்கள். இப்பொழுது நாழிக்கிணற்றுக்கு அருகில் புதிதாக பேருந்து நிலையம் கட்டி அங்கு இறக்கி விடுகிறார்கள். நானும் அங்கு இறங்கினேன்.
பனைமரங்கள் கண்ணில் தென்பட்டன. எனக்கு பனைமரங்களைக் கண்டாலே ஒருவித அன்பு பொங்கும். பனம்பழம், பனங்கிழங்கு, பனங்கற்கண்டு என்றால் சொல்லவே வேண்டாம். தேவஸ்தான தங்கும் அறைகளைத் தவிர்த்து விட்டு நல்ல விடுதியைத் தேடினேன்.
ஓரளவு நன்றாக இருந்த விடுதியில் இடம் பிடித்தேன். ஒரு நாளைக்கு நூறு ரூபாய் வாடகை. ஒத்துக்கொண்டு அந்த நூறோடு இன்னொரு நூறையும் அட்வான்ஸ் என்ற பெயரில் கொடுத்தேன். அறைக்குச் சென்று குளித்து விட்டு உடைகளை மாற்றினேன். முக்காப் பேண்ட்டும் சட்டையும் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றேன். நடை சாத்தியிருந்தது. அப்படியே கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கடற்கரையில் அமர்ந்தேன்.
சுனாமி வந்த ஒன்றிரண்டு மாதங்கள் என்பதால் போலீஸ் பாதுகாப்பு கடற்கரையில் இருந்தது. தருமபுரி ஆதீன மடத்தில் முன்பெல்லாம் பக்தர்கள் படுத்துத் தூங்குவார்கள். இப்பொழுது கடற்கரையை ஒட்டி இருப்பதால் யாரையும் அங்கே படுக்க அனுமதிப்பதில்லை.
கடற்கரையில் கொஞ்ச நேரம் அமர்ந்தேன். பதினோரு மணிக்கு மேல் கடற்கரையில் யாரையும் போலீசார் அனுமதிப்பதில்லை. விடுதியை நோக்கி நடந்தேன். வழியில் சுக்குத் தண்ணி விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். ஆசை உந்த அதை வாங்கிக் குடித்தேன். எனக்குப் பிடித்த கருப்பட்டி போட்டுக் காய்ச்சிய சுக்குத் தண்ணீர். ருசித்துக் குடித்தேன்.
நான் வாங்கியதைப் பார்த்ததும் மேலும் இரண்டு மூன்று பேர் துணிந்து வாங்கிக் குடித்தார்கள். பிறகு மேலும் இருவர்.
கோயில் வாசலில் இருக்கும் கடையில் தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பதற்காக வாங்கினேன். இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் விற்பனையாகும் கோபால் பல்பொடியும் வாங்கினேன். இதெல்லாம் இங்கே வாங்கினால்தானே......
விடியற்காலையில் எழுந்து குளித்து விட்டு நேராகக் கோயிலுக்குச் சென்றேன். சட்டையைக் கழட்டி இடுப்பில் சுற்றிக் கொண்டேன். இன்னமும் முருகனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தார்கள். கருவறைக்குள் இருக்கும் கந்தனைக் காண கூட்டமில்லை. நேராக வரிசைக்குச் சென்றேன்.
தட்டில் திருநீற்றை மலை போலக் குவித்து வைத்துக் கொண்டு ஐயர் தயாராக இருந்தார். ஆனால் திரைச்சீலை போட்டுக் கொண்டு முருகன் தயாராக இல்லை.
திருச்செந்தூர்த் திருநீற்றிற்குத் தனி மணம் உண்டு. மிகவும் மென்மையாக மெத்தென்று இருக்கும் திருநீற்றை நெற்றி நிறைக்கப் பூசினாலெ ஒரு களை வந்துவிடும். அழகு பார்க்காமல் அங்கு எல்லாரும் பூசிக் கொள்வார்கள். பழைய வழக்கம் என்ன வென்றால் திருநீற்றை பன்னீர் இலையில் வைத்துத் தருவது.
பழைய வழக்கமது. நீளமாக அழகாக இருக்கும் பச்சைப் பன்னீர் இலையில் வெள்ளைத் திருநீற்றைத் தருவார்கள். திருநீறோடு பன்னீர் இலையின் வாடையும் கலந்து சுகமாக மூக்கில் ஏறும். முன்பு நானும் அப்படி வாங்கியிருக்கிறேன். இன்றைக்கு கிடைக்கப் போவதில்லை. திருநீற்றுத் தட்டில் பன்னீரிலை இல்லை.
ஒருவேளை பத்து ரூபாய் தட்டில் போட்டால் பன்னீரிலையில் திருநீறு கிடைக்குமோ என்று நினைத்தேன். அடுத்த நொடியிலேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டேன். முருகன் குடுப்பதை வாங்கிக் கொண்டு போகவேண்டுமென்று உள்ளம் முடிவெடுத்தது.
அதற்குள் திருப்பள்ளியெழுச்சி முடிந்தது கந்தன் காட்சி தந்தான். "சீர்கெழு செந்தில்" என்று இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். எப்பொழுதும் சீர் மிகுந்த என்று பொருள். கந்தனின் கருணை மிக்க முகம் கண்டதும் கண்ணீர் பெருகியது. "முருகா! முருகா!" என்று உள்ளம் கதறியது. கையிரண்டையும் மேலே தூக்கி வணங்கினேன். அஞ்சும் முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றியது! அஞ்சேல் எனச் சொல்லி வேல் தோன்றியது! நெஞ்சில் பலகாலும் கண்டிருந்த அவனிரு கால்கள் தோன்றின. அன்போடு வணங்கி விட்டு ஐயர் எனது கையில் தள்ளிய திருநீற்றை நெற்றி நிறைய பூசிக் கொண்டு கருவறைப் பிரகாரத்தை விட்டு வெளியே வந்தேன்.
வெளிப்பிரகாரம் வந்ததும் அப்படியே அமைதியான காலையில் சுகமாக அந்தக் கற்கட்டிடத்தில் நடந்தேன். அங்கே ஒரு ஐயர் சந்தனத்தை ஒருவர் கையில் ஊற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு மட்டுந்தான் சந்தனமா? எனக்குக் கிடைக்கக் கூடாதா? கிடைத்தால் நானும் பூசிக்கொள்ள மாட்டேனா?
படக்கென்று எனது கையை நீட்டினேன். தூய சந்தனம். அப்பொழுது அரைத்தது என நினைக்கிறேன். கமகமத்தது. கிண்ணத்திலிருந்து என் கையில் விழுந்தது. அத்தோடு படக்கென்று இன்னொன்றும் விழுந்தது. அட! பன்னீர் இலையில் திருநீறு.
அன்புடன்,
கோ.இராகவன்
Subscribe to:
Posts (Atom)