சென்னைக்கு மூன்று மாதங்கள் வேலை தொடர்பாக வந்ததுமே பாட்டுக்கச்சேரியும் நாடகமும் நிறைய பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இரண்டரை மாதங்கள் கழித்தே நிறைவேறியது. ஊரெல்லாம் போஸ்டர்கள். டீவியில் விளம்பரங்கள். நாளிதழ்களில் விளம்பரங்கள். அட! அதுதான் பி.சுசீலாவும் எஸ்.ஜானகியும் இணைந்து இசை நிகழ்ச்சியில் பாடுகிறார்கள் என்று. நேரு உள்விளையாட்டரங்கத்தில் கச்சேரியாம். அது எங்க இருக்கிறதென்றே தெரியாது...இந்த நிலையில் டிக்கெட் வாங்கி நிகழ்ச்சிக்குப் போய்...ம்ம்ம்....தமிழ்நாட்டுக்காரன் சிம்ரனுக்கு ஆசைப்பட்ட கதையாகப் போய்விடுமோ என்று முதலில் நினைத்தேன்.
ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி. அதாவது ஜூலை முப்பதாம் தேதி 2006. வெள்ளிக்கெழமை இரவு யாஹுவில் ஆன்லைனில் இருந்தப்போது ஒரு நண்பர் வந்து வணக்கம் சொன்னார். அவர் பெயர் கமலா. அவரிடம் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லி ஆசையச் சொன்னேன். பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்கிற மாதிரி அவங்க போகிறார்களா என்று கேட்டேன். முதலில் யோசித்தார்கள்....பிறகு சனிக்கிழமை எனக்கு விவரம் சொல்வதாகச் சொன்னார்கள். நானும் சரீயென்று இருந்து விட்டேன்.
சொன்னது போலவே சனிக்கிழமை என்னைக் கூப்பிட்டு நான்கு பாஸ்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். அந்த நான்கும் யார் கொடுத்ததென்று நினைக்கிறீர்கள்? நம்பித்தான் ஆக வேண்டும். இசையரசி பி.சுசீலா அவங்களே கொடுத்தது. பழம் நழுவிப் பாலில் விழுவது பழைய பழமொழி. செர்ரி நழுவி ஐஸ்கிரீமில் விழுந்து அது நழுவி வாயில விழுந்ததென்று சொல்லலாம். இல்லையென்றால் கொஞ்சம் கிக்கோடு வேண்டுமென்றால் பியர் நழுவி கோப்பையில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்த மாதிரியென்று சொல்லலாம். அட...அவ்வளவு மகிழ்ச்சி!
ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கெல்லாம் கிளம்பி அவர்கள் வீட்டிற்குப் போய்விட்டேன். அங்கிருந்து ஐந்து மணிக்கு நேராக நேரு உள்விளையாட்டரங்கம். அங்கு இன்னொரு நண்பரைக் கமலா அறிமுகம் செய்து வைத்தார்கள். அவருடைய தந்தை அந்தக் காலத்தைய பெரிய பாடகர். அவருடைய மகன்களில் இரண்டு பேர் திரைப்படங்களில் பாடியிருக்கிறார்கள். ஆமாம். திருச்சி லோகநாதன் அவர்களைத்தான் சொல்றேன். அவருடைய இளைய மகன்தான் நான் சந்திச்சது. அவருடைய அண்ணன்களான டி.எல்.மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஆகிய இருவரும் சினிமாவில் பாடியிருக்கிறார்களே!
நன்றாக மேடை மறைக்காத இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டோம். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. நிகழ்ச்சியை ஃபோட்டோ பிடிக்க ஆசை. பதிவு போடும் பொழுது அதையும் போடலாமென்றுதான். ஆனால் டிக்கெட்டில் காமிரா கொண்டு வரக்கூடாதென்று தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். அதனால் எதற்கு வம்பு என்று கொண்டு செல்லவில்லை. வெளியே வைத்து விட்டு வரச் சொல்லி அனுப்பினால் எங்கு போவது?
ஆச்சி மசாலா, தினத்தந்தி விளம்பரங்கள் எல்லாம் அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு திரைகளில் ஓடிக்கொண்டிருந்தன. நேரமும்தான். ஆறு மணி ஆகி பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. அரங்கமும் நிறைந்திருந்தது. அப்பொழுது மேடையில வேண்டிய லைட்டப் போட்டு வெளிச்சமாக்கினார்கள். அப்பாடா! நிகழ்ச்சி தொடங்கப் போகிறதென்று ஒரு மகிழ்ச்சி. அவசர அவசரமாக உட்கார இடம் தேடினார்கள்
சங்கரின் சாதகப் பறவைகள் குழுவினர்தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அதனால் அவர்கள் அணிப்பாடலாக "எந்த்தரோ மகானுபாவுலு அந்தரிகீ வந்தனம்" பாடினார்கள். ஆனால் பின்னணி இசையைப் புதுமையாச் செய்திருந்தார்கள். அலைபாயுதே படத்தில் அலைபாயுதே கண்ணா பாட்டுக்கு ரகுமான் செய்திருந்த மாதிரி. ஆனால் அலைபாயுதே வருவதற்கு முன்பே சாதகப் பறவைகள் இசைக்குழு இருக்கிறது.
தனது இசைக்குழுவை அறிமுகம் செய்து வைத்தார் சங்கர். பிறகு நிகழ்ச்சியைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரை கொடுத்துட்டு, பிரபல பாடகி ஸ்ரீலேகா பார்த்தசாரதியை அழைத்தார். எதற்கு? இரண்டு பெரிய பாடகிகளைப் பற்றி ஒரு பாடகி அறிமுகம் கொடுத்தால் எப்படி இருக்கும்! அதற்குத்தான்.
ஆனால் இவர்களுக்கு அறிமுகம் தேவையா? அந்தக் கேள்விதான் ஸ்ரீலேகா அவர்களும் கேட்டது. ஆகையால் சுருக்கமாக இருவரும் திரையுலகத்தில் நுழைந்ததைப் பற்றிச் சொன்னார். 1952ல் பெற்ற தாய் படத்தில் எதுக்கழைத்தாய் என்று தொடங்கும் பாடலைப் பாடி இசைப் பயணத்தைத் தொடங்கினாராம் பி.சுசீலா. எதுக்கழைத்தாயா? அவருடைய இனிய பாடல்கள் நமக்கெல்லாம் கிடைக்கத்தான். 1957ல் ஜானகி அவர்கள் இசைப்பயணத்தைத் தொடங்கினார்களாம். விதியின் விளையாட்டு என்ற படத்திற்காக. ஆமாம். விதியின் விளையாட்டுதான். ஜானகி அவர்கள் 57ல் அறிமுகமானாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பிரபலமானார்கள். அதுவரை இசைச் சிம்மாசனம் பி.சுசீலா அவர்களிடமே இருந்தது. அதுதான் விதியின் விளையாட்டு.
அறிமுகம் முடிந்ததும் இசைக்குயில்கள் இருவரும் இசையாரவாரத்தோடும் அதையமுக்கும் ரசிகர்களின் ஆரவாரத்தோடும் மேடையேறினார்கள். முதன் முதலாக மேடையில் பி.சுசீலா அவர்களைப் பார்க்கும் பரவசம் எனக்கு. என்னைப் போலவே பலருக்கு. அதே போல எஸ்.ஜானகி அவர்கள் ரசிகர்களும் பரவசமடைந்தார்கள்.
இருவரும் பணிவாக ரசிகர்களை வணங்கினார்கள். முதலில் எஸ்.ஜானகி அவர்கள் பி.சுசீலா அவர்களை மகாகுயில் என விளித்து அந்த மகாகுயிலோடு பாட வந்திருப்பது பெருமகிழ்ச்சி என்றார்கள். உடனே பி.சுசீலா தடுத்து இரண்டு மகாகுயில்கள் என்று திருத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்த எஸ்.ஜானகி, பி.சுசீலாதான் இசையரசி. அவருக்கு இணை என்று யாருமில்லை என்று ஆணித்தரமாக எடுத்துச் சொன்னார்.
அப்பொழுது எனக்கு "இசையரசி எந்நாளும் நானே" என்ற பாடல் நினைவிற்கு வந்தது. இளையராஜா இசையில் தாய் மூகாம்பிகை படத்தில் நடக்கும் பாட்டுப் போட்டி. தெய்வமே வந்து பாடும். "இசையரசி எந்நாளும் நானே" என்று. அதை மறுத்துப் பாடுவார் ஒருத்தி. ஆனால் பாட்டில் வெற்றி பெற பாலில் மருந்து கொடுத்து தெய்வத்தை ஊமையாக்கி விட்டதாக நினைப்பார். ஆனால் தெய்வத்தின் அருளால் ஊமை பாடி "இசையரசி எந்நாளும் நீயே! உனக்கொரு இணையாராம்மா? எல்லோரும் இசைப்பது இசையாகுமா?" என்று போட்டி முடியும். இந்தப் பாட்டில் தெய்வத்திற்குப் பி.சுசீலாவும் தெய்வ அருளால் குரல் பெற்ற பெண்ணிற்கு எஸ்.ஜானகியும் பாடியிருந்தார்கள். இன்றல்ல அன்றே பி.சுசீலாவை இசையரசி என்று எஸ்.ஜானகி புகழ்ந்திருக்கிறார்.
அடுத்து பேசினார் பி.சுசீலா. "ஜானகி பேசீட்டாங்க. நான் என்ன பேசுறது? நேரா பாட்டுக்கே போயிர்ரேன்" என்று தனது முதல் பாடலைத் துவங்கினார். அரங்கம் அமைதியானது. அந்த முதற் பாடல்?
தொடரும்....
Tuesday, August 01, 2006
Wednesday, July 26, 2006
நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
வலைப்பூ நண்பர்களே! சென்ற பதிவில் அவசர உதவி தேவைப்படும் இதய சிகிச்சை மையம் பற்றிச் சொல்லியிருந்தேன். அதற்கு உதவி செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியும் தகவல்களும் இதோ. உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.
ஹேமலதா அவர்களின் மின்னஞ்சல் முகவரியை (zeushema@yahoo.com) ஏற்கனவே கொடுத்திருந்தேன்.
நீங்கள் நேரடியாகத் திரு.மூர்த்தி(mdu_khggt@sancharnet.in) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டிய தகவல் இங்கே.
1. Name of the receiving bank : Canara Bank,
Gandhigram - 624 302,
Dindigul District,
Tamil Nadu State,
India.
2. Bank Code No. : 0967
3. Account Name : Gandhigram Trust
4. Account No. : SB a/c. No.43
அன்புடன்,
கோ.இராகவன்
ஹேமலதா அவர்களின் மின்னஞ்சல் முகவரியை (zeushema@yahoo.com) ஏற்கனவே கொடுத்திருந்தேன்.
நீங்கள் நேரடியாகத் திரு.மூர்த்தி(mdu_khggt@sancharnet.in) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
உங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டிய தகவல் இங்கே.
1. Name of the receiving bank : Canara Bank,
Gandhigram - 624 302,
Dindigul District,
Tamil Nadu State,
India.
2. Bank Code No. : 0967
3. Account Name : Gandhigram Trust
4. Account No. : SB a/c. No.43
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, July 21, 2006
அவசர உதவி தேவைப்படும் அவசர உதவி மையம்
ஒரு பிரபலமான ஜவுளித் தொழிலதிபர், சொத்துகள் நிறைய இருந்தும் அன்பான மனைவி மக்கள் இருந்தும் இறக்கும் பொழுது போர்த்திக் கொள்ளத் துணியின்றி இருந்தார் என்றால் நம்ப முடிகிறதா? இந்தக் கொடுமையான நிகழ்ச்சியையும் அதன் விளைவாக நடந்த நல்ல நிகழ்ச்சியையும் நீங்கள் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
பெங்களூரில் வசிக்கும் ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் அவர்களுக்குச் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர் அவர். பின்னாளில் பெங்களூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்க வந்திருந்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. நெஞ்சுவலிதான். அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அந்தக் காலதாமதம்தான் எமனாகியிருக்கிறது.
மதுரையிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. குடும்பத்தினர் பதறிப் போனார்கள். ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள்.
ஆனாலும் பாருங்கள். மதுரையின் அத்தனை பெரிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததற்குச் சரியான விளக்கம் கூடத் தரவில்லையாம். நெஞ்சு வலி வந்து நான்கு மணி நேரம் கழித்துதான் மருத்துவமனைக்கே சென்றிருக்கிறார். அதுவும் அவரே நடந்து சென்றிருக்கிறார். அதுவும் இரவு பதினோரு மணியளவில். அந்த அளவிற்கு தன்னுடைய நினைவில் இருந்த ஒருவர் எப்படி இறந்தார் என்று கூட ஒரு மருத்துவமனையால் சொல்லமுடியவில்லை என்றால் எப்படி?
இவர்கள் சென்று சேர்ந்த பொழுதுதான் போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு துயரம். துயரம். துயரம். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதா அவர்களின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது.
கல்வி என்பது அழியாச் சொத்து. அந்தச் சொத்தை தந்தையார் அளித்துச் சென்றதால்தான் இன்று நல்ல பதவியில் பெங்களூரில் இருக்கிறோம் என்று நம்பும் ஹேமா, அந்தச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவும் கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராதவர் ஹேமா. இந்த மருத்துவமனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் பலமுறைகள் சென்று அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.
இப்படி ஒரு அவசர சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் ஹேமா தொடர்பு கொண்டது பெங்களூரில் பிரபலமான நாராயண் ஹிருதயாலயா என்னும் மிகப் பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தேவி ஷெட்டி அவர்களைத்தான். நிறைய நேரம் அவருடன் பேசி ஆலோசனை பெற்று ஒரு இதய நோய் கவனிப்பு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் இந்த Telemedicine பற்றி எடுத்துக் கூறி அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவெடுப்பதற்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.
அதற்குப் பிறகு சின்னாளப்பட்டியில் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து டாக்டர் மனோன்மணியும் மூன்று அனுபவமிக்க செவிலியர்களும் பெங்களூரில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். வீடியோ கான்பிரன்சிங் முறையில் பெங்களூர் நாராயண் ஹிருதயாலயாவின் உதவியோடு டெலிமெடிசின் மூலம் சிகிச்சை அளிக்கும் மையமும் ஜூன் 2, 2006 அன்று தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெங்களூரில் இருக்கும் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும். காலதாமதமும் இதனால் குறையும். சிறப்பான சிகிச்சையும் உடனடியாக வழங்கப்படும்.
சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய இந்தக் கனவு முயற்சியில் உறுதுணையாக நின்ற தனது தாயார் ருக்மணி முருகேசன், சகோதரர் சுதாகர், டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் விஜய் சிங், டாக்டர் பொம்மையா மற்றும் அனைத்து நண்பர்களையும் நன்றியோடு ஹேமா நினைவுகூர்கிறார்.
நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும் தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.
ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடைந்து விடவில்லை. ஏன்? இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க பெங்களூர் நாராயண் ஹிருதயலயாவின் டாக்டர் தேவி ஷெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இங்கிருந்து பெங்களூர் சென்று வரக் கூட வசதியில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு நாள் சோற்றுக்குச் சம்பாதிக்கும் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது? சிகிச்சை பெறுகிறவரும் அவருக்குத் துணையாக ஒருவரும் பெங்களூர் சென்று அங்கு ஒரு வாரகாலம் மருத்துவமனையில் தங்கியிருக்கவும் சிகிச்சை முடிந்த பிறகு திரும்பி வரவும் சொறபத் தொகையே தேவைப்படும். ஆனால் அந்தத் தொகை தேவைப்படுகிறவர்கள் நிறைய. அதற்காக ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. எதெற்கெதற்கோ செலவிடுகிறோம். இந்தப் புனிதப் பணிக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுத்தலே சிறப்பு. அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். நண்பர்களே தேரிழுக்க வாருங்கள். பல உயிர்களைக் காத்திடுங்கள்.
இந்த மருத்துவமனையைப் பற்றி இந்து நாளிதழில் வெளி வந்த செய்தி இங்கே.
ஜூலை 15, 2006 அன்று ஒரு மருத்துவ மையத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு சுற்றியிருக்கும் பட்டிக்காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஆண்களுமாய் வந்தவர்களில் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் பிஞ்சிலேயே நஞ்சு போய்விடும். நூற்றுக் கணக்கில் அல்ல. ஆயிரக் கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் நிதியுதவி தேவைப்படுகிறது. ஒருவரால் முடிகிறதல்ல இது. உங்களால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். பல ஏழைக் குழந்தைகள் பிழைக்க உதவி செய்யுங்கள். பல தமிழ்க் குடும்பங்களை ஒரு வேளையாவது சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் காப்பாற்றுங்கள். உங்களால் நாளை காப்பாற்றப் படப் போகும் பலருக்காக இன்று உங்களிடம் கையேந்திக் கேட்கிறோம்! மனவுவந்து பெருநிதி தாருங்கள்.
(உதவிகள் செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி zeushema@yahoo.com )
நன்றியுடன்,
கோ.இராகவன்
பெங்களூரில் வசிக்கும் ஹேமலதாவின் தந்தை என்.எஸ்.எஸ்.முருகேசன் அவர்களுக்குச் சொந்த ஊர் சின்னாளப்பட்டி. கடின உழைப்பும் இறைநம்பிக்கையும் கொண்டு சிறப்பாக முன்னுக்கு வந்தவர் அவர். பின்னாளில் பெங்களூரில் குடும்பத்தோடு தங்கி விட்டார். நிலக்கோட்டைக்கு ஒரு நண்பரைச் சந்திக்க வந்திருந்த பொழுதுதான் அந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்கிறது. நெஞ்சுவலிதான். அருகில் உள்ள சிறிய மருத்துவமனையில் வசதிகள் இருக்கவில்லை. அங்கிருந்த மருத்துவரும் பக்கத்திலிருக்கும் பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லச் சொல்லியிருக்கிறார். அதாவது மதுரைக்கு. ஆனால் அவரது நிலையின் தீவிரத்தை உணராத நண்பர் காலம் கடத்தி விட்டார். அந்தக் காலதாமதம்தான் எமனாகியிருக்கிறது.
மதுரையிலிருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக பெங்களூரில் இருந்தவர்களுக்குத் தகவல் போயிருக்கிறது. குடும்பத்தினர் பதறிப் போனார்கள். ஹேமலதாவும் அவரது தம்பியும் உடனியாக மதுரைக்குக் கிளம்பியிருக்கிறார். ஆனாலும் வழியிலேயே அவர்கள் தந்தை இறந்த செய்தி கிடைத்துத் துடித்துப் போயிருக்கிறார்கள்.
ஆனாலும் பாருங்கள். மதுரையின் அத்தனை பெரிய மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததற்குச் சரியான விளக்கம் கூடத் தரவில்லையாம். நெஞ்சு வலி வந்து நான்கு மணி நேரம் கழித்துதான் மருத்துவமனைக்கே சென்றிருக்கிறார். அதுவும் அவரே நடந்து சென்றிருக்கிறார். அதுவும் இரவு பதினோரு மணியளவில். அந்த அளவிற்கு தன்னுடைய நினைவில் இருந்த ஒருவர் எப்படி இறந்தார் என்று கூட ஒரு மருத்துவமனையால் சொல்லமுடியவில்லை என்றால் எப்படி?
இவர்கள் சென்று சேர்ந்த பொழுதுதான் போர்த்திக் கொள்ளக் கூடத் துணியின்றிக் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்திருக்கிறார்கள். பதறிக் கதறியிருக்கிறார்கள். அதற்குப் பிறகு துயரம். துயரம். துயரம். இந்த இழப்பு மிகப் பெரிய வெற்றிடத்தை மட்டுமல்ல ஹேமலதா அவர்களின் உள்ளத்தில் ஒரு புது வேகத்தையும் உண்டாக்கி விட்டது. தனக்கு நேர்ந்த இழப்பு இன்னும் பலருக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்ற எண்ணந்தான் அது.
கல்வி என்பது அழியாச் சொத்து. அந்தச் சொத்தை தந்தையார் அளித்துச் சென்றதால்தான் இன்று நல்ல பதவியில் பெங்களூரில் இருக்கிறோம் என்று நம்பும் ஹேமா, அந்தச் சொத்தின் பலனை ஒரு மருத்துவமனை வடிவில் அவரது சொந்த ஊருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவும் கிட்டத்தட்ட 20 முதல் 25 ஆண்டுகள் வரை சின்னாளப்பட்டியின் பக்கமே சென்றிராதவர் ஹேமா. இந்த மருத்துவமனை தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் பலமுறைகள் சென்று அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறார்.
இப்படி ஒரு அவசர சிகிச்சை மருத்துவமனை வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் ஹேமா தொடர்பு கொண்டது பெங்களூரில் பிரபலமான நாராயண் ஹிருதயாலயா என்னும் மிகப் பெரிய மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தேவி ஷெட்டி அவர்களைத்தான். நிறைய நேரம் அவருடன் பேசி ஆலோசனை பெற்று ஒரு இதய நோய் கவனிப்பு மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் இந்த Telemedicine பற்றி எடுத்துக் கூறி அதற்கான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி கூறினார். இன்னும் சொல்லப் போனால் இந்த முடிவெடுப்பதற்கே கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன.
அதற்குப் பிறகு சின்னாளப்பட்டியில் காந்திகிராம அறக்கட்டளை சார்பில் இருக்கும் கஸ்தூரிபா மருத்துவமனையிலிருந்து டாக்டர் மனோன்மணியும் மூன்று அனுபவமிக்க செவிலியர்களும் பெங்களூரில் இரண்டு வாரங்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். வீடியோ கான்பிரன்சிங் முறையில் பெங்களூர் நாராயண் ஹிருதயாலயாவின் உதவியோடு டெலிமெடிசின் மூலம் சிகிச்சை அளிக்கும் மையமும் ஜூன் 2, 2006 அன்று தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பரிசோதனைகளையும் சிகிச்சைகளையும் பெங்களூரில் இருக்கும் மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெறும். காலதாமதமும் இதனால் குறையும். சிறப்பான சிகிச்சையும் உடனடியாக வழங்கப்படும்.
சுமார் 12 லட்சம் ரூபாய் செலவில் நிறைவேறிய இந்தக் கனவு முயற்சியில் உறுதுணையாக நின்ற தனது தாயார் ருக்மணி முருகேசன், சகோதரர் சுதாகர், டாக்டர் தேவி ஷெட்டி, டாக்டர் விஜய் சிங், டாக்டர் பொம்மையா மற்றும் அனைத்து நண்பர்களையும் நன்றியோடு ஹேமா நினைவுகூர்கிறார்.
நாம் செய்யும் உதவியும் பணியும் எவ்வளவு பெரிது என்பது முக்கியமல்ல. ஆனால் எந்த மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே முக்கியம் என்ற எண்ணமும் தனது தந்தை கடைசி நேரத்தில் என்ன துன்பம் அனுபவித்திருப்பாரோ என்ற மனவேதனையுமே இப்படி ஒரு மருத்துவ உதவி மையம் எழுப்ப ஊக்கம் கொடுத்ததாகக் கருதுகிறார் ஹேமா.
ஆனால் இந்தப் பணி இன்னும் முடிவடைந்து விடவில்லை. ஏன்? இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற ஏழை நோயாளிகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொடுக்க பெங்களூர் நாராயண் ஹிருதயலயாவின் டாக்டர் தேவி ஷெட்டி ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் இங்கிருந்து பெங்களூர் சென்று வரக் கூட வசதியில்லாமல் இருக்கும் கூலித் தொழிலாளர்கள் நிறைய இருக்கிறார்கள். ஒரு நாள் சோற்றுக்குச் சம்பாதிக்கும் இவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்வது? சிகிச்சை பெறுகிறவரும் அவருக்குத் துணையாக ஒருவரும் பெங்களூர் சென்று அங்கு ஒரு வாரகாலம் மருத்துவமனையில் தங்கியிருக்கவும் சிகிச்சை முடிந்த பிறகு திரும்பி வரவும் சொறபத் தொகையே தேவைப்படும். ஆனால் அந்தத் தொகை தேவைப்படுகிறவர்கள் நிறைய. அதற்காக ஒரு நிதி திரட்டி அதை வங்கியில் வைப்புத் தொகையாக வைத்து உதவி செய்யவும் திட்டமிட்டுள்ளது. எதெற்கெதற்கோ செலவிடுகிறோம். இந்தப் புனிதப் பணிக்காகவும் ஒரு தொகையை நாம் மனமுவந்து கொடுத்தலே சிறப்பு. அப்படிச் செய்ய வேண்டுமென்று உங்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ஊர் கூடித்தான் தேரிழுக்க வேண்டும். நண்பர்களே தேரிழுக்க வாருங்கள். பல உயிர்களைக் காத்திடுங்கள்.
இந்த மருத்துவமனையைப் பற்றி இந்து நாளிதழில் வெளி வந்த செய்தி இங்கே.
ஜூலை 15, 2006 அன்று ஒரு மருத்துவ மையத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு சுற்றியிருக்கும் பட்டிக்காடுகளில் இருந்து கிட்டத்தட்ட 250 பேர் வந்திருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் ஆண்களுமாய் வந்தவர்களில் கிட்டத்தட்ட 165 பேருக்கு மேல் பெரிய சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் சின்னக் குழந்தைகளும் இருக்கிறார்கள். உடனடியாக ஏதாவது செய்யவில்லை என்றால் இந்தப் பிஞ்சுகள் பிஞ்சிலேயே நஞ்சு போய்விடும். நூற்றுக் கணக்கில் அல்ல. ஆயிரக் கணக்கில் அல்ல. லட்சக்கணக்கில் நிதியுதவி தேவைப்படுகிறது. ஒருவரால் முடிகிறதல்ல இது. உங்களால் ஆனதைக் கண்டிப்பாகச் செய்யுங்கள். பல ஏழைக் குழந்தைகள் பிழைக்க உதவி செய்யுங்கள். பல தமிழ்க் குடும்பங்களை ஒரு வேளையாவது சாப்பிட வைத்துக் கொண்டிருக்கும் குடும்பத் தலைவனையும் தலைவியையும் காப்பாற்றுங்கள். உங்களால் நாளை காப்பாற்றப் படப் போகும் பலருக்காக இன்று உங்களிடம் கையேந்திக் கேட்கிறோம்! மனவுவந்து பெருநிதி தாருங்கள்.
(உதவிகள் செய்யத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி zeushema@yahoo.com )
நன்றியுடன்,
கோ.இராகவன்
Monday, July 17, 2006
சென்னை - பிளாக் ஸ்பாட் - பி.எஸ்.என்.எல் - டமால்
சென்னையில் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் வைத்திருக்கும் என்னாலும் இன்று மாலை முதல் பிளாக் ஸ்பாட் பிளாகுகளைப் பார்க்க முடியவில்லை. மத்திய அரசின் இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏன் இப்படியொரு முடிவோ! இனி என்னுடைய வலைப்பூவை நானே பார்க்க முடியாது.
வருத்தத்துடன்,
கோ.இராகவன்
வருத்தத்துடன்,
கோ.இராகவன்
சிதம்பர சர்ச்சையும் ஒரு மீள்பதிவும்
தில்லை எனப்படும் சிதம்பரம் பற்றி எழுதிய வரலாற்றுச் சிறுகதை. முன்பே இட்டது. இப்பொழுது படித்துப் பாருங்கள்.
பொற்சிலையும் சொற்குவையும்!
அன்புடன்,
கோ.இராகவன்
பொற்சிலையும் சொற்குவையும்!
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, July 07, 2006
அறுவர் தந்த ஆறு இசையாறுகள்
சும்மாயிருக்காமல் குமரன் என்னையும் ஆறு பதிவில் இழுத்து விட்டு விட்டார். எனக்கு இப்பொழுது இருக்கும் மனநிலையில் ஆழ்மையான பதிவு இட மனமில்லை. ஒரு இசைப் பதிவு. இசை என்றாலே தமிழில் சினிமா இசை என்று ஆகி விட்டதே. எனக்குப் பிடித்த ஆறு பாடகர்களும் அவர்கள் பாடிய ஆறு பாடல்களும் சொல்லலாம் என இருக்கிறேன். இந்த ஆறுதான் பிடிக்குமென்று இல்லை. ஆனாலும் முடிந்த வரையில் சுவையான ஆறுகள். இன்னொரு விஷயம். இந்தப் பட்டியலால் இவர்கள்தான் சிறந்தவர்கள். மற்றவர்கள் எல்லாரும் பாடத் தெரியாதவர்கள்னு சொல்லலை. எனக்குப் பிடிச்ச ஆறு. அவ்வளவுதான்.
இசையரசி பி.சுசீலா
1. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - பஞ்சவர்ணக்கிளி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
2. கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து
3. கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்யழகு - புதிய முகம், இசைப்புயல், வைரமுத்து
4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி
5. அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் - உயர்ந்த மனிதன், மெல்லிசை மன்னர், கவியரசர்
6. மறைந்திருக்கு பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனாம்பாள், திரையிசைத் திலகம், கவியரசர்
இசைக்குயில் வாணி ஜெயராம்
1. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்வோ - தீர்க்க சுமங்கலி, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
2. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா - அழகே உன்னை ஆராதிக்கிறேன், இசைஞானி, வாலி
3. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?
4. மலைராணி முந்தானை சரியச் சரிய - ஒரே வானம் ஒரே பூமி, மெல்லிசை மன்னர், கவியரசர்
5. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன், இசைஞானி, வைரமுத்து
6. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது - படத்தின் பெயர் தெரியவில்லை, சங்கர்-கணேஷ், வைரமுத்து
இசைத்துள்ளல் எல்.ஆர்.ஈஸ்வரி
1. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (பாடியவர் டீ.எம்.எஸ் என்றாலும் ஈஸ்வரியின் அந்த அதியற்புதமான ஹம்மிங்...ஆகா) - ஆலயமணி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
3. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் - வல்லவனுக்கு வல்லவன், வேதா, கவியரசர்
4. அடடா என்ன அழகு அருகே வந்து தழுவு - நீ, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
5. வாராயென் தோழி வாராயோ - பாசமலர், மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
6. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம், சூலமங்கலம் ராஜலட்சுமி, கவியரசர் (இது ஒரு மிகச்சிறந்த பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் திறமையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததை இந்தப் பாடலில் அறியலாம். )
இசைவேந்தர் டீ.எம்.எஸ்
1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. முத்தைத்தரு பத்தித் திருநகை - அருணகிரிநாதர், ஜி.ராமநாதன் - டீ.ஆர்.பாப்பா, அருணகிரிநாதர்
3. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் - நல்லதொரு குடும்பம், இசைஞானி, கவியரசர்
4. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம், இசைஞானி, கவியரசர் (மிகவும் அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள். மனமயக்கும்.)
5. ஆண்டவன் இல்லா உலகமெது ஐலசா - நந்தா என் நிலா, தட்சிணாமூர்த்தி, கவியரசர் (இன்னொரு அருமையான பாடல். வாணி ஜெயராமுடன் பாடியது)
6. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - இரு மலர்கள், மெல்லிசை மன்னர், வாலி
இன்னிசைக் குரலோன் ஜெயச்சந்திரன்
1. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள், மெல்லிசை மன்னர், கவியரசர் என நினைவு
2. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள், இசைஞானி, பாட்டு எழுதுனது யார்னு தெரியலையே!
3. கன்னத்தில் முத்தமிட்டால் - கன்னத்தில் முத்தமிட்டால், இசைப்புயல், வைரமுத்து
4. கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி - கிழக்குச் சீமையிலே, இசைப்புயல், வைரமுத்து
5. பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள், மெல்லிசை மன்னர், கவியரசர் (ஜெயச்சந்திரன் அறிமுகமாகிய பாடல். மிகவும் இனியது.)
6. புல்லைக் கூடப் பாட வைத்த புல்லாங்குழல் - என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான், இசைஞானி, வாலியா?
சிறந்தவை ஆறு
இந்த ஆறும் பல பாடகர்களும் பாடி எனக்கு மிகவும் பிடித்தவைகளில் வரும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் நான் சுவைக்கும் இனிய பாடல்கள்.
1. அழகிய கண்ணே உறவுகள் நீயே - எஸ்.ஜானகி, இசைஞானி, உதிரிப் பூக்கள், கவியரசர் (யாருக்குப் பிடிக்காது இந்தப் பாட்டு!)
2. காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைப்புயல், ரோஜா, வைரமுத்து
3. கூண்ட விட்டு ஒரு பறவ கோடு தாண்டிப் போச்சு - பி.சுசீலா, யேசுதாஸ், கட்டபொம்மன், தேவா, பாடலாசிரியர் தெரியலை. தேவா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
4. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - யேசுதாஸ், இசைஞானி, அவள் அப்படித்தான், கவியரசர்
5. மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?
6. சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே - ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஜெயராஜ், முத்துக்குமார்
பாடல்களில் தேர்ந்தெடுத்துக் கேட்பதுதான் வழக்கம். இந்தத் தேர்ந்தெடுத்தலில் இப்பொழுது எண்ணிக்கைகள் குறுகிக்கொண்டே வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் வந்த புதிதில் அத்தனை கேசட்டுகளும் சீடீக்களும் வாங்குவேன். கொஞ்ச நாளாகவே இசை வட்டுகள் வாங்குவது மிக மிகக் குறைந்திருக்கிறது. டீவியில் வரும் ஒன்றிரண்டு பாடல்களள மிகவும் ரசிக்கிறேன். எ.டு பொய் சொல்லப் போறேன், ரகசியமானது காதல் மிக மிக....ஆனால் அந்தப் படத்தில் மற்ற பாடல்களை ரசிக்க முடியாததால் இசைவட்டு வாங்குவதில்லை.
ஆறு பேரக் கூப்பிடனுமா? ஏற்கனவே எல்லாரும் போட்டுட்டாங்க...நான் கட்டக் கடைசீல வந்திருக்கேன். யாராவது தங்களை இன்னும் யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறீங்களா? இதோ இராகவன் அழைக்கிறான் (இதெல்லாம் ஓவராத் தெரியல!) சரி. இதுவரை அழைக்கப் படாதா ஆறு நண்பர்கள் இதை அழைப்பா எடுத்துக்கிட்டு பதிவு போடுங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
இசையரசி பி.சுசீலா
1. அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - பஞ்சவர்ணக்கிளி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
2. கண்ணான பூ மகனே கண்ணுறங்கு சூரியனே - தண்ணீர் தண்ணீர், மெல்லிசை மன்னர், வைரமுத்து
3. கண்ணுக்கு மை அழகு கவிதைக்குப் பொய்யழகு - புதிய முகம், இசைப்புயல், வைரமுத்து
4. மாப்பிள்ளைக்கு மாமன் மனசு மாமனுக்கோ - படத்தின் பெயர் நினைவில்லை, இசைஞானி, வாலி
5. அத்தானின் முத்தங்கள் அத்தனையும் முத்துக்கள் - உயர்ந்த மனிதன், மெல்லிசை மன்னர், கவியரசர்
6. மறைந்திருக்கு பார்க்கும் மர்மமென்ன - தில்லானா மோகனாம்பாள், திரையிசைத் திலகம், கவியரசர்
இசைக்குயில் வாணி ஜெயராம்
1. மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரலல்வோ - தீர்க்க சுமங்கலி, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
2. நானே நானா யாரோ தானா மெல்ல மெல்ல மாறினேனா - அழகே உன்னை ஆராதிக்கிறேன், இசைஞானி, வாலி
3. நித்தம் நித்தம் நெல்லிச் சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா - முள்ளும் மலரும், இசைஞானி, கங்கை அமரனா?
4. மலைராணி முந்தானை சரியச் சரிய - ஒரே வானம் ஒரே பூமி, மெல்லிசை மன்னர், கவியரசர்
5. கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம் - புன்னகை மன்னன், இசைஞானி, வைரமுத்து
6. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது - படத்தின் பெயர் தெரியவில்லை, சங்கர்-கணேஷ், வைரமுத்து
இசைத்துள்ளல் எல்.ஆர்.ஈஸ்வரி
1. இனிமை நிறைந்த உலகம் இருக்கு - நினைத்தாலே இனிக்கும், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (பாடியவர் டீ.எம்.எஸ் என்றாலும் ஈஸ்வரியின் அந்த அதியற்புதமான ஹம்மிங்...ஆகா) - ஆலயமணி, மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
3. பளிங்கினால் ஒரு மாளிகை பருவத்தால் மணி மண்டபம் - வல்லவனுக்கு வல்லவன், வேதா, கவியரசர்
4. அடடா என்ன அழகு அருகே வந்து தழுவு - நீ, மெல்லிசை மன்னர், வாலி என நினைவு
5. வாராயென் தோழி வாராயோ - பாசமலர், மெல்லிசை மன்னர்கள், கவியரசர்
6. இது மாலை நேரத்து மயக்கம் - தரிசனம், சூலமங்கலம் ராஜலட்சுமி, கவியரசர் (இது ஒரு மிகச்சிறந்த பாடல். எல்.ஆர்.ஈஸ்வரியின் திறமையை திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததை இந்தப் பாடலில் அறியலாம். )
இசைவேந்தர் டீ.எம்.எஸ்
1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் - தவப்புதல்வன், மெல்லிசை மன்னர், கவியரசர்
2. முத்தைத்தரு பத்தித் திருநகை - அருணகிரிநாதர், ஜி.ராமநாதன் - டீ.ஆர்.பாப்பா, அருணகிரிநாதர்
3. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் - நல்லதொரு குடும்பம், இசைஞானி, கவியரசர்
4. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு - தியாகம், இசைஞானி, கவியரசர் (மிகவும் அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள். மனமயக்கும்.)
5. ஆண்டவன் இல்லா உலகமெது ஐலசா - நந்தா என் நிலா, தட்சிணாமூர்த்தி, கவியரசர் (இன்னொரு அருமையான பாடல். வாணி ஜெயராமுடன் பாடியது)
6. மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - இரு மலர்கள், மெல்லிசை மன்னர், வாலி
இன்னிசைக் குரலோன் ஜெயச்சந்திரன்
1. கவிதை அரங்கேறும் நேரம் - அந்த ஏழு நாட்கள், மெல்லிசை மன்னர், கவியரசர் என நினைவு
2. ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு - வைதேகி காத்திருந்தாள், இசைஞானி, பாட்டு எழுதுனது யார்னு தெரியலையே!
3. கன்னத்தில் முத்தமிட்டால் - கன்னத்தில் முத்தமிட்டால், இசைப்புயல், வைரமுத்து
4. கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி - கிழக்குச் சீமையிலே, இசைப்புயல், வைரமுத்து
5. பொன்னென்ன பூவென்ன கண்ணே - அலைகள், மெல்லிசை மன்னர், கவியரசர் (ஜெயச்சந்திரன் அறிமுகமாகிய பாடல். மிகவும் இனியது.)
6. புல்லைக் கூடப் பாட வைத்த புல்லாங்குழல் - என் புருஷந்தான் எனக்கு மட்டுந்தான், இசைஞானி, வாலியா?
சிறந்தவை ஆறு
இந்த ஆறும் பல பாடகர்களும் பாடி எனக்கு மிகவும் பிடித்தவைகளில் வரும். எந்தப் பாகுபாடும் இல்லாமல் நான் சுவைக்கும் இனிய பாடல்கள்.
1. அழகிய கண்ணே உறவுகள் நீயே - எஸ்.ஜானகி, இசைஞானி, உதிரிப் பூக்கள், கவியரசர் (யாருக்குப் பிடிக்காது இந்தப் பாட்டு!)
2. காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே - எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசைப்புயல், ரோஜா, வைரமுத்து
3. கூண்ட விட்டு ஒரு பறவ கோடு தாண்டிப் போச்சு - பி.சுசீலா, யேசுதாஸ், கட்டபொம்மன், தேவா, பாடலாசிரியர் தெரியலை. தேவா இசையமைத்த சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
4. உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை - யேசுதாஸ், இசைஞானி, அவள் அப்படித்தான், கவியரசர்
5. மாட விளக்க யாரு இப்போ தெருவோரம் ஏத்துனா - கமலஹாசன், விருமாண்டி, இசைஞானி, வாலியா?
6. சுட்டும் விழிச் சுடரே சுட்டும் விழிச் சுடரே - ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, ஹாரிஸ் ஜெயராஜ், முத்துக்குமார்
பாடல்களில் தேர்ந்தெடுத்துக் கேட்பதுதான் வழக்கம். இந்தத் தேர்ந்தெடுத்தலில் இப்பொழுது எண்ணிக்கைகள் குறுகிக்கொண்டே வருகின்றன. ஏ.ஆர்.ரகுமான் வந்த புதிதில் அத்தனை கேசட்டுகளும் சீடீக்களும் வாங்குவேன். கொஞ்ச நாளாகவே இசை வட்டுகள் வாங்குவது மிக மிகக் குறைந்திருக்கிறது. டீவியில் வரும் ஒன்றிரண்டு பாடல்களள மிகவும் ரசிக்கிறேன். எ.டு பொய் சொல்லப் போறேன், ரகசியமானது காதல் மிக மிக....ஆனால் அந்தப் படத்தில் மற்ற பாடல்களை ரசிக்க முடியாததால் இசைவட்டு வாங்குவதில்லை.
ஆறு பேரக் கூப்பிடனுமா? ஏற்கனவே எல்லாரும் போட்டுட்டாங்க...நான் கட்டக் கடைசீல வந்திருக்கேன். யாராவது தங்களை இன்னும் யாரும் கூப்பிடலைன்னு நினைக்கிறீங்களா? இதோ இராகவன் அழைக்கிறான் (இதெல்லாம் ஓவராத் தெரியல!) சரி. இதுவரை அழைக்கப் படாதா ஆறு நண்பர்கள் இதை அழைப்பா எடுத்துக்கிட்டு பதிவு போடுங்க.
அன்புடன்,
கோ.இராகவன்
Saturday, July 01, 2006
வாணி ஜெயராமிடம் சில கேள்விகள்
coffee with suchi என்ற நிகழ்ச்சியில் இந்த வாரம் வாணி ஜெயராம். தமிழகத்தின் சிறந்த பாடகிகளில் ஒருவர். வடக்கில் இவர் புகழ் பெற்று விடுவாரோ என்று அரசியல் செய்யப்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்ப் பெண். தமிழகம் அவரை அரவணைத்துக் கொண்டது. தென்னகம் நல்ல வழி தந்தது. எனக்கும் மிகவும் பிடித்த பாடகியும் கூட. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில அருமையான துளிகள்.
கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?
வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.
கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?
வாணி : மூனும் பிடிக்கும்.
கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....
வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.
கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?
வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?
நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.
அன்புடன்,
கோ.இராகவன்
கேள்வி: எம்.எஸ்.வியா? இளையராஜாவா?
வாணி: அப்படியெல்லாம் பாகுபாடு பாக்க முடியாது. ஆனா நிறையப் பாடுனது எம்.எஸ்.வி சார் கிட்டதான். என்னால என்ன முடிஞ்சதுன்னு தெரிஞ்சு அதச் சிறப்பா ஊக்குவிச்சவர் அவர். I enjoyed working with him.
கேள்வி : ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல், bole re pappihara, மேகமே மேகமே. இந்த மூனுல ஒங்களுக்குப் பிடிச்சது எது?
வாணி : மூனும் பிடிக்கும்.
கேள்வி: பி.சுசீலா பாடல்களை விரும்பிப் பாடுவீங்களாமே. எங்களுக்காக ஒரு பாடல்....
வாணி: ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலைப் பாடுகிறார்.
கேள்வி: இப்ப இருக்குற இசையமைப்பாளர்கள் கிட்ட உள்ள குறை?
வாணி: குறையச் சொல்லக்கூடாது. நிறையத்தான் சொல்லனும். ஆனாலும் ஒரு குறையைச் சொல்லலாம். தமிழ் உச்சரிப்பு தெரியாதவங்களக் கூட்டீட்டு வந்து பாட வைக்காதீங்க. மும்பைல இருந்து கூட்டீட்டு வாங்க வெளிநாட்டுல இருந்து கூட்டீட்டு வாங்க. ஆனா தமிழ் தெரிஞ்சவங்களாக் கூட்டீட்டு வாங்க. பல பாட்டுகளைக் கேக்கவே முடியலை. தமிழ்க் கொலை பண்றாங்க. தமிழ் தெரியாதவங்கள வடக்க இருந்து ஏன் கூட்டீட்டு வாரீங்க? நம்மளக் கூப்புடுறாங்களா அவங்க?
நிகழ்ச்சியின் இடையிடையே அருமையாகப் பாடி மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் வாணி ஜெயராம். மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னால மலரல்லவோ........இதை தமிழகம் என்றும் மறக்காது.
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, June 30, 2006
தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை
முன்பு எப்பொழுதாவது நடக்கும். இப்பொழுது அடிக்கடி நடக்கிறது. அதுவும் இலங்கையில் உள்நாட்டுச் சூழ்நிலை கவலைக்கிடமாக இருக்கும் பொழுது.
இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற அக்கறையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இலங்கை அரசின் கைப்பாவைகள் இப்பொழுது தமிழக மீனவர்களையும் குறிவைத்து விட்டார்கள். இலங்கைக் கடற்படையைத்தான் சொல்கிறேன்.
ஒவ்வொரு நாளும் மீனவர்கள் சுடப்பட்டார்கள். ஆனால் நடவடிக்கை என்று ஒன்றும் இருக்காது. உடனே சர்வதேச எல்லை கில்லை என்று நியாயம் பேசுவதற்குப் படை திரண்டு வருவார்கள். ஆனால் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இலங்கையில் நமது தமிழ்ச் சகோதரர்களைக் கைகழுவியாகி விட்டது. தமிழகக் கடைக்கோடித் தமிழனையும் கைகழுவ என்ன காரணத்திற்குக் காத்திருக்கிறார்களோ!
என்னவோ வயிற்றெரிச்சல். :-( பனை மரத்துல தேள் கொட்டினாலும் தென்னை மரத்துல நெறி கட்டுதய்யா.
இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற அக்கறையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இலங்கை அரசின் கைப்பாவைகள் இப்பொழுது தமிழக மீனவர்களையும் குறிவைத்து விட்டார்கள். இலங்கைக் கடற்படையைத்தான் சொல்கிறேன்.
ஒவ்வொரு நாளும் மீனவர்கள் சுடப்பட்டார்கள். ஆனால் நடவடிக்கை என்று ஒன்றும் இருக்காது. உடனே சர்வதேச எல்லை கில்லை என்று நியாயம் பேசுவதற்குப் படை திரண்டு வருவார்கள். ஆனால் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இலங்கையில் நமது தமிழ்ச் சகோதரர்களைக் கைகழுவியாகி விட்டது. தமிழகக் கடைக்கோடித் தமிழனையும் கைகழுவ என்ன காரணத்திற்குக் காத்திருக்கிறார்களோ!
என்னவோ வயிற்றெரிச்சல். :-( பனை மரத்துல தேள் கொட்டினாலும் தென்னை மரத்துல நெறி கட்டுதய்யா.
Friday, June 23, 2006
சிறிய விபத்து
நண்பர்களே. இன்று மாலை அலுவலத்திலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் சிறிய விபத்து. குண்டும் குழியுமான சாலையில் பைக் சறுக்கித் தடுமாறி விழுந்து விட்டேன். பெரிய அடி அதுவுமில்லை. அணிந்திருந்த ஹெல்மெட் தன்னுடைய கடமையை மிகச்சரியாகச் செய்தது என்றால் மிகையில்லை. வலது தோள்ப்பட்டையில் வலி இருக்கிறது. எலும்பு முறிவு இல்லை.ஆனாலும் ஏதோ தசை முறிவு இருக்கலாம் என்று கருதி தொட்டில் கட்டியிருக்கிறார்கள். ரெண்டு மூனு வாரம் அப்படித்தான் இருக்க வேண்டுமாம். உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. பகிர்ந்து கொண்டேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, June 21, 2006
மயிலார் விரும்பிய ஐஸ்கிரீம்
"உன்னோட சென்னைக்கு வந்தாலும் வந்தேன். இப்பிடி வெயில்ல அலைய வெக்கிறயே!!!!" மயிலார் அலுத்துக்கிட்டாரு. மூனு மாசம் வேலைன்னு சென்னைக்கு வந்தா நமக்குத் தோதா கூடவே மயிலாரும் சென்னைக்கு வந்துட்டாரு. வெயில் அது இதுன்னு என்கிட்ட பொலம்புனாலும் ஊர் சுத்துறது குறையவேயில்லை.
அப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.
திடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். "அங்க பாரு"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா "Creamz"னு எழுதீருந்தது. "ஐஸ்கிரீம் கடை"ன்னு சொன்னேன்.
"அதுதான் எனக்குத் தெரியுமே"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா? அன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா..."ஏய்! அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே! இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா! இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க." இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..
ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.
"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"
"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"
நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.
அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"
"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே
"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.
"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.
"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"
இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."
"சரி. அப்ப அது ஒன்னு" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.
எனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.
அதுக்குள்ள ஐஸ்கிரீம வந்துருச்சு. பீச் ஜெல்லி ஜாம் ஜாமை மயிலார் முன்னாடி வச்சாங்க. அடுத்தது Banana Split. அதையும் மயிலார் முன்னாடியே வெச்சுட்டுப் போயிட்டாங்க அதக் கொண்டு வந்த ஐஸ்கிரீம்.

பீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.
அத்தோட விட்டாரா? "பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்." அவசரப்படுத்துனாரு.
"ஹலோ! நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை." எனக்கும் கடுப்பு.
"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு." சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.
அன்புடன்,
கோ.இராகவன்
அப்படித்தான் அன்னைக்கு ஸ்டெர்லிங் ரோட்டுல இருந்து நேரா வண்டிய விட்டு சேத்துப்பட்டுக்குள்ள நுழைஞ்சேன். கூடவே இவரும் வர்ராறே. வழியில பன்றிமலைச் சித்தர் ஆசிரமத்தப் பாத்துட்டு அங்க வேற போகனும்னு அடம். ஒரு வழியா சமாதானப் படுத்திக் கூட்டீட்டுப் போனேன். ஆனா வெயில் வெக்கை சூடுங்குற பொலம்பல் குறையல.
திடீர்னு நிப்பாட்டுன்னு கத்துனாரு. படக்குன்னு பைக்க ஓரமா ஒதுக்குனேன். "அங்க பாரு"ன்னு மயிலார் தோகையக் காமிச்ச எடத்துல பாத்தா "Creamz"னு எழுதீருந்தது. "ஐஸ்கிரீம் கடை"ன்னு சொன்னேன்.
"அதுதான் எனக்குத் தெரியுமே"ன்னு சொல்லிக்கிட்டே உள்ள நுழைஞ்சிட்டாரு. நான் வண்டிய ஸ்டாண்ட் போட்டு நிப்பாட்டீட்டு உள்ள ஓடுனேன். சொல்லாமக் கொள்ளாம உள்ள ஓடலாமா? அன்னைக்கு இப்பிடித்தான் சென்னை சிட்டி செண்டருக்குக் கூட்டீட்டுப் போனா..."ஏய்! அந்தா பாரு கோலங்கள்ள வில்லனா வர்ராரே! இந்தா பாரு செல்வி நாடகத்துல இந்தப் பொண்ணு நடிக்கிதே. அடடா! இவங்கதான ஐஸ்வர்யா ராய்க்கு அம்மாவா ஜீன்ஸ்ல நடிசாங்க." இப்பிடிப் பட்டியல் போடுறாரு. என்னோட கண்ணுல ஒன்னும் தெரிய மாட்டேங்குது. இவரு என்னன்னா இத்தன பேரப் பாத்துட்டு எனக்கும் காட்டுறாரு. ம்ம்ம்..
ஐஸ்கிரீம் கடைக்குள்ள ஏற்கனவே அவரு கைல ஒரு மெனு கார்டு குடுத்திருக்காங்க. அதப் பெரட்டிப் பெரட்டிப் பாத்துக்கிட்டு இருக்காரு. நான் வந்து உக்காந்ததும் ஒரு ஐட்டத்தைக் காமிச்சி என்னன்னு கேட்டாரு.
"இது பீச் அண்டு ஜெல்லி ஜாம் ஜாம்"
"என்னது பீச்சா? இங்க எங்க பீச் இருக்கு? மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோப் போகனுமா? இல்ல ECRல அப்படியே ஜாலியாப் போகனுமா?"
நக்கலப் பாத்தீங்களா? "இது peach. beach இல்ல"ன்னு வெளக்கம் சொல்லீட்டு சும்மாயிருந்தேன்.
அவரு சும்மாயிருக்கனுமே! "ஒனக்கு என்ன பிடிக்கும்?"
"இப்பிடியேப் போனா பைத்தியம் பிடிக்கும்" எனக்கு மட்டும் கடிக்கத் தெரியாதா? ஹே ஹே
"இப்பவே அப்படித்தான இருக்கு. இனிமே எங்க பிடிக்கிறது?" மயிலாரு நக்கல்தான். சொல்றதையும் சொல்லீட்டு "ஒனக்கு என்ன ஐஸ்கிரீம் பிடிக்கும்"னு கேட்டாரு.
"எனக்கு Banana Split ரொம்பப் பிடிக்கும்" உண்மையிலேயே எனக்குப் பிடிக்கும்.
"Banana-னா வாழப்பழந்தான? அதுல என்ன பிடிக்கும்?"
இவருக்கு எல்லாத்தையும் வெளக்கு வெச்சுத்தான் வெளக்கனும். "Banana Splitனா வாழப்பழத்தக் கீறி நடுவுல ஐஸ்கீரீமப் பிழிஞ்சி, அதோட தலையில சாஸ்கள ஊத்திக் குடுக்குறது. ரொம்ப நல்லா இருக்கும்."
"சரி. அப்ப அது ஒன்னு" மயிலார் ஆர்டர் குடுத்துட்டாரு.
எனக்கு Baskin and Robbins ஐஸ்கிரீம்னா ரொம்பப் பிடிக்கும். அங்க மட்டுந்தான் Banana Splitக்கு என்ன ஐஸ்கிரீம்னு நம்மளே முடிவு செய்யலாம். அதுக்கு டாப்பிங்க்ஸ் கூட நம்மளே முடிவு செய்யலாம். ரொம்ப நல்லாயிருக்கும். பெங்களூர் கார்னர் ஹவுஸ் ஐஸ்கிரீம் கூட நல்லாயிருக்கும்.


பீச் துண்டுகள்ள ஒன்ன எடுத்து முழுங்குனதுமே அவரோட தோக படக்குன்னு விரிஞ்சிருச்சு. அப்படியே விடாம லபக் லபக்குன்னு ஐஸ்கீரீம் ரெண்டையும் ரெண்டு நிமிசத்துல முடிச்சிட்டாரு.
அத்தோட விட்டாரா? "பில் கட்டீட்டு வா. நேரமாச்சுல்ல. சீக்கிரம் சீக்கிரம்." அவசரப்படுத்துனாரு.
"ஹலோ! நான் இன்னமும் ஐஸ்கிரீம் சாப்பிடவேயில்லை." எனக்கும் கடுப்பு.
"அதுனால ஒன்னும் கொறஞ்சு போகாது. இங்கயே நேரத்த வீணடிக்காம படக்குன்னு கெளம்பு." சொல்லீட்டுப் படக்குன்னு கடைய விட்டு வெளிய வந்து ஜிவ்வுன்னு பறக்கத் தொடங்கீட்டாரு.
அன்புடன்,
கோ.இராகவன்
Sunday, June 11, 2006
பராசக்தி படத்துக்கு தடை
(அரசியல் நையாண்டி என்பது எழுத வேண்டும் என்று திடீர் ஆசை. தமிழக, இந்திய அரசியல்வாதிகளின் அன்றாட நகைச்சுவைப் பேச்சுகளுக்கும் செயல்களுக்கும் ஈடுகுடுத்து எழுதுவது யாருக்கும் கடினம்தான். ஆனாலும் ஒரு சிறு முயற்சி.)
தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.
இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.
இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.
இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.
தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.
ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.
இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.
இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.
இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.
இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.
கிண்டலுடன்,
கோ.இராகவன்
தமிழக அரசு பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது. பராசக்தி படத்தைத் தடை செய்வது காலத்தின் கட்டாயம் எனக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாம்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் வசனத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் பராசக்தி. இந்தப் படம் வெளிவந்த காலத்தில் மிகுந்த புரட்சிகரமானத கருதப் பட்டு இமாலய வெற்றி பெற்றது.
இந்தத் திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு தடை. இந்தப் படம் இப்பொழுது திரையரங்கில் ஓடினால் யாரும் வந்து பார்ப்பார்களா என்று சொல்ல முடியாது. ஆனாலும் இந்தப் படத்தின் உரிமைகள் சன் டீவியிடம் இருப்பது அனைவரும் அறிந்ததே. சன் டீவியினர் இந்தப் படத்தை அடிக்கடி ஒளிபரப்பு செய்வதும் அனைவரும் அறிந்ததே.
இந்தப் படத்திற்குத் தடை விதித்து அதைச் செயல்படுத்தும் படி மாவட்ட ஆட்சியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது. இன்றைய சூழ்நிலையில் இந்தத் திரைப்படத்தைத் திரையிடுவது என்பது பலருடைய மனதைப் புண்படுத்தும் செயலாக அமையும் என்று அரசாங்கம் நம்புகிறது. இதில் பலருடைய நம்பிக்கையைப் புண்படுத்தும் விதமாகக் கருத்துகள் சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் நாட்டில் ஆங்காங்கு கலவரம் உண்டாகலாம் என்று அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் நம்பிக்கையைப் புண்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் படத்தின் வசனங்கள் நிச்சயமாக ஆட்சேபனைக்குறியவை. பலரும் கடவுளாக நம்புகின்ற தெய்வத்தைப் பற்றி படத்தில் அவதூறு வசனங்கள் இருப்பதால் படத்தைத் தமிழக அரசு தடை செய்கிறது.
இதுதான் தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு மக்களிடையே ஆதரவும் எதிர்ப்பும் கலந்தே கிடைத்திருக்கிறது. ஏற்கனவே தணிக்கைக் குழு சான்றிதழ் கொடுத்த ஒரு திரைப்படத்தை இது போன்று தடை செய்வது முதல்வரின் ஒருதலைப்பட்சமான நிலையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது என்றும் பலர் கருதுகிறார்கள். ஆனால் படத்தை முதலில் தமிழகத்திலுள்ள மடாதிபதிகளிடம் போட்டுக்காட்டி அவர்கள் விருப்பப் படியே இது செய்யப் பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.
தணிக்கைக் குழு என்று ஒன்று இருக்கையில் மடாதிபதிகளிடம் படத்தை ஏன் காட்ட வேண்டும் என்றும் பலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இந்தப் படம் மக்கள் மனதை நிச்சயம் புண்படுத்தும் என்று பலர் கருதுகிறார்கள். முதலில் ஒரு மடாதிபதி உண்ணாவிரதம் தொடங்கியதாலேயே பிரச்சனை பெரிதானது. வலைப்பூக்களில் இதை ஆதரித்தும் எதிர்த்தும் ஏற்கனவே பல பதிவுகள் வந்து விட்டன.
ஆனால் இந்தத் தடையைத் தனது ஆட்சியேலே கொண்டு வந்து விட்டதாகவும் தேர்தல் கமிஷன் இதை வெளியில் சொல்லக் கூடாது என்று சொன்னதால் சொல்லவில்லை என்றும் ஜெயலலிதா அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். தேவையில்லாமல் இரண்டாம் முறை இந்தப் படத்தைத் தடை செய்வது கருணாநிதியின் ஏமாற்றுவேலை என்றும் அவர் சாடினார். தன் மீது கட்டவிழ்த்து விடப்படும் இது போன்ற அடக்குமுறைகளை கட்சியினரும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க மாட்டார்கள் என்று அவர் ஆவேசமாக முழக்கமிட்டார். அதைக் கேட்ட சிலர் அந்தப் பக்கமாக வந்த ஒரு லாரியைக் கொளுத்தினார்கள்.
இது குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது, "ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் என்ற வழக்கு உண்டு" என்று கூறினார்.
இதற்கிடையில் ஜெயா டீவியில் ரபி பெர்ணாட்டிற்கு பேட்டி அளித்த வைகோ, "இந்தப் படத்தத் தட பண்ணனுங்க. வெளியிட்டிருக்கவே கூடாதுங்க...அவ்வளவுதான்" என்றார்.
இந்தப் படம் தடை செய்யப்பட்டதால் இந்தப் படத்திற்கு திடீர் ஆதரவு பெருகியுள்ளது. அப்படி என்னதான் இருக்கிறது என்று அறிய மக்கள் திருட்டு வீசிடிகளை வாங்கிப் பார்க்கிறார்கள். இதனால் பர்மா பஜார், சிங்கப்பூர் பஜார் மற்றும் அனைத்துத் தமிழக திருட்டு வீசீடி விற்பனையாளர்களும் தமிழக அரசிற்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். பிரிண்ட் சரியில்லாவிட்டாலும் படம் லேசுமாசாகத் தெரிவதால் மக்களும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள்.
இந்தத் தடையைப் பற்றிக் கதாசிரியர் கருணாநிதியிடம் கேட்ட பொழுது அவர் நாதழுதழுத்து விட்டதாகத் தெரிகிறது. பராசக்தி தமிழ்ப் பண்பாட்டின் சின்னம். இதைத் தடை செய்வது சரியல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்தார். தமிழனுக்குச் சூடு இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார். அவர்தானே தடை செய்தது என்ற கேள்விக்கு, "அது வேறு. இது வேறு. தடை செய்தது முதல்வர் கருணாநிதி. அதை எதிர்ப்பது கதாசிரியர் கருணாநிதி" என்று விளக்கமாக தெரிவித்தார்.
கிண்டலுடன்,
கோ.இராகவன்
Friday, June 09, 2006
14. தூத்துக்குடி வழியா பெங்களூர்
திருச்செந்தூர்ல மொட்ட போட்டுட்டு முருகனைக் கும்பிட்டுட்டு பனங்கெழங்கு வாங்கிக்கிட்டு தூத்துக்குடிக்குப் பஸ் ஏறுனோம். அங்கயிருந்துதான பெங்களூருக்கு டிரெயின். வீரபாண்டியன் பட்டணம், காயல்பட்டணம், ஆத்தூரு வழியா தூத்துக்குடி. வழியில ஆறுமுகநேரியும் உண்டு. அதுதான் வலைப்பூ தாணு பொறந்த ஊர். அதச் சொல்லலைன்னா அவங்க கோவிச்சுக்குவாங்களே.
வழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.
வெயிலுக்குத் தண்ணி காஞ்சி பாத்தியெல்லாம் வெள்ள வைரங்களா உப்புக்கல்லுக ஜொலிக்கும். அதுல நடக்க முடியாது. கால்ல குத்தும். ரப்பர் ஷீட் மாதிரி காலணி போட்டுக்கிட்டுதான் அதுல எறங்க முடியும். வெயில் பட்டு பளீர்னு வெளிச்சம் மூஞ்சீல தெறிக்கும். ஒரு பெரிய சொரண்டி வெச்சுக்கிட்டு உப்பச் சொரண்டிச் சொரண்டி பாத்தி வரப்புல அள்ளிப் போடுவாங்க. அதுவேற அங்கங்க சின்னச் சின்ன மலையாட்டம் குமிஞ்சிருக்கும். பாக்க அழகோ அழகு. இந்த உப்பையெல்லாம் சேகரஞ் செஞ்சி பெரிய மலையாப் போட்டுருப்பாங்க. மழ பெஞ்சிரக் கூடாது. அப்புறம் எல்லா உப்பும் கறைஞ்சு போகும். அதுனால அந்தக்காலத்துல பனையோலைகளைப் போட்டு மூடி வெச்சிருப்பாங்க. இப்பெல்லாம் தார்ப்பாயி பாலீத்தீன் ஷீட்டுன்னு போட்டு மூடுறாங்க.
அதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தையும் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.
அங்க தேங்கா பன் வாங்குனோம். தூத்துக்குடிக்காரங்க கிட்ட தேங்காபன்னுன்னாப் போதும். அவ்வளவு பிரபலம். பன்னுதான். வட்டமா மாவ உருட்டி அதுக்கு நடுவுல தேங்காயும் ஜீனியும் கலந்து வெச்சு மடிச்சு பன்னாச் சுட்டு எடுத்தா....ஆகா.....ஆகா...ம்ம்ம்ம்ம்...
மணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.
பேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா? கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா!
அப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். "ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து."
அவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.
முற்றும்.
வழியெல்லாம் நான் சின்னப்புள்ளைல பாத்த மாதிரி வீடுக. எக்கச்சக்கமா கொசுவத்திச் சுருள்கள் (அதாங்க flashback). தூத்துக்குடிய நெருங்க நெருங்க உப்பளங்க. வெள்ள வெளேர்னு பாத்தி பாத்தியாக் கண்ணப் பறிக்குது. பாத்தி கட்டி அதுல தண்ணியத் தேக்கி உப்பு வெள்ளாம பண்றது தூத்துக்குடீல பெரிய தொழிலு.

அதெல்லாம் அப்பிடியே பாத்துக்கிட்டு ஸ்பிக் நகர் வழியா தூத்துக்குடிக்குள்ள நுழைஞ்சோம். பஸ்சு புதுக்கிராமம் வழியாப் போகும். அங்கதான் என்ன வளத்த அத்தயும் மாமாவும் இருக்காங்க. நண்பர்களோட அங்க போறதா திட்டம். ஆனா ரொம்ப நேரமாயிட்டதால அவங்கள நேரா ஸ்டேஷனுக்குப் போகச் சொல்லீட்டு நா மட்டும் புதுக்கிராமத்துல எறங்குனேன். அத்தையும் மாமாவையும் பாத்து பத்து நிமிஷம் பேசீட்டு அத்தைக்கு எடுத்த சேலையக் குடுத்துட்டுக் கெளம்பினேன். எனக்குன்னு வாங்கி வெச்சிருந்த கருப்பட்டிச் சேவு, மிக்சரு, காராச்சேவெல்லாம் பெரிய பைல போட்டுக் குடுத்தாங்க. நானும் மறுக்காம வாங்கிக்கிட்டு ஸ்டேஷனுக்கு ஓடுனேன்.

மணியாச்சி, கோயில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் வழியா மதுரைக்கு வந்து சேந்தது வண்டி. ஒரு வெள்ளைக்காரனும் காரியும் ஏறுனாங்க. எங்க பக்கத்துலயே வந்து உக்காந்தாங்க. அவங்ககிட்ட பேச்சுக் குடுத்தோம். அவங்களும் சங்கோஜம் இல்லாமப் பழகுனாங்க. அவருக்கு 24 வயசும். அந்தப் பொண்ணுக்கு 26 வயசும். ஆனா நாங்கள்ளாம் பாக்க சின்னப்பசங்களாத் தெரிஞ்சோம். நல்ல உயரம். நல்ல விரிஞ்ச கட்டுடம்பு. ரெண்டு பேருக்குந்தான்.
பேச்சு வாங்குல நாங்க என்ன பண்றோம்னு கேட்டாங்க. நான் சாஃப்ட்வேர்ல மேனேஜரா இருக்கேன். இவன் Siemensல இருக்கான். இவன் IBM. இப்பிடிக் கம்பெனி கம்பெனியாச் சொன்னா...அவன் ஓன்னுட்டான். நம்ம என்ன பண்றோம்னு கேட்டுட்டாங்களே. நம்ம திரும்பிக் கேக்க வேண்டாமா? கேட்டுட்டோம். அவங்க ஒரு பார்ல வேல பாத்தாங்களாம். இப்ப அந்த வேலைய விட்டுட்டு இந்தியாவச் சுத்திப் பாக்க வந்திருக்காங்களாம். ஊருக்குப் போய் என்ன திட்டம் வெச்சிருக்காங்கன்னு கேட்டோம். மசாலா டீதான் இப்போ லண்டன்ல பிரபலமாம். அதுக்கு ஒரு கட போடத் திட்டம் வெச்சிருக்காங்களாம். அடடா!
அப்ப நான் ஒரு பேச்சு சொன்னேன். "ஐயா, நீங்க இந்த மாதிரி வேலைல பெருசு சிறுசுன்னு பாக்காமச் செய்றீங்க. ஆனாலும் பாருங்க உங்களால உலகம் சுத்த முடியுது. அதுக்கு உங்களோட ஆர்வமும் நல்ல காரணம். நாங்க பெரிய பெரிய கம்பெனில வேலை பாக்குறோம். ஆனாலும் உலகம் சுத்திப் பாக்குறதுங்குறது கூட கம்பெனி செலவுல போனாத்தான். சம்பாதிக்கிறது, சேத்து வெக்கிறது, வீடு கட்டுறது, பிள்ளைகளுக்குக் குடுக்குறதுன்னே நாங்க செய்றோம். சம்பாதிக்கிற பணத்தை இன்னும் பயனுள்ளதாச் செல்வழிக்க எங்களுக்கு இன்னும் தெரியனும். அதுவுமில்லாம வேலைல சின்ன வேலை பெரிய வேலைன்னெல்லாம் நாங்க நெறைய பாக்குறோம். அதுவும் மாறனும். ஆனாலும் உழைப்புங்குற ஒன்னு எங்கள வாழ வைக்குது. அதுதான் எங்க சொத்து."
அவரும் நாங்க கொடுத்த உளுந்து பக்கோடாவ மென்னுக்கிட்டு (மதுரைக்கார நண்பனோட அம்மா கொண்டு வந்து ஸ்டேஷன்ல குடுத்தாங்க) தலையத் தலைய ஆட்டுனாரு. பிரியாணிதான் ரெண்டு பேரும் வாங்கிச் சாப்பிட்டாங்க. அதுவும் ஸ்டேஷன்ல வாங்கீருந்தாங்க. ரொம்ப நல்லாப் பழகுனாங்க. நாங்களும் நல்லாப் பேசீட்டுத் தூங்கீட்டோம். அடுத்தநாள் காலைல பெங்களூர் கண்டோன்மெண்ட்டுல எறங்கீட்டு டாட்டா சொன்னோம்.
முற்றும்.
Sunday, June 04, 2006
13. எனக்கும் ஒரு கனவு உண்டு
மயிலார் யாருன்னு ஒங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதில்லை. நான் கொஞ்சம் துணுக்கமா உக்காந்திருந்தப்போ வந்து பக்கத்துல உக்காந்தாரு. அவர் வந்ததே எனக்குத் தெம்பா இருந்தது. பக்குன்னு கண்ணத் தொறந்து என்னைத் தயாராக்கிக்கிட்டேன். அதுக்குள்ள காணிக்கை உதவியாளரு அலுமினியச் சட்டீல இருந்த தண்ணிய எடுத்து தலைய நனைச்சாரு. மூச்சியெல்லாம் தடவுனாரு. முருகன் கிட்ட பொறுப்பை ஒப்படைச்சிட்டு நான் அமைதியா இருந்தேன்.
கத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.
முடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா? நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்?
கோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா? அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.
போன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா "இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு?
அப்படியொரு நெலம இங்கயும் வந்துறக்கூடாதேன்னுதான் மொதல்ல எனக்கு அந்தத் துணுக்கம் வந்துச்சி. அதையெல்லாம் தூள்த்தூளாக்கி எல்லாத்தையும் அமைதியா நடத்திக் கொடுத்த உதவியாளருக்கு நான் கூடக் குடுக்கக் கூடாதா சொல்லுங்க?
வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.
ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.
இதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்லபடியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.
ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.
இங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா? தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.
சொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......
http://en.wikipedia.org/wiki/Psoriasis
அன்புடன்,
கோ.இராகவன்
கத்தியத் தலைல வெச்சு ஒரு இழு இழுத்தாரு. சரக்குன்னு சின்னச் சின்னத் தடுக்கல்களோட ஒரு கொத்து முடி மடியில விழுந்துச்சு. அதுவரைக்கும் கலகலன்னு பேசிக்கிட்டிருக்குற நண்பர்கள் அமைதியாயிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா முடியெல்லாம் வழிஞ்சி கீழ விழுக விழுக நான் உறுதியானேன். மயிலார் துணையா இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல்.
முடிய வழிச்சவரு ஒரு நல்ல காணிக்கை உதவியாளர். ஒன்னும் சொல்லலை. முடிச்சதும் கைல ஏற்கனவே நான் எடுத்து வெச்சிருந்த இருபது ரூபாயக் கொடுத்தேன். ஏன் குடுத்தேன்னு கேக்குறீங்களா? நன்றிதான். ஏற்கனவே காசு கெட்டி மொட்டச் சீட்டு வாங்கீருக்கிறப்ப அவருக்கு நான் எதுவும் குடுக்கனும்னு கட்டாயமில்லை. ஆனா நான் குடுத்தேன். ஏன்?
கோயில்பட்டிக் கதிரேசன் கோயில் ஐயரைப் பத்தி முந்தி எழுதீருந்தேனே...நினைவிருக்கா? அவரோட ஒடம்புல செதிலா வர்ர சோரியாசிஸ் பத்தி. அது அவருக்கு மட்டுமில்ல. எனக்கும் உண்டு. தலையில சொரியாசிஸ் இருக்குறப்போ பல பிரச்சனைகள் உண்டு. குறிப்பா முடி வெட்டிக்கப் போகுறப்போ ஒரு தாழ்வுணர்ச்சி வரும். நம்ம தலையப் பாக்குற முடி வெட்டுறவரு என்ன நெனப்பாரோருன்னு.
போன வாட்டி நான் திருத்தணியில மொட்ட போட்டப்போ அப்பா அந்த உதவியாளருக்குக் கூடக் காசு குடுத்தாரு. ஆனா அந்த உதவியாளர் அது போதாதுன்னு கூடக் கேட்டாரு. அவரு கேட்டது பெருசில்லை. ஆனா "இந்தத் தலைக்கே நீங்க இவ்வளவு குடுக்கனும்"னு சொன்னாரு. அதுவுமில்லாம மொட்டை எடுக்கும் போது நூறு நொரநாட்டியம் சொல்லிக்கிட்டே இருந்தாரு. என்னோட மனசுல அது பதிஞ்சிட்டாலும் நான் கோவிச்சிக்கலை. அதையெல்லாம் நான் கேக்குறதுதான் முருகனோட விருப்பம்னு ஏத்துக்கிட்டேன். ஆனா கூடவே இருந்த அப்பா அம்மா மனசு?

வாழ்க்கையில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமாக் கனவுண்டு. கோடிக்கோடியாச் சம்பாதிக்கிறது. நிலபுலனா வாங்கிப் போடுறது. பல பொண்டாட்டி கட்டுறது. நெறையப் பிள்ளைக பெத்துக்கிறது. கட்டிடமாக் கட்டுறது. கொல பண்றது. கொள்ளையடிக்கிறது. பதவிக்கு வர்ரது. இப்பிடியெல்லாம் இருக்கும் போது எனக்கும் ஒரு கனவு உண்டு.
ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தொடங்கனும்னு. அதுல சொரியாசிஸ் மற்றும் பல தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆராய்ச்சி செய்யனும். அத்தோட சொரியாசிஸ்காரங்க முடி வெட்டிக்கிறதுக்கும், மத்த பல காரியங்களுக்கும் அங்க வசதி செஞ்சிக் குடுக்குறது. உடம்புல சொரியாசிஸ் இருக்குறவங்க பொது இடங்கள்ளயோ நீச்சல் குளங்கள்ளயோ குளிக்க முடியாது. நட்சத்திர ஓட்டல்ல கூட நீச்சல் குள அனுமதி தரமாட்டாங்க. அவங்களுக்கு நீச்சல்குளம். நீராவிக்குளியல் இடம். இன்னும் பல வசதிகள் செஞ்சி ஒரு நிலையம் தொடங்கனும். அப்புறம் அதை ஊரூருக்குக் கொண்டு போகனும்.
இதவிட முக்கியமா ஒரு கவுன்சிலிங் செண்டர். அதாவது இந்த நோய்க்காரங்க மொதல்ல மனசாலதான் ரொம்ப பாதிக்கப்படுறாங்க. அவங்க பொதுவாழ்க்கையே போச்சுன்னு. நானும் மொதல்ல அப்படித்தான் இருந்தேன். ஆனா முருகன் புண்ணியத்துல நல்லா கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சிருக்கேன். வாழ்க்கை முறைய கொஞ்சம் மாத்தி அமைச்சிக்கிட்டா நல்லபடியா சந்தோஷமா இருக்கலாம். இதெல்லாம் எடுத்துச் சொல்ல நிபுணர்கள். இப்பிடிப் போகுது என்னோட கனவு.
ஆனா இதெல்லாம் எப்படிச் செய்றது? நான் டாக்டரும் கிடையாது. கோடீஸ்வரனும் கிடையாது. நெறைய விவரம் தெரிஞ்சவனும் கெடையாது. ஆனா நம்பிக்கை இருக்கு. முருகன் என்னோட கனவை நிறைவேத்தி வெப்பான். அதுக்கு வேண்டிய முயற்சிகளை நான் எடுத்தா அவன் ஒவ்வொரு முயற்சியையும் திருவினையாக்குவான்.
இங்க நெறைய பலதரப்பட்ட துறையில இருந்து ஆட்கள் இருக்கீங்க. இந்த மாதிரி விஷயங்கள்ள உங்களுக்கு நிறைய தெரிஞ்சிருக்கலாம். இந்தக் கனவு நனவாகுறதுக்கு உங்களால ஏதாவது உதவ முடியுமா? தனிப்பட்ட முறையில தொடர்பு கொள்ள நினைக்கிறவங்க என்னோட gragavan at gmail dot comக்கு மெயில் அனுப்புங்க. உங்களத் தொடர்பு கொள்ளவும் நான் தயார்.
சொரியாசிஸ் பத்தித் தெரிஞ்சிக்கிறதுக்குக் கீழ இருக்குற சுட்டிகளைப் பாருங்க......
http://en.wikipedia.org/wiki/Psoriasis
அன்புடன்,
கோ.இராகவன்
Thursday, June 01, 2006
12. கடற்கரை தாகம் இதுதான்


நேரா கடல்ல போய் நின்னு விளையாண்டோம். விளையாட விளையாட நான் கடலோட ஒன்றிப் போயிட்டேன். Hallucination அப்படீன்னு இங்கிலீஷ்ல சொல்வாங்களே...அந்த மாதிரி...கடல் நம்மோட உறவாடுற மாதிரி. உண்மையச் சொல்லப் போனா...என்னோட உள்ளத்த அமைதியாக்கி அதுல மெத்துன்னு ஒரு இன்பத்தக் கடல் கொண்டு வந்துச்சு. அது ஒரு ஒட்டுதல் தானே. நான் வேணுக்குன்னே கொஞ்சம் பின்னால் வந்து "இப்ப என்னத் தொடு பாக்கலாம்னு" சொன்னேன். அலையும் துள்ளிக்கிட்டு வந்து தொட்டுருச்சு. அடன்னு சொல்லிக்கிட்டு இன்னும் கொஞ்சம் பின்னுக்கு வந்து...இப்ப பாக்கலாம்னேன். பாருங்க...அல வந்துருச்சு.....மறுபடியும் பின்னால....அதுவும் வருது....இப்பிடியே நாங் கொஞ்ச தூரம் வந்துட்டேன். அலயும் வந்துட்டுது.
அங்க ரெண்டு நண்பர்கள் மண் வீடு கட்டிக்கிட்டிருந்தாங்க. நம்ம கூட வந்த பயகதான். இப்பக் கொஞ்சம் குரூரமா நெனச்சது மனம். இப்பத் தொடுன்னு கடல் கிட்ட சொன்னேன். அப்ப அந்த மண் வீடும் அழிஞ்சிரும்ல. ஆனா பாருங்க கடல் வரல. நான் கடைசியா நின்ன எடம் வரைக்கும் வந்துக்கிட்டிருக்கு. அதுவரைக்கும் முன்ன வந்த கடல் அதுக்கப்புறம் வரவேயில்லை. எனக்குன்னா ஒரு மாதிரி ஆயிருச்சு. இந்தப் பயக படக்குன்னு வீட்டக் கட்டி முடிக்கிறான்களான்னா...அதுவும் இல்லை. நடுவுல கூம்பு எழுப்பிச் சுத்துச் சொவர் வெச்சி ஒரு வாசல் வெச்சின்னு போய்க்கிட்டே இருக்காங்க. ஒரு அஞ்சு பத்து நிமிசங் கழிச்சி திருப்தியோட அடுத்த எடத்துக்குப் போயிட்டாங்க. எனக்கு இப்பக் கடல் மேலக் கோவம் இல்லாட்டியும் லேசான வருத்தம். இதுவரைக்கும் கூட விளையாண்டியே...இப்ப விளையாடலையேன்னு....அவனுக எந்திரிச்சிப் போனதுமே கடல் படக்குன்னு வந்து வீட்டத் தட்டி விட்டுட்டு என்னத் தொட்டிருச்சி. எனக்கு ஒரு நிமிசம் ஒரு சிலிர்ப்புச் சந்தோசம்.
இதெல்லாம் தற்குறிப்பேற்றல்னு இலக்கியம் படிச்சவங்க சொல்லீருவாங்க. மூடநம்பிக்கைன்னு பகுத்தறிவாளருங்க சொல்லீருவாங்க. ஆனா கடல் எனக்கு ஒரு பாடம் சொன்னதாகவே எனக்குத் தோணிச்சு. மொதல்ல கூப்பிட்டப்ப என்னோட விளையாடக் கூப்பிட்டேன். அதுனால அது வந்துச்சு. அடுத்தடுத்து அப்பிடித்தான். ஆனா அந்த வீட்ட இடிச்சிக்கிட்டு வந்து தொடுன்னு சொன்னது தப்பு. அதுவும் அவங்க கட்டிக்கிட்டு இருக்குறாங்க. அப்பவே வந்து ஒடச்சா அவங்க மனசு வருத்தப்படும். அதுனாலதான் தப்பா நெனைச்ச என்னக் கொஞ்ச நேரம் காக்க வெச்சிக்கிட்டு அவங்க முடிச்சிட்டுப் போனப்புறம் என்னத் தொட்டுச்சி. ஆகையால எதையும் நல்லதுக்கே நெனைக்கனும்னுங்குறதுதான் எனக்குச் சொன்ன பாடம்னு எடுத்துக்கிட்டேன். இத எவ்வளவு தூரம் நான் பின்பற்றுவேன்னு தெரியலை. ஆனா முடிஞ்ச வரைக்கும் பின்பற்றனும்.
மேலெல்லாம் மண்ணாக்கிட்டு ரூமுக்குள்ள நுழைஞ்சோம். இன்னொரு குளியல் போட்டுட்டுத் தூங்கினோம். காலைல எந்திரிச்சி மொட்டையெடுக்கனுமே. சீக்கிரமா எந்திரிச்சிக் கோயிலுக்குப் போகலாம்னு நெனச்சோம். ஆனா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு வேளைக்கு எந்திரிச்சி நேரமாயிருச்சி. சரீன்னு குளிக்காம பல்லு மட்டும் வெளக்கீட்டு மொட்டை எடுக்கக் கெளம்புனோம்.
தனியாப் போறப்ப மொட்டை எடுக்க நம்மளே சீட்டு வாங்கிக்கிரலாம். ஆனா ஆளம்போட போகும் போது கூட வந்தவங்க மொட்டச் சீட்டு வாங்குனாத்தான் ஒரு உரிமை. போன வாட்டி இப்பிடி ஊர் சுத்தப் போனப்போ ஒரு நண்பன் மொட்டை போட்டான் சுவாமிமலைல. அவனுக்குச் சீட்டு வாங்கினேன் நான். இந்த வாட்டி அவன் எனக்கு வாங்குனான்.
திருச்செந்தூர்ல கடக்கரைல நாழிக்கிணத்துக்குப் பக்கத்துல இருக்கு முடிக்காணிக்கை மண்டபம். எப்பவும் ஆளுங்களப் பாக்கலாம். சுத்துப் பக்கத்து ஊர்க்காரங்க மட்டுமில்லாம எல்லாப் பக்கத்துல இருந்தும் திருச்செந்தூர் வந்து முடிக்காணிக்கை செலுத்துவாங்க. முருகன் மேல அவ்வளவு பாசம்.
நாளைக்கு வளரப் போற முடியக் குடுக்குறதா பெரிய விஷயம்னு சொல்லலாம். ஆனால் அதில்லை அதோட உட்கருத்து. நம்ம தோற்றத்த எடுப்பாக் காட்டுறதுல முடி முக்கியப் பக்கு வகிக்குது. அந்த முடி போகும் போது தோற்றத்துல ஒரு குறைவு வருதில்லையா. அந்தக் குறைவை ஏத்துக்கிற மனப்பக்குவம் தேவை. அதாவது கர்வம் பங்கப்படுதா இல்லையா! ஆணவம் கொறையுது பாத்தீங்களா! அது எல்லாருக்கும் தேவையானது. ஆணவம் எங்க கொறயுதோ..அங்க நல்ல எண்ணம் வரும். பல பேரு வேண்டுதலைக்குத் தலையக் குடுத்தாலும் முடிய வழிக்கும் போது ஒரு ஆணவ அழிப்பு நடக்குறது உண்மைதான்.
நானும் காணிக்கை செலுத்த உதவுற ஒருத்தருக்கு முன்னாடி இருக்குற பலகைல உக்காந்தேன். சீட்டையும் அதோட குடுத்த அரப்பிளேடையும் கொடுத்தேன். அவரு பிளேடை செட்டுல மாட்டுனாரு. நான் கண்ணை மூடி மனசுக்குள்ள முருகான்னு சொன்னேன். உள்ள சின்னத் துணுக்கு. ஏன் துணுக்கு? அப்ப படக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்தாரு மயிலாரு.
தொடரும்.
Monday, May 29, 2006
11. பட்டுச் சேலைக் காத்தாட
திருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரியும்.
அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.
சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.
மொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப்பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.
அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.
ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.
வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.
இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!
காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.
ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.
முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.
திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.
தொடரும்....
அன்புடன்,
கோ.இராகவன்
அதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.
சரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.

அதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட! சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.
ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.
வெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.
இசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா! ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே!
காந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.
ஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.
முந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிடிச்சோம்.
திருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.
தொடரும்....
அன்புடன்,
கோ.இராகவன்
Sunday, May 28, 2006
10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்
ஏற்கனவே நான் சங்கரங்கோயில் பிரியாணி பத்திச் சொல்லியிருந்தேன். அதுனால அதச் சாப்பிடனும்னு குறியா இருந்தேன். மொதல்ல இருந்தே நண்பர்கள் கிட்ட அதப் பத்திச் சொல்லியிருந்தேன்.
ஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.
அதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.
சங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.
கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.
கிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.
கோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.
"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.
இன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். "ராகவா! நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா! (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"
நானும் விடலை. "சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)"
இதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.
ஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.
அப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.
அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......
தொடரும்....
அன்புடன்,
கோ.இராகவன்
ஆனா எங்க குளுவுல சைவமும் அசைவமும் சரி பாதி. அதுல ஒரு அசைவக்காரனும் கோயில் கோயிலாப் போறதால சைவமாயிருந்தான். யார் வர்ராங்களோ வரலையோ நான் போறதா முடிவு கட்டீருந்தேன்.
அதுனால வண்டிய நேரா பிரியாணி ஓட்டலுக்கு ஓட்டச் சொன்னேன். டிரைவர் கோயில்பட்டிக்காரர். அவருக்குக் கடை நல்லாத் தெரிஞ்சிருந்தது. ஆனா எல்லாரும் வண்டிய அங்க விடக்கூடாதுன்னு சொன்னாங்க. எல்லாரும் சாப்பிடுற மாதிரி ஓட்டலுக்குப் போகனும்னு சொன்னாங்க.
சங்கரங்கோயில்ல சைவச் சாப்பாடு அவ்வளவு நல்லாயிருக்காது. அரமணி பொறுத்துக்கோங்க. திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கித்தர்ரேன். ஒரு அஞ்சு நிமிசம் கொடுத்தா நான் பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறமா நேரா திருநெல்வேலி போலாம்னு சொன்னேன்.
கேட்டாத்தானே. அதெப்படி. இவ்வளவு பெரிய கோயில் இருக்கு. இங்க சைவச் சாப்பாடு கிடைக்காதான்னு ஒருத்தன் கேட்டான்.
கிடைக்கும். ஆனா அவ்வளவு நல்லாயிருக்காது. திருநெல்வேலிக்குப் போயிரலாம்னு சொன்னா அவனுக்குப் புரியலை.
கோயிலுக்கு வந்துருக்குறப்ப ஏன்டா இதெல்லாம்....நாளைக்கு மொட்டையெல்லாம் போட்டுட்டு அப்புறமா சாப்பிடலாம். இன்னைக்கே இன்னொரு கோயிலுக்குப் போகனும்னு இன்னொருத்தன் சொன்னான்.
"ஒங்கள நான் சாப்பிடச் சொல்லல. அதே வேளைல என்னோட சாப்பாடு வழக்கத்துல யாரும் தலையிடாதீங்க. நான் இங்க நேரமாக்க மாட்டேன். அஞ்சே நிமிசம். பார்சல் வாங்கிக்கிறேன். அப்புறம் நேராத் திருநெல்வேலிதான். அங்க நல்ல ஓட்டலுக்கு ஒங்களக் கூட்டீட்டுப் போறேன்"னு சொன்னேன். ஒருத்தனும் கேக்கலை.
இன்னொருத்தன் வேற மாதிரி ஆரம்பிச்சான். "ராகவா! நீனு பர்லில்லாந்தரே நமகெல்லாம் ஊட்டா பேடா...நாவு ஏனு தினல்லா! (ராகவா நீ வரலைன்னா எங்களுக்கெல்லாம் சாப்பாடு வேண்டாம். நாங்க எதுவும் திங்க மாட்டோம்.)"
நானும் விடலை. "சரி. நீவேனு தின பேடா. நானு தின பேக்கு. நீவெல்லா இல்லிரி. நானு ஹோகி பர்த்தினி. (சரி. நீங்க ஒன்னும் திங்க வேண்டாம். நான் திங்கனும். நீங்கள்ளாம் இங்கயே இருங்க. நான் போயிட்டு வர்ரேன்.)"
இதென்னடா வம்பாப் போச்சுன்னு எல்லாரும் முழிக்கிறாங்க. சரீன்னு பேசி ஒரு முடிவுக்கு வந்தோம். அவங்கள அங்கயே ஒரு சைவ ஓட்டல்ல எறக்கி விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் பிரியாணி திங்கப் போறதுன்னு.
ஒரு ரொம்பச் சுமாரான ஓட்டல் (அதுதான் அங்க ரொம்பப் பிரமாதம்) ஒன்னுல அவங்கள விட்டுட்டு நானும் இன்னொருத்தனும் போயி பிரியாணிய வெட்டுனோம். திருப்தியா முடிச்சிட்டு வந்தா இங்க ஒவ்வொருத்தனும் பேருக்குத் தின்னு வெச்சிருக்கானுக. ஒன்னும் சரியில்லை போல. எல்லாரும் ஒரு அர மணி நேரம் பொறுத்திருந்தா திருநெல்வேலீல நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுத்திருப்பேன். எல்லாம் தலையெழுத்து. சாப்பாடு சரியில்லைன்னு ஒரே புலம்பல். அவங்கள எல்லாரையும் திருநெல்வேலீல மொதல்ல நல்ல எடத்துக்குக் கூட்டீட்டுப் போறேன்னு உறுதி சொன்னேன்.
அப்புறம் நேரா வண்டீல ஏறித் திருநெல்வேலி போனோம். வழியில நெறைய காற்றாலைகள். எக்கச் சக்கமா சுத்திக்கிட்டு இருந்தது. அதையெல்லாம் பாத்துக்கிட்டே திருநெல்வேலி ஜங்சன் வந்து சேந்தோம். நேரா எல்லாரையும் அரசனுக்குக் கூட்டீட்டுப் போயி ஐஸ்கிரீம், மில்க் ஷேக் எல்லாம் வாங்கிக் கொடுத்து சாந்தி பண்ணியாச்சு. நான் நண்பர்களோட பலமுறை போன கடை அரசன். ஐஸ்கிரீம் மில்க் ஷேக் எல்லாம் அங்க கிடைக்கும். நண்பர்களோட வந்த பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து கிட்டேன்.
அப்புறம் ஒரு கடைக்குக் கூட்டீட்டுப் போனேன். சும்மா நான் ரெண்டு துண்டு வாங்கலாம்னுதான் நெனச்சு உள்ள போனேன். வந்தவங்களும் சும்மா பாக்கலாம்னுதான் வந்தாங்க. ஆனா......
தொடரும்....
அன்புடன்,
கோ.இராகவன்
Sunday, May 21, 2006
9. கோமதி செஞ்ச சேட்டை
சங்கரங்கோயில் எனக்குச் சின்ன வயசுலயே பழக்கம். தூத்துக்குடீல அத்த வீட்டுல இருந்து படிச்சப்போ மாதத்துக்கு ஒரு வாட்டி அங்க போவோம். காலைலயே எந்திரிச்சி அத்த இட்டிலி அவிச்சி அதோட கெட்டித் துவையல் அரைச்சு, அதுவும் கெட்டுப் போகாம இருக்க அதச் சுட வெச்சுக் கொண்டு வருவாங்க. கோயில்ல சாமி கும்பிட்டுட்டு அங்க குளத்தடில உக்காந்து சாப்பிட்டிட்டு பகல்ல கெளம்பி வருவோம். மறக்காத நினைவுகள்.
அதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.
இப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.
கோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.
மொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.
அடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சுற்றி வந்தோம்.
மாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.
அதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.
அப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.
கோமதீங்குறது ஆனையோட பேரு. ஒரு பெரிய கொட்டாரத்துல இருந்துச்சு. நல்லா தென்ன மட்டைகள உரிச்சித் தின்னுக்கிட்டிருந்த கோமதி கிட்டப் போயி ஆசீர்வாதம் வாங்கினேன். காசு கொடுத்துதான். அப்ப இன்னொரு நண்பனும் பக்கத்துல வந்து நின்னான். அவனுக்குக் கொஞ்சம் நடுக்கம்னு வெச்சுக்கோங்களேன். ஏதோ எப்படியோ வந்துட்டான்.
அதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.
ஆனா கோமதி விடலை. மாலையத் தும்பிக்கைல பிடிச்சு லேசா இழுத்தா. இவன் கிடுகிடுன்னு ஆடி என்ன பண்றதுன்னு முழிக்கிறான். ஓடக் கூடத் தோணாம. நாந்தான் மாலையக் கழட்டிக் குடுன்னு சொன்னேன். சொன்னதும் படக்குன்னு குனிஞ்சி மாலையக் கழட்டீட்டான்.
கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.
கோமதிக்கு டாட்டா காட்டீட்டு வெளியே வந்தோம். நான் புத்து மண் வாங்கினேன். தினைமாவும் வெல்லமும் கொஞ்சம் நெய்யும் கலந்து நண்பன் வாங்கிச் சாப்பிட்டான். இப்போ நல்ல பசி வேளை. எல்லாருக்கும் பசி. வெயில் வேற. அவதியவதியா ஓடி வண்டீல ஏறுனோம். ஆனா சாப்பாடு என்னாச்சு?
தொடரும்.....
அன்புடன்,
கோ.இராகவன்
அதே போலச் சங்கரங்கோயில் பிரியாணியும் நல்லாயிருக்கும். அங்க ஒரு சாயிபு கடை இருக்கு. அதுல பிரியாணி பிரமாதமா இருக்கும். அங்க போன பல சமயங்கள்ள அதைப் பார்சல் வாங்கீட்டும் வந்திருக்கோம்.
இப்பிடியாகப் பட்ட சங்கரங்கோயிலுக்குப் போறோம்னதுமே ரெண்டு வாங்கனும்னு உறுதியா இருந்தேன். ஒன்னு புத்து மண்ணு. இன்னொன்னு பிரியாணி. புத்து மண்ணக் குழச்சி நெத்தீல புருவ நடுவுல வெச்சுக்கிறது ரொம்ப நாள் பழக்கம். அந்தப் புத்து மண்ண உருட்டிச் சின்னச் சின்னக் குழாயா பாக்கெட்ல போட்டு விப்பாங்க. புத்துமண் குழாயோட தண்டியப் பொருத்து விலை கூடிக் கொறயும்.
கோயிலுக்குள்ள நுழையும் போதே கடைகள்ள புத்துமண் எக்கச்சக்கமா கண்ணுல பட்டது. திரும்ப வர்ரப்ப வாங்கிக்கலாம்னு நேரா உள்ள போனோம்.
மொதல்ல கண்ணுல பட்டது பூலித்தேவன் அறை. அவர் இறைவனோட இணைஞ்சதாச் சொல்ற எடத்துல அழகா மரவேலைப்பாடு செஞ்சிருக்காங்க. உண்மையிலே பிரமாதம். குறிப்பா சின்னச் சின்ன அழகான மரவேலைப்பாடுகள்.
அடுத்து சங்கரனைப் பாத்தோம். தோடுடைய செவியன். விடை ஏறியோர் தூவெண்மதி சூடியவன் இங்கு ஆவுடையாராக காட்சி தந்தான். வணங்கி விட்டு அப்படியே நேராகச் சங்கரகோமதியைக் கண்டோம். சரிவளை. விரிசடை. எரிபுரை வடிவினள். அன்பொழுக அருள் செய்து கொண்டிருந்தாள். வணங்கி விட்டுச் சுற்றி வந்தோம்.
மாவிளக்குப் போடுறத இங்க நெறையப் பாக்கலாம். எனக்கும் இங்க எங்கத்த மாவிளக்குப் போட்டிருக்காங்கன்னு நெனைக்கிறேன். சரியா நெனவு இல்ல. பச்சரிசிய இடிச்சி வெல்லஞ் சேத்து இடிச்சி விளக்கு செஞ்சி அதுல குழியாக்கி நெய் நெரப்பி ஏத்துறதுதான் மாவிளக்கு. கண்ணு வலி சரியாப் போச்சுன்னா வாழையெலைல மாவிளக்கு வெச்சி யாருக்கு வேண்டுனாங்களோ அவங்க கண்ணுக்கு மேலா வெச்சிக் காட்டுறது. வயித்துவலிக்கு வயித்து மேல வெக்கிறது. இப்பிடி நெறைய.
அதே மாதிரி அங்க ஒரு தொட்டீல புத்து மண்ணப் போட்டு வெச்சிருப்பாங்க. வேணுங்கிறவங்க எடுத்துக்கலாம்.
அப்புறம் சங்கரநாராயணர். பாதி சங்கரன். பாதி நாராயணன். ஒரு பக்கம் வில்வம். இன்னொரு பக்கம் துளசி. ஒரு பக்கம் புலித்தோல். இன்னொரு பக்கம் பட்டுத்துணி. ஒரு பக்கம் பாம்பு தொங்குது. இன்னொரு பக்கம் மணிமாலைகள் தொங்குது. இப்படி ரெண்டு வேறுபட்ட துருவங்கள் ஒன்னா இருக்குறதுதான் சங்கரநாராயணர். அவருக்கும் ஒரு வணக்கம் போட்டுட்டு நேரா கோமதி இருக்கிற எடத்துக்குப் போனோம்.

அதுவும் கழுத்துல ரோஜா மாலையோட. சந்நிதீல போட்ட மாலையோட வந்து நின்னான். கோமதி தும்பிக்கைய நீட்டி அவனத் தடவிப் பாத்தா. ரோஜா மாலைய ரெண்டு வாட்டி மோந்து பாத்தா. அந்த வாசம் அவளுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. என்னடா தடவுதே மோந்து பாக்குதேன்னு இவனுக்கு லேசா ஆட்டம்.

கோமதி அப்படியே அந்த மாலையக் கால்ல வெச்சு பட்டுன்னு முடிச்ச உடைச்சது. இப்ப மாலை நீளமான பூச்சரமாச்சு. தும்பிக்கையால பிடிச்சிக்கிட்டே தும்பிக்கையால சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு ரோஜாப் பூக்கள உருவி லபக்குன்னு வாயில போட்டுக்கிட்டா. ரெண்டு சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருதான்...அப்புறம் நாருதான் மிச்சம். ஒரு சந்தோஷம் அவளோட மொகத்துல.

தொடரும்.....
அன்புடன்,
கோ.இராகவன்
Wednesday, May 17, 2006
பரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்
டாவின்சி கோடு புத்தகம் பரபரப்பான புத்தகந்தானே. அது வந்த பொழுது எத்தனை விதமான விமர்சனங்கள். ஏற்புகள். மறுப்புகள். ஆனாலும் புத்தகம் விற்பனையில் புதுச் சாதனை படைத்தது. நானும் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். என்னைப் பொருத்த வரையில் அந்தப் புத்தகத்தில் கலை மதிப்பு என்பது சுழி. அதாவது அந்தப் புத்தகத்தில் கொஞ்சமும் கலைத்தன்மை இல்லை என்கிறேன். ஆயினும் தொடர்ந்து படிக்க வைக்கும் நடை. முடிவில் காத்திருக்கும் பரபரப்புத் தகவல். இவையிரண்டுந்தான் அந்தப் புத்தகத்தின் சிறப்புகள்.
விற்பனையில் சிறந்த புத்தகங்கள் திரைப்படங்களாவது ஆங்கிலத்தில் நிறைய உண்டு. அந்த வகையில் டாவின்சி கோடு புத்தகத்தைப் படமாக்குவதில் எந்தத் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மறுகருத்து இருக்கப் போவதில்லை. ஆகையால்தான் மிக விரைவிலேயே திரைப்படமும் தயாரானது. வெளியாக இருக்கிறது. நானும் ஆவலுடன் காத்திருந்தேன். பொதுவாகவே ஆங்கிலத்தில் நான் படித்த புத்தகங்கள் படங்களாக வந்திருக்கின்றன. அவைகளை ரசித்தும் இருக்கிறேன். விலக்கியும் இருக்கிறேன். டாவின்சி கோடை மற்றும் வரவேற்காமல் போவேனா?
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய இருக்கும் பொழுதுதான் படத்தைத் தடை செய்து விட்டதாகச் செய்தி. தணிக்கைக் குழுவா மத்திய அரசா என்று முதலில் தெரியவில்லை. பிறகுதான் தணிக்கைக் குழு படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த பிறகும் அரசு அதைத் தடை செய்திருப்பது தெரிந்தது.
என்ன காரணம் என்று கேள்விப்படுகையில் சிரிப்பும் வேதனையும் கலந்து வந்தன. கிருத்துவ மதச் சாமியார்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான். அதுவும் சாகும் வரை உண்ணாவிரதம். உடனே அரசாங்கமும் அவர்கள் அனுமதியின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று கேணத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.
கேணத்தனம் என்று சொல்வதற்காக யாரும் ஆத்திரப் படத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவனைப் பற்றிப் பேசும் வரைக்குந்தான் என்ற நிலைக்கு அரசாங்கம் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.
கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா? என்னைக் கேட்டால் அவர் கீமாயணம் எழுதியது சரி என்பேன். அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதார். ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம். எது எப்படியோ....ராமாயணத்தைப் பெரிதாக நினைக்கின்றவர்களது மனது புண்படுமே என்று பலரும் நினைக்கவில்லை.
இராமாயணம் பொய் என்று நிரூபிக்கத்தான் பெரியார் கீமாயாணம் எழுதினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. பைபிளில் சொல்லியிருப்பது பொய் என்று நிரூபிக்கத்தான் இந்தக் கிருத்துவக் டாவின்சிக் கோடாயணம் எழுதப் பட்டிருக்கிறதாம். பெரியாருக்கு இருந்த சுதந்திரம் டேன் பிரவுனுக்கும் கொடுக்க வேண்டும்.
இன்றைக்கும் வலைப்பூவில் இந்துக் கடவுள்கள் கடவுள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மனம் புண்படும் என்று வருத்தப்படாதவர்கள் இப்பொழுது இந்தப் படத்தால் குறிப்பிட்டவர்கள் மனம் புண்படும் என்று சொல்லும் நிலைதான் இப்பொழுதைய உண்மையான நிலை.
அர்ச்சகர்களாக யாரும் வரலாம் என்ற சட்டம் மிகச் சரிதான். அதை அரசாங்கம் கொண்டு வந்ததும் சரிதான். அதை எதிர்ப்பவர்களை எதிர்க்க எத்தனை பேர் கச்சை கட்டிக் கொண்டு வந்தீர்கள். ஒவ்வொரு மதத்திலிருந்தும். எந்த மதத்தில் இல்லாதவர்களும் கூட.
படத்தினை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தணிக்கைக் குழுவும் சொல்லி விட்டது. அதற்குப் பிறகு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சில சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எத்தனை பேர் வந்து கேட்டீர்கள்? ஒரே ஒரு பதிவுதான். அதிலும் கூட இந்தத் தடை தேவையில்லாதது என்று பட்டும் படாமல்தான் ஒரு சிலரால் சொல்ல முடிந்தது. தவறு என்று கூடச் சொல்லும் துணிவு ஒரு சிலரைத் தவிர யாருக்கும் இல்லை.
கிருத்துவ மதம் பிறந்து வளர்ந்து செழித்தோங்கி இருக்கும் நாடுகளில் எல்லாம் தடை இல்லை. எந்தச் சாமியாரும் கேட்கவில்லை. ஏன்? அவர்களுக்கு இருக்கும் பக்குவம். ஒரு முறை வலைப்பூவில் ஜோசப் சார் சொன்னார். "இது போல நிறைய ஏடுகள் கிடைத்திருக்கின்றன. அவைகள் நிரூபித்தவை ஒன்றுமில்லை" என்று. (யூதாஸ் தொழுகை ஏடுகள் தொடர்பாக.) அது நம்பிக்கை. அது பக்குவம். அதுதான் சகிப்புத்தன்மை. "நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று." ஆகையால்தான் கிருத்துவ நாடுகளில் இந்தப் படத்திற்குத் தடையை யாரும் கோரவில்லை. வாடிகன் அதிகார மையமும் அமைதி காக்கிறது.
ஆனால் இந்தியாவில் எழுகிறது பிரச்சனை. சகிப்புத்தன்மையும் பக்குவமும் கருத்துச் சுதந்திரமும் இன்றி. இது போராட்டத்திற்கான நோக்கத்தையே ஐயத்திற்குள்ளாக்குகிறது.
ஃபயர், வாட்டர் பிரச்சனையில் தணிக்கைக் குழு இருக்கிறது என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்றைக்குத் தணிக்கைக் குழு இருக்கிறது என்று சொல்ல அன்றைக்கு வந்த குரல்கள் வரவில்லை.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.
போராடுகின்றவர்களே.....இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில் எந்த வெட்டும் இன்றி முழுப்படமும் காணக் கிடைக்கப் போகிறது. தியேட்டரில் போய்ப் பார்க்க நினைத்தவர்கள் வீட்டிலேயே பார்க்கப் போகிறார்கள். அதுவும் அவர்களிடமே அந்த டீவிடி சொந்தமாக இருக்கப் போகிறது. இதுதானா உங்கள் எண்ணம்? இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள். நன்றி.
அன்புடன்,
கோ.இராகவன்
விற்பனையில் சிறந்த புத்தகங்கள் திரைப்படங்களாவது ஆங்கிலத்தில் நிறைய உண்டு. அந்த வகையில் டாவின்சி கோடு புத்தகத்தைப் படமாக்குவதில் எந்தத் திரைப்படத் தயாரிப்பாளருக்கும் மறுகருத்து இருக்கப் போவதில்லை. ஆகையால்தான் மிக விரைவிலேயே திரைப்படமும் தயாரானது. வெளியாக இருக்கிறது. நானும் ஆவலுடன் காத்திருந்தேன். பொதுவாகவே ஆங்கிலத்தில் நான் படித்த புத்தகங்கள் படங்களாக வந்திருக்கின்றன. அவைகளை ரசித்தும் இருக்கிறேன். விலக்கியும் இருக்கிறேன். டாவின்சி கோடை மற்றும் வரவேற்காமல் போவேனா?
இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்ய இருக்கும் பொழுதுதான் படத்தைத் தடை செய்து விட்டதாகச் செய்தி. தணிக்கைக் குழுவா மத்திய அரசா என்று முதலில் தெரியவில்லை. பிறகுதான் தணிக்கைக் குழு படத்தை வெளியிடலாம் என்று சான்று கொடுத்த பிறகும் அரசு அதைத் தடை செய்திருப்பது தெரிந்தது.
என்ன காரணம் என்று கேள்விப்படுகையில் சிரிப்பும் வேதனையும் கலந்து வந்தன. கிருத்துவ மதச் சாமியார்கள் சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான். அதுவும் சாகும் வரை உண்ணாவிரதம். உடனே அரசாங்கமும் அவர்கள் அனுமதியின்றி படத்தை வெளியிட மாட்டோம் என்று கேணத்தனமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர்.
கேணத்தனம் என்று சொல்வதற்காக யாரும் ஆத்திரப் படத் தேவையில்லை. கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவனைப் பற்றிப் பேசும் வரைக்குந்தான் என்ற நிலைக்கு அரசாங்கம் நம்மைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. வலைப்பூவிலும் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றியெல்லாம் பேசி இந்தப் படத்தைத் தடை செய்தது சரியென்று வாதம்.
கீமாயணம் எழுதிய பொழுது பெரியாருக்குக் கருத்துச் சுதந்திரதிரத்தைக் கொடுக்கவில்லையா? என்னைக் கேட்டால் அவர் கீமாயணம் எழுதியது சரி என்பேன். அவருடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதார். ஏற்பவர் ஏற்கட்டும். ஏற்காதல் ஏற்காமல் போகட்டும். அவ்வளவுதான் விஷயம். எது எப்படியோ....ராமாயணத்தைப் பெரிதாக நினைக்கின்றவர்களது மனது புண்படுமே என்று பலரும் நினைக்கவில்லை.
இராமாயணம் பொய் என்று நிரூபிக்கத்தான் பெரியார் கீமாயாணம் எழுதினார் என்று சொல்கிறவர்களுக்கு ஒரு செய்தி. பைபிளில் சொல்லியிருப்பது பொய் என்று நிரூபிக்கத்தான் இந்தக் கிருத்துவக் டாவின்சிக் கோடாயணம் எழுதப் பட்டிருக்கிறதாம். பெரியாருக்கு இருந்த சுதந்திரம் டேன் பிரவுனுக்கும் கொடுக்க வேண்டும்.
இன்றைக்கும் வலைப்பூவில் இந்துக் கடவுள்கள் கடவுள்களே இல்லை என்று சொல்லும் அளவிற்குக் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. அப்பொழுதெல்லாம் மற்றவர்கள் மனம் புண்படும் என்று வருத்தப்படாதவர்கள் இப்பொழுது இந்தப் படத்தால் குறிப்பிட்டவர்கள் மனம் புண்படும் என்று சொல்லும் நிலைதான் இப்பொழுதைய உண்மையான நிலை.
அர்ச்சகர்களாக யாரும் வரலாம் என்ற சட்டம் மிகச் சரிதான். அதை அரசாங்கம் கொண்டு வந்ததும் சரிதான். அதை எதிர்ப்பவர்களை எதிர்க்க எத்தனை பேர் கச்சை கட்டிக் கொண்டு வந்தீர்கள். ஒவ்வொரு மதத்திலிருந்தும். எந்த மதத்தில் இல்லாதவர்களும் கூட.
படத்தினை வெளியிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று தணிக்கைக் குழுவும் சொல்லி விட்டது. அதற்குப் பிறகு படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சில சாமியார்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். எத்தனை பேர் வந்து கேட்டீர்கள்? ஒரே ஒரு பதிவுதான். அதிலும் கூட இந்தத் தடை தேவையில்லாதது என்று பட்டும் படாமல்தான் ஒரு சிலரால் சொல்ல முடிந்தது. தவறு என்று கூடச் சொல்லும் துணிவு ஒரு சிலரைத் தவிர யாருக்கும் இல்லை.
கிருத்துவ மதம் பிறந்து வளர்ந்து செழித்தோங்கி இருக்கும் நாடுகளில் எல்லாம் தடை இல்லை. எந்தச் சாமியாரும் கேட்கவில்லை. ஏன்? அவர்களுக்கு இருக்கும் பக்குவம். ஒரு முறை வலைப்பூவில் ஜோசப் சார் சொன்னார். "இது போல நிறைய ஏடுகள் கிடைத்திருக்கின்றன. அவைகள் நிரூபித்தவை ஒன்றுமில்லை" என்று. (யூதாஸ் தொழுகை ஏடுகள் தொடர்பாக.) அது நம்பிக்கை. அது பக்குவம். அதுதான் சகிப்புத்தன்மை. "நீ சொல்வதைச் சொல்லிக் கொள். எனக்குத் தெரியும் எது உண்மையென்று." ஆகையால்தான் கிருத்துவ நாடுகளில் இந்தப் படத்திற்குத் தடையை யாரும் கோரவில்லை. வாடிகன் அதிகார மையமும் அமைதி காக்கிறது.
ஆனால் இந்தியாவில் எழுகிறது பிரச்சனை. சகிப்புத்தன்மையும் பக்குவமும் கருத்துச் சுதந்திரமும் இன்றி. இது போராட்டத்திற்கான நோக்கத்தையே ஐயத்திற்குள்ளாக்குகிறது.
ஃபயர், வாட்டர் பிரச்சனையில் தணிக்கைக் குழு இருக்கிறது என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன்றைக்குத் தணிக்கைக் குழு இருக்கிறது என்று சொல்ல அன்றைக்கு வந்த குரல்கள் வரவில்லை.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் மதச்சார்பின்மையையும் இந்தியர்களின் சகிப்புத்தன்மையும் இன்னமும் கீழே போயிருக்கின்றன என்றால் மிகையாகாது.
போராடுகின்றவர்களே.....இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி அடையப் போகிறது. இதோ இன்னும் ஒரு வாரத்தில் திருட்டு டீவிடியில் எந்த வெட்டும் இன்றி முழுப்படமும் காணக் கிடைக்கப் போகிறது. தியேட்டரில் போய்ப் பார்க்க நினைத்தவர்கள் வீட்டிலேயே பார்க்கப் போகிறார்கள். அதுவும் அவர்களிடமே அந்த டீவிடி சொந்தமாக இருக்கப் போகிறது. இதுதானா உங்கள் எண்ணம்? இந்தப் படத்திற்கு நல்லதொரு விளம்பரத்தை நீங்களே தேடித் தந்துவிட்டீர்கள். நன்றி.
அன்புடன்,
கோ.இராகவன்
Sunday, May 14, 2006
8. கழுகுமலை
இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.
தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.
தமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.
வறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.

கழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.
அண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.
வண்ண மயில் முருகேசன்
குற வள்ளி பதம் பணி நேசன்
உரை வளமே தரு
கழுகாசலபதி கோயிலின்
வளம் நான் மறவாதே
இப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.

கோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.
கோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.
சங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.
நெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.
இப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு? பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.
தொடரும்.
தமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.
தமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.


கழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.
அண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.
வண்ண மயில் முருகேசன்
குற வள்ளி பதம் பணி நேசன்
உரை வளமே தரு
கழுகாசலபதி கோயிலின்
வளம் நான் மறவாதே
இப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.


கோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.
சங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.
நெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.
இப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு? பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்னு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.
தொடரும்.
Thursday, May 11, 2006
அலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்
தேர்தல் முடிஞ்சிருச்சி. முடிவுகளும் தெரிஞ்சிரிச்சி. இப்ப என்ன பண்றது? இந்த முடிவுகள்ள இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னு அலசிப் பாக்க வேண்டியதுதானே.
மொதல்ல வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவங்க வருத்தப்பட வேண்டாம். மக்கள ஏமாத்த நமக்கு வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். காத்துக்கிட்டிருங்க. பலன் கிடைக்கும்.
தேர்தல் தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மாதிரிதான் வெச்சிருந்தேன். ரெண்டு பேரும் ஆட்ச்சிக்கு வர்ரது ஏனோ பிடிக்கல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரையும் விட்டா வேற வழியே இல்லைங்கறதால, கூட்டணி ஆட்சி வந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். நல்ல வேளையா அப்படியே நடந்துருச்சு.
இந்த முடிவுகள்ள இருந்து ஒன்னு நல்லாப் புரியுது. திமுக அதிமுக ரெண்டும் மக்கள் ஒரே மாதிரிதான் பாக்குறாங்கன்னு. யாரு நெறையா கூட்டணி சேக்குறாங்களோ....அவங்களுக்கு கூடுதல் ஓட்டு. அவ்வளவுதாங்க விஷயம்.
இந்தத் தேர்தல் முடிவுகள்ள மூனு தகவல்கள் எனக்கு வியப்பத்தான் குடித்துச்சி. அதுவும் நான் எதிர் பார்க்காத வகையில.
மொதல்ல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது விஜயகாந்த். இவர நான் ஒரு பொருட்டாவே தேர்தல்ல மதிக்கலை. அதுக்காக தமிழ்மணத்துல இருக்குற பல நண்பர்களைப் போல அசிங்கமாவும் நாகரீகமில்லாமலும் திட்டலை. அது தப்பு. எதிரியாயிருந்தாலும் மரியாதைக் கொறவா பேசக்கூடாது. இத்தன நியாயம் பேசுற நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது. நீங்க பேசுற நியாயங்களோட இதையும் சேத்துக்கோங்க.
சரி. விஜயகாந்துக்கு வருவோம். அவருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நிரூபிச்சிட்டாரு. அதுதான் உண்மை. லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம ஒரு முடிவோட எறங்குனதுக்கான பலன் கிடைச்சிருக்கு. அவரத் தோக்கடிக்க அத்தன வழிமுறைகளையும் பாமக செஞ்சது. நாலு விஜயகாந்த் போட்டி போட வைக்கிறது. அத நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட கிண்டலாச் சொல்லிச் சிரிச்சது......வேண்டாங்க. நம்மள்ளாம் கொஞ்சம் படிச்சவங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்.
இவர் ஜெயிக்க மாட்டார்னு நான் நெனைக்கலை. ஆனா நம்புனேன். நல்ல ஓட்டு வாங்கி மூனாவது எடத்துக்கு வருவாருன்னு நெனச்சேன். ஆனா முதலிடங்க. இவர மட்டும் ஜெயலலிதா கூட்டணில சேத்திருந்தாங்க (முயற்சி செஞ்சாங்கன்னு கேள்விப் படுறோம்.)..ஜெயிச்சிருந்திருக்கலாம். ஓட்டுக் கணக்கு சொல்லுதே. ஊருருக்கு ஓரளவு நல்லாவே வாங்கீருக்காங்க. பாராட்டுகள் விஜயகாந்த். விருத்தாச்சலத்த நீங்க விருத்தி பண்றதுலதான் உங்க தெறமைய புரிய வைக்கனும். இது வரைக்கும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ளாம் நெடுநாள்த் திட்டங்கள்னு எதுவுமே யோசிக்கலை (குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் யோசிச்சாங்க. பதவிக்கு வர்ரதுக்கும் இலவசத்ததான் யோசிச்சாங்க). நீங்க என்ன பண்ணப் போறீங்களோ.
பாமகவுக்கு இங்க ஒரு வேண்டுகோள். விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க. பண்ணலாம்....அது விஜயகாந்த்துக்குத்தான் உதவும்.
அடுத்தது வைகோ பங்கு. இவருடைய பங்கு ஒன்னுமே இல்லைன்னு சொல்ல முடியாது. தமிழகத்துல ஆறும் புதுவைல ஒன்னும்(!). கடைசி நேரத்துல இவரு எடுத்த முடிவுக்கு இவ்வளவு கிடைச்சது மட்டுமல்ல..........தோத்த இடங்கள்ள உள்ள வாக்கு வித்தியாசமும் சொல்லும் உண்மையான நெலமையை. அன்பழகனுக்கே நானூறு ஓட்டு வித்தியாசந்தான். பல இடங்கள்ள கொறஞ்ச வாக்கு வித்தியாசத்துல தோத்ததும் மதிமுகவுக்கு இருக்குற ஓரளவு பரவலான செல்வாக்குக்கு எடுத்துக்காட்டு. அதிமுகவும் மதிமுகவும் ஒருத்தருக்கொருத்தர் ஒழுங்கா உதவியிருக்காங்க. அதுவும் பல தொகுதிகள்ள தெரியுது. சென்னையிலேயே மூன்று தொகுதிகள்ள மதிமுக வாக்குகள் எதிர் பார்த்ததை விடவும் அதிகம். சென்னை திமுகவின் கோட்டைங்கறது இனிமே மாயைதான். ஸ்டாலினுக்கே ரெண்டாயிரம் ஓட்டுதான் வித்தியாசம். பல திமுக தலைகள் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றப்போ சென்னைல இப்படி ஒரு நெலமைங்குறது திமுகவுக்கு நல்லதில்லை.
இன்னொரு விஷயம். வைகோ நெனச்சத சாதிச்சிட்டாருன்னு சொல்வேன். வைகோவும் கூட்டணியில இருந்திருந்தா நிச்சயமா இத விடவும் அதிக தொகுதிகள் திமுகவுக்குக் கிடைச்சிருக்கும். பெரும்பான்மை கூட கிடைச்சிருக்கலாம்னு ஓட்டுக் கணக்கு வெச்சுப் பாக்கும் போது தெரியுது. திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால வைகோவுக்குப் பின்னால பலன் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இன்னைக்குப் பொழுதுக்கு ஆக வேண்டியதப் பாத்தாச்சு. நாளைக்கு நடக்கப் போறது யாருக்குத் தெரியும்? விடாம போராடுங்க. ஒங்களுக்கும் வாய்ப்பு வரலாம். ஆனா ஒன்னு, இந்தத் தேர்தல்ல நீங்க கொடுத்தது பெரிய விலை. அதிமுக கூட்டணிக்குப் போனதச் சொல்றேன். மத்தவங்கள்ளாம் யோக்கியங்கன்னு சொல்ல வரலை. அவங்கள்ளாம் மொதல்ல இருந்தே கெட்டவங்க. புதுசா தப்பு செய்ற நீங்க கெட்டவங்களாகி அவங்கள்ளாம் நல்லவங்களாயிட்டாங்க பாத்தீங்களா....இன்னமும் ஒன்னும் கெட்டுப் போகலை. அடுத்தடுத்து பொறுமையா யோசிச்சு எடுக்குற முடிவை முதல்லயே எடுங்க. கடைசீ நேரத்துல எடுக்காதீங்க.
மூனாவது காங்கிரஸ். கருணாநிதி அத்தன சீட்டு அள்ளிக் கொடுத்தப்ப, காங்கிரஸ் எப்படிப் பொழைக்கப் போகுதோன்னு நெனச்சேன். ஆனா கொடுத்த வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. இன்னைக்கு காங்கிரஸ் இல்லாம ஆட்சியமைக்க முடியாதுங்கறதுதான நெலமை. காங்கிரஸ்காரங்களா...வாழ்த்துகள். அடுத்த தேர்தல்ல சிதம்பரத்த உள்ள எறக்கப் பாக்கலாம். வாய்ப்பு பிரகாசமா இல்லைன்னாலும் நெறைய சீட்டுகள அள்ள வாய்ப்பிருக்கு. அது அடுத்த தேர்தல் நிலவரத்தப் பொறுத்துதான். ஒருவேளை இப்ப இருக்குற மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் சண்டைன்னு வெச்சுக்கோங்க. அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது? இன்னைக்குத் தமிழகத்துல இருக்குற எல்லாத் தலைவர்களுமே கூட்டணி ஆட்சிய ஓரளவுக்கு நல்லா கொண்டு போக முடியும். ஆனா முடியாத ஒரே ஆளு ஜெயலலிதாதான். தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினிங்குறதுதான் அவரோட கொள்கை. ஒருவேளை பசி வந்தா பத்தும் பறந்து போகுமோ என்னவோ!
மத்த படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ரெண்டு இடம் கிடைச்சிருக்கு. பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பா செஞ்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.
ஜெயலலிதாவுக்கு இப்பவாவது எல்லாரையும் அணைச்சிக்கிட்டுப் போறதுன்னா என்னன்னு தெரிஞ்சா நல்லது. இல்லைன்னா திண்டாட்டந்தான். சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா எப்பிடி. அடுத்தவங்களை மதிக்கக் கத்துக்கனும். மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும். ஒங்களுக்குன்னு வாக்கு வங்கி நல்லாவே இருக்கு. அதைப் பெருக்குறதும் கரைக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு.
கடைசியா கருணாநிதிக்கு. திரும்ப முதல்வராகப் போறீங்க. வாழ்த்துகள். ஆனா இந்தப் பதவிக்கு வர்ரதுக்கு நீங்க எடுத்த இலவச வாள் மேல எனக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தம் இல்ல. இந்த இலவசங்க உங்களுக்குத் தேர்தல்ல உதவீருக்கு. இதெல்லாம் சாத்தியம்னு சிதம்பரம் புள்ளி விவரக் கணக்கு சொல்லலாம். ஆனா இந்தத் தேர்தல்ல நீங்க தொடங்கி வெச்ச இலவசக் கூத்து எல்லாரையும் எப்பிடிப் பைத்தியமாக்குச்சு பாத்தீங்களா. போன தேர்தல் வரைக்கும் ஒங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்தத் தேர்தல்ல ஓட்டே போடல. யாருக்குப் போடுறோமோ இல்லையோ...ஒங்களுக்குப் போடக் கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிருந்தேன்.
மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. நான் ஒருத்தன் மட்டும் தமிழ்நாடு இல்லை. ஆனா என்னைப் போல நெறையப் பேரு நெனக்கத் தொடங்குனா அது உங்க கட்சிக்கு நல்லதில்லை. இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.
வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்
மொதல்ல வெற்றி பெற்றவங்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெறாதவங்க வருத்தப்பட வேண்டாம். மக்கள ஏமாத்த நமக்கு வாய்ப்புகள் கிடைச்சிக்கிட்டே இருக்கும். காத்துக்கிட்டிருங்க. பலன் கிடைக்கும்.
தேர்தல் தொடங்குனப்பவே எனக்கு ஆசதான். அதாவது கூட்டணி ஆட்சிதான் வரனும்னு. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் ஒரே மாதிரிதான் வெச்சிருந்தேன். ரெண்டு பேரும் ஆட்ச்சிக்கு வர்ரது ஏனோ பிடிக்கல. இப்போதைக்கு இவங்க ரெண்டு பேரையும் விட்டா வேற வழியே இல்லைங்கறதால, கூட்டணி ஆட்சி வந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சேன். நல்ல வேளையா அப்படியே நடந்துருச்சு.
இந்த முடிவுகள்ள இருந்து ஒன்னு நல்லாப் புரியுது. திமுக அதிமுக ரெண்டும் மக்கள் ஒரே மாதிரிதான் பாக்குறாங்கன்னு. யாரு நெறையா கூட்டணி சேக்குறாங்களோ....அவங்களுக்கு கூடுதல் ஓட்டு. அவ்வளவுதாங்க விஷயம்.
இந்தத் தேர்தல் முடிவுகள்ள மூனு தகவல்கள் எனக்கு வியப்பத்தான் குடித்துச்சி. அதுவும் நான் எதிர் பார்க்காத வகையில.
மொதல்ல குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது விஜயகாந்த். இவர நான் ஒரு பொருட்டாவே தேர்தல்ல மதிக்கலை. அதுக்காக தமிழ்மணத்துல இருக்குற பல நண்பர்களைப் போல அசிங்கமாவும் நாகரீகமில்லாமலும் திட்டலை. அது தப்பு. எதிரியாயிருந்தாலும் மரியாதைக் கொறவா பேசக்கூடாது. இத்தன நியாயம் பேசுற நண்பர்களுக்கு என்னோட வேண்டுகோள் இது. நீங்க பேசுற நியாயங்களோட இதையும் சேத்துக்கோங்க.
சரி. விஜயகாந்துக்கு வருவோம். அவருக்கு ஒரு ஓட்டு வங்கி இருக்குன்னு நிரூபிச்சிட்டாரு. அதுதான் உண்மை. லேட்டாவும் லேட்டஸ்டாவும் வர்ரேன் போறேன்னு சொல்லாம ஒரு முடிவோட எறங்குனதுக்கான பலன் கிடைச்சிருக்கு. அவரத் தோக்கடிக்க அத்தன வழிமுறைகளையும் பாமக செஞ்சது. நாலு விஜயகாந்த் போட்டி போட வைக்கிறது. அத நம்ம வலைப்பூ நண்பர்கள் கூட கிண்டலாச் சொல்லிச் சிரிச்சது......வேண்டாங்க. நம்மள்ளாம் கொஞ்சம் படிச்சவங்க. இதெல்லாம் நமக்கு வேண்டாம்.
இவர் ஜெயிக்க மாட்டார்னு நான் நெனைக்கலை. ஆனா நம்புனேன். நல்ல ஓட்டு வாங்கி மூனாவது எடத்துக்கு வருவாருன்னு நெனச்சேன். ஆனா முதலிடங்க. இவர மட்டும் ஜெயலலிதா கூட்டணில சேத்திருந்தாங்க (முயற்சி செஞ்சாங்கன்னு கேள்விப் படுறோம்.)..ஜெயிச்சிருந்திருக்கலாம். ஓட்டுக் கணக்கு சொல்லுதே. ஊருருக்கு ஓரளவு நல்லாவே வாங்கீருக்காங்க. பாராட்டுகள் விஜயகாந்த். விருத்தாச்சலத்த நீங்க விருத்தி பண்றதுலதான் உங்க தெறமைய புரிய வைக்கனும். இது வரைக்கும் சினிமாவுல இருந்து அரசியலுக்கு வந்தவங்கள்ளாம் நெடுநாள்த் திட்டங்கள்னு எதுவுமே யோசிக்கலை (குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் யோசிச்சாங்க. பதவிக்கு வர்ரதுக்கும் இலவசத்ததான் யோசிச்சாங்க). நீங்க என்ன பண்ணப் போறீங்களோ.
பாமகவுக்கு இங்க ஒரு வேண்டுகோள். விஜயகாந்த் விருத்தாசலத்துக்கு நல்லது செஞ்சா(!) ஒத்துழைப்புக் குடுக்கலைன்னாலும் குழப்பம் பண்ணாதீங்க. பண்ணலாம்....அது விஜயகாந்த்துக்குத்தான் உதவும்.
அடுத்தது வைகோ பங்கு. இவருடைய பங்கு ஒன்னுமே இல்லைன்னு சொல்ல முடியாது. தமிழகத்துல ஆறும் புதுவைல ஒன்னும்(!). கடைசி நேரத்துல இவரு எடுத்த முடிவுக்கு இவ்வளவு கிடைச்சது மட்டுமல்ல..........தோத்த இடங்கள்ள உள்ள வாக்கு வித்தியாசமும் சொல்லும் உண்மையான நெலமையை. அன்பழகனுக்கே நானூறு ஓட்டு வித்தியாசந்தான். பல இடங்கள்ள கொறஞ்ச வாக்கு வித்தியாசத்துல தோத்ததும் மதிமுகவுக்கு இருக்குற ஓரளவு பரவலான செல்வாக்குக்கு எடுத்துக்காட்டு. அதிமுகவும் மதிமுகவும் ஒருத்தருக்கொருத்தர் ஒழுங்கா உதவியிருக்காங்க. அதுவும் பல தொகுதிகள்ள தெரியுது. சென்னையிலேயே மூன்று தொகுதிகள்ள மதிமுக வாக்குகள் எதிர் பார்த்ததை விடவும் அதிகம். சென்னை திமுகவின் கோட்டைங்கறது இனிமே மாயைதான். ஸ்டாலினுக்கே ரெண்டாயிரம் ஓட்டுதான் வித்தியாசம். பல திமுக தலைகள் பத்தாயிரம் ஓட்டு வித்தியாசத்துல வெற்றி பெற்றப்போ சென்னைல இப்படி ஒரு நெலமைங்குறது திமுகவுக்கு நல்லதில்லை.
இன்னொரு விஷயம். வைகோ நெனச்சத சாதிச்சிட்டாருன்னு சொல்வேன். வைகோவும் கூட்டணியில இருந்திருந்தா நிச்சயமா இத விடவும் அதிக தொகுதிகள் திமுகவுக்குக் கிடைச்சிருக்கும். பெரும்பான்மை கூட கிடைச்சிருக்கலாம்னு ஓட்டுக் கணக்கு வெச்சுப் பாக்கும் போது தெரியுது. திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால வைகோவுக்குப் பின்னால பலன் கிடைக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. இன்னைக்குப் பொழுதுக்கு ஆக வேண்டியதப் பாத்தாச்சு. நாளைக்கு நடக்கப் போறது யாருக்குத் தெரியும்? விடாம போராடுங்க. ஒங்களுக்கும் வாய்ப்பு வரலாம். ஆனா ஒன்னு, இந்தத் தேர்தல்ல நீங்க கொடுத்தது பெரிய விலை. அதிமுக கூட்டணிக்குப் போனதச் சொல்றேன். மத்தவங்கள்ளாம் யோக்கியங்கன்னு சொல்ல வரலை. அவங்கள்ளாம் மொதல்ல இருந்தே கெட்டவங்க. புதுசா தப்பு செய்ற நீங்க கெட்டவங்களாகி அவங்கள்ளாம் நல்லவங்களாயிட்டாங்க பாத்தீங்களா....இன்னமும் ஒன்னும் கெட்டுப் போகலை. அடுத்தடுத்து பொறுமையா யோசிச்சு எடுக்குற முடிவை முதல்லயே எடுங்க. கடைசீ நேரத்துல எடுக்காதீங்க.
மூனாவது காங்கிரஸ். கருணாநிதி அத்தன சீட்டு அள்ளிக் கொடுத்தப்ப, காங்கிரஸ் எப்படிப் பொழைக்கப் போகுதோன்னு நெனச்சேன். ஆனா கொடுத்த வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கிட்டாங்க. இன்னைக்கு காங்கிரஸ் இல்லாம ஆட்சியமைக்க முடியாதுங்கறதுதான நெலமை. காங்கிரஸ்காரங்களா...வாழ்த்துகள். அடுத்த தேர்தல்ல சிதம்பரத்த உள்ள எறக்கப் பாக்கலாம். வாய்ப்பு பிரகாசமா இல்லைன்னாலும் நெறைய சீட்டுகள அள்ள வாய்ப்பிருக்கு. அது அடுத்த தேர்தல் நிலவரத்தப் பொறுத்துதான். ஒருவேளை இப்ப இருக்குற மத்திய அரசுக்கும் திமுகவுக்கும் சண்டைன்னு வெச்சுக்கோங்க. அப்ப காங்கிரசும் பாமகவும் நெனச்சா ஜெயலலிதாவையே முதல்வர் ஆக்கலாம். ஆனா..நடக்குற காரியமா அது? இன்னைக்குத் தமிழகத்துல இருக்குற எல்லாத் தலைவர்களுமே கூட்டணி ஆட்சிய ஓரளவுக்கு நல்லா கொண்டு போக முடியும். ஆனா முடியாத ஒரே ஆளு ஜெயலலிதாதான். தின்னாத் தனியிலை. இல்லைன்னா பட்டினிங்குறதுதான் அவரோட கொள்கை. ஒருவேளை பசி வந்தா பத்தும் பறந்து போகுமோ என்னவோ!
மத்த படி விடுதலைச் சிறுத்தைகளுக்கு ரெண்டு இடம் கிடைச்சிருக்கு. பாமக பதினேழு. பாமகவும் முடிஞ்ச வரைக்கும் நல்லாச் செஞ்சிருக்காங்க. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சிறப்பா செஞ்சிருக்காங்க. எல்லாருக்கும் வாழ்த்துகள்.
ஜெயலலிதாவுக்கு இப்பவாவது எல்லாரையும் அணைச்சிக்கிட்டுப் போறதுன்னா என்னன்னு தெரிஞ்சா நல்லது. இல்லைன்னா திண்டாட்டந்தான். சண்டை போட்டுக்கிட்டேயிருந்தா எப்பிடி. அடுத்தவங்களை மதிக்கக் கத்துக்கனும். மனுசனை மனுசனா நடத்தக் கத்துக்கனும். வேன்ல உக்காந்துக்கிட்டு டயரத் தொட்டுக் கும்பிடுறவங்களை ஆசி குடுக்குற அசிங்கங்கள் நிக்கனும். ஒங்களுக்குன்னு வாக்கு வங்கி நல்லாவே இருக்கு. அதைப் பெருக்குறதும் கரைக்கிறதும் ஒங்க கையிலதான் இருக்கு.
கடைசியா கருணாநிதிக்கு. திரும்ப முதல்வராகப் போறீங்க. வாழ்த்துகள். ஆனா இந்தப் பதவிக்கு வர்ரதுக்கு நீங்க எடுத்த இலவச வாள் மேல எனக்குக் கொஞ்சம் கூடப் பிடித்தம் இல்ல. இந்த இலவசங்க உங்களுக்குத் தேர்தல்ல உதவீருக்கு. இதெல்லாம் சாத்தியம்னு சிதம்பரம் புள்ளி விவரக் கணக்கு சொல்லலாம். ஆனா இந்தத் தேர்தல்ல நீங்க தொடங்கி வெச்ச இலவசக் கூத்து எல்லாரையும் எப்பிடிப் பைத்தியமாக்குச்சு பாத்தீங்களா. போன தேர்தல் வரைக்கும் ஒங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டேன். இந்தத் தேர்தல்ல ஓட்டே போடல. யாருக்குப் போடுறோமோ இல்லையோ...ஒங்களுக்குப் போடக் கூடாதுன்னு நான் முடிவு செஞ்சிருந்தேன்.
மத்தவங்க வேணும்னா ஜெயலலிதாவை விட நீங்க செம்மல்னு நிருபிக்க ஆயிரம் சொல்லலாம். ஆனால் என்னுடைய மதிப்புல நீங்க கொறஞ்சுதான் போயிட்டீங்க. நான் ஒருத்தன் மட்டும் தமிழ்நாடு இல்லை. ஆனா என்னைப் போல நெறையப் பேரு நெனக்கத் தொடங்குனா அது உங்க கட்சிக்கு நல்லதில்லை. இந்த ஆட்சியில ஒங்க கிட்ட இருந்து எதுவுமே எதிர் பார்க்கலை. ஏன்னா உங்க தேர்தல் அறிக்கைல உண்மையான தொலை நோக்குத் திட்டங்கள் எதுவுமே இல்லை. ஏதாவது செஞ்சீங்கன்னா நிச்சயம் பாராட்டுவேன். இல்லைன்னா.....எது எப்படியோ திரும்ப முதல்வரானதுக்கு என்னோட வாழ்த்துகள்.
வாழ்த்துகளுடன்,
கோ.இராகவன்
Monday, May 08, 2006
7. கதிரேசன் கோயில்
கோயில்பட்டீல எங்க சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களுக்கு ஃபோன் போட்டு ஒரு நல்ல லாட்ஜுல ரூம் போடச் சொன்னோம். காலைல எறங்கிக் குளிச்சிட்டு எட்டு மணிக்கு மேல கோயில்பட்டிக் கதிரேசன் கோயில், அப்புறம் கழுகுமலை, சங்கரங்கோயில், திருநெல்வேலிய முடிக்கிறதாத் திட்டம். அதுக்கு ஒரு வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தேன்.
எல்லாம் குளிச்சிக் கெளம்புற வேளைல அவங்க வீட்டுல காலைல டிஃபனுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அதுக்கு முந்துன ராத்திரிதான் நாங்க கோயமுத்தூர்ல தாக்கப்பட்டிருந்தோம். அதோட தொடர்ச்சி கோயில்பட்டியிலயும் தொடந்துச்சு. தகதகன்னு மஞ்சமஞ்சேர்னு கேசரி. ஒரே அளவா இட்டிலிகள் (அதெப்படி ஊத்துறாங்களோ!). காய்கறியெல்லாம் போட்டுக் கிண்டுன உப்புமா. வீட்டுல சுட்ட மெத்துத் தோசை. இதுகள்ளாம் தனியாப் போகக் கூடாதுன்னு தொணைக்குத் தொவையலு, சாம்பாரு, பொடின்னு ஒரு கூட்டம். முடிஞ்சதும் ஆளுக்கொரு வாழப்பழமும் டீயும். ஒரு வயிறுதான இருக்குன்னு வருத்தப்படத்தான் முடிஞ்சது. அன்னைக்கு முழுக்கவே சாப்பிடத் தேவையில்லைன்னு எல்லாரும் முடிவு கட்டுனாங்க....ஆனா நா மட்டும் இல்ல....மதியம் சங்கரங்கோயில்ல சாப்பிடுவேன்னு உறுதியாச் சொன்னேன் (சங்கரங்கோயில்காரங்க இங்க இருந்தா நான் என்ன சொல்ல வர்ரேன்னு தெரிஞ்சிருக்கும்,)
வீட்டு மாடீக்குப் போனோம். லட்சுமி மில்ஸ் காம்பவுண்டுல மரங்க நெறைய இருந்துச்சு. அதுல அங்கங்க மயில்கள். இந்தப் பக்கந் திரும்புனா மல மேல கதிரேசன் கோயில். கோயில்பட்டீல இருக்குற பழைய கோயில் கதிரேசன் கோயில். அதுவும் ஒரு சின்ன மலை மேல. பாழடஞ்சி போயி ஆளும் பேரும் போகாம சிதஞ்சு போய் இருந்துச்சு. அந்தக் கோயிலச் செம்ம பண்ணி நல்ல படியா ஆக்கனும்னு அப்பவே எனக்கு ஆசை. என்னைக்காவது ஒரு நாள் செய்யனும்னு நெனப்பேன். அப்புறம் படிச்சி முடிச்சி வேலைன்னு வந்தப்புறமும் ஆசை அப்பப்ப எட்டிப் பாக்கும்.
மலைல ஏற்ற படியெல்லாம் செதஞ்சு போய் மண்ணாகி அதுல இருட்டு வேளைல நெறையப் பேரு அசிங்கஞ் செஞ்சிக்கிட்டிருந்தாங்க. என்னையப் போலவே நெறையப் பேரு நெனச்சிருப்பாங்க போல. அந்தக் கோயிலுக்கும் ஒரு விடிவு காலம் வந்துருச்சு. இப்ப பழைய சிதைவுகளைத் தட்டி விட்டுட்டு புதுக் கோயில் கட்டியிருக்காங்க. உள்ள முருகன் சிலை கெடையாது. வேல்தான். கதிர்காமத்துலயும் செல கிடையாது. கதிரேசன் கோயில்லயும் செல கெடையாது. இப்பக் கோயில்ல புதுசா பெரிய வேல்தான் நட்டீருக்காங்க. அதே போல மலைவலம் வர்ரவங்களுக்கு நல்ல தார்ச்சாலையும் போட்டிருக்காங்க. ஏற மாட்டாதவங்களுக்காக வண்டிய நேரடியா மேல கொண்டு போற வசதியும் உண்டு.
எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.
என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.
பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.
அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.
தொடரும்



எல்லாரும் ஜீப்புல போக, நானும் ஒரு நண்பனும் நடந்தே ஏறுனோம். சாமி கும்பிடுறப்பத்தான் அந்த ஐயரக் கவனிச்சேன். ஒரு பரிவும் பச்சாதாபமும் வந்தது. அதுக்குக் காரணம் அவரோட ஒடம்புல இருந்த வெள்ளிப் புள்ளிகள். சொரியாசிஸ்னு பேரு. சொறிஞ்சா செதில் செதிலா வரும். அதுக்கு மருந்தே இல்லையாம். ஒட்டுவாரொட்டியும் இல்லையாம். அதாவது ஒட்டுவார் ஒட்டி. ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் போகாது. ஆனால் ஜீன்கள் வழியாப் போகும். வழிவழியாப் போகுமாம்.
என்ன கொடுமை பாத்தீங்களா! அதுவுமில்லாம இது ஏன் வருதுன்னு கூடக் கண்டு பிடிக்கலையாம். மன அழுத்தம் அது இதுன்னு சொல்றாங்க. அதெல்லாம் நோய் ஊக்கிகள் தானாம். நோய் ஜீனுக்குள்ள உக்காந்துகிட்டு இருக்காம். மன அழுத்தமோ வேலைப்பளுவோ வேறு ஏதாவது பிரச்சனைகளோ கொடுமைப் படுத்தும் போது இது வெளிய வந்துருமாம். சொறிஞ்சிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். அதுனாலதானோ என்னவோ இங்கிலீஷ்ல பேரு வெக்கும் போது கூட சொரியாசிஸ்னு வெச்சிருக்கான்.
பொதுவா இது தலையில தொடங்குமாம். எல்லாரும் பொடுகு நெனச்சு மொதல்ல கண்டுக்காம விட்டுருவாங்க. ஏதாவது டீவீல காட்டுற ஷாம்புகளைப் போட்டுக் குளிச்சிட்டு ஒன்னும் கேக்கலையே டாக்டர் கிட்ட போனா அவரு குண்டத் தூக்கிப் போடுவாரு. இது வந்து தோற்றத்தைப் பாதிக்கிற ஒரு நோய். தொழுநோயோ வெண்குட்டமோ மொதல்லயே தெரிஞ்சிட்டாப் போயிரும். ஆனா இது அப்படியில்லை. போனாலும் திரும்பத் திரும்ப வரும். தோற்றம் பாதிக்கப்படும் போது அவங்க மனம் ரொம்பப் பாதிக்கப் படும். மத்தவங்களோட ஒழுங்கா பழக முடியாது. கூட இருக்கிறவங்களும் ஒரு மாதிரி அருவெறுப்பு இருக்கும். இதுனால ஒடிஞ்சி நொடிஞ்சி போனவங்க நெறையப் பேரு. அவங்களுக்குக் கவுன்சிலிங் பண்ணக் கூட ஒழுங்கா ஒரு வசதி கிடையாது. பாவம்.
அந்த ஐயர், அதையெல்லாம் பெருசு பண்ணாம தீபாராதனை காட்டித் திருநீறு குடுத்தாரு. வாங்கிப் பூசிக்கிட்டேன். கோயில விட்டு வெளிய வந்து பாத்தாக் கோயில்பட்டி ஊர் முழுக்கப் பாக்கலாம். ஒரு பக்கம் வீடுகள். இன்னொரு பக்கம் நேஷனல் பொறியியல் கல்லூரி. ஒரு பாலிடெக்னிக். ஒரு பெண்கள் கல்லூரி. நீளமாக் கோடு போட்ட மாதிரி தேசிய நெடுஞ்சாலை. பச்சைப் பெயிண்ட் அடிச்ச மேம்பாலம். எல்லாத்தையும் பாத்துட்டு தெரிஞ்சவங்களுக்குப் போயிட்டு வர்ரேன்னு சொல்லீட்டுக் கழுகுமலைக்கு வண்டிய விட்டோம்.
தொடரும்
Tuesday, May 02, 2006
6. மருதமலையில் அல்பப் பண்டம்
கோவைக் குற்றாலம் முடிஞ்சதும் நேரா மருதமலைதான். ரொம்பச் சின்னப் பிள்ளைல மருதமலை பாத்த நெனவு. அதுக்கப்புறம் போனதேயில்லை. அப்பக் கீழ இருந்து மேல நடந்தே ஏறுனோம். பொதுவா முருகங் கோயில் மல மேல இருந்தா நடந்துதான் ஏறுறது வழக்கம். ஆனா மருதமலை அடிவாரம் வந்தது தெரியாம வண்டிக்குள்ள உக்காந்திருந்தேன். வண்டி மலைல ஏறத் தொடங்கீருச்சு.
நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்கன்னு கத்தி எறங்கீட்டேன். கூடவே நாலு நண்பர்களும் எறங்கீட்டாங்க. அப்படியே படியில ஏறிப் போனோம். நல்ல காத்து. உறைக்காத வெயில். ஏற்கனவே ரொம்பச் சுத்துனதுனால கொஞ்சம் களைப்பு. ஆனாலும் ஏறுனோம். வழியில முழுக்க மண்டபங்கள். அத்தனையும் தேவர் பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பாத் தேவர் கட்டுனது. அருமையான முருக பக்தர் அவர். கருப்புப் பணமே வெச்சிருக்காத நல்ல திரைத்துறைக்காரர்.
அப்படியே ரெண்டு மூனு போட்டோ பிடிச்சிக்கிட்டு மலையேறுனோம். ஏறுனப்புறந்தான் தெரிஞ்சது தங்கத் தேர் பொறப்பட இருக்குறது. சரி. தேர் நகர்ரதப் பாத்துட்டு முருகனப் பாக்கலாம்னு தேர் கிட்ட போனோம். தங்கத் தேர் இழுக்க நமக்கும் ஆசைதான். ஆசையிருக்கு அம்பாரி ஏறன்னு பழமொழியே இருக்கே. தேர் நகரல. எல்லாரும் வந்து தள்ளுங்கன்னு கூப்டாங்க. ஆகா வந்ததுடா வாய்ப்புன்னு தேரப் பிடிச்சித் தள்ளுனோம். திடீர்னு ஒருத்தர் வந்து நகருங்க நகருங்கன்னாரு. என்னடான்னு நகந்துகிட்டோம்.
அப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.
அப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.
இதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.
அப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.
அது சிட்ட சிட்டயா ஒரு கடைல தொங்குச்சு. அத வாங்குனேன். அப்பயே ஒன்னப் பிச்சித் தின்னு என்னோட பழைய மறந்து போன சுவையத் தெரிஞ்சிக்கிட்டேன். அடடா! எலந்த வடையோ எலந்த வடை!
அப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.
தொடரும்.


அப்புறம் தேர் நகரலை. அங்கையே நின்னுச்சு. இழுத்து இழுத்துப் பாக்குறாங்க....ம்ஹூம்...கடைசீல சங்கிலி ஏதோ மாட்டிக்கிட்டு சிக்கிக்கிட்டு இருக்கு. தேரப் பாக்கனும்னு நெனச்சோம். பாத்தாச்சு. இழுக்கனும்னு நெனச்சோம் தள்ளியே விட்டாச்சு. இப்ப கோயிலுக்குள்ள போவோமுன்னு உள்ள போனோம். கூட்டமில்லை. நல்ல தரிசனம். தமிழில் சொல்லாகி, அந்தச் சொல்லுக்கும் மதிப்பைத் தரும் பொருளாகி எல்லாமுமாகி நிற்கிறவனைக் கண்டு தொழுது வணங்கிகோம்.
அப்புறம் அப்படியே பாம்பாட்டிச் சித்தர் குகைக்குப் போனோம். அது கொஞ்சப் படிக கீழ எறங்கனும். அங்க போகும் போதுதான் எங்க கூட வந்தவரு மலைக்கு மேல இருக்குற பழைய முருகங் கோயிலைப் பத்திச் சொன்னாரு. அதுக்குக் காட்டுக்குள்ள போகனுமாம். முந்தி ஒரு நண்பர் வந்து போகனும்னு அடம் பிடிச்சாராம். இவங்கள்ளாம் என்னடான்னு வேண்டா வெறுப்பாக் கூடப் போனாங்களாம். ஆனா தண்ணி கிண்ணி எடுத்துக்காம. எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டுத் தவிச்சுப் போயி தவங்கிப் போயி வந்திருக்காங்க. ஆனா அங்க போகனும்னு ஒத்தக்கால்ல நின்னவரு நல்லா ஜம்முன்னு ஏறி எறங்கீட்டாராம்.
இதப் பேசிக்கிட்டே வந்து அங்க பிரசாதக் கடைல முறுக்கு, தினைமாவு எல்லாம் வாங்கிக் கிட்டோம். எறங்குற எடத்துலயே ஒரு ஓட்டல். உள்ள போயி ஆளுக்கொரு காப்பி. நல்லா இருந்தது. சின்னக் கடைன்னாலும் கமகமன்னு ஆவி பறக்கக் காப்பி சுகமா இருந்துச்சு. ரசிச்சுக் குடிச்சிட்டு கீழ எறங்குனோம்.
அப்பத்தான் என் கண்ணுல பட்டுச்சு அது. அதாங்க எலந்தவடை. தூத்துக்குடிப் பக்கமெல்லாம் கெடைக்காது. நாங்க கரூர்ல இருந்தப்பதான் எலந்தவடை எங்களுக்கு அறிமுகம் ஆச்சு. பத்துகாசுக்கு ஒரு சின்ன பாலித்தீன் பாக்கெட்டுல கருப்பாக் களிம்பா கிடைக்கும். அதுக்குள்ள எலந்தக் கொட்டைகளும் முழுசாவோ ஒடஞ்சோ கெடக்கும். அதப் பல்லால கடிச்சு பைக்குள்ள இருக்குறத வாய்க்குள்ள எடுத்துக்கனும். சொவச்சிச் சொவச்சிச் சாப்புட்டுட்டு கொட்டையெல்லாம் மெல்ல முடிஞ்சா மெல்லலாம். இல்லைன்னா துப்பீறலாம். அதுதான் எலந்த வடை. எலந்தப் பழமும் புளியும் வெல்லமும் போட்டு இடிச்சிச் செஞ்ச நம்மூர் அமுதம்.

அப்புறம் இருட்டு வேளை. படபடன்னு லாட்ஜுக்குப் போயி துணிமணிகள எடுத்துக்கிட்டு நண்பனோட அக்கா வீட்டுக்கு வலுக்கட்டாயமா கடத்தப் பட்டோம். அங்க இட்லி, ரவா உப்புமா, வடை, சட்டினி, சாம்பார், பூண்டுக்கொழம்பு, இன்னும் சில பல வகையறாக்களால தாக்கப்பட்டு ஒரு வழியா தப்பிச்சி பஸ்ஸப் பிடிச்சிக் கோயில்பட்டில வந்து விடியக் காலைல நாலரை மணிக்கு எறங்குனோம்.
தொடரும்.
Wednesday, April 26, 2006
தேன்கூட்டின் தேன்மழை
இன்னைக்குக் காலைல கொஞ்சம் நேரங்கழிச்சி எந்திரிச்சேன். ஏன்னா நேத்து ராத்திரி வீட்டுக்கு வரும் போது நடுநிசி. மயில்களை எல்லாம் பாக்கலாம்னு உக்காந்தா பொன்ஸ் கிட்ட இருந்து ஒரு மயில்......ராகவன்...சதி நடக்குது....ஒங்கள சாமியார் ஆக்கப் பாக்குறாங்கன்னு....தேன்கூட்ட ஒடனே பாக்கச் சொன்னாங்க....நானும் படக்குன்னு போய்ப் பாத்தேன். அட! வாசகர் பரிந்துரைன்னு மகரந்த வலைத்தளத்த இன்றைய பரிந்துரைல போட்டிருக்காங்க. அதுவும் படத்தப் போட்டு. நன்றி தேன்கூடு. தேன்மழைதான் இந்தப் பரிந்துரை. பரிந்துரை செஞ்ச அந்த நண்பருக்கும் நன்றி.
என்னப் பத்தி என்ன சொல்லீருக்காங்கன்னு கீழ குடுத்திருக்கேன். அதுக்கு நடுவுல என்னோட குறிப்புகளும் இருக்கு. ஊதா நிறத்துல.
திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் கணிப்பொறி வல்லுநராக இருக்கிறார்.
போட்டுத் தாங்கீட்டாங்க. அழகுல தொடங்கி வல்லுனர்ல முடிச்சிருக்காங்க. :-) தூத்துக்குடி நாம் பொறந்த ஊராச்சே.....சின்ன வயசுல ஓடியாடி திரிஞ்ச ஊராச்சே....அதுனாலதான் மத்த ஊர்கள விட தூத்துக்குடி மேல பாசம் நெறைய.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு.
உண்மைதாங்க. அந்த அன்பும் முருகன் தந்ததுதான். எல்லாம் தமிழ் காட்டிய வழி.
பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், தன் கருத்தை கடைப்பிடிப்பவரும் கூட.
இந்தக் கருத்தைச் சொன்ன நண்பருக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. ஐயா, யாருய்யா நீங்க...எனக்கு ஒரு மயிலாவது தட்டி விடுங்க gragavan at gmail dot com. முடிஞ்ச வரைக்கும் சொல்றதச் செய்யனும்னு நெனப்பேன். நெனச்சத முடிஞ்ச வரைக்கும் செய்வேன். என்னைய ஒருத்தன் அடிக்கக்கூடாதுன்னு நெனச்சேன்னா...நானும் அடுத்தவன அடிக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன். இவ்வளவுதாங்க.
பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது.பட்டிமன்றத்தில் இளம்வயதிலேயே நடுவராக பணி புரிந்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் கலைஞரும் கூட, தினம் தினம் எதையாவது புதிதாக சமைக்க முயற்சி செய்வார்.நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். விரைவில் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் செல்லும் எண்ணமும் உண்டு.
வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய வெச்சு எழுதுன விக்கிரமாதித்தன் கதை நகைச்சுவைக் கதை. மாரப்பன்,அரசகுமார், இளங்கோ (இளைய மகன்) மேல் பாசம் கொண்ட அன்புச்செல்வர், வெற்றிச்செல்வி எல்லாரும் வருவார்கள். இவங்கள்ளாம் யாருன்னு தெரியுதுல்ல. அப்போ எழுத இடங்கொடுத்தது Forumhub. அதுலதான் எழுதினேன். பலர் விரும்பிப் படிச்சாங்க.
அதே மாதிரி பட்டிமன்றம்....இது தினம் ஒரு கவிதைக் குழுவுக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றம். அதை நடத்தி வந்த நாகா வாய்ப்பு கொடுத்தார். அடுத்து மகேந்திரன் என்ற நண்பர் வழியா பாரதியா பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூர் டவுன்ஹாலில் நடந்த பட்டிமன்றத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்புகள் கிடைக்கக் காரணமான நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
இமயமலைக்கா? நான் ஏற்கனவே போயிருக்கேனே...தூரத்துல இருந்து K-2 சிகரத்தையும் பாத்திருக்கேனே....ஆனா அது ஆன்மீகச் சுற்றுலா இல்ல. நல்ல இன்பச் சுற்றுலாதான். ஆகஸ்ட்டுல Valley of flowers போக வேண்டியது. மூனு மாசம் சென்னைக்குப் போக வேண்டியிருக்கிறதால போக முடியாது. :-(
அருணகிரி நாதரின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிய சொல்ல சொல்ல இனிக்குதடா புகழ் பெற்ற பதிவு.இதற்கு மேலே உங்களுக்கே தெரியும் தானே :)
இதச் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க....அதுனால நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)
சுமார் ஓராண்டுக்கும் மேலாகத் தமிழ் இணையத்திலும், வலைப்பதிவுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வரும் கோ.ராகவனின் வலைப்பதிவு:
மகரந்தம்
நன்றி: #வாசகர் பரிந்துரை (27/04/06)
தேன்கூட்டிற்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கும் நன்றி.
அன்புடன்,
கோ.இராகவன்
என்னப் பத்தி என்ன சொல்லீருக்காங்கன்னு கீழ குடுத்திருக்கேன். அதுக்கு நடுவுல என்னோட குறிப்புகளும் இருக்கு. ஊதா நிறத்துல.
திருமணம் ஆகாத அழகான இளைஞர். தூத்துக்குடியை சேர்ந்தவர். தற்போது பெங்களூரில் கணிப்பொறி வல்லுநராக இருக்கிறார்.
போட்டுத் தாங்கீட்டாங்க. அழகுல தொடங்கி வல்லுனர்ல முடிச்சிருக்காங்க. :-) தூத்துக்குடி நாம் பொறந்த ஊராச்சே.....சின்ன வயசுல ஓடியாடி திரிஞ்ச ஊராச்சே....அதுனாலதான் மத்த ஊர்கள விட தூத்துக்குடி மேல பாசம் நெறைய.
ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு, அதிலும் முருகக்கடவுள் மீது தீராத அன்பு.
உண்மைதாங்க. அந்த அன்பும் முருகன் தந்ததுதான். எல்லாம் தமிழ் காட்டிய வழி.
பழமையை உடைத்தெறிந்து புதிய பாதையில் உலகை கொண்டு செல்ல வேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டவர், தன் கருத்தை கடைப்பிடிப்பவரும் கூட.
இந்தக் கருத்தைச் சொன்ன நண்பருக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கு. ஐயா, யாருய்யா நீங்க...எனக்கு ஒரு மயிலாவது தட்டி விடுங்க gragavan at gmail dot com. முடிஞ்ச வரைக்கும் சொல்றதச் செய்யனும்னு நெனப்பேன். நெனச்சத முடிஞ்ச வரைக்கும் செய்வேன். என்னைய ஒருத்தன் அடிக்கக்கூடாதுன்னு நெனச்சேன்னா...நானும் அடுத்தவன அடிக்கக் கூடாதுன்னு நெனக்கிறேன். இவ்வளவுதாங்க.
பல தளங்களில் எழுதியிருக்கிறார், வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியதை வைத்து எழுதிய நகைச்சுவை தொடர் மிகவும் பிரபலமானது.பட்டிமன்றத்தில் இளம்வயதிலேயே நடுவராக பணி புரிந்த அனுபவம் உண்டு.நல்ல சமையல் கலைஞரும் கூட, தினம் தினம் எதையாவது புதிதாக சமைக்க முயற்சி செய்வார்.நட்பு பாராட்டுவதிலும் வல்லவர். விரைவில் இமயமலைக்கு ஆன்மீகப்பயணம் செல்லும் எண்ணமும் உண்டு.
வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திய வெச்சு எழுதுன விக்கிரமாதித்தன் கதை நகைச்சுவைக் கதை. மாரப்பன்,அரசகுமார், இளங்கோ (இளைய மகன்) மேல் பாசம் கொண்ட அன்புச்செல்வர், வெற்றிச்செல்வி எல்லாரும் வருவார்கள். இவங்கள்ளாம் யாருன்னு தெரியுதுல்ல. அப்போ எழுத இடங்கொடுத்தது Forumhub. அதுலதான் எழுதினேன். பலர் விரும்பிப் படிச்சாங்க.
அதே மாதிரி பட்டிமன்றம்....இது தினம் ஒரு கவிதைக் குழுவுக்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடந்த பட்டிமன்றம். அதை நடத்தி வந்த நாகா வாய்ப்பு கொடுத்தார். அடுத்து மகேந்திரன் என்ற நண்பர் வழியா பாரதியா பிறந்த நாள் விழாவுக்கு பெங்களூர் டவுன்ஹாலில் நடந்த பட்டிமன்றத்தில் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்புகள் கிடைக்கக் காரணமான நண்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
இமயமலைக்கா? நான் ஏற்கனவே போயிருக்கேனே...தூரத்துல இருந்து K-2 சிகரத்தையும் பாத்திருக்கேனே....ஆனா அது ஆன்மீகச் சுற்றுலா இல்ல. நல்ல இன்பச் சுற்றுலாதான். ஆகஸ்ட்டுல Valley of flowers போக வேண்டியது. மூனு மாசம் சென்னைக்குப் போக வேண்டியிருக்கிறதால போக முடியாது. :-(
அருணகிரி நாதரின் பாடல்களுக்கு விளக்கம் எழுதிய சொல்ல சொல்ல இனிக்குதடா புகழ் பெற்ற பதிவு.இதற்கு மேலே உங்களுக்கே தெரியும் தானே :)
இதச் சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க....அதுனால நீங்க யாருன்னு தெரிஞ்சி போச்சு.....நேத்து அப்படி ஒரு கேள்வி கேட்டப்போ தெரியாயது இப்பத் தெரிஞ்சி போச்சு. :-)
சுமார் ஓராண்டுக்கும் மேலாகத் தமிழ் இணையத்திலும், வலைப்பதிவுகளிலும் ஆர்வமுடன் பங்கேற்று வரும் கோ.ராகவனின் வலைப்பதிவு:
மகரந்தம்
நன்றி: #வாசகர் பரிந்துரை (27/04/06)
தேன்கூட்டிற்கும் என்னை ஊக்கப்படுத்தி வரும் நண்பர்கள் அனைவருக்கும் என்னை வாழ வைத்த தெய்வங்களுக்கும் நன்றி.
அன்புடன்,
கோ.இராகவன்
Friday, April 21, 2006
5. கோவைக் குற்றாலமும் ஜான் அப்ரஹாமும்
காலைல கோவைக் குற்றாலத்துக்குப் போகைல உள்ள விடல....எல்லாம் ஆனைக பண்ணுன அட்டகாசம்னு சொன்னேன். அப்புறமா பூண்டி முருகன் கோயில், வெள்ளியங்கிரி மலை, ஈஷா தியானலிங்கம் எல்லாம் பாத்துட்டு திரும்ப வரும் போது எங்கள உள்ள விட்டாங்க. ஜீப்பிலேயே கொஞ்ச தூரம் உள்ள போனா வண்டிகள எல்லாம் நிப்பாட்ட எடம் இருந்தது. அங்க வண்டியப் போட்டுட்டு ஒன்ற மைலு உள்ள நடக்கனும்.

வண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)
அப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.
மலைப்பாதைல போறது நல்லாயிருந்தது. ஊதாப்பூக்கள் நெறைய தென்பட்டது. பச்சை எலைகளும் ஊதாவும் வெள்ளையும் கலந்து பாக்க நல்லாயிருந்தது. ஒரு பக்கம் மலை. மறுபக்கம் பள்ளத்தாக்கு. இந்த மாதிரி இயற்கை அழகுள்ள எடத்துக்குப் போனாலே ஒரு சந்தோஷம் வரும். அடிக்கடி இந்த மாதிரி எடங்களுக்குப் போறதும் உள்ளத்துக்கு நல்லது. ஒரு மாறுதலாவும் இருக்கும்.
அப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.
தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.

சரி. நம்ம கதைக்கு வருவோம். அங்க அருவி ரெண்டு அடுக்கா அமைச்சிருக்காங்க. மேலடுக்கு பெண்களுக்கு. கீழடுக்கு ஆண்களுக்கு. கீழடுக்குல இருந்து சறுக்கிக்கிட்டே போனா தடாகம். அதுலயும் பலர் குளிச்சிக்கிட்டு இருந்தாங்க.
இந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.
வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!
பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.
ஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.
சரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.
சரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ரொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.
அது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.
அப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........
தொடரும்......

வண்டிக நிக்குற எடத்துல ஒரு பெரிய மரத்தை வெட்டி அதோட அடி மட்டும் இன்னும் இருந்துச்சு. பள்ளிக்கூட நெனப்புல அதுல ஏறி நின்னுக்கிட்டு ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டேன். :-)
அப்புறம் நடப்பாதைல எல்லாரும் நடந்து போனோம். நல்ல வேளைக்குத் தண்ணி பாட்டில்களும் நொறுக்குத் தீனிகளும் வாங்கி வெச்சிருந்தோம். ஆனா போறப்போ எங்களுக்குத் தேவைப்படல. நாங்க போறப்போ நெறைய பேரு திரும்ப வந்துகிட்டு இருந்தாங்க. நாலு மணிக்கு மேல அங்க இருக்க விட மாட்டாங்க. அதுனால மொதல்ல போனவங்க குளிச்சிட்டு வந்தாங்க.

அப்படியே நடந்து போய் அருவிக்குப் போனோம். பெரிய அருவீன்னு சொல்ல முடியாது. சிறுசுதான். ஆனாலும் ஒரு அழகோட இருந்தது. ஆனாலும் அங்கங்க பிளாஸ்டிக் கவர்களும் சாப்பிட்டுப் போட்ட எச்சில் இலைகளுமா இருந்தது. ஒரு அப்பாவும் மகனும் குளிச்சிட்டு ஈரத்துண்டோட உக்காந்திருந்தாங்க. ரெண்டு பேர் கைலயும் பிளாஸ்டிக் தட்டு. அதுல தக்காளிச் சோத்த எடுத்துப் போட்டுக்கிட்டு இருந்தாங்க அம்மா. மூனு பேரும் நல்லா சாப்பிட்டுட்டு அந்தத் தட்டுகள அப்படியே ஒரு ஓரமாவே போட்டுட்டாங்க. அவங்க இருக்கிற எடத்துல குப்பையாக்கலை. தமிழன் கிட்ட பல கெட்ட பழக்கங்க இருக்கு. அதுல ஒரு கொடுமையான பழக்கம் துப்புரவா வெச்சிருக்கத் தெரியாமை. பொது இடங்கள்ள குப்பையப் போடுறதுல தமிழனுக்கு நிகர் தமிழனேதான். சொற்குப்பைகளையும் சேத்துத்தான் சொல்றேன்.
தமிழ்நாட்டுல இருந்து கேரளாவுக்குப் போங்க......தமிழ்நாடு தாண்டுற வரைக்கும் குப்பையா இருக்கும். அதுக்கப்புறமா துப்புரவா இருக்கும். பண்பாடு பண்பாடுன்னு வாய் கிழியப் பேசுறோம். ஆனா தமிழ்நாட்டையே குப்பையாக்கி வெச்சிருக்கோம்.


இந்தி சினிமாவுல ஜான் அப்பிரஹாம்னு ஒருத்தர் நடிக்கிறாரே. பெரும்பாலும் துணியே போடாம வந்து வயசுப் பிள்ளைக தூக்கத்தக் கெடுக்கிறாரே.....அவரு துணியப் போட்டும் போடாமலுந்தான் காட்சி குடுப்பாரு. இந்திக்கு அவர் ஒருத்தர்தான். நம்மூர்ல நெறையப் பேரு அப்படி இருக்காங்க. கோவைக் குற்றாலத்துல பாத்தேன்.
வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கிட்டு பாறைகள்ள அப்படியே படுத்துக்கிட்டு சூரியக் குளியல் நடத்திக்கிட்டு இருந்தாங்க ஒரு கூட்டம். நல்ல வேளை தமிழ்நாட்டுப் பெண்கள் எல்லாரும் கற்புக்கரசிகள். இல்லைன்னா இந்த மாதிரி அரைகுறையா பாத்துட்டு தப்புப் பண்ணீருவாங்க இல்லையா. ஆனா பெண்கள் மட்டும் உடம்பை மூடிக்கனும். அடக்கமா ஒடுக்கமா இருக்கனும். அவங்க அரைகுறையா வந்தா ஆண்கள் தப்புப் பண்ண வாய்ப்பாயிரும். ஆண்களைத் தப்பு செய்ய வெச்ச குத்தமும் பெண்கள் மேல சேரும். அடப்பாவிங்களா!
பொது எடத்துல எப்படி நடந்துக்கனும்னு தமிழ்நாட்டு ஆம்பிளைகளுக்குச் சொல்லிதான் குடுக்கனும். இங்க மட்டுமில்ல. ஒவ்வொரு எடத்துலயும் இப்பிடித்தான். வெளிநாட்டுக்காரன் திரியலையான்னு கேக்கலாம். அவன் அந்த உரிமைய எல்லாருக்கும் குடுத்திருக்கான். ஆனா நம்மூர்ல....உடைக் கட்டுப்பாடு வேணும்னா அது பொம்பளைங்களுக்கு மட்டும். உடைச் சுதந்திரம் வேணும்னா அது ஆம்பிளைகளுக்கு மட்டும். ரெண்டு பேருக்கும் பொதுவா நாயம் பேச ஒருத்தனும் வர மாட்டேங்குறான்.
ஆனாலும் ஒருத்தனையாவது கெளப்பி விடனும்னு தோணிச்சு. கூட வந்த நண்பர்களோட சேந்து பேசி....ஒரு ஜான் அப்பிரஹாமப் பாத்து வேணுக்குமின்னே கிண்டல் பண்ற மாதிரி சிரிச்சோம். கொஞ்ச நேரத்துல அவனுக்கே ஒரு மாதிரி ஆகி ஒரு துண்டைக் கட்டிக்கிட்டு ஒழுங்கா போனான். இதெல்லாம் பொம்பளப் புள்ளைங்க செய்ய வேண்டியது. அவங்களும் தலையக் குனிஞ்சிக்கிட்டே போய்க்கிட்டு இருந்தாங்க. தலையெழுத்து.
சரி. இப்ப நம்ம குளிக்கனும்ல. நல்ல ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டுதான் குளிச்சோம். கீழடுக்குல அருவி ஒரே சீரா விழுந்துச்சு. அதாவது பெரிய டேம் நெறைஞ்சி வழியிற மாதிரி. அதுக்குள்ள தலையக் கொடுத்தோம். விழுகுற தண்ணிக்கும் அருவிக்கும் நடுவுல கொஞ்ச எடவெளி இருந்தது. அதுக்குள்ள நின்னுக்கிட்டோம். இப்போ எங்களுக்குப் பின்னாடி மலை. முன்னாடி சீரா விழுகுற தண்ணி. அந்தத் தண்ணியத் தாண்டி ஆளுகளும் மரம் மட்டைகளும் தெரியுது. ரொம்ப நல்லாயிருந்தது அந்த அனுபவம். இப்பிடி உள்ள இருந்து பாக்கும் போது தெளிவில்லாம தெரிஞ்சது. ஆனா வெளியருந்து உள்ள பாத்தா தண்ணிக்குள்ள யாரு நிக்கிறாங்கன்னு தெளிவாத் தெரிஞ்சது. ரொம்ப நேரம் தண்ணீல வெளையாண்டோம்.
சரியா நாலு மணிக்கு விசில் ஊதி எல்லாரையும் பத்துனாங்க. நாங்களும் தொடச்சிட்டு துணியப் போட்டுக்கிட்டு பொறப்பட்டோம். தண்ணீல ரொம்ப நேரம் வெளையாண்டுதலயோ என்னவோ எல்லாருக்கும் பசி. மசாலாக் கடலையும் நேந்திரங்காய் சிப்சும் பகபகன்னு பசிக்குற வயித்துல கபகபன்னு போச்சு. தண்ணியக் குடிச்சிட்டு நடந்தோம். ஒரு புத்துணர்ச்சி இருந்தது உண்மைதான். அருவீல குளிச்சதால இருக்கும்னு நெனைக்கிறேன்.
அது சரி....அந்த நொறுக்குத்தீனி பிளாஸ்டிக் பைகள என்ன செஞ்சோம்னு சொல்லவேயில்லையே. எல்லாத்தையும் ஒரு பைல போட்டுக்கிட்டு ராத்திரி லாட்ஜுக்குத் திரும்புனப்புறம் ரூம்ல இருந்த குப்பைத் தொட்டீல போட்டோம்.
அப்புறம் வண்டீல ஏறி நேரா மருதமலைக்குப் போனோம்.........
தொடரும்......
Sunday, April 16, 2006
4. தியானமும் கம்பங்கூழும்
ஈஷா தியான லிங்கமுன்னு நான் சமீப காலமாகத்தான் கேள்விப் பட்டிருக்கேன். அதோட சேத்து ஜிக்கீங்கறவரையும் சேத்துச் சொல்வாங்க. இவ்வளவுதான் எனக்கு இருந்த அறிமுகம். பொதுவா நான் கடவுள் மனிதர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அதுலயும் ஆசிரமம் வெச்சிருந்தா....வாய்ப்பேயில்லை. அதுனால அங்க போறதுக்கு எனக்கு அவ்வளவா ஆர்வம் இருக்கல. ஆனா கூட வந்தவரு கண்டிப்பா போய்ப் பாருங்கன்னு சொன்னதால போனோம்.

நல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.


அங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.
வரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.
கோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.
ரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.
அதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.
வட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும்! அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.
நா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல். அப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம். பசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.
ஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா! உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.
அப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம்ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க!
இப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.
தொடரும்..............

நல்லா ரெண்டு பக்கமும் மரங்கள். நடுவுல வழி. ரோடெல்லாம் இல்லை. ஆனாலும் துப்புரவா இருந்தது. வண்டிய நிப்பாடீட்டு இறங்கினோம். பாத்தா புத்தம் புதுசாக் கட்டுன பெரிய நட்சத்திர சுற்றுலாத்தலம் மாதிரி இருந்துச்சு. நல்ல உயரமான கூரை. அதுல நல்ல பெரிய சதுரத் தூண்கள். அந்தத் தூண்களும் கூரையும் சந்திக்கிற இடத்துல கருகருன்னு நாகப்பாம்புக தொங்கீட்டிருந்துச்சு. பொம்மப் பாம்புகதான். ஆனா மரத்துல செஞ்சி நல்லா பாலீஷ் போட்ட மாதிரி பளபளன்னு இருந்துச்சு.


அங்க ரெண்டு பெரிய வட்டமான பாத்திரத்துல தண்ணிய நெரப்பி அதுல ஒரு அக்கா செந்தாமரைப் பூக்கள லேசா விரிச்சாப்புல விரிச்சி வெச்சுக்கிட்டிருந்தாங்க. பாக்கவே ரொம்ப அழகா இருந்தது. பக்கத்துல இன்னொரு பொண்ணு அதே வேலைய ஆனா இன்னொரு சட்டில செஞ்சிக்கிட்டிருந்தாங்க. செக்கச் செவேல்னு ரொம்ப அழகா இருந்தது தாமரப் பூக்கள். அத அப்படியே கேமராவுல அப்பீட்டோம்.
வரவேற்புப் பகுதி ரொம்ப நல்லா அமைஞ்சிருந்தது. செடி கொடிகள் வெச்சி...ஓலைக் கூரை போட்ட அழகான கலையம்சமா இருந்துச்சு. அங்கேயே சாப்பிடவும் சின்னதா ஒரு கடை இருந்துச்சு. பன், கேக், ஊறுகாய் வகைகள் இருந்துச்சு. தகவல் புத்தகங்களும் நிறைய இருந்துச்சு. நாங்கள்ளாம் காலைக் கழுவிக்கிட்டு பக்கத்துல இருக்குற கோயில் பகுதிக்குப் போனோம். அதுக்கு முன்னாடி அங்க ஒரு பலகைல செல்போன்களை இங்கே ஒப்படைக்கவும்னு எழுதியிருந்துச்சு. நான் கண்டுக்கலை. என் கூட வந்தவங்களுந்தான்.
கோயில் பகுதியில் நுழைவுல ஒரு பெரிய கல்மரம். (கொடிமரம் போல). அதுல அனைத்து மதச் சின்னங்களும் இருந்துச்சு. இந்தப் பக்கமா ஒரு பெரிய வரைபடம். அதாவது ஈஷாவின் முழுப்பரப்பும் வரைபடமா வழிகளோடு இருந்தது வர்ர போறவங்களுக்குப் பயனாயிருந்தது. நாங்க அதப் பெருசாக் கண்டுக்காம நேரா கோயிலுக்குள்ள போனோம்.
ரெண்டு பக்கமும் சொவத்துல கல்லுல நல்ல கதைகளைச் செதுக்கி வெச்சிருந்தாங்க. கர்நாடகத்துல அக்கம்மாதேவீன்னு ஒரு சிவபக்தை. அவங்கள அவமானப் படுத்த நினைக்கிறான் அரசன். அவைக்கு வரச்சொல்லி அத இதச் சொல்லி துணியெல்லாம் உருவச் சொல்றான். துணி உருவத் தொடங்குன அந்த நொடியிலேயே தன்னுடைய உணர்வுகள் முழுவதும் மொத்தமா எடுத்து இறைவன் மேல வெச்சிர்ராங்க. அதுனால அவங்க துணிய எடுத்ததும் எடுக்காததும் அந்தம்மாவுக்கு ஒன்னுதான். குழந்தை துணியில்லாம இருந்தாலும் துணியோட இருந்தாலும் ஒன்னும் விகல்ப்பமா நெனைக்காதில்லையா. அந்த மாதிரி உள்ளம் வந்திருச்சு அவங்களுக்கு. அதுக்குப் பெறகு அவங்க செஞ்சதெல்லாம் இறையருளால நன்மைகள்தான். அவங்க புகழும் பரவுச்சு. அந்த அம்மாவோட கதையையும் அங்க படமா வெச்சிருந்தாங்க. பூசலார் கதையும் இருந்துச்சு.
அதப் பாத்துக்கிட்டே உள்ள போனோம். வட்ட வடிமான பெரிய அறை. அரைக்கோளத்த எடுத்து அதுக்குக் கூரையா வெச்ச மாதிரி அமைப்பு. அந்த வட்ட அறையின் நடுவுல பெரிய சிவலிங்கம். அதைச் சுற்றிக் கொண்டு ஒரு பாம்பு. ரொம்பவே நேர்த்தியா இருந்தது. அதோட தலைக்கு மேல உச்சீல வெளிய இருக்குற வெளிச்சம் உள்ள வர்ர மாதிரி ஆனா மழைத்தண்ணீ உள்ள வராத மாதிரியான தெறப்பு. இந்தச் சிவலிங்கத்துக்கு முன்னாடி அழகான அமைப்புல அடுக்கி வெச்ச பூக்களும் பூஜைப் பொருட்களும்.
வட்டமான அறைன்னு சொன்னென்லயா...அதோட சுத்துச் சொவர்ல குழிகுழியா இருந்துச்சு. அதுக்குள்ள உக்காந்து அமைதியா தியானம் செய்யலாம். ஒரு சத்தம் கிடையாது. நெறையப் பேரு குழிக்குள்ளயும் குழிக்கு வெளியவும் அமைதியா உக்காந்திருந்தாங்க. நானும் ஒரு குழிக்குள்ள உக்காந்து கண்ண மூடிக்கிட்டேன். அமைதியா இருக்குறதும் எவ்வளவு ஆனந்தம். அந்த அமைதிய ரசிச்சிக்கிட்டேயிருந்தபதான் எனக்கு ஒன்னு தோணிச்சு. என்னோட செல்போன கையோட கொண்டு வந்துட்டேனே....ஒருவேள அதுல யாராவது கூப்புட்டாலோ அல்லது மெசேஜ் வந்தாலோ என்னாகும்! அந்த அமைதியான அறை முழுக்க எதிரொலிக்குமில்லையா....அதுனால அதுக்கு மேல அங்க இருக்க விரும்பாம படக்குன்னு எந்திரிச்சி வெளிய வந்துட்டேன். வர்ர வழியில திருநீறு குங்குமம் வெச்சிருந்தாங்க. நம்மளே தொட்டு வெச்சிக்கலாம்.
நா வெளிய வர்ரதப் பாத்துட்டு கூட வந்த எல்லாரும் வெளிய வந்துட்டாங்க. ரொம்பவே அமைதியான சூழல். அப்படியே வெளிய வந்து வரவேற்புப் பகுதிக்குத் திரும்ப வந்தோம். பசிவேளையில்லையா....அதான் ஏதாவது சாப்பிடலாம்னு. ஆனா எங்க நேரம் அங்க கேக்கு பன்னு வகையறாக்களும் லஸ்ஸியும் இருந்துச்சு. வழக்கமா இருக்குற தயிர்ச்சோறு கூட அன்னைக்கு இல்ல. ஆனா பாருங்க அங்க ஒரு அட்டைல கம்பங்கூழ் கிடைக்கும்னு எழுதித் தொங்க விட்டிருந்தாங்க.
ஒடனே நமக்குள்ள இருந்த பட்டிக்காட்டானும் health freakம் எந்திரிச்சிக்கிட்டு அதக் குடிக்கனும்னு அடம் பிடிச்சாங்க. மத்தவங்க எல்லாம் லஸ்ஸி ஜூசுன்னு கொண்டாடுனப்போ நா கம்மங்கூழ்னு கேட்டேன். கூட மாங்க ஊறுகாயோட கெடச்சது கம்மங்கூழு...அடடா! உண்மையிலே சொகமோ சொகம். ஒரு வாய்க் கூழு. ஒரு தொட்டு ஊறுகா. குடிச்சப்புறம் ஒரு நெறைவு.
அப்புறம் அங்கயிருந்து பொறப்பட்டு திரும்பவும் கோவைக் குற்றாலம் போனோம். அதுக்குள்ள நான் கோயில்பட்டீல என்னோட சொந்தக்காரங்களுக்கு ஃபோன் போட்டு அடுத்த நாள் காலைல நாங்க வர்ரோம்னு சொல்லீட்டேன். தங்குறதுக்கு நல்ல லாட்ஜ்ல ரூம் போடச் சொல்லீட்டேன். இப்பக் கோயில்பட்டிக்குப் போறதுக்கு டிக்கெட் எடுக்கனுமே.....அதுக்கு நம்ம கூட வந்த நண்பரே உதவி செஞ்சாரு. அவரு ஆஃபீஸ் பையனுக்குப் ஃபோன் போட்டு விவேகம் டிராவல்ஸ்ல எல்லாருக்கும் டிக்கெட் வாங்கி வெக்கச் சொல்லீட்டாரு. உதவி எப்படியெல்லாம் வருது பாருங்க!
இப்பப் போனப்ப கோவைக் குற்றாலத்துக்குள்ள ஆளுங்கள விட்டுக்கிட்டு இருந்தாங்க. அதுனால நாங்க ஜம்முன்னு உள்ள போனோம்.
தொடரும்..............
Subscribe to:
Posts (Atom)